Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வெள்ளைக்கார மிஷனரிகளும் தமிழ் பணிகளும்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
வெள்ளைக்கார மிஷனரிகளும் தமிழ் பணிகளும்
Permalink  
 


உவின்ஸ்லோ ஐயர் (Rev.Dr.Winslow)
கிளார்க் ஐயர் (Rev.W.Clark)
த்ரு ஐயர் (Rev. W.H. Drew)
சாமுவேல் பவுல் ஐயர் (1844-1900)
தெய்லர் ஐயர் (Rev.W.Taylor)
சற்குணம் உவின்பிரேட் ஐயர் (1810-1879)
போப் ஐயர் (Rev.G.U.Pope ) (1820-1903)
கால்டுவெல் ஐயர் (Rev. Robert Caldwell ) (1814-1891)
ராட்லர் ஐயர் (Rev. J.P. Rottler)

ஷீல்ஸ் ஐயர்.

ணியாற்றத் தமிழகம் வந்தார். சுப்ரதீபக் கவிராயரிடம் 20 ஆண்டுகள் தமிழ் பயின்றார் . தமிழோடு தெலுங்கு, வடமொழி ஆகியனவும் கற்றார். தமிழில்சதுரகராதிதொன்னூல் விளக்கம் (குட்டித் தொல்காப்பியம்) என்னும் இலக்கண நூல் ஆகியவற்றோடு கலம்பகம், அம்மானை போன்ற சிற்றிலக்கியங்கள், பரமார்த்தகுருகதை என்னும் உரைநடைக் கதைநூல்,தேம்பாவணிப் பெருங்காப்பியம் ஆகியன படைத்தும் எழுத்துச் சீர்திருத்தம் கண்டும் பெருமைகள் சேர்த்தார். 

  • டாக்டர் ஜி.யு.போப். (1820 - 1907)

  •  

    இவர் இங்கிலாந்து நாட்டவர். தமது 19-வது வயதில் தமிழகம்     வந்தார். மகாவித்துவான் இராமானுஜ கவிராயரிடம் தமிழை முறையாகப்  பயின்றார். முதலில்     திருநெல்வேலி சாயர்புரத்திலும்,     அடுத்துத் தஞ்சையிலும், பின்னர் நீலகிரியிலும் சமயப் பணி புரிந்தார். திருக்குறள்,நாலடியார் போன்றவற்றில் தோய்ந்து மகிழ்ந்து அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலைஆகியவற்றுள் சில செய்யுள்களையும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.1880 - இல் இங்கிலாந்து சென்று, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழும் தெலுங்கும் போதிக்கும் ஆசிரியராகப் பணிசெய்தார். 40 ஆண்டுகளுக்கும் மலோக நற்றமிழ்ப்பணியாற்றினார். அப்போது திருவாசகத்தில் மனம் ,தோய்ந்து அதனை ஆங்கிலத்தில்     மொழிபெயர்த்து    வெளியிட்டார்; திருக்குறளையும் மொழிபெயர்த்தார். இவரால் தமிழ், உலகறியும் பெருமை பெற்றது.

  • டாக்டர் கால்டுவெல்

  •  இவர் அயர்லாந்தில் பிறந்து, ஸ்காட்லாந்தில் கல்வி பயின்று, ஆங்கிலக் கிறித்தவ சங்கத்தின் துணையோடு தமது 23-வது வயதில்     சமயம் பரப்புவதற்காகத் தமிழகம் வந்தார். திருநெல்வேலி     மாவட்டம் இடையன்     குடியை இருப்பிடமாகக்     கொண்டு ,     ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களைக் கிறித்தவராக மாற்றினார். இவர் இலத்தீன், ஈப்ரு, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மேலை மொழிகளிலும், தமிழ்,     தெலுங்கு, மலையாளம்,     துளு     போன்ற தமிழிய (திராவிட) மொழிகளிலும் வடமொழியிலும், அறிவும், புலமையும் பெற்றிருந்தார். இதனால், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்(A Comparative Grammar of the Dravidian Languages) என்ற ஒப்பற்ற ஆராய்ச்சி நூலை எழுதி வெளியிட்டார். இந்நூல் மூலம், ஆரிய இன மொழிகள் வேறு, திராவிட இனமொழிகள் வேறு; தமிழுக்கும் வடமொழிக்கும் எவ்வித உறவும் இல்லை; அது ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது; இந்தியாவிற்கு வந்து திராவிட மொழிச் சொற்களை வாங்கிக் கலந்ததால், வடமொழியை இந்தோ ஐரோப்பிய  மொழி என்று குறிக்கலாம்’ என்ற உண்மையைச் சான்றுகளுடன் நிறுவினார்.     சென்னைப்     பல்கலைக்கழகம் மற்றும் இராயல் ஆசியக் கழகம் (Royal Asiatic Society) இரண்டும் இவருக்கு இலக்கிய வேந்தர், வேத விற்பன்னர் என்ற பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தன. இவர் எழுதிய திருநெல்வேலி மாவட்ட வரலாறு என்ற நூல் ஓர் அரிய வரலாற்றுக் கருவூலமாகும். இந்தியாவில் 53 ஆண்டுகள் வாழ்ந்த இவர் தமது 77- ஆம் வயதில் கொடைக்கானலில் உயிர்துறந்தார்.     இவரது சமாதி இடையன்குடியில் இவர் எழுப்பிய தேவாலயத்தில் இருக்கிறது.

  • தத்துவ போதகர் (1577 - 1656)

  •  இத்தாலி நாட்டுக்காரரான இவரது இயற்பெயர் இராபர்ட் டி நொபலி (Robert De Nobili) என்பதாகும். வடமொழியும், தென்மொழிகளும்     கற்றவர்.     சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி முதலிய நகரங்களில் அவ்வப்போது தங்கி உயர் சாதியினரைக் கிறித்தவர்களாக     மதம் மாற்றினார். வீரமாமுனிவருக்கு நூறு ஆண்டுகள் முன்னர் வாழ்ந்தவர். தமிழில் முதல் உரைநடை நூலை எழுதிய பெருமை இவரையே சாரும். தமிழ் - போர்ச்சுகீசிய அகராதியை உருவாக்கினார். தரங்கம்பாடியில் இவர் பெயரில் ஓர் அச்சகம் இன்றும் உள்ளது.

  • சீகன்பால்கு ஐயர் (1683 - 1719)

  •  இவர் செர்மனி நாட்டவர். 1705-இல் தமிழகம் வந்தார் தஞ்சாவூருக்கு     அடுத்த தரங்கம்பாடியில் எல்லப்பா என்பவரிடம் தமிழ்     கற்றார்.     அங்கேயே சமயப் பணியும் புரிந்தார். தரங்கம்பாடியில் ஓர் அச்சுக் கூடத்தையும், அதற்கு உதவியாகக் காகிதத் தொழிற்சாலை ஒன்றையும் நிறுவினார். முதன் முதலில் தமிழ் நூல்களை அச்சிட்ட பெருமை இவரையே சாரும். கமில் சுவலபில், ஆன்டிரநோவ், ரூதின் செம்பியன், டாக்டர் ஆஷர் போன்ற இக்காலத்து வெளிநாட்டுக்     கிறித்தவர்களும்     தமிழுக்கு அரிய தொண்டினை ஆற்றியுள்ளனர்.



    -- Edited by devapriya solomon on Sunday 12th of April 2015 04:20:07 PM

    __________________


    Guru

    Status: Offline
    Posts: 7329
    Date:
    Permalink  
     

    போப் ஐயர், தோமோ ஐயர், சீகன் பால்கு ஐயர்

     

    தமிழ் எழுத்து வரலாற்றுக்கு கால்ட்வெல் என்ன செய்தார்?

    ​தமிழ் வரிவடிவம் சமஸ்கிரிததுடன் தொடர்புடையது என்று எழுதினார் என்பது மட்டுமே அவர் செய்தது
     
    சரியாகத்தானே சொல்லியிருக்கிறார்? பிராமி எழுத்து தமிழில் பலகாலம் இருந்து பின்னர் வட்டெழுத்தாக மாறியது,
    சோழர்கள் கிரந்த எழுத்தை தமிழ் எழுத்து ஆக்கினர்.
     
    கால்ட்வெல் காட்டிய ஒரு கருத்து இன்றும் தமிழ் எழுத்து வளர்ச்சியில் முக்கியமானது. வடமொழியில்
    ஏ, ஓ தான். எ, ஒ இல்லை. எனவே தான் தமிழ் எழுத்துக்களில் ஆரம்பத்தில் எ, ஒ இல்லை என்றார்.
    அவர் பார்த்த கல்வெட்டுக்களில், சுவடிகளில் அவ்வாறே. கால்ட்வெல் தொல்காப்பியம் அச்சாகவில்லை.
     
    முன்பு எ தான் இப்போதைய ஏ, ஒ தான் இப்போதைய ஓ. எ, ஒ மீது புள்ளி வைத்தால் உயிர், உயிர்மெய்களில்
    குறில் ஆகும். (ஆனால் ஓலைகள் புள்ளி வைத்தால் சீக்கிரம் அழிபடும் என்பதால், தொல்காப்பியர் சொன்ன முறை
    இல்லாது போயிற்று,) கிரந்த எழுத்து யூனிகோடில் எ, ஒ பழைய வடிவங்கள் பார்க்கலாம். தேவாரம், நாலாயிர பிரபந்தம்
    எழுத கிரந்த எ, ஒ மீது புள்ளியிடலாம். மலையாள பிளாக்கில் கிரந்த எழுத்து ஃபாண்ட்டில். அப்போதுதான்
    எ vs. ஏ, ஒ vs. ஓ வேறுபாடு காட்டமுடியும். வீரமாமுனிவர் செய்ததுபோல் நெடிலை குறிலாக்க இயலாது -
    எனவே தொல்காப்பியர் விதியைப் பயன்படுத்தினால் (எ, ஒ மீது புள்ளி இட்டு உயிர், உயிர்மெய் குறில்கள்)
    கால்ட்வெல் முதலில் குறிப்பிட்ட குறில், நெடில் வேறுபாடின்மையை நீக்கமுடியும். கிரந்த எழுத்து (சம்ஸ்கிருதம் எழுத):
     
    மலையாளம், தேவாரம் எழுத குறில், நெடில் வேறுபாடு தேவை. இவை முன்பு இல்லை என்பதால், வடக்கே இருந்து
    தமிழ் பெற்றது எழுத்து என்றார் கால்ட்வெல். அது சரியே. 
     
    நா. கணேசன் 
    தொல்காப்பியம் வட்டெழுத்த்க்காகவா? வட்டெழுத்து உருவானது எப்போது?
    ஒரு குறிப்பு: தமிழ் பிராமி இருந்த பல நூற்றாண்டுகளில் எழுத்து எல்லாம் நேர்கோடுதான்.
     
    தமிழ் எழுத்து வரலாற்றுக்கு கால்ட்வெல் என்ன செய்தார்?
    எனக்குத் தெரிந்த ஆய்வர்கள்: ப்யூலர், பர்னல், கே.வி. சுப்பிரமணிய ஐயர், மயிலை சீனி. வெங்கடசாமி,
    ஐராவதம், நாகசாமி, தினமலர் கிருஷ்ணமூர்த்தி, புலவர் இராசு, ... 
     
    நா. கணேசன் 
    வட்டெழுத்து அசோகரின் ​பிரமியில் இருந்து தோன்றியது என்ற தகவல் தரவுகளின் அடிப்படையில் தகவில என நிறுவப்பட்டு பல பத்தாண்டுகள் கடந்துவிட்டன
     
    கால்டுவெல் மற்றும் பிற அறிஞர்கள் தம் கருத்தை உரைத்த போது தமிழ்க் கல்வெட்டுகள் பற்றிய ஆய்வுகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. 1940 களுக்கு பிறகுதான் அது பற்றிய தெளிவான கருத்து தோன்றியது. தமிழகத்தில் உள்ள தமிழ் பிராமி கல்வெட்டுகள் தமிழ் தான் என்று உறுதியாக தீர்மானபிறகு அதைக் கொண்டு சிறிது சிறிதாக வட்டெழுத்தைப் படித்தார்கள். அதற்கு காரணம் இடையிடையே பிராமி எழுத்தும் கலந்திருந்தது தான். வட்டெழுத்தை படிக்க ஈரெழுத்து கல்வெட்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. 
    kasargode.jpg?part=0.1&authuser=0
    ​மேலே உள்ள காசர்கோடு கல்வெட்டில் ம,ச, ர, ம ஆகிய 4 பிராமி எழுத்து தவிர மற்ற 10 எழுத்துகள்  தொடக்க கால வட்  எழுத்துகள். வட்டெழுத்தில் பட்டன் என்ற சொல்லில் ட்ட என்ற எழுத்துகளை நோக்கினால் பிராமியின் ட்ட எழுத்துகளே ஓலையில் நேர்பட எழுதினால் கிழிந்து விடும் என்பதற்காக கடிகார முள் திரிமுறையில் வலமிருந்து இடமாக சாய்த்து எழுதப்பட்டிருப்பது தெரியும். ன் எழுத்து அப்படியே சற்று நீட்டி வளைத்து எழுதப்பட்டிருப்பது தெரியும். இது வட்டெழுத்து பிராமியில் இருந்து தோன்றியது என்பதற்கு சான்று. இதன் தோற்ற காலம் 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டு இறுதி எனக் கொள்ளலாம்.
     
    இந்த வட்டெழுத்தை தழுவியே 200 ஆண்டுகள் கழித்து கிரந்த எழுத்துகள் 6 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் சமற்கிருதம் எழுத கூடுதல் எழுத்துகளோடு பயனுக்குவந்தன.
     
    வட்டெழுத்து நடுகல் கல்வெட்டுகள் 5ஆம் நூற்றாண்டு அளவிலேயே வந்து விட்டது. அதற்கும் மேலை ஆசியாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்றைய வரிவடிவம் 600 ஆண்டுகளாகத்தான் பயனில் உள்ளது எனக்கொள்ளலாம்.
     
     
    சேசாத்திரி 
     


    __________________


    Guru

    Status: Offline
    Posts: 7329
    Date:
    Permalink  
     

    பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை 1

     தமிழ்ச்செல்வன்

    கிறுத்துவப் பாதிரிமார்கள் வந்து தமிழுக்கு உயிர் கொடுத்திருக்காவிட்டால் தமிழ் மொழி இறந்து போயிருக்கும் என்பது போலவும் ‘தமிழ் உரைநடை’ என்பதே கிறுத்துவப் பாதிரிமார்கள் தமிழ் மொழிக்குக் கொடுத்த கொடை என்பது போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. இந்தப் பிரசாரத்திற்கு, மாநாட்டை நடத்திய திராவிட இனவாதக் கூட்டமும், மாநாட்டிற்கு உள்ளிருந்தும் வெளியிருந்தும் பங்காற்றிக் கொண்டு, அக்கூட்டதிற்கு ஜால்ரா போட்ட கூட்டமும், பூரண ஆதரவு அளித்தன. ஆனால் உண்மையான தமிழ்பற்று கொண்டவர்களும், நடுநிலையாளர்களும், பாரத மொழிகளுக்கிடையே உள்ள உறவும் அவ்வுறவினால் பின்னிப் பிணையப்பட்டுள்ள மகோன்னதமான பாரத கலாசாரத்தின் பெருமையை உணர்ந்தவர்களும், தேசிய ஒருமைப்பாட்டை விரும்புகிறவர்களும், இப்பிரசாரத்தை பொய்யென அடியோடு வெறுத்துப் புறந்தள்ளுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. (cathnewsindia மற்றும் Hindu மற்றும்expressbuzz ).

     

    இந்தப் பொய்ப்பிரசாரத்தைப் பரப்புபவர்கள் தமிழ் மொழிக்கு உயிர்கொடுத்தவர்களாக முன் நிறுத்துபவர்கள் ஜி.யு.போப், கான்ஸ்டண்டைன் ஜோஸப் பெஸ்கி, ராபர்ட் கால்டுவெல், பார்த்தலோமியோ ஸீகன் பால்கு, டாக்டர் சாமுவேல் கிரீன், இரேனியஸ் மற்றும் பிரான்ஸிஸ் ஒயிட் எல்லிஸ் ஆகியவர்கள்தான். மேற்சொன்னவர்களில் பிரான்ஸிஸ் ஒயிட் எல்லிஸ் என்பவர் எல்லிஸ் துரை என்று வழங்கப்பட்ட ஆங்கிலேய அரசு அதிகாரியாக இந்தியாவிலும், சாமுவேல் கிரீன் மருத்துவராக இலங்கையிலும் பணியாற்றி பாதிரிமார்களின் மதமாற்றத்திற்குத் துணை நின்றவர்கள். மற்றவர்கள் அனைவரும் பெருமளவில் மதமாற்றம் புரிந்து இந்தியாவை, குறிப்பாகத் தமிழகத்தை கிறுத்துவ தேசமாக ஆக்கவேண்டும் என்கிற “புனித” நோக்கத்தோடு இங்கே காலூன்றியவர்கள் தான். எழுத்தாளர் முனைவர் கே. மீனாட்சி சுந்தரம் அவர்கள் தன்னுடைய “ஐரோப்பிய அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய பங்கு” (The contribution of European scholars to Tamil- K. Meenakshisundaram) என்ற புத்தகத்தில் கிறுத்துவ மிஷனரிகள் காலத்தைப் ”பொற்காலம்” என்று வேறு போற்றுகிறார்! இந்தப் புத்தகமானது அவர் 1966-ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டத்திற்காகத் தன்னுடைய வியாசமாக (Thesis) அளித்தகட்டுரைதான் இது. (http://www.hindu.com/2010/06/25/stories/2010062554000700.htm ) எனவே இந்தப் பிரசாரம் உண்மைதானா என்று ஆராய்ந்து நோக்குவது தமிழ் கூறும் நல்லுலகிற்கு நன்மை பயக்கும்.

     

    மிஷனரிகளும் அவர்கள் நோக்கமும்

     

    இம்மண்ணின் மைந்தர்களான தமிழ் இந்துக்களிடம் உரையாட இயலாததாலும், பேச்சுத் தொடர்பும் கருத்துப் பரிமாற்றமும் வைத்துக்கொள்ள முடியாததாலும், தங்களின் முக்கியக் குறிக்கோளான மதமாற்றத்திற்குப் பெரிதும் இடையூராக இருப்பது மொழிப்பிரச்சனை தான் என்று உணர்ந்தனர் பாதிரிமார்கள். தமிழர்களிடம் பேசாமலும், கருத்துக்களைப் பரிமாற்றாமலும் அவர்களை மதமாற்றம் செய்ய முடியாது என்கிற ஒரே காரணத்தால்தான் தமிழ் மொழியைக் கற்றனர். ஆயினும், இயல், இசை, நாடகம் என்று அனைத்தும் ஊறிய ஆன்மீக மற்றும் காலசாரப் பாரம்பரியம் மிக்க தமிழ் இந்துக்களை வெறுமனே தமிழ் மொழியில் பேசி மதமாற்றம் செய்ய முடியாது என்பதை விரைவில் புரிந்துகொண்ட காரணத்தால் தான், தமிழ் இலக்கியத்தின் பால் அவர்கள் கவனம் சென்றது.

     

    ஒரு தேசத்தின் மொழிகளில் உள்ள இலக்கியங்களைப் படித்தால் தான் அத்தேசத்தின் பண்பாடும், கலாசாரமும், ஆன்மீகப் பாரம்பரியமும் புரிபடும். அப்போது தான் அதற்கு ஏற்றாற் போல் தங்களுடைய மதமாற்றத் தந்திரங்களை மாற்றியமைத்துக் கொள்ளலாம் என்கிற களவு மனப்பான்மையுடன் தான் இவர்கள் தமிழ் இலக்கியங்களைக் கற்றார்களே தவிர, தமிழின் பால் கொண்ட ஈர்ப்போ, ஈடுபாடோ, பற்றோ, பாசமோ அல்ல.

     

    மேலும், இந்த நாட்டின் பண்பாடும், கலாசாரமும், பாரம்பரியமும் எப்பேர்பட்டன, எவ்வாறு இருக்கின்றன என்பதை இவர்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதாது, இவர்களை ‘மதமாற்றம்’ எனும் “புனித” ஊழியத்திற்கு அனுப்பிய நிறுவனங்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் அவற்றைத் தங்கள் மொழிகளில் மொழிபெயற்பும் செய்தார்கள். தலைமை நிறுவனங்களுக்கு, இந்நாட்டின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால கலாசாரமும் பாரம்பரியமும் புரிந்தால் தான், அவற்றை உடைத்து மதமாற்றம் செய்வதென்பது எவ்வளவு கடினம் என்று உணர்வர். அதற்கு ஏராளமான நிதியும், அரசியல் சக்தியும், ஆள்பலமும் தேவை என்பதையும் புரிந்து கொள்வர். அப்போது தான் தாம் வந்த வேலை முடிவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடையும் என்கிற நோக்கிலும் இப்பாதிரியர்கள் செயல்பட்டுள்ளனர்.

    ஆப்பிரஹாமிய மதங்கள் “அரசியல் மதங்கள்”; உலகம் முழுவதும் அவர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவருவதே அவர்களின் முதன்மையான நோக்கம்; மதத்தைப் பரப்புவதற்காக அரசியல் சக்தி பெற்று ஆட்சியமைக்க முற்படுவார்கள்; என்கிற உண்மைகளைப் புரிந்துகொண்டோமானால், மேற்கண்ட மத போதகர்கள் எதற்காக நம் மண்ணில் இறங்கினார்கள் (இறக்கப்பட்டார்கள்), எதற்காக நம் மொழியைக் கற்று நம் இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தார்கள் என்பதை உணர முடியும்.

    ஐரோப்பிய நிறுவனங்கள்

    16-ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்த கிறுத்துவ ஆக்கிரமிப்பு மெதுவாகப் பரவியது. போர்சுகீசிய, டச்சு, பிரெஞ்சு, ஜெர்மானிய மற்றும் ஆங்கிலேய கிறுத்துவ மத நிறுவனங்கள், வியாபார நோக்கிலும், மத ஊழிய நோக்கிலும் கோவா, கேரளம், தமிழகம், வட கிழக்கு, வங்காளம் என்று இந்தியாவின் பல இடங்களில் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடங்கினார்கள். இவர்கள் பின்னே அந்நாடுகளின் படையெடுப்பும் தொடர்ந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியாரின் காலத்திலிருந்தே அடக்குமுறை ஆரம்பமாகிவிட்டது. 1858-ஆம் ஆண்டு அரசியல் சக்தி பெற்று ஆங்கிலேயர் ஆட்சி அமைத்தனர். அரசியல் சக்தி அடைந்தவுடன் மத நிறுவனங்களுக்கு ஏராளமான நிலங்களும், மற்ற வசதிகளும் செய்து கொடுத்தது ஆங்கிலேய அரசாங்கம். அரசு நிறுவனங்களும், மத நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டால் விரைவில் பலன் கிட்டும் என்பது நன்றாகவே அவர்களுக்குத் தெரியும். சுதந்திரம் பெற்ற பின்னும் இந்தியர்கள் விழித்துக் கொள்ளவில்லையாதலால், அரசியல் சக்தியும், ஆட்சி பலமும் அவர்கள் கையிலேயே தொடர்கின்றது என்பதை, சோனியாவின் தலைமையின் கீழும், அமெரிக்காவின் ஆலோசனையின் பேரிலும் ஆட்சி நடப்பதை வைத்துப் புரிந்து கொள்ளலாம்.

    கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் திராவிட மாயையில் கட்டுண்டு கிடப்பதற்கு அடித்தளம் இட்டவர்கள் அன்னிய தேசங்களிலிருந்து வந்த பாதிரிமார்கள் தான் என்றும், ஹிந்து மதம் உயிரோட்டத்துடன் இருக்கும் வரை இந்தியரை அடிமைப் படுத்த முடியாது என்பதே கிறுத்துவ மிஷனரிகளின் நோக்கம் என்றும் பத்திரிகையாளர்/எழுத்தாளர் சுப்பு அவர்கள் தன் “திராவிட மாயை” புத்தகத்தில் கூறுகிறார். “டச்சுக்காரர்கள் பழவேற்காட்டிலும் (1609), சதுரங்கப்பட்டினத்திலும் (1647), நாகைப் பட்டினத்திலும் (1660) தங்களது வணிக மையங்களைத் தொடங்கினர். ஆங்கிலேயர்கள் மசூலிப்பட்டினத்திலும் (1622), சென்னையிலும் (1639), கடலூரிலும் (1683), கல்கத்தாவிலும் தளம் அமைத்தனர். பிரெஞ்சுக்காரர்களுக்கு கிடைத்தது (1674) பாண்டிச்சேரி. டேனிஷ்காரர்கள் தரங்கம்பாடியில் (1620) தங்கள் முகாமை ஏற்படுத்தினர்.” என்று கிறுத்துவ ஆக்கிரமிப்பின் ஆரம்பத்தைச் சுட்டிக்காட்டிய சுப்பு அவர்கள், “ஒரு பக்கம் நேரடியான நடவடிக்கையில் கிறுத்துவப் பாதிரிமார்கள் இறங்கிய போது, இன்னொரு பக்கம் கிறுத்துவத்தை முன்னிலைப் படுத்தாமல் இந்துக்களைப் பிளவு படுத்தும் முயற்சியும் தொடங்கியது” என்று கூறி, “கால்டுவெல்லின் தாயாதிகள்” என்கிற அத்தியாயத்தில் தமிழகத்தில் கிறுத்துவப் பாதிரிகள் மேற்கொண்ட மதமாற்ற நடவடிக்கைகளையும், ஹிந்துக்களைப் பிளவு படுத்த அவர்கள் கையாண்ட யுக்திகளையும் விளக்குகிறார். [திராவிட மாயை (இரண்டாம் அத்தியாயம்; பக்கம் 20-28) – சுப்பு – திரிசக்தி பதிப்பகம். மார்ச்சு 2010]

    ஆகவே, 16-ஆம் நூற்றாண்டில் தமிழ் மண்ணில் கால் வைத்த பாதிரிமார்கள் மதம் வளர்க்க வந்தவர்கள், அரசியல் சக்தி பெறுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வந்தவர்கள், அதற்காகத் தான் நம் மொழியைக் கற்றார்கள் என்பதற்கு மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. மேலும் இவர்களுக்கே உரிய களவு மனப்பான்மையினால், மதமாற்றம் செய்வதற்காகக் “கலாசாரக் களவு” (Inculturation) முறையும் செய்தார்கள். (Ref: ‘Inculturation’ - A danger to communal amity! –http://www.newstodaynet.com/col.php?section=20&catid=29&id=8512 )

    ரோமானிய பிராம்மணர் நொபிலி

    இவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் இத்தாலி நாட்டில் இருந்து வந்த ராபர்ட்-டி-நொபிலி (1577-1656) என்கிற கிறுத்துவப் பாதிரியார். இவர் நம் மக்களைச் சுலபமாக மதமாற்றம் செய்யவேண்டும் என்பதற்காக சமஸ்க்ருதம்/தமிழ் இரண்டு மொழிகளையும் கற்றுக்கொண்டு தன்னை ’ரோமாபுரி பிராம்மணர்’ என்றும் சொல்லிக்கொண்டார். காவியுடை தரித்து, சிறிய சிலுவை இணைத்த ஒரு பூணூலையும் அணிந்துகொண்டு, நெற்றியில் சந்தனம் இட்டுக்கொண்டு, மதுரையில் ஒரு ஆசிரமத்தையும் அமைத்துக் கொண்டார். உணவுப் பழக்கத்தில் சுத்த சைவராகவும் மாறினார். நடப்பதற்குக் கால்களில் மரத்தாலான பாதுகைகளே உபயோகித்தார். பல நூற்றண்டுகளுக்கு முன்னால் மறைந்து போன, கர்த்தர் எனும் கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட, வேதம்தான் பைபிள் என்று சாதித்தார். காவியுடை தரித்து, பூணூல் அணிந்து, குடில் ஒன்றில் ஆசிரமம் அமைத்து போதனை செய்ததால் ஓரளவிற்கு மதமாற்றம் செய்வதில் வெற்றியும் கண்டார். ஆனால் இவருடைய கலாசாரக் களவு முறை ஐரோப்பிய ஆசான்களுக்கு அந்தச் சமயத்தில் ஒப்புடைமை இல்லையாதலால் இவருடைய முயற்சிகள் பாதியில் நின்று போயின. இவருடைய மதமாற்ற வழிமுறைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதால், மதுரையிலிருந்து வெளியேறி, திருச்சி, சேலம் முதலிய ஊர்களுக்குச் சென்று இறுதியில் சென்னை சாந்தோம் அருகே ஒரு சிறிய வீட்டில் 1656-ஆம் ஆண்டு இறந்து போனார். (Ref: - “The Portuguese in India”, Orient Longman, Hyderabad, 1990 and “Christianity in India-A critical study” – Vivekananda Kendra Prakasham).

    இவர், 15 புத்தகங்கள் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. அவை மட்டுமல்லாமல் போர்சுகீசிய-தமிழ் அகராதி ஒன்றையும் தயாரித்துள்ளார். மேலும் தமிழில் பல விவிலிய வார்த்தைகளையும் புகுத்தியிருக்கிறார். இதனால் ‘தமிழ்’ வளர்ச்சி அடைந்ததா அல்லது ‘கிறுத்துவம்’ வளர்ச்சி அடைந்ததா என்று பார்த்தால் கிறுத்துவம் தான் என்பது தெளிவாக விளங்கும்.

    தீண்டாமையைக் கடுமையாக ஆதரித்த இவர், “கிறுத்துவனாவதில் ஒருவன் தனது சாதி, குடிப்பிறப்பு, பழக்க வழக்கம் முதலானவைகளைத் துறக்க வேண்டியதில்லை, கிறுத்துவ சமயத்தைத் தழுவினால் இவை கெட்டுப்போகும் என்ற போதனையைப் புகட்டியவன் சாத்தான். கிறுத்துவ சமயம் பரவுவதற்கு இடையூராக இருப்பது இப்போதனையே” என்று 1650-ல் தான் எழுதிய ஒரு கடிதத்தில் தன் குறிக்கோளைத் தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார் நொபிலி என்று காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ‘கிறுத்துவமும் சாதியும்’ என்கிற புத்தகத்தில் எழுத்தாளர் ஆ.சிவசுப்பிரமணியன் கூறியுள்ளார். [திராவிட மாயை (முதல் அத்தியாயம்; பக்கம் 19) – சுப்பு – திரிசக்தி பதிப்பகம். மார்ச்சு 2010]

    இத்தாலிய முனிவர் பெஸ்கி

    இவருக்கு அடுத்தவர் கான்ஸ்டண்டைன் ஜோசெஃப் பெஸ்கி (1680-1746) என்கிற வீரமாமுனிவர். ராபர்ட்-டி-நொபிலி தன்னைப் பிராம்மணர் என்று சொல்லிக் கொண்டதைப்போல் இவர் தன்னை முனிவராக்கிக் கொண்டார். அதுவும் வீரமுள்ள மாமுனிவராக! அவரைப்போலவே, இவரும் தன்னை ஒரு ஹிந்து சன்யாஸியைப் போலக் காட்டிக்கொண்டார். மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மதமாற்றங்களில் ஈடுபட்டார். இவர் தமிழுக்குச் செய்த தொண்டு “தேம்பாவணி” என்னும் உரைநடையில் எழுதப்பட்ட புனித ஜோசப்பின் வாழ்க்கை வரலாறு. கம்ப ராமாயணத்தின் பெருமையை உணர்ந்து அதைப்போல் கிறுத்துவத்திலும் ஒரு காப்பியம் வேண்டும் என்று எண்ணி தேம்பாவணியை இயற்றினாராம். தேம்பாவணியால் தமிழ் வளர்ந்ததா அல்லது கிறுத்துவம் வளர்ந்ததா என்று பார்த்தால், கிறுத்துவம் வளர்ந்து, புனித ஜோசப் பெயரும் தமிழகத்தில் நிலைநாட்டப் பட்டது, என்பதுதான் உண்மை. இந்தத் தேம்பாவணியால் தமிழுக்கு எதுவும் பிரயோசனம் இருந்ததாகத் தெரியவில்லை. இவர் அதோடு நிறுத்தவில்லை தன் தமிழ்ப் பணியை! நம் பாரத தேசத்தில் வேத காலத்திலிருந்து பாரம்பரியமாக இருந்து வந்த குரு-சிஷ்ய பரம்பரை என்று போற்றப்பட்ட கல்வி முறையைக் கிண்டல் செய்யும் விதமாக, ‘பரமார்த்த குருவும் அவரின் சீடர்களும்’ என்ற நூலையும் எழுதினார். முனிவர் என்று பெயர் வைத்துக்கொண்டு குரு-சிஷ்ய பரம்பரையைக் கிண்டல் செய்தவரைத் தமிழுக்குச் சேவை புரிந்துள்ளார் என்று கொண்டாடிய திராவிட இனவெறியாளர்கள், இவருக்குச் சென்னைக் கடற்கரையில் சிலையும் எடுத்தனர்.

    ஜெர்மானிய ஐயர் ஸீகன்பால்கு

    ஜோஸஃப் பெஸ்கி காலத்தைச் சேர்ந்த, தமிழகத்தில் இருந்த, மற்றொரு பாதிரி பார்த்தலோமியோ ஸீகன் பால்கு (1683-1719) என்கிற ஸீகன் பால்கு ஐயர். ஆம், பிராம்மணர், முனிவர் வரிசையில் அடுத்ததாக ஐயர்! இவர் ஜெர்மனியிலிருந்து வந்த பிராடஸ்டண்டு பாதிரியார். 1706-ல் தரங்கம்பாடியில் வந்து இறங்கிய ஸீகன்பால்கு, அங்கு ஏற்கனவே இருந்த ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்த அச்சு இயந்திரங்களை வைத்து அச்சகம் நட்த்திக்கொண்டிருந்த ஒரு டேனிஷ் கத்தோலிக்க நிறுவனம் சார்பாக, விவிலியத்தின் புதிய ஏற்பாடை தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டார். பெருமளவில் மதமாற்றம் செய்யும் எண்ணத்துடன் வந்திறங்கிய இவருக்கு டேனிஷ் (Danish) கத்தோலிக்கர்களுடன் சண்டை போடுவதிலேயே பாதி நாட்கள் கழிந்தது. டேனிஷ் நிறுவனம் இவரைச் சிறையிலும் அடைத்தது.

    பிராம்மணர்களிடம் மற்ற சமூகத்தவர்கள் வெறுப்பு கொள்ளுமாறு பிராம்மண துவேஷத்தை முதன் முதலில் தமிழகத்தில் உண்டாக்கியவர் என்கிற “பெருமை” உடையவர் இந்தப் பாதிரி. அடிக்கடி நோய்களினால் பாதிக்கப்பட்ட இவர் 1719-ல் தன்னுடைய 36-வது வயதில் இறந்து போனபோது, தரங்கம்பாடியில் இரண்டு சர்ச்சுகளும், இந்தியப் பாதிரிமார்களுக்கான பயிற்சி மையத்தையும், தன்னால் மதமாற்றம் செய்யப்பட்ட 250 இந்தியக் கிறுத்துவர்களையும் விட்டுச் சென்றார். இவர் சார்ந்திருந்த “லுதெரன் சர்ச்சு” பெருமளவு வளர்ந்து ஜூலை 2006-ல் இவர் வரவின் 300-வது ஆண்டு விழாவை சென்னையில் விமரிசையாக்க் கொண்டாடியபோது, தமிழக கவர்னர் சுருஜித் சிங் பர்னாலா இவருடைய “சேவையை” பாராட்டிப் பேசினார். இவர் நினைவாகத் தபால் தலையும் வெளியிடப்பட்டது. (http://en.wikipedia.org/wiki/Bartholom%C3%A4us_Ziegenbalg )

     

    1906-ல் ஆட்சி புரிந்துகொண்டிருந்த ஆங்கிலேய அரசு கூட இவர் வரவின் 200-வது ஆண்டைக் கொண்டாடவில்லை. ஆனால் இந்திய மண்ணிற்கு வந்து, இந்திய மக்களிடையே ஜாதித் துவேஷங்களை வளர்த்து, மதமாற்றம் செய்து, இம்மண்ணின் கலாசாரத்திற்குப் பாதகம் செய்த ஒருவருக்கு லுதெரன் சர்ச்சு நிறுவனம் இந்திய மண்ணில் விழா எடுக்க அதில் இந்திய அரசியல் பதவி வகிக்கின்ற ஒரு தலைவரே கலந்து கொள்வதென்பது எவ்வளவு வேதனையான விஷயம்! மற்றபடி இவர் தமிழில் மொழி பெயர்த்த விவிலியத்தால் தமிழ் வளரவில்லை, கிறுத்துவம் மட்டுமே வளர்ந்தது!



    __________________


    Guru

    Status: Offline
    Posts: 7329
    Date:
    Permalink  
     

     இத்தாலிய ஐயரும் அவரின் திருவாசக/மாணிக்கவாசக இழிவுரைகளும்

    இவருக்கு அடுத்தபடியாக ஜி.யு.போப் என்கிற போப்பையர் (1820-1907). இவர் திருவாசகம், திருக்குறள், நாலடியார் போன்றவற்றை மொழிபெயர்த்தவர். இவர் திருவாசகத்தில், கிறுத்துவ இறைத்தூதர் செயிண்ட் பால் மற்றும் அசிசி நாட்டுத் துறவி ”புனித” பிரான்சிஸ் ஆகியோரின் கருத்துக்களைக் கண்டதாகவும், மாணிக்கவாசகப் பெருமானிடம் இவ்விருவரையும் காண்பதாகவும் கூறியுள்ளார். இந்தக் கூற்றை ஆராய்ந்து பார்க்காமல் மேலோட்டமாக எடுத்துக்கொண்டு சில அப்பாவித் தமிழறிஞர்கள் பூரித்துப் போகிறார்கள். துரதிர்ஷ்ட வசமாகச் சில சைவ மடங்கள் கூட இதைப் பெருமையாக நினைக்கின்றன.

    சைவ சித்தாந்தத்தில் மிகவும் ஈடுபாடும் புலமையும் கொண்ட ஆராய்ச்சியாளர், தமிழறிஞர் முனைவர் திரு முத்துக்குமாரசுவாமி அவர்கள் ஜி.யு.போப்பின் மறுமுகத்தை தோலுரித்துக் காட்டுகிறார். ஜி.யு.போப் பின்வருமாறு கூறியுள்ளார்: “In the whole legendary history of this sage … … … there stands out a real historical character, which seems to be a mixture of that of St.Paul and of St.Francis of Assisi. Under other circumstances what an apostle of the East might had become”. இதை சுட்டிக்காட்டிய முனைவர் அவர்கள், “தடித்த எழுத்தில் உள்ள கடைசிவரி போப்பின் மனநிலையைச் சுட்டுகின்றது. அந்த சூழ்நிலையில் ஒரு கீழ்த்திசை சமயகுரு இதைக்காட்டிலும் என்ன மேனிலையை அடைந்துவிடக் கூடும் என்ற கூற்றில் மணிவாசகப்பெருமான் எய்திய சிவமாம் தன்மையைப் போப் சரிவர உணர்ந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது” என்று விளக்குகிறார்.

    முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்கள் போப்பையரைப் பற்றிப் பின்வருமாறு கூறி, “ஜி.யு.போப்பைப் பற்றி ஒரு கதை திருவாசகப் பேச்சாளர்களால் கூறப்படுகிறது. அவர் தமிழகத்தில் ஒருவருக்குக் கடிதம் எழுதியபோது, தன் வழக்கப்படி திருவாசகப் பாடல் ஒன்றினை எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகி கடிதத்தின் மீது விழுந்து சில எழுத்துக்களை அழித்து விட்டதென்றும், திருவாசகத்தால் ஏற்பட்ட புனிதக் கண்ணீர் என்பதால் அழிபட்ட எழுத்துக்கள் மேல் மீண்டும் அவற்றை எழுதாமலேயே கடிதத்தை அனுப்பினார் என்றும் கூறுவர். ஆனால் இன்று வரை, அதில் எழுதப்பட்ட திருவாசகப்பாடல் யாது, அந்தக் கடிதம் என்ன ஆனது, அந்தக் கடிதத்தைப் பற்றி எழுதிய போப் அவர்களோ, கடிதம் எழுதப் பெற்றவரோ, அவருக்குத் தொடர்பானவர்களோ இந்நிகழ்ச்சியைப் பற்றி எங்காவது குறிப்பிட்டுள்ளனரா? இந்த நிகழ்ச்சி உண்மையாயின் போப் அவர்கள் தம் திருவாசக மொழிபெயர்ப்பின் மறுபதிப்பிலாவது வெளியிட்டிருப்பாரே! ஏன் அவ்வாறு செய்யவில்லை? அவரை மிகப்பாராட்டும் திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களாவது தம் நூலில் ஆதாரத்துடன் வெளியிட்டிருப்பாரே! அவரும் ஏன் செய்யவில்லை?” என்ற கேள்விகளையும் எழுப்புகிறார்.

    இவ்விட்த்தில் கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்கள் ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்பைப் பற்றிச் சிலாகித்துக் கூறியதையும் முனைவர் குறிப்பிடுகிறார். கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்கள், “போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மேலைநாட்டுத் தத்துவ அறிஞர்களுக்கு பொக்கிஷங்கள் அடங்கிய திருவாசகத்தின் குகைக்கதவுகளைத் திறந்து விட்டது சொரணை கெட்ட தமிழர்களை வெட்கம் அடையச் செய்த்தோடு மட்டுமல்லாமல் தங்களுடைய பழமை குறித்துப் பெருமை கொள்ளுமாறு அவர்களைத் திடுக்கிடவும் செய்தது” என்று கூறியதை நோக்கும்போது, அன்றைய தமிழறிஞர்களின் அப்பாவித்தனமும், ஐரோப்பிய மிஷனரிகளின் உண்மையான நோக்கத்தை அறியாத வெகுளித்தனமும் தெரிகிறது. திரு பாலசுப்ரமணியம் அவர்களும் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளவர் என்பதும், மேற்கண்ட ஜி.யு.போப்பின் கடிதக்கதையைப் பற்றி அவர் எந்தவிதமான குறிப்பையும் தரவில்லை என்பதும் இங்கே குறிப்பிட்த்தக்கது.

    முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்கள் ஆதாரங்களுடன் “தமிழ்ஹிந்து” இணையதளத்தில் எழுதிய கட்டுரையில், மானிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் எழுதிய பதிகத்துள் ஒன்றான ”நீத்தல் விண்ணப்பம்” என்கிற பதிகத்தை ஜி.யு.போப் எப்படி திரித்து எழுதி அதற்கு அபாண்டமான ஒரு விளக்கமும் கொடுத்து மாணிக்கவாசகப் பெருமானை அவமதித்துள்ளார் என்பதையும் பின்வருமாரு விளக்குகிறார்:

    “மாணிக்கவாசகப்பெருமானை திருத்துறைப்பூண்டியில் ஆட்கொண்ட இறைவன் சிவபெருமான், ‘யாத்திரை செய்து திருக்கயிலாயம் வந்தடையுங்கள்; நீங்கள் போய் வழிபடும் இடங்களிலெல்லாம் நான் குருவடிவாய் காட்சி தருவேன்’ என்று சொல்லிய பின்னர், யாத்திரை தொடங்கி உத்தரகோசமங்கை வந்தடைந்த மாணிக்கவாசகர் இறைவனின் காட்சியைப் பெறாமல் பிரிவாற்றாமையால் வருந்தி ‘நீத்தல் விண்ணப்பம்’ என்கிற பதிகத்தைப் பாடுகிறார். இக்கட்டத்தை ஜி.யு.போப், ‘உத்தரகோசமங்கையில் நிலவிய சூழல் மாணிக்கவாசகரின் தவவாழ்க்கைக்குச் சோதனையாக இருந்தது. அவர் இளமையுடன் மதுரையில் வசித்து வந்த போது பாண்டிய மன்னனின் பேரன்பைப் பெற்றும் மகிழ்ச்சியான நிலையில் இல்லற வாழ்வில் ஈடுபட்டதும் அவருக்கு நினைவு வந்ததால், கோவிலில் இருந்த தேவரடியார்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டார். அவருடைய இச்சையைத் தூண்டி அவருடைய ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமாக இருந்த சூழலில், மனமயக்கத்தினாலும் துறவு வாழ்க்கை மேற்கொள்ள இயலாததாலும் கழிவிரக்கம் கொண்டு பாடிய ஒப்புதல் வாக்குமூலமே நீத்தல் விண்ணப்பம் எனும் பதிகம்’ என்று அப்பதிகத்தின் அறிமுகவுரையில் எழுதி தமிழ் இந்துக்களுக்கு பேரதிர்ச்சி தருமாறு மாணிக்கவாசகப் பெருமானை அவதூறு செய்துள்ளார்”.

    ஜி.யு.போப் கூறியதாவது: “From the evidence of these verses, we conclude that there were two things from which he suffered. One of these was the allurements of the female attendants who in bands pertained to the temple. We have noticed this elsewhere, Hindu commentators will often find mystic meaning, which are harmless, - if unfounded. Again and again in this and other poems he deplores the way in which he has been led to violate his vow. The other difficulty often referred to was the way in which mere ceremonial acts had to be performed, affording no relief to his conscience.”

    முனைவர் மேலும், “உலகத்தார் பிழைகளைத் தம்மேல் ஏற்றிக் கூறி அவர்களுக்காக இறைவனிடம் மனமுருகி வேண்டுதல் இந்து மத்த்தின் பக்தி இலக்கிய மரபு. அதன்படியே, வினைக்கு ஈடாகப் பிறந்து உழலும் உலக மக்கள் பிறவிப் பயனைப் பெறாது இன்பத்தில் திளைத்து மேலும் வினைகளை ஈட்டிக்கொள்ளும் இயல்பைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு இறைவனிடம் மன்றாடுகிறார் மாணிக்கவாசகர். அதைத் திரித்து ஜி.யு.போப் கூறும் இந்த வரலாறு மாணிக்க வாசகப் பெருமானுக்குப் பெருமை சேர்ப்பதா? தன்மானம் உள்ள தமிழ் பற்றாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் அறிஞர்களும் போப்புக்குப் புகழ்மாலை சூட்டி மாணிக்கவாசகரை ஒழுக்கக்கேடர் என்னும் இழிவுக்கு உட்படுத்துவரோ?” என்று கேட்கிறார்.

    இவ்விட்த்தில், திருவாசகமணி அவர்கள் போப்பின் தூஷணைத் தெரிந்திருந்தும் பெருந்தன்மையுடன் நடந்துகொண்ட்தைக் காடும் விதமாக, “போப் மணிவாசகருக்குச் செய்த இந்த இழிவைப் பிறர் அறியாதொழியினும், தம்முடைய திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பைப் போப்புக்குக் காணிக்கையாக்கி மகிழ்ந்த திருவாசகமணி நன்குஅறிந்தே இருந்தார். ஆயினும் இதைப்பற்றிய ஆய்வு இப்பொழுது வேண்டா எனக் கூறி , இந்துக் கோயில்களில் சில காலங்களுக்கு முன் நிலவி வந்த தேவதாசி முறையின் இழிவு குறித்துத் தம் கருத்தை மொழிந்து ஒதுங்கினார்” என்று விளக்குகிறார் முனைவர். (Ref: -http://www.tamilhindu.com/2009/10/gu_pope_and_thiruvasagam/)

    பக்தி இலக்கியங்களைப் பொறுத்தவரை ஆழ்வார்களும், நாயன்மார்களும், மற்ற இலக்கிய கர்த்தாக்களும், தங்கள் மனதிற்குகந்த தெய்வங்களை நாயகனாகவும், நாயகியாகவும் பாவித்து ஆங்காங்கே சிற்றின்பச் சுவையுடனும் நவரசங்களுடனும் காவியங்களை வடித்து அதன் மூலம் பேரின்ப நிலையை வேண்டி காவியங்களைப் படைக்கும் வழக்கமும் இருந்த்து.

    இங்கே திருவாசகத்தைப் பொறுத்தவரை மாணிக்கவாசகரின் நீத்தல் விண்ணப்பமானது ஜி.யு.போப் சொன்னது போல ஒப்புதல் வாக்குமூலம் அன்று. முனைவர் சுட்டிக் காட்டியதைப்போல உலகத்தார் செய்த பாவங்களைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு, பேரின்ப நிலையாகிய முக்தி வேண்டிப் பாடும் பாடலாகத்தான் இருக்கிறது. இறுதியில் மாணிக்கவாசகர் மாயையான இப்பிரபஞ்சத்திலிருந்து தன்னை விடுவித்து வீடுபேறு தருமாறு விண்ணப்பிக்கிறார்.

    அடிப்படையில் ஒரு படைப்பை எப்படிப் புரிந்துகொள்ளுகிறோம், எவ்வாறு அர்த்தம் கொள்ளுகிறோம் என்பது முக்கியமான விஷயம். இங்கே ஜி.யு.போப் செய்துள்ளது அப்பட்டமான கிறுத்துவ அடிப்படைவாதம் அன்றி வேறில்லை.

    சைவசித்தாந்தத்தைப் போற்றுமிடத்து உருவ வழிபாட்டைக் குறையும் கூறியுள்ளார் ஜி.யு.போப். சைவன் ஒருவன் ஆன்மீகநெறியில் எவ்வளவுக்கெவ்வளவு முன்னேறி செம்மை பெற்றுள்ளானோ அவ்வளவிற்கு ஆன்மநெறிக்குப் பொருத்தமற்ற உருவவழிபாடாகிய பாமர வழிபாட்டுச் சடங்குகளிலும் தீவிரமாக ஈடுபடுகின்றான் என்றும் போப் கூறுகிறார். அவர் கூறியதாவது: “There is in them (Saiva Saints) a strange combination of lofty feeling and spirituality with what we must pronounce to be the grossest idolatory. And this leads to the thought that in Saiva system of today two things that would appear to be mutually destructive are found to flourish, and even to strengthen one another. The more philosophical and refined the Saivite becomes the more enthusiastic does he often appears to be in the performance of the incongruous rites of the popular worship”.

    இங்கு உருவ வழிபாட்டை முட்டாள் தனமான செயல் என்று தூஷணை செய்வதன் மூலம் ஜி.யு.போப் மீண்டும் தன்னுடைய கிறுத்துவ தீவிரவாத்த்தைத்தான் முன்நிறுத்துகிறார். “குரு ஸ்துதியே முழுவதுமாக இருக்கும் திருவாசகத்தில் உருவ வழிபாட்டைக் கொச்சை படுத்துகின்ற போப்பின் செயல் சரி தானா” என்றும் கேட்கிறார் முனைவர்.

    தன்னுடைய திருவாசக மொழிபெயர்ப்பில் ஜி.யு.போப் மீண்டும் ஒரு இட்த்தில் மாணிக்கவாச்கரை அவதூறு செய்வதைச் சுட்டிக்காட்டுகின்ற முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்கள், “மாணிக்கவாசகருக்காக இறைவன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட வரலாறு எல்லோருக்கும் தெரியும். இறைவனின் திருவிளையாடலைப் பின்னர் அறிந்துகொண்ட மன்னன் மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு கேட்டு அவர் விருப்பப்படி அவர் பாண்டிய நாட்டை விட்டு வெளியேற அனுமதியளிக்கிறான். ஆனால் இவ்வரலாறை, ‘மதுரைக்கோவிலுக்கும் தில்லைக்கோவிலுக்கும் பிரச்சனை இருந்தது. மதுரையை விட்டுத் தில்லைக்குச் சென்ற மாணிக்கவாசகர், பின்னர் மதுரைக்குத் திரும்பவே இல்லை. குதிரை வாங்குவதற்காக மன்னன் அளித்த பொருளை மாணிக்கவாசகர் கவர்ந்து கொண்டதால் மன்னன் அவரை மன்னிக்கவேயில்லை என்பதனால் அவர் மதுரைக்குத் திரும்பவில்லை’ என்று திரித்துக் கூறியுள்ளார் போப்” என்று கூறுகிறார்.

    ஜி.யு.போப் அவர்களின் கூற்று: “It does not appear indeed, that Maanikkavaachagar ever revisited Madura after his formal renunciation of his position there. It may almost be inferred that he was never heartily forgiven by the king for the misappropriation of the cost of horses.” திருவாசகத்தின் மீதான போப்பின் பற்றும் மாணிக்கவாசகரின் மீதான அவருடைய அன்பும் என்னவென்று சொல்வது!

    முனைவர் மேலும் சொல்கிறார், “போப் திருவாசகத்தின் மொழிபெயர்ப்பின் பெரும் பகுதியை இத்தாலியில் உள்ள Lugano என்னும் நகரில் செய்ததாகவும், Bernardinao Luini என்னும் ஓவியரின் வண்ண ஓவியங்களைக் கண்டு தன்னுடைய களைப்பைத் தீர்த்துக் கொள்ளுவதற்கும் புத்துணர்வு பெறுவதற்கும் அந்த ஓவியங்கள் உள்ள S.Maria degili Angioli என்னும் சர்ச்சுக்கு அடிக்கடி சென்றதாகவும் அப்பொழுதெல்லாம் இறையைத் தேடும் இந்தத் தமிழ்த் துறவி(மணிவாசகர்) தம் அருகில் நிற்பது போன்றும் முழந்தாளிட்டு வழிபாடு செய்வது போலவும் கருதாமல் இருக்க முடியவில்லை எனவும் கூறுகின்றார். இந்த Great Master (இயேசு) கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்? ஆச்சரியமாக இருக்கின்றது. இவரும் மயிலாப்பூரில் வாழ்ந்த நெசவாளி(திருவள்ளுவர்)யும் நாலடியார் இயற்றிய நாடோடிஞானிகளும் மற்றும் உடல் நீங்கியஞானிகளும்(freed from flesh) இந்தத் தலத்தைக் தரிசித்திருப்பார்கள்; உறுதியாக அந்த வரலாறுகளை (இயேசுவின் சரிதத்தை) அறிந்துதான் இருப்பார்கள் (கிறித்து மார்க்கத்தினால்தான் மெய்யுணர்வு பெற்றார்கள்) எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார். (Ref: http://www.tamilhindu.com/2009/10/gu_pope_and_thiruvasagam/)

    இத்தாலிய ஐயரின் திருக்குறள்/திருவள்ளுவ இழிவுரைகள்

    ஜி.யு.போப் அவர்கள் 1886-ஆம் ஆண்டு திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்டார். போப் வாழ்ந்த காலத்தில் வள்ளுவர் பற்றி, “அவருக்குக் கப்பல் தலைவன் ஒருவர் நண்பராக இருந்தார்” என்கிற ஒரு கர்ண பரம்பரைக் கதை நிலவி வந்த்து. இதை அப்படியே ஏற்றுக்கொண்டார் போப். அதோடு மட்டுமல்லாமல், வள்ளுவர் காலத்திலேயே மைலாபூரிலும் அதைச் சுற்றியும் பல குடும்பங்களை புனித தாமஸ் கிறுத்துவ மத்த்திற்கு மாற்றியுள்ளார் என்றும் நம்பியவர் போப். இந்த விஷயங்களை வைத்துக்கொண்டு, தன்னுடைய திருக்குறள் மொழிபெயற்பிற்கு பின்வருமாறு முன்னுரை வரைந்துள்ளார் ஜி.யு.போப்:

    “வள்ளுவர் எல்லா வகைகளிலும் அறிவைச் சேகரிப்பதில் முனைந்து வந்தார். அவருடைய ஊருக்குப் புதிதாக யார் வந்தாலும், அவர் நண்பரும் கப்பல் தலைவருமான அவர் அன்பர் வள்ளுவருக்குச் செய்தி அனுப்புவார். பல வெளிநாட்டார் அக்கப்பல் தலைவர் தோணியிலேயே ஸ்ரீலங்கா மூலம் மயிலைக்கு வந்திருக்கலாம். அப்படி வந்த கிறுத்துவர்களிடமிருந்து அவர்களோடு கடற்கரையில் உலாவி வந்த வள்ளுவர் செய்திகளைச் சேகரித்த்தை நான் என் மனக்கண் முன்னால் காண்கிறேன். கிறுத்துவக் கோட்பாடுகளை அதிலும் அலெக்சாந்திரியக் கோட்பாடுகளையும் நுணுக்கங்களையும் நாளும் நாளும் வள்ளுவர் உசாவி அறிந்து வந்திருக்கிறார். அவற்றைத் தம் திருக்குறளில் வடித்து வைத்திருக்கிறார். வள்ளுவர் வாழ்ந்து வந்த இட்த்திற்குப் பக்கத்தில் நிலவி வந்த கிறுத்துவக் கோட்பாட்டுத் த்த்துவம் குறளில் தெளிவாகத் தெரிகிறது. வள்ளுவர் கி.பி.800க்கும் கி.பி.1000க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்து வந்தவர். கிறுத்துவ மறை நூல்கள் நிச்சயமாக அவர் வரைந்த குறளுக்கான ஆதாரங்களில் ஒன்று. கிறுத்துவ வேத்த்திலிருந்தே வள்ளுவர் உத்வேகம் பெற்றிருக்கிறார்”. (சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் டி.என்.ராமச்சந்திரன் எழுதிய ‘வியத்தகு ஆரிய நாகரிகம்’ என்ற கட்டுரை – “தமிழக அந்தணர் வரலாறு” தொகுதி-2 பக்கம் 641-643. – எல்.கே.எம். ப்ப்ளிகேஷன், சென்னை, ஜூன்2005)

    ஜி.யு.போப் திருக்குறளுக்கு அளித்துள்ள இந்த அருவருக்கத் தக்க முன்னுரையானது, அவருடைய கிறுத்துவத் தீவிரவாத மனப்போக்கையும், அவருடைய தமிழ் பற்றின் பின்னால் இருந்த தீய நோக்கத்தையும் வெளிக்காட்டுவதாக உள்ளது.

    தமிழ் மாணவன் கதை

    மேலும் ஜி.யு.போப் பற்றி தமிழகத்தில் மற்றொரு கட்டுக்கதைப் பரப்பப் பட்டுள்ளது. ‘இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்’ என்று போப் தனது கல்லறையில் எழுதச்சொல்ல, அவ்வாறு எழுதியது இன்றும் உள்ளது என்பது தான் அந்தக் கதை.

    “சில ஆர்வக்கோளாறு கொண்ட தமிழறிஞர்கள் தங்கள் லண்டன் விஜயத்தின் போது ஜி.யு போப்பின் கல்லறையைச் சல்லடை போட்டுத் தேடி, எப்படியோ கண்டுபிடித்துப் போய்ப்பார்த்து அப்படி ஒன்றும் இல்லை, அதச் சாதாரணக் கல்லறையில் வழக்கமான பாதிரி கல்லறைகள் போல சிலுவையும் பைபிள் வாசகமும் மட்டுமே இருந்தது என்பதைக் கண்டு ஏமாற்றம் அடைந்ததாக மதிப்பிற்குறிய ஒரு தமிழறிஞர் வாயிலாக நான் நேரடியாகக் கேட்டறிந்த விஷயம் இது” என்று கூறுகிறார் ஜடாயு என்கிற தமிழ் வலைப்பதிவர் (jataayu.blogspot.com ) – மேலும் ஜி.யு.போப்பின் கல்லறைப்படங்களை இங்கே காணலாம்.http://www.flickr.com/photos/93039296@N00/759184087/

    மேற்கண்டவாறு மாணிக்க வாசகப் பெருமானையும், தெய்வப்புலவர் திருவள்ளுவரையும், அவதூறும் அவமரியாதையும் செய்து, அவர்களது அற்புதப் படைப்புகளையும் கொச்சைப் படுத்திய போப்பிற்கு சென்னைக் கடற்கரையில் சிலை வைத்துக் கொண்டாடியுள்ள திராவிட இனவாதக் கூட்டம் தாங்கள் நடத்திய செம்மொழி மாநாட்டில் சைவ வைணவ இலக்கியங்களையும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளாமல் நாயன்மார்களையும் ஆழ்வார்களையும் புறந்தள்ளியதோடு மட்டுமல்லாமல் கிறுத்துவப் பாதிரிமார்களுக்குப் புகழாரம் சூட்டியதிலும் ஒன்றும் ஆச்சரியமில்லையே! இந்த லட்சணத்தில் மாநாட்டின் இலச்சினையில் திருவள்ளுவர் சிலை வேறு!



    __________________


    Guru

    Status: Offline
    Posts: 7329
    Date:
    Permalink  
     

     இத்தாலிய ஐயரும் அவரின் திருவாசக/மாணிக்கவாசக இழிவுரைகளும்

    இவருக்கு அடுத்தபடியாக ஜி.யு.போப் என்கிற போப்பையர் (1820-1907). இவர் திருவாசகம், திருக்குறள், நாலடியார் போன்றவற்றை மொழிபெயர்த்தவர். இவர் திருவாசகத்தில், கிறுத்துவ இறைத்தூதர் செயிண்ட் பால் மற்றும் அசிசி நாட்டுத் துறவி ”புனித” பிரான்சிஸ் ஆகியோரின் கருத்துக்களைக் கண்டதாகவும், மாணிக்கவாசகப் பெருமானிடம் இவ்விருவரையும் காண்பதாகவும் கூறியுள்ளார். இந்தக் கூற்றை ஆராய்ந்து பார்க்காமல் மேலோட்டமாக எடுத்துக்கொண்டு சில அப்பாவித் தமிழறிஞர்கள் பூரித்துப் போகிறார்கள். துரதிர்ஷ்ட வசமாகச் சில சைவ மடங்கள் கூட இதைப் பெருமையாக நினைக்கின்றன.

    சைவ சித்தாந்தத்தில் மிகவும் ஈடுபாடும் புலமையும் கொண்ட ஆராய்ச்சியாளர், தமிழறிஞர் முனைவர் திரு முத்துக்குமாரசுவாமி அவர்கள் ஜி.யு.போப்பின் மறுமுகத்தை தோலுரித்துக் காட்டுகிறார். ஜி.யு.போப் பின்வருமாறு கூறியுள்ளார்: “In the whole legendary history of this sage … … … there stands out a real historical character, which seems to be a mixture of that of St.Paul and of St.Francis of Assisi. Under other circumstances what an apostle of the East might had become”. இதை சுட்டிக்காட்டிய முனைவர் அவர்கள், “தடித்த எழுத்தில் உள்ள கடைசிவரி போப்பின் மனநிலையைச் சுட்டுகின்றது. அந்த சூழ்நிலையில் ஒரு கீழ்த்திசை சமயகுரு இதைக்காட்டிலும் என்ன மேனிலையை அடைந்துவிடக் கூடும் என்ற கூற்றில் மணிவாசகப்பெருமான் எய்திய சிவமாம் தன்மையைப் போப் சரிவர உணர்ந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது” என்று விளக்குகிறார்.

    முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்கள் போப்பையரைப் பற்றிப் பின்வருமாறு கூறி, “ஜி.யு.போப்பைப் பற்றி ஒரு கதை திருவாசகப் பேச்சாளர்களால் கூறப்படுகிறது. அவர் தமிழகத்தில் ஒருவருக்குக் கடிதம் எழுதியபோது, தன் வழக்கப்படி திருவாசகப் பாடல் ஒன்றினை எழுதும்போது உள்ளம் உருகிக் கண்ணீர் பெருகி கடிதத்தின் மீது விழுந்து சில எழுத்துக்களை அழித்து விட்டதென்றும், திருவாசகத்தால் ஏற்பட்ட புனிதக் கண்ணீர் என்பதால் அழிபட்ட எழுத்துக்கள் மேல் மீண்டும் அவற்றை எழுதாமலேயே கடிதத்தை அனுப்பினார் என்றும் கூறுவர். ஆனால் இன்று வரை, அதில் எழுதப்பட்ட திருவாசகப்பாடல் யாது, அந்தக் கடிதம் என்ன ஆனது, அந்தக் கடிதத்தைப் பற்றி எழுதிய போப் அவர்களோ, கடிதம் எழுதப் பெற்றவரோ, அவருக்குத் தொடர்பானவர்களோ இந்நிகழ்ச்சியைப் பற்றி எங்காவது குறிப்பிட்டுள்ளனரா? இந்த நிகழ்ச்சி உண்மையாயின் போப் அவர்கள் தம் திருவாசக மொழிபெயர்ப்பின் மறுபதிப்பிலாவது வெளியிட்டிருப்பாரே! ஏன் அவ்வாறு செய்யவில்லை? அவரை மிகப்பாராட்டும் திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களாவது தம் நூலில் ஆதாரத்துடன் வெளியிட்டிருப்பாரே! அவரும் ஏன் செய்யவில்லை?” என்ற கேள்விகளையும் எழுப்புகிறார்.

    இவ்விட்த்தில் கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்கள் ஜி.யு.போப்பின் மொழிபெயர்ப்பைப் பற்றிச் சிலாகித்துக் கூறியதையும் முனைவர் குறிப்பிடுகிறார். கே.எம்.பாலசுப்பிரமணியம் அவர்கள், “போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு மேலைநாட்டுத் தத்துவ அறிஞர்களுக்கு பொக்கிஷங்கள் அடங்கிய திருவாசகத்தின் குகைக்கதவுகளைத் திறந்து விட்டது சொரணை கெட்ட தமிழர்களை வெட்கம் அடையச் செய்த்தோடு மட்டுமல்லாமல் தங்களுடைய பழமை குறித்துப் பெருமை கொள்ளுமாறு அவர்களைத் திடுக்கிடவும் செய்தது” என்று கூறியதை நோக்கும்போது, அன்றைய தமிழறிஞர்களின் அப்பாவித்தனமும், ஐரோப்பிய மிஷனரிகளின் உண்மையான நோக்கத்தை அறியாத வெகுளித்தனமும் தெரிகிறது. திரு பாலசுப்ரமணியம் அவர்களும் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளவர் என்பதும், மேற்கண்ட ஜி.யு.போப்பின் கடிதக்கதையைப் பற்றி அவர் எந்தவிதமான குறிப்பையும் தரவில்லை என்பதும் இங்கே குறிப்பிட்த்தக்கது.

    முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்கள் ஆதாரங்களுடன் “தமிழ்ஹிந்து” இணையதளத்தில் எழுதிய கட்டுரையில், மானிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் எழுதிய பதிகத்துள் ஒன்றான ”நீத்தல் விண்ணப்பம்” என்கிற பதிகத்தை ஜி.யு.போப் எப்படி திரித்து எழுதி அதற்கு அபாண்டமான ஒரு விளக்கமும் கொடுத்து மாணிக்கவாசகப் பெருமானை அவமதித்துள்ளார் என்பதையும் பின்வருமாரு விளக்குகிறார்:

    “மாணிக்கவாசகப்பெருமானை திருத்துறைப்பூண்டியில் ஆட்கொண்ட இறைவன் சிவபெருமான், ‘யாத்திரை செய்து திருக்கயிலாயம் வந்தடையுங்கள்; நீங்கள் போய் வழிபடும் இடங்களிலெல்லாம் நான் குருவடிவாய் காட்சி தருவேன்’ என்று சொல்லிய பின்னர், யாத்திரை தொடங்கி உத்தரகோசமங்கை வந்தடைந்த மாணிக்கவாசகர் இறைவனின் காட்சியைப் பெறாமல் பிரிவாற்றாமையால் வருந்தி ‘நீத்தல் விண்ணப்பம்’ என்கிற பதிகத்தைப் பாடுகிறார். இக்கட்டத்தை ஜி.யு.போப், ‘உத்தரகோசமங்கையில் நிலவிய சூழல் மாணிக்கவாசகரின் தவவாழ்க்கைக்குச் சோதனையாக இருந்தது. அவர் இளமையுடன் மதுரையில் வசித்து வந்த போது பாண்டிய மன்னனின் பேரன்பைப் பெற்றும் மகிழ்ச்சியான நிலையில் இல்லற வாழ்வில் ஈடுபட்டதும் அவருக்கு நினைவு வந்ததால், கோவிலில் இருந்த தேவரடியார்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டார். அவருடைய இச்சையைத் தூண்டி அவருடைய ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமாக இருந்த சூழலில், மனமயக்கத்தினாலும் துறவு வாழ்க்கை மேற்கொள்ள இயலாததாலும் கழிவிரக்கம் கொண்டு பாடிய ஒப்புதல் வாக்குமூலமே நீத்தல் விண்ணப்பம் எனும் பதிகம்’ என்று அப்பதிகத்தின் அறிமுகவுரையில் எழுதி தமிழ் இந்துக்களுக்கு பேரதிர்ச்சி தருமாறு மாணிக்கவாசகப் பெருமானை அவதூறு செய்துள்ளார்”.

    ஜி.யு.போப் கூறியதாவது: “From the evidence of these verses, we conclude that there were two things from which he suffered. One of these was the allurements of the female attendants who in bands pertained to the temple. We have noticed this elsewhere, Hindu commentators will often find mystic meaning, which are harmless, - if unfounded. Again and again in this and other poems he deplores the way in which he has been led to violate his vow. The other difficulty often referred to was the way in which mere ceremonial acts had to be performed, affording no relief to his conscience.”

    முனைவர் மேலும், “உலகத்தார் பிழைகளைத் தம்மேல் ஏற்றிக் கூறி அவர்களுக்காக இறைவனிடம் மனமுருகி வேண்டுதல் இந்து மத்த்தின் பக்தி இலக்கிய மரபு. அதன்படியே, வினைக்கு ஈடாகப் பிறந்து உழலும் உலக மக்கள் பிறவிப் பயனைப் பெறாது இன்பத்தில் திளைத்து மேலும் வினைகளை ஈட்டிக்கொள்ளும் இயல்பைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு இறைவனிடம் மன்றாடுகிறார் மாணிக்கவாசகர். அதைத் திரித்து ஜி.யு.போப் கூறும் இந்த வரலாறு மாணிக்க வாசகப் பெருமானுக்குப் பெருமை சேர்ப்பதா? தன்மானம் உள்ள தமிழ் பற்றாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் அறிஞர்களும் போப்புக்குப் புகழ்மாலை சூட்டி மாணிக்கவாசகரை ஒழுக்கக்கேடர் என்னும் இழிவுக்கு உட்படுத்துவரோ?” என்று கேட்கிறார்.

    இவ்விட்த்தில், திருவாசகமணி அவர்கள் போப்பின் தூஷணைத் தெரிந்திருந்தும் பெருந்தன்மையுடன் நடந்துகொண்ட்தைக் காடும் விதமாக, “போப் மணிவாசகருக்குச் செய்த இந்த இழிவைப் பிறர் அறியாதொழியினும், தம்முடைய திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பைப் போப்புக்குக் காணிக்கையாக்கி மகிழ்ந்த திருவாசகமணி நன்குஅறிந்தே இருந்தார். ஆயினும் இதைப்பற்றிய ஆய்வு இப்பொழுது வேண்டா எனக் கூறி , இந்துக் கோயில்களில் சில காலங்களுக்கு முன் நிலவி வந்த தேவதாசி முறையின் இழிவு குறித்துத் தம் கருத்தை மொழிந்து ஒதுங்கினார்” என்று விளக்குகிறார் முனைவர். (Ref: -http://www.tamilhindu.com/2009/10/gu_pope_and_thiruvasagam/)

    பக்தி இலக்கியங்களைப் பொறுத்தவரை ஆழ்வார்களும், நாயன்மார்களும், மற்ற இலக்கிய கர்த்தாக்களும், தங்கள் மனதிற்குகந்த தெய்வங்களை நாயகனாகவும், நாயகியாகவும் பாவித்து ஆங்காங்கே சிற்றின்பச் சுவையுடனும் நவரசங்களுடனும் காவியங்களை வடித்து அதன் மூலம் பேரின்ப நிலையை வேண்டி காவியங்களைப் படைக்கும் வழக்கமும் இருந்த்து.

    இங்கே திருவாசகத்தைப் பொறுத்தவரை மாணிக்கவாசகரின் நீத்தல் விண்ணப்பமானது ஜி.யு.போப் சொன்னது போல ஒப்புதல் வாக்குமூலம் அன்று. முனைவர் சுட்டிக் காட்டியதைப்போல உலகத்தார் செய்த பாவங்களைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு, பேரின்ப நிலையாகிய முக்தி வேண்டிப் பாடும் பாடலாகத்தான் இருக்கிறது. இறுதியில் மாணிக்கவாசகர் மாயையான இப்பிரபஞ்சத்திலிருந்து தன்னை விடுவித்து வீடுபேறு தருமாறு விண்ணப்பிக்கிறார்.

    அடிப்படையில் ஒரு படைப்பை எப்படிப் புரிந்துகொள்ளுகிறோம், எவ்வாறு அர்த்தம் கொள்ளுகிறோம் என்பது முக்கியமான விஷயம். இங்கே ஜி.யு.போப் செய்துள்ளது அப்பட்டமான கிறுத்துவ அடிப்படைவாதம் அன்றி வேறில்லை.

    சைவசித்தாந்தத்தைப் போற்றுமிடத்து உருவ வழிபாட்டைக் குறையும் கூறியுள்ளார் ஜி.யு.போப். சைவன் ஒருவன் ஆன்மீகநெறியில் எவ்வளவுக்கெவ்வளவு முன்னேறி செம்மை பெற்றுள்ளானோ அவ்வளவிற்கு ஆன்மநெறிக்குப் பொருத்தமற்ற உருவவழிபாடாகிய பாமர வழிபாட்டுச் சடங்குகளிலும் தீவிரமாக ஈடுபடுகின்றான் என்றும் போப் கூறுகிறார். அவர் கூறியதாவது: “There is in them (Saiva Saints) a strange combination of lofty feeling and spirituality with what we must pronounce to be the grossest idolatory. And this leads to the thought that in Saiva system of today two things that would appear to be mutually destructive are found to flourish, and even to strengthen one another. The more philosophical and refined the Saivite becomes the more enthusiastic does he often appears to be in the performance of the incongruous rites of the popular worship”.

    இங்கு உருவ வழிபாட்டை முட்டாள் தனமான செயல் என்று தூஷணை செய்வதன் மூலம் ஜி.யு.போப் மீண்டும் தன்னுடைய கிறுத்துவ தீவிரவாத்த்தைத்தான் முன்நிறுத்துகிறார். “குரு ஸ்துதியே முழுவதுமாக இருக்கும் திருவாசகத்தில் உருவ வழிபாட்டைக் கொச்சை படுத்துகின்ற போப்பின் செயல் சரி தானா” என்றும் கேட்கிறார் முனைவர்.

    தன்னுடைய திருவாசக மொழிபெயர்ப்பில் ஜி.யு.போப் மீண்டும் ஒரு இட்த்தில் மாணிக்கவாச்கரை அவதூறு செய்வதைச் சுட்டிக்காட்டுகின்ற முனைவர் முத்துக்குமாரசுவாமி அவர்கள், “மாணிக்கவாசகருக்காக இறைவன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட வரலாறு எல்லோருக்கும் தெரியும். இறைவனின் திருவிளையாடலைப் பின்னர் அறிந்துகொண்ட மன்னன் மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு கேட்டு அவர் விருப்பப்படி அவர் பாண்டிய நாட்டை விட்டு வெளியேற அனுமதியளிக்கிறான். ஆனால் இவ்வரலாறை, ‘மதுரைக்கோவிலுக்கும் தில்லைக்கோவிலுக்கும் பிரச்சனை இருந்தது. மதுரையை விட்டுத் தில்லைக்குச் சென்ற மாணிக்கவாசகர், பின்னர் மதுரைக்குத் திரும்பவே இல்லை. குதிரை வாங்குவதற்காக மன்னன் அளித்த பொருளை மாணிக்கவாசகர் கவர்ந்து கொண்டதால் மன்னன் அவரை மன்னிக்கவேயில்லை என்பதனால் அவர் மதுரைக்குத் திரும்பவில்லை’ என்று திரித்துக் கூறியுள்ளார் போப்” என்று கூறுகிறார்.

    ஜி.யு.போப் அவர்களின் கூற்று: “It does not appear indeed, that Maanikkavaachagar ever revisited Madura after his formal renunciation of his position there. It may almost be inferred that he was never heartily forgiven by the king for the misappropriation of the cost of horses.” திருவாசகத்தின் மீதான போப்பின் பற்றும் மாணிக்கவாசகரின் மீதான அவருடைய அன்பும் என்னவென்று சொல்வது!

    முனைவர் மேலும் சொல்கிறார், “போப் திருவாசகத்தின் மொழிபெயர்ப்பின் பெரும் பகுதியை இத்தாலியில் உள்ள Lugano என்னும் நகரில் செய்ததாகவும், Bernardinao Luini என்னும் ஓவியரின் வண்ண ஓவியங்களைக் கண்டு தன்னுடைய களைப்பைத் தீர்த்துக் கொள்ளுவதற்கும் புத்துணர்வு பெறுவதற்கும் அந்த ஓவியங்கள் உள்ள S.Maria degili Angioli என்னும் சர்ச்சுக்கு அடிக்கடி சென்றதாகவும் அப்பொழுதெல்லாம் இறையைத் தேடும் இந்தத் தமிழ்த் துறவி(மணிவாசகர்) தம் அருகில் நிற்பது போன்றும் முழந்தாளிட்டு வழிபாடு செய்வது போலவும் கருதாமல் இருக்க முடியவில்லை எனவும் கூறுகின்றார். இந்த Great Master (இயேசு) கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்? ஆச்சரியமாக இருக்கின்றது. இவரும் மயிலாப்பூரில் வாழ்ந்த நெசவாளி(திருவள்ளுவர்)யும் நாலடியார் இயற்றிய நாடோடிஞானிகளும் மற்றும் உடல் நீங்கியஞானிகளும்(freed from flesh) இந்தத் தலத்தைக் தரிசித்திருப்பார்கள்; உறுதியாக அந்த வரலாறுகளை (இயேசுவின் சரிதத்தை) அறிந்துதான் இருப்பார்கள் (கிறித்து மார்க்கத்தினால்தான் மெய்யுணர்வு பெற்றார்கள்) எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார். (Ref: http://www.tamilhindu.com/2009/10/gu_pope_and_thiruvasagam/)

    இத்தாலிய ஐயரின் திருக்குறள்/திருவள்ளுவ இழிவுரைகள்

    ஜி.யு.போப் அவர்கள் 1886-ஆம் ஆண்டு திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட்டார். போப் வாழ்ந்த காலத்தில் வள்ளுவர் பற்றி, “அவருக்குக் கப்பல் தலைவன் ஒருவர் நண்பராக இருந்தார்” என்கிற ஒரு கர்ண பரம்பரைக் கதை நிலவி வந்த்து. இதை அப்படியே ஏற்றுக்கொண்டார் போப். அதோடு மட்டுமல்லாமல், வள்ளுவர் காலத்திலேயே மைலாபூரிலும் அதைச் சுற்றியும் பல குடும்பங்களை புனித தாமஸ் கிறுத்துவ மத்த்திற்கு மாற்றியுள்ளார் என்றும் நம்பியவர் போப். இந்த விஷயங்களை வைத்துக்கொண்டு, தன்னுடைய திருக்குறள் மொழிபெயற்பிற்கு பின்வருமாறு முன்னுரை வரைந்துள்ளார் ஜி.யு.போப்:

    “வள்ளுவர் எல்லா வகைகளிலும் அறிவைச் சேகரிப்பதில் முனைந்து வந்தார். அவருடைய ஊருக்குப் புதிதாக யார் வந்தாலும், அவர் நண்பரும் கப்பல் தலைவருமான அவர் அன்பர் வள்ளுவருக்குச் செய்தி அனுப்புவார். பல வெளிநாட்டார் அக்கப்பல் தலைவர் தோணியிலேயே ஸ்ரீலங்கா மூலம் மயிலைக்கு வந்திருக்கலாம். அப்படி வந்த கிறுத்துவர்களிடமிருந்து அவர்களோடு கடற்கரையில் உலாவி வந்த வள்ளுவர் செய்திகளைச் சேகரித்த்தை நான் என் மனக்கண் முன்னால் காண்கிறேன். கிறுத்துவக் கோட்பாடுகளை அதிலும் அலெக்சாந்திரியக் கோட்பாடுகளையும் நுணுக்கங்களையும் நாளும் நாளும் வள்ளுவர் உசாவி அறிந்து வந்திருக்கிறார். அவற்றைத் தம் திருக்குறளில் வடித்து வைத்திருக்கிறார். வள்ளுவர் வாழ்ந்து வந்த இட்த்திற்குப் பக்கத்தில் நிலவி வந்த கிறுத்துவக் கோட்பாட்டுத் த்த்துவம் குறளில் தெளிவாகத் தெரிகிறது. வள்ளுவர் கி.பி.800க்கும் கி.பி.1000க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்து வந்தவர். கிறுத்துவ மறை நூல்கள் நிச்சயமாக அவர் வரைந்த குறளுக்கான ஆதாரங்களில் ஒன்று. கிறுத்துவ வேத்த்திலிருந்தே வள்ளுவர் உத்வேகம் பெற்றிருக்கிறார்”. (சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் டி.என்.ராமச்சந்திரன் எழுதிய ‘வியத்தகு ஆரிய நாகரிகம்’ என்ற கட்டுரை – “தமிழக அந்தணர் வரலாறு” தொகுதி-2 பக்கம் 641-643. – எல்.கே.எம். ப்ப்ளிகேஷன், சென்னை, ஜூன்2005)

    ஜி.யு.போப் திருக்குறளுக்கு அளித்துள்ள இந்த அருவருக்கத் தக்க முன்னுரையானது, அவருடைய கிறுத்துவத் தீவிரவாத மனப்போக்கையும், அவருடைய தமிழ் பற்றின் பின்னால் இருந்த தீய நோக்கத்தையும் வெளிக்காட்டுவதாக உள்ளது.

    தமிழ் மாணவன் கதை

    மேலும் ஜி.யு.போப் பற்றி தமிழகத்தில் மற்றொரு கட்டுக்கதைப் பரப்பப் பட்டுள்ளது. ‘இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்’ என்று போப் தனது கல்லறையில் எழுதச்சொல்ல, அவ்வாறு எழுதியது இன்றும் உள்ளது என்பது தான் அந்தக் கதை.

    “சில ஆர்வக்கோளாறு கொண்ட தமிழறிஞர்கள் தங்கள் லண்டன் விஜயத்தின் போது ஜி.யு போப்பின் கல்லறையைச் சல்லடை போட்டுத் தேடி, எப்படியோ கண்டுபிடித்துப் போய்ப்பார்த்து அப்படி ஒன்றும் இல்லை, அதச் சாதாரணக் கல்லறையில் வழக்கமான பாதிரி கல்லறைகள் போல சிலுவையும் பைபிள் வாசகமும் மட்டுமே இருந்தது என்பதைக் கண்டு ஏமாற்றம் அடைந்ததாக மதிப்பிற்குறிய ஒரு தமிழறிஞர் வாயிலாக நான் நேரடியாகக் கேட்டறிந்த விஷயம் இது” என்று கூறுகிறார் ஜடாயு என்கிற தமிழ் வலைப்பதிவர் (jataayu.blogspot.com ) – மேலும் ஜி.யு.போப்பின் கல்லறைப்படங்களை இங்கே காணலாம்.http://www.flickr.com/photos/93039296@N00/759184087/

    மேற்கண்டவாறு மாணிக்க வாசகப் பெருமானையும், தெய்வப்புலவர் திருவள்ளுவரையும், அவதூறும் அவமரியாதையும் செய்து, அவர்களது அற்புதப் படைப்புகளையும் கொச்சைப் படுத்திய போப்பிற்கு சென்னைக் கடற்கரையில் சிலை வைத்துக் கொண்டாடியுள்ள திராவிட இனவாதக் கூட்டம் தாங்கள் நடத்திய செம்மொழி மாநாட்டில் சைவ வைணவ இலக்கியங்களையும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளாமல் நாயன்மார்களையும் ஆழ்வார்களையும் புறந்தள்ளியதோடு மட்டுமல்லாமல் கிறுத்துவப் பாதிரிமார்களுக்குப் புகழாரம் சூட்டியதிலும் ஒன்றும் ஆச்சரியமில்லையே! இந்த லட்சணத்தில் மாநாட்டின் இலச்சினையில் திருவள்ளுவர் சிலை வேறு!



    __________________


    Guru

    Status: Offline
    Posts: 7329
    Date:
    Permalink  
     

    தமிழ் உரைநடை பற்றிய கட்டுக்கதை

    மேற்கூறப்பட்ட கிறுத்துவப் பாதிரிகள்தான் தமிழில் உரைநடையை அறிமுகப் படுத்தியவர்கள் என்னும் பிரசாரமும் பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று முத்தமிழிலும் சிறந்து விளங்கிய தமிழர்களுக்கு உரைநடையை அன்னியர் வந்து அறிமுகம் செய்தனர் என்று சொல்வது பச்சைப் புளுகு அன்றி வேறென்ன? ஒவ்வொரு இலக்கியத்திற்கும் உரை எழுதிய உரையாசிரியர்கள் உரைநடையிலன்றி வேறு எவ்வடிவில் எழுதினார்கள்?

    தமிழ்மொழி குறைந்த பட்சமாக 2000 வருட வரலாறு உடையது. தமிழ் பாரம்பரியம் என்பது மிகவும் கல்வியறிவு மிக்கதும் இயல் இசை நாடக இலக்கியங்களை எழுதிச் சேமித்து வைத்திருந்ததுமான ஆரோக்கியம் மிகுந்த பாரம்பரியம் ஆகும். கிறுத்துவர்கள் சிலர் பொய்யாக்க் குறிப்பிடுவது போல வாய்மொழிப் பாரம்பரியம் கொண்டதல்ல. தமிழின் எழுத்திலக்கியப் பாரம்பரியமானது, சங்க காலங்களில் பண்டைய அறிஞர்களாலும், இடைக்காலத்தில் பிராம்மண மற்றும் சைவ அறிஞர்களாலும் பல நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இளம்பூரணர், சேனவராயர், பேராசிரியர், பரிமேலழகர், நச்சினார்க்கினியார், தெய்வச்சிலையார் போன்ற பல அறிஞர்களால் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது இம்மகோன்னதப் பாரம்பரியம். இங்கே நாம் முகியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தொடர்ந்து நடந்துகொண்டிருந்த ஆக்கிரமிப்புகளும் நிலையில்லாமல் அடிக்கடி மாறிக்கொண்டிருந்த அரசியல் சூழ்நிலைகளும் இருந்தபோதுகூட இப்பாரம்பரியம் கடைப்படிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வந்துள்ளது என்பது தான். சைவ ஆதீனங்கள் தமிழ்ச் செம்மொழி இலக்கியப் பாரம்பரியத்தை பாதுகாக்கப் பேருதவி புரிந்துள்ளார்கள்.

    அதன் பிறகு நவீன காலக்கட்டங்களில்கூட உ.வே.சாமிநாத ஐயர், ராமச்சந்திர தீக்ஷிதர், நீலகண்ட சாஸ்திரி, பி.நாராயணசாமி ஐயர், ஆர்.ராகவ ஐயங்கார் போன்ற மிக்க ஈடுபாடு கொண்ட பிராம்மண சமூகத்தைச் சேர்ந்த தமிழ் அறிஞர்களும், இலங்கையைச் சேர்ந்த ஆறுமுக நாவலர், சி.டபிள்யு.தாமோதரம் பிள்ளை, ஸ்வாமி விபுலானந்தா போன்ற தீவிர சைவ சமயப் பற்றாளர்களும் தமிழ்ச் செம்மொழியின் பாரம்பரியத்தை வளர்த்தும் பாதுகாத்தும் வந்தவர்கள் ஆவர். இவர்களுடையத் தியாகங்களுக்கும் பங்களிப்புக்கும் முன்னால் கிறுத்துவ பாதிரிகளின் பங்களிப்பு என்று சொல்லப்படுவது ஒன்றுமே இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், முன்னால் கூறப்பட்டவர்களுடைய பங்களிப்பில் மொழி மீது பக்தியும், மொழி வளர்ச்சியின் மீது ஈடுபாடும், மொழி சார்ந்த கலாசாரத்தின் மீது பற்றும், அவற்றிற்காகத் தியாகம் செய்யக்கூடிய மனப்பாங்கும் இருந்தன; கிறுத்துவப் பாதிரிமார்கள் பங்களிப்பில்(?) சுயநலமும் மதமாற்ற நோக்கமும் மட்டுமே இருந்தன.

    அகராதி பற்றிய கதை

    தமிழ் எழுத்துக்கள், சொற்கள், இலக்கணம் ஆகியவற்றின் அகராதி முறைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கிறுத்துவப் பள்ளிகளில் தான் முதலில் ஆரம்பமானது என்று விளம்புகிறது www.cathnewsindia.com என்கிற கிறுத்துவ இணையதளம். பாதிரியார் சுவாமி ஞானப்பிரகாசம் என்பவர் தான் இதை கிறுத்துவப் பள்ளிகளில் ஆரம்பித்ததாகவும், அவரைத் தொடர்ந்து பாதிரியார் சிங்கராயர் டேவிட் ஆறு தொகுதிகள் கொண்ட அகராதியை அச்சிட்டு பின்னர் அவற்றை யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வழங்கியதாகவும் இந்த இணைய தளம் கூறுகிறது.

    பாதிரியார் ஞானப்பிரகாசம் அவர்களை ஒரு தமிழ் அறிஞராகவோ, வரலாற்று ஆசிரியராகவோ ஏற்றுக்கொள்வதில் இலங்கைத் தமிழ் அறிஞர்களிடையே இருவிதமான கருத்துக்கள் இருப்பதாகத் தெரிகிறது. இவருடைய பல ஆராய்ச்சி முடிவுகள் வரலாற்று ஆதாரங்கள் இல்லாதவ என்று சிலர் கூறுகிறார்கள். உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாயானது தமிழ் மொழியே என்று இவர் கூறியதை உதாரணமாகச் சொல்லுகிறார்கள்.

    உண்மையில் கிறுத்துவ மிஷனரிகள் நம் மண்ணில் கால்வைப்பதற்கு முன்பே வழக்கத்தில் இருந்தன நிகண்டு போன்ற தமிழ் அகராதி முறைகள். “நிகண்டுகள் பாடல் வடிவில் இருக்கும். தமிழில் பல நிகண்டுகள் 11-ஆம் நூற்றாண்டு முதலே இருக்கின்றன. உதாரணமாக

    பகவனே ஈசன் மாயோன்

    பங்கையன் சினனே புத்தன்

    என்பது நிகண்டில் வரும் பாடல் வரிகள். இப்படிப் பாடல்களாக இருந்தால் மனப்பாடம் செய்து ஞாபகத்தில் வைத்துக்கொள்ளலாம்” என்று கூறுகிறார் பல அரிய மரபிலக்கிய சொல்லகராதிகளைத் தொகுத்தளித்தவரும், மகாவித்வான் தண்டபாணி தேசிகரின் நேரடி மாணவருமான தமிழறிஞர் புலவர் மணியன் அவர்கள். அவரே, “அகர வரிசைப்படி அகராதியை அமைக்கும் முறையை வெள்ளைக்காரர்கள் தான் கண்டுபிடித்தார்கள். அகர வரிசைப்படியான அகராதியை நமக்குக் கொடுத்தார்கள்” என்றும் கூறுகிறார். (தமிழறிஞர் புலவர் மணியன் அவர்களுடன் நேர்காணல் - ”ரசனை” (ஜூலை 2010) மாத இதழ் – திரிசக்தி குழும்ம், சென்னை)

    உண்மை தான். ஆனால் அதற்காக, உரைநடை என்பதே பாதிரிமார்கள் அறிமுகம் செய்தது தான், அவர்கள் பங்களிப்பினால் தான் பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ் பிழைத்தெழுந்தது, என்றெல்லாம் மிகைபடுத்திக் கூறுவதன் பின்னே உள்ள நோக்கம் தெளிவாகத் தெரிகிறதே! மாபெரும் இலக்கியங்களுக்கு உரை எழுதிய தமிழர்கள், நிகண்டுகள் எழுதிய தமிழர்கள், நாளடைவில் அகர வரிசைப்படியும் அகராதி தயாரித்திருக்க மாட்டார்களா என்ன?

    மறுக்கப்பட்ட அச்சுரிமை

    உண்மை என்னவென்றால், அயல்நாடுகளிலிருந்து வந்த வெள்ளைக் கிறுத்துவர்கள் அச்சு இயந்திரங்களையும் அச்சடிக்கும் முறையையும் தான் அறிமுகம் செய்தார்கள். அதுவும் எதற்காக? மதமாற்றம் விரைவாக நடக்கவேண்டும் என்பதற்காக.

    காகிதமும், அச்சும் அறிமுகம் ஆவதற்கு முன்னால், அதாவது வெள்ளைக்காரர்கள் நம் தேசத்திற்கு வந்து அவற்றை அறிமுகப் படுத்துவதற்கு முன்பு வரை, தமிழில் மதிப்பு மிக்க நூல்களெல்லாம் பனை ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டு, வரிசையாக்க் கோர்க்கப்பட்டு, மரம் அல்லது செப்புத் தகடுகளை மேலும் கீழுமாகக் கொடுத்து கட்டப்பட்டு இருக்கும். ஓலைச் சுவடிகளில் எழுதுவதென்பது பரவலாகவும் பொதுவாகவும் இருந்த ஒரு பழக்கம் என்றாலும், ஒரு சமயத்தில் ஒரு பிரதி தான் செய்யமுடியும். மற்றொரு பிரதி எடுக்க வேண்டுமென்றால் மீண்டும் திருப்பி ஓலைச் சுவடியில் எழுத வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தனக்கு வேண்டிய பாடங்களை ஆசிரியரிடமிருந்து தங்களுக்குறிய பிரதிகளாக மீண்டும் எழுதித் தான் எடுத்துக் கொண்டார்கள். ஏதாவது ஒரு குறிப்பிட்ட விவரத்தை பார்க்க வேண்டுமென்றால், கட்டைப் பிரித்து, குறிப்பிட்ட சுவடியைத் தேடி எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஓலைச் சுவடிகளில் எழுதுவதும், பிரதி எடுப்பதும், குறிப்பெடுப்பதும், தமிழ் இந்துக்களுக்குச் சுலபமாக இருந்ததே ஒழிய, அன்னியப் பாதிரிமார்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவர்களின் இயலாமை அவர்களின் குறிக்கோளான மதமாற்றத்திற்குப் பெரிதும் இடைஞ்சலாகவும் இருந்தது. தங்களுடைய பிரசாரக் கருத்துக்களையும், விவிலியக் கருத்துக்களையும், எழுத்து வடிவில் மக்களிடம் சேர்த்தால் ஆன்ம அறுவடைகளை எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் அச்சு இயந்திரத்தைத் தருவித்தார்கள் பாதிரிமார்கள். இந்தியாவிலேயே அச்சில் வந்த முதல் மொழி தமிழ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    தரங்கம்பாடியில் தான் முதன் முதலில் ஜெர்மானிய ஒத்துழைப்புடன் டச்சு நிறுவனம் தமிழில் விவிலியத்தை அச்சிட்டது என்பதை பார்த்தலோமியோ ஸீகன் பால்கு என்கிற பாதிரியைப் பற்றிய விவரத்தில் பார்த்தோம். அதே சமயத்தில் ஆங்கிலேயர்கள் சென்னை-வேப்பேரியில் ஒரு அச்சகத்தை நிறுவினர். அதன் பிறகு, பெருமளவில் மதமாற்றம் செய்து ஆன்மாக்கள் அறுவடை செய்வதற்காக, அச்சகங்கள் மெதுவாக ஆங்காங்கே நிறுவப்பட்டன. இந்தியாவில், அச்சிடுதல் வரலாற்றின் துவக்கம் வேதனை மிகுந்ததாகும். அச்சகங்களை வைத்திருந்த கிறுத்துவ மிஷனரிகள் இந்திய இலக்கியங்களையும் உரைநடை நூல்களையும் அச்சிடுவதைத் தவிர்த்து அவற்றை அடக்கி வைத்தனர். இந்திய மொழிகளில் இலக்கியங்கள் மற்றும் உரைநடைகளின் முன்னேற்றத்தை அடக்கு முறையில் தடுத்தனர். கிழக்கிந்தியக் கம்பெனியார் இந்தியர்கள் அச்சகம் தொடங்குவது, இந்திய நூல்களை அச்சிடுவது ஆகியவற்றைத் தடை செய்யும் சட்டம் ஒன்றையும் அமல்படுத்தினர். அன்னியரும், கிறுத்துவ மிஷனரிகளும் மட்டுமே அச்சிட அனுமதிக்கப் பட்டனர்.

    பின்னர் பல வருடங்கள் கழித்து ஆளுனராக இருந்த தாமஸ் மன்ரோவும் அரசு அதிகாரியாக இருந்த எல்லிஸ் துரையும் மெற்கொண்ட நடவடிக்கைகளினால் 1835-ஆம் ஆண்டு தான் சட்டத் திருத்தம் கொண்டு வந்து இந்தியரும் அச்சகங்கள் வைத்து அச்சிடலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியாரின் தடை இல்லாதிருந்தால் 18-ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு தமிழில் இலக்கியங்களும் உரைநடைகளும் ஏராளமாகப் படைக்கப் பட்டிருக்கும். அடக்கு முறையில் அவற்றைத் தடை செய்து மதமாற்றத்திலும் பெரிதும் ஈடுபட்டு வெற்றி கண்டனர் கிறுத்துவப் பாதிரிமார்கள். (Christianity in India – A Critical study: - Vivekananda Kendra Prakashan)

    உண்மை இவ்வாறிருக்க, ஏதோ உரைநடையையே கிறுத்துவப் பாதிரிகள் தான் தமிழருக்கு அறிமுகம் செய்து வைத்துத் தமிழ் மொழிக்கு பெரிய சேவை செய்துள்ளனர் என்று பொய்ப்பிரசாரம் செய்வதை என்னவென்று சொல்வது? தமிழ் ஹிந்துக்களுக்கு ஒரு அச்சகத்தை சொந்தமாக நிறுவவோ, புத்தகங்களை சொந்தமாக அச்சிடவோ உரிமை இல்லை என்று சட்டம் போட்டு, தமிழ் இலக்கியத்தையும், கலாசாரத்தையும் பெரிதும் அழித்து இருக்கிறார்கள் என்பது மேற்கூறப்பட்ட உண்மையான செய்திகளிலிருந்து தெரிகிறதல்லவா? இது தான் கிறுத்துவப் பாதிரிமார் தமிழுக்குச் செய்த தொண்டின் லட்சணம்!



    __________________


    Guru

    Status: Offline
    Posts: 7329
    Date:
    Permalink  
     

    மேலே குறிப்பிடப்பட்டுள்ள www.cathnewsindia.com கிறுத்துவ இணையதளம் மேலும் ஒரு தகவல் தருகிறது. பாதிரியார் சேவியர் தனிநாயகம் என்பவர் ”தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேசச் சங்கம்” (IATR – International Association of Tamil Research) என்ற அமைப்பை நிறுவி, 1965-ஆம் ஆண்டு, முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார். பின்னர் அது தொடர்ந்து நடத்தப்பட்டு வந்து, தற்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது. எனவே தமிழ் மொழியை சர்வதேச அளவிற்குக் கொண்டு சென்றவர் பாதிரியார் தனிநாயகம் தான்” என்று கூறுகிறது அந்த இணைய தளம். தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேச்ச் சங்கத்தை நிறுவியவர் பாதிரியார் தனிநாயகம் என்பது உண்மை தான் என்றாலும், அவருடைய அந்த முயற்ச்சி தான் தற்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது என்று உரிமை கொண்டாடுவது ஒத்துக்கொள்ள முடியாததாகும். சொல்லப்போனால், ”ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு” நடத்த வேண்டும் என்ற தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோளை மறுத்தது தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேசச் சங்கம் என்கிற உண்மையைச் சொல்லும் தைரியம்கூட அந்தக் கிறுத்துவ இணைய தளத்திற்கு இல்லை. அதை விட்டு, தமிழ்ச்செம்மொழி மாநாட்டிற்கு உரிமை கொண்டாடுவதென்பது சிறுபிள்ளைத் தனமாக இருக்கிறது. தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேசச் சங்கத்தின் மறுப்பை புறந்தள்ளிய கலைஞர் அவ்வமைப்பைத் தண்டிக்கும் விதமாக “முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு” என்று அறிவித்து நடத்தியதோடு மட்டுமல்லாமல் “உலகத் தொல்காப்பியர் செம்மொழித் தமிழ்ச் சங்கம்” என்ற புதிய அமைப்பையும் துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 45 ஆண்டுகளில் எட்டு மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு மாநாடுகள் (1983 & 1992) அ.தி.மு.க மாநாடுகளாகவும், ஒரு மாநாடு (1968) தி.மு.க மாநாடாகவும் மற்ற ஐந்தும் மிகச் சாதாரண மாநாடுகளாகவும் நடந்தேறியுள்ளன. இவற்றினால் தமிழ் மொழிக்கோ, தமிழ் இலக்கியத்திற்கோ, தமிழ் கலாசாரத்திற்கோ, என்ன பயன் ஏற்பட்டுள்ளது? – ஒன்றுமில்லை!

    இப்போது கோவையில் நடந்த மாநாடும் தி.மு.க மாநாடே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தொலைக்காட்சிகள் தங்களின் நேரலை ஒளிபரப்புகள் மூலமே கோவையில் நடந்தது கட்சி மாநாடுதான் என்பதைத் தெளிவாக்க் காட்டிவிட்டன. இம்மாநாட்டில் கிறுத்துவ ஆதிக்கம் இருந்ததும் கண்கூடாகத் தெரிந்தது. அதாவது திராவிட-கிறுத்துவ உறவு மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது.

    www.transcurrents.com என்கிற மற்றொரு கிறுத்துவ இணைய தளத்தில் பாதிரியர் தமிழ் நேசன் என்பவர் தான் எழுதிய கட்டுரையில், “பாதிரியார் தனிநாயகம் பல ஐரோப்பிய மொழிகளையும் அம்மொழிகளின் இலக்கியங்களையும் கற்றறிந்தமையால் அவற்றுடன் தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டுத் தமிழ் மொழியை சர்வதேச அளவில் வளர்ச்சியடையச் செய்தார். அவர் தமிழ் கலாசாரத்தின் தூதுவராக சர்வதேச அரங்கில் விளங்கினார். தமிழ் கலாசாரத்தை உலகெங்கும் கொண்டுசென்ற கத்தோலிக்கப் பாதிரியாராக விளங்கினார். தமிழ் மொழி மற்றும் இலக்கியங்களின் தொன்மையையும், செழுமையையும், அழகையும் சர்வதேச அளவில் கொண்டு செல்லுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும், எப்போதும் கர்தரிடம் பக்தியுடைய பாதிரியாராகவே விளங்கினார். இவருடைய கடுமையான அயராத உழைப்பினால் தான் உலகம் தமிழ் மொழியின் செம்மொழி அந்தஸ்தை ஏற்றுக் கொண்டு அங்கீகரித்தது என்று சொன்னால் அது மிகையாகாது.” என்று கூறுகிறார். (http://transcurrents.com/tc/2010/06/contribution_of_sri_lankan_tam.html)

    இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. தமிழ் கலாசாரம் என்பது என்ன? கிறுத்துவர்கள் எதைத் தமிழ் கலாசாரம் என்று சொல்கிறார்கள்? அப்படியென்றால் ஹிந்தி கலாசரம், தெலுங்கு கலாசாரம், மராத்தி கலாசாரம், குஜராத்தி கலாசாரம், வங்காள கலாசாரம் என்றெல்லாம் இருக்கின்றனவா என்ன? இமயத்திலிருந்து குமரிமுனை வரை பாரத மொழிகளைப் பேசும் அனைத்து சமூகங்களையும் ஒன்றாக இணைப்பது ஒரே நாகரிகப் பாரம்பரியம் தான். அதுதான் ஹிந்து கலாசாரம். இந்த ஹிந்து பூமியின் கலாசாரம். சில சடங்குகளிலும் சில சம்பிரதாயங்களிலும் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அடிப்படையில் கலாசாரம் ஒன்று தான். பேசும் மொழிகள் வேறாக இருந்தாலும், வணங்கும் கடவுள்களும், கொண்டாடும் பண்டிகைகளும், வாழும் முறையும் அனைவருக்கும் ஒன்றாகத்தான் பற்பல நூற்றாண்டுகளாக இருக்கின்றன. இதைத் தான் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறோம்.

    மேலும், பாதிரியார் தமிழ் நேசன் அவர்கள், “பல நாடுகளிலும் தமிழ் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவற்றுக்குக் காரணம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாதிரியார் தனிநாயகம் என்ற தனிநபரின் கடுமையான உழைப்புதான்” என்று சொல்கிறார். ஆனால் அவர் “தமிழ்” பண்டிகைகள் யாவை என்று கூறவில்லை. இங்கே தமிழ் வருடப் பிறப்பை மாற்றியமைத்த திராவிட இனவாதிகளிடம் கேட்டால், பொங்கல் தான் தமிழர் திருநாள் என்று கூறுவார்கள். பொங்கல் திருநாள் என்பதே ஹிந்துக்களின் “மகர ஸங்கராந்தி” என்கிற பண்டிகை தான் என்பது வேறு விஷயம். அப்படியென்றால் மற்ற பண்டிகைகள் எல்லாம் தமிழ் பண்டிகைகள் கிடையாதா? அவையெல்லாம் ஹிந்துப் பண்டிகைகள் என்றுதானே அர்த்தமாகிறது? அப்புறம் ஏன் பாதிரியார் தமிழ் நேசன் அவற்றைத் தமிழ் பண்டிகைகள் என்று கூறுகிறார்?

    பதில் அவருடைய கட்டுரையிலேயே இருக்கிறது. பாதிரியார் தமிழ் நேசன், “பாதிரியார் தனிநாயகம் தமிழ் கலாசாரத்தின் கத்தோலிக்கத் தூதுவராக சர்வதேச அரங்கில் திறம்படப் பணிபுரிந்தார்” என்று சொல்கிறார். உண்மையிலேயே தமிழர்களின் பலவிதமானப் பண்டிகைகளும் ஆங்காங்கே கொண்டாடப்பட்டு தமிழர்கள் தங்கள் பண்பாடு மிளிர வாழ்ந்து வரும் பட்சத்தில், அவற்றிற்குப் பெரிதும் பாடுபட்டவர் என்ற முறையில், தமிழ்ஹிந்து கலாசாரத்தின் கத்தோலிக்கத் தூதுவராக பாதிரியார் தனிநாயகம் திகழ்ந்தார் என்று கூறுவது தானே? அவ்வாறு சொல்வது மிகவும் பெருமை தரக்கூடியது அல்லவா? அன்றி தமிழ் கலாசாரம் என்று சொல்வது எதனால்? ஹிந்து என்கிற அடையாளத்திலிருந்து தமிழர்களைப் பிரித்துத் தனிமைப்படுத்தத்தானே? ஹிந்து கலாசாரம் என்று சொல்வதற்கு விருப்பமில்லையென்றால் இந்திய கலாசாரம் என்று சொல்வது தானே? அப்படிக் கூறினால் தமிழ் என்ற அடையாளம் இருக்காது, தமிழ் அடையாளம் கொடுத்து ஹிந்து அடையாளத்தை அழிக்க முடியாது, தமிழ் மொழியைக் கிறுத்துவத்துடன் இணைக்க முடியாது, தமிழ் கிருத்துவ தேசம் அமைக்கும் அடிப்படை நோக்கமே அடிபட்டுப்போகும், என்பது தானே உண்மை? அதற்காகத்தான் அனைத்து கிறுத்துவ மிஷினரிகளும் தமிழ் மொழிப்பற்றளர்களாகவும், தமிழ் இலக்கியக் காவலர்களாக்வும், தமிழ் பண்பாட்டின் பாதுகாப்பாளர்களாக்வும் முன்நிறுத்தப்பட்டார்கள் என்பது நிதர்சனம்.

    கட்டுரையில் பாதிரியார் தமிழ் நேசன் அவர்கள் ஒரு ஒப்புதல் அறிக்கையே வாசிக்கிறார்:

    “...பாதிரியார் தனிநாயகம் தமிழ் மொழி மீது பற்றும் ஆர்வமும் கொண்ட இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த இறை தூதன் (Zealous Apostle)...இறைவன் தனக்குக் கொடுத்துள்ள மொழி மற்றும் இலக்கியத் திறமைகளைப் பற்றிய தன்னுணர்வோடு இருந்ததோடு மட்டுமல்லாமல் இறைச் சேவைக்காக (அறுவடைக்காக) அவற்றைப் பயன்படுத்தவும் (பயிரிடவும்) செய்தார். ஒரு பாதிரியார் என்கிற முறையில், தென்னிந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களைச் சென்றடையும் விதத்தில் தன் அதிகாரச் சபைக்காகத் (better for his ministry) தனக்குத் தேவையான உபகரணமாகத் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் ஆழமாகக் கற்றார்...தமிழ்க்கல்வியை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்ததில் பாதிரியார் தனிநாயகம் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். அவர் தமிழ்கலாசாரத்தைப் பரப்பிய கத்தோலிக்கப் பாதிரியார். கத்தோலிக்கக் கிறுத்துவம் சர்வதேச மதம் என்பதால் அது அவருடைய வாழ்நாள் நோக்கமான தமிழ்க் கல்வியை சர்வதேச அளவில் பரப்புவதற்கு உதவியாக இருந்தது....தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் செழுமையையும் அழகையும் உலகெங்கும் ஒப்புக்கொள்வதற்கான தன்னுடைய அனைத்து நடவடிக்கைகளுக்கு இடையேயும், அவர் எப்போதும் இறைவனிடம் விசுவாசம் மிக்க பாதிரியாராகவே திகழ்ந்தார்.”

    லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சி.ஆர்.பாக்ஸர் என்பவர், “சரியான கருத்துப்படி, பாதிரியார் தனிநாயகம் நான்கு கண்டங்களிலும் ஏழு கடல்களிலும் விரிவான பயணங்கள் மேற்கொண்டவர் என்பதாலும், புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதிய கருத்துக்கள் ஆகியவற்றிற்கு அவர் எப்போதும் வரவேற்பு அளித்தவர் என்பதாலும், அவரை “உலக்க் குடிமகன்” என்று சொல்ல்லாம்” என்று கூறியதையும் தமிழ் நேசன் மேற்கோளாகக் காண்பிக்கிறார்.

    தமிழ் அறிஞர்களில் ஒரு பிரிவினர் பாதிரியார் தனிநாயகம் தமிழுக்கு ஆற்றிய “பங்கு” பற்றி நம்பிக்கை ஏற்படாமல் உள்ளனர். அவர்கள், “மதிப்பும் தரமும் மிக்க சஞ்சிகைகளில் பிரசுரிக்கத் தக்கவாறோ, சக அறிஞர்களும் தர்கரீதியான கல்வியாளர்களும் கூர்ந்து ஆராய்ந்து விமரிசனம் செய்யத்தக்க அளவிலோ அவர் ஏன் தமிழ் பங்காற்றவில்லை?” என்று கேட்கின்றனர். மேலும், ”தமிழ் ஆரய்ச்சிக்கான சர்வதேசச் சங்கம் நிறுவியதிலும், அதைத் திறம்பட நிர்வகித்ததிலும் அவருடைய பங்கு மிகவும் பாராட்டத் தக்கது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அச்சங்கத்தின் வளர்ச்சியிலும், வெற்றியிலும் மற்ற அறிஞர்களின் பெரும்பங்கும் உள்ளது என்பதை மறுக்க முடியாது. அந்தப் புகழ் ஒருவரை மட்டும் சார்ந்த்தல்ல” என்று கூறுகின்றனர்

    இதையே, பின்வரும் காலத்திற்கும் வருங்காலத் தலைமுறையினருக்கும் பேருதவியாக சங்க இலக்கியங்களைத் தேடிக் கண்டு பிடித்து ஒருங்கிணைத்து அவற்றை அச்சிட்டு வெளிக்கொணர்ந்த உ.வெ.சாமிநாத ஐயர் அவர்களின் சேவையுடனோ, அல்லது நவீன அச்சகங்களை முதன் முதலில் பயன்படுத்தி சங்க இலக்கியங்களை அச்சிட்ட ஆறுமுக நவலரின் சேவையுடனோ ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அவசியம்.

    சிறந்த தமிழ் அறிஞர்களுள் ஒருவரான வையாபுரிப் பிள்ளையைப் பொறுத்தவரை, இலக்கணம், சொற்கள் மற்றும் பிற இலக்கியக் குறிப்புகள் முதலியவற்றை கூர்ந்து மதிப்பிட்டு தமிழ் இலக்கியங்களின் காலத்தைக் கணித்த ஒரே அறிஞராகத் திகழ்ந்தார் என்றால் அது மிகையாகாது. தமிழ் இலக்கியங்களின் காலங்களைப் பற்றிய அவருடைய கணிப்புகள், கிறுத்துவ மிஷனரிகளால் ஒத்துழைப்பும் ஆதரவும் தரப்பட்ட திராவிட இனவாதிகளின் மிகைப் படுத்தல்களைத் தகர்த்துள்ளன என்பதில் ஐயமில்லை.

    முடிவுரை

    ராபர்ட்-டி-நொபிலி முதல் ராபர்ட் கால்டுவெல் வரையிலான கிறுத்துவ மிஷனரிகளும், தனிநாயகம் போன்ற பாதிரிமார்களும், தெய்வநாயகம் போன்ற எவாங்கலிக்கர்களும், தமிழ் மொழியைக் கடத்தி, அதன் ஹிந்து அடையாளத்தை அழித்து, தமிழ் மண்ணின் கலாசரத்தை ஒழித்து, தமிழ் மக்களை கிறுத்துவர்களாக மதம் மாற்றி, இறுதியாகத் தமிழகம் மற்றும் வட-கிழக்கு இலங்கை சேர்ந்த ஒரு தமிழ் கிறுத்துவ தேசத்தை ஸ்தாபிப்பது ஒன்றையே குறிக்கோளாக்க் கொண்டு இயங்கினர், இயங்கி வருகின்றனர்.

    பண்பாட்டுப் பெருமையும், மொழியுணர்வும், தேசப்பற்றும் இல்லாத திராவிட இனவாத இயக்கங்கள் கிறுத்துவ நிறுவனங்களுடன் சேர்ந்து கொண்டு தமிழ்ப் பகுதிகளைத் தேசிய நீரோட்டத்திலிருந்து விரோதப்படுத்தி வருகின்றன. தீய சக்திகளின் இந்தச் செயல்பாடுகள் தோற்கடிக்கப்படவேண்டியது அவசியமாகும். தமிழகம் மற்றும் இலங்கையில் தற்போது உள்ள அரசியல் நிலவரம் ஊக்கமளிப்பதாக இல்லை. அரசியல் கட்சிகளும் நம்பகத்தன்மைச் சிறிதும் இல்லாதவையாக இருக்கின்றன. இந்நிலையில், தமிழகம் மற்றும் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் வசம் தான் பொறுப்பும் கடமையும் இருக்கிறது. அவர்கள் தங்களின் ஹிந்து அடையாளத்தை மீண்டும் நிறுவவேண்டும். பண்பாட்டுப் பெருமை, மொழியுணர்வு, தேசப் பற்று ஆகிய குணங்களுடன் தீவிர விடா முயற்சியுடன் தங்களுடைய ஹிந்துத்தன்மையை நிலைநிறுத்த வேண்டும். தங்களின் மொழி, இசை, கலை மற்றும் சிற்ப சாஸ்திரங்கள் அனைத்தும், சிந்து சரஸ்வதி நதி தீரங்களில் வளர்ந்த வேத நாகரிகத்தின் வழியில் பாரம்பரியமாக வந்த ஹிந்து கலாசாரத்தைச் சேர்ந்தவை தான் என்பதையும் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    தமிழ் அடையாளம் என்பது ஹிந்து என்கிற விசாலமான அடையாளத்துடன் தொடர்பு கொண்டது. இந்தத் தொடர்பை நாம் கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், கோவில்கள், சிற்பக்கலை, பண்டைய இலக்கியங்கள், அரசியல், கடல்கடந்த வாணிபம் ஆகியவற்றில் காணலாம். சங்க இலக்கியங்கள் தெளிவாக, விளக்கமாக ஹிந்து விஷயங்களைப் பேசாமல் இருக்கலாம். ஆனால் அவை மதப் பழக்க வழக்கங்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம், மாயோன் அல்லது விஷ்ணு, சேயோன் அல்லது முருகன், கொற்றவை அல்லது துர்கை, வேந்தன் அல்லது இந்திரன், வருணன் ஆகிய தெய்வங்களின் வழிபாடுகள் போன்ற ஹிந்து மதத் தொடர்புகளைக் கண்டுணரலம்.

    சங்க காலத்தைத் தொடர்ந்து இயற்றப்பட்ட இலக்கியங்களான திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை மேலும் விரிவான ஹிந்துத் தத்துவங்களுடன் மிளிர்கின்றன. அவற்றைத் தொடர்ந்து வந்த பக்தி கலாசாரக் காலங்களில் தேவாரம், திவ்யப்பிரபந்தம் போன்ற இலக்கியங்கள் தமிழ் சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சியையும், தமிழகத்தின் அரசியலையும் பலப்படுத்தி அதன் மூலம் கடல் கடந்த வாணிபத்தையும், தமிழகத்தின் மொத்த அபிவிருத்தியையும் உறுதி செய்தன. அந்தக் காலக் கட்டத்தில் வேளாண்மையும், நீர்பாசனமும் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்தன. தமிழ் மொழியின் தோற்றமும், வளர்ச்சியும் வரலாற்று நெடுகிலும் விசாலமான ஹிந்து உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது.

    இந்த உண்மை தான், தாய்லாந்து மன்னனின் முடிசூட்டு விழாவின் போது ஏன் திருவாசகம் பாடப்படுகிறது... பாரம்பரியமாக சித்திரை (ஏப்ரல்) மாதம் கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டுப் பண்டிகை காம்போஜத்திலும், பர்மாவிலும் கூட அதே சமயத்தில் ஏன் கொண்டாடப்படுகிறது... இந்தோனேசியாவின் இந்துமத சிற்ப இயலில் ஏன் தமிழின் பாதிப்பு இருக்கிறது... போன்ற கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் அளிக்கிறது. இந்த ஹிந்து அடையாளம் நியூஜிலாந்தைக்கூட இணைத்துள்ளது! நியூஜிலாந்தின் பழங்குடி மக்களான மாவோரிக்கள் வில்லியம் கொலென்ஸோ என்கிற பிராடெஸ்டண்டு மிஷனரிக்கு (1836) அன்பளிப்பாக்க் கொடுத்த ஆலய மணியில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. (Ref: -http://www.tepapa.govt.nz/ResearchAtTePapa/FAQs/Pages/History.aspx#tamilbell )

    தமிழ் என்பது ஹிந்து; தமிழ் கலாசாரம் ஹிந்து கலாசரம்; தமிழ் பண்பாடு ஹிந்து பண்பாடு; தமிழ் பாரம்பரியம் சிந்து சரஸ்வதி நதி தீரங்களில் தோன்றி வளர்ந்த வேத நாகரிகத்தின் தொடர்ச்சியே



    __________________


    Guru

    Status: Offline
    Posts: 7329
    Date:
    Permalink  
     

     கால்டுவெல்லின் தாயாதிகள்

    ஒருநாள் தியாகராச செட்டியாரை நாடி ஓர் ஐரோப்பியர் உறையூருக்கு ஒரு வண்டியில் வந்தார். இவருடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வந்து இறங்கினார். அவர் வந்து இறங்குவதைக் கண்ட தெருவார் பலர் கூட்டமாகக் கூடி விட்டனர்…

    அப்போதுதான் செட்டியர் சிவபூசையை முடித்து உணவுண்டு கையில் ஒரு விசிறியுடன் வந்து புறத்திண்ணையில் அமர்ந்திருந்தார்; முழங்கால் வரையிலுள்ள ஒரு துண்டு மாத்திரம் இடையில் இருந்தது…

    செட்டியார் துரையை வரவேற்றார்.

    “தங்களை நான் தெரிந்து கொள்ளவில்லையே, காலேஜ் பிரின்ஸிபாலாக இருந்த துரை யாரேனும் அனுப்பினார்களா?” என்று கேட்டார் செட்டியார்.

    “இல்லை; நானேதான் தங்களைத் தேடி வந்தேன்; மதுரையிலிருந்து வருகிறேன். தமிழ் படித்து வருகிறேன்”.

    அந்தத் துரை குழறித் குழறித் தமிழிலே பேசினார். அந்தப் பேச்சிலிருந்தே அவர் ஒரு பாதிரியாராக இருக்க வேண்டுமென்பதைச் செட்டியார் ஊகித்துக் கொண்டார்.

    “சந்தோஷம். படிக்கப் படிக்க இனிமை தரும் பாஷை தமிழ்” என்றார் இவர்.

    “நான் யாப்பிலக்கணம் படித்தேன். திருக்குறள் படித்தேன். அந்த இலக்கணத்தின்படி குறளைச் சில இடங்களில் திருத்தியிருக்கிறேன். தங்களிடம் காட்ட வந்தேன்”.

    இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் செட்டியார் திடுக்கிட்டார்.

    “என்ன, குறளையா திருத்தினீர்கள்?” என்று படபடப்போடு கேட்டார்.

    “ஆமாம். எதுகை மோனை சில இடங்களில் சரியாக அமையவில்லை…”

    செட்டியாருக்குக் கோபம் மூண்டது.

    “தக்கார் தகவிலார் என்ப தவரவர் எச்சத்தாற் காணப்படும்” என்றிருக்கிறதே; இதில் எதுகை நன்றாக அமையவில்லையே. இரண்டாவது அடியை ‘மக்களாற் காணப்படுமெ’ன்று திருத்தினேன். அந்தத் திருத்தம் எவ்வளவு நேர்த்தியாகப் பொருந்துகிறது பார்த்தீர்களா?”

    அவரை மேலே பேசவொட்டாமல் செய்தது செட்டியாரின் செய்கை. இவர் எழுந்து நின்றார்; தலையிலே அடித்துக் கொண்டார்; காதைப் பொத்திக் கொண்டார். துரை ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் “திருவள்ளுவரைவிடப் புத்திசாலியாகி விட்டீரோ! குறளைத் திருத்த வேண்டுமென்ற இந்த ஞானம் உமக்கு எப்படி ஏற்பட்டது? திருக்குறள் எப்படிப்பட்ட நூல்! உம்முடைய கையில் சிக்கிச் சீர்குலையவா அதைத் திருவள்ளுவர் இயற்றினார்? எச்சத்தாலென்பதை மக்களாலென்று திருத்தினாராம்! எச்சமென்றும் மக்களென்பதும் ஒன்றாகுமா? இந்த வித்தியாசம் தெரியாதவருக்குக் குறளைக் கையிலே தொடுவதற்குக்கூட யோக்கியதை இல்லையே! இந்த மகாபாதகச் செயலைச் செய்தவர் முகத்தில் விழிப்பதே பாவம்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே போய் இவர் கதவை அடைத்துக் கொண்டார்…

    துரை வேறு வழியொன்றும் காணாராய் வந்த வழியே திரும்பச் சென்றார்.

    தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐய்யர்- பக். 520-523 / டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் உரைநடை நூல்கள் / தொகுதி 3.

    ‘தமிழைப் பாதிரியார்கள் தாங்கிப் பிடித்தனர்’ என்ற கருத்து திராவிட இயக்கத்தின் ஆதரவாளர்களால் தொடர்ந்து சொல்லப்படுகிறது. அது முழு உண்மை அல்ல என்பதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்துகிறது.

    முதலில் திருக்குறளைச் திருத்தத் தொடங்கிய கிறித்தவர்கள் இப்போது திருவள்ளுவரையே திருத்தத் துணிந்துவிட்டார்கள். தங்களுடைய மெளடீகத்தை மறைப்பதற்காக கரென்சியால் எடை கட்டுகிறார்கள். கோடிகளைக் கொட்டித் தயாரிக்கப்படும் புனித தாமஸ் திரைப்படத்தில் தாமஸின் சீடராகத் திருவள்ளுவர் தோன்றப் போகிறார்.

    திரைப்படத்துக்கு முன்னோடியாக புத்தகம் ஒன்று வெளிவந்து தமிழ் மண்ணில் நச்சுக் காற்றை வீசிக் கொண்டிருக்கிறது.

    முனைவர் மு. தெய்வநாயகம் என்ற கிறித்தவர் ‘திருக்குறள் கிறித்தவ நூலே’ என்பதை நிறுவிவிட்டதாக சொல்லிக் கொண்டு அலைகிறார். கருணாநிதியின் காரோட்டியைப் பற்றிக்கூட ‘கவர் ஸ்டோரி’ எழுதும் விகடன் குழுமத்தில் தெய்வநாயகத்திற்குக் கெளரவம் தரப்படுகிறது. தமிழகத்திலுள்ள ஆதிக்க சர்ச்சுகளும் தெய்வநாயகத்திற்கு ஆதரவு தருகின்றன. (பார்க்க: சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்).

    சில கிறித்தவர்களால் பேசப்படும் அபத்தங்களையும், நிகழ்த்தப்படும் அபசாரங்களையும் தட்டிக் கேட்பதற்காகத் தமிழ்க் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. கும்பகோணத்தில் உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம் ஒன்று தமிழர்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

    தமிழுக்கும் தமிழருக்கும் இன்று கிறித்தவர்களால் ஏற்பட்டிருக்கும் அபாயங்களை அறிய விரும்புவோர் தமிழ் இந்துவில் வெளிவந்த உலகத் தமிழ்ச் சமயக் கருத்தரங்கம் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

    தெய்வநாயகம் போன்றவர்களுக்குத் திருக்குறள் மீதுள்ள அபிமானம் பற்றி அறிய விரும்புவோர் பட்டடையைப் பற்றிப் பேசும் குறளைப் (821) படித்துப் பார்க்கவும்.

    1917-க்கு முன்பு தமிழகத்துக்கு வந்த பாதிரியார்களின் சொல்லையும், செயலையும் பற்றி இந்தப் பகுதியில் நாம் சிந்திக்கலாம்.

    டச்சுக்காரர்கள் பழவேற்காட்டிலும் (1609), சதுரங்கப் பட்டணத்திலும் (1647), நாகைப்பட்டினத்திலும் (1660) தங்களது வணிக மையங்களைத் தொடங்கினர். ஆங்கிலேயர்கள் மசூலிப்பட்டினத்திலும் (1622), சென்னையிலும் (1639), கடலூரிலும் (1683), கல்கத்தாவிலும் தளம் அமைத்தனர். பிரெஞ்சுக்காரர்களுக்குக் கிடைத்தது (1674) பாண்டிச்சேரி. டேனிஷ்காரர்கள் தரங்கம்பாடியில் (1620) தங்கள் முகாமை ஏற்படுத்தினர்.

    1706-ல் ஸீகன்பால்க் என்ற டேனிஷ் புராட்டஸ்டன்ட் பாதிரி தஞ்சைக்கு அருகில் உள்ள தரங்கம்பாடிக்கு வந்தார். அப்போது தரங்கம்பாடியில் கத்தோலிகர்களுக்கும் புராட்டஸ்டன்டுகளுக்கும் தனித்தனி சர்ச்சுகள் இருந்தன.

    ஸீகன்பால்க் தமிழர்களின் மதங்கள், நடைமுறைகள் பற்றித் தெரிந்து கொள்வதற்காகத் தமிழறிஞர்களுக்குக் கடிதங்கள் எழுதினார். தனக்குக் கிடைத்த பதில்களை ‘Malabarische Correspondence’ (தமிழ்க் கடிதங்கள்) என்ற பெயரில் ஜெர்மானிய மொழியில் வெளியிட்டார்.

    இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் வந்து இறங்கிய போர்ச்சுகீசியர்கள் அந்த இடத்தை ‘மலபார்’ என்றும் அந்த மக்களை ‘மலபாரிகள்’ என்றும் அழைத்தனர். பிறகு கிழக்குக் கடற்கரைக்கு வந்த போதும் இந்தப் பெயரே நீடித்தது. அதாவது மலபாரின் என்றால் தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விவரங்கள் அ.மார்க்ஸ் எழுதிய ‘தமிழில் அச்சுப் பண்பாடு – சீர்திருத்தக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும்’ என்ற நூலில் உள்ளன; வம்சி வெளியீடு.

    கிறித்தவம் குறித்து தமிழர் ஒருவர் எழுதிய பதில் இது:

    “பசுக்களைக் கொன்று தின்னும் வழக்கத்தினால் தமிழ் மக்களாகிய நாங்கள் கிறிஸ்துவர்களை வெறுக்கிறோம். மலம் கழித்தபின் அவர்கள் நீர்கொண்டு சுத்தம் செய்வதில்லை. கடும் போதையுள்ள சாராயம் அருந்துகின்றனர். இறந்தவர்களின் ஆன்மா முக்தியடைவதற்கு ஏற்ப இறப்புச் சடங்குகளை செய்வதில்லை. திருமணங்களை அவர்கள் கொண்டாடுவதில்லை”.

    அன்றைய தமிழர்களின் சமயப்பற்றும் சுகாதார உணர்வும் உறுதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

    தமிழ்ச் சமூகம் குறித்த உயர்வான கருத்துக்களை ஐரோப்பிய கிறித்தவ இறுமாப்பு (Christian Arrogance) அவ்வளவு எளிதாக ஏற்கவில்லை. ஸீகன்பால்க் எழுதிய ‘நீதி வெண்பா’ மொழிபெயர்ப்பு, தமிழ்ச் சமூகம் குறித்த நூல்கள் எல்லாம் வெளியிடப்படாமல் ஆவணக் காப்பகங்களில் முடக்கப்பட்டன. ‘இந்தியாவில் அஞ்ஞானத்தை அழித்தொழிப்பதற்காகத்தான் மிஷனரிகளை அனுப்பி வைத்தோம். இந்த அபத்தங்களை ஐரோப்பா முழுவதும் பரப்புவதற்கு அல்ல’ என்றார்கள் அவர்கள்.

    ஸீகன்பால்கும் அந்த இறுமாப்பைக் காட்ட வந்தவர்தான். அவர் நடந்த வழியில் தென்பட்ட அம்மன் கோவிலின் வெளிப்புறம் இருந்த சிலை வடிவங்களைத் தான் உடைத்தது பற்றி அவரே எழுதியுள்ளார்.

    ஆட்சி நம்முடையது என்ற ஆணவம்தான் இதற்கு அடிப்படை. கிறித்தவர்களைப் பொறுத்தவரை முடிந்தால் ஆட்சி செய்வார்கள்; இல்லாவிட்டால் ஆட்சியில் இருப்பவர்களை ஆதரித்து விடுவார்கள்.

    இதை நான் சொல்லவில்லை. மூத்த அரசியல்வாதியும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவருமான ஜோதிபாசு சொன்னது இது.

    முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதிபாசுவுக்கு கல்கத்தாவைச் சேர்ந்த கிறித்தவர்கள் பாராட்டுக் கூட்டம் நடத்தினர். அந்த விழாவில் பேசிய ஜோதிபாசு கிறித்தவர்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றித் தான் கவலைப்படுவதில்லை என்றார். அவர்கள் எப்போதும் ஆட்சியில் இருப்பவர்களைத்தான் ஆதரிப்பார்கள் என்றார் அவர்.

    வெளிநாட்டிலிருந்து வரும் பாதிரிமார்களைப் பற்றி இன்னொரு தகவலையும் சொல்ல விரும்புகிறேன்.

    சுதந்திர இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அரசுப் பயணமாக ஸ்வீடன் நாட்டிற்குச் சென்றார். ஸ்வீடன் நாட்டு அரசர் நேருவுக்கு விருந்தளித்தார். ‘ஸ்வீடனைச் சேர்ந்த பாதிரிமார்கள் 300 பேர் இந்தியாவில் இருப்பதாகவும், இந்திய அரசின் விதிமுறைகள் அந்தப் பாதிரிமார்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும்’ அரசர் நேருவிடம் தெரிவித்தார். ‘இந்தியாவிலிருந்து 1000 துறவிகளை அனுப்பினால் ஸ்வீடன் ஏற்றுக் கொள்ளுமா?’ என்று கேட்டார் நேரு. ‘இது இந்தியாவின் அரசியல் சம்பந்தப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள பாதிரியார்கள் 5700 பேர் இந்தியாவில் இருக்கின்றனர். இது போதும். இந்தியக் கிறிஸ்தவர்களே இந்தியாவில் சமயப்பணி செய்து கொள்ளலாம்’ என்றார் நேரு.

    நேருவுக்கு இந்து சமயத்தில் பற்றும் இல்லை; பயிற்சியும் இல்லை. அவரை இயக்கியது மேற்கத்திய கலாசாரமும் பொருளாதாரக் கொள்கைகளும்தான். அவருக்கே ‘அந்நியப் பாதிரிகளின் நடவடிக்கைகள் அதீதம்’ என்று தெரியும்போது சராசரிக் குடிமகன் நிச்சயமாகப் பாதிக்கப்படுகிறான் என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும்.

    புதுச்சேரியில் வாழ்ந்த (1709-1761) ஆனந்தரெங்கம் பிள்ளை எழுதிய நாட்குறிப்பில் ஆதிபுரீஸ்வரர் ஆலயத்தை கிறிஸ்தவர்கள் இடித்தது பற்றி விவரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் படித்துப் பார்க்கலாம். ஆனால் அந்தக் கொடுமையைப் படித்த பிறகு உங்கள் ரத்தத்தின் கொதிநிலை உயர்ந்தால் அதற்கு நான் காரணமல்ல.

    பிரான்சு நாட்டைச் சேர்ந்த ழான் வெனான் பூஷே (Jean Venant Bouchet, 1655-1732) என்ற பாதிரியார் தென் இந்தியாவில் 40 வருடங்கள் சமயப் பிரசாரம் செய்தார். 1689ல் பாண்டிச்சேரிக்கு வந்த இவர் 1702 க்குள் 20,000 பேரை மதம் மாற்றியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராமேஸ்வரத்தைப் பற்றி இவர் எழுதியுள்ளதைப் பார்ப்போம்:

    காசியைவிட ரமணன்கோரைப் பற்றி என்னால் விவரமாகச் சொல்ல முடியும். இதை இந்தியர்கள் ராமேஸ்வரம் என்று அழைக்கின்றனர். ஆலயம் இருக்கும் தீவில் நான் பத்து நாட்கள் தங்கி இருந்தேன். இந்தத் தீவைப் பற்றி பல கதைகள் உள்ளன. அழகான மரங்கள் சூழ்ந்திருக்க, ஆலயம் தெற்குப் பகுதிக் கடற்கரையில் உள்ளது. பெருமையாகச் சொல்லப்படும் 300 கல்தூண்களை நான் பார்க்கவில்லை. இங்கே கடலில் குளிப்பதால் பாவங்கள் நீக்கப்படுகின்றன என்று இந்துக்கள் நம்புகிறார்கள், அதிலும் சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் ஏற்படும்போது நீராடுவது மிகவும் விசேஷமானது என்ற நம்பிக்கை இருக்கிறது.

    பிசாசைக் கும்பிடுவதற்காக இத்தனை பேர் வருகிறார்களே என்று நான் வருத்தப்பட்டேன். ஆனால் இறைவன் ஒரு சிலரைத் தேர்ந்தெடுக்கிறான். அருகே உள்ள ஒரு கிராமத்தில் சர்ச் இருக்கிறது. அங்கே குழந்தைகளுக்கு நான் ஞானஸ்நானம் செய்வித்தேன்.

    -பக். 19, 20 / Fr. Bouchet’s India / Francis X.doony / Satya Nilayam Publications.

    ஸ்ரீரங்கம் தீவிலும் ஒரு சர்ச் ஏற்படுத்த பூஷே (Bouchet, 1700) முயற்சி செய்திருக்கிறார். பெருமாள் கோவிலுக்கு அருகே கட்டப்பட்ட சர்ச்சுக்கு இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் கிறித்தவர்களை வெளியேறச் சொன்னபோது, கிறித்தவர்கள் உள்ளூர் கோர்ட்டில் தடையுத்தரவு வாங்கி விடுகின்றனர். முடிவில், சர்ச்சில் விநாயகர் சிலை வைக்கப்படுகிறது. கிறித்தவர்களே சர்ச்சை இடித்துவிட்டு வெளியேறி விடுகிறார்கள்.

     

    திராவிடப் புளுகை விதைத்த கால்டுவெல்

    திராவிடப் புளுகை விதைத்த கால்டுவெல்

    ஒரு பக்கம் நேரடியான நடவடிக்கையில் கிறித்தவப் பாதிரியார்கள் இறங்கியபோது, இன்னொரு பக்கம் கிறித்தவத்தை முன்னிலைப்படுத்தாமல் இந்துக்களைப் பிளவுபடுத்தும் முயற்சி தொடங்கியது. இந்துக்களை மதமாற்றம் செய்தவர்கள் அனைவரும் கால்டுவெல்லின் தாயாதிகள். மற்றவர்கள் கூரையையும் சுவர்களையும் அசைக்க முயன்றபோது பிஷப் கால்டுவெல் அஸ்திவாரத்தில் கண் வைத்தார்.

     

    இந்திய தேசிய ஒற்றுமைக்கு எதிராக ‘திராவிடம்’ என்ற சொல்லை பிஷப் கால்டுவெல் தூக்கிப் பிடித்தார். மொழிப்பற்று காரணமாக கால்டுவெல் தமிழகத்தில் சிறப்பிக்கப்படுகிறார். இருந்தாலும் அவருடைய நோக்கங்களை ஆராய வேண்டும்.

    இது தொடர்பாக கணையாழி, ஏப்ரல் 1997 இதழில் முனைவர் க. முத்தையா எழுதிய ‘கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் அரசியல் பின்னணி’ என்ற கட்டுரையிலிருந்து சில பகுதிகளைக் கொடுக்கிறேன் (பக். 58/66):

    பிரதேச வாதத்தை முக்கியப்படுத்தும் முயற்சியில் கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்) எட்கர் தஸ்டன் (தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்) கில்பர்ட் ஸ்லேட்டர் (இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு) ஆகியோர் இறங்கினர். இவர்களின் பிரதேச வாதத்திற்குத் தனியான அரசியற் காரணங்களும் உண்டு…
    கால்டுவெல்லின் ஒப்பியல் அறிவு திராவிட மொழி ஆய்வுகளில் சில அரசியல் உள்நோக்கத்தோடே பயன்படுத்தப்பட்டுள்ளது…

    அவர் வருகையின் நோக்கம் தென்னிந்திய மக்களை எப்படியாகிலும் சமய மாற்றம் செய்து அவர்களைக் கிறித்தவர்களாக்குவதேயாகும். அவருக்கு இடப்பட்ட சமயப் பணியில் வெற்றியும் கண்டார். தாம் இடையான்குடி கிராமம் வருவதற்கு முன்னர் ஆறாயிரமாக இருந்த திருநெல்வேலி கோட்டக் கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்ட காலத்தில் ஒரு இலட்சமாக்கிய பெருமை அவரையே சாரும்….

    அவர் ஆய்வை ஊன்றிப் படிக்கும்போது தமிழின் தொன்மையை நிறுவுவதைவிட, தமிழர்களின் தனித்தன்மையை விளக்குவதைவிட சமஸ்கிருத வெறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு இந்துமத இகழ்ச்சி ஆகியனவற்றை விளக்குவதே தம் ஆய்வின் நோக்கமாகக் கொண்டுள்ளார். இதை வெளிப்படையாகச் சொல்லாமல் தம் ஆய்வில் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்…

    இந்து சமயம், சமஸ்கிருதம் ஆகியவற்றின் மீது மாற்று எணணங்கள் மக்கள் மனதில் உருவாக்காதவரை தமிழர்களிடம் கிறித்தவத்தைப் பரப்ப இயலாது என்பதை நன்குணர்ந்த கால்டுவெல் வடவர் மீதான மாற்று எண்ணங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

    இம் முயற்சியின் முதற்கட்டப் பணியாகத் ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கோட்பாட்டை உருவாக்குகிறார். அவருக்கு முன்பாகத் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைக் கூட்டாகக் குறிக்கும் பொதுச் சொல்லாகத் திராவிடம் என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.

    கால்டுவெல்லுக்கு முன் டி. நொபிலி இம்மொழிகளைத் தென்னிந்திய மொழிகள் என்று குறிப்பிட்டுள்ளார். ‘திராவிடம்’ என்ற சொல்லாட்சி இல்லை. கால்டுவெல் செய்த மிகப்பெரும் தவறு மொழியையும் இனத்தையும் சமமாக்கிவிட்டதுதான். இணக்கமான மொழிகளின் அடிப்படையில் இனங்களை வரையறுப்பது வரலாற்று விதிகளுக்கு முரணானது.

    கால்டுவெல் வகையறாவைப் பற்றி விளங்கிக் கொள்ள அராபியப் பழங்கதை ஒன்றை சொல்கிறேன்.

    பாலைவனக் குளிரில் சிக்காமல் பாதுகாப்பாகக் கூடாரத்தில் இருந்துதான் அந்த அராபியன். தனக்குக் கிடைத்த வசதிக்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டான் அவன். பிறகு தூங்கிப் போனான். நடு இரவில் தூக்கம் கலைந்து பார்த்தபோது, கூடாரத்திற்கு வெளியே கட்டப்பட்டிருந்த ஒட்டகம் உள்ளே மூக்கை நுழைத்திருப்பதை அவன் கண்டான். ‘அடடா, ஒட்டகத்திற்குக் குளிர் தாங்கவில்லை’ என்று பரிதாபப்பட்டு, தன் கால்களை மடக்கிக் கொண்டு ஒட்டகத்தின் முகம் உள்ளே வருவதற்கு இடம் கொடுத்தான். மீண்டும் தூக்கம்.

    தூக்கத்தில் அவன் ஆழ்ந்திருந்தபோது, முகத்தில் தொடங்கி, கழுத்து, உடல், கால்கள் என்று எல்லாவற்றையும் உள்ளே கொண்டு வந்துவிட்டது ஒட்டகம், அடிக்கடி புரண்டு படுத்த அராபியன் மெதுவாக வெளியேற்றப்பட்டான்.

    குளிர்காற்று தாக்கியபோது கண்விழித்த அராபியன் ஒட்டகம் உள்ளே இருப்பதைக் கண்டான்; ‘இறைவா, இது நியாயமா’ என்று கேட்டான். இவனுடைய இயலாமைக்கு இறைவன் என்ன செய்ய முடியும் என்பதாகக் கதை முடியும்.

    கால்டுவெல் தொடங்கிவைத்த கருத்தாக்கம்தான் ஒட்டகம், தமிழ்ச் சமூகம்தான் அராபியன். இரவு முடிவதற்குள் ஒட்டகத்தை அதன் இருப்பிடத்திற்கு அனுப்ப வேண்டும்.

    செய்வீர்களா?

    இடஒதுக்கீடு பற்றி மறுமொழி எழுதியுள்ள நண்பர் அன்பழகனுக்காக ஒரு விளக்கம். இந்தத் தொடரின் காலத்தை 1977 ஆம் ஆண்டு என்ற எல்லையோடு நிறைவு செய்வதாக இருக்கிறேன். அன்பழகன் குறிப்பிடும் ‘மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு’, ‘உள் ஒதுக்கீடு’ ஆகியவை இந்தக் காலவரம்பிற்குள் வராது. இன்னொரு சமயத்தில் இன்னொரு இடத்தில் இதுபற்றிப் பார்க்கலாம்.

    மேற்கோள் மேடை:

    இந்தியாவில் தமது ஆட்சியை வலுப்படுத்தி வந்த ஆங்கில ஆட்சியாளர்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் கடைப்பிடித்த பிரித்தாளும் சூழ்ச்சி ஆரிய–திராவிட முரண்பாடு உருவாகவும் மிகப் பெரிய சமுதாய அரசியல் வடிவம் பெறவும் ஏதுவாய் அமைந்தது.

    – க. கைலாசபதி 



    __________________


    Guru

    Status: Offline
    Posts: 7329
    Date:
    Permalink  
     

    ஆய்வாளர்களில் இருவகையினர் உள்ளனர். முதல் வகையினர் தாம் உண்மையென்று நம்புவதைக் கூறுவோர், தாம் கூறுவனவற்றை நம்புவோர். இரண்டாமவர் தாம் கூறுவது உண்மையல்ல என்று தெரிந்தும் துணிந்து பொய் கூறுபவர். இந்த இரண்டாம் வகையிலும் இரு வகையினர் உள்ளனர். முதல் வகையினர் தாங்கள் கூறும் பொய்யை எதிராளி எளிதில் பொய்யென்று இனம் காண முடியாமல் சொல்லும் திறனாளர்கள், இரண்டாம் வகையினர் பொருந்தப் பொய் கூறக் கூடத் திறனற்றவர்கள்.



    __________________


    Guru

    Status: Offline
    Posts: 7329
    Date:
    Permalink  
     

    நாடார் பற்றி கால்டுவெல் -

    ========================

    19ம் நூற்றாண்டில் நாடார்களைக் குறித்து ஆய்வு நடத்தி தமிழுக்கு ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் 1849ல் “திருநெல்வேலி சாணார்கள்” என்ற 77 பக்க ஆங்கில புத்தகத்தை கால்டுவெல் எழுதினார் . இப்புத்தகம் முதலில் கிழக்கிந்திய கம்பனியின் ஆதரவுடனும், பின்னர் 1850ஆம் ஆண்டு Society for the Propagation of Christian Knowledge என்ற அமைப்பின் மூலம் லண்டனில் வெளியிடப்பட்டது.தற்போதும் சென்னை கன்னிமாரா நூலகத்தில் இந்த புத்தகம் உள்ளது, இதில் சாணார்கள் பிறப்பிலே பழங்குடியினர் என்கிறார். மேலும், சாணார் சமூகத்தவர்கள் இலங்கையை யில் உள்ள “சாண்டார்” சமூகத்தவர் என்றும் இலங்கையிலிருந்து பனையேறிப் பிழைப்பதற்காக தமிழகம் வந்தவர்கள் என்றும், சாணார்களுக்கு பனை ஏறுதலும், கருப்பட்டி தயாரித்தலும் மட்டுமே குல தொழில்.இங்கு சாண்டார்கள் சானாரர்களாக மருவியதாகவும் சொல்கிறார், மேலும் இந்து சமயத்தின் மிக தாழ்ந்த மக்களாக மாற்று சமூகத்தவர் நடத்தினார்கள் என்றும், சிறுதெய்வ வழிபாட்டினையே பின்பற்றி வருகிறார்கள் என்றும் கூறுகிறார். தமிழுக்கு ஒப்பிலக்கணம் எழுதி தொண்டாற்றிய இவருக்கு தமிழகத்தில் சாணர்கள் சங்கம் மட்டும் தான் எதிர்கிறார்கள், அவருக்கு தமிழக அரசு நெல்லை இளையான்குடியில் சிலை வைத்துள்ளது,கால்டுவெல் சொல்லிய வரலாறை மறைக்க போராடும் சில போராளிகள் – https://www.facebook.com/nadar007/posts/333069573568527:0

     

    https://thedalveli.wordpress.com/2011/05/26/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-19-20-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D/

     

    http://www.tamilchrist.ch/zero/index.php?option=com_content&view=article&id=294&catid=30

    .

    தலித் மக்கள் போன்றே தீண்டாமை கொடுமையை அனுபவித்த நாடார்கள் தமிழகம் மற்றும் திருவிதாங்கூர் போராட்ட வரலாறு -

    ==============================================

    முன்னளைய திருவிதாங்கூர் (Travancore) நாட்டின் பகுதியாக இருந்த இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் சாதிக் கொடுமை இருந்தது.பனையேறும் தொழிலைச் செய்து வந்த பனையேறி நாடார் சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தோளுக்கு மேல் குறுக்காக மேல் ஆடை அணிய அனுமதிக்கப்படவில்லை. இதற்கு எதிரான போராட்டமே தோள்சீலைப் போராட்டம் எனப்பட்டது. திருவிதாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815–1829) “பனையேறி நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது” என்று பிரகடனம் செய்தார். இதனால் பல இடங்களில் புதிதாக கலகம் மூண்டது. அரசு ஆணையை எதிர்த்து நாடார்கள் போராடத் தொடங்கினர். சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்தப் போராட்டம் 1859 ஆம் ஆண்டில் உச்சக்கட்டத்தை எட்டியது. நெய்யாற்றின் கரை, நெய்யூர், கோட்டாறு போன்ற இடங்களில் மோதல்கள் நிகழ்ந்தன. சென்னை மாகாண கவர்னர் தலையிட்டதைத் தொடர்ந்து, திருவிதாங்கூர் மகாராஜா, பனையேறி நாடார் பெண்கள் மேலாடை அணியலாம் என்று 1859, ஜுலை மாதம் 26ஆம் நாள் பிரகடனம் செய்தார் (.http://www.tamilsguide.com/katturaidetails.php?gallid=19&tid=10084 )- தமிழகத்தில் பல்வேறு கோவில் முழவு போராட்டங்கள் நடைபெற்றது மதுரை மீனாச்சி அம்மன் ஆலயத்திற்குள் பசும்பொன் தேவர் கடும் எதிர்ப்புகளை மீறி சாணார்கள் மற்றும் தலித் மக்களை அழைத்து சென்றார்,

     

    கண்களில் நீர் வரும் தோல் சீலை கொடுமையான வரலாறு -

    ======================================================

    மார்பகம் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி; பெரிய மார்பகளென்றால் வரி அதிகம். வரி கட்ட முடியாவிட்டால், முலைகள் அறுத்து எறியப் பட்டது. என்ன கொடுமை! உயர் ஜாதியினர் தனக்கு கீழுள்ள ஜாதியில் இருக்கும் பெணகளை எப்போதும், முக்கியமாக அந்தப் பெண்களின் திருமணத்திற்கு முன், புணர பரி பூரண உரிமை பெற்றவர்கள்.சில ஜாதி ஆண்கள் அது தெய்வ பாக்கியம் என்று புணர வைத்தார்கள்…..

    கன்யாகுமரியில் மேலாடையில்லா கீழ் சாதி குமரிப்பெண்ணும் சீலை ரவிக்கையுடன் மேல் சாதிப் பெண்ணும் சந்தையில். கீழ் சாதி ஆண்களும் சட்டை போடத் தடை! 18 ஜாதியில் பிறந்ததைத் தவிர இந்த பெண்கள் என்ன பாவம் செய்தார்கள்? இந்த அவலம் வீட்டிற்குள்ளேயே; அப்போ வெளியில்?

    இவ்வளவு பெரிய அயோகித்தனத்தை, கடவுள் பேரை சொல்லி செய்தார்கள் பாதகர்கள்,என்று இந்த பக்கம் சொல்கிறது

    - See more at: http://www.tamilsguide.com/katturaidetails.php?gallid=19&tid=10084#sthash.3tczC5NE.dpuf

     

    சானார் என்பதில் இருந்து நாடார் என பெயர் மாற்றம் -

    ================================================

    முக்குளத்தில் இன்றும் வழக்கில் உள்ள நாட்டார்,நாடாள்வார் பட்டத்தை ..போன்று .சானார் என்ற பெயரை நாடார் பெயர் மற்றம் செய்தனர், ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கிலும், ஆங்கிலேயரின் பிற ஆவணங்களிலும் நாடார் சமுதாயத்தினர் சாணார் (Shanar/Channar) என்று குறிக்கப்பட்டுள்ளனர்.சாணார் என்ற வழக்கு இழிவாகக் கருதப்பட்டதால் நாடார் என்ற பட்டத்தையே சாதிப் பட்டமாகவும் சாதிப் பெயராக மாற்றி இச்சாதியினரின் அனைத்துப் பிரிவினரும் பயன்படுத்தத் தொடங்கினர்,

    என்பதை மற்றும் ஒரு வரலாற்று ஆய்வாளர் பீட்டர் ராப் ஹிஸ்டரி ஆப் இந்தியா என்றபுத்தகத்தில் குறிபிட்டுள்ளார், (பக்கம் இணைக்கப்பட்டுள்ளது)

     

    CBSE பாடப்புத்தகத்தில் நாடார்கள் தீண்டாமை வரலாறு -

    =================================================

    CBSE பாடப்புத்தகத்தில் நாடார்கள் தீண்டாமை வரலாறு உள்ளது அதை நீக்க சொல்லி மக்கள் முதல்ரிடம் கோரிக்கையை நாடார் ஜாதி சங்ககளின் ஊடாக வைக்கப்பட்டது, ஜெயா அப்படியே மதிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார்…மதிய அரசின் CBSE பாடத்திட்டம் வழுவான வரலாற்று ஆதாரங்கள் வழியே அமைய பெறுவது ..உங்களிடம் ஆதாரம் இருந்தால் ஏன் நீதிமன்றம் செல்லவில்லை..என்றும் தகுந்த ஆதாரம் இல்லாமல் வரலாறுகளில் மாறுதல்களை உண்டுபண்ணமுடியாது என்று கண்டித்து பதில் அனுப்பினார்கள்,..(இதை தான் நான் சொல்ல வருகிறேன் )

     

    நான் நாடார் சமூக இளைன்கர்கள் தங்கள் உண்மையான போராட்ட வரலாறுகளை தெரிந்துகொள்ளவேண்டும்,அதை மறைத்து புலி சிங்கம் சத்திரிய படம் காட்டி காளி கதைகளை சொல்லி ஜாதி வெறி ஏற்றி விடும் நபர்களுக்கு நீங்கள் பலியாகாதீர்கள் – அனைத்துக்கும் ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது பொறுமையாக படித்து தெளிவு பெறுங்கள்..சுய ஆய்வு செய்து கொள்ளுங்கள்…



    __________________


    Guru

    Status: Offline
    Posts: 7329
    Date:
    Permalink  
     

     

    கால்டுவெல்லின் சாதி மோசடி, அதுவே தமிழனுக்கு தலையிடி..

    கி.பி 1840, 1847-1851 ஆகிய ஆண்டுகளில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் பல இலட்சம் மக்கள் மடிந்ததும், தப்பியவர்களில் பலர் அமெரிக்காவிற்கு குடியேற சென்றதும் சிலர் இந்தியா போன்ற நாடுகளுக்கு மதபோதகர்களாய் வந்ததும் கத்தோலிக்கர்களின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாக அமைந்துள்ளது. கால்டுவெல் 8.1.1838ல் சென்னையில் தனது காலை ஊன்றினார். பின்னர் 28.11.1841ல் நாசரேத் மற்றும் இடையன்குடி வந்து சேர்ந்து தனது வேலையை ஆரம்பித்தார் இவர் தனக்கென வகுத்துக்கொண்ட பணிகளாவன:

    பல கோடி இந்தியரை 10-15 கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் அடக்கி ஆள்வது கர்த்தரின் ஆசீர்வாதத்தால் (devine plan) மட்டுமே சாத்தியமாகி உள்ளது. அதற்கான உதவிகளை தன்னை போன்ற பாதிரியார்கள் வழங்க வேண்டும்.

    தமிழ் மொழியினை, சமஸ்கிருதத்திலிருந்து தனிமைப்படுத்தி, அதற்கான ஒரு சில ஆதாரங்களை தேடி அலைந்து தமிழர்களின் தனித்தன்மையை (?) வெளிக்கொணருதல்.

    பிராமணர்களை தனிமைப்படுத்துவது..

    மறவர், நாயக்கர் சாணார் (நாடார்). தலித் மக்களை இழிவு படுத்தி பேசுதல், எழுதுதல் அவர்களின் பெருமையை சீர்குலைத்தல்.

    நாடார்கள். ஸ்ரீலங்காவிலிருந்து இந்தியாவிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்புவந்து தென்தமிழ் நாட்டில் குடியேறிய “வந்தேறிகள்” என்பது

    பண்டைய தமிழர் சமயம் பூத வழிபாடு முறையை சார்ந்தது. அது இந்து சமயம் (?) அன்று என்பது

    நாடார்கள் (சாணார்கள்) தலைவன் முற்காலத்தில் இராவணனின் தலைமை அமைச்சராக விளங்கினான் எனும் ஆதாரமற்ற வரலாற்றை கண்டுபிடித்து கூறியது.
    மறவர்களின் வீரகுணம், தமிழர்களின் அமைதி வாழ்க்கைக்கு புறம்பானது என்பது (இதன் மூலம் தமிழர்களின் வீரத்தை மடக்கி மிதித்து ஆங்கிலேய கிறிஸ்தவர்களின் ஆட்சிக்கு ஊறு சேராத வண்ணம் பார்த்துக் கொள்வது).

    பிராமணர்கள், வேளாளார்களை சூத்திரர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர் எனும் பொய் தத்துவத்தை வெளிப்படுத்தி பிராமணர் - வேளாளர், வேதாந்தம் - சித்தாந்தம், கசப்புணர்ச்சிக்கு வழிகோல்வது.

    இலங்கையிலுள்ள தமிழர்களை, அவர்கள் தனி திராவிட இனம் எனவும் சிங்களர்களை ஆரியர்கள் எனவும் அறிவித்து அங்கு உள்நாட்டு இனப்போர் பல நூறு ஆண்டுகள் நடைபெற வித்திட்டது.

    பிராமணர்கள் எல்லா இனத்தவரையும், எல்லா வழிபாட்டு மக்களையும் தங்களுடன் சேர்த்துக் கொள்வதையே முழு வேலையாக செய்து வருகின்றனர். இத்தகைய பிராமணர்களின் ஒன்று சேர்க்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும் (R.Caldwell-Lectures - பக்கம் 42). அதற்கு தேவையான பிரிவுவாத கருத்துக்களை திரட்டுதல் மற்றும் வெளியிடுதல் செய்யப்படவேண்டும். இதன் விளைவாக எழுந்ததே தமிழகத்தின் திராவிட இயக்கங்கள் - (பார்க்கவும் Nicholas B.Driks, Castes of Mind பக்கம் 143)

    அயர்லாந்தில் புரொட்டாஸ்டன்டு சமயத்தினர் ஆரிய இனத்தையும் (celtic race) சமஸ்கிருதத்தையும் (Gaulic language) நசுக்குவது போன்று இந்தியாவிலும் செய்திட வேண்டும்.
    அயர்லாந்தில் போன்று இந்தியாவிலும் தனி திராவிடநாடு பிரிவினை கோரிக்கையை முறைவிட செய்ய வேண்டும். அதற்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும்.
    ---------------
    நாடார்களை பொருத்தளவில் அவர்கள் அன்றும் இன்றும் மற்றவர்களின் வீட்டு எடுபிடி வேலைகளை செய்வது இல்லை. கால்டுவெல், தனது இருப்பிடத்தில் எடுபிடி வேலைகளை செய்ய நாடார்களை நியமித்தபோது அவர்கள் எதிர்த்து கிளர்ந்தனர்.

    இந்நிகழ்ச்சி அன்னாருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. எனவே அயர்லாந்தில் செல்டிக் மக்களை அவமானபடுத்தியது போன்று இங்கு நாடார்களையும் அவமானப்படுத்த எண்ணினார். அதன் பொருட்டு கால்டுவெல் 1849ம் ஆண்டில் “திருநெல்வேலி சாணார்கள், அவர்களின் மதம் - மனநிலை மற்றும் பழக்க வழக்கங்கள்” (Tinevelly Shanars, a Sketch of Their Religion and Their Moral Condition and Characteristics, as a Caste) எனும் 77 பக்கங்கள் கொண்ட ஓர் சர்ச்சைக்குரிய பிரசுரத்தை ஆங்கில - கிறித்துவ அரசு ஆதரவுடன் ஆங்கிலத்தில் சென்னையில் வெளியிட்டார். அடுத்த ஆண்டில் இது புத்தகவடிவாக லண்டனில் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் இன்றும் சென்னை கன்னிமாரா படிப்பகத்தில் உள்ளது. அப்புத்தகத்தில் கால்டுவெல் வரிக்கு வரி நாடார்களையும், பக்கத்திற்கு பக்கம் பிராமணர்களையும், இந்து சமயத்தையும் இழித்தும், பழித்தும் கூறியுள்ளார்.

    நாடார்களைப் பற்றி என்ன கூறுகின்றார் என பார்க்கலாம்.

    நாடார்களுக்கு (சாணார்களுக்கு) பனை ஏறுதலும், கருப்பட்டி தயாரித்தலும் மட்டுமே தொழில். சிலர் விவசாயிகளாகவும், வியாபாரிகளாகவும் உள்ளனர் (புத்தகத்தின் பக்கம் 4)

    சாணார்கள் - ஸ்ரீலங்காவிலிருந்து தமிழக தென் மாவட்டங்களில் குடியேறிய “வந்தேறிகள்”. அவர்கள் குடியேற வந்தபோது பனங்கொட்டைகளை தமிழகம் முழுவதும் விதைத்தனர். (பக்கம் 4 / பத்தி 3)

    இராவணனுடைய பிரதம மந்திரி மகோதாரா என்பவன் சாணார் குலத்தவன். (இதற்கு ஆதாரம் ஏதும் கால்டுவெல் பாதிரியாரால் கொடுக்கப்படவில்லை). சாணார்கள் ஆடிமாதம் முதல் தேதியை விடுமுறை நாளாகவும், மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாகவும் கொண்டாடுகின்றனர். ஏனென்றால் இதே தேதியில்தான் சீதையை இராவணன் கவர்ந்து சென்றான். இராமனுடைய துயரத்தை சாணார்கள் சந்தோஷமான நாளாக கொண்டாடுகின்றனர் - பக்கம் 28. (இதற்கான சாட்சியங்களை கால்டுவெல்லால் கொடுக்க முடியவில்லை. வெறும் யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது). ஆடி மாத இறுதி கொல்லம் ஆண்டின் கடைசி நாள். இத்தேதியை நாடார்கள் மட்டுமின்றி தென்மாவட்டங்களில் உள்ள மற்ற சமுதாயத்தினரும் “ஆடி இறுதி” என மகிழ்வான நாளாக கொண்டாடுகின்றனர். (கால்டுவெல் ஆடி இறுதி என்பதற்குப் பதிலாக ஆடி முதல் தேதி என தவறாக குறிப்பிட்டுள்ளார்.)

    சாணார்கள், கடவுளுக்கு பயப்படுகிறவர்கள் அல்ல. பொய் சொல்வதற்கு தயங்காதவர்கள். ஏமாற்று வேலையையும், தாழ்வான குணங்களையும் உடையவர்கள், (பக்கம் 33) . இவர்கள் அறிவுபூர்வமானவர்கள் அல்லர். மிகவும் கோழையர்கள் கூட. இவர்கள் நன்றி மறப்பவர்கள். சுயநலவாதிகள், சதிகாரர்கள், ஏமாற்றுக்காரர்கள், வணிக பொருள்களை திருடுபவர்கள், (பக்கம் 38, 39), படிப்பறிவு இல்லாதவர்கள் (பக்கம் 52), நிலப்பிரச்சனைகளிலே காலத்தை கழிப்பவர்கள் (பக்கம் 54).

    சாணார்கள் சோம்பேறிகள், மந்தபுத்தி உடையவா;கள், அவா;களின் குழந்தைகள் அல்லது உறவினா;கள் காலரா நோயால் சாகும் தருவாயில் இருந்தால்கூட. விழித்திருந்து அவர்களுக்கு ஊழியம் செய்யாமல் தூங்கும் தன்மை உடையவர்கள் (பக்கம் 57).

    சாணார்கள் சுய சிந்தனை அற்றவர்கள். சுயமாக சிந்திக்காமல் தங்களுடைய முன்னோர்கள் செய்த / கூறிய செயல்களுக்கே மதிப்பு கொடுப்பவர்கள். தங்களின் வாழ்நாளில் பாதியை சோம்பேறித்தனமாகவே கழிப்பவர்கள். எந்த தொழிலை செய்தாலும் இவர்களுக்கு அதனை பூரணமாக செய்யும் திறமை கிடையாது. கடனில் மூழ்கி இருப்பவர்கள், ஏழைகள் (பக்கம் 58).

    மொத்தத்தில் மேற்கிந்திய தீவிலுள்ள நீக்ரோ அடிமைகளை விட சாணார்கள் அறிவாற்றலிலும், செயல்திறனிலும் தாழ்ந்தவர்கள் (பக்கம் 62) என்றும் எழுதியுள்ளார்;. அத்துடன், திராவிடர்கள் மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்களுக்கு முன்பு இந்தியாவில் குடியேறியவர்கள் (வந்தேறிகள்) என்றும், அவர்களின் இந்திய தமிழ்மொழி யுக்ரயின் (Ukraine) நாட்டு பகுதிகளில் பேசப்படும் ஸ்கைத்திய மொழி குடும்பத்தைச் சார்ந்த (வந்தேறி), மொழியென்றும் அடையாளம் காட்டியுள்ளார். (பார்க்கவும் அன்னாரின் ஒப்பிலக்கண நூல்.)

    கால்டுவெல்லுக்கு மறுப்பு

    இக்காலக்கட்டத்தில், இந்துக்களின் ஒரு பிரிவினர் கால்டுவெல் பாதிரியாரின் பொய் பிரச்சாரத்தை உண்மை என நம்பி, நாடார்களை (சாணார்களை) இழிந்த சாதியினர் எனவும், அவர்களை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது எனவும் தடுத்தனர். இது சம்பந்தமாக வழக்கு ஒன்றும் நாடார்களுக்கு எதிராக ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது (OS நம்பர் 88 of 1872). அவ்வமயம் ஈரோடு மாவட்டம் பாசூர் எனும் ஊரினை தலைமையிடமாகக்கொண்ட மடாதிபதி அய்யாச்சாமி தீட்சிதர் (பிராமணர்) அவர்கள் கால்டுவெல் பாதிரியாரின் பொய் பிரச்சாரத்தை கடுமையாக எதிர்த்தார். அதுமட்டுமின்றி நாடார்கள் ஸ்ரீலங்காவிலிருந்து இங்கு வந்து குடியேறிய “வந்தேறிகள்” அல்ல என்றும், அதற்கு மாறாக அவர்கள் தமிழகத்தை ஆண்ட பாண்டிய குலத்தை சார்ந்தவர்கள், சத்திரியர்கள் எனவும் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். மடாதிபதியின் சாட்சியத்தை அடிப்படையாக கொண்டு ஆலய பிரவேச தடுப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நாடார்கள் வென்றனர்.

    இதுபோன்று தோன்றிய கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆலய பிரவேச வழக்கில் (OS 33/1898) நாடார்களுக்காக தில்லைவாழ் (தீட்சிதர்) அந்தணர்களும், பாசூர் அந்தணர்களும் மதுரை சார்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.. நாடார்களுக்கு எதிராக நீதிமன்றத்தில், கால்டுவெல் அவர்களின் பிரசுரங்கள் முன் வைக்கப்பட்டன. இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி, நாடார்களுக்காக சாட்சியம் கூறிய தீட்சிதர்களையும், பாசூர் அந்தணர்களையும் கடுமையான அவமதிப்பிற்கு உள்ளாக்கினர். (பக்கம் 167-170-தோள் சீலைக்கலகம்). நாடார்கள் தண்டிக்கப்பட்டனர்.

    நாடார்களுக்கு மட்டுமல்லாமல் தொண்டை மண்டல வெள்ளாள கவுண்டர் சமுதாயம் ஆகியவற்றிற்கும். பாசூர் மடாதிபதியும் அவ்வூர் அந்தணர்களும் 18,19,20ம் நூற்றாண்டில் சமுதாய குருவாக பெரும் சேவை ஆற்றியுள்ளனர். (பார்க்கவும் : பொன்தீபங்களின் ‘கொங்க குலகுருக்கள்; கொங்கதேச சாமுத்திர கலாச்சார கேந்திரம் வெளியீடு, ஈரோடு 2009) நாடார்களை பொறுத்த அளவில் அவர்களின் ஆன்மீக, வணிக மற்றும் பொது வாழ்விற்கு இவர்கள் பெரும் துணையாய் விளங்கியுள்ளனர். நாடார்கள் வாழும் கிராமங்களை பாசூர் அந்தணர்களின் குடும்பம் ஒவ்வொன்றும் தனதாக்கி (தத்தெடுத்தும்) 5-10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை அக்கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு வேதாந்த சைவத்தை எடுத்து விளம்பி, சிவ தீட்சை வழங்கி, பூணூல் அணிவித்து, சத்திரியர்கள் என மீண்டும் அறிவித்து தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் வழங்கினார்கள். நாடார்கள் வசிக்கும் ஊர்களுக்குள் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிலையை பல்லக்கில் தூக்கி சென்று (அன்றைய ஆலய பிரவேச தடையை முறியடிக்க) வழிபாடு நடத்திட செய்தனர். அதனில் ஒரு விக்ரகம் இன்றும் சேலம் கருமாபுரம் ஸ்ரீ சிவசுப்பிரமணிய குருக்கள் வசம் சித்தர் கோவிலில் (சேலம்) உள்ளது (பக்கம் 114 - The History of Nadars by S. Sarada Devi).

    சிவதீட்சை பெற்று பூணூல் அணிந்த நாடார்கள் சாதி பெயர் அன்றி சத்திரியர்கள் என பொதுவாக அழைக்கப்பட்டனர். (இதன் காரணமாக பிறந்ததே சத்திரிய வித்தியாசாலைகள்). கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்தமிழகத்தில் சிறு கிராமங்களில் கூட இவ்வாறு பூனூல் அணிந்த நாடார்கள் பலர் காணக்கிடைத்தனர். உதாரணத்திற்கு இக்கட்டுரையின் ஆசிரியரின் தந்தையார்; உமரிக்காடு (உமரிமாநகர்) சாமி நாடார் அவர்களும், அவரது தமையனார்; சத்திரியர் அருணாசல நாடார் அவர்களும் பூணூல் அணிந்திருந்தனர். அதுபோன்று வேதங்களை சமஸ்கிருதத்தில் ஓதவல்ல சிவகாசி நாடார்கள் பலர் இன்றும் உண்டு. (உதாரணம்: சிவகாசி தனபாலன் மோசி குடும்பத்தினர் - ஆண்களும், பெண்களும்). இதன் காரணமாகவே காசிப்பழ நாடார் அவர்கள் 1987ல் எழுதியுள்ள “ உமரிமாநகர் தல வரலாறு” எனும் நூலில் நாடார்களின் குருக்களாக பாசூர் அந்தணர்களை குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் காணலாம். பாசூர் அந்தணர்களின் சேவையைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள விரும்பினால் www.sishri.org, எனும் வலைதளத்திலோ அல்லது விருதுநகர் வன்னியபெருமாள் மகளிர் கல்லூரி சரித்திர பேராசிரியை முனைவர். சாரதாதேவி அவர்களின் நாடார்கள் பற்றிய The History of Nadars எனும் நூலிலோ படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

    “பாம்பையும், பார்ப்பானையும் ஒன்றாக கண்டால் முதலில் பார்ப்பானை அடி” என்ற ஈவேரா பெரியாரின் பார்ப்பன கசப்பு வார்த்தைகளை பாசூர் அந்தணர்கள் பொய் என அதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்துள்ளனர். “பாம்பையும், அன்னிய பாதிரியையும் பார்ப்பனனையும் ஒரு சேர கண்டால் முதலில் உள்ள இரண்டை மட்டுமே அடி” என்பதே உண்மையான கருத்தாகும். இந்த உண்மை இன்று வரை மறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாடார்களை கேவலமாக சித்தரித்த கால்டுவெல் பாதிரியை “திராவிட குருவாக” ஏற்றுள்ள திராவிட அரசியல் இயக்கங்களின் செயல்கள் கண்டிக்கத்தக்கவை. பாதிரிக்கு அவர் வாழ்ந்த இடையன்குடியில் நினைவிடம் அமைத்துள்ள தமிழக அரசின் செயல் நாடார்களை மேலும் புண்படுத்துவதாகவும் உள்ளது.

    கால்டுவெல்லுக்கு எதிர்ப்பு

    சாணார்களைப் பற்றி கால்டுவெல் எழுதிய கருத்துக்கள் அக்காலகட்டத்தில் கிறித்துவ நாடார்கள் மத்தியிலும்கூட பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. எதிர்ப்பை முன்னின்று நடத்தியவர்அருமை நாயகம் என்ற சாட்டாம்பிள்ளை எனும் கிறித்துவ சாணார் இவர் கொற்கை கிராமத்தை சார்ந்த பணக்கார சாணார். இவரை தவிர சாமுவேல் சற்குணர், ஞானமுத்து நாடார் ஆகிய கிறித்துவ சாணார்களும் கால்டுவெல் பாதிரியின் கருத்துகளை கடுமையான சாடினர். கால்டுவெல் தமிழ்ச் சரித்திரத்தை சரியாக புரியாதவர். பொய்யர், ஒரு சில நடப்புகளை உலக நடப்பு என பேசக் கூடியவர் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். (பக்கம் 197 - 202, Robert Caldwell: A Scholar, Missionary in Colonial South India – by Vincent Kumaradas)

    மேற்கத்திய பாதிரிகள் தங்கள் விருப்பம் போல் உண்மைக்கு மாறாக பைபிளை மொழி பெயர்க்கின்றனர் என்பது சட்டாம் பிள்ளையின் குற்றச்சாட்டு, சிலுவை வணக்கம் ஏற்றுக் கொள்ள கூடியது அல்ல என்றும், இந்திய கிறித்துவர்களை இந்து கிறித்துவர்கள் என்றே அழைக்கப்பட வேண்டும் என்றும் இவர் வலியுறுத்தினார் சர்ச்சுகளில் பழைய ஏற்பாட்டின் அடிப்படையிலே வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்றும், மொழி பெயர்க்கப்பட்ட விவிலியம் (புதிய ஏற்பாடு) மேற்கத்திய கிறித்துவர்களின் பொய்யை பரப்பக் கூடியது, கற்பனையானது, விளையாட்டுத்தனமானது என்றும் அதனை நிராகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    ஒழுக்க குறைவான ஐரோப்பிய கிறித்துவ பாதிரிகள் “எந்த விதத்திலும் தாழ்ந்து போகாத ஒழுக்க முறைகளையுடைய இந்துக்களிடையே மதப் பிரச்சாரம் செய்ய தகுதியற்றவர்கள்” என கர்ச்சித்தார்;. இவர் ஜெருசலேம் யூத கோவில்களின் சாயலில் (இவரால் மேற்கத்திய கிறித்துவம் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுவிட்டது) ஒரு சர்ச்சினை முதலாவதாக 1857ல் நாசரேத் அருகிலுள்ள மூக்குபீரி எனும் சிற்றூரில் அமைத்தார். அதில் இந்து முறைப்படி படையல் படைத்தும், சாம்பிராணி தூபமிட்டும் வழிபாடு நடத்தினார். (பக்கம் 49 - 56 காலச்சுவடு - 16, டிசம்பர் 1996).

    சாணார்களை பற்றிய தனது கருத்தை கால்டுவெல் திரும்ப திரும்ப கூட்டங்களில் வலியுறுத்தினார் என்பது மட்டுமின்றி தனது கருத்தினை திரும்ப பெற மறுத்துவிட்டார். இதன் காரணமாக கால்டுவெல் மீது பல கொலைவெறி தாக்குதல் முயற்சிகள் நாடார்களால் மேற்கொள்ளப்பட்டன. கால்டுவெல் கொடைக்கானலில் குடியேறி தப்பினார். அவர் சாகும்வரை கொடைக்கானலில் இருந்து இறங்கி வரவில்லை. (பக்கம் 142 - தோள் சீலைக்கலகம்).

    அடுத்த பகுதியில் கால்டுவெல்லின் மொழி மோசடியைப் பார்ப்போம்….

    EVERY NADAR SHARE MUST
    .

    A user's photo.
    Like · Comment · Share


    __________________


    Guru

    Status: Offline
    Posts: 7329
    Date:
    Permalink  
     

    வேதசகாயகுமாருக்கு தூயபிரதி மீதுள்ள ஆர்வம் மெல்லமெல்ல பதிப்புவரலாறு சார்ந்து விரிவடைந்ததை சமீப காலமாகக் காணலாம். தமிழில் நூல்கள் பதிப்புகள் தோறும் கொள்ளும் திருத்தங்களிலும் ,மாற்றங்களிலும்  பெரியதோர் பண்பாட்டு உள்ளடக்கம் உள்ளது என்று வேதசகாயகுமார் கண்டடைகிறார். அதற்கு உதாரணமாக அவர் சொல்வது கால்டுவெல்லின் ‘திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற புகழ்பெற்ற மூலநூலின் பதிப்புகளை. முதற்பதிப்பு கால்டுவெல் இருந்தபோது அவரது மேற்பார்வையில் வெளிவந்தது. அவர் இறந்தபின்னர் வெளிவந்த அடுத்த பதிப்புகளில் அந்நூலின் முக்கியமான பின்னிணைப்பு ஒன்று விலக்கப்பட்டிருந்தது. சில பகுதிகள் மாற்றியமைக்கவும்பட்டிருந்தன.

     

    அந்தப்பகுதிகள் தமிழ்நாட்டு பறையர்களை இங்குள்ள பூர்வகுடிகளாக, திராவிடத்தின் முதற்சாதிகளாக, குறிப்பிடுவது என்பதை வைத்துப் பார்க்கையில் விரிவான ஒரு பண்பாட்டுத்திரிபு  நோக்கம் அதில் உள்ளது என்று அவர் ஐயப்படுகிறார். “ கால்டுவெல்லின் காலத்தில் தமிழன் என்னும் சொல் மொழி பேசும் மக்களைக் குறிக்கவில்லை. உயர்சாதியினரை மட்டுமே குறித்தது. கால்டுவெல்லுக்குப் பிற்பட்டவரான அயோத்திதாசரும் இதனைப் பதிவு செய்துள்ளார். கால்டுவெல் இது குறித்ததான சமகாலச் சிந்தனைகளைத் தொகுத்து, சிதறடித்து, தன் கருதுகோளை உறுதிபடுத்துகின்றார். திராவிட மொழிபேசும் மக்கள் ஓரினத்தவரே என்கிறார். ஆண்டான் அடிமை என்பது ஓரினத்தவருள்ளும் இருக்கக்கூடும் என விளக்குகிறார். பறையர்களைப் பழமையான திராவிடர் எனக் கூறுகிறார். 1890 கால அளவில்தான் ஆதிதிராவிடர் என்னும் சொல் வழக்கில் வந்தது. ஒருவகையில் இது கால்டுவெல்லின் தாக்கமே.” என்று கால்டுவெல்லின் பங்களிப்பை விளக்குகிறார் வேதசகாயகுமார்

    இலக்கியப்படைப்புகள் பண்பாட்டு நுட்பங்களின் தொகைகள் என்ற கோணத்தில் ஆரம்பிக்கும் வேதசகாயகுமாரின் இலக்கிய விமரிசனப்பயணம் மெல்ல விரிந்து தூயபிரதிகளுக்கான தேடலாக ஆகி  அவர்றின் பண்பாட்டு உள்ளுறைகளுக்குள் புகுந்து இன்று விரிவான பண்பாட்டு விமரிசனப்பயணமாக ஆகியிருக்கிறது. இலக்கிய ஆக்கங்களை அவர் அவை உருவாக்கப்பட்ட,  அவை வாசிக்கப்படும் விரிந்த பண்பாட்டுப் புலத்தில் வைத்துப் பார்க்கிறார். அவரது ஆர்வங்கள் இன்று ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பல தளங்களை நோக்கி நகர்ந்துள்ளன.

     

    அதற்கு மிகச்சிறந்த உதாரணம் தமிழ்ச்சூழலில் ராமாயணக்கதை எப்படி வாசிக்கப்பட்டது என்ற  அவரது ஆய்வாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழிலக்கியச்சூழலில் ராமாயணக்கதையை ஒரு திராவிட-ஆரிய போராட்டத்தின் கதையாக வாசிக்கும் போக்குக்கான மனநிலை எப்படி உருவானது அந்த வாசிப்புக்குப் பின்னால் உள்ள அக்காலகட்டத்து வடமொழி-தென்மொழி அரசியல் என பலதளங்களுக்கு விரிந்துசெல்லும் அந்த கட்டுரை தமிழில் பல திறப்புகளைச் சாத்தியமாக்குகிறது. மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் வ.உ.சிதம்பரம்பிள்ளை  போன்றவர்கள் ராமாயணத்தின் மீது கொண்ட மாற்று வாசிப்புகளையும் பல்வேறு மாற்று ராமாயண கதைவடிவங்களையும் எல்லாம் அக்கட்டுரை கருத்தில் கொள்கிறது.

     

    ஒரு கதவைத்திறக்கப்போய் இன்னொரு கதவை கண்டுகொண்டு சென்றபடியே இருப்பவை, அதன்மூலம் ஒரு பெரிய பண்பாட்டு விவாதத்தின் சித்திரத்தை உருவாக்குபவை வேதசகாயகுமாரின் ஆய்வுகள். மேலே சொன்ன ராமாயண விவாதம் நடந்த பண்பாட்டுச்சூழல் அவரது ஆய்படுபொருள். தமிழ் தனித்தன்மையை  அதாவது ‘ஆரியம்போல் வழக்கொழியாமல் இருந்த தமிழணங்கின் சீரிளமைத்திற’த்தை நிறுவ முயன்ற வரலாற்றுப்புலத்தின் மீதான் ஆய்வின் நீட்சியாகவே அவர்  தமிழிசைச்செல்வர் லட்சுமணபிள்ளை குறித்த ஆய்வில் ஈடுபடுகிறார்.

     

    மனோன்மணியம் சுந்தரனாரின் சமகாலகட்டத்தில் வாழ்ந்த லட்சுமணபிள்ளை தமிழிசைமுன்னோடி. முக்கியமான தமிழிசைப்பாடல்களை எழுதிவர். ஆனால் அவர் தமிழை சைவத்துக்குள் கொண்டுசென்று கட்டிய அக்கால வேளாள அரசியலின் பகுதியாகச் செயல்பட மறுத்துவிட்டார். அவர் செவ்வியல் மனம் படைத்தவர். மரபார்ந்த இலக்கிய வடிவை தனக்காக மாற்றிக்கொண்டு இலக்கியங்களை உருவாக்க முயன்றவர். அவரது பக்திப்பாடல்கள் உருவிலாத தூயசோதியான இறைவனை பாடுகின்றன. ராமலிங்க வள்ளலாரில் ஈடுபாடுள்ளவராகவே அவர் இருந்திருக்கிறார். [லட்சுமணபிள்ளை தமிழிசை முன்னோடி]

     

    இந்த ஆய்வின் நீட்சியாகவே வேதசகாயகுமார் கால்டுவெல்லுக்குப் போய்ச்சேர்கிறார். கால்டுவெல்லுக்கும் ஜி.யு.போப்புக்கும் இடையேயான வேற்றுமைகளை இந்தப்புலத்தில் வைத்து ஆராய்கிறார். போப் அன்றைய தமிழ்-சைவ அரசியலுக்குள் நுழைந்து தன் இடத்தை கண்டடைகிறார். ஆனால் கால்டுவெல் அதற்குள் நுழைய பிடிவாதமாக மறுத்துவிடுகிறார் என்கிறார் வேதசகாயகுமார். அவரது அக்கறைகள் தமிழ்ச்சமூகத்தின் தனித்தன்மைகளை உயர்மட்டத்தில் உயர்பண்பாட்டில் தேடுவதாக இருக்கவில்லை.

     

    அயோத்திதாச பண்டிதரின் படைப்புகளயும் இரேனியஸின் பைபிள் மொழியாக்கங்களையும் எல்லாம் வேதசகாயகுமார் இவ்வாறு விரிவான பின்புலத்தில் வைத்து ஆராய்ந்திருக்கிறார். அயோத்திதாச பண்டிதரின் அன்று வலுவாக உருவாகிவந்த தமிழ்-சைவ மேலாண்மைக்கு எதிர்தரப்பாக ஒரு தமிழ்-பௌத்த மரபை முன்வைப்பவை என்கிறார். திருக்குறளை ஒரு சைவ நூலாக முன்னிறுத்துவதற்கான மாபெரும் முயற்ஸிகள் நடந்தகாலகட்டத்தில் அதை திரிக்குறள் என்று ஒரு பௌத்த நூலாக அயோத்திதாசர் முன்வைப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

     

    இரேனியஸ் நாடார் சாதியினரை மதமாற்றம் செய்ததன்பொருட்டு அன்றைய கிறித்தவசபையால் வெளியே தள்ளப்பட்டார். வேளாளர்களை மதம் மாற்றுவதன்மூலம் தமிழ்ச்சமூகத்தில் ஒரு வலுவான தொடக்கத்தை உருவாக்க எண்ணிய சபைக்கு இரேனியஸ் சவாலாக இருந்தார் என்கிறார் வேதசகாயகுமார். ஆனால் எளிய மக்களுக்கே பைபிளின் செய்தி சென்றுசேரவேண்டும் என எண்ணினார் இரேனியஸ். ஆகவே பைபிளை மார்ட்டின் லூதர் கிங் செய்தது போல ‘சந்தை மொழியில்’ மொழியாக்கம் செய்தார். அதன்பொருட்டு தண்டிக்கப்பட்டு புறக்கணிப்பில் இறந்தார்.

     

    அன்றைய அரசியலின் ஆதாரமான உணர்ச்சிகளை இவ்வாறு மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் வரிகளை மேற்கோளாக்கி நிறுவுகிறார் வேதசகாயகுமார் “திராவிட இனத்தின் மலர்களான வெள்ளாளர்கள் தங்கள் தேசீயத்தை இன்று மறந்துவிட்டுள்ளனர். சூத்திரர்கள் என்றோ அதைவிட முட்டாள்தனமாக வைசியர்கள் என்றோ தங்களை அழைத்துக் கொள்கின்றனர். நீதி மன்றங்களில் ‘வேதக்காரர்’ ஆகிய கிறிஸ்தவர்கள் முன் தங்களை அஞ்ஞானிகள் என இனங்காட்டிக் கொள்கின்றனர். சாணார்களும் ஈழவர்களும் ஆயிரம் கேட்டால் நூறாவது கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் சத்திரியைர்கள் எனத் தங்களை அழைக்க உரிமை கோருகின்றைனர்’ —  சுந்தரம்பிள்ளை நீதிபதி நல்லசாமிக்கு எழுதிய இக்கடிதைவரிகள் அவர் உள்ளத்தைத் தெளிவாகவே உணர்த்திவிடுகின்றன

     

    கால்டுவெல் பறையர்களைத் திராவிடர்கள் என்றபோது, அடிமைகளான பறையர்களும் அவர்கள் எஜமானர்களான வெள்ளாளர்களும் ஓரினத்தவர்களாகின்றனர். இது சுந்தரம் பிள்ளையைக் கொந்தளித்து எழச்செய்தது. அரசியல் அடிப்பைடையில் வெள்ளாளர்களை ஒருங்கிணைக்க முயன்றார்’’

     

    இவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி மிகவிரிவான ஒரு பண்பாட்டு விவாதச் சித்திரத்தை உருவாக்கியிருக்கிறார் வேதசகாயகுமார். இந்த சித்திரத்தை பல்வேறு தரவுகளை தேடி எடுத்து ஒரு சரடில் கோர்த்து முன்னிறுத்தி தனக்கான ஒரு தரப்பாக முன்னிறுத்தவே வேத சகாயகுமார் கடந்த ஐந்தாண்டுக்கால ஆய்வுகளில் தொடர்ச்சியாக முயன்றுவருகிறார்.

    தமிழ்ச்...சா..தீ கால்டுவெல்லுக்கு செய்த துரோகம்

     

    5359.jpg





    நாளை - 07 மே - 2014 கால்டுவெல்லின் 200 வது ஆண்டுவிழா.
    07-5-1814ல் அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் சமயப்பணி ஆற்ற
    தமிழகம் வந்தார். எங்கள் திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில்
    தங்கினார். 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் இருந்த மொழியறிஞர்
    திராவிட மொழிகளுடன் லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, ஜெர்மன், பிரஞ்சு
    மொழிகளிலும் புலமைப் பெற்றவர். 18 மொழிகள் அறிந்த மொழியறிஞர்.

    இந்திய சமூகத்தின் தலைவிதியை மொழி தளத்திலும் இன அடிப்படையிலும்
    மாற்றியவரும் மிக அதிகமான பாதிப்புகளைக் கொடுத்தவரும் இவர் தான்.


    கால்டுவெல் 1856இல் "திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப
    மொழிகளின் ஒப்பிலக்கணம்” (A Comparative Grammar of the Dravadian or
    South Indian family of Languages) என்னும் தலைப்பில் தன் நூலை
    வெளியிடுகிறார். உள்ளடக்கமும் தலைப்பும் ஒன்றுக்கொன்று
    இணக்கமாய்ப் பொருந்தியிருந்த முதல் பதிப்பு அது. தலைப்பில் உள்ள "திராவிடம்” என்னும் சொல்லும், "திராவிட மொழிகள்” என்னும் கருத்தாக்கமும் கால்டுவெல்லின் கண்டுபிடிப்புகளல்ல. ஏற்கனவே புழக்கத்திற்கு வந்துவிட்ட சொற்கள் அவை. 1801க்கு முன்பே "திராவிட மொழிகள்” சிலவும் அவற்றைக் குறிக்கும் அப்பெயரும் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டன. ஆனால் எல்லா மொழிகளும் சமஸ்கிருதத்திலுருந்து வந்தவை தான் என்றே நம்பினார்கள்.
    அந்த  நம்பிக்கையை கருத்துருவாக்கத்தைக் குழிதோண்டி புதைத்தவர் கால்டுவெல்.

    1856 - முதல் பதிப்பு

    1875 - இரண்டாம் பதிப்பு (19 ஆண்டுகளுக்குப் பின்)

    இரண்டாம் பதிப்பில் 19 ஆண்டுகளில் அவர் கண்டறிந்த மேலும் சில உண்மைகளையும் சிலர் கேள்விகளுக்குப் பதிலையும் அடிக்குறிப்புகளையும் கொடுத்திருக்கிறார்.

    1913 ல் மூன்றாம் பதிப்பு.

    மூன்றாவது பதிப்பில் கால்டுவெல் புத்தகத்திலிருந்து தங்களுக்கு வேண்டாதவைகளை, நூலின் மையக்கருத்துக்குத் தேவையற்றவை என்று
    சொல்லி சில பக்கங்களை நீக்குகிறார்கள். அதன் பின் நீக்கப்பட்ட அந்தப் பக்கங்கள் எவர் பார்வைக்கும் வந்து விடாமல் தமிழ்ச் சாதி சமூகம்
    தன் ஆதிக்கச் சாதி முகத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறது..

    அப்படி நீக்கப்பட்ட பக்கங்கள்:
    நீக்கப்பட்ட பகுதிகள்:

    1. The relative antiquity of Dravidan Literature என்னும் தலைப்பின் கீழ் வரும் 34 பக்கங்களுள்ள முழுப்பகுதியும்

    2. பின்னிணைப்புகளில்,

    II Remarks on the Philological portion of Mr,Gover’s “Folk songs of Southern India”
    III, Sundara Pandya
    IV, Are the Pariars (Pareiyas) of Sourthern India Dravidans?
    V, Are the Neilghery (Nilagiri) Tudas Dravidans?
    VI, Dravidian physical Type
    VII. Ancient Religion of the Dravidians

    இந்த 6 தலைப்புகளில் மொத்தம் 76 பக்கங்கள்.

    3. அடிக்குறிப்புகளாகக் கொடுக்கப்பட்ட 507 வரிகள்.

    4. நூலின் உட்பகுதிகளிலிருந்து அங்கங்கே பத்திகளாகவும் பக்கங்களாகவும் (குறிப்பாக Introduction பகுதியிலிருந்து).

    மொத்தம் நீக்கப்பட்ட பகுதிகள் மூன்றாம் பதிப்பின் அச்சு வடிவத்தில் 160 பக்கங்கள் வரக்கூடியவை. இதில் வெறும் 48 பக்கங்கள் உள்ள இரண்டு பகுதிகளை நீக்கியதற்கான காரணங்களை மட்டும் தருகின்றனர். 1. "திராவிட இலக்கியங்களின் பழமை”ப் பகுதியை நீக்கக் காரணம்: "அது நூலின் மையக்கருத்துக்குத் தேவையில்லாதது. பழங்கால நூல்களுக்கு கால்டுவெல் கணித்த காலங்கள் பலவும் காலாவதியாகிவிட்டன (இது உண்மை).” 2. பின்னிணைப்பில் கோவருக்கு கால்டுவெல் தரும் பதிலை மட்டும் குறிப்பிட்டு அதை நீக்கியதற்கான காரணம்: "கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையற்ற அல்லது காணாமல் போய்விட்ட எழுத்தாளர்களின் கருத்துக்கு கால்டுவெல் பெரும் சிரமம் எடுத்துக் கொண்டு பல பக்கங்களில் கூறும் அவை வீண் சர்ச்சைக்குரிய விஷயங்கள்.”மீதமுள்ள 70 சதவீதப் பக்கங்களை நீக்கியதற்கு அவர்கள் வெளிப்படையாக ஒரு காரணமும் சொல்லவில்லை என்பது மட்டுமல்ல, அப்பகுதிகளைப் பெயர் சொல்லிக் குறிப்பிடுவதைக் கூட வெகு சாமர்த்தியமாகத் தவிர்த்துவிடுகின்றனர்.

    I have added an excurses on ‘Sundara Pandia’. and I have endeavoured to answer the question. “Are the Paraiyas and Tudas Dravidians?” and have adjoined some remarks “on the Dravidian Physical Type”. and “on the Religion of the ancient Dravidian Tribes,”

    மூன்றாம் பதிப்புச் செய்தவர்களுக்கு இந்த வாக்கியம்தான் பிரச்சினையே. 
    காரணம் பறையர் மற்றும் தோடா இன மக்களை கால்டுவெல் திராவிடர்கள்தான் என்றல்லவா சொல்லி இருக்கிறார்!
     தமிழ் ஆதிக்கச் சாதிக்கு இதுதான் ஒவ்வாமையை ஏற்படுத்தி இருக்கிறது.
    திராவிடர், திராவிடம் என்று தமிழ்நாட்டில் அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் சகல ஜாம்பவான்களும் இந்தக் கள்ளமவுனத்தின் காவலர்கள் தான்.


    இதைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற அய்யா கவிதாசரண்
    கால்டுவெல் பதிப்பித்த இரண்டாம் பதிப்பையும் பின்னர்
    பதிப்பிக்கப்பட்ட மூன்றாம் பதிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்து இந்த
    அதிர்ச்சி தரும் உண்மையை,  தமிழ்ச்சாதியின் சாதி அகம்பாவத்தை
    வெளிக்கொணர்ந்தார். "அப்படியா?" என்று ரொம்பவும் அதிர்ச்சி அடைந்தது போல கேட்டுக்கொண்டார்களாம் பல்கலை கழக தமிழ்ப் பேராசிரியர்கள்

    கவிதாசரண் அவர்கள் தான் குடியிருந்த வீட்டை அடமானம் வைத்து கால்டுவெல்லின் இரண்டாம் பதிப்பை முழுமையாக வெளியிட்டார்.
    அந்தப் பதிப்பில் அவர் எழுதியிருக்கும் சில வரிகள்:

    THESE EDITORS  HAD CARVED A TEXT BOOK OUT OF IT FOR THE CLASS ROOM
    SCHOLARS, LOYAL TO THE SAGACITY OF THE INDIAN HYPOCRISY WITH CASTE BASED TRAITS. THE ELITE DRAVIDIANS HAVE ALL ALONG BEEN ACCEPTING IT AS THEIR BEST SUITED TREASURE, NOT KNOWING WHAT THEY ARE DOING OR STRIVING FOR.

    OUR ENDEAVOUR OF BRINGING THIS EDITION TO ITS REVIVAL IS NOT ONLY TO ACCLAIM CALDWELL WTH NEW UNDERSTANDING FOR HE WAS MORE THAN HUNDRED YEARS AHEAD OF HIS TIME BY QUESTIONING THE INDIAN SOCIAL ORDER, BUT ALSO
    TO RECLAIM THE FIRE TO GLOW FOR EVER IN THE AIR OF FREEDOM.

    கால்டுவெல்,
    எங்களை மன்னித்துவிடுங்கள்...
    காந்திக்கு துப்பாக்கி குண்டுகளைப்
    பரிசாகக் கொடுத்த
    மதவாதிகளை விடக் கொடியவர்கள் நாங்கள்.
    இன்றுவரை எல்லா மேடைகளிலும்
    உங்கள் பக்கங்களை
    வாசிக்கமாலேயே உரக்கப் பேசுவதற்காக
    எங்களை மன்னித்த மாமனிதரே..
    எங்கள் சாதித்தமிழன்
    அறிந்தே செய்த இந்த தவறுகளுக்காகவும் சேர்த்தே
    அவர்களை மன்னித்தருளும்.

    ஆமென்.


    -- Edited by devapriya solomon on Sunday 12th of April 2015 05:16:16 PM

    __________________
    Page 1 of 1  sorted by
     
    Quick Reply

    Please log in to post quick replies.



    Create your own FREE Forum
    Report Abuse
    Powered by ActiveBoard