Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பைபிள் பழைய ஏற்பாடு


Guru

Status: Offline
Posts: 7329
Date:
பைபிள் பழைய ஏற்பாடு
Permalink  
 


கர்த்தர் இஸ்ரேலிற்கான சிறு எல்லை தேவன்

பைபிள் பழைய ஏற்பாட்டின் அடிப்படை, கல்தேயர் நாட்டை சேர்ந்த ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து கானான் எனும் இஸ்ரேலின் அரசியல் ஆட்சி உரிமை அவர் வாரிசுகளுக்கு என்பதே.

ஆதியாகமம் 15:18  ஆகையால், அன்று கர்த்தர் ஆபிராமோடு ஒரு வாக்குறுதியும், உடன்படிக்கையையும் செய்துகொண்டார். கர்த்தர், “நான் இந்த நாட்டை உன் சந்ததிக்குத் தருவேன். எகிப்து நதி முதல் யூப்ரடீஸ் நதி வரையுள்ள இடத்தைக் கொடுப்பேன். 19 இந்த பூமி கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர், 21 எமோரியர், கானானியர், கிர்காசியர் மற்றும் எபூசியருக்குச் சொந்தமானதாகும்” என்றார்.

உபாகமம் 20: 16 “உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிற நகரங்களில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கொன்றுவிட வேண்டும். 17 அங்குள்ள ஜனங்கள் இனங்களான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியவற்றை முழுமையாக அழித்துவிட வேண்டும். 

 

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு எல்லை தெய்வம் இஸ்ரேலிற்கு யாவே எனப்படும் கர்த்தர், இது  தான் பழைய ஏற்பாட்டின் அடிப்படை. 

நியாயாதிபதிகள் 11:24  காமோஸ் என்னும் உங்கள் தேவன் உங்களுக்குத் தந்துள்ள தேசத்தில் நீங்கள் நிச்சயமாக வாழமுடியும்.எனவே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குத் தந்துள்ள இஸ்ரேல் தேசத்தில் நாங்கள் வாழ்வோம்!

1இராஜாக்கள11:3 சாலொமோனுக்கு 700 மனைவியர் இருந்தனர். (அவர்கள் அனைவரும் பிற நாட்டுத் தலைவர்களின் மகள்கள் ஆவார்கள்.) இதுமட்டுமன்றி சாலொமோனுக்கு 300 அடிமைப் பெண்களும் மனைவியரைப் போன்று இருந்தனர்
சாலொமோன் காமோஸ் என்னும் தெய்வத்தை தொழுதுகொள்ள ஒரு தேவாலயத்தைக் கட்டினான். இது மோவாபியரின் தேவனின்  விக்கிரகம் ஆகும். இவ்விடத்தை எருசலேமுக்கு எதிரில் உள்ள மலைமீது கட்டினான். அதே மலையில், மோளோகுக்கும் தேவாலயம் கட்டினான். இது அம்மோன் ஜனங்களின் தேவனின் தோற்றமுடைய விக்கிரகமாகும். சாலொமோன் இதுபோலவே மற்ற மனைவியரின் நாட்டுத் தெய்வங்களுக்கும் செய்தான். அவனது மனைவியர் அத்தெய்வங்களுக்கு நறு மணப் பொருட்களை எரித்து, பலியிட்டு வந்தனர்.
அந்த கர்த்தரே ஒரு வசத்தில் அவர் பலம் சிரியாவும் தனதே என்பதாக ஒரு வசனம்.

செக்கரியா9:1ஓர் இறைவாக்கு: ஆண்டவரின் வாக்கு அதிராக்கு நாட்டிற்கு எதிராக எழும்புகிறது: அது தமஸ்கு நகர்மீது இறங்கித் தங்கும்: ஏனெனில் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களைப் போலவே சிரியா நாட்டின் நகர்களும் ஆண்டவருக்கே உரியன.2. அதன் எல்லைக்கு அடுத்துள்ள ஆமாத்தும் ஞானத்தில் சிறந்த தீரும் சீதோனும் அவருக்கே சொந்தம். 3.தீர் தன்னைச் சுற்றிலும் அரண் ஒன்றைக் கட்டியெழுப்பியது: தூசியைப் போல் வெள்ளியையும் தெருச் சேற்றைப்போல் பொன்னையும் சேமித்தது.

 உலகைப் படைத்த கடவுள் ஒரு நாட்டிற்கு வேறொரு நாட்டினரை அனுப்பி மண்ணின் மைந்தரை கொலை செய்ய உதவினார், என்பது ஒரு அருவருப்பான கடவுள் விரோதக் கொள்கை , இது வெறும் அரசியல் சூழ்ச்சி.,

ஆபிரகாம் காலம் பொ.மு.2100 எனில், மோசே காலம் பொ.மு.1500 எனில், பழைய ஏற்பாட்டின் முக்கிய கதைகள், புனையப்பட்டது, பொ.மு.400 – 250 (இங்கே) எனில் கதை சம்பவங்களுக்கு 1600 – 1000 வருடம் பின்பு, அதிலும், சிறு தெய்வம் கர்த்தர் சொன்னார், அரசியல் ஆட்சி உரிமை- கொலைகள் என்பவை அனைத்தும் ஒரு அரசியல் சூழ்ச்சிகளே தவிர, இதில் தெய்வக் கோட்பாடுகள் கிடையாது.

மேலும் பைபிள் கடவுள் மனித குல எதிரி, மனிதன் மற்ற மிருகங்கள் போலே நிர்வாணமாக அறிவின்றி திரியப் படைக்கப்பட்டான், சாத்தான் உதவ கதைப்படி பகுத்து அறியும் அறிவைப் பெற்றான், உடனே பைபிள் கடவுள் மனிதனை விரட்டினார், பின் நோவா கதையில் மனிதர்கள் ஒற்றுமையாய் ஒரு மொழி பேசு பல மாடி கோபுரம் கட்ட கடவுள் பயந்து குழப்பி பல மொழிகளை உருவாக்கி, பிரிவினை மூட்டி ஒற்றுமையைக் கெடுத்தாரம். ( இதோ , இங்கே)

 பைபிளில் கடவுள் முதல் மனிதன் படைத்தலில் இருந்து இன்று வரை முழுமையாக பதிவிட்டுள்ளதாம், இதனை ஒன்று இணைத்தால் உலகம் படைக்கப்பட்டது, 6000 (இங்கே) வருடம் முன்பு என ஆகும். பூமியை சூரியன் சுற்றுவதாக பைபிள் வசனம். 

//”Many Laws in the Pentateuch or Torah, the first five books were not different from those of the surrounding nations.// – Page – 238, vol 3, Grolier’s Encyclopedia

 
அறிவியல் ஆய்வுகள் இவற்றை தவறு என்ற போது, விஞ்ஞானிகள் துன்புறுத்தப்பட்டனர், ஜெயிலில் போடப்பட்டனர். வியாதிகள் கடவுள் தருபவை, தடுப்பு மருந்துகள் கர்த்தருக்கு விரோதமானவை என பல்வேறு சர்ச்சுகள் பெரும் அமர்க்களம் செய்தது. சில வழக்குகளின் இணைப்பு.
http://en.wikipedia.org/wiki/Galileo_Galilei
http://en.wikipedia.org/wiki/Scopes_Trial
http://en.wikipedia.org/wiki/1860_Oxford_evolution_debate

//The idea of universal Deity does not exist for most part of the Biblical period and every region inluding Yahwwhism atleast implicitly acknoleged the existence of other Gods, (who however tends to be impotent outsie the boundaries of their realms). Under these circumstances it is inevitable that a covenant of Isarel entered with Yahweh would focus on possession of the Land the “Promissed Land” and that this possession would ratify the exclusiveness of the relationship with their Deity in a material way. The Biblical Picture of a Promissed Land is a strongly idealised  one( for eg. in the allocation of an area in Palestine to the different tribes, or the fixation upon “Mount Zion”    a place that owe more to the imagination of the Prophets than to the Topography of Jerusalem. // Page-91 & 92. The Bible as Literature
A History book designed witha specifically religious puurpose. Its elements were chosen and arranged and given emphasis to prove a Point, namely when the People of Israel where Faithful to their Deity and observed his statutes, they Prosphered, but when they gave their alligence to Alien Gods they suffered at the Hands of their Enemies. A Prediction to this effect was put in to the mouth of Moses at the end of Deutronomy. // Page 67 The Bible As Literature.
யேசுவும் பழைய ஏற்பாடும் 

மத்தேயு 5: 17 ,“மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன்.   18 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். வானமும் பூமியும் உள்ளவரைக்கும் கட்டளைகளில் எதுவும் மறையாது. அனைத்தும் நிறைவேறுகிற வரைக்கும் கட்டளைகளின் ஒரு சிறு எழுத்தோ அல்லது ஒரு சிறு எழுத்தின் பகுதியோ கூட மறையாது.

 
நியாயப் பிரமாணச் சட்டங்களை முழுமையாய் தொகுத்து ஆராய்ந்த பாதிரியார் கதை.
விவிலியச் சட்டப்படி, பழைய ஏற்பாடு இஸ்ரேலின் சிறு தெய்வம் கர்த்தர் தன்க்கு ஒவ்வொரு நாளும் நிமிடத்திற்கு 400 முதல் 1600 ஆடுகள் கொலை செய்து பலி தர்க் கேட்டார். யூதத் தேவாலய பாதிரிகள் தினமும் 88 புறா சாப்பிடவேண்டும்.

 

No less provoking were the findings of the scholars working on the text of the Bible. One Anglican Bishop in Africa, who had been trained as a Mathematician critically examined, the Old Testament records and reckoned that on the basis of the Legislation found in the Pentateuch, the early Priest of the Hebrews were required to eat 88 Pegions daily and Sacrifice between 400-1600 Lambs per Minute. The Bishop was desposed but critical scholarship had made inroads.

Page-266 The Religious World.

 நாம் மிகத் தெளிவாக உணர்வது, இன்று நடுநிலை பைபிளியலாளர் நேர்மையான வரலாற்றாசிரியர் கூறுவது, பாரசீகத்திலிருந்து திரும்பி வந்த பின்னரான அடுத்த 200 – 300 ஆண்டுகளில், மக்களை அரசியல் ஒற்றுமைப் படுத்த புனையப்பட்ட்டதே பழைய ஏற்பாடு. இதன் அடிப்படையில் தீர்க்கர், மேசியா எல்லாமே அந்த மூட நம்பிக்கையின் தொடர்ச்சியே.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பைபிள் புனையல்களின் தன்மையும் வரலாற்று உண்மையும்

பைபிள் பழைய ஏற்பாட்டின் அடிப்படை, கல்தேயர் நாட்டை சேர்ந்த ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்து கானான் எனும் இஸ்ரேலின் அரசியல் ஆட்சி உரிமை அவர் வாரிசுகளுக்கு என்பதே.

ஆதியாகமம் 15:18  ஆகையால், அன்று கர்த்தர் ஆபிராமோடு ஒரு வாக்குறுதியும், உடன்படிக்கையையும் செய்துகொண்டார். கர்த்தர், “நான் இந்த நாட்டை உன் சந்ததிக்குத் தருவேன். எகிப்து நதி முதல் யூப்ரடீஸ் நதி வரையுள்ள இடத்தைக் கொடுப்பேன். 19 இந்த பூமி கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 ஏத்தியர், பெரிசியர், ரெப்பாயீமியர், 21 எமோரியர், கானானியர், கிர்காசியர் மற்றும் எபூசியருக்குச் சொந்தமானதாகும்” என்றார்.

உபாகமம் 20: 16 “உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிற நகரங்களில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கொன்றுவிட வேண்டும். 17 அங்குள்ள ஜனங்கள் இனங்களான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியவற்றை முழுமையாக அழித்துவிட வேண்டும். 

 

இதில் அடுத்த கதை, தீர்க்கம் சொல்தலாம்.

ஆதியாகமம் 15: 13 பிறகு கர்த்தர் ஆபிராமிடம், “நீ இவ்விஷயங்களைப்பற்றி அறிய வேண்டும். உனது சந்ததி தங்களுக்குச் சொந்தமில்லாத நாட்டிலே அந்நியர்களாக இருப்பார்கள். அங்குள்ளவர்கள் அவர்களை 400 ஆண்டு காலத்துக்கு அடிமைகளாக வைத்திருந்து, மோசமாக நடத்துவார்கள்.14 ஆனால் நான் அந்த நாட்டைத் தண்டிப்பேன். உனது ஜனங்கள் அந்நாட்டை விட்டு பல்வேறு பொருட்களுடன் வெளியேறுவார்கள்.
15 “நீ நல்ல முதிர் வயதாகும்வரை வாழ்ந்து, சமாதானமாக மரணமடைவாய். 16 நான்கு தலைமுறைகளுக்குப்பின் உன் சந்ததியினர் மீண்டும் இங்கே வருவார்கள். அப்போது உனது ஜனங்கள் எமோரியரைத் தோற்கடிப்பார்கள். இது எதிர்காலத்தில்தான் நடைபெறும், ஏனென்றால் இன்னும் எமோரியர்கள் தண்டிக்கப்படுகிற அளவிற்கு மிக மோசமாகக் கெட்டுப்போகவில்லை” என்றார்.

 

ஆதியாகமம் 46: இரவில் தேவன் கனவில் இஸ்ரவேலிடம் பேசினார். தேவன், “யாக்கோபே, யாக்கோபே” என்று கூப்பிட்டார்.

“நான் இங்கே இருக்கிறேன்” என்றான் இஸ்ரவேல்.
அப்பொழுது அவர், “நான் தேவன், உன் தந்தைக்கும் தேவன். எகிப்திற்குப் போகப் பயப்படவேண்டாம். அங்கு உன்னைப் பெரிய இனமாக்குவேன். உன்னோடு நானும் எகிப்துக்கு வருவேன். மீண்டும் உன்னை எகிப்திலிருந்து வெளியே வரவழைப்பேன். நீ எகிப்திலேயே மரணமடைவாய். ஆனால் யோசேப்பு உன்னோடு இருப்பான். நீ மரிக்கும்போது அவன் தன் கையாலேயே உன் கண்களை மூடுவான்” என்றார்.
  பைபிள் கதைப்படி கர்த்தர் தூண்டஅடிமைப் பட்டிருந்த எபிரேயர்களை மோசே   தலைமையில் வர   – செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழி விட ஒரே இரவில் 30 லட்சம் எபிரேயர் (போரிடம் தகுதி உடைய 18-60வயது  வாலிபர் 6 லட்சம், + லேவியர் ஜாதி 50,000, இவர்கள் மனைவி குழந்தைகள், வயதானோர்) செங்கடலைத் தாண்டியதாகக் கதை. பின் இஸ்ரேல் வர 40 வருடம் ஆனதாம். வரும் வழியில் கர்த்தர் கொடுத்த கதைகளே பழைய ஏற்பாட்டின் சட்டங்கள்(முதலைந்து நூல்கள்) பகுதி.
 
 

 இஸ்ரேலில், எகிப்தில் கடந்த 150 வருடங்களாக பல முறை, பல நாட்டு அகழ்வாய்வு செய்ததில் கிடைத்த பொருள்கள் கூறும் உண்மை, எகிப்தில் எபிரேயர் வாழ்ந்ததில்லை, இன்னும் சொல்லப்போனால், இஸ்ரேலியர் எனும் ஒரு பிரிவு அக்காலத்தில் இல்லை. இஸ்ரேலியர் உள்ளூர் மக்களே, கானானியர்களே, அன்னிய ஆபிரகாம் வாரிசுகள் அல்ல. 

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு எல்லை தெய்வம் இஸ்ரேலிற்கு யாவே எனப்படும் கர்த்தர், இது  தான் பழைய ஏற்பாட்டின் அடிப்படை. 

நியாயாதிபதிகள் 11:24  காமோஸ் என்னும் உங்கள் தேவன் உங்களுக்குத் தந்துள்ள தேசத்தில் நீங்கள் நிச்சயமாக வாழமுடியும்.எனவே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குத் தந்துள்ள  இஸ்ரேல் தேசத்தில் நாங்கள் வாழ்வோம்!

1இராஜாக்கள11:3 சாலொமோனுக்கு 700 மனைவியர் இருந்தனர். (அவர்கள் அனைவரும் பிற நாட்டுத் தலைவர்களின் மகள்கள் ஆவார்கள்.) இதுமட்டுமன்றி சாலொமோனுக்கு 300 அடிமைப் பெண்களும் மனைவியரைப் போன்று இருந்தனர்
சாலொமோன் காமோஸ் என்னும் தெய்வத்தை தொழுதுகொள்ள ஒரு தேவாலயத்தைக் கட்டினான். இது மோவாபியரின் தேவனின்  விக்கிரகம் ஆகும். இவ்விடத்தை எருசலேமுக்கு எதிரில் உள்ள மலைமீது கட்டினான். அதே மலையில், மோளோகுக்கும் தேவாலயம் கட்டினான். இது அம்மோன் ஜனங்களின் தேவனின் தோற்றமுடைய விக்கிரகமாகும். சாலொமோன் இதுபோலவே மற்ற மனைவியரின் நாட்டுத் தெய்வங்களுக்கும் செய்தான். அவனது மனைவியர் அத்தெய்வங்களுக்கு நறு மணப் பொருட்களை எரித்து, பலியிட்டு வந்தனர்.
அந்த கர்த்தரே ஒரு வசத்தில் அவர் பலம் சிரியாவும் தனதே என்பதாக ஒரு வசனம்.

செக்கரியா9:1ஓர் இறைவாக்கு: ஆண்டவரின் வாக்கு அதிராக்கு நாட்டிற்கு எதிராக எழும்புகிறது: அது தமஸ்கு நகர்மீது இறங்கித் தங்கும்: ஏனெனில் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களைப் போலவே சிரியா நாட்டின் நகர்களும் ஆண்டவருக்கே உரியன.2. அதன் எல்லைக்கு அடுத்துள்ள ஆமாத்தும் ஞானத்தில் சிறந்த தீரும் சீதோனும் அவருக்கே சொந்தம். 3.தீர் தன்னைச் சுற்றிலும் அரண் ஒன்றைக் கட்டியெழுப்பியது: தூசியைப் போல் வெள்ளியையும் தெருச் சேற்றைப்போல் பொன்னையும் சேமித்தது.

 உலகைப் படைத்த கடவுள் ஒரு நாட்டிற்கு வேறொரு நாட்டினரை அனுப்பி மண்ணின் மைந்தரை கொலை செய்ய உதவினார், என்பது ஒரு அருவருப்பான கடவுள் விரோதக் கொள்கை , இது வெறும் அரசியல் சூழ்ச்சி.,

ஆபிரகாம் காலம் பொ.மு.2100 எனில், மோசே காலம் பொ.மு.1500 எனில், பழைய ஏற்பாட்டின் முக்கிய கதைகள், புனையப்பட்டது, பொ.மு.400 – 250 (இங்கே) எனில் கதை சம்பவங்களுக்கு 1600 – 1000 வருடம் பின்பு, அதிலும், சிறு தெய்வம் கர்த்தர் சொன்னார், அரசியல் ஆட்சி உரிமை- கொலைகள் என்பவை அனைத்தும் ஒரு அரசியல் சூழ்ச்சிகளே தவிர, இதில் தெய்வக் கோட்பாடுகள் கிடையாது.


மேலும் பைபிள் கடவுள் மனித குல எதிரி, மனிதன் மற்ற மிருகங்கள் போலே நிர்வாணமாக அறிவின்றி திரியப் படைக்கப்பட்டான், சாத்தான் உதவ கதைப்படி பகுத்து அறியும் அறிவைப் பெற்றான், உடனே பைபிள் கடவுள் மனிதனை விரட்டினார், பின் நோவா கதையில் மனிதர்கள் ஒற்றுமையாய் ஒரு மொழி பேசு பல மாடி கோபுரம் கட்ட கடவுள் பயந்து குழப்பி பல மொழிகளை உருவாக்கி, பிரிவினை மூட்டி ஒற்றுமையைக் கெடுத்தாரம். ( இதோ , இங்கே)

 பைபிளில் கடவுள் முதல் மனிதன் படைத்தலில் இருந்து இன்று வரை முழுமையாக பதிவிட்டுள்ளதாம், இதனை ஒன்று இணைத்தால் உலகம் படைக்கப்பட்டது, 6000 (இங்கே) வருடம் முன்பு என ஆகும். பூமியை சூரியன் சுற்றுவதாக பைபிள் வசனம். 

//”Many Laws in the Pentateuch or Torah, the first five books were not different from those of the surrounding nations.// – Page – 238, vol 3, Grolier’s Encyclopedia


அறிவியல் ஆய்வுகள் இவற்றை தவறு என்ற போது, விஞ்ஞானிகள் துன்புறுத்தப்பட்டனர், ஜெயிலில் போடப்பட்டனர். வியாதிகள் கடவுள் தருபவை, தடுப்பு மருந்துகள் கர்த்தருக்கு விரோதமானவை என பல்வேறு சர்ச்சுகள் பெரும் அமர்க்களம் செய்தது. சில வழக்குகளின் இணைப்பு.
http://en.wikipedia.org/wiki/Galileo_Galilei

http://en.wikipedia.org/wiki/Scopes_Trial
http://en.wikipedia.org/wiki/1860_Oxford_evolution_debate

//The idea of universal Deity does not exist for most part of the Biblical period and every region inluding Yahwwhism atleast implicitly acknoleged the existence of other Gods, (who however tends to be impotent outsie the boundaries of their realms). Under these circumstances it is inevitable that a covenant of Isarel entered with Yahweh would focus on possession of the Land the “Promissed Land” and that this possession would ratify the exclusiveness of the relationship with their Deity in a material way. The Biblical Picture of a Promissed Land is a strongly idealised  one( for eg. in the allocation of an area in Palestine to the different tribes, or the fixation upon “Mount Zion”    a place that owe more to the imagination of the Prophets than to the Topography of Jerusalem. // Page-91 & 92. The Bible as Literature
A History book designed witha specifically religious puurpose. Its elements were chosen and arranged and given emphasis to prove a Point, namely when the People of Israel where Faithful to their Deity and observed his statutes, they Prosphered, but when they gave their alligence to Alien Gods they suffered at the Hands of their Enemies. A Prediction to this effect was put in to the mouth of Moses at the end of Deutronomy. // Page 67 The Bible As Literature.
யேசுவும் பழைய ஏற்பாடும் 

மத்தேயு 5: 17 ,“மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன். 18 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். வானமும் பூமியும் உள்ளவரைக்கும் கட்டளைகளில் எதுவும் மறையாது. அனைத்தும் நிறைவேறுகிற வரைக்கும் கட்டளைகளின் ஒரு சிறு எழுத்தோ அல்லது ஒரு சிறு எழுத்தின் பகுதியோ கூட மறையாது.

 
நியாயப் பிரமாணச் சட்டங்களை முழுமையாய் தொகுத்து ஆராய்ந்த பாதிரியார் கதை.
விவிலியச் சட்டப்படி, பழைய ஏற்பாடு இஸ்ரேலின் சிறு தெய்வம் கர்த்தர் தன்க்கு ஒவ்வொரு நாளும் நிமிடத்திற்கு 400 முதல் 1600 ஆடுகள் கொலை செய்து பலி தர்க் கேட்டார். யூதத் தேவாலய பாதிரிகள் தினமும் 88 புறா சாப்பிடவேண்டும்.

 

No less provoking were the findings of the scholars working on the text of the Bible. One Anglican Bishop in Africa, who had been trained as a Mathematician critically examined, the Old Testament records and reckoned that on the basis of the Legislation found in the Pentateuch, the early Priest of the Hebrews were required to eat 88 Pegions daily and Sacrifice between 400-1600 Lambs per Minute. The Bishop was desposed but critical scholarship had made inroads.

Page-266 The Religious World.


 நாம் மிகத் தெளிவாக உணர்வது, இன்று நடுநிலை பைபிளியலாளர் நேர்மையான வரலாற்றாசிரியர் கூறுவது, பாரசீகத்திலிருந்து திரும்பி வந்த பின்னரான அடுத்த 200 – 300 ஆண்டுகளில், மக்களை அரசியல் ஒற்றுமைப் படுத்த புனையப்பட்ட்டதே பழைய ஏற்பாடு. இதன் அடிப்படையில் தீர்க்கர், மேசியா எல்லாமே அந்த மூட நம்பிக்கையின் தொடர்ச்சியே.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பழைய ஏற்பாடு – நியாயப் பிரமாணங்கள் உருவான கதை

பழைய ஏற்பாடு எனப்படும், யூத மதப் புராணக் கதைகள் கொண்ட புத்தகம், எபிரேய மொழ்யில் வரையப்பட்டவை. இதில் முதல் 5 புத்தகங்கள் சட்டங்கள் எனப்படும், இவற்றின் கதாசிரியர் மோசே எனப்படும். (படிக்க)
9k=    images?q=tbn:ANd9GcSGUKHno5G30gRZlYfNYZX
இவற்றில் உலகம் ஆரம்பத்தில் படைத்தது முதல்  அனைத்து சம்பவங்களையும் முறையாக தொகுத்தது போலத் தோற்றம் வரும். இதன் கதைப்படி, கல்தேயர் நாட்டைச் சேர்ந்த ஆபிரகாமை, இஸ்ரேலிற்கான எல்லைத் தெய்வம் யாவே அல்லது கர்த்தர், தேர்ந்தெடுத்து, அவன் வாரிசுகளுக்கு கானான் எனப்படும் இஸ்ரேலின் மீதான ஆட்சி உரிமை தந்தார். இதுவே யூத பைபிளின் அடிப்படை.
ஆபிரகாமிற்கு சில தலைமுறை முன்பு, தேவ குமாரர்கள் மனிதப் பெண்களோடு, உடலுறவு கொள்ள அரக்கர்கள் நிறைய தோன்ற, பூமி முழுமையும் அனைத்து உயிர்களையும் கொல்ல பிரளய வெள்ளத்தால் பைபிள் தெய்வம் மூட, அதற்கு முன்பு நோவா என்பவர் குடும்பத்தையும், எல்லா உயிரினங்களையும் ஒரு கப்பலில் இட்டு, காப்பதாகவும் ஒரு கதை. இதற்குப்பின் ஆபிரகாம் கதை.
இந்தக் கதைகள் எல்லாம் பைபிள்படி எப்படி எழுதப்பட்டன, என பைபிளே தரும் தோற்றம் என்ன என்பதைப் பார்க்கலாம்.
ஆபிரகாமின் பேரன் காலத்தில் பஞ்சம் வர தன் குடும்பத்தோடே 70 பேராக எகிப்து செல்கின்றனர். அங்கே சில காலம் வாழ்ந்தபின் எபிரேயர் மக்கள் தொகை வேகமாக வளர ஆண்குழந்தைகளை கொலை செய்யுமாறு எகிப்து மன்னர் சொல்ல 2 தாதிகள் செய்யவில்லை.  எபிரேயர்களால் ஆண் குழந்தைகளை வளர்க்க முடியாத சூழ்நிலையில் மோசேயின் தாய் குழந்தையை புதரில் விட்டுவிட, எகிப்து அரச குடும்பத்தில் வளரும்படி செய்கிறார். அவர் எபிரேயர்களுக்கு உதவிட பார்க்கிறார். பின் ஒதுங்கிறார். இஸ்ரேலின் எல்லை கடடவுள் இவரிடம், எபிரேயர்களை ஒன்றிணைத்து, எகிப்து மன்னனிடம் சென்று இஸ்ரேல் செல்ல அனுமதி கேட்குமாறு சொல்கிறார். எகிப்து மன்னன் ஏற்றாலும், கர்த்தர் அவர் மனதைக் கடுமைப் படுத்தி, எகிப்து மக்களுக்கு 10 விதமான பெரும் தொல்லைகள் தர பின் ஆடு, மாடு பொருட்களோடு எகிப்தியர் யூதர்களை அனுப்பி வைக்க, கிட்டத்தட்ட 30 லட்சம் யூதர்கள் எகிப்திலிருந்து இஸ்ரேல் வருகின்றனர்.
 பஞ்சத்ற்கு எகிப்து செல்ல அங்கே அடிமைப் பட்டிருந்த எபிரேயர்களை மோசே   தலைமையில் வர   – செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழி விட ஒரே இரவில் 30 லட்சம் எபிரேயர்  செங்கடலைத் தாண்டியதாகக் கதை. பின் இஸ்ரேல் வர 40 வருடம் ஆனதாம். வரும் வழியில் கர்த்தர் கொடுத்த கதைகளே பழைய ஏற்பாட்டின் சட்டங்கள்(முதலைந்து நூல்கள்) பகுதி.
மோசே சட்டங்கள் கர்த்தர் தர, இதற்குப் பின்பு, இஸ்ரேலியர் தங்கள் வரலாறை முறையாக எழுதி வைத்ததின் தொகுப்பே பழைய ஏற்பாடு எனும் தோற்றத்தைப் பார்க்கலாம்.
பைபிளை நடுநிலையோடு முழுமையாக ஆராய்பவர்கள் கண்டது, மோசே சட்டத்தில் கர்த்தருக்கு ஒரேஒரு இடத்தில் மட்டும் பலி, என்றெல்லாம் இருக்க, தீர்க்கர்கள் கூட பல இடங்களில் பலி செய்து வழிபட்டதாகக் கதையில் உள்ளதைக் கண்டனர். பின் மேலும் ஆராயமோசே சட்ட்ங்கள் எனும் புத்தகங்கள் உருவான கதை பைபிளிலேயே உள்ளதை கண்டனர்.

1 இராஜாக்கள் 6:1சாலொமோன் அவ்வாறே ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தான். இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்து 480 ஆண்டுகள் ஆகியிருந்தன. இப்போது சாலொமோன் அரசனாகி நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தன. இது ஆண்டின் இரண்டாவது மாதமாகவும் இருந்தது.

சால்மன் காலம் பொ.மு.970- 930 எனக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.மோசே  காலம் அதற்கு 480 வருடம் முன்பு எனில் பொ.மு 16 – 15 நூற்றாண்டு ஆகும். 

பொ.மு.15ம் நூற்றாண்டிலிருந்த்து மோசே சட்டம் வைத்து வாழ்ந்தும் பின் முறையாக வரலாறு உள்ளதாகவும் புனையப்பட்டுள்ள நிலையில் கிழே உள்ள கதையைக் கண்டனர்.

 2 இராஜாக்கள்22:8 தலைமைக் குரு இல்க்கியா எழுத்தன் சாப்பானை நோக்கி,ஆண்டவரின் இல்லத்தில் ஒரு சட்ட நூலைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்நூலைச் சாப்பானிடம் கொடுக்க, அவனும் அதைப் படித்தான். 10 மேலும் அவன் அரசரிடம், குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்துள்ளார் என்று கூறி, அரசர் முன்னிலையில் அதைப் படித்துக் காட்டினான்.11 அரசர் சட்டநூலின் வார்த்தைகளைக் கேட்டதும் தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்.12 பின் குரு இல்க்கியாவையும் சாப்பானின் மகன் அகிக்காமையும், மீக்காயாவின் மகன் அக்போரையும், எழுத்தன் சாப்பானையும் அரச அலுவலன் அசாயாவையும் நோக்கி, அரசர் இட்ட கட்டளை இதுவே:13 நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும், யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள். 16ஆண்டவர் கூறுவது இதுவே: யூதாவின் அரசர் படித்த அந்த நூலின் வார்த்தைகளின்படி, நான் இந்த இடத்திற்கும் அதில் வாழ்வோர்க்கும் தீங்கு வரச் செய்வேன்.17 ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்து விட்டு, வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினர். அவர்கள் தங்கள் கைவினையான சிலைகள் அனைத்தாலும் எனக்குச் சினமூட்டினர். எனவே இவ்விடத்தின்மேல் கொண்ட என் சினம் கனன்று எரியும்: அதைத் தணிக்க இயலாது.

இந்த ராஜா காலத்தில் மோசே சட்டம் தேடிக் கண்டு பிடித்தனராம்.  ஆனால் எஸ்ரா காலத்தில் வேறொரு கதை

 

 

நெகேமியா 8: ஆண்டின் ஏழாவது மாதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அவர்கள் ஒன்றாயிருந்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டு தண்ணீர் வாசலுக்கு முன்னால் திறந்தவெளியில் அனைவரும் கூடினார்கள். அந்த ஜனங்கள் அனைவரும் எஸ்றா எனும் வேதபாரகனிடம் மோசேயின் சட்டப் புத்தகத்தைக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டார்கள். அதுதான் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கர்த்தரால் கொடுக்கப்பட்ட சட்டப் புத்தகம். எனவே, ஆசாரியனான எஸ்றா அங்கே கூடியுள்ள ஜனங்களின் முன், சட்டப் புத்தகத்தைக் கொண்டுவந்தான். இதுவே அம்மாதத்தின் முதல் நாளாகும். இது அந்த ஆண்டின் ஏழாவது மாதமாகும். அக்கூட்டத்தில் ஆண்களும் பெண்களுமாகக் கவனித்துக்கொள்ளவும் புரிந்துக்கொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தனர். எஸ்றா அதிகாலையிலிருந்து மதியம்வரை சட்டப் புத்தகத்திலிருந்து உரத்த குரலில் வாசித்தான். அவன் ஆண்களும் பெண்களுமாய் கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தவர்களிடம் வாசித்தான். அனைத்து ஜனங்களும் கவனமாகக் கேட்டனர். சட்டப் புத்தகத்தில் கவனம் வைத்தனர்.

 

எஸ்றா  சட்டப்புத்தகத்தை உரத்த குரலில் ஆண்களும் பெண்களுமாய் கவனித்து புரிந்துகொள்ள வாசித்தான்.  அதாவது எஸ்ரா காலத்தில் சட்டங்கள் உருவானது என்பது தெளிவாக்கும்.  

சாமுவேல், இராஜாக்கள் நாளாகமம் எஸ்றா நெகேமியா – இந்த தலைப்பில் உள்ள புத்தகங்கள் பொ.மு. 400 – 300 வாக்கில் பழங்கதைகளை தொகுத்து, யூத மதத்தினை சீர்படுத்தியதாக சொல்ல்ப்படும்.
பைபிளியல் அறிஞர்கள்படி- 4 பிரிவினர் – எல், யாவே என கடவுள் பெயரை வைத்து புனைந்தவர், ஜெருசலேமில் மட்டுமே என்னும் உபாகமக் குழு, யூதப் பாதிரிகள் லேவியருக்கெ உரிமை எனும் நான்கு பிரிவினர் புனைந்தனர்.இதில் மேலுள்ள ராஜா காலத்தில் உபாகமம் சிலவும், எஸ்ரா காலத்தில் சிலவும் வடிவு பெற, கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இன்றைய வடிவம் பெற்றது.

இதில், மேலுள்ள ராஜா காலத்தில் மோசே சட்ட நூல் கண்டுபிடித்து எடுத்ததாகக் கதை, இக்காலத்தில் உபாகமத்தின் சில பகுதிகள் புனையப் பட்டதாக பைபிளியலாளர் ஆய்வுகள் மெய்ப்படுத்திகின்றது. எஸ்ரா படித்தது, மோசே சட்டப் பகுதியில் “பா” மரபு, இவர் காலத்திற்குப் பின்பு கிரேக்க காலத்தில் தான் இன்றைய வடிவில் பொ.மு. 300- 200 இடையே சட்டங்கள் உருவாகின என்பது நடுநிலை பைபிளியல் அறிஞர்கள் பைபிள் அடிப்படையில் ஏற்பது.

 இவற்றைப் பல பைபிளியல் நூல்களும் உறுதிப் படுத்துவதையும் காணலாம்.

//In the years, 539 – 333 BCE, the Persian empire was dominant and it was in this period that Judaism consolidated as a religion based on the Bible.
Authoritative tradition which appears to suggest that Ezra, a priest and scribe from Babylon was an agent of Persian Government in establishing the Torah as the nation law of Judeans in Judea and Syria. He was either a contemporary of Nehemiah in the mid 5th Century BCE or lived a century later ..  Nothing outside the Bilbe adds anything of Historical value to the Picture of Moses.// Lions Hand book of Religions ; page- 280
Many laws in the Pentateuch or Torah, the first five books were not different from those of the surrounding nations. “ page- 238, Vol.3, Grolier’s Encyclopedia.
“Although there was no canonization of a complete tradition text until late 2nd century CE, no change was made in the basic structure of the Pentateuch and Historical books after the 3rd or 2nd Century BCE” .Pictorial Biblical Encyclopedia; Page -173.
//”The OT Genealogies are mostly the work of the Pentateuchal Priestly writer in the Persian Period from 6th to 4th Century BCE. .. Some such as Genesis Chapters 4-5 have parellels in Babylonian Literature”.// New Catholic Encyclopedia, Vol-6, Page 319

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

மோசே தான் சட்ட்ங்கள் பெற்றதாக் ஏசு சொன்னதாக சுவிசேஷங்கள் புனைகின்றன.

மாற்கு 10:3இயேசு அவர்களிடம் மறுமொழியாக, ‘ மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன? ‘ என்று கேட்டார். 4 அவர்கள், ‘ மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார் ‘ என்று கூறினார்கள்.   5 அதற்கு இயேசு அவர்களிடம், ‘ உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே  இக்கட்டளையை எழுதி வைத்தார்.

செங்கடல்-கதை :  New Catholic Encyclopedia Vol-5 page-745 “Mention of the Red Sea in the Exodus context is a misnomer to be attributed to early Septuaginal editor. One has to glance at any map to see the complete lack of relevance the Red sea has to the entire narrative of Exodus. The Hebrew term Yamsup signifies Reed sea. ” New Catholic Encyclopedia Vol-5 page-745

மோசஸ் எழுதியதான நியாயப்பிரமாணத்தில் செங்கடல் என வந்ததற்கு கிரேக்கர்கள்   தவறான மொழி பெயர்ப்பு  காரணமாம் -அமெரிக்க  கத்தோலிக்க  பல்கலைக்  கழகத்தின்  கத்தோலிக்க கலைக்களஞ்சியம் சொல்கின்றது.  இது  நியாயப்பிராமாணங்கள்  அல்லது  புனையப் பட்டதே பொ.மு. 300௨00 வாக்கில் என்பதைநிருபிக்கும்.
“இஸ்ரயேலரின் வரலாறு”- – ஆர்,எட்வர்ட் சாம், தமிழ் தியொலொஜிகல் புக் க்லப், மதுரை 1996. .( (First Edition in 1966; this is 3rd edition)
ஒருவேளை, இஸ்ரயேலர் எந்தக் காலத்தில் எகிப்துக்குள் சென்றனர் என்ற கேள்வியே தவறாயிருக்கலாம், ஏனெனில் இஸ்ரயேலர் என்ற சிறப்புப் பெயரோடு தனித்தியங்கிய மக்கட் கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்ததில்லை.- பக்- 60
இப்பயண வரலாற்றில் காணப்படும் பல இடங்கள் இன்னும் கண்டு பிடிக்க- வில்லை. எனவே, பயணப் பாதை, எதுவெனத் திட்டமாய்க் கூறுவதற்கு இல்லை. செங்கடலைக் கடந்திருந்தாலும் எகிப்தியக் குதிரை படைகளால் பிடிபட்டிருப்பர். என்வே, இது சாத்தியமென்று கூறப்படும் அளவு அன்று செங்கடல் நீளமுள்ளதாயிருக்கவில்லை எனக் கருத இன்று சான்றுகளுண்டு. – பக்  90- 91
ஆதியாகமம் பெயர்தரும் ஒரு வரலாற்று மனிதர் பெயரைக்கூட புறச்சான்றுகளால் உறுதிப்படுத்த இயலவில்லை. முக்கியமாக, அவர்களின் பெயர்களில் ஒன்றாயினும் கல்வெட்டுக்களில் கிடைக்கவில்லை. எனவே, பொதுவான பொருளில் வரலாறு எழுதுவது இயலாத செயலே. பக் 49

 

நூல்- : “நிஜங்கள்-விவிலியம் பற்றிய கேள்வி –பதில்” ; –கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் தெயோபிலஸ்இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என நிகில் ஒப்ஸ்டட் என்னும் முத்திரை அங்கிகாரம் கொடுத்துமுள்ளனர். 
தொடக்கத்தில் உள்ள முதல் 11 அதிகாரங்கள் சரித்திரத்தில் நிகழ்ந்தவை அல்ல என வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனிதன் தந்து சமுதாயத்தில் நிலவிய புதிர்களுக்க்ப் பதிலைத் தேடினர்(உ-ம் படைப்பு, பாவம், சாவு, துன்பம்…)இதற்குரிய பதிலகளைப் “படைப்பு” போன்ற புராண (Mythological) கதைகள் வழியாகக் கூறுகிறான், படைப்பை எவரும் பார்த்தது கிடையாது, பார்க்கவும் முடியாது. மனிதனே இந்தப் படைப்பை இப்படிப் பற்றி புரிந்து கொண்டுள்ளதன் விளக்கமே, இந்தக் கதைகளில் கூறப்பட்டுள்ளது போலத்தான் நடந்தன என்று சொல்ல முடியாது. — பக்கம் 15
அதே சமயத்தில், ஆபிரகாமைப் பற்றி விவிலியத்தில் காணப்படுகின்ற அத்தனை சம்பவங்களையும் உண்மை வரலாற்று நிகழ்வுகளென யாரும் கருத முடியாது. ஏனெனில் விவிலியம் ஒரு இறையியல் வரலாறு. பக்௧17

 
 இதனிடையே நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று. மேற்கத்திய நாடுகளின் பெரும்பாலனோர் கிறிஸ்துவர், இவர்கள் பைபிள் கடவுள் வார்த்தை எனும் நம்பிக்கையில் 19, 20ம் நூற்றாண்டின் சில புதைபொருள் ஆய்வாளர்கள் எந்த ஒரு தேடுதலையும் பைபிளோடு இணைத்து பைபிள் சரியானது என மேம்போக்கான பார்வையில் புனைந்தனர். ஆனால் கிடைத்த பொருட்களை தெளிவாக ரேடியோ கார்பன் 14 மூலம் தெளிவாக காலம் குறிக்கும் அறிவியல் வர பழைய ஆய்வுகள் தவறு என உடைந்தது.   இதில் ஒரு பெரும் முயற்சி இதில் ஒரு பெரும் முயற்சி  இஸ்ரேல் ப்ராங்கிஸ்டன் எனும் அன்றைய இஸ்ரேல் டெல்-அவிவ் பல்கலைக் கழக புதைபொருள் ஆய்வுத் துறை துணைத் தலைவர் நூல் “The Bible Unearthed” ,   தற்போது தலைவர், இதற்கு பெரும் எதிர்ப்பு ஆரம்பத்தில் எழுந்தாலும் பெருமளவில் ஏற்கப்பட்டது, ஏன் என்றால் ஆய்வின் தரவு தெளிவானது. 

20க்கும் மேற்பட்ட பைபிள் வசனங்களில் ஒட்டகத்தை வீட்டு கொட்டிலில் ஆபிரகாம் வைத்து இருந்ததாகக் கதை.  ஒட்டகங்கள் அரேபியாவில் இருந்தன, அது பற்றி சில கல் குகை வரைபடங்கள் உள்ளன.

ஆனால் முழுமையாக பழக்கப்பட்டு வீட்டு கொட்டிலில் கட்டிவைத்து வாழ்ந்தது எப்போது, என்பதே கேள்வி. இது பற்றி விக்கிபீடியா சொல்வது ஏசுவிற்கு 100 -200 ஆண்டுகள் முன்பு தான் பரவலாக ஒட்டகம் பயன்படுத்தியதைக் காண்கிறோம்– இங்கே
// The mention of the dromedary in Exodus 9:3 also suggests a later date of composition – the widespread domestication of the camel as a herd animal did not take place before the late 2nd millennium, after the Israelites had already emerged in Canaan, and they did not become widespread in Egypt until c.200–100 BCE.//
images?q=tbn:ANd9GcR44HTZFCdIqoqX_J1cqVk 9k=
தற்போது மேலும் ஒரு தரமான ஆய்வு வெளியீடு, இதுவும் இஸ்ரேலின் டெல் அவிவ் ல்கலைக்கழக ஆய்வாளர்களான லிடார் சேபிர்-ஹென் மற்றும் ஈரேஸ் பென்-ஜோசெப் ஆகியோர்-இதுவரை அறியப்பட்ட அதி புராதன ஒட்டக எலும்புகளில்  மேற்கொள்ளப்பட்ட  கார்பன் வயதறிமுறை ஆதாரங்களைக் காட்டி  மத்திய கிழக்கில் ஒட்டகங்களின் வருகை கிறிஸ்து காலத்திற்கு  9 நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான்  என இவர்கள் கூறுகிறார்கள்.

இவற்றின் இணைப்புகள் இங்கே ஒன்றுஇரண்டு

 நியாயப்பிரமாணங்கள் பொ.மு.300- 200 இடையே  கிரேக்க காலத்தில், அடிமைப்பட்டு இருந்த காலத்தில், மக்களை நாம் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், இந்நாட்டு ஆட்சி உரிமை நமக்கு இஸ்ரேலின் எல்லை தெய்வம் தந்தது எனப் புனையப் பட்டவையே.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஆபிரகாம் – இயேசு கிறித்து – திருவள்ளுவர் வரலாற்று மனிதர்களா?

முகநூலில் ஒரு முகம்மதியர் ஆபிரகாம் பற்றிய நம் முன்னர் கட்டுரையை இட்டு கேள்விகள் எழுப்ப, கிறிஸ்துவர் ஒருவர் திருவள்ளுவர் வாழ்ந்த காலம் தெரியுமா, அப்படி வாழ்ந்தார் என ஏற்பதில்லையா என்றனர். நாம் மேலும் விரிவாகக் காண்போம். 

 ஆதியாகமம் 11:28 ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தெராகிற்கு முன்பே இறந்தான். 29 ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. மில்கா ஆரானின் மகள். மில்கா, இசுக்கா ஆகியோரின் தந்தை ஆரான். 

http://en.wikipedia.org/wiki/Chaldea    Chaldeans –கல்தேயர் -இப்பெயர்களே  பொ.மு. 1000- 600 இடையிலே தான். இன்னுமொரு கதை ஆபிரகாம் கதையில் – 

 images?q=tbn:ANd9GcR44HTZFCdIqoqX_J1cqVk  Zஇயேசு ஒரே நேரத்தில்                                                                                             தாய் குதிரை மற்றும் குட்டி மீது அமர்ந்து                                                                        ஜெருசலேம் வந்தார். 

ஆதியாகமம்24: 29-30 அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் லாபான். அவள் சொன்னதையெல்லாம் அவன் கேட்டான். அவன் அவளது காதணிகளையும் கடகங்களையும் பார்த்துவிட்டு கிணற்றருகே ஓடினான். அங்கு கிணற்றருகில் ஒட்டகங்களையும், வேலையாளையும் கண்டான்.   31 அவனிடம், “ஐயா, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உங்களை எங்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம். இங்கே வெளியே நீங்கள் நின்றுகொண்டிருக்க வேண்டாம். நீங்கள் இளைப்பாற ஒரு அறையை ஏற்பாடு செய்துள்ளேன். உங்கள் ஒட்டகங்கள் தங்கவும் ஏற்பாடு செய்துள்ளேன்” என்றான்.  32 ஆபிரகாமின் வேலைக்காரன் அந்த வீட்டிற்குப் போனான். லாபான் அவனுக்கு உதவினான். ஒட்டகங்களுக்கு உணவு கொடுத்தான்.

ஒட்டகங்களை மனிதன் பழக்கப்படுத்தி பயன்படுத்தியதே பொ.மு. 9ம் நூற்றாண்டில் தான். ஆபிரகாம், மோசே தாவீது காலத்திற்கு எல்லாம் பின்னே தான்.


வேதாகமத்தில் வரலாற்று

 முரண்பாடுகள் | (இங்கே)

அகழ்வாய்வு நிபுணர்கள்!

 
 
Camels appear in stories of early Jewish patriarchs in the Bible, even though itSee More

ஆதியாகமம்: 12:10 – 20 கர்ட்தர் தேர்ந்தெடுத்த கானான் தேசத்தில் பஞ்சம் வர எகிப்து செல்ல எகிப்து மன்னன் ஆபிரகாம் மனைவி சாராளை காதலோடு நோக்குவதைத் தடுக்க சாராளைத் ஆபிரகாம் தங்கை என்றாராம்.  ஆதியாகமம்20:1-11பிறகு மீண்டும் இதே கதை கேரார் நாட்டில்கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்குவிடமும் சாராள் தங்கை என்றதாக கதை  
sarah-at-65.jpg                                                               sarah-at-90.jpg

75 வயதில் சாராள் அழகில்                        90 வயதில் சாராள் அழகில்
 எகிப்து மன்னர் மயங்கியபோது            பிலிஸ்திய  மன்னர் மயங்கியபோது இந்த இரண்டு கதையில் ஆபிரகாமின் மனைவி கிழவி, இரண்டாவது கதையின் போது மாதவிடாய் நின்றுபோனவள். ஆனால் ஒரு நாட்டு ராஜா கிழவியை காதலுடன் பார்த்ததாக் கேவலமான கதை.  

 
 

ஆபிரகாம் மகன் ஈசாக்கும் இதே கதை அதுவும் இதே  கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்குவிடமும் எனக் கதை ஆதியாகமம்26:1-6

ராஜா அபிமெலேக்கு என்பது பிலிஸ்தியப் பெயர். பொ.மு.12- 8 ஆம் நூற்றாண்டிற்குப் பின் வந்தவர்கள். ( ஆனால் ஆபிரகாம் பொ.மு.20ம் நூற்றாண்டுகாரர்)
ஆபிரகாம் – இசாக் கதை பற்றி யூதக் கலைகளஞ்சியம் சொல்வது –இந்தக் கதைகள் பிதாக்கள் கர்த்தரிடம் செல்வாக்குடையவர்கள்-பாதுகாப்பு பெற்றவர்கள்,  மனைவிகள் அழகானவர்கள் எனக்காட்ட புனையப்பட்ட கதைகள்
Jewish Encyclopedia,

“From the point of view of the history of culture these episodes are very instructive. But it is not very probable that Abraham would have run the risk twice. Moreover, a similar incident is reported in regard to Isaac and Rebecca (Genesis 34:6-11). This recurrence indicates that none of the accounts is to be accepted as historical; all three are variations of a theme common to the popular oral histories of the Patriarchs. That women were married in the way here supposed is not to be doubted. The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity.”

 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இயேசு கிறித்து –  
சுவிசேஷக்கதைகளுக்கு வெளியே ஏசு என்பவர் பற்றி ஏதும் ஆதாரங்கள் கிடையாது. சுவிசேஷக் கதைகள் புனையப்பட்டது எப்போது.
பொ.கா. 30 அல்லது 33, சுவிசேஷக் கதைகளின் நாயகர் மரணம் அடைந்தார்.  இவர் சீடர்களுடன் ஒரு வருடத்திற்குக் குறைவாகவோ அல்லது இரண்டு வருடங்களோ 
இயங்கினார்.    ஏசு  கதை சொல்லும் முதல் புனையல் 65- 75,  அதாவது ஏசு மரணத்திற்கு  40 -45வருடம் பின்பு,  அன்றைய சராசரி ஆயுள் 42. முதல் சுவிசேஷக் கதைகள் புனைந்த போது கண்ட சாட்சிகள்– மிகவும் குறைவு
கிறிஸ்துவப் புராணக் கதை நாயகன் இயேசு எந்த வருடம் பிறந்தார், பெற்றோர் யார் எனப் பார்ப்போம்.
இறந்த ஏசுவை, தாவீது ராஜாவின் பரம்பரையினர் என்று நம்பி, நிருபிக்க சுவி கதாசிரியர்கள், பழைய ஏற்பாடு துணை கொண்டு, அதையும் திரித்து, தன்னிச்சையாய்-தனித்தனியாக புனைய வந்ததே இப்பட்டியல்கள்.  யோசேப்பினால் கர்ப்பம்  இல்லை எனில் அவர் தாவீது பரம்பரையே இல்லை. 

மத்தேயு சுவிசேஷம் கதைப்படி பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப்வீட்டில்பொ.மு.6ல் பிறப்பு.ஏரோது 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொல்வதாகக் கதை, தப்ப எகிப்து ஓடுவார் யாக்கோபு மகன் ஜோசப், பின்னர் திரும்பி வரும்போது யூதேயாவை ஏரோது மகனே ஆழ்வதால் நாசரேத் வந்ததாகக் கதை.  கலிலேயாவை ஆண்டதும் ஏரோது மகனே.
லுக்கா சுவிசேஷம் கதைப்படி   நாசரேத்தில் வாழ்ந்தஏலி மகன் ஜோசப் நாசரேத் வாழ்பவர்,பொ.கா.8ல் நடந்த சென்செஸ் போது பெத்லஹேம் வர, தங்க விடுதி கிடைக்காது, மாட்டுத்தொழுவத்தில் குழந்தை பிறந்ததாம். பின் ஜெருசலேம் சென்று சொந்த ஊர் திரும்பியதாகக் கதை. 
வாட்டிகன் போப்பரசரும் 2007ன் கிறிஸ்துமஸில் மத்தேயூ கதையை ஏற்று லூக்கா கதை மாட்டுத் தொழுவத்தை நீக்கினார்.
http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html 
இரண்டு சுவிகதைகளும் வெவ்வேறு கதாசிரியர்களால் வெவ்வேறு ஊர்களில் புனையப்பட்டன, இதில் ஒன்று, அதில் ஒன்று என இணைத்தால் சொல்பவர் மேலும் பல புது சுவிகதை உருவாக்கும் பைத்தியக்காரத்தனம் செய்வார்.

 இயேசு சீடர்கள் ஏசு கைதான போது என்ன செய்தார்கள்? 

மாற்கு 14: 45 யூதாஸ் இயேசுவிடம் வந்து அவரை முத்தமிட்டு “போதகரே” என்றான். 46 உடனே அவர்கள் இயேசுவின் மேல் கை போட்டுக் கைது செய்தனர்.47 இயேசுவின் அருகில் நின்ற ஒரு சீஷன் தன் வாளை உருவி இயேசுவைப் பிடித்தவனின் காதினை அறுத்தான். காது அறுபட்டவன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரன்.48 இயேசுவோ, “ஒரு குற்றவாளியைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாளோடும் தடிகளோடும் வந்துள்ளீர்கள். 49 நான் எப்போதும் உங்கள் மத்தியில் ஆலயத்தில்தானே உபதேசம் செய்து கொண்டிருந்தேன். அங்கே நீங்கள் என்னைக் கைது செய்யவில்லையே. எல்லாம் எழுதப்பட்டிருக்கிறபடி நடைபெற்றது” என்றார். 50 அவரது சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள்.

51 ஓர் வாலிபன் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்தான். அவன் ஒரு மேலாடை மட்டும் அணிந்திருந்தான். அவர்கள் அவனையும் பிடித்து இழுத்தார்கள். 52 ஆனால் அவனோ மேலாடையைப் போட்டுவிட்டு நிர்வாணமாக ஓடினான். 

கதைப்படி இறந்தபின் மீண்டும் பழைய உடம்பில் உயிர் பெற்று எழுந்து வந்ததான ஏசு காட்சி கலிலேயவில் தான்.

மாற்கு 16: இப்போது சென்று அவரது சீஷர்களிடம் கூறுங்கள். பேதுருவிடம் கட்டாயம் கூறுங்கள். இயேசு கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார். உங்களுக்கு முன்னால் அவர் அங்கிருப்பார்.உங்களுக்கு ஏற்கெனவே சொன்னபடி நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள்” என்றான்.

மத்தேயு 28:7உடனே அவரது சீஷர்களிடம் விரைந்து சென்று சொல்லுங்கள். ‘இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார்.அவர் கலிலேயாவிற்குச் சென்றுகொண்டிருக்கிறார். அவர் உங்களுக்கு முன்னரே அங்கிருப்பார்.’ அங்கே நீங்கள் இயேசுவைக் காணலாம். இதோ நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்” என்று கூறினான். 16 பதினொரு   சீஷர்களும் கலிலேயாவில் இயேசு கூறிய மலைக்குச் சென்றார்கள்.   17 மலை மீது இயேசுவை சீஷர்கள் கண்டு, வணங்கினார்கள். ஆனால் சில சீஷர்கள் அவர் உண்மையாகவே இயேசு என்று நம்பவில்லை.

சீடர்களுக்கு ஏசு முன்பே தான் கைதாவேன், தூக்குமரத்தில் தொங்க விடப் படுவேன் என்று சொல்லி இருந்தாராம் கதைப்படி. அத்தோடு இறந்தபின் மீண்டும் பழைய உடம்பில் உயிர் பெற்று எழுந்து காட்சி கலிலேயா மலையில் என்றும் தீர்க்கம் சொல்லி இருந்தாராம்.

மாற்கு 14: 28ஆனால் நான் இறந்த பிறகு மரணத்திலிருந்து எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கிருப்பேன்” என்றார். 

மத்தேயு 26:32 ஆனால் நான் இறந்தபின், மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன். பிறகு கலிலேயாவிற்கு செல்வேன். நான் உங்களுக்கு முன்னே அங்கிருப்பேன்” என்றார்.

 

 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இந்த தீர்க்கம் லூக்காவின் ஏசு சொல்லவே இல்லை, ஏன் எனில் லூக்காவின் ஏசு, ஈஸ்டர் ஞாயிறு அன்று ஜெருசலேமில் காட்சி பின் மேலுலம் அன்றே தூக்கி செல்ல்ப்படுகிறார். 

சீடர்கள் ஏசுவைப் புரிந்து கொள்ளவே இல்லை. ஆனால் மதம் பரப்புவோரின்படி ஏசு பழைய உடம்பில் மீண்டும் உயிரோடு வந்து காட்சி தந்தபின் சீடர்கள் தெளிவாகி, மதம் பரப்ப, சுவிசேஷங்கள் சீடர்கள் சொன்ன கதைகளின் அடிப்படையில் செவிவழிப் பாரம்பரியமாக வரையப்பட்டன. இயேசு சொன்னதையே புரிந்து கொள்ளாத சீடர்கள், அவர் சொன்னதை அப்படியே நினைவில் வைத்து இருந்தனராம். தெளிவான சிந்தையுள்ளோர் யாரும் இவ்வாறு சொல்வது உளறல் என ஏற்பர்.
 
மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் விவிலிய விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்தகாலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள்  “The Real Jesus” என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்The Conclusion usually (and I think rightly) drawn from their comparitive study, is that Gospel of Mark (or something very like it) served as a source for Gospel of Matthew 7 Luke, andthat two also had access to a collections of saying of Jesus (Conveniently labelled “Q”}  …..   Page -25. 
“Whereas Synoptic record most of Jesus ministry is located in Galilee,  John place most of it in Jerusalem and its neighbourhood.” – Page-27 – THE REAL JESUS.
Bible Scholar  A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதியஏற்பாடு பேராசிரியர்– ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்– “If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned. 4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.  நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு 
இயங்கியதுகலிலேயாவில் என்றும், –ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக   மரணத்தின் போது  மட்டுமே ஜெருசலேம் வந்தார்மேலும் –ஞானஸ்நானர்   யோவான் கைதிற்குப்பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும்
நான்காவது சுவியோவேறுவிதமாகமுதல் ஆறு அத்தியாயங்களில் 
யுதேயாவிலும்  கலிலேயாவிலும் முன்னும்பின்னும் இயங்கியதாகவும்;  ழாம்   அத்தியாயத்திற்குப் பின் முழுமையாக ஜெருசலேமிலும்   யூதேயாவிலும்   எனச்சொல்கிறார்யோவன்3:24- ஞானஸ்நானர்   யோவான் கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.//
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

மாற்கு சுவிசேஷக் கதைகலிலேயாவைச் சேர்ந்த ஏசுயூதேயாவின் வனாந்திரத்தில்
வாழ்ந்த யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கும்ஏசு பிறப்புக்
கதைகள் கிடையாதுமேலே பார்த்தபடி ஏசுவிற்கு உடன்பிறந்த சகோதர சகோதரிகள்   உண்டு.  இவை மத்தேயு லுக்காசுவிசேஷங்களில்  முதல் ஓரிரு   அத்தியாங்களாக  உள்ளனஇவற்றை பைபிளியலில் குழந்தைப் புனையல்கள் எனப்படும்.இவை பற்றி  அமெரிக்காவின் கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் புதிய கத்தோலிக்கக்  கலைக் களஞ்சியம்   கூறுவது  –  குழந்தைப் புனையல்கள்   என்பவை பிற்காலத்தில் மிகைப் படுத்தப் பட்டவை என்பதில் எந்த   சந்தேகமும்   இல்லை,சர்ச்சின் அப்போஸ்தலர் கதைகள்–  யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம்பெறுதலில் தொடங்கி ஈஸ்டர்  அன்றுசொர்கம் சென்றார் என்பதோடு மட்டுமே ருந்தது..” 

//There seems to be no doubt that Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and end with Ascension.// Vol-14 Page- 695-New Catholic Encyclopedia.
இது பற்றிய கத்தோலிக்க பைபிள் விளக்க நூல்- இரு ஆர்ச் பிஷப் அங்கீகாரத்தோடு எழுதப்பட்ட நூலில் உள்ளதைப் பார்ப்போம் .  //The tradition of the existence of an Aramaic or Hebrew version of Matthew also generates more problem than it solves. .. Why does Papias say Hebrew, when Jesus spoke Aramaic? Did Papias have any special reasons for placing Matthew’s Gospel before Marks? All these questions indicate that the ascription to Matthew the apostle and the tradition of an Aramaic or Hebrew version of Matthew involve too many problems for us place much reliance on them in interpreting the Gospel. // Page-863. Daniel J.Harrington. S.J. in “The Collegeville Bible Commentary”

 வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.
திருவள்ளுவர்:
2ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர், அந்த நூலிற்கு அப்பெயர்  எல்லாம் நமக்கு சொல்வது திருவள்ளுவமாலை, அதில் ஒரு பாடல் தந்துள்ளோம்.  திருவள்ளுவமாலை:   உக்கிரப் பெருவழுதியார்
நான் மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த – நூல்முறையை
வந்திக்க சென்னி வாய் வாழ்த்துக நல் நெஞ்சம்
சிந்திக்க கேட்க செவி  
இங்கு வள்ளுவப்பெருமானைப் படைப்புக்கடவுளான பிரம்மனாகக் கூறுகின்றார் உக்கிரப் பெருவழுதியார். நான்முகத்தோனாகிய பிரம்மதேவனே தன்னை மறைத்துக்கொண்டு இவ்வுலகில் வள்ளுவனாய்த்தோன்றி நான்கு வேதங்களின்  (ரிக், எசுா், சாமம், அதா்வணம் ) பொரு்ள்களை அறம், பொருள் இன்பம் எனும் மூன்றுபொருள்களாக இவ்வுலகுக்குத் தந்தான். இந்த நூலாகிய திருமுறையை என் தலைவணங்கட்டும்; என் வாய் வாழ்த்தட்டும்; என் நெஞ்சம் சிந்திக்க அதாவது, தியானிக்கடடும்; என் செவியானது கேட்டுக்கொண்டே இருக்கட்டும். 

இன்று யாருமே திருவள்ளுவரை தெய்வீகர் என்று சொல்வது கூடக் கிடையாது.

ஆபிரகாம் கதையின் அடிப்படை/

ஆதியாகமம்15:18 அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள 19கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 இத்தியர், பெரிசியர், இரபாவியர் 21 எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்” என்றார்.
உபாகமம்20:16 “உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிற நகரங்களில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கொன்றுவிட வேண்டும். 17 அங்குள்ள ஜனங்கள் இனங்களான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியவற்றை முழுமையாக அழித்துவிட வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் இதைச் செய்யக் கட்டளையிட்டுள்ளார்.  

  ஒரு நாட்டில் வாழ்ந்து வரும் மண்ணின் மைந்தரைக் கொன்று அன்னியரை குடிவைத்தர் என்னும் கொள்கையே கடவுள் விரோத அருவருப்பனாதாக உள்ளது.
இஸ்ரேல் சுற்றி எழுந்த அகழ்வாய்வுகள் பைபிள் புராணக்கதைகளை முழுமையாக தவறு என்று நிருபிக்கிறது. அரசியல் ஒற்றுமை ஏற்படுத்த பொ.ச.300-200 இடையே எழுந்தது தான் பழைய ஏற்பாடு என்னும் யூதர்களின் பைபிள். ஆபிரகாம் கதை வெற்று புனையல், அவ்வாறு ஒரு மனிதன் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரமில்லை, அதிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதெல்லம் தெளிவான சிந்தையுள்ளோர் யாரும் இவ்வாறு  யாரும் ஏற்க இயலாத வெற்று கற்பனை.

ஏசு யார்?  பெற்றோர் யார்? ங்கே இயங்கினார்? எத்தனை நாட்கள் சீடரோடு இயங்கினார்? எதிலுமே தெளிவு கிடையாது. ஆனால் தெய்வீகர் என ஏற்க வேண்டுமாம்.
ரோம் ஆட்சிக்கு எதிராக யூதர்களை ஒன்றிணைத்து உலகம் தன் வாழ்நாளில் முடியும் என எதிர்பார்த்து இறந்த மனிதர் ஏசு எனலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பைபிள் பழைய ஏற்பாடு - மோசே சட்டங்கள் எழுதிய கதை ஆசிரியர் மோசே இல்லை

 

 images?q=tbn:ANd9GcQ0vDXWO6hmecsxQ6SdKOC
கிறித்தவ மற்றும் யூதர்களின் நூலாகிய  விவிலியத்தில் (பழைய ஏற்பாடு) முதல் ஐந்து புத்தகங்கள்,-  சட்டங்கள் 
  • தொடக்க நூல் -ஆதியாகமம்
  • விடுதலைப் பயணம்-யாத்திராகமம்
  • லேவியர் -லேவியராகமம்
  • எண்ணிக்கை -எண்ணாகமம்
  • இணைத் திருமுறை -உபாகமம்.
பைபிள் கதைப்படி கானான் என்னும் பகுதியை தேர்ந்தெடுத்து அதை, மெசப்படோமியாவைச் சேர்ந்த ஆபிரகாம் - அவர் வாரிசிஉகளுக்கு என இஸ்ரேலின் சிறு தெய்வம் கர்த்தர் கொடுத்தாராம். புதைபொருள் அகழ்வாராய்ச்சிகளில் இதில் சற்றும் உண்மையில்லை என இஸ்ரேல் டெலவிவ் பல்கலைக் கழக அகழ்வாய்வுத் துறைத் தலைவர் இஸ்ரேல் ப்ராங்ஸ்டைன் என்பவர் "பைபிள் தோண்டப்படுகிறது" என்னும் நுல்லை எழுதினார். அதே போல பஞ்சத்திற்கு பிழைக்க எகிப்து சென்ற எபிரேயர்கள் அடிமையாய் இருக்க 30 லட்சம் எபிரேயர்கள்களை கர்த்தர் ஆசியுடன் மோசஸ் வழிநடத்தினார். எகிப்திலிருந்து 40 வர்டங்கள் 30 லட்சம் எபிரேயர்கள் பயணம் செய்ததாகக் கதை. இப்படி ஒன்று நடந்ததாக புதைபொருள் ஆய்வுகள் ஏற்கவில்லை.  

எகிப்திலிருந்து யாத்திரை வரும்போது இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் யாவே தந்த சட்டங்கள்-என்பது கதை, ஆனால் இவை உருவானவிதத்தை பைபிளே கூறும் கதை.

இயேசுவும் அதை நம்பி அப்படியே சொன்னராம் 
மாற்கு 10:2 பரிசேயர் அவரை அணுகி, ' கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா? ' என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.3 இயேசு அவர்களிடம் மறுமொழியாக, ' மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன? ' என்று கேட்டார்.4 அவர்கள், ' மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார் ' என்று கூறினார்கள்.5 அதற்கு இயேசு அவர்களிடம், உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே இக்கட்டளையை எழுதி வைத்தார்.6 படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ' ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.7 இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.  8இருவரும் ஒரே உடலாய் இருப்பர். ' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.9 எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் ' என்றார்.
http://pagadhu.blogspot.in/2012/07/blog-post_26.html ஆனால் பழைய ஏற்பாடு உள்ளேயே மோசே சட்டங்கள் உருவான கதையைக் காணலாம்.
2இராஜாக்கள்23: 21 பிறகு அரசர் மக்கள் எல்லோரையும் பார்த்து, இவ்வுடன்படிக்கை நூலில் எழுதப்பட்டுள்ளதுபோல் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பாஸ்கா கொண்டாடுங்கள்.22 இந்தப் பாஸ்காவைப்போல், முன்பு இஸ்ரயேலக்குத் தலைமை தாங்கிளய நீதித் தலைவர்களின் காலத்திலோ, இஸ்ரயேல், யூதா அரசர்களின் எல்லாக் காலங்களிலுமோ கொண்டாடப்பட்டதில்லை.23 யோசியா ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் எருசலேமில் ஆண்டவரின் பாஸ்கா கொண்டாடப்பட்டது.
பஸ்கா, கூடாரப் பண்டிகை போன்றவை உண்மையில் விவாசய அறுவடைக் காலப் பண்டிகைகள். பஸ்கா, கூடாரப் பண்டிகை, பெந்தகோஸ்து போன்றவை உண்மையில் விவாசய அறுவடைக் காலப் பண்டிகைகள்.  லேவியர் 23:5- 31,33- 37 மற்றும் எண் 28:16- 31, 29:1- 15
விவசாயிக்ளின் அறுவடைப் பண்டிகைகளை -யாத்திரையோடு இணைக்கும் கதைகள், 600- 700 வருடம் இல்லாத அளவில் கொண்டாட்டமாம்.

இந்த ராஜா காலத்தில் மோசே சட்டம் தேடிக் கண்டுபிடித்தனராம்.

2 இராஜாக்கள்22:8தலைமைக் குரு இல்க்கியா எழுத்தன் சாப்பானை நோக்கி, ஆண்டவரின் இல்லத்தில் ஒரு சட்ட நூலைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்நூலைச் சாப்பானிடம் கொடுக்க, அவனும் அதைப் படித்தான். 10 மேலும் அவன் அரசரிடம், குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்துள்ளார் என்று கூறி, அரசர் முன்னிலையில் அதைப் படித்துக் காட்டினான்.11 அரசர் சட்டநூலின் வார்த்தைகளைக் கேட்டதும் தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்.12 பின் குரு இல்க்கியாவையும் சாப்பானின் மகன் அகிக்காமையும், மீக்காயாவின் மகன் அக்போரையும், எழுத்தன் சாப்பானையும் அரச அலுவலன் அசாயாவையும் நோக்கி, அரசர் இட்ட கட்டளை இதுவே:13 நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும், யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள்.16ஆண்டவர் கூறுவது இதுவே: யூதாவின் அரசர் படித்த அந்த நூலின் வார்த்தைகளின்படி, நான் இந்த இடத்திற்கும் அதில் வாழ்வோர்க்கும் தீங்கு வரச் செய்வேன்.17 ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்துவிட்டு, வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினர். அவர்கள் தங்கள் கைவினையான சிலைகள் அனைத்தாலும் எனக்குச் சினமூட்டினர். எனவே இவ்விடத்தின்மேல் கொண்ட என் சினம் கனன்று எரியும்: அதைத் தணிக்க இயலாது.

இந்த ராஜா காலத்தில் மோசே சட்டம் தேடிக் கண்டுபிடித்தனராம்.

ஆனால் பின் எஸ்ரா காலத்தில் இன்னொரு கதை
எஸ்ரா1:1 எரேமியா வழியாக வெளிப்படுத்தப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி பாரசீக மன்னர் சைரசின் முதல் ஆண்டில்தூண்டினார். எனவே சைரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்து, அதைத் தம் நாடெங்கும் எழுத்துமூலம் வெளியிட்டார்
எஸ்ரா3:2அப்பொழுது யோசதாக்கின் மகன் ஏசுவாவும் அவருடைய சகோதர குருக்களும், செயல்தியேல் மகனான செருபாபேலும், அவருடைய சகோதரர்களும், கடவுளின் மனிதரான மோசே திருச்சட்டநூலில்   எழுதியுள்ளபடி  எரிபலிகள் ஒப்புக்கொடுக்க இஸ்ரயேலின் கடவுளுக்கு ஒரு பலிபீடம் கட்டியெழுப்பினர்.
எஸ்ரா 4:11 மன்னர் அர்த்தக்சஸ்தாவுக்கு அனுப்பிய கடிதத்தின் உட்பொருள் இதுவே..
24 எருசலேமில் உள்ள கடவுளின் கோவில் வேலை தடைப்பட்டு, பாரசீக மன்னர் தாரியு ஆட்சியின் இரண்டாம் ஆண்டுவரைநிறுத்தப்பட்டிருந்தது.
எஸ்ரா6:14 இறைவாக்கினர் ஆகாயும் இத்தோவின் மகன் செக்காரியும் இறைவாக்கு உரைத்ததன் விளைவாக யூத மூப்பர்கள் கோவிலைக் கட்டினர்: வேலையும் முன்னேறிக்கொண்டிருந்தது. இஸ்ரயேலின் கடவுளது ஆணையாலும், பாரசீக மன்னர்களான சைரசு, தாரியு, அர்த்தக்சஸ்தா ஆகியோரின் கட்டளையாலும் அவர்கள் கட்டடப்பணியை முடித்தனர்15 மன்னர் தாரியு ஆட்சியின் ஆறாம் ஆண்டிலே, அதார் திங்கள் மூன்றாம் நாளிலே, கோவில் வேலை நிறைவுற்றது.
எஸ்ரா7:1இதன்பின், பாரசீக மன்னரான அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக் காலத்தில் எஸ்ரா பாபிலோனிலிருந்து புறப்பட்டார்.
12 மன்னர்களின் மன்னரான அர்த்தக்சஸ்தா என்னும் நான் விண்ணகக் கடவுளின் சட்டத்தில் வல்லுநரான குரு எஸ்ராவிற்கு வாழ்த்துக்கூறி எழுதுவது:13 என் ஆட்சிக்குட்பட்ட இஸ்ரயேல் மக்களினத்திலும், குருக்களிலும், லேவியர்களிரும் விருப்பமுள்ளவர்கள் உம்மோடு எருசலேமிற்குச் செல்ல நான் அனுமதி வழங்குகிறேன்.
இம்மன்னர்களில்  தாரியு, அர்த்தக்சஸ்தா- 1, தாரியு- 2,அர்த்தக்சஸ்தா- 2  அர்த்தக்சஸ்தா- 3, தாரியு- 3 என்ற வரிசையில் பொ.மு.330 வரை ஆண்டதாக வரலாறில் கூறுகின்றனர்
பைபிளியல் அறிஞர்கள்படி- 4 பிரிவினர் - எல், யாவே என கடவுள் பெயரை வைத்து புனைந்தவர், ஜெருசலேமில் மட்டுமே என்னும் உபாகமக் குழு, யூதப் பாதிரிகள் லேவியருக்கெ உரிமை எனும் நான்கு பிரிவினர் புனைந்தனர்.இதில் மேலுள்ள ராஜா காலத்தில் உபாகம சிலவும், எஸ்ரா காலத்தில் சிலவும் வடிவு பெற, கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இன்றைய வடிவம் பெற்றது, எபிரேயத்திலும் கிரேக்கத்திலும் ஒரே சமயத்தில் தான் புனையப்பட்டது.
ஆனால் பழைய ஏற்பாடு புனையல் அடிப்படை- யூதர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், யூதர்களைக் காப்பாற்ற செங்கடல் இரண்டாகப் பிளந்து தூணாக நின்று வழிவிட்டதாகக் கதை. இஸ்ரேலின் ஆட்சி உரிமை அவர்களுக்கு என நிலை நாட்ட அரசியல் சூழ்ச்சியே இப்புனையல்கள்
ஆபிரகாம் - இசாக் கதை பற்றி யூதக் கலைகளஞ்சியம் சொல்வது-Jewish Encyclopedia,
"From the point of view of the history of culture these episodes are very instructive. But it is not very probable that Abraham would have run the risk twice. Moreover, a similar incident is reported in regard to Isaac and Rebecca (Genesis 34:6-11). This recurrence indicates that none of the accounts is to be accepted as historical; all three are variations of a theme common to the popular oral histories of the Patriarchs. That women were married in the way here supposed is not to be doubted. The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity."
ஆபிரகாம் - இசாக் கதை பற்றி  யூதக் கலைகளஞ்சியம் சொல்வது
ஆபிரகாம் வாழ்வில் இரண்டுமுறை- மனைவி தங்கை என்பது வாய்ப்பில்லை.அதைவிட இதே சம்பவம் மகன் இசாக்-ரெபெக்கா காலத்திலும் என்பது இவை நம்புதலுக்கு உள்ளவை அல்ல என்பது தெளிவாக்கும். இக்கதைகள் பிதாக்கள் மனைவிகள் அழகானவர்கள்- இஸ்ரேலின் யாவே- சிறு தெய்வம் பாதுகாப்பு பெற்று இருந்தனர் எனக் காட்ட எழுந்த கதையே.
செங்கடல்-கதை New Catholic Encyclopedia Vol-5 page-745 “Mention of the Red Sea in the Exodus context is a misnomer to be attributed to early Septuaginal editorOne has to glance at any map to see the complete lack of relevance the Red sea has to the entire narrative of Exodus. The Hebrew term Yamsup signifies Reed sea. ” New Catholic Encyclopedia Vol-5 page-745
மோசஸ் எழுதியதான நியாயப்பிரமாணத்தில் செங்கடல் என வந்ததற்கு கிரேக்கர்கள்   தவறான மொழி பெயர்ப்பு  காரணமாம் -அமெரிக்க  கத்தோலிக்க  பல்கலைக்  கழகத்தின்  கத்தோலிக்க கலைக்களஞ்சியம் சொல்கின்றது.  இது  நியாயப்பிராமாணங்கள்  அல்லது  புனையப் பட்டதே பொ.மு. 300-200 வாக்கில் என்பதைநிருபிக்கும்.
“இஸ்ரயேலரின் வரலாறு”- – ஆர்,எட்வர்ட் சாம், தமிழ் தியொலொஜிகல் புக் க்லப், மதுரை 1996.( (First Edition in 1966; this is 3rd edition)
ஒருவேளை, இஸ்ரயேலர் எந்தக் காலத்தில் எகிப்துக்குள் சென்றனர் என்ற கேள்வியே தவறாயிருக்கலாம், ஏனெனில் இஸ்ரயேலர் என்ற சிறப்புப் பெயரோடு தனித்தியங்கிய மக்கட் கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்ததில்லை.- பக்- 60
இப்பயண வரலாற்றில் காணப்படும் பல இடங்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. எனவே, பயணப் பாதை, எதுவெனத் திட்டமாய்க் கூறுவதற்கில்லை. செங்கடலைக் கடந்திருந்தாலும் எகிப்தியக் குதிரை படைகளால் பிடிபட்டிருப்பர். என்வே, இது சாத்தியமென்று கூறப்படும் அளவு அன்று செங்கடல் நீளமுள்ளதாயிருக்கவில்லை எனக் கருத இன்று சான்றுகளுண்டு. – பக்  90- 91
ஆதியாகமம் பெயர்தரும் ஒரு வரலாற்று மனிதர் பெயரைக்கூட புறச்சான்றுகளால் உறுதிப்படுத்த இயலவில்லை. முக்கியமாக, அவர்களின் பெயர்களில் ஒன்றாயினும் கல்வெட்டுக்களில் கிடைக்கவில்லை. எனவே, பொதுவான பொருளில் வரலாறு எழுதுவது இயலாத செயலே. பக் 49 
நூல்- : “நிஜங்கள்-விவிலியம் பற்றிய கேள்வி –பதில்” ; –கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் தெயோபிலஸ்இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என நிகில் ஒப்ஸ்டட் என்னும் முத்திரை அங்கிகாரம் கொடுத்து -முள்ளனர். 
தொடக்கத்தில் உள்ள முதல் 11 அதிகாரங்கள் சரித்திரத்தில் நிகழ்ந்தவை அல்ல என வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனிதன் தந்து சமுதாயத்தில் நிலவிய புதிர்களுக்க்ப் பதிலைத் தேடினர்(உ-ம் படைப்பு, பாவம், சாவு, துன்பம்…)இதற்குரிய பதிலகளைப் “படைப்பு” போன்ற புராண (mythological) கதைகள் வழியாகக் கூறுகிறான், படைப்பை எவரும் பார்த்தது கிடையாது, பார்க்கவும் முடியாது. மனிதனே இந்தப் படைப்பை இப்படிப் பற்றி புரிந்து கொண்டுள்ளதன் விளக்கமே, இந்தக் கதைகளில் கூறப்பட்டுள்ளது போலத்தான் நடந்தன என்று சொல்ல முடியாது. -- பக்கம் 15அதே சமயத்தில், ஆபிரகாமைப் பற்றி விவிலியத்தில் காணப்படுகின்ற அத்தனை சம்பவங்களையும் உண்மை வரலாற்று நிகழ்வுகளென யாரும் கருத முடியாது. ஏனெனில் விவிலியம் ஒரு இறையியல் வரலாறு. பக்௧17

  •   நியாயப்பிரமாணங்கள் பொ.மு.300- 200 இடையே புனையப் பட்டவையே.

மோசே இல்லவே இல்லை



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard