Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்து யார்? கடைசி காலம்- இரண்டாவது வருகை கட்டுக்கதைகள்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
கிறிஸ்து யார்? கடைசி காலம்- இரண்டாவது வருகை கட்டுக்கதைகள்
Permalink  
 


கிறிஸ்து யார்? கடைசி காலம்- இரண்டாவது வருகை கட்டுக்கதைகள்

ஏசு என்பவர் ரோமன் கவர்னர் பொந்தியுஸ் பிலாத்துவினால் ரோமிற்கு எதிரான ஆயுத்க் கலகக்காரன், யூதப் புராண மூட நம்பிக்கையின்படி “கிறிஸ்து எனும் யூதர்களின் ராஜா” என்னும்படியாக மரண தண்டனையில் இறந்தார்.
யோவான் 18:3 ரோமன் படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.12 ரோமன் படைப்பிரிவினரும்  ரோமன்  படை ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

யோவான் 19:9 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ‘ நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் ‘ என்று எழுதி இருந்தது.22 பிலாத்து அவர்களைப் பார்த்து, ‘ நான் எழுதியது எழுதியதே ‘ என்றான்.

images?q=tbn:ANd9GcTnwhhKCLq6rmMLZ3Us_7o images?q=tbn:ANd9GcQS_4_mYdj1zGacuevoeZk
இயேசு யூதர்களின் அரசன்  என்பதன் மூல கிரேக்கம், கிறிஸ்து, எபிரேயம் மேசியா

கதாசிரியர்கள் இறந்த இயேசு உயிர்த்து எழுந்தார் என்பதை நம்பி, அவர் கதையைப் பரப்ப புனைந்தவையே  சுவிசேஷங்கள். முதலில் புனையப்பட்டது மாற்கு, அதை பின்பற்றி அதை ஒத்து புனையப்பட்டவை மத்தேயு, லூக்கா சுவிகள், மாற்கு கதை அறிந்தும் மாறுபட்டபடி புனையப்பட்டது யோவான சுவிசேஷம்.பைபிளியல் அறிஞர்கள் சுவிசேஷங்களின் ஆரம்ப வடிவம்  புனைந்த காலம் என்பது.இயேசு பேசிய மொழி எபிரேயம் அல்லது அரெமிகம். ஆனால் சுவிகள் அனைத்தும் கிரேக்க மொழியில் புனையப்பட்டவை.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இயேசு மத்தேயு சுவிசேஷத்தின்படி பொ.மு. 6ல் பெத்லஹேம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப்- மேரி மகனாகப் பிறந்தார். லூக்கா சுவியின்படி பொ.கா.8ல் நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப்- மேரி மகனாகப் பிறந்தார். 
சீடரோடு இயங்கிய காலம் ஒரு வருடத்திற்கும் குறைவு, கடைசி வாரம் மட்டுமே யூதேயாவில் ஜெருசலேமில்.யோவான் சுவியின்படி, சீடரோடு 2 வருடத்திற்கும் சற்றெ அதிகமாக இயங்கினார். யோவான் கைதிற்கு முன்பே தொடங்கி யூதேயா- கலிலேயா என மாறிமாறி சுற்றினார். கடைசி 8 மாதங்கள் யூதஏயாவில் தான்.

Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய   ஏற்பாடு பேராசிரியர்– ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்
“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned.
4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onward the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn 3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கியதுகலிலேயாவில் என்றும், –ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின்போது மட்டுமே ஜெருசலேம் வந்தார்மேலும் –ஞானஸ்நானர் யோவான்கைதிற்குப் பிறகு, கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும்நான்காவது   சுவியோ வேறுவிதமாக,  முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும்கலிலேயாவிலும் முன்னும்பின்னும்   இயங்கியதாகவும்ழாம்   அத்தியாயத்திற்குப் பின் முழுமையாக ஜெருசலேமிலும் யூதேயாவிலும் எனச் சொல்கிறார்,   யோவான்3:24- ஞானஸ்நானர் யோவான்  கைதிற்குப் முன்பேஏசு இயக்கம் எனவும் காட்டும்.
மேசியா – கிறிஸ்து
மேசியா – கிறிஸ்து என்பதன் நேரடிப் பொருள், மேலே எண்ணெய் ஊற்றப்பட்டவர். இஸ்ரேல் நாட்டில் மன்னர், யூத ஆலயத் தலைமைப் பாதிரி மற்றும் போர் தளபதி  ஆகியோர் பதவி ஏற்கும்போது தலையில் வாசனை எண்ணெய் தடவுதலை  (1சாமுவேல்10:12அரசர்கள்9:6;  யாத்திராகமம்29:5-7) வைத்து தேர்ந்தெடுக்கப் பட்டவர் எனும் சொல் ஆகும். 
மரணமடைந்த இயேசுவை- எனக் காட்ட மாற்கு பயன்படுத்தும் வசனம்

  மாற்கு1:2 ‘ இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.
மலாக்கி3: 1 இதோ! நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 ஞானஸ்நானர் யோவான் தான் எலியா என ஏசு சொல்வதாகவும் உள்ளது.

  மத்தேயு11:14 நியாயப்பிரமாணம் கூறியவற்றையும் தீர்க்கதரிசிகள் கூறியவற்றையும் நீங்கள் நம்பினால், யோவானே எலியா
 லூக்கா7: 27 ‘ இதோ! என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார் ‘ என இவரைப் பற்றித்தான் மறை நூலில் எழுதப்பட்டுள்ளது.

எலியா வருகைக்குப் பின் கர்த்தரின் நாளில் கர்த்தர் வருவார் என்பது தான் கதையின் நம்பிக்கை

மலாக்கி4:1 இதோ! சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்: வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது: முற்றிலும் சுட்டெரித்து விடும், என்கிறார் படைகளின் ஆண்டவர். 5 இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்.6நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடிஅவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்.

//ஆண்டவரின் நாள் – என்றால் என்ன என்ன அதில் நடக்கும்?

 யோவேல்1:15 துக்கமாயிருங்கள். ஏனென்றால் கர்த்தருடைய சிறப்புக்குரிய நாள் அருகில் இருக்கிறது. அப்போது, தண்டனையானது சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து ஒரு சங்காரம் போன்று வரும். 
28 “இதற்குப் பிறகு நான் எனது ஆவியை அனைத்து ஜனங்கள் மேலும் ஊற்றுவேன்.
யோவேல்2:28உங்கள் மகன்களும், மகள்களும் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள்.    உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.     உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைக் காண்பார்கள். 29 அப்போது, நான் பணியாட்கள் மேலும் பணிப்பெண்கள் மேலும்     என் ஆவியை ஊற்றுவேன்.   30 நான் வானத்திலும் பூமியிலும் இரத்தம், நெருப்பு,     அடர்ந்த புகைபோன்ற அதிசயங்களைக் காட்டுவேன். 31 சூரியன் இருட்டாக மாற்றப்படும்.     சந்திரன் இரத்தமாக மாற்றப்படும்.     பிறகு கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள்வரும். 32 பிறகு,   கர்த்தருடைய நாமத்தை கூப்பிடுகிற எவரும் இரட்சிக்கப் படுவார்கள்.”  சீயோன் மலையின் மேலும், எருசலேமிலும் காப்பாற்றப்பட்ட ஜனங்கள் இருப்பார்கள்.     இது கர்த்தர் சொன்னது போன்று நிகழும். ஆம் கர்த்தரால் அழைக்கப்பட்ட மீதியிருக்கும் ஜனங்கள் திரும்பி வருவார்கள்.

 இதே வார்த்தைகளை ஏசுவும் சொன்னதாகக் கதை

 மாற்கு 13:23 எனவே கவனமாய் இருங்கள். இவை நடைபெறும் முன்னரே நான் உங்களை எச்சரிக்கை செய்துவிட்டேன்.
24 “அந்நாட்களில் அத்துன்பங்கள் நடந்த பிறகு, “‘சூரியன் இருளாகும்.    சந்திரன் ஒளி தராது.25 நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்.    வானிலுள்ள அத்தனையும் மாறிப்போகும்’26 “பிறகு மேகங்களுக்கு மேல் மனித குமாரன் மிகுந்த வல்லமையோடும், மகிமையோடும் வருவதைக் காண்பார்கள். 3நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன்.இப்பொழுது உள்ள மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே நான் சொன்னவை எல்லாம் நிகழும். 31 இந்த முழு உலகமும் பூமியும் வானமும் அழிந்துவிடும். ஆனால் நான் சொன்ன வார்த்தைகள் மாத்திரம் அழியாது.

ஏசு சீடரை அனுப்பும்போது சொலவதாக கதையில் உள்ளது.

மத்தேயு 10:1 இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார்.  5.இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். ஆனால் ஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள்.   நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள். 

23 ஒரு நகரத்தில் நீங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டால், வேறொரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள். உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் வருகிறவரைக்கும், நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது.

யோவானை ஏலியா எனச் சொன்ன ஏசு, பழைய ஏற்பாட்டில் சட்டங்களும், தீர்க்கரகளும் சொன்னவை எல்லாம் யோவானோடு முடிந்தது என்கிறார்.

மத்தேயு11:13 ல்லாத் தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப் பிரமாணமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன. நடக்கவிருந்த செயல்களை அவை கூறின.  
லூக்கா16: 16திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் யோவான் காலம் வரையிலும் தான். 
 இது போலே பலப்பல வசனங்கள் உள்ளன. இஸ்ரேலின் யூத மதத்தில் ஒரு பிரிவினர் எபிரேய பைபிளில் அதீதமாக கற்பனை செய்து உலகம் அழியப் போகிறது, அதற்கு முன் கடைசி தலைமுறையில் மேசியா வருவார் என நம்பினர்.
 
 எலியா வந்த பின்னர் கர்த்தரின் நாளில் தான் வருகை, அது உலகம் அழிவிற்கு தான். இதுவே யூத பழைய ஏற்பாட்டுக் கதியின் நம்பிக்கை ஊகங்கள்.   எனவே தீர்ப்பு நாளில் வருபவர் மேசியா- இறுதி தூதர்.
 
ஆனால் ஏசுவின் காலத்தில் மோசேயின் நாற்காலியில் யூதத் தலைமை பாதிரியாக இருந்தவர்கள் சதுசேயர்கள். அவர்கள் நம்பியது.
அப்போஸ்தலர்  நடபடிகள் 23:8சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்: பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர்.
தேவனின் பெயரை வீணில் உச்சரிக்கக் கூடாது, அம்மதத்தில் கடவுள் மகனாக அவதரித்தல் எல்லாம் வெற்று கட்டுக் கதைகள்.
 
இயேசுவை கடவுள் என்கின்றனர்- அவர் சொன்னதாக

யோவான் 6:48 நானே ஜீவனளிக்கும் அப்பம். 49 உங்கள் மூதாதையர்கள் தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப்போன்றே பூமியில் மாண்டுபோனார்கள். 50 நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம்ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் என்றென்றைக்கும் பூமியில் உயிர்வாழ்வான். 51 என்னுடைய சரீரம் தான் அந்த அப்பம். 

 2000 வருடங்களாக மன்னாவை சாப்பிட்டவரைப் போல, ஏசு- பவுல், பேதுரு என அனைவருமே இறந்தனர். மேலும் ஏசு 12 சீடர் தேர்ந்தெடுத்தார், அவரின் புது உல்கம யூதருக்கு மட்டுமே, 12 கோத்திரத்தாருக்கு 12 பேர் ஆனால் அதில் ஒருவன் ஏசு கையால் அப்பம் பெற சாத்தான் நுழைந்ததாம்.

 

மத்தேயு19:28 இயேசு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப்பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின் பன்னிரெண்டு இனங்களுக்கும் நீதி செய்வீர்கள்.

 

யோவான் 13:26 இயேசு அப்பத்துண்டை தோய்த்து எடுத்தார். சீமோனின் மகனான யூதாஸ்காரியோத்திடம் அதனைக் கொடுத்தார். 27 யூதாஸ் அந்த அப்பத்துண்டை வாங்கிக்கொண்டதும் சாத்தான் அவனுக்குள் புகுந்துகொண்டான். 

 

யூத மதம் என்பது வெறும் அரசியல் மதமே, அதில்  வரவேண்டிய கிறிஸ்து -இரண்டாவது வருகைஎல்லாமே வெறும் மூட நம்பிக்கைகளே



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

யோவான் 6:49 உங்கள் மூதாதையர்கள் தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப்போன்றே பூமியில் மாண்டுபோனார்கள். 50 நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம். ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் பூமியில் என்றென்றைக்கும் உயிர்வாழ்வான். 51 என்னுடைய சரீரம் தான் அந்த அப்பம். நான் என் சரீரத்தைத் தருவேன். உலகில் உள்ளவர்கள் பூமியில் வாழ்வைப் பெறுவார்கள்” என்று இயேசு கூறினார்.

யோவான் 21:22 அதற்கு இயேசு, “நான் வருமளவும் இவன் இருக்க எனக்கு விருப்பம் உண்டு. அது உனக்கு அவ்வளவு முக்கியமில்லை. நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்றார்.

23 ஆகையால் சீஷர்களிடம் ஒரு கதை பரவிற்று. அதாவது இயேசு அன்பாயிருக்கும் அந்த சீஷன் மரணம் அடைவது இல்லை என்று சீஷர்கள் பேசிக்கொண்டனர். ஆனால் அவன் மரணம் அடைவதில்லை என்று இயேசு கூறவில்லை. அவர் “நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பம். அதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம்” என்றே கூறினார்.

இரண்டாவது வருகை யோவான் உயிரோடு இருக்கும் முன்பே

முதல் நூற்றாண்டில் ஏமாற்றப் பட்டவருக்கு பவுல் கடிதம்

உலகம் நம்மோடு அழியும், நாமெல்லாம் மாற்றப்படுவோம் 1கொரி 15:51 ஆனால் நான் கூறும் இரகசியத்தைக் கேளுங்கள். நாம் எல்லாரும் மரணமடைவதில்லை. நாம் மாற்றமுறுவோம். 52 கணத்தில் அது நிகழும். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நமது மாற்றம் நிகழும். கடைசி எக்காளம் முழங்கும்போது இது நடக்கும். எக்காளம் முழங்கும், மரித்த விசுவாசிகள் எப்போதும் வாழும்படியாய் எழுப்பப்படுவார்கள். நாமும் கூட முழுமையாய் மாற்றம் அடைவோம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard