Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இராச சிம்மன் (907-931) சின்னமனூர் பெரிய செப்பேடு


Guru

Status: Offline
Posts: 7329
Date:
இராச சிம்மன் (907-931) சின்னமனூர் பெரிய செப்பேடு
Permalink  
 


இராச சிம்மன் (907-931)
சின்னமனூர் பெரிய செப்பேட்டுப் பகுதி

1.3.1 (05)

ஸ்வஸ்திஸரீ
திருவொடுந்தெள் ளமிர்தத்தொடுஞுf செங்கதிரொளிக் களஸ்துபத்தொடும்
அருவிமதக் களிறொன்றுடந் தோன்றிஅர னவிர்சடைமுடி
வீற்றிருந்த வெண்தங்கள் முதலாக வௌிப்பட்டது
நாற்றிசையோர் புகழ்நீரது நானிலத்தி னிலைபெற்றது
திருவொடுால் நேரஸ்துதிக் கப்பட்டது
5
விரவலர்க் கரியது மீனத்வய சாசனத்தது
பொருவருஞ்சீர் அகத்தியனைப் புரோகிதனா கப்பெற்றது
ஊழியூழி தோறுமுள்ளது நின்றஒரு வனைஉடையது
வாழியர்பாண் டியர்திருக் குலமிதனில் வந்துதோன்றி
வானவெல்லை வரைத்தாண்டும் அலைகடல்கடைந் தமிர்துகொண்டும்
10
நானில்த்தோர் விஸ்மயப்பட நாற்கடலொடுபகலாடியும்
மறுவிலொளிர் மணிமுடியொடுசங்கவெள்வளைதரெத்தும்
மறுவிலொளிர் மணிமுடியொடு சங்கவெள் வளைதரித்தும்
நிலவுலகம் தூதுய்த்தும் பாகசாசன னாரம்வவ்வியுஞ்
செம்மணிப்பூ ணெடுதோன்றித் தென்றமிழின் கரைகண்டும்
15
வெம்முனைவே லொன்றுவிட்டும் விரைவரவிற் கடல்மீட்டும்
பூழியனெனப் பெயரெய்தியும் போர்க்குன் றாயிரம்வீசியும் 
பாழியமபா யகினிமர்ந்தும் பஞ்சவனெனும் பெயர்நிறீயும்
வளமதுரை நகர்கண்டும் மற்றதற்கு மதில்வகுத்தும்
உளமிக்க மதியதனா லொண்டமிழும் வடமொழியும்
20
பழுதறத்தா னாராய்ந்து பண்டிதரில் மேந்தோன்றியும்
மாரதர்மலை களத்தவியப் பாரதத்திற் படகோட்டியும்
விசயனைவசு சாபம்நீக்கியும் வேந்தழிச்சுரம் போக்கியும்
வாசயில் மாக்கயல்புலிசிலை வடவரைநெற்றியில் வரைந்தும்
தடம்பூதம் பணிகொண்டு தடாகங்கள் பலதிருத்தியும்
25
அடும்பசிநோய் நாடகற்றி அம்பொற்சித்ர முயரியந்
தலையாலங் கானத்திற் றன்னொக்கு மிருவேந்தரைக்
கொலைவாளிற் றைதுமிதித்துக் குறைத்தலையின் கூத்தொழித்தும்
மகாபாரதம் தமிழ்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்
மகாராசரும் சார்வபௌமரும் மகிமண்டலங் காத்திகந்தபின்
30
வில்லவனை நெல்வேலியும் விரிபொழிற்சங் கரமங்கைப்
பல்லவனையும் புரங்கண்ட பராங்குசன்பஞ் சவர்தோன்றலும்
மற்றவற்கு பௌத்ரனாயின மன்னபிரா னிராசசிங்கனும்
கொற்றவர்க டொழுகழற்காற் கோவரகுண மகராசனும்
ஆங்கவர்காத் மசனாகி அவனிதலம் பொறைதாங்கித்
35
தேங்கமழ்பொழிற் குண்ணூரிலும் சிங்களத்தும் விழிஞத்தும்
வாடாத வாகைசூடிக் கோடாதசெங் கோனடாவிக்
கொங்கலர்பொழிற் குடமுக்கிற் போர்குறித்து வந்தெதிர்ந்த
கங்கபல் லவசோழ காலிங்க மாகதாதிகள்
குருதிப்பெரும் புனற்குளிப்பக் கூர்வெங்கனை தொடைநெகிழ்த்துப்
40
பதிதியாற்ற லொடுவிளங்கின பரசக்கிர கோலாலனுங்
குரைகழற்கா லரைசிறைசக் குவலயதலந் தனதாக்கின
வரைபுரையு மணிநெடுந்தோள் மன்னர்கோன் வரகுணவர்மனும்
மற்றவனுக் கிளையனான மனுசரிதன் வாட்சடையன் 
பொற்றடம்பூண் சிரிபராந்தகன் புனைமணிப்பொன் முடிசூடிக்
45
கைந்நிலந்தோய் கரிக்குலமும் வாஜிப்ருந்தமுங் காலாலுஞ்
சென்னிலத்தி னிலஞ்சோரத் திண்சிலைவாய்க் கணைசிதறியும்
கரகிரியிற் கருதாதவர் வரகரிக்குல நிரைவாரியும் 
நிலம்பேர நகர்கடந்துந் நெடும்பெண்ணா கடமழித்தும்
ஆலும்போர்ப் பரியொன்றா லகன்கொங்கி லமர்கடந்தும்
50
தேவதானம் பலசெய்தும் பிரமதேயம் பலதிருத்தியும்
நாவலந்தீ வடிப்படுத்த நரபதியும் வானடைந்தபின்
வானவன்மகா தேவியென்னு மலர்மடந்தை முன்பயந்த
மீனவர்கோ னிராசசிங்கன் விகடவா டவனவனேய்
அகிபதியா யிந்தலையால் அரிதாகப் பொறுக்கின்ற
55
மகிமண்டலப் பெரும்பொறைதன் மகாபுஜபலத் தாற்றாங்கி
புசகநாயக தரணிதாரண ஹரணராசித புசபலனாய்
உலப்பிலிமங் கலத்தெதிர்ந்த தெவ்வருடல் உகுத்தசெந்நீர்
நிலப்பெண்ணிற் கங்கராக மெனநீவப் பாணிதந்தும்
மடைப்பகர்நீர்த் தஞ்சசையர்கொன் தானைவரை நைப்பூரிற்
60
படைப்பரிசா ரந்தந்து போகத்தன் பணைமுழக்கியுங்
கொடும்பைமா நகர்நிறைந்த குரைகடற் பெருந்தானை
இடும்பையுற் றிரியத்தன் இரணோதய மேல்கொண்டும்
புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி
கனற்படவிழித் தெதிர்ந்தவீரர் கவந்தமாடக் கண்சிவந்தும்
65
சேவலுயர் கொடிக்குமர னெனச்சீரித் தென்றஞ்சைக்
காவலனது கரிதுரக பதாதிசங்கங் களத்தவியப்
பூம்புனனா வற்பதியில் வாம்புரவி பலங்காட்டியும்
விஜயத்துவஜம் விசும்பணவச் செங்கோறிசை விளிம்மணவக்
குசைமாவுங் கொலைக்குன்றமுங் குருதியார முங்கொணர்ந்தும்
70
குலவர்தன ரடிவணங்க மகேந்திரபோக மனுபவித்த
விகடவாடவன் சிரிகாந்தன் மீநாங்கித சைலேந்திரன்
இராசசிகா மணிதென்னன் ராசித குணகணுங்கோன்
எண்ணறிந்த பிரமதேயமும் எண்ணிறந்த தேவதானமும்
எண்ணறிந்த பள்ளிச்சந்தமும் எத்திசையு மினிதியற்றி
75
உரம்பிலொதி ஒலிகடல்போ லொருங்குமுன்னந் தானமைத்தவல்
இராசசிங்கப் பெருங்குளக்கீழ் சூழல்நக ரிருந்தருளி
இராஜ்யவர்ஷம் இரண்டாவதன் எதிர்பதினான் காம்யாண்டில். . . . .



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard