Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 01 - History of Development of Christianity கிறிஸ்தவம்உருவானவரலாறு


Guru

Status: Offline
Posts: 7329
Date:
01 - History of Development of Christianity கிறிஸ்தவம்உருவானவரலாறு
Permalink  
 


 கிறிஸ்தவம்உருவானவரலாறு

உலகிலுள்ள எல்லா மதங்களிலும் அறம் சார்ந்த கருத்துக்களும், மனிதர் வாழ்வுக்கான பண்பாட்டு வழிகாட்டலும் அதே சமயம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகளும், முரண்பாடுகளும் உள்ளன. இதை எவராலும் மறுக்கமுடியாது. ஆனால் மூடநம்பிக்கைகளைகளையும் முரண்பாடுகளையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள மதம் கிறிஸ்தவம் என்பது தொ¢யவரும்போது வியப்பு மேலிடும்.

 கிறிஸ்துவ மதம் சுமார் 1700 வருடங்களுக்கு முன் தோன்றுவதற்கு முன்னே ரோமானிய சாம்ராஜியத்திலும், கிரேக்க நாட்டிலும்  மைத்ரேயிசம் (Maithreism) என்ற மதம் வழங்கி வந்தது. யூதர்களால் பேகன் (Pagan) மதம் என்று அழைக்கப்பட்ட இம்மதத்தில் மக்கள் மித்ரா அல்லது மைத்ரேயா என்கிற இந்திய பாரசீக சூர்யக் கடவுளை வணங்கிவந்தனர் . மைத்ரேயரை வழிபடும் வழக்கம் பாரசீகர்களுக்கு இந்துக்களிடமிருந்து சென்றது. இந்துக்களின் வேதங்களில் மித்ரனைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அதர்வ வேதத்தில் சூர்யோதயத்துடன் இணைத்து மித்ரன் என்கிற தேவதை பேசப்படுகிறது. அதிகாலையில் சூ¡¢யக் கடவுளாகிய மித்ரனை காயத்¡¢ மந்திரம் என்ற துதியைச் சொல்லி வணங்கும் பழக்கம் இன்றும் உள்ளது. ¡¢க் வேதத்தில் மித்ரோத்சவம்  ( ¡¢க் வேதம் 8:25.8 ) என்ற சூ¡¢ வழிபாட்டு திருவிழாவைப் பற்றிச் சொல்லபட்டுள்ளது.

 

கான்ஸ்டான்டின் (Constantine) என்ற ரோமானிய பேரரசன் கி.பி. நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்து, அதைப் புனரமைத்து, நாட்டின் அதிகார பூர்வ மதமாக்கிய பிறகு

மைத்ரேயிசம் அழிந்தது. ஆனால் பேகன் மதத்திலுள்ள பல பழக்கவழக்கங்கள்க் கிறிஸ்தவர்களின் வழிபாட்டு முறைகளாக மாறின. இன்றும் அவைக் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றன. சின்னச் சின்ன இனக் கூட்டங்களைப் பொ¢யதாகத் திரட்டி ஒரு பேரரசை உருவாக்கும்போது, பொ¢ மதம் ஒன்று தேவைப்படுகிறது என்று  'பேரரசு மரபும் பெரும் தத்துவமும்' என்ற கட்டுரையில் கைலாசபதி என்ற தத்துவ மற்றும் அரசியல் ஆய்வாளர் எழுதுகிறார். இப்படித்தான் ரோமனியப் பேரரசை உருவாக்க விரும்பிய கான்ஸ்டான்டின் மன்னருக்கும் கிறிஸ்தவமதத்தைப் பேணி வளர்க்கவேண்டிய கட்டயம் உருவானது. முதல் நூற்றாண்டில் இயேசுவின் சீடர்களான பேதுரு, இயேசுவின் சகோதரர் ஜேம்ஸ், இயேசுவைத் தீவிரமாக பின்பற்றிய பவுல் ஆகியோரால் நிறுவப்பட்டது கிறிஸ்தவ மதம். இயேசுவைக் கடவுளின் குமாரர் என்று அவருடைய சீடர்கள் நம்பினார்கள். ஆனால் இயேசு கடவுளின் அவதாரம், அவரைத்தான் கடவுளாக வணங்கவேண்டும், அவராலன்றி வேறு எவராலும் மனிதகுலத்துக்கு இரட்சிப்பு இல்லை என்ற போதனைகளை ஆரம்பித்து வைத்தவர் பவுல்.

 

 

 

 



-- Edited by devapriyaji on Tuesday 10th of October 2017 07:57:39 AM

__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: History of Development of Christianity
Permalink  
 


 நான்காம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசனான கான்ஸ்டான்டின் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி மதகுருமார்களைச் சேர்த்து கொண்டு கிறிஸ்தவ மதத்தில் அப்பொழுது எழுதப்பட்ட  பல நூற்களில்  இயேசுவை இறைவனின் ஒரே குமாரன் என்று எடுத்துக்காட்டும் வகையில் அவர்களுக்கு வசதியானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றைப் புறந்தள்ளிவிட்டு யூதர்களின் விவிலியத்திலிருந்தும் வேண்டிய புஸ்தகங்களை மட்டும் எடுத்து இப்போது அவர்களின் மத நூலாக இருக்கிற பைபிளைபழைய ஏற்பாடு ம்ற்றும் புதிய ஏற்பாடு என்று இரு பகுதிகளாக உருவாக்கக் காரணமாக இருந்தார்யூதர்களின் புஸ்தகங்களைப் பழைய ஏற்பாட்டிலும் கிறிஸ்துவுக்குப்பின் எழுதப்பட்ட புஸ்தகங்களைப் புதிய ஏற்பாட்டிலும் தொகுத்து வைத்தார்கள்அப்பொழுது ஆரம்பித்து பதினாறாம் நூற்றாண்டு வரையிலும் பைபிளில் உள்ள அனத்துப் புஸ்தகங்களிலும் தங்கள் விருப்பதிற்கேற்ப இடைச்சொருகல்களைச் சேர்த்து தங்கள் கொள்கைகளுக்கு ஒத்துவராத பகுதிகளை வெட்டி எறிந்தார்கள்ஒத்துவரும் என்று தோன்றிய புத்தகங்ககளை மீண்டும் சேர்த்தார்கள்.

 

ஆங்கிலவார்த்தையான பைபிள் (Bible) லத்தீன் வார்த்தையான 'பிபிலியா' (bibilia ) என்பதிலிருந்து வந்தது. Bible  என்றால்  புத்தகங்களின் தொகுப்பு என்று பொருள் (பன்மை). பிபிலியன் (bibilion) என்றால் புத்தகம்.

 

கி.பி. 1415 ல்  ரோமாபு¡¢யிலுள்ள கிறிஸ்தவ சபை இயேசு கிறிஸ்துவைப் பற்றி எழுதப்பட்டுள்ள எல்லா யூத புத்தகங்களையும் அழிப்பதற்கு உத்தரவிட்டதுபோதகர் இயேசுவைப் பற்றியுள்ள எல்லா எபிரேயக் கையெழுத்துப்பிரதிகளும் மூலப்பிரதிகள் உட்பட ¡¢க்கப்பட்டனபின்பு அலெக்சாண்டர் VI என்ற போப் யூதர்களின் நியாயப்பிரமாணத்தின் (Talmud) பிரதிகள் அனைத்தையும் அழிக்க உத்தரவிட்டார்கிறிஸ்தவ சபையின் ஸ்பானிஷ் விசாரணையின் (Spanish Inquisition) தலைமை அதிகா¡¢யாக இருந்த தாமஸ் தே தோர்குமதா (Thomas de Torquemada-1420-98)  என்பவர் சலமங்கா (Salamanka) என்ற நகா¢ல் மட்டும் 6000 பிரதிகளை அழித்தார்சாலமோன் ரோமனோ (1559) என்பவர் பல்லாயிரக்கணக்கான எபிரேயமொழியில் எழுதப்பட்டப் பதிவுச்சுருள்களையும் (scrolls) பிரேக் (Praque) நகா¢லுள்ள ஒவ்வொரு எபிரேயமொழி புத்தகத்தையும் கைப்பற்றி ¡¢த்தார்அவற்றுள் நூற்றுக்கணக்கான எபிரேயமொழி பழைய ஏற்பாட்டுக் கையெழுத்துப்பிரதிகளும் அடங்கும்கி.பி.1607 ல் ஜேம்ஸ் அரசனின் உத்தரவின்போ¢ல் நாற்பத்தேழுபேர் கொண்டகுழு (சில பதிவுகளில் ஐம்பத்துநான்கு என்றிருக்கிறதுமொத்த பைபிளையும் திருத்தி எழுத ஆரம்பித்தனர்சுமார் இரண்டு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் முடிவில் இப்பணி முடிந்ததுஅதன் பின்னர் ஒரு வருடகாலம் சர் •ப்ரான்சிஸ் பேக்கன் (Sir Francis Bacon) என்ற அறிஞர் அக்கையெழுத்துப்பிரதிகளைப் பார்வையிட்டுத் தன்னுடைய திருத்தங்களையும் சேர்த்து அரசனிடம் ஒப்படைத்தார்ஜேம்ஸ் அரசன் அதை அச்சிட்டு தேவாலயங்களில் வாசிக்கபடுவதற்கான அதிகாரபூர்வ பைபிளாக வெளியிட்டார்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கிறிஸ்தவ மதமும் அவர்களின் பா¢சுத்த வேதாகமம் (Holy Bible) என்று சொல்லபடுகிற பைபிளும் உருவாக  நான்கு நூற்றாண்டு காலம் ஆனதுஅதன் பின்னரும் ஆயிரத்து இருநூறு ஆண்டு காலம் கிறிஸ்தவப் பாதி¡¢கள் பைபிளில் ஏராளமான கழித்தல்களும்கூட்டல்களும்திருத்தங்களும் செய்து கொண்டேயிருந்தார்கள்முதலில் தொடங்கப்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் பல பழக்க வழக்கங்கள் பிடிக்காத மார்ட்டின் லுதர்அவா¢ன் ஒத்த கருத்துள்ளவர்களுடன் இணைந்து கொண்டு ப்ரொடெஸ்டன்ட் கிறிஸ்தவ மதத்தைத் தொடங்கினார்பதினாறாம் நூற்றாண்டில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திலிருந்து ப்ரொடெஸ்டன்ட் கிறிஸ்தவ மதம் தனியாகப் பி¡¢ந்தபின்பும் கழித்தல்களும்கூட்டல்களும்,

திருத்தங்களும் இன்று வரைத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றனஇன்று ஆர்தோடக்ஸ் (Orthodox) பைபிளில் 81புத்தகங்களும்கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பைபிளில் 73 புத்தககங்களும்புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களின் பைபிளில் 66 புத்தகங்களும் உள்ளனதற்போது பைபிளில் ஏராளமான தொகுப்புகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ளனஜேம்ஸ் மன்னர் தொகுப்பு (King James Version), புதிய அகில உலகத் தொகுப்பு (New International Version), அமொ¢க்கன் ஸ்டாண்டர்ட் தொகுப்பு  (American Stantard Version), ஜிடியோன் அகில உலகத் தொகுப்பு (Gideons International Version), கத்தோலிக்க சமூகத் தொகுப்பு (Catholic Community Bible), என்பன அவற்றுள் சில.

 மேலும் பைபிளில் உள்ள பல புஸ்தகங்களில் அவர்களுக்குப் பிடிக்காத அதிகாரங்களையும்வசனங்களையும் நீக்கிவிட்டனர்இது போக இன்னும் பல திருத்தங்களைச் செய்துகொண்டே இருக்கின்றனர்உதாரணத்திற்குச் சிலபழைய ஏற்பாட்டில் உள்ள தானியேல் என்ற புஸ்தகத்தில் 12 ஆம் அதிகாரம் வரை வைத்துக்கொண்டு 13 மற்றும் 14 ஆம் அதிகாரங்களை நீக்கிவிட்டனர்மாற்கு 3:32 ல் "உம்முடைய தாயாரும்உம்முடைய சகோதரரும் மற்றும் உம்முடைய சகோதா¢களும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் " என்பதில் "மற்றும் உம்முடைய சகோதா¢களும்என்ற வார்த்தைகளை சமீபத்தில் எடுத்துவிட்டார்கள்ஏனெனில் இயேசுவுக்கு ஜேம்ஸ்யூதாஸ்சைமன் மற்றும் ஜோஸ் என்ற நான்கு சகோதரர்களும்பெயர் சொல்லப்படாத சகோதா¢களும் உண்டு என பைபிள் கூறுகிறது.  ஆனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இயேசுவின் சகோதர சகோதா¢கள் இயேசுவின் தாயான மோ¢க்குப் பிறந்தவர்களில்லை என்றும் அவர்கள் யோசேப்பின் முதல் மனைவியின் குழந்தைகள் என்றும் மோ¢ இறுதி வரை யோசேப்புடன் உடலுறவு கொள்ளாமல் கன்னியாகவே இருந்தார் என்றும் நம்புகின்றனர்ஆகையால்  இயேசுவுக்கு சகோதர சகோதா¢கள் இருந்தார்கள் என்ற செய்தியே அவர்களுக்குக் கசப்பாக இருக்கிறதுஎனவே சகோதா¢கள் என்ற வார்த்தையை எடுத்துவிட்டு பொதுவாக இருக்கட்டும் என்று 'சகோதரர்கள்என்ற வார்த்தையை மட்டும் அனுமதித்திருக்கிறார்கள்இன்னும் இது போல பல உதாரணங்களைக் கூறலாம்.

 

ஆனல் யோசேப்பு மோ¢யுடன்  கடைசி வரை உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை என்ற அவர்கள் நம்பிக்கையும் உண்மைக்குப் புறம்பானதேஏனெனில் மத்தேயு 1:25 ல்  "யோசேப்பு மோ¢ தன் முதற்பேறான குமாரனைப் பெறும் வரை அவளை அறியாதிருந்தான்என்று குறிப்பிடப்பட்டுள்ளதுஒரு பெண்ணை 'அறிதல்என்றால் அவளோடு உடலுறவு கொள்ளுதல் என்று பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பில் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

எனவே இயேசு பிறக்கும் வரைதான் யோசேப்பு கட்டுப்பாடுடன் இருந்தார் என்று பைபிள் தொ¢விக்கிறது.

 

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

எல்லா கிறிஸ்தவர்களும் பைபிளில் உள்ள அனத்து வார்த்தைகளும் "தேவனுடைய வார்த்தைகள்என்று நம்புகிறார்கள்அதாவது கடவுளின் தூண்டுதலின் போ¢ல் தீர்க்கத்தா¢சிகள் எழுதியவை என்று பொருள்பைபிளின் உருவாக்க வரலாற்றில் பாதி¡¢களும்மதப்பிரச்சாரகர்களும்ரோமானியப் பேரரசன் கான்ஸ்டான்டின்இங்கிலாந்தின் ஜேம்ஸ் மன்னர்கால்வின்மற்றும் மார்ட்டின் லூதர் போன்றவர்களின் தூண்டுதலால் வெட்டி எறியப்பட்ட வார்த்தைகளும்புத்தகங்களும்இடைச்சொருகலாக சேர்த்த வார்த்தைகளும்மாற்றியமைத்த வார்த்தைகளும் ஏராளம்இதைச் செய்வதற்கு  இவர்களுக்கு எந்த தேவன் அதிகாரம் அளித்தார் என்று தொ¢யவில்லை.

 னிதர்கள் பிரபஞ்சம் தோன்றியபின் இந்த பூமியில் மிகவும் பிற்காலத்தில் வந்தவர்கள் ஆவர்தாவரங்களும்மிருகங்களும்,பறவைகளும் நமக்கு முன்னால் பல கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி விட்டனநீண்ட பா¢ணாம வளர்ச்சியில் படிப்படியாக முன்னேறி உடல் ¡£தியாகவும் மன ¡£தியாகவும் முதிர்ந்த பிராணிகளின் வம்சாவழியாக நாம் வந்திருக்கிறோம்பைபிளில் சொல்லியிருக்கிறபடி இவ்வுலகிலுள்ள சகலத்தையும்ஜீவராசிகளையும் நிர்வகித்து ஆண்டு அனுபவிப்பதற்காக மனிதன் படைக்கப்படவில்லைஏனென்றால் மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே பல கோடி ஆண்டுகளாக இந்த பூமி இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது.

 

பூமியின் வரலாற்றில் சமீபகாலமாக சில ஆயிரம் ஆண்டுகளாகத்தான்ஹோமோசாப்பியன் இனத்தை (Homosapiens) சார்ந்த மனிதர்கள்  மேலதிக வளர்ச்சியுற்று தங்களுக்குள்ள சிந்தனாசக்திஆதிக்கவல்லமை ஆகியவற்றைப் பயன்படுத்தி சக மனிதர்களையும்மற்ற ஜீவராசிகளையும் அடக்கி அல்லது அடிமைப்படுத்தி வந்திருக்கின்றனர்மோசே (Moses) என்ற தீர்க்கத்தா¢சியினால் ஐந்து புஸ்தகங்களாக எழுதப்பட்டதாகக் கருதப்படும் யூதர்களின் பெந்தத்யூக்கில் (Pentateuch) உள்ள  முதல் புஸ்தகமான ஆதியாகம் (Genesis) கூறுகிற கதையின்படி பூமி சிருஷ்டிக்கப் பட்டு சுமார் ஆறாயிரம் ஆண்டுகளே ஆகின்றனஆதாம்ஏவாள் ஆகிய இருவரும் பூமியின் முதல் மனிதத் தம்பதியர்நாம் அனைவரும் அவர்களின் சந்ததியினர் ஆவோம்கிறிஸ்தவர்கள் இதை மிகவும் திடமாக நம்புகிறார்கள் அல்லது அறிவியல் அறிந்த கிறிஸ்தவர் பலர் நம்புவதுபோல் நடிக்கிறார்கள்கோடிக்கணக்கான ஆண்டுகளாக இந்த பூமியும் அதைச் சுற்றியுள்ள பிரபஞ்சமும் இயங்கிவருகின்றன என்ற அறிவியல் உண்மையையும்டார்வினின் பா¢ணாம வளர்ச்சி பற்றிய கண்டுபிடிப்பையும் அவர்கள் குழப்பத்துடனேயே பார்க்கின்றனர்.

 இயேசு தெய்வீகமானவர் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக முதல் நூற்றாண்டின் இறுதியிலும் இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும்அவரது வாழ்க்கை வரலாற்றைக் காதுவழிச் செய்திகளின் மூலம் கேட்டுதங்கள் சொந்தக் கற்பனையையும் சேர்த்துமுதலில் எழுதப்பட்ட சுவிசேஷங்களை ஆதாரமாகக் கொண்டும்  பல சுவிசேஷங்களை (gospels) எழுத்தில் ஆர்வமுள்ள இயேசுவின்பால் ஈர்க்கப்பட்டவர்கள் எழுதினார்கள்ஒன்றிரண்டு தவிர இவை அனைத்தும் கிரேக்க மொழியிலேயே எழுதப்பட்டனமேலும் இந்த சுவிசேஷங்களை  எழுதியவர்கள் தங்கள் பெயரை மறைத்துஇயேசுவின் சீடர்களின் பெயா¢ல் அல்லது அவருடைய பிரதான சீடர்களுக்கு நெருக்கமானவர்கள் பெயா¢ல் எழுதினார்கள் அல்லது ஆசி¡¢யர் பெயா¢ல்லாமல் எழுதப்பட்டிருந்த இந்த சுவிசேஷங்களுக்கு பின்னர் அப்போஸ்தலர்களின் பெயர்களை இட்டனர்மக்களிடையே நம்பகத்தன்மையை உருவாக்க இவ்வாறு செய்தார்கள் என்று தொ¢கிறதுஇவற்றில் இயேசுவின் தெய்வீகத்தன்மைக்குக் களங்கம் கற்பிக்காத செய்திகளை மட்டும் கொண்ட அல்லது இயேசுவைக் கடவுளுக்கு நிகராக சித்தா¢கின்ற நான்கு சுவிசேஷங்களைத் தேர்ந்தெடுத்து,  கிபி. 325 ல் கான்ஸ்டான்டின் பேரரசர் தலைமையில் மதகுருமார்கள் பைபிளின் பிற்பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் சேர்த்தார்கள்அவைதாம் மத்தேயுமாற்குலூக்கா மற்றும் யோவான் இவர்களின் சுவிசேஷங்கள்இவற்றில் முதல் மூன்றும் ஒரேமாதி¡¢யான செய்திகளைக் கொண்டிருப்பதனால் 'ஒத்தமைந்த சுவிசேஷங்கள்' (synoptic gospels) என்று அழைக்கப்படுகின்றனநான்காவதான யோவானின் சுவிசேஷம் மட்டும் தனித்துவம் கொண்டதுஇவற்றைத் தவிர இதர சுவிசேஷங்கள் எல்லாம் அழிக்கப்பட்டனஅவற்றுள் பல சுவிசேஷங்களின் பாப்பிரஸ் (papyrus) சுவடிப்பிரதிகள் 1945 ல் எகிப்து நாட்டிலுள்ள நாக் ஹம்மடி (Nag Hammadi) என்ற இடத்தில் கிடைத்துள்ளனஅவற்றில் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய பல உண்மையான செய்திகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

 அனுமதியின்றி அடுத்தவர் தோட்டத்தில் பூவைப் பறித்த சிறு குற்றத்திலிருந்துகற்பழிப்பு மற்றும் ஒருவரையோ பல மனிதர்களையோ கொடூரமாகச் சித்திரவதை செய்து கொலைசெய்த பாவம் வரை இயேசுவைக் கடவுளாக ஏற்றுக்கொண்டால் மன்னிக்கப்படும்எனென்றால் அவர் நம் எல்லாருடைய பாவங்களுக்ககவும்  ஏற்கனவே சிலுவையில் மா¢த்துத் தன் உயிரைத் தியாகம் செய்திருக்கிறார் என்று கிறிஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்பிறமதத்தினரையும் நம்பவைக்க அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

 ஆனால் இயேசு  "ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால்அவன் தன்னை வெறுத்துதன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்" (மத்தேயு 16: 24; மாற்கு 8: 34; லூக்கா 14: 27) என்று சொல்லியிருக்கிறார்இதற்கு என்ன பொருள்பாவங்கள் செய்வதை விடுத்துஎற்கனவே அவனவன் தான் செய்த பாவத்தை அவனவன் தான் சுமக்க வேண்டும் என்றுதானே பொருள்மத்தேயு 25: 31 முதல் 46 வரையுள்ள வசனங்களில்துயரத்துக்குள்ளானசோதனைகளுக்காளானநோய்களால் வாடியவறுமையினால் பசிதீர்க்கவும் இயலாத மக்களுக்குப் பா¢வோடு உதவி செய்தவர்களே நியாயத்தீர்ப்பு நாளில்  தேவனுடைய இராஜ்ஜியத்தில் அனுமதிக்கப்படுவார்கள்பிறருக்கு உதவி செய்ய மனமிரங்காத சுயநலவாதிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று இயேசு தெளிவாகக் கூறுகிறார்மக்களை நோக்கிநீங்கள் எத்தனை பாவங்கள் வேண்டுமென்றாலும் செய்துகொள்ளுங்கள்உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு என்னைப் பின்பற்றினால் போதும்நான் உங்கள் பாவங்களை ஏற்கனவே சுமந்து (?), உங்கள் பாவங்களுக்காக சிலுவையில் குற்றநிவாரண பலியாக மா¢த்துவிட்டேன்எனவே நீங்கள் தாரளமாக தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்கலாம் என்று இயேசு கிறிஸ்து எந்த இடத்திலும் சொல்லவில்லையூதர்கள் தங்கள் பாவநிவிர்த்திக்கக ஆலயத்தில் பிராணிகளைப் பலியிட்டு வந்த வழக்கத்தைகையிலெடுத்துக் கொண்டு இயேசுவைப் பலியாடாக்கி (Paschal Lamb) மதத்தை வளர்க்கத் திட்டமிட்டது தொடக்ககால கிறிஸ்தவமதப் போதகர்களின் சூழ்ச்சிசுமார்  இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த சூழ்ச்சி கிறிஸ்தவர்கள் மத்தியில் விலைபோய்க் கொண்டிருக்கிறது என்றால் பாமரத்தனமான இந்த நம்பிக்கை எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பது புலப்படும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

 

ஒரு மனிதர் பெருந்தொகையை ஒருவா¢டம் கடனாகப் பெற்றுத் திருப்பித்தர முடியாவிட்டால்,  கடன் கொடுத்தவர் அவர்மேல் வழக்குத் தொடுத்து அவரைச் சிறையிலிட முயல்வார்அச்சமயம் கடன் வாங்கியவா¢ன் நண்பரொருவர் அவருக்காக அந்தத்தொகையைத் தர முன்வந்தால் கடன் கொடுத்தவர் அதைப் பெற்றுக்கொண்டு கடன் வாங்கியவரை மன்னித்து விட்டுவிடுவார்ஆனால் ஒருவர் தன் குடும்பத்தாருக்குக் கொலைகற்பழிப்பு போன்ற கொடூரக் குற்றம் இழைத்த ஒருவரைஅவருக்குப் பதிலாக குற்றவாளியின் உறவினர் அல்லது நண்பரொருவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டு அவரை விட்டுவிடுங்கள்என்னைத் தூக்கிலிடுங்கள் என்றால் குற்றம் இழைத்தவரை விட்டுவிடுவாராஇது எந்தவிதத்தில் நியாயம்இந்த உலகத்தில் எந்த நீதிமன்றம் கி¡¢மினல்  குற்றவாளியை விட்டுவிட்டுகுற்றவாளிக்காக தியாகம் செய்ய முன்வரும் நிரபராதிக்கு மரணதண்டனை அளிக்கும்ஆனால் பரலோகத்திலிருக்கிற பரமபிதா தன் ஒரே பேறான குமாரன் இயேசுவுக்கு அவ்வாறு தண்டனை கொடுப்பார்அவரைத் தனக்கு இடப்பட்ட பலியாக ஏற்றுக்கொள்வார்ஏனெனில் இயேசுவுக்குப் பரலோகத்திலுள்ள தம் தந்தையிடமிருந்து  பூமிக்குப் புறப்பட்டுச் சென்று மீண்டும் தம் தந்தையிடமே திரும்பி வருகின்ற பயணத்தில் சிலுவையில் அறையப்பட்டு மா¢த்தது  ஒரு நாடகக்காட்சிதானே தவிர சாதாரண மனிதர்களுக்கு கிட்டுவது போன்ற துன்பமும் மரணதண்டனையும் அல்லதான் எந்த குற்றமும் இழைக்காத நிலையில் இயேசு சிலுவையில் பாடுபட்டு மா¢த்தது தியாகமில்லையா என்று  கேட்பவர்கள்உலக வரலாற்றில் எத்தனையோ நிரபராதிகள்எந்த பாவமும் செய்யாதவர்கள் பிறருக்காகப் போராடிஇயேசுவைவிடக் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் தொ¢யாதவர்களாஇயேசுவும் அவர் பிதாவும் பரலோகத்தில் இன்றைக்கும் இருப்பது உண்மையானால்பூமியில் சிலுவையில் மா¢த்த சம்பவத்தால் இயேசுவுக்கு இந்த நாள் வரை எந்த இழப்பும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மைஒருவர் பிறருக்காக எதையும் இழக்காவிட்டால் அதை எப்படித் தியாகம் என்று சொல்லமுடியும்?

 யூதர்களின் கடவுளான ஜெகோவாவைத் தத்தெடுத்துத் தங்கள் கடவுளாக வழிபடுவதுதான்தற்காலத்தில் அநேக கிறிஸ்தவ சபைப் பி¡¢வுகளின் பிரச்சினையாக இருக்கிறதுபூமியிலிருந்து வெகுதூரத்தில் பரலோகத்தில் குடியிருக்கும்கோபமும்பொறாமையும்தவறு செய்தால் கொடூரமாகத் தண்டிக்கும்குணமும் உடைய ஒரு கொடுங்கோலன் கடவுள்அதுவும் யூதர்களை மட்டும் மனிதர்களாகக் கருதும் பாரபட்சமுடைய ஒரு கடவுளைப் பரமபிதாவாகத் தேர்ந்தெடுத்ததின் காரணமாகவே கிறிஸ்தவர்கள்  இயேசுவைக் கிறிஸ்துவாக்கிதேவகுமாரனாக்கிபரலோகபிதாவின் வார்த்தையாக்கிதி¡¢த்துவம் என்று ஒன்று ஏற்படுத்தி அதில் அவரை பரமபிதாவுக்கு சமமானவராக்கிஇறுதியில் இயேசுவையே முழுமுதற்கடவுளாகவும் ஏற்றுக்கொண்டுள்ளனர்இன்று ‘இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கிறிஸ்தவர்களின் ஜெபத்தை ஏற்றுக்கொள்வது ஒன்றே பரலோகபிதாவின் வேலைவேறு எதற்கும் தற்காலக் கிறிஸ்தவர்கள் பரலோகபிதாவை அழைப்பதில்லைஏனெனில் பரலோகபிதாவை அன்பு வடிவானவர் என்று சொல்லமுடியாதுஆனால் இயேசுவை அவ்வாறு சொல்லலாம்ஏனெனில் அவ்வாறு சொல்லும் வகையில் அவருடைய போதனைகளில் கருணையையும்அகிம்சையையும் புகுத்தி சுவிசேஷங்களை உருவாக்கியிருக்கிறார்கள்ஆனாலும் கிறிஸ்தவர்கள் எடுத்துரைக்கின்ற  இயேசுவின் கருணையும் நிபந்தனைக்குட்பட்டதாயிருக்கிறதுநிபந்தனை என்னவென்றால் இயேசுவைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதான்ஏற்றுக்கொள்ளவில்லையெனில்உங்களுக்கு இயேசுவின் கருணையோமன்னிப்போ கிடையாதுநீங்கள் எவ்வளவு நேர்மையாளராகநீதிமானாகதவறே செய்யாதவராக இருந்தாலும் நேராக நரகத்துக்குச் செல்லவேண்டியதுதான்!

 

ரோமானியப் பேரரசர் கான்ஸ்டான்டின் கி.பி. 306 முதல் 337 வரை ஆட்சி செய்தார்.இந்த காலத்தில்தான் (கிபி. 325) 'கவுன்சில் ப் நைசியா' (Council of Nicaea) என்ற மதகுருமார்களின் மாநாடு நடைபெற்று அதில் இயேசு கடவுள் என்று அங்கீகா¢க்கப்பட்டார்கிறிஸ்தவமதம் ரோமசாம்ராஜ்ஜியத்தின் அதிகாரபூர்வ மதமாயிற்றுஆனால் பைபிளிலுள்ள புதிய ஏற்பாட்டிலுள்ள புத்தகங்களில் எவை அதிகாரப்பூர்வமானவை என்பது கி.பி. 393 ல் நடைபெற்ற 'கவுன்சில் ப் ஹிப்போ' (Council of Hippo) மற்றும் கிபி. 397 ல் நடைபெற்ற 'கவுன்சில் ப் கார்த்தேஜ்' (Council of Carthege) ஆகியவற்றில்தாம் தீர்மானிக்கப்பட்டனஅதாவது இயேசு குருசில் அறையப்பட்டு சுமார் 360 ஆண்டுகள் கழித்துதான் அவரது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களின் எழுதப்பட்ட கோர்வை அதிகாரபூர்வமாக்கப்பட்டது.

 

ஜெரால்ட் மேசி (Gerald Massey) என்னும் மறையியலாளர் தம்முடைய 'இயற்கைத் தொடக்கம்' (The Natural Genesis, Vol 2) என்ற நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார். “கிரேக்கர்களும் எகிப்தியரும் ஹோரஸ் (Horus), ஒசிரஸ் (Osiris), ரா (Raa), ஆதும் (Atum) முதலிய தெய்வங்களை இயேசு பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வணங்கி வந்தனர்இந்த தெய்வங்களைப் பற்றி அவர்களுடைய மதநூற்களில் கூறப்பட்டுள்ளவையும் புதிய ஏற்பாட்டில் இயேசுவைப்பற்றிக் கூறப்பட்டுள்ளவையும் ஒன்றாக இருக்கின்றனஇயேசு கிறிஸ்து நல்ல மேய்ப்பர்ஹோரசும் அப்படியே நல்ல மேய்ப்பர்தான்இயேசு தேவ ஆட்டுக்குட்டிஹோரசும் அப்படியேஇயேசு உண்மையும் சத்தியமுமாயிருக்கிறார்ஹோரசும் அப்படியேநானே வழியும்ஜீவனுமாக இருக்கிறேன் என்று இயேசு சொல்லியிருக்கிறார்ஹோரசும் அப்படியே மா¢த்தவர்கள் உயிர்த்தெழ ஜீவனும்அவர்கள் பரம் ஏறிச்செல்ல வழியுமாயிருக்கிறார்.

 

மத்தேயு 21: 27 & 28 ல் ‘அப்போது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும்மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போதுஉங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால்நீங்கள் நிமிர்ந்துபார்த்துஉங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது . அதேபோல் எகிப்தியர்களின் வேதத்திலும்ஒசிரஸ் மேகங்களினூடே வரும்போது எதி¡¢களைப் புறமுதுகிட ஓடச்செய்துசூ¡¢யனுடைய அமைச்சர்களுக்கு ஜீவனைக் கொடுப்பார்ஒசிரசின் முகம் கி¡£டத்தினால் பிரகாசிக்கும்உங்கள் தலைகளை உயர்த்திப் பார்த்து உங்கள் பிரபுவுக்கு வழிவிடுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

பவுல் இயேசுவை இரண்டாம் ஆதம் (Second Adam) என்றார். ‘ரா எகிப்தியா¢ன் இரண்டாம் ஆதும் (Second Atum). எகிப்தியா¢ன் ரா பரலோகத்திலே இருக்கின்ற பரமபிதாஅவரே ‘தன் மகனாக அவதா¢த்தார்யோவானின் சுவிசேஷத்தில் 10: 30 ல் 'நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்என்று இயேசு சொல்கிறார்ரா 'பேசுகின்ற ஆத்மா'வாக இருக்கிறார்யோவானின் சுவிசேஷத்தில் இயேசு 'தேவனுடைய வார்த்தை'யாக இருக்கிறார்." இதுபோன்ற

ஏராளமான ஒற்றுமைகளைக் கிறிஸ்தவமதத்திற்கும் பிற பேகன் மதங்களுக்கிடையில்  காணலாம்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 இயேசுவின் வரலாற்றை விவா¢க்கும் நான்கு சுவிசேஷங்களையும் ஒப்பிட்டு வாசிப்பவர்களுக்கு அவற்றிலுள்ள முரண்பாடுகள் புலப்படும்மத்தேயுவும்யோவானும் இயேசுவின் நேரடிச் சீடர்கள்அவர்களுடைய சுவிசேஷங்கள் இரண்டிலும் ஏன் அவ்வளவு எதிர்மறையான கருத்துக்கள் இருக்கின்றனமத்தேயுவின் சுவிசேஷம் கன்னி மா¢யாளின் கருவில் இயேசு உருவானதிலிருந்து தொடங்குகிறதுயோவானின் சுவிசேஷம்இயேசு  வார்த்தையாக இருந்தார்அந்த வார்த்தை இறைவனோடு இருந்ததுஅந்த வார்த்தை இறைவனாக இருந்ததுஅவர் மூலமே சகலமும் படைக்கப்பட்டது என்று இயேசுவைக் கடவுளாகக் காண்பித்தே தொடங்குகிறதுமத்தேயுவில் இயேசுதான் கடவுள் என்று ஒரு வா¢ கூட இல்லைஆனால் யோவான் முழுவதும் இயேசு கடவுள் என்றே நிறுவப்படுகிறார்மத்தேயுவில்இயேசு வருகின்ற தேவனுடைய இராஜ்ஜியத்தைப்பற்றியே பேசுகிறாரே தவிற தன்னைப்பற்றியும்தான் இறைத்தன்மையுடையவர் என்றும் எங்கும் சொல்லவில்லை.

 

ஆனால் சுவிசேஷங்கள் யாவும் பெயர் தொ¢யாத ஆசி¡¢யர்களால் எழுதப்பட்டுள்ளனஅவர்களில் ஒருவரும் இயேசுவின் வாழ்க்கைக்கு நேரடி சாட்சிகள் அல்லஅடியார்களின் பெயர்கள் சுவிசேஷங்களின் தலைப்பில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டன என்று மறையியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்நூலை எழுதிய ஆசி¡¢யர் எவரும் 'மத்தேயுவுக்கு இசைய எழுதப்பட்ட சுவிசேஷம்' (Gospel According to Matthew), 'லூக்காவுக்கு இசைய எழுதப்பட்ட சுவிசேஷம்' (Gospel According to Luke) என்று பெயா¢ட்டிருக்க மாட்டார்கள்மற்றொருவர் எழுதியிருந்தால்தான் இவ்வாறு பெயா¢டமுடியும்மத்தேயு 9: 9 ல் 'இயேசுஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு : எனக்குப் பின்னே வா என்றார்.அவன் எழுந்து அவருக்குப் பின் சென்றான்என்றிருக்கிறதுமத்தேயுவே இதை எழுதியிருந்தால் " நான் ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தேன்என்னை இயேசு அழைத்தார்நான் அவர் பின் சென்றேன்என்றல்லவா இருக்கவேண்டும்யோவானின் சுவிசேஷத்தை எழுதியவர் இன்னும் ஒருபடி மேல்போய் 'இயேசுவுக்குப் பி¡¢யமான சீடனை', அதாவது தன்னைப்ப்ற்றிக் கூறுகிறார். 'அந்த சீஷனே இவைகளைக்குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்என்று யோவான் 21: 20, 24 ல் எழுதியிருக்கிறார்மாற்குவும்லூக்காவும் இயேசுவின் நேரடி சீடர்கள் அல்லமாற்கு , பேதுருவின் மொழிபெயர்ப்பு உதவியாள்ராக இருந்தவர்லூக்கா பவுலின் தோழரும் , வைத்தியருமாக இருந்தவர்அப்போஸ்தலருடைய நடபடிகள் 4: 13 ல் பேதுருவும்யோவானும் படிப்பறியதவர்கள்பேதமையுள்ளவர்கள் என்று கூறப்பட்டிருக்கிறதுஇயேசுவின் சீடர்களில் ¡¢ருவரைத் தவிற மற்றெல்லாரும் எழுதப்படிக்கத் தொ¢யாதவர்கள்ஆனால் இயேசுவுக்குப் புத்தகங்களை வாசிக்க இயலும் (லூக்கா 4: 16 ,17). ஆனால் அவர்  எதையும் எழுதியதாகச் செய்தியில்லை.

 

'சினாய் பைபிள்' (Sinai Bible) என்பதுதான் நமக்குக் கிடைத்திருக்கும் பைபிளில் மிகப்பழைமையானதுஇது பி¡¢ட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதுடோனி புஷ்பி (Tony Bushby) என்ற மறையியல் ஆராய்ச்சியாளருக்கு இதை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியதுசினாய் பைபிளுக்கும் தற்கால பைபிளுக்கும் சுமார் 14800 வேற்றுமைகள் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்இருப்பினும் இன்னும் பைபிளிலுள்ள வாசகங்கள் தேவனுடைய வார்த்தைகளாக நம்பப்படுகிறது.

 

இயேசு தான் கனவு கண்ட  'தேவனுடைய இராஜ்ஜிய'த்தைப் பற்றியே வாழ்நாள் முழுதும் உபதேசித்துக் கொண்டிருந்தார்ஆனால் ஆரம்பகால கிறிஸ்தவமதப் போதகர்களோ அதை விடுத்துஇயேசு உயிர்த்தெழுந்ததையும்,  அவர்தான் கடவுள் என்பதையும் மட்டுமே

 உபதேசித்தார்கள்எனெனில் இயேசு கிறிஸ்து உபதேசித்த 'தேவனுடைய இராஜ்ஜியம்என்னவென்று அவர்கள் விளக்கவில்லைஏனென்றால் அது அவர்களுக்கு இறுதிவரைப் பு¡¢யவில்லை.

 

இயேசு கிறிஸ்து அஹிம்சையையும்அன்பையும்பரோபகாரத்தையும் போதித்தார்.  கிறிஸ்தவமதம் வளர்ந்து வரும்போது கிறிஸ்துவின் பெயரால்இயேசுவைப் பின்பற்ற மறுத்தவர்களுக்குச் செய்த கொடூரங்களும்கொலைகளும் கணக்கிலடங்காபிறமதத்தினரைப் பொறுத்தவரையில் இஸ்லாம் மதம்தான் மிகவும் கொடூரமானது என்று மக்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்ஆனால் உண்மையில் கிறிஸ்தவ மதத்தினர்மதத்தின் பெயரால் செய்த கொலைகளால் மடிந்தவா¢ன் எண்ணிக்கை இரண்டு உலகப்போ¡¢லும் மடிந்தவா¢ன் எண்ணிக்கையைவிட அதிகமானது.

 

1096 ல் எருசலேமை முஸ்லிம்கள் கையிலிருந்து மீட்டெடுக்க கிறிஸ்தவர்கள் தொடங்கிய 'புனித குருசு யுத்தத்தில்பல்லாயிரக்கணக்கில் ஆண்கள்பெண்கள்மற்றும் குழந்தைகள் கொலை செய்யப்பட்டனர்மேற்கு ஐரோப்பிய நாடுகளை கைப்பற்றி ரோமச்சக்கரவர்த்தியாக விளங்கிய சார்லிமான் (Charlemagne) ஒரு  தீவிரமான கிறிஸ்தவர்.அவர் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின்மீது படையெடுத்து ஜெயித்தபோது அங்கிருந்த வேற்றுமதத்து மக்களிடமும்ஜெர்மானிய சாக்சன் (Saxon) புரட்சியாளர்களிடமும் கிறிஸ்தவமததுக்கு மாறுங்கள்இல்லையேல் உயிரைவிடத்த் தயாராகுங்கள் என்று சொல்லி மதம் மாறாத ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தார்மகா கார்ல் மற்றும் சார்லி (Karl and Charley the Great) என்று அழைக்கப்பட்ட அந்த மன்னர் ஒருநாள் காலையில் கிறிஸ்தவ மதத்துக்கு மாற மறுத்த 4500 பேரை வெட்டவெளியில் நிறுத்தி சிரச்சேதம் செய்தார்.

 

கிறிஸ்தவர்களைக் கிறிஸ்தவர்களே கொல்லும் கூத்தும் நடைபெற்றிருக்கிறதுநான்காம் நூற்றாண்டில் முதல் கிறிஸ்தவ ரோமானியச் சக்கரவர்த்தியாக விளங்கிய கான்ஸ்டான்டின் மூவாயிரம் கிறிஸ்தவர்களைக் கொலை செய்தார்காரணம்அரசரும்அவருடைய பாதி¡¢களும் கிறிஸ்துவைபற்றிக் கூறிய கருத்துக்களையும்கட்டுக்கதைகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான். 1492 ல் கொலம்பசை புதிய நாடுகளைக் கண்டுபிடிக்க கடற்பயணத்தில் அனுப்பிய இசபெல்லா என்ற இங்கிலாந்து அரசி,  கிறிஸ்தவமதத்தின் பெயரால் பல்லாயிரக்கணக்கான யூதர்களையும்முஸ்லிம்களையும் ஆண் பெண் என்று பாராமல் கொலை செய்யவும்சித்திரவதை செய்யவும் உத்தரவிட்டாள்ஏராளமான மக்கள் தீயில் உயிரோடு இடப்பட்டு கொல்லப்பட்டனர்.

 

12 ஆம் ,13 ஆம் நூற்றாண்டுகளில் இன்குசிஷன் (Inquisition) என்ற விசாரணை மன்றம் வட்டிகன் ரோமன் கத்தோலிக்க சபையினால் (Vatican Roman Catholic Church) ஏற்படுத்தப்பட்டதுசபை போதிக்கின்ற அதிகாரபூர்வமான மதக்கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட கிறிஸ்தவர்களை மிகவும் கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்தனர்பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டனர்கணவன் பாவமன்னிப்புக் கேட்கவில்லையென்றால் மனைவியையும் சேர்த்து அல்லது மனைவி பாவமன்னிப்புக் கேட்கவில்லையென்றால் கணவனையும் சேர்த்துக் கொன்றனர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

16 ஆம் நூற்றாண்டில் மார்டின் லூதர் (Martin Luther) மற்றும் கால்வின் (Calvin) ஸ்விங்க்லி (Zwingli) முதலியோர் கத்தோலிக்கத் திருச்சபையை எதிர்த்துப் புரோடஸ்டன்ட் (Protestant) மதத்தைச் ஸ்தாபித்தபோதும் யூதர்களையும்கிறிஸ்தவர்களையும் கிறிஸ்தவர்களே கொல்லும் அட்டுழியம் நடந்ததுஅநேக கிறிஸ்தவர்களுக்கு , முக்கியமாக புரொடஸ்டன்ட் கிறிஸ்தவ மதத்தலைவர்களுக்கு வரலாற்று உண்மைகளைப் பற்றிக் கவலையில்லை.அவர்கள் மார்ட்டின் லூதா¢ன் மதச்சீர்திருத்தங்களைப் பற்றி வெகுவாகப் புகழ்ந்து பேசுவார்கள்ஆனால் யூதர்களை எவ்வாறு கொடூரமாகக் கொடுமைப்படுத்த வேண்டும் என்று 'யூதர்களும் அவர்களது பொய்களும்' (The Jews and their Lies) என்ற புத்தகத்தில் மார்ட்டின் லூதர் எழுதியுள்ளதைத்தான்  ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களுக்குச் செய்தார் என்பதைப் பற்றிப் பேசமாட்டார்கள்.  யூதர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட  மக்கள் அல்ல என்றும் அவர்கள் கடைந்தெடுத்த அயோக்கியர்கள்கொலைகாரர்கள்சமூகவிரோதிகள்திருடர்கள்யூதப்பெண்கள் அனைவரும் விபசா¡¢கள்தீயவர்கள் என்றும் மார்ட்டின் லூதர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்மேலும் அவர் யூதர்களின் தேவாலயங்கள் (synagogues) தீவைத்துக் கொளுத்தப்படவேண்டும்யூதர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும்அவர்களுடைய போதகர்கள் (Rabbis) உபதேசம் செய்ய முன்வருவாரேயானால் அவர்களைக் கொல்லவேண்டும் என்றும் கூறியுள்ளார்லூதா¢ன் தூண்டுதலால் புரோடஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் பல ஆயிரம் யூதர்களை அவர்கள் இயேசுவைத் தெய்வமாக ஏற்றுக்கொள்ள மறுத்ததால்  கொலை செய்தார்கள்இங்கிலாந்திலும்,  ஸ்காட்லாந்திலும் 30,000பேரையும்புரோடஸ்டன்ட் ஜெர்மனியில் 100,000 பேரையும் குறிசொல்லுகிறார்கள்சூனியம் வைக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தி மரத்தில் கட்டிவைத்து ¡¢த்தார்கள் என்று அமொ¢க்க வரலாற்று ஆசி¡¢யர் வில்லியம் டிவால்ஷ் (William T. Walsh) குறிப்பிடுகிறார்ஹிட்லா¢ன் கட்டளைப்படி சுமார் அறுபது லட்சம் யூதர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும்நச்சுவாயு அறைகளில் அடைக்கப்பட்டும் கொல்லப்பட்டனர்அவர்களுள் 10.5 லட்சம்பேர் குழந்தைகள்.  யூதர்கள் இயேசுவைக் கொன்றார்கள்,  கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் கிணறுகளில் நஞ்சைக் கலந்தார்கள்அவர்களின் மதசசடங்குகளில் கிறிஸ்தவர்களின் இரத்தத்தைக் குடித்தார்கள் என்று  ஐரோப்பிய நாடுகளிலிருந்த கிறிஸ்தவர்கள் அவர்கள்மேல் அபாண்டமாகப் பரப்பிய வதந்திகள்தாம் நாஜி (Nazi) ஜெர்மனியில் இவ்வளவு யூதர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம்உண்மையில் யூதர்கள் பிராணிகளின் இரத்தத்தைக்கூடத் தொடுவதில்லைஏனெனில் இரத்தத்தை உணவில் பயன்படுத்தக்கூடாது என்று அவர்களுக்கு அவர்கள் மதம் தடை விதித்துள்ளதுயூதர்கள் விரைவில் ஒரு மேசியாவைத் தேர்ந்தெடுத்துத் தங்கள் அரசாங்கத்தை நிறுவி உலகம் முழுமையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார்கள் என்று ஹிட்லர் நினைத்தார் என்றும்அவருடைய இனவெறிக்கு அதுதான் முக்கிய காரணம் என்றும்

யகூதா பாவர் (Yahuda Bauer) என்ற இஸ்ரேலிய வரலாற்று ஆசி¡¢யர் கூறுகிறார்.

 

இங்கிலாந்து அரசியான முதலாம் மோ¢ (Queen Mary I) தீவிர கத்தோலிக்கர்அவர் புரோடஸ்டன்ட் மதத்தினரை ஆயிரக்கணக்கில் சிறையிலிட்டு சித்திரவதை செய்து கொன்றார்இங்கிலாந்தில் இரத்த ஆறு ஓடியதுஅரசிக்கு ‘இரத்தத்தில் குளித்த மோ¢' (Bloody Mary) என்ற பட்டப்பெயர் வந்தது.  இப்படியாகத் தொடர் வன்முறையின் மூலமாகவே ஐரோப்பிய நாடுகளிலும்அமொ¢க்கஆப்¡¢க்க கண்டங்களிலும் கிறிஸ்தவ மதம் பரவியது.

 

யூதர்களின் மறைநூற்களையும் இறைவனின் வார்த்தைகள் என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்சனிக்கிழமையே ஓய்வுநாளாக (Sabbath) அனுசா¢க்கவேண்டும் என்று பழைய ஏற்பாடும் , நியாயப்பிரமாணமும் சொல்லுகிறதுஆனால் கிறிஸ்தவர்கள் ரோமானிய பேகன் மதத்தினரைப் பின்பற்றி ஓய்வுநாளை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றினர்கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் பண்டிகைகள் பழைய ஏற்பாட்டிலும்புதிய ஏற்பாட்டிலும் குறிப்பிடப்படவேயில்லைஅவை பேகன் மதத்திலிருந்து தோன்றியவை. 'ஒருவன் உன் வலது கன்னத்தில் அடித்தால் உன் இடது கன்னத்தையும் காட்டு'; 'உன் விரோதிகளையும் நேசிப்பாயாகஎன்ற கிறிஸ்தவமதக் கொள்கைகளை ஏதாவதொரு கிறிஸ்தவநாடு பின்பற்றுகிறதா அல்லது கிறிஸ்தவர்கள் அவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டிருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

 

யூதர்களின் கடவுளான ஜெகோவாவைஇயேசு தன்ன்னுடைய பிதா என்று அழைத்த ஒரே காரணத்திற்காக கிறிஸ்தவர்கள் ஜெகோவாவை தங்கள் பரமபிதாவாக ஏற்றுக்கொண்டுள்ளனர்அவரை யூதர்கள் ஜெகொவா (Yehwah) என்று பெயா¢ட்டு அழைத்தார்கள் என்ற காரணத்திற்காகயூதர்மேலுள்ள வெறுப்பால்அவர்கள் கடவுளை நாம் பெயர் சொல்லி வணங்கக்கூடாது என்றுபழைய ஏற்பாட்டில் எங்கெல்லாம் ஜெகோவா என்று பெயர் வருகிறதோ அதையெல்லாம் தவிர்த்துவிட்டுஜெகோவாவை 'கர்த்தர்' (Lord ,the God) என்ற பொதுப்பெயரால் அழைக்கலானார்கள்தற்காலக் கிறிஸ்தவர்கள் மறந்தும்கூட ஜெகோவா என்ற பெயரை உச்சா¢ப்பதில்லைஅவர்கள் இயேசு பிதாவே என்று அழைத்து பிரார்த்தனை செய்த ஜெகோவாவை நோக்கி ஒருநாளும் பிரார்த்திப்பதில்லைஅவர்கள் பிரார்த்தனை செய்வதெல்லாம் இயேசுவை நோக்கியேஅந்த பிரார்த்தனைகளின் முடிவில் போனால் போகிறது என்று "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் எங்கள் ஜெபம் கேளும் பிதாவேஆமென்என்று முடிப்பார்கள்பிதாகுமாரன்பா¢சுத்த ஆவி ஆகிய மூவரும் ஒன்றுதான் என்று சொல்லுகிற கிறிஸ்தவர்கள்இயேசுவை நோக்கி செய்த ஜெபத்தை அவருடைய பிதா எதற்கு கேட்கவேண்டும் என்று அவர்களுக்கே தொ¢யாதுஒருவேளை யூதர்கள் கருதுவதுபோல ஜெகோவா இயேசுவைவிட சக்தி வாய்ந்தவராக இருந்துவிட்டால் என்ன செய்வது என்றுதான் பிதாவுக்கும் ஒரு வார்த்தை சேர்த்துக்கொள்கிறார்கள்இத்தோடு இயேசுவுக்குத் தந்தையாகக் கருதப்படும் பா¢சுத்த ஆவியையும் துணைக்கு அழைத்துக் கொள்வார்கள்ஏனெனில் இயேசு  ஞானஸ்நானம் பெறுகையில் பா¢சுத்த ஆவி புறா வடிவத்தில் அவர்மேல் இறங்கியதாகவும் அதன் பின்னர்தான் அவர் தன் இறைப்பணியைத் தொடங்கியதாகவும் ஒத்தமை சுவிசேஷங்கள் மூன்றும் கூறுகின்றன. (ஏற்கனவே இயேசு பா¢சுத்த ஆவியின் குமாரன் என்று பைபிளில் வர்ணிக்கப்பட்டிருக்கிறதுஅப்படியென்றால் அவர் யோவானிடம் ஞானஸ்நானம் பெறும்போது அவர்மேல் மறுபடியும் எதற்காக பா¢சுத்த ஆவி இறங்கி அவரைப் பா¢சுத்தமாக்கித் தன் குமாரன் என்று சான்றிதழ்  வாசிக்கவேண்டும் என்று கேட்கக்கூடாது!) எனவே பா¢சுத்த ஆவி  தங்கள்மேலும் இறங்கினால் தங்களுக்கும் விசேஷ சக்திகிடைக்கும் என்று எல்லா கிறிஸ்தவர்களும் பா¢சுத்த ஆவியை தங்கள்மேல் இறங்கும்படி இறைஞ்சி வேண்டிக்கொள்வார்கள்அப்படி வேண்டும்போது தங்களை ஒரு வாயு உருளை (gas cylinder) என்று நினைத்துக்கொண்டுபா¢சுத்த ஆவியை ஒரு வாயுஅல்லது நீராவி மாதி¡¢யான வஸ்து எனவும்  கருதிக்கொண்டு , "பா¢சுத்த ஆவியானவரேஎங்கள் மேல் இறங்கி உமது ஆவியால் எங்களை நிரப்பும் ஐயாஎன்று கெஞ்சுவார்கள்இதில் வேடிக்கை என்னவென்றால் இயேசு பா¢சுத்த ஆவியின் குழந்தை என்று கருதப்பட்டாலும் மீண்டும் ஒரே ஒரு முறைதான் பா¢சுத்த ஆவி அவர்மேல் இறங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதுஆனால்  வாயு உருளை தீர்ந்துபோகதீர்ந்துபோக மீண்டும் மீண்டும் அதில் வாயு நிரப்புவதுபோல்,  ஏற்கனவே சென்றமுறை நிரப்ப்பட்ட ஆவி கசிந்து வெளியேறிவிட்டமாதி¡¢ கிறிஸ்தவர்கள் ஒவ்வொருமுறை பிரார்த்தனை செய்யும்பொழுதும்பா¢சுத்த ஆவியால் தங்களை நிரப்பும்படி வேண்டிக்கொள்வார்கள்அது ஏன் என்று தொ¢யவில்லை.

 

இன்றைய நிலையில் ஒருவன் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டுமென்றால் முதலில் பைபிளை விசுவாசிக்கவேண்டும்பைபிளிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் கடவுளின் வார்த்தை என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்பலர் எழுதிய புத்தகங்களைத் தொகுத்துஅவரவர் தங்களுக்குத் தேவையில்லை என்று கருதப்பட்ட பகுதிகளை வெட்டி எறிந்துவிட்டுதேவைப்பட்ட இடங்களில் மனம்போல மாற்றங்கள் செய்துமூலநூலில் இல்லாத பல பகுதிகளைத் தங்கள் வசதிபோல் இடைசொருகல் செய்து ஒரே புத்தகமாக கட்டிவைத்திருப்பதுதான் பைபிள்கிறிஸ்தவமதத்துக்கு அஸ்திவாரம் போன்றது பைபிள்அது இல்லையென்றால் கிறிஸ்தவமதம் நொறுங்கிவிடும். 'மனிதனுக்கு சற்குணங்களைக் கொடுக்கும் உருவாக்கங்களில் அளப்பறிய பரம்பொருளைக் காண்பதே மதம்என்று இந்துமதத்தைக் கற்றுசமஸ்கிருத வேதங்களை ஜெர்மன் மொழியில் பெயர்த்த மாக்ஸ் முல்லர் (Max Muller) கூறுகிறார்.

 கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையே இயேசு சிலுவையில் மா¢த்து மீண்டும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததுதான் என்று கிறிஸ்தவமதத்தை நிறுவிய பவுல் அப்போஸ்தலர் கூறுகிறார். ‘கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இல்லையெனில் எங்கள் பிரசங்கமும் வீண்உங்கள் நம்பிக்கையும் வீண்என்று என்று அவர் கூறுகிறார் (1 கொ¡¢ந்தியர் 15: 12). இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறியீடு (symbol) கொண்டு காண்பிக்க இயலாது என்பதால் இயேசு அறையுண்டு மா¢த்த சிலுவையைக் கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தின் குறியீட்டுச் சின்னமாகக் கொண்டிருக்கிறார்கள்!

 

மனிதர்கள் பொதுவாக ஒரு பொருளின் உண்மையான காரணத்தை அறிந்துகொள்வதைவிடஅது எப்படி விளக்கப்படுகிறது என்பதற்கே முக்கியத்துவம் அளிப்பார்கள் என்று கென்னத் பர்க் (Kenneth Burke) என்ற அறிஞர் கூறுகிறார்மனிதன் குறியீடுகளையும்குறியீட்டுச் சின்னங்களையும்  உருவாக்கி அவற்றைப் பயன்படுத்தக்கூடியமற்றும்  பல நேரங்களில் தவறாகவும் பயன்படுத்துகின்ற ஒரு பிராணி என்று அவர் மேலும் கூறுகிறார்அத்தகையவர் பலர் நிறைந்ததாக விளங்குவது கிறிஸ்தவம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard