Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நுழைவோம் விவிலிய உலகம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
நுழைவோம் விவிலிய உலகம்
Permalink  
 


 விவிலிய இயேசு கதையில் ஒரு சம்பவம்

யோவான்4: 20 . சமாரியப் பெண் இயேசுவிடம்-  'எமது முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால்  யூதராகிய நீங்களோ, எருசலேம்தான் வழிபாட்டுக்குரிய இடம் என்று கூறுகிறீர்கள்' ..... 22 இயேசு - யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் யூதர்கள் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது.

 

இக்கதையின் மூலம் விவிலியக் கதைகளுள் செல்லப் பார்ப்போம், இங்கே ஏசு இஸ்ரேல் பகுதியிலிருந்து யூதேயா செல்ல வழியில் உள்ள சமாரிய கெர்சிம் மலையருகே பெண்ணிடம் பேசியதாகக் கதை.  சீடர்களை முதலில் அனுப்பும்போதே சமாரியர் பற்றியும் சொல்கிறார்:

மத்தேயு 10:1 இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார்…

இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள். 

23… உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் வருகிறவரைக்கும், நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது.

 

ஜெருசலேம் யூத ஆலயம் தான் இன்றைய பழைய ஏற்பாட்டின்படியாக இஸ்ரேலின் கடவுளை வழிபட ஒரே இடம், இங்கு தான் உயுர் பலிகள் மோசே சட்டங்களின்படி தரப்படவேண்டும். ஆனால் சமாரியர்கள் கெர்சிம் மலையில் உள்ள ஆலயத்தில் தான் இன்றும் தருகின்றனர். யூத சமாரியர் பிரிவு முற்றிலும் முறிந்தது பொமு 129ல் நிகழ்ந்த யூத ஹஸிமோனிய ஜான் ஹிர்கானஸ் போரிற்குப்ப் பின்  தான். அப்போது முழுமை பெற்று இருந்த  விவிலியத்தின் மோசே சட்ட்ங்கள் மட்டுமே சமாரிய விவிலியம்.

 

கிரேக்கர் ஆட்சியில் யாவே-கர்த்தரின் ஜெருசலேம் ஆலயம் ஜுபிடர் கடவுளுக்கும், கெர்சிம் ஆலயம் தேயுஸ் கடவுளுக்கும் என மாற்றப்பட்டது என பழைய ஏற்பாடு 2மக்கபேயர்[ii] உறுதி செய்கிறது. பொமு129 போருக்குப் பின் யூதர்கள் சமாரிய செல்லக் கூடாது, சமாரியர் ஜெருசலேம் செல்லக் கூடாது, பழைய ஏற்பாடு முழுக்க ஜெருசலேம் மட்டும் எனும்படி மாற்றப்பட்டது.

 

எபிரேயக் கதைகளின் 12 கோத்திரங்களின் பிரிவினரே ஆன சமாரியரிடம் செல்லாதே, சமாரியர்கள் அறியாததை வணங்குகிறீர்கள் எனும் ஏசுவின் பேச்சு வரலாற்று பார்வையில் முழுமையாய் தவறு, மற்றும் அவர்களை தாழ்வாய் பேசும் இனவெறியும்  (நல்ல சமாரியன் கதை  லூக்கா கதாசிரியரின் புனைவு) காண்கிறோம்.

 

நாம் ஏசு சீடர்களை முதலில் அனுப்பும் போது நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் வருகிறவரைக்கும், நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது."  என்பதைப் பார்த்தோம். ;

இதன் விரிவாய் மனிதகுமாரன் வருகையில்

மாற்கு 13:24 “அந்நாட்களில் அத்துன்பங்கள் நடந்த பிறகு,“‘சூரியன் இருளாகும். சந்திரன் ஒளி தராது.25 நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும். வானிலுள்ள அத்தனையும் மாறிப்போகும்’26 “பிறகு மேகங்களுக்கு மேல் மனித குமாரன் மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் வருவதைக் காண்பார்கள்... 30. நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். இப்பொழுது உள்ள மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே நான் சொன்னவை எல்லாம் நிகழும்.31 இந்த முழு உலகமும் பூமியும் வானமும் அழிந்துவிடும். ஆனால் நான் சொன்ன வார்த்தைகள் மாத்திரம் அழியாது.

 ஏசு தன்வாழ்நாளில் உலக அழிவை எதிர்பார்த்தார்.[iii] சுவிசேஷக் கதைகளின் ஏசு யுகம் அழியப் போகிறது தன் வாழ்நாளில் என நம்பினார்.

மத்தேயு11:13 எல்லாத் தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப்பிரமாணமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன

 

கடைசியில் ரோம் கவர்னர் கைது செய்ய மரணதண்டனையில் இறந்தார். கடைசியாய் தூக்குமரத்தில் சொன்னது

மாற்கு 15: 34 மூன்று மணிக்கு இயேசு மிக உரத்த குரலில், “ஏலி! ஏலி! லாமா சபக்தானி” என்று கதறினார். இதற்கு “தேவனே, தேவனே என்னைக் ஏன்  கைவிட்டீர்?” என்று பொருள்.

உலகம் அழியும் ,அதற்கு முன் கதைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் ஆட்சியை தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா(கிறிஸ்து) தாவீது பரம்பரை தனக்கு கிடைக்கும் என முயல கடவுல் செயல் ஏதுமின்றி முழு அவ நம்பிக்கயில் இறந்தார்.

 

சுவிசேஷக் கதைகள் மற்றும் பழைய ஏற்பாடு இவற்றோடு சற்றே வரலாறு - தொல்லியல் ஆய்வில் இயேசு எனும் யூத மனிதர் ஒரு பழமைவாத யூதராய் வாழ்ந்து இறந்தார் எனக் கண்டோம். உண்மையில் வரலாற்று  இயேசு என ஒருவர் வாழ்ந்தாரா என்படகை சுவிசேஷக் கதைகள் கொண்டே பார்ப்போம்.

 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

உண்மையில் இயேசு என ஒருவர் வரலாற்றில் வாழ்ந்தாரா?

மத்தேயுவின் இயேசு பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் யோசேப்பின் வாரிசு. இவர் பெரிய ஏரோதின் மரணத்திற்கு 2 வருடம் முன்பேவாவது பிறந்திருக்க வேண்டும்.

லூக்காவின் இயேசு நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் யோசேப்பின் வாரிசு. இவர் சிரியா கவர்னர் கிரேனியூவின் கீழ் யூதேயா வந்த போது மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பிறந்தார்.

 

இயேசு ஒருவர் தான் எனில் இதில் ஒன்று சரி அல்லது இரண்டுமே கூடத் தவறாய் இருக்கலாம். இயேசு பற்றிய கதைகள் சுவிசேஷக் கதாசிரியர்களுக்கு சீடர்கள் மூலமாகத் தான் வந்திருக்க வேண்டும், சீடர்கள் இயேசு 30 வயது வாக்கில் இயக்கம் ஆரமிபித்தபின் சேர்த்துக் கொண்டவர்கள், எனவே பிறப்பு பற்றியவை கேள்விப்பட்ட கதைகள் மட்டுமே, ஆனால் சீடரோடு வாழ்ந்து மரணம் மட்டும் உடன் இருந்தார்கள்.

 

இயேசு கைது மரணம் போது இயேசு தேர்ந்தெடுத்த 12 சீடர்களில் ஒருவர் யூதாஸ் ஸ்காரியோத்து, இவர் மரணம் பற்றியும் பார்ப்போம்.

மத்தேயுவில் இயேசு கைதான உடனே யூதாசு தனக்கு தரப்பட்ட லஞ்சப் பணத்தை விட்டெறிந்து விட்டு தூக்கு போட்டு இறந்தார், அந்த லஞ்சப் பணத்தை இது ரத்தம் சிந்தும்படியானதால் யூத ஆலயக் கணக்கில் சேர்க்காமல் யூதர் அல்லாதவரகளைப் புதைக்க நிலம் வாங்கினர்.

 அப்போஸ்தலர் நடபடிகள் கதையில் லஞ்சப் பணத்தில் யூதாசே ஒரு நிலம் வாங்கி அதில் உடல் பலூன் போலே ஊதி வெடித்து இறந்தார். அந்த நிலத்தில் ஒரு துர் மரணம் என்பதால் அதை யூதர் அல்லாதவரகளைப் புதைக்க நிலம் ஆக்கினார்களாம்.

மிக நிச்சயமாய் இருவர் ஒரு முறை மட்டுமே இறக்க முடியும், இதில் இன்னும் ஒன்று நாம் கண்டால் அந்தப் பணம் பெற்றதும், அந்த நிலம் பயன்பாடும் முன்பு ஒரு தீர்க்கதரிசி கூறியதுபடி நடந்தது எனும் வாக்கியம்.

சம்பவம் உண்மையா என்றால் ஒர்வர் ஒருமுறை மட்டும் தான் இறக்க முடியும், எனவே பைபிளியல் அறிஞர்கள்படியே காட்டிக் கொடுத்தவர் துர்மரணம் அடைய வேண்டும் என இரு கதாசிரியரும் வெவ்வேறு கதை புனைந்தனர். அதற்கு மேலும் கதையின் அமைப்பிற்கு ஏற்ப பழைய ஏற்பாட்டின் ஒரு வசனத்தை எடுத்து தீர்க்க தரிசனம் நிறைவேறிற்று என்பதும் சுவிசேஷக் கதாசிரியர்களின் புனையலின் தன்மையை விளக்கும்

ஏசுவின் பெற்றோர் யார், எந்த ஊர்க்காரர் இந்தக் குழப்பம் - சீடர் நேரடியாய் அறியாதது எனில் - யூதாசு மரணம் நிச்சயமாய் சீட்டர் பார்க்க நடந்தது. அதிலும் குழப்பம்.

 இதைவிடவும் முக்கியமான கேள்வி ஏசு சீடரோடு எங்கே எத்தனை நாள் இயங்கினார் என்பது ஒரு மிக முக்கியமான் கேள்வி?

இயேசு சீடரோடு கலிலேயாவில் இருந்தார், முதலில் யோவான்ஸ்நானனைத் தேடிச் சென்று பாவமன்னிப்பு பெற யூதேயா வந்து திரும்பினார், பின் கடைசி வாரம் கைது மரணம் நிகழ்ந்த வாரம் மட்டுமே யூதேயாவில் என்பது முதலில் அதாவது மாற்கு சுவிசேஷம் ஏசுவின் மரணத்திற்கு 40 வருடம் பின்பு வரையப்பட்டதில் உள்ளபடி. ஏசு சீடரோடு வாழ்ந்தது 7- 8 மாதங்கள் மட்டுமே எனவும் ஆகும். மத்தேயு - லூக்கா சுவிகளும் இதை ஒட்டியே உள்ளது. ஆனால் பொகா 110 வாக்கிலான நான்காம் யோவான் சுவி இயேசு மூன்று முறை பஸ்கா பண்டிகைக்கு யூதேயா செல்வதை சொல்வார், மேலும் கடைசி எட்டு மாதங்கள் முழுமையாய் யூதேயாவில் ஜெருசலேம் அருகில் என்பார். ()

இயேசு சீடரோடு எங்கே எத்தனை நாள் இயங்கினார் என்பதிலும் நேர்மையான செய்தி இல்லை. ஒன்று வேண்டுமென்றே மாற்றி அல்லது மறைக்கப்பட்டது, அல்லது சுவிசேஷக் கதாசிரியர்களுக்கு உண்மையில் வாழ்ந்த ஏசுவைத் தெரியாது.}} அன்றே அந்த நிலைமை எனில் இன்று ஏசுவை வரலாற்று மனிதன் எனச் சொல்ல ஆதாரம் இல்லை, உள்ள கதைகளினை நடுநிலையோடு தேடுதலே இயலும். நாம் இதை  கடந்த நூறு ஆண்டுகளில் பல ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சிகளை ஒன்று சேர்த்து  இங்கு காண்கிறோம்

 

கிறிஸ்துவ மதம் விவிலியக் கதைகளை வரலாற்று வெளிப்பாடு என்றதை தொல்லியல் அகழ்வாய்கள் முறியடித்தன, பைபிளை முழுமையாய் படித்து நேர்மையாய் ஆர்ராய்ந்தால் கிறிஸ்துவ சமயம் சொல்லும் அனைத்து கோட்பாடுகளும் உண்மையல்ல என்பதும் தெளிவாகிறது.

 

விவிலிய ஆய்வாளர்கள் அடிப்படையில் பல்வேறு திரிபுகள் இடைசெருகல்கள் நிறைந்துள்ளதைக் கண்டனர், உண்மையில் ஏசு சொன்னவை  என,அதில் மாற்றமின்றி அறிய வேண்டும் எனத் துவங்கிய  ஆய்வுகளினை மேலும் கிடைத்த பல்வேறு கிரேக்க ஏடுகள் செம்மைப் படுத்த உதவின. தொல்லியல் ஆய்வுகளினை முழுமையாக்கி ஒரு மொத்தமாக இணைத்தும் நோக்க, முன்னர் ஆராதனைப் பார்வை நீங்கி வரலாற்று கண்ணோட்டம் ஏற்பட ரேடியோ கார்பன்14  தேதியிடும் முறை உதவியது.

 

பைபிளியல் பேராசிரியர்கள் மூலமொழிகளில்  ஆய்வு செய்தோர், இஸ்ரேல் எகிப்து என முழுமையாய் தொல்லியல் அகழ்வாய்வுகளில் அன்றாடம் உள்ளோர் இம்முடிவிற்கு ஏன் வருகின்றனர் எனப் பார்க்கும் முன் விவிலியம் பற்றிய ஒருமுழு அறிமுகமும் தேவை. வந்தேறி அன்னியர்களை குடி வைத்து மண்ணின் மைந்தர்களை இனப் படுகொலை செய்தார் எனவும் பின்னரான ஆட்சி எனவும் கதைக்கிறது.

 

புதிய ஏற்பாடோ இறந்த மனிதன் இயேசுவை தெய்வீகமாக்கிட புனைந்த கதைகளைக் கொண்டது. இறந்த ஏசுவின் மரணம் மூலமாக மனிதன் பூமியில் இறக்கக் காரணமான ஆதாமின் பாவம் விலகியதாகவும், ஏசுவை ஏற்போருக்கு மரணமே கிடையாது எனவும் சொல்கிறது. இவற்றை ஏசு சொன்னதாகவும் கதைகள் சொல்கிறது.

 

ஏசு சீடரோடு இயங்கியப்பொது யூதரோடு மட்டுமே பழகினார், யூதர் அல்லாத பெண்ணை நாய் எனவும், பிரிதொரு இடத்தில் யூதரல்லாதோர் பன்றி எனவும் கீழ்த்தரமாய் பேசியதாகவும் உள்ளது, ஆனால் ஏசுவின் சீடர் அல்லாத, ஏசுவை நேரில் பார்த்து பழகியே இராத பவுல் என்பவர் யூதரல்லாத மக்களிடம் சென்று கிறிஸ்துவ மதம் ஸ்தாபித்தார் எனக் கதை.

 

கிறிஸ்துவம் இறந்த மனிதன் ஏசுவை எபிரேயகளின் தொன்மங்களின்படி வரவேண்டிய மேசியா என்கிறது, ஆனால் எபிரேய யூதர்கள் இதை ஏற்கவில்லை. மேலும் புதிய ஏற்பாடு அறிஞர்கள்படி, சுவிசேஷங்கள் வரையப்படுமுன்பே எழுதப்பட்டவை பவுலின் சில கடிதங்கள்

1 கொரிந்தியர் 1:22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர்.

26 சகோதர சகோதரிகளே! தேவன் உங்களைத் தெரிந்துள்ளார். அது பற்றிச் சிந்தியுங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. 

 

பவுல் இங்கே அதிசயங்கள் ஏதும் இல்லை எனத் தெளிவாய் சொல்கிறார். ஆனால் கிரேக்க சுவிசேஷ கதாசிரியர்கள் முழுக்க செய்யும் முயற்சி இயேசு பல அதிசயம் செய்தார் எனும் கதைகள், பைபிளியல் அறிஞர்கள் ஏசு கதையின் சம்பவங்கள் அனைத்துமே பழைய ஏற்பாட்டில் வெவ்வேறு நபர்கள் சம்பவஙளை இறந்த மனிதர் இயேசு பெயரில் சேர்த்தவை. ஆனால் கடைசியில் விசாரணையின் போது யாருமே அவருக்கு ஆதரவாய் வரவில்லை என்பதும், சீடர்கள் யாருமே கூடத் துணை நிற்கவில்லை என்பததுமே - அதிசயக் கதைகளின் பொய்மையை தெளிவாக நிருபிக்கும். நாம் முன்பே பார்த்த வரலாற்று ஆயவாளர்களின் கூற்றுபடி பொகஆ 100 வாக்கில் 3800 மக்களேகிறிஸ்துவர்கள் அதாவது 5.5 கோடி  ரோமன் குடிமக்களில். 14000 பேரில் ஒருவர் மட்டுமே ஏற்றனர்.

 

இறந்த மனிதன் ஏசுவைப் பற்றிய நேர்மையான தகவல் ஏதுமின்றி புனையப்பட்ட கதைகளே புதிய ஏற்பாடு, யூதர்கள் புனிதமானவர்கள் மற்ற மக்கள் அனைவரையும் இழிவாய் பார்த்த இயேசுவை, என்னை ஏன் உத்தமர் என்கிறாய் கடவுள் மட்டுமே உத்தமர் என்ற ஏசுவையே தெய்வமாக்கியதே கிறிஸ்துவம்- இதை பைபிளியல் ஆய்வுகளினால்  கிறிஸ்துவம் பற்றிய ஆய்வுகளின் நிலைமையை விளக்குகிறார் அறிஞர் பேராசிரியர் ஜான் ஹிக்

//கிறிஸ்துவ மத நம்பிக்கைகள் பெருமளவில் சிக்கலைடந்துள்ளது என்பதை பழைமைவாதிளின் அடிபடை மத உணர்வுகள் பெரும்பாலும், இன்றைய பைபிளியல் அறிஞர்கள் ஆய்வுக்குப்பின் ஏற்கமுடியாதது, சந்தேகத்துக்கு உரியவை என நான் உட்பட பெருமளவு பைபிளியல் அறிஞர்கள் சொலவதை பட்டியல் இடுவோம்.

1. ஏதோ தெய்வீக உண்மைகள் அடிப்படையில் இருந்தது- (அதாவது மூன்று கடவுள்; மூன்றும் ஒன்றே மற்றும் ஏசு மனிதன் – தெய்வம் என்னும் கற்பனைகள்.)

2. கடவுள் இத்தனை ஆண்டுகட்கு முன் வெறுமையிலுருந்து இவ்வுலகைப் படைத்தார்.

3. மனிதன் முதலில் இறப்பே இன்றி தொடர்ந்து வாழ படைக்கப்பட்டு, பின்னர் கடவுள் சொல்லை மீறியதற்காக மனிதன் அதன்பின் இந்நிலைக்கு வந்து ம்ரணமடைகிறான்.

4. கிறிஸ்து மனிடர்களின் பாவத்தை மீட்க வந்தார், தன் சிலுவை மரணம் மூலம் மனிதர்களை (அல்லது சில மனிதர்களை) மீட்டார்.

5. இயேசு ஒரு கன்னிப் பெண்ணிடம், மனித உடலுறவின்றி பிறந்தார்.

6. இயேசு பல மேஜிக்குகள் செய்தார் என்றும் அதில் இயற்கையின் ஆற்றலை இறை சக்தியில் கட்டுப் படுத்தினார்.

7. இயேசுவின் மரணத்திற்குப்பின் இயேசுவுடைய பிணவுடல் சவக்குழியிலிருந்து மீண்டும் உயிர் பெற்று வந்தது.

8. உலக மாந்தர்கள் அனைவரும் தாங்கள் காப்பாற்றப்பட இயேசு கிறிஸ்து மூலமே ஆகும்.

9. ஒரு மனிதன் மரணத்தில் அவனுக்கும் கடவுளிற்கும் ஆன உறவு மாற்றமுடியாதபடி இறுதியாகிறது.

10. மனிதன் பெரும் இரு முடிவுகள், எனகூறப்படும் சொற்கம்-நரகம் என்பவை

 

எனகடவுளும் உலகின் மத நம்பிக்கைகளும் என இன்கிலாந்து பினிங்காம் பல்கலைக் கழகப் பேராசிரியர் கூறுகிறார்.// “



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இந்தியா

இந்திய நாடு உலக நாகரீகத்தின் ஊற்றுக் கண். சிந்து சரஸ்வதி நதி நாகரீகத்தின் ஆரம்பகாலம் என்பது ஹரியானாவின் குருஷேத்திரம் அருகே பிர்ரான எனும் இடத்தில் கிடைத்த தொல்லியல் அகழ்வாய்வுப் பொருட்கள் மீதான ரேடியோ கார்பன் ஆயுவ்கள் பொமு 7500 வரை கொண்டு சென்றுள்ளது. சிந்து சரஸ்வதி நதி நாகரீகத்தின் பரவல் 2 லட்சம் சதுர கீலோமீட்டர் அளவிற்கு விரிந்திருந்தது. உலகின் நாகரீகத்திற்கு வேராய் உள்ளது. எகிப்து - சுமேரிய நாகரீகங்களின் வளர்ச்சிக்கு முன்னோடியாய் இருந்தது. இந்தியாவின் தொன்மையான மொழிகளான தமிழும் சமஸ்கிருதமும் உலக மொழிகளின் மூத்த சகோதரி என மொழியியலாளர்கள் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. உலகின் மிகப் பெரும் செல்வ வளமிக்க நாடாய் விளங்கியது.

 

உலகின் கல்வி நாகரீக வளத்தின் உச்சியில் இருந்தது இந்தியா, நாளந்தா- காஞ்சிபுரம் போன்றவை உலகப் பெயர் பெற்றவை. மொழி, இசை மட்டுமின்றி அனைத்து துறையிலும் வளர்ந்திருந்தது. இது சமூகத்தின் அனைத்து மக்களிடமும் பரவி இருந்தது. உலகப் பொருளாதாரத்தில் பணக்கார நாடாக  இந்தியா விளங்கியது என்பதை ரோமன் வரலாற்றாசிரியர் நூல்களில் காணலாம்

 

இந்தியாவில் கிறிஸ்துவ கொள்ளை வெள்ளையர் ஆட்சிகள்.

 

கடந்த ஆயிரம் ஆண்டுகளாய் முதலில் முகம்மதிய ஆட்சிகளும், பின்னர் கிறிஸ்துவ வெள்ளை ஆட்சியில் மிகப் பெரும் பிரச்சனைகளை சந்தித்தது. முகலாய ஆட்சியில் முகம்மதியராய் மாறாவிடில் ஜிசியா எனும் வரி போடப்பட நிலமற்ற விவசாயிகள், பிற்பட்ட - பட்டியல் இன மக்கள் மிகவும் தவித்தனர். இதனால் ஜாதிகள் வக்கிரமடையத் தொடங்கின. பின்னால் வந்த கிறிஸ்துவ வெள்ளை ஆட்சிகள் இங்கிருந்த வளங்களை கொள்ளை அடித்தது

 

உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் ஜிடிபி 25% என இருந்த பணக்கார நாடான இந்தியாவைக் கொள்ளை அடித்தது கிறிஸ்துவ வெள்ளை ஆட்சி.  கிறிஸ்துவ வெள்ளை ஆட்சியில் சர்ச் நுழைய, வங்காளத்தில் விவசாயிகள் ஒரு பக்கம் இந்திய விவாசாய விளைபொருட்களை கட்டாயக் கொள்முதல் , அதிக வரிகள் என த் துன்புறுத்தியது. தங்களின் லாபவெறியில் கங்கைக் கரையில் நெல் போன்ற உணவுபயிரிற்களுக்கு பதிலாய் அவுரி- கஞ்சா போன்ற பணப்பயிர்கள் பயிரிடலை பாதிரிகள் வழிகாட்டல்  கட்டாயமாக்க , மண்வளம் குறைய பாதிரிகளால் விளைந்த செயற்கைப் பஞ்சத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள்- பெரும்பாலும் நிலமற்றோர், பிற்பட்ட பட்டியல் இன மக்கள் இறந்தனர். இதே போல இந்திய விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய துறைமுகங்களையும் விவாசாயப் பிரதேசங்களையும் இணைக்க இரெயில்  அறிமுகம் செய்து விளைபொருட்களை கட்டாயக் கொள்முதல் வெளிநாடு ஏற்றுமதி செய்ய கிறிஸ்துவ வெள்ளை ஆட்சி - பாதிரிகளால் ஏற்பட்ட செயற்கை பஞ்சங்களில் கொடுமாய இறந்தோர் கிட்டத்தட்ட 7 கோடி இந்கியர்கள். இது சர்ச் திட்டமிட்டு செய்த  படுகொலைகள் என்றே சொல்லலாம்

வங்காளப் பஞ்சம், 1770  https://ta.wikipedia.org/s/8xc

-எனது இந்தியா!( பசியும் பஞ்சமும் ) - எஸ். ராமகிருஷ்ணன்....  http://malaikakitham.blogspot.in/2012/01/blog-post_25.html

பிரித்தானிய ஆட்சியில் இந்தியாவில் நிகழ்ந்த பஞ்சங்களின் காலக்கோடு https://ta.wikipedia.org/s/w46

 

ஆங்கிலேயக் கல்வியும் - தொழில் மயமாக்கம் தான் இந்திய வளர்ச்சிக்கு துணை எனப் பிதற்றுவோர் உண்டு. கல்வித் தரத்தில் ஆங்கிலேயரைவிட பன்மடங்கு உயர்ந்து சமுதாயத்தில் அனைத்து பிரிவினரும் கல்வியில் முன்னேறி இருந்ததை அழித்தது. மெக்காலே கல்விமுறை எனும் ஆங்கிலேயக் கல்வி முறை அறிமுகப் படுத்தியதும் ஹிந்து மதத்தை அழிக்கவே எனத் தெளிவாய் வாக்கு மூலம் அழித்துள்ளனர்.

 

காந்தியவாதி, வரலாற்று ஆய்வாளர் -தரம் பால் எழுதிய “பியூட்டிஃபுல் ட்ரீ - தரம்பாலின் ஆய்வுகளில் தனக்கு மிகவும் முக்கியமானதாகப் படுவது 18-ம் நூற்றாண்டின் இந்திய அறிவியல், தொழில்நுட்பம் குறித்த ஆய்வு என்றார். 18-ம் நூற்றாண்டில் இந்தியாவில் கிராமங்களில் இரும்பு, எஃகு, காகிதம், பனிக்கட்டி போன்றவற்றை உற்பத்தி செய்திருக்கிறார்கள். இந்தியாவின் இரும்பு பிரிட்டிஷாரின் இரும்பைவிட மேம்பட்டதாக இருந்ததாக இங்கிருந்து மாதிரிகள் அனுப்பியிருக்கிறார்கள். அதே போல், தரம்பாலின் தரவுகளின்படி அன்றைய விவசாய உற்பத்தியை இன்றைய விவசாய உற்பத்தியால் எட்டிக்கூடப் பிடிக்க முடியாது என்றே தெரிகிறது.https://siliconshelf.wordpress.com/2012/04/27/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/

 

காந்தியவாதி. வரலாற்றாய்வாளர்.பியூட்டிஃபுல் ட்ரீ (18-ம் நூற்றண்டில் இந்திய கல்வி), பதினெட்டாம்நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும்தொழில்நுட்பமும் போன்ற நூல்களை எழுதியவர். இந்திய சமூகம் குறித்து பிரிட்டிஷார் நமக்குப் பிழையாக உருவாக்கித் தந்த பல்வேறு கருத்தாக்கங்களை பிரிட்டிஷாரின் ஆவணங்களை வைத்தே தகர்த்தவர். - தரம்பால் மூன்று ஆவணங்களை ஆதாரமாகத் தருகிறார். ஒன்று அன்றைய மெட்ராஸ் மாநிலத்தில் (இது இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளப் பகுதிகளை உள்ளடக்கியது) கல்வி நிலையைப் பற்றி சர் தாமஸ் மன்றோ காலத்தில் எழுதப்பட்ட ரிபோர்ட்டுகள். இரண்டு அன்றைய வங்கம்/பீகார் ஸ்டேட்டில் கல்வி நிலையைப் பற்றி தரப்பட்ட ஆடம் ரிபோர்ட்டுகள். மூன்றாவதாக பஞ்சாபின் கல்வி நிலையைப் பற்றி எழுதப்பட்டவை.

 

இவை மூன்றிலுமே காட்டப்படும் கல்வி நிலையே வேறு. பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளி இருந்திருக்கிறது. பிராமணர், க்ஷத்ரியர், வைசியர், சூத்திரர், ஏன் சண்டாளர்கள் என்று அழைக்கப்பட்ட தலித்கள் கூட அங்கே படித்திருக்கிறார்கள். பள்ளிக்கென்று நிலம் மானியமாகத் தரப்படுவது அபூர்வமே, ஆனால் ஆசிரியருக்கு ஊரே கூடி சம்பளம் தந்திருக்கிறது. எல்லாருக்கும் எழுதப் படிக்க சொல்லித் தரப்பட்டிருக்கிறது. 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Impressive though various attempts at rational explanations of the ten plagues of Exodus may be, they

all miss the point of the biblical narrative, which is that such events cannot be explained. They are

miracles, supernatural events. To say otherwise would be to negate Yahweh’s power over Nature;

and that is among the most damnable of all heresies. Attempting to “explain away” the biblical

miracles is profoundly against the spirit and intent of the biblical writers. You either accept them,

incredible as they may seem, or you do not. It is a matter of faith, not of reason - nor archaeology. page-22

William Dever -Who were the Early Israelites & Where did they come from

Some of the information is clearly fanciful, as for instance the tribal census lists (Num. 1), which

total 603,550; similarly the contradictory claim that the tribes could field a fighting force of 600,000

men (Exod. 12:37), which would work out to a total population of some 2.5-3 million. There is

simply no way that the Sinai Desert, then or now, could have supported more than a very few

thousand nomads. page- 24

There was not so much as a potsherd from the 13th-12th centu ries B.C., the time frame required, as

we have seen, for the Exodus. It would appear that Kadesh-barnea was not occupied earlier, but

became a pilgrim-site during the Monarchy, no doubt because it had come to be associated with the

biblical tradition which by then would have begun to take shape. Thus after a hundred years of

exploration and excavation in the Sinai Desert, archaeologists can say little about “the route of the

Exodus,” even where the dry desert sands would likely have preserved the evidence. Both a

“northern” and a “southern” route have been proposed, but these are almost entirely speculative page -25



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

முன்னுக்கு பின் முரணான வரலாறுகள், சமத்துவம் இன்மை, ஆபாசம், தகாத உறவுமுறைகள், பொருந்தாத அறிவியல், இப்படி ஏகப்பட்ட குழப்பங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்ட மதம் ஒன்றை தங்கள் வாழ்வு நெறியாக கொண்ட காவிகள் தான் அடுத்த மதத்தின் இல்லாத அவதூறுகளை கட்டவிழ்த்து சந்தோசப்படுகின்றார்களாம். இவர்களின் நிலைமையும் தலைக்குள் மலத்தை வைத்திருக்கும் இறாலின் நிலைமையும் ஒன்னுதான்!



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இறைவனின் நேரடித் தொடர்பு அறுந்துவிட்டபோது, அவர், தேவதூதர்கள் மூலமாக நம்முடன் தொடர்பு கொண்டார்.

அவ்வாறு எழுதப்பட்ட வேதாகமத்தை (பைபிள்) பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு துறைகளைச் சார்ந்த மனிதர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு எழுதினார்கள்.

வேதாகமத்தை வேதவல்லுநர்கள் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டாகப் பிரித்துள்ளனர். பழைய ஏற்பாட்டின் காலம்: பழைய ஏற்பாட்டில் சிறிதும், பெரிதுமாக 39 புத்தகங்கள் உள்ளன. முதன்முதலாக எழுதப்பட்ட புத்தகம் ‘யோபு’. இது கி.மு.2150ல் எழுதப்பட்டது. மற்ற 38 புத்தகங்களும் கி.மு.1500 முதல் கி.மு.400 வரை எழுதப்பட்டது.

பழைய ஏற்பாட்டை பிரமாணம், தீர்க்கதரிசனம், வேத எழுத்துக்கள் என்று மூன்று வகையாக பிரித்துள்ளனர். மொழி: 39 புத்தகங்களும் எபிரேய மொழியில் எழுதப்பட்டுள்ளது. எஸ்றா, எரேமியா மற்றும் தானியேல் புத்தகங்களில் சில பகுதிகள் ‘அரெமிக்’ மொழியில் எழுதப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து பேசிய மொழி இதுவே.

ஆசிரியர்கள்: ஆமோஸ் போன்று கூலி வேலை செய்பவர் முதல் தாவீது போன்ற அரசர்கள் வரை பல குணங்களுடைய, பல தொழில்களில் ஈடுபட்ட தேவனுடைய பிள்ளைகள் தேவ ஆவியால் ஏவப்பட்டு எழுதினார்கள். பத்து கற்பனைகளை மட்டும் தமது சொந்த விரலினால் கடவுள் எழுதினார். ”ஆண்டவர் வசனம் தந்தார்.

அதை பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி” (சங்கீதம் 68:11) என்ற வசனத்தின்படி, 32 வித்தியாசமான மனிதர்கள் ஒரே கருத்தான ”நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே” (மாற்கு 12:29) என்ற கருத்தை மட்டும் எழுதியுள்ளார்கள்.

புதிய ஏற்பாடு காலம்: புதிய ஏற்பாட்டின் காலம் கி.பி.50 முதல் கி.பி.100 வரை ஆகும். ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குள் 27 புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளது.

‘யாக்கோபின் நிருபம்’ தான் முதலில் எழுதப்பட்ட புத்தகம் ஆகும். புதிய ஏற்பாட்டை சுவிஷேசங்கள், நிருபங்கள், தீர்க்க தரிசனங்கள் என்று மூன்று வகையாக பிரித்துள்ளனர்.

இயேசு கிறிஸ்து ”அரெமிக்” மொழியில் பேசினாலும், புதிய ஏற்பாடு முழுவதும் கிரேக்க மொழியில்தான் எழுதப்பட்டது.
இயேசு கிறிஸ்துவின் சீடர்கள், வைத்தியர், கூடாரத் தொழிலாளி போன்ற பல பணிகளில் ஈடுபட்ட எட்டு (8) வேத அறிஞர்கள் புதிய ஏற்பாட்டை எழுதினார்கள்.

இப்போது எழுத்து வடிவம் உள்ள எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு, அதிக மொழிகளில் அதிக எண்ணிக்கையில் வெளியிடப்படும் புத்தகம் பரிசுத்த வேதாகமமே ஆகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இடதுசாரி ஆய்வாளர்கள் சிறிது முயன்றால் ஆய்வுகள் செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் தரப்பை நிறுவத்தேவையான தரவுகளை மட்டுமே சேகரிப்பார்கள். அவர்களுக்கு வசதியான ஒரு கொள்கை இருந்தது. அதாவது இந்தியா ஆசிய உற்பத்திமுறை கொண்ட தேசம். தேங்கிப்போன விவசாயம் கொண்டது. ஆகவே இங்கே பஞ்சம் வந்தது. என்னதான் சுரண்டல் அரசாக இருந்தாலும் பிரிட்டிஷார் ஐரோப்பியர். அவர்கள் இந்தியாவுக்கு நவீன நாகரீகத்தையும் தொழில்நுட்பத்தையும் கொண்டுவந்தவர்கள். ஆகவே தேங்கிப்போன இந்திய சமூகம் பஞ்சத்தை போக்கிக்கொள்ள முடியாது. பிரிட்டிஷாரின் உதவியாலேயே அவர்கள் பஞ்சத்தை வெல்லமுடியும். இது மார்க்ஸ் சொன்னது.

இந்தியவேளாண்மையின் வரலாறு தெளிவான தரவுகளின் அடிப்படையில் இன்று எழுதப்பட்டுவிட்டது. அது தேங்கிப்போன வேளாண்மை முறை அல்ல, அது உணவுற்பத்தியில் நிலைத்த தன்மையை அடையவும் இல்லை.

ஐரோப்பாவில் இனவாதமே தேசியவாதமாக வளர்ந்தது. அதன் அடிப்படையிலேயே தன் தேசமும், இனமும் உயர்ந்தவர்கள் என்றும் பிறர் அனைவரையும் தங்களை விடக் கீழானவர்களாகவும், தங்களால் ஆளப்பட வேண்டியவர்களாகவும் கருதி, மற்றவர்களைக் கொன்று தங்கள் தேசத்தை வளப்படுத்தினர். ஆதிக்க வெறி வளர்ந்து இரண்டு உலகப் போர்களில் அடித்துக் கொண்டு நொந்தபிற்பாடு இன அடிப்படையிலான தேசியவாதத்தின் விஷத்தன்மையை உணர்ந்தனர். அதை வெறுக்க ஆரம்பித்தனர். ஆனால் இந்தியா போன்று அந்நிய சக்திகளிடம் அடிமைப்பட்ட நாடுகள் நிலமை அப்படி அல்ல. அவை தன் வரலாறு, பண்பாடு ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுதலும், தேசிய உணர்வு பெறுதலும் அவை அடிமை மனோபாவத்தில் இருந்து மீண்டெழுந்து தாம் பிறரைவிடத் தாழ்ந்தவரில்லை என்று சுயாபிமானம் பெறுவதற்கு அவசியமானது என்றே கருதுகிறேன். சுவாமி விவேகானந்தர், ஸ்ரீஅரவிந்தர் போன்ற ஞானிகளும் இதன் காரணமாகவே நம் மக்களை நோக்கி நமது பண்பாட்டு வேர்களையும் அதன் பெருமைகளையும் விளக்கினார்கள். உறக்கத்தில் இருந்து விழிக்கச் சொன்னார்கள். இந்த அடிப்ப்டையான வேறுபாட்டைக் கூட அறியாமல், நான்கு செண்ட் நிலத்தில் கட்டிய தன் வீட்டிற்கு பலமாக காம்பவுண்டு கட்டிவிட்டு, இந்திய தேசக் கட்டுமானத்தையும், அதன் பண்பாட்டையும், ரத்தம்கொட்டிப் பெற்ற சுதந்திரத்தையும் சபிப்பவர்கள் நம் முற்போக்குகள்.

வெவ்வேறு நிலப்பகுதிகளையும் ஒரே பண்பாடு என்னும் நாரில் கட்டிய ஒன்றுபட்ட தேசம் தான் இந்தியா என்பதை சுதந்திர தின நன்னாளில் உங்கள் உரை மக்கள் மனதில் குறிப்பாக இளம்பிள்ளைகளிடம் சேர்த்து நேர்மறையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.அது அவர்களை தலைநிமிர்ந்து எழவைக்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பஞ்சத்தை பெரும் கட்டுமானங்களுக்கு அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். அன்றைய ஊழல் மலிந்த பிரிட்டிஷ் அரசில் அது அதிகாரவர்க்கம்- குத்தகைவர்க்கம் இணைந்து செய்த பெரும் கொள்ளையாக ஆகியது. இன்றும் சென்னையின் பெரும் செல்வந்தர்களாக விளங்கும் இந்தியர்கள் அன்று கிளைத்துவந்த குடும்பங்கள்தான். ஆனால் அக்கட்டுமானங்கள் பஞ்சத்தில் அடிபட்ட மக்களுக்கு கஞ்சி ஊற்றின. ஆகவே அவை பஞ்சத்திலிருந்து காக்கவந்த தெய்வவடிவங்களாக எளிய மக்களால் எண்ணப்பட்டன.

இதை வரலாறாக எழுதுபவர்களில் மூன்று தரப்பு உண்டு. தலித் தரப்பு அன்றைய ஆதிக்கசாதியின் சுரணையின்மை ஈவிரக்கமற்ற சுரண்டல் ஆகியவற்றுக்கு எதிரான சினத்துடன், பிரிட்டிஷ் அரசு செய்த சிறு நிவாரணங்கள் பற்றிய நன்றியுடன் அவ்வாறு எழுதுகிறது. அது புரிந்துகொள்ளத்தக்கதே. அவர்களில் சிலரே ஆய்வாளர்கள்.

இடதுசாரி ஆய்வாளர்கள் சிறிது முயன்றால் ஆய்வுகள் செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் தரப்பை நிறுவத்தேவையான தரவுகளை மட்டுமே சேகரிப்பார்கள். அவர்களுக்கு வசதியான ஒரு கொள்கை இருந்தது. அதாவது இந்தியா ஆசிய உற்பத்திமுறை கொண்ட தேசம். தேங்கிப்போன விவசாயம் கொண்டது. ஆகவே இங்கே பஞ்சம் வந்தது. என்னதான் சுரண்டல் அரசாக இருந்தாலும் பிரிட்டிஷார் ஐரோப்பியர். அவர்கள் இந்தியாவுக்கு நவீன நாகரீகத்தையும் தொழில்நுட்பத்தையும் கொண்டுவந்தவர்கள். ஆகவே தேங்கிப்போன இந்திய சமூகம் பஞ்சத்தை போக்கிக்கொள்ள முடியாது. பிரிட்டிஷாரின் உதவியாலேயே அவர்கள் பஞ்சத்தை வெல்லமுடியும். இது மார்க்ஸ் சொன்னது.

இதிலிருந்து ஓர் உறுதியான தரப்பை உருவாக்கிக்கொண்ட இடதுசாரிகள் இந்தத் தகவல்கள் எவற்றையும் சரிபார்த்ததில்லை. ஒரு மதக்கொள்கை போலவே இதைச் சொல்லிக்கொண்டிருந்தனர். மார்க்ஸியத்தின் உள்ளுறையாக உள்ள ஐரோப்பிய மேட்டிமைவாதத்தை அப்படியே ஏற்றுக்கொண்ட அடிமைகள் நம்மூர் மார்க்ஸிய ஆய்வாளர்கள். ஐரோப்பியர்கள் மீட்பர்கள் என்று ஆத்மார்த்தமான நம்பிக்கை கொண்ட பக்தர்கள் அவர்கள்.

மார்க்ஸியர்களின் அந்த நம்பிக்கையின் ஒவ்வொரு வரியும் ஆதாரபூர்வமாக பொய்ப்பிக்கப்பட்டுள்ளது இன்று. இந்தியவேளாண்மையின் வரலாறு தெளிவான தரவுகளின் அடிப்படையில் இன்று எழுதப்பட்டுவிட்டது. அது தேங்கிப்போன வேளாண்மை முறை அல்ல, அது உணவுற்பத்தியில் நிலைத்த தன்மையை அடையவும் இல்லை. ஆனாலும் இடதுசாரிகளைப்பொறுத்தவரை மார்க்ஸ் ஒரு தீர்க்கதரிசி. அவர் சொன்னால் சொன்னதுதான்.

நம் தேசியவாதிகளைப் பொறுத்தவரை அவர்கள் ஆய்வே செய்யவேண்டியதில்லை. அவர்கள் தரப்பு முழுக்க ரிக்வேதத்திலேயே சொல்லப்பட்டுவிட்டது. வானியல் முதல் அல்ஜிப்ராவரை.

கடைசித்தரப்பு இந்திய தேசிய எதிர்ப்பாளர்கள். அவர்கள் பெரும்பாலும் பிராந்தியவாதம் பேசக்கூடியவர்கள். இந்திய தேசிய எதிர்ப்பே அவர்களின் பிராந்திய தேசியத்தின் ஆதாரம். ஆகவே இந்தியதேசியத்தை எதிர்ப்பதற்காக அவர்கள் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எல்லாவகையிலும் நியாயப்படுத்துவார்கள்.

ஆக, இங்கே உண்மையில் வரலாற்று ஆய்வே இல்லை. நமக்கு உண்மைகளில் ஆர்வமில்லை. இன்றைய நமது அரசியலுக்காக நேற்றை நம் விருப்பப்படி கட்டமைக்கவே நாம் ஆராய்ச்சி செய்கிறோம்.

வெள்ளைக்காரர்கள் நியாய உணர்வுடன் பார்த்து ஏதாவது செய்தால்தான் உண்டு



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 1858-இல் ஆங்கிலேயப் பாராளுமன்றத்தின் நேரடி ஆட்சியின்கீழ் இந்தியா வந்தது. இவ்விரு ஆட்சி களிலும் தமிழ்நாட்டின் கிராமப்புற வேளாண்மை உறவுகளில் பின்வரும் மாற்றங்கள் ஏற்பட்டன.

1. நீர்ப்பாசன வசதி புறக்கணிக்கப்பட்டது.

2. ரயத்துவாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டு புதிய நிலக்கிழார்கள் உருவாயினர்.

3. தொடர்ச்சியாகப் பஞ்சங்கள் பல ஏற்பட்டன. இதன் உச்சகட்டமாக 1878-இல் ‘தாது வருடப் பஞ்சம்’ என்ற கொடிய பஞ்சம் நிகழ்ந்தது.

4. நிலக்கிழார்கள், லேவாதேவிக்காரர்கள் ஆகி யோரின் பிடியில் சிக்கிய சிறு நிலக்காரர்கள் தம் நில உரிமையை இழந்து, விவசாயத் தொழிலாளர்களாக மாறினர் அல்லது நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

5. ஏற்கனவே நில உரிமை அற்றிருந்த விவசாயத் தொழிலாளர்கள் பண்ணை அடிமைகளாகவும் கொத்தடிமைகளாகவும் மாறினர்.

6. தானியமாகச் செலுத்தி வந்த நில வரியைப் பண வடிவில் செலுத்த வேண்டியதாயிற்று.

7. விளை பொருள்களின் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை விவசாயி இழந்தான். இவ்வுரிமை இடைத்தரகரிடம் சென்று அடைந்தது. உற்பத்தியாளனைவிட இடைத் தரகர்களே அதிக ஆதாயம் அடைந்தனர்.

இவற்றின் விளைவாகத் தமிழகக் கிராமப் புறங்களில் வாழ்ந்த, சிறு நில உரிமையாளர்கள், குத்தகை விவசாயிகள், நிலமற்ற விவசாயத் தொழி லாளர்கள் குறிப்பாகத் தலித் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கிராமங்களை விட்டு வெளி யேறி உயிர் பிழைக்கலாம் என்ற உணர்வு அவர் களிடம் உருவாகத் தொடங்கியது.

வெள்ளை அரசின் தவறான வேளாண்மைக் கொள் கையால் பாதிக்கப்பட்ட தமிழகக் குடியான வர்கள் தம் வாழ்வுக்கான புதிய ஆதாரங்களைத் தேடவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருந் தார்கள்.

இத்தகைய சமூகச் சூழலில் வெள்ளையர் களால் உருவாக்கப்பட்ட மலைத்தோட்டங்கள், கிராமப்புற மக்களுக்கு, பாலைவனச் சோலையாக அமைந்தன. இவர்கள் மட்டுமன்றி, கடன்பட்டு, கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாதவர்கள், சாதி மீறிக் காதலித்தவர்கள், கிரிமினல் குற்றங் களைச் செய்தவர்கள் ஆகியோரின் புகலிடமாகவும் மலைத்தோட்டங்கள் அமைந்தன.

வெள்ளை முதலாளிகளின் இத்தேவையை நிறைவேற்றும் வகையில் ‘ஒப்பந்தக் கூலி முறை’ ((Indentured Labour System) என்ற முறை உருவாக்கப் பட்டது. இதன்படி கிராமப்புற ஏழைக் குடியான வர்கள், தோட்ட முதலாளியிடம் ஒரு குறிப்பிட்ட கால அளவு, அத்தோட்டங்களில் பணிபுரிவதாக ஒப்பந்தம் பத்திரத்தில் கையெழுத்தோ, கைநாட்டோ போட்டுக் கொடுத்துவிடுவர். ஒப்பந்தக் காலம் முடியும் முன்னர் அவர்கள் மலைத்தோட்டங்களை விட்டு வெளியேற முடியாது. திருட்டுத்தனமாகச் சிலர் தாயகத்திற்குத் திரும்பி விடுவதும் உண்டு. தோட்ட முதலாளிகள் கொடுக்கும் புகாரின் அடிப் படையில் இங்குள்ள காவல்துறை அவர்களைக் கைது செய்து அவர்கள் பணிபுரிந்து வந்த தோட்டத்திற்குத் திருப்பி அனுப்பிவிடும்.

ஒரு கட்டத்தில் இம்முறையால் தேவையான ஆட்களைத் திரட்ட முடியாத நிலையில் ‘கங்காணி முறை’ என்ற முறையை அறிமுகப்படுத்தினர். கங்காணி என்பவர் ஏற்கெனவே வெள்ளையர்களுக்கு உரிமையான மலைத்தோட்டங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளிதான். முரட்டுத்தனமும், வாக்கு சாதுர்யமும், பொருளாசையும், ஒருசேரப் பெற்றவர்களாகவும் வெள்ளை முதலாளிகளின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் விளங்கியவர்களே கங்காணிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கங்காணிகள், Tine Ticket எனப்படும் அடையாளத் தகடுகளுடன் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களிலிருந்து புறப்படுவர். அவர்கள் கொண்டு வரும் அடையாளத் தகடில், தோட்டத்தின் பெயர், அது இருக்கும் பகுதி, தகடின் வரிசை எண் ஆகியன குறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் திருச்சி, மதுரை, இராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய மாவட்டப்பகுதிகளுக்கே கங்காணிகள் புறப்பட்டு வந்தனர். தங்களது பூர்வீகக் கிராமம், உறவுக்காரர்கள் மற்றும் தன் சாதிக்காரர்கள் வாழும் ஊர் எனத் தமக்கு அறிமுகமான பகுதிகளையே கங்காணிகள் தேர்ந் தெடுத்துக் கொண்டனர்.

திக்கற்று நிற்கும் கிராம மக்களிடம், இலங் கையின் மலையகத் தோட்டங்களை, சொர்க்க லோகம் என வருணித்து, தோட்டத் தொழிலாளர் களாகப் பணிபுரிய அவர்களைக் கங்காணி அழைப் பான். அதை ஏற்றுக்கொண்ட மக்களிடம், தான் கொண்டு வந்த தகடை, இரண்டரை ரூபாய்க்கு விற்றுவிடுவான். சிலர் குடும்பத்துடன் புறப்படு வார்கள். இவர்களது பயணச் செலவை முதலில் கங்காணியே ஏற்றுக்கொள்வான். பின் இவர்கள் தூத்துக்குடி இரயில் நிலையத்திற்கும் மணியாச்சி இரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள தட்டப் பாறை அல்லது இராமேஸ்வரம் அருகில் உள்ள மண்டபம் என்ற ஊர்களில் உள்ள தொழிலாளர் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இம் முகாம்கள் இலங்கை அரசின் தொழிலாளர் துறையால் நடத்தப்பட்டன. இங்கு நுழையும் போது கங்காணி கொடுத்த தகடைக் கயிற்றில் கோத்து, கழுத்தில், தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். காலரா, அம்மை, ஆகிய நோய்களுக் கான தடுப்பூசிகளை ஒவ்வொரு தொழிலாளர் களுக்கும் போடுவர். இவ்விரு நோய்களும் அவர் களிடம் இல்லை என்று உறுதி செய்த பின்னரே இவர்கள் இராமேஸ்வரத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டு அங்கிருந்து கப்பல் வாயிலாக இலங்கையின் தலை மன்னார் பகுதிக்கு அல்லது கொழும்பு நகருக்குச் செல்வர். தலை மன்னாரிலிருந்து கால்நடையாக ஆடு, மாடுகளைப்போல் கூட்டம்கூட்டமாக கங்காணி அழைத்துச் செல்வான். வழிநடைக் களைப்பினாலும், போதுமான உணவில்லாமை யாலும் நடைப் பயணத்தின் போதே சிலர் இறந்து போவதும் உண்டு. இத்தொழிலாளர்களைக் ‘கூலி’ என்ற இழிவான சொல்லாலேயே குறித்தனர். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், ‘கூலிச் சம்பளம்’ என்றே குறிப்பிடப்பட்டது. இவர் களிடையே மதப்பிரச்சாரம் செய்ய உருவாக்கப் பட்ட கிறித்தவ மிஷன்கூட ‘கூலி மிஷன்’ என்றே பெயர் பெற்றது. இவர்கள் தமிழர்களாக இருந்த மையால், ‘கூலித் தமிழன்’ தோட்ட காட்டான்’ என்று குறிப்பிட்டு, இவர்களைவிட தாங்கள் உயர் வானவர்கள் என்று யாழ்ப்பாணத் தமிழர்களும், கொழும்பில் வாணிபம் செய்து வந்த இந்தியத் தமிழர்களும் தம்மை வேறுபடுத்திக் காட்டிக் கொண்டனர்.

‘கூலிலயன்கள்’ என்றழைக்கப்படும், குதிரை லாயம் போன்ற வரிசையாக உருவாக்கப்பட்டிருந்த தகரக் குடிசைகளில் இவர்கள் குடியேற்றப்பட்டனர். காலையில் கொம்பு ஊதியதும் அல்லது தப்பு அடித்ததும் எல்லோரும் பிரட்டுக்களத்தில் கூட வேண்டும். ஆங்கிலத்தில் ‘‘Parade Ground’ என்று வெள்ளையர்கள் குறிப்பிட்டதையே ‘பிரட்டுக் களம்’ என்று நம்மவர்கள் குறிப்பிட்டனர். இங்கிருந்து அவர்கள் தோட்டப் பயிர் உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர். தேயிலைக் கொழுந்தெடுத்தல், காப்பிப் பழம் பறித்தல், செடி களைக் கவ்வாத்து செய்தல், களை எடுத்தல், புதிய தோட்டம் உருவாக்கக் காடு திருத்தல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொள்வர். குழுக்களாகப் பிரிந்து இவர்கள் வேலை செய்வர். ஒவ்வொரு குழுவையும் கண்காணிக்க ஒரு ‘கங்காணி’ உண்டு இவர்கள் ‘சில்லரைக் கங்காணி’ என்றழைக்கப் பட்டனர்.

கடற்பயணத்திற்கும் செலவான தொகையை, தொழிலாளர்கள் கங்காணிக்குக் கொடுக்க வேண்டும். கூலிகளின் ஊதியத்திலிருந்து தவணை முறையில் இதைப் பிடித்தம் செய்வர். கம்பளி மற்றும் வேட்டிக்கான தொகைக்குக் கங்காணி எவ்வாறு கணக்குச் சொல்லி, ஊதியத்திலிருந்து கழிப்பான் என்பதை சாரல் நாடன் (1988-49)பின் வருமாறு குறிப்பிடுவார்.

“கம்பளி மூன்று ரூபாய், கருப்புக் கம்பளி மூன்று ரூபாய், வேஷ்டி மூன்று ரூபாய், வெள்ளை வேஷ்டி மூன்று ரூபாய்”.

இவர்களை ஈவு இரக்கமின்றி வேலை வாங்கு வதற்காக வெள்ளை முதலாளிகள் ‘தலைக்காசு’ அல்லது கங்காணிக் காசு என்ற பெயரால் கூலி யாட்களின் கூலியிலிருந்து ஒரு சிறு பகுதி பிடித்தம் செய்து அதைக் கங்காணிக்கு வழங்கி வந்தனர். இது குறித்து சாரல் நாடன் (1993: 75-75) தரும் விளக்கம் வருமாறு:

அவர் தன்னோடு அழைத்துச் செல்லும் அத்தனை போரும், தோட்டத்தில் அவர் ‘கணக்கில்’ பேர் பதியப்படுவார்கள். அவ்விதம் பேர் பதியப் படும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலுக்கு வரும் நாளைக்கு மூன்று சதவீதம் என்று கணக்கிடப் பட்டு அந்தப் பணம் கங்காணிக்குக் கொடுக்கப்படும்.

இந்த வகையில் ஊதியத்தைவிட, ‘கங்காணிக் காசு’ என்ற பெயரால் கங்காணிக்கு அதிக வருவாய் கிட்டும். தேயிலை அல்லது காப்பிப் பழம் சேகரித்து முடிந்த பின், அது எடை போடப்படும். இது கணக்கர்களின் பணியாகும். நிர்ணயம் செய்யப்பட்ட அளவுக்குக் குறைவாக இருந்தாலோ அல்லது இருப்பதாகக் கணக்கன் கூறினாலோ, நாள் ஊதியத்தில் சரிபாதி குறைக்கப்படும். இதற்கு ‘அரைப்பேர் போடுதல்’ என்று பெயர், இவ்வாறு கூலியாளுக்குக் கிடைக்கும் கூலி குறைந்துவிட்டால், கங்காணிக்கு, தலைக்காசு கிடைக்காது. ஆகவே அவன் மிகவும் கோபப்படுவான். இதனைப் பின்வரும் நாட்டார் பாடல்கள் உணர்த்துகின்றன.

‘அரைப் பேராலே- ஏலேலோ- கங்காணிக்கு- ஐலசா
தலைக்காசு - ஏலேலோ தவறிப்போச்சு- ஐலசா
கோபத்தோடே - ஏலேலோ கங்காணியும்- ஐலசா
குதிக்கிறானே- ஏலேலோ கூச்சல் போட்டு - ஐலசா 
ஆண்கள் பெண்கள் - ஏலேலோ அடங்கலுமே - ஐலசா
அவனைப் பார்த்து - ஏலேலோ அரளுமே - ஐலசா’.
...
கூடை எடுக்கலாச்சு- நாங்க
கொழுந்து மல பார்க்கலாச்சு
கொழுந்து குறைந்த தன்னு
கொரைபேரு போட்டார்கள்
...
அறுவா எடுத்த தில்ல
அடைமழையும் பார்த்த தில்ல
அரும்பு கொரைஞ்சதுன்னு
அரைப்பேரு போட்டார்கள்
...
“பொழுதும் எறங்கிருச்சி
பூமரமும் சாஞ்சிருச்சி
இன்னமும் இரங்கலையோ
எசமானே ஓங்க மனம்
அவசரமா நான் போறேன்
அரபேரு போடாதீங்க”
...

வெள்ளைக்கமிஸ், கறுப்புக்கோட்டு, சரிகைத் தலைப்பாகை, கோட்டின் இடப்புறத்து மேல் பொக்கெட்டுக்கு மேலே வெள்ளிச் சங்கிலி, தொங்கும் பொக்கெட் உருலோசு* இவைதான் கங்காணியின் உருவ அமைப்புக்கான அலங்காரம்.

காதிலே கடுக்கன்- குண்டலம் என்பர். கழுத்திலே தங்க வளையம்- கெவுடு என்பர். கையிலே பிரம்பு- கொண்டை என்பர்- இவைகள் கங்காணியின் அத்தியாவசிய அணிகலன் எனலாம்.

என்று கங்காணிகளின் ஆடை அணிகலன்களை வர்ணிக்கும் சாரல் நாடன் (1993: 40)

“தோட்டப்புறங்களில் தொழிற்சங்கங்கள் ஊடுருவும் வரை கங்காணிமாரின் நிலை இந்தியக் கிராமத்து ஜமீன்தாரிகளின் நிலையிலேயே இருந்தது” என்று குறிப்பிட்டு, கங்காணிகள் எத்தகைய வல்லமை படைத்தவர்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். கங்காணிகள் ஈவு இரக்க மின்றி வேலை வாங்குவதை,

“எண்ணிக் குழி வெட்டி
இடுப்பொடிஞ்சி நிக்கையிலே
வெட்டு வெட்டு என்கிறானே
வேலையைத்தக் கங்காணி”
“கொண்டைப் பிரம்பெடுத்து
கூலியாளைப் பிரட்டெடுத்து**
துண்டுகளைக் கொடுத்து
துரத்துராரே கங்காணி”

“அடியும் பட்டோம் மிதியும் பட்டோம்
அவராலே மானங் கெட்டோம்
முழி மிரட்டிச் சாமியாலே
மூங்கிலாலே அடியும் பட்டோம்”

என்ற மலையக நாட்டார் பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது. தங்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்கு, வெள்ளைத் துரையைவிடக் கங்காணியே முக்கிய காரணம் என்று கருதிப் பின்வருமாறு பாடியுள்ளார்.

“தோட்டம் பிரளியில்லே
தொரே மேலே குத்தமில்லே
கங்காணி மாராலே
கனபிரளி யாகுதையா”

மேலும் பழக்கமில்லாத குளிரான மலைப் பகுதி, அட்டைக்கடி, கொசுக்கடியினால் ஏற்படும் மலேரியாக் காய்ச்சல் என்பனவற்றிற்கும் காட்டு விலங்குகளின் தாக்குதலுக்கும் தோட்டத் தொழி லாளர்கள் ஆளாகி வந்தனர்.

இத்தமிழர்களிடம் உரையாடுவதற்காகத் தோட்ட முதலாளிகள் தமிழ் படிக்க வேண்டிய கட்டாயம் நேரிட்டது. இவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வெல் என்பவர் எழுதிய ‘கூலித் தமிழ்’ என்ற நூல் 1922-இல் வெளியானது. இந்நூலில் தோட்டத்துரைக்கும் கூலியாளுக்கும் நிகழும் உரையாடல் பயிற்சிகள் இடம் பெற்றிருந்தன. சான்றாக சில பகுதிகளைக் குறிப்பிடலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அன்பு ஜெயமோகன்,


அண்மையில் உங்கள் தளத்தில் “பஞ்சமும் ஆய்வுகளும்” என்னும் தலைப்புடன் கூடிய பதிவுகளைப் பார்த்தேன். இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டதற்கு பிரித்தானிய ஆட்சியாளரே பொறுப்பு என்று அடித்துக் கூறுகிறார் நோம் கொம்ஸ்கி:


“வங்காளத்தைக் கைப்பற்றிய பிரித்தானியர் வங்காளத்தின் செல்வம், பண்பாடு, நவீனத்துவம் கண்டு வியந்தார்கள். அதனை, உலகம் தமக்களித்த அரிய பரிசுகளுள் ஒன்றாகக் கருதினார்கள். வங்காளத்தைக் கைப்பற்றிய ராபர்ட் கிளைவின் சிலை – பிரித்தானிய ஏகாதிபத்தியம் அதன் குடிமக்களைத் தாழ்த்தி இழிவுபடுத்தி இழைத்த வன்முறையின் நினைவுச்சின்னம் – கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா அரும்பொருளகத்தின் வாயிலில் மக்களை வரவேற்கிறது! கிளைவ், டாக்காவைக் கண்டு வியந்தான். தற்பொழுது வங்காள தேசத்தின் தலைநகரமாக விளங்கும் டாக்கா என்னும் புடவை மாநகரத்தை, ‘இலண்டனைப் போலவே மக்கள்தொகை மிகுந்த பாரிய செல்வ மாநகரம்’ என்று வர்ணித்தான். டாக்காவின் மக்கள்தொகை 1,50,000 ஆக இருந்து, ஒரு நூற்றாண்டு நீடித்த பிரித்தானிய ஆட்சிக்குப் பிறகு 30,000 ஆக வீழ்ந்தது. டாக்கா மலேரியா பீடித்த காடாக மாறியது. அதுவரை வங்காளத்தில் உணவுக்குப் பற்றாக்குறை நிலவியதுண்டு. அபின் உற்பத்தியைப் பெருக்கும் நோக்குடன், ‘உழவர்கள் நெல், தானியப் பயிச்செய்கையை விடுத்து அபின் பயிர்ச்செகையில் ஈடுபட வேண்டும்’ என்று பிரித்தானியர் வகுத்த விதியின் விளைவாக வங்காளத்தில் நிலவிய ‘பற்றாக்குறை, பஞ்சமாக’ மாறியது; ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் மாண்டார்கள் என்று ஆதாம் சிமித் எழுதிச் சென்றார். ‘வணிக வரலாற்றில் இத்தகைய அவலம் இடம்பெறல் அரிது. மாண்டுமடிந்த பஞ்சு நெசவாளர்களின் எலும்புகளால் இந்திய சமவெளிகள் வெள்ளைவெளேரெனக் காட்சியளிக்கின்றன’ என்று பிரித்தானிய ஆட்சியாளரே எழுதிச் சென்றார்கள். வங்காளத்துக்கே சொந்தமான அரும்பஞ்சு அருகிப்போயிற்று. அதன் மேம்பட்ட புடவை உற்பத்தி பிரித்தானியாவுக்கு பெயர்க்கப்பட்டது” (Noam Chomsky, Hopes and Prospects, Haymarket Books, Chicago, 2010, p. 14-15).



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 கிறிஸ்துவ  ஆங்கிலேயர்கள், இந்தியாவைக் கொள்ளை அடிக்கவும் மதம் மாற்றவும் பள்ளிக்கூடங்களை  தொடங்கியதும், தொழிற்சாலைகளை தொடங்கியதும், அணைகள் கட்டியதும்.

  19 ஆம் நூற்றாண்டில் காலரா நோய் பெரிய அளவில் தமிழ்நாட்டு மக்களை பாதித்ததாக அறிகிறோம். அதற்கான மருத்துவ வசதிகளை ஆங்கிலேயர்கள் ஏற்படுத்தியதையும் அறிய முடிகிறது.

   "ஆயுதங்கள் எடுத்துச் செல்லக்கூடாது, இரவு 9 மணிக்கு ஊர் உறங்கிவிடவேண்டும்" என்ற சட்டங்களை ஏற்படுத்தி, தங்கள் ஆயுதபலத்தை காட்டி ஆங்கிலேயர்கள் ஆண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருந்து கலை செல்வங்களையும் மிக அளவில் செல்வத்தை தமது நாட்டுக்கு ஆங்கிலேயர்கள் எடுத்து  சென்றனர்.

  உள்ளூர் மக்கள் தொழில் தொடங்க முடியாத நிலை இருந்தது. "கப்பல் வணிகத்தில் உள்ளூர் வாசிகள் ஈடுபட முடியாது" போன்ற நிறைய கட்டுபாடுகளை போட்டு ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர்.

  ஆங்கிலேயர் ஆட்சியில் கல்வி கற்று, விவரம் பெற்றவர்கள், 'இந்தியா முழுவதும்,' அன்னியர்கள் ஆட்சியின் கீழ் இருப்பதை அறிந்து, உரிமை பெறுவதற்கு போராடிய காலம் இந்திய வரலாற்றில் இனிய காலமாக தெரிகிறது. தமிழர்கள் சுமார் 600 ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடப்பதை அறியாத மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நிகழ்ச்சிகள், மனமெல்லாம் மகிழ்ச்சி தரும் விதமாக அமைகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

http://akazhi.com/blog/2016/04/13/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

home  களம்  சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்

சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்

http://enlightenedvoice.blogspot.in/p/blog-page_79.html

 

பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிள‌க்க முடியுமா நம் தர்மத்தை ?http://enlightenedvoice.blogspot.in/p/blog-page_79.html



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஆனால் இந்தியாவில் கொள்ளையும், 
கொலையும், அடிமை வியாபாரமும் 
செய்து சேர்த்த பாவப் பணத்தை-
அமெரிக்காவில் கல்லூரியும் பல்கலைக்கழகமும் உருவாக்க 
தானமாகக் கொடுத்த ஒரு வெள்ளைக்காரனைப் பற்றிய 
கதை இது.

east india company logo-1

உலகிலேயே சிறந்த பல்கலைக்கழகங்களின் வரிசையில்
11வது இடத்தில் (11th rank in the list of
best universities of the world ) இருக்கும் –

நமது முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா
அவர்களுக்கு முதல் முதலாக டாக்டர் பட்டம் கொடுத்த
“யேல் யுனிவர்சிடி” உருவாகக் காரணமாக இருந்தவனின்
கதை தான் இது.

elihu yale -1717
இன்றைக்கு சுமார் 364 ஆண்டுகளுக்கு முன்னர் – 
1649ம் ஆண்டு அமெரிக்காவில் பாஸ்டன் நகரத்தில்
(அந்த காலகட்டத்தில் அது பிரிட்டனின்
ஒரு குடியேற்ற நாடாக இருந்தது )-
ஒரு பிரிட்டிஷ் தம்பதியருக்குப் பிறந்த எலிஹூ யேல்
(Elihu Yale) தன் இளமைக்காலத்தில் படிப்பிற்காகவும்
பின்னர் பிழைப்பிற்காகவும், இங்கிலாந்து சென்றான்.

கிழக்கு இந்திய கம்பெனியில் சுமார் 27 ஆண்டுகள்
வெவ்வேறு பொறுப்புகளை ஏற்று பணி புரிந்த இவன்,
கிழக்கிந்திய கம்பெனியின் –
சென்னையின் இரண்டாவது கவர்னராக –
1687 முதல் 1692 வரை பொறுப்பிலிருந்தான்.

இவன் பொறுப்பில் இருந்தபோது தான் முதல் முதலாக
சென்னை கார்பரேஷன் 1688-ஆம் ஆண்டு செப்டம்பர் 
29ந்தேதி உருவாக்கப்பட்டது.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை உருவாகவும், 
அதன் கொத்தளத்தில் உள்ள கொடிக்கம்பம் முதல் முதலில்
உருவாகவும் காரணமாக இருந்த ஆசாமி இவன் தான்.

அப்போதைக்கு இந்தியாவிலேயே பெரிய கொடிக்கம்பமாக
இருந்தது அது தான். சென்னை கடற்கரையில் கரைதட்டி
உடைந்த லாயல் அட்வெஞ்சர் என்கிற கப்பலின்
கொடிமரத்திலிருந்து உருவானது அது என்கிறது சரித்திரம்.
இந்தியாவில், கிழக்கிந்திய கம்பெனி கொடிக்கு பதிலாக 
பிரிட்டிஷ் யூனியன் ஜேக் கொடி முதல் முதலில் 
ஏற்றப்பட்டதும் இந்த கொடி மரத்தில்தான் 
என்கிறது சரித்திரம்.

இந்த யேல் – சென்னையில் இருக்கும்போது, ஒரு
பிரிட்டிஷ் விதவைப்பெண்ணை புனித ஜார்ஜ் கோட்டையில்
உள்ள மரியன்னை தேவாலயத்தில் தான் திருமணம்
செய்து கொண்டிருக்கிறான். அதன் பிறகு இவர்களுக்கு
டேவிட் என்கிற பெயரில் ஒரு மகன் பிறந்து தனது
மூன்றாவது வயதில் இறந்து போயிருக்கிறான். அந்த
சிறுவனது உடல் சென்னையில் தான் அடக்கம் செய்யப்
பட்டிருக்கிறது.

கிழக்கிந்திய கம்பெனியின் பெயரை உபயோகித்து
சென்னை முதற்கொண்டு – தெற்கே கடலூர் வரை 
தன்னால் முடிந்த மட்டும் கொள்ளையடித்திருக்கிறான் 
இந்த ஆள்.

கம்பெனி பணத்தில், தேவனாம்பட்டினத்தில்(கடலூர்)
சொந்தமாக ஏகப்பட்ட நிலம் வாங்கி ஒரு சொந்த 
துறைமுகத்தையும், கோட்டையையும் கட்டி இருந்தான்.
(private harbour and port )
அதற்கு தன் மகனின் நினைவாக டேவிட் கோட்டை
என்றே பெயரிட்டிருந்தான்.

தான் அடிக்கும் கொள்ளைப் பொருட்களை அவ்வப்போது,
தன் சொந்த கப்பலாக மாற்றப்பட்டு விட்ட –
கிழக்கிந்திய கம்பெனி கப்பல் ஒன்றின் மூலம்
கடலூர் துறைமுகத்திலிருந்து தான் 
ஆப்பிரிக்காவிற்கும், இங்கிலாந்திற்கும் கடத்தி 
இருக்கிறான்.

சென்னையில் அவன் பணம் சம்பாதிக்க செய்யாத 
அட்டூழியங்கள் இல்லை. கம்பெனி அதிகாரத்தைப் 
பயன்படுத்தி, பொதுமக்களையும்-வியாபாரிகளையும்
மிரட்டிப் பணம் பிடுங்கி இருக்கிறான்.
காடுகளை அழித்து, தேக்கு மரங்களை விற்றுப் பணம்
பண்ணி இருக்கிறான். வைர வியாபாரம் செய்திருக்கிறான்.

தன் சொந்த செலவுகளுக்காக, உள்ளூரில் கடுமையான
வரிகளைப் போட்டு வசூல் செய்திருக்கிறான்.
மக்களுக்கு தன்னிடத்தில் பயம் இருக்க வேண்டும் 
என்பதற்காக பலருக்கு கடுமையான தண்டனைகளைக்
கொடுத்திருக்கிறான்.
ஒரு சமயத்தில் இவனது குதிரை லாயத்தில்
வேலை செய்து வந்த தமிழ் இளைஞன் ஒருவன் ஒரு
குதிரையுடன் ஓடிப் போய், பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு,
பிடித்து இழுத்து வரப்பட்டு, இவனால், 
அடித்தே கொல்லப்பட்டிருக்கிறான்.

இதையெல்லாம் விடப் பெரிய கொடுமையாக இவன்
அடிமை வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்திருக்கிறான்.
இவனிடம் வேலைக்குச் சேர்ந்தவர்களை விவரம் 
சொல்லாமல் ஆப்பிரிக்காவிற்கு அனுப்பி, அங்கே 
அவர்களை அடிமைகளாக விற்பனை செய்திருக்கிறான்.

கிராமங்களில், தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கும்
சிறுவர்களை தூக்கி வரச்செய்து, அவர்களையும் 
அடிமைகளாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறான்
இந்த அயோக்கியன். யேல் காலத்தில் இந்தியாவில்
அடிமை வியாபாரம் நடந்தது என்பது சரித்திரத்தில் கூடப் 
பதிவாகி இருக்கிறது.

நாளடைவில், இவனது பிரதாபங்கள் லண்டன் வரை
பரவி, இவன் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு,
1692-ல் (43 வயதில் ) பிரிட்டனுக்கு திரும்ப அழைத்து 
கொள்ளப்பட்டிருக்கிறான்.

அதன் பின்னர், கொள்ளையடித்த சொத்துக்களை வைத்துக்
கொண்டு, பிரிட்டனில் மிகப்பெரிய கோடீஸ்வரனாக 
வாழ்க்கை நடத்தி, தனது 72வது வயதில்
(July 8, 1721) இறந்து போயிருக்கிறான்.
(அந்த காலத்தில் – இது அதிகம் தான் ..!)

இங்கிலாந்து திரும்பிய பிறகு, தனக்கு ஏற்பட்டிருந்த 
கெட்ட பெயரை மாற்றும் விதமாக, தான தர்மங்கள்,
பண உதவிகள் என்று நிறைய செய்து, கொடை வள்ளல்
என்கிற தோற்றத்தை உருவாக்க முயன்று, அதில்
ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறான்.

யேலுக்கு 69 வயது நடந்து கொண்டிருக்கும்போது,
அதாவது, இன்றைக்கு சுமார் 295 வருடங்களுக்கு முன்னர் –
அவனது பிறப்பிடமான அமெரிக்காவில், கனெக்ட்கெட்
பிரதேசத்தில், தாங்கள் சிறிய அளவில் நடத்திவந்த
இறைக்கல்வி நிலையம் ஒன்றை கல்லூரி அளவில் 
விரிவாக்கவும், அதற்கான கட்டிடங்கள் கட்டவும் 
நிதி உதவி கோரி, மாதெர் காட்டன் என்பவர் 
இங்கிலாந்து வந்து, அப்போது தர்மபிரபுவாக மாறியிருந்த 
யேலை சந்தித்து நிதி உதவி கோரினார்.
எலிஹூ யேல், ஏற்கெனவே இங்கிலாந்தில் நிறைய தான
தர்மங்கள் செய்து வந்ததால், தான் பிறந்த இடத்திலிருந்து 
உதவி கோரி வந்த இவர்களுக்கும் தாராளமாக உதவி 
செய்தான்.

தன்னிடம் இருந்த சுமார் 400 புத்தகங்கள், 
இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் மன்னரின் பெரிய ஒவியம் ஒன்று, 
மற்றும் இந்தியாவிலிருந்து தான் கொள்ளையடித்து – 
கொண்டு வந்திருந்த பொருட்கள் அடங்கிய 8 பெரிய பெட்டிகள்
ஆகியவற்றை அளித்து, அவற்றை விற்பதால் வரும்
பணத்தை அவர்களுக்கு கொடுத்தான். யேல் கொடுத்த 
பொருட்களை ஏலத்தில் விட்டபோது –
562 டாலர் பணம் கிடைத்தது(1718ஆம் ஆண்டிலேயே !).
அந்தப் பணத்தைக்கொண்டு கனெக்டிகட்டில் புதிய
கல்லூரிக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. அவன் நினைவாக 
அந்த கல்வி நிறுவனத்துக்கு யேல் பெயர் சூட்டப்பட்டது. 
பின்னர் அதுவே பெரிய பல்கலைக்கழகமாக வளர்ச்சி 
அடைந்த பிறகு, 1745-ம் ஆண்டு முதல் அந்தப் 
பல்கலைக்கழகத்துக்கே யேல் பெயர் சூட்டப்பட்டு 
“யேல் பல்கலைக்கழகம்” என்று அழைக்கப்படலாயிற்று !

இன்றைக்கு 321 ஆண்டுகளுக்கு முன்னர் – அதாவது,

1692-ம் ஆண்டு – லஞ்ச ஊழல்,கொலை,கொள்ளை, 
அடிமை வியாபரம் ஆகிய – குற்றசாட்டுகளுக்கு உள்ளாகிப் 
பதவி இழந்த, படுபாவி ஒருவனின் பெயரில் தான் –
இன்று உலகம் முழுவதும் உயர்வாக மதிக்கப்படும் ஒரு
பல்கலைக்கழகமே இயங்குகிறது என்கிற உண்மைகள்
எத்தனை பேருக்கு தெரிந்திருக்கப்போகிறது ?

எனக்கும் எதேச்சையாகத் 
தெரிய வந்த உண்மை தானே இது..!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard