Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வச்சணந்தி மாலை (வெண்பா பாட்டியல்)


Guru

Status: Offline
Posts: 7329
Date:
வச்சணந்தி மாலை (வெண்பா பாட்டியல்)
Permalink  
 


வச்சணந்தி மாலை (வெண்பா பாட்டியல்) கூறும் வர்ணாசிரமம்  

உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும், வல்லெழுத்துக்கள் ஆறும் பார்ப்பன வருணம் என்றும்; த, ந, ய, ர, ப, ம இவ்வாறு மெய்யும் அரச வருணம் என்றும்;  ல, வ, ற, ன இந்நான்கும் வணிக வருணம் என்றும்; தமிழுக்கே சிறப்பெழுத்துக்கள் எனப்பெருமையாகக் கூறப்படும் ழ, ள இவ்விரண்டும் சூத்திர வருணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

நான் முன்பு திருவிளையாடற் புராணத்தில் பார்ப்பான் நிறம் வெண்மை, அரசன் - செம்மை, வணிகன் - பச்சை, சூத்திரன் -கறுப்பு என்று கூறியிருப்பதாகக் கூறினோம். அதுபோலவே இந்நூலிலும் பாக்களுக்கு கூட நிறம் கூறப்பட்டுள்ளது.

வெண்பா - வெண்மை,  ஆசிரியப்பா - செம்மை,  கலிப்பா- பொன்மை, வஞ்சிப்பா - கருமை  

என்று கூறுகின்றது. மேலும் வெண்பா - பிராமண குலமென்றும், ஆசிரியப்பா - சத்திரிய குலமென்றும், கலிப்பா - வைசிய குலமென்றும், வஞ்சிப்பா - சூத்திர குலமென்றும் குலப் பொருத்தங்கள் கூறுகின்றது. அத்துடன் விட்டதா? இல்லை. வெண்பாவால் அந்தணனைப் பாடவேண்டுமாம். ஆசிரியப் பாவால் அரசனைப் பாடவேண்டுமாம். கலிப்பாவால் வைசியனைப் பாடவேண்டுமாம். வஞ்சிப்பாவால் சூத்திரனைப் பாடவேண்டுமாம்.

கலம்பகம் பாடவும் நிபந்தனை:

ஒருவன் கலம்பகம் என்ற நூல் செய்ய விரும்பினால் தேவருக்கு நூறு பாட்டும், அந்தணர்க்குத் தொண்ணூற்றைந்து  பாட்டும்,  அரசர்களுக்குத் தொண்ணூறு பாட்டும், அமைச்சருக்கு எழுபது பாட்டும், வணிகருக்கு ஐம்பதும், சூத்திரனுக்கு முப்பதுமாக பாட வேண்டுமாம். என்னே இக்கால வர்ணா சிரமத்தின் கொடுமை !          



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்தப் பாட்டியலும்

 

முதன் மொழியியல்

0. வெண்பா
தொகுத்துரைத்த மங்கலஞ் சொல்லெழுத்துத் தானம்
வகுத்தபா லுண்டி வருணம் - பகுத்தநாள்
தப்பாக் கதிகணமென் றீரைந்தின் தன்மையினைச்
செப்புவதா மும்மொழியின் சீர்.

1. மங்கலப் பொருத்தம்
சீரெழுத்துப் பொன்பூ திருமணிநீர் திங்கள்சொற்
கார்பரிதி யானை கடலுலகம் - தேர்மலைமா
கங்கை நிலம்பிறவுங் காண்டகைய முன்மொழிக்கு
மங்கலமாஞ் சொல்லின் வகை.

2. சொற் பொருத்தம்
வகையுளி சேர்தல் வனப்பின்றாய் நிற்றல்
தொகையார் பொருள்பலவாத் தோன்றல் - தகையில்
பொருளின்மை யீறு திரிதலே போல்வ
தருமுதற்சீர்ச் சொற்காகுந் தப்பு.

3. எழுத்துப் பொருத்தம்
தப்பாத மூன்றைந்தே ழொன்பான் தவறிலவென்
றொப்பா முதற்சீர்க் குரைசெய்வர் - செப்புங்கால்
தண்டாத நான்காறெட் டாகா தவிர்கென்று
கொண்டா ரெழுத்தின் குறி.

4. தானப் பொருத்தம்
குறிலைந்துந் தந்நெடில் கொண்டிஉஐ ஒளசேர்ந்
தறிபால னாதியா வைந்து - மிறைவன்பேர்
முன்னெழுத்துப் பாலனில்வைத் தெண்ணிமூப் பேமரணம்
என்னுமிவை தீதென்றே யெண்.

5. பாற் பொருத்தம்
எண்ணுங் குறிலா ணியைந்த நெடிலெல்லாம்
பெண்ணாகு மொற்றாய்தம் பேடாகும் - பெண்ணினோ
டாண் புணர்ச்சிக் கவ்வவ் வெழுத்தே மயங்கினுமா 
மாண்பில்பே டென்றார் மதித்து.

6. உணாப் பொருத்தம்
மதித்த கசதநப மவ்வோடு வவ்வும்
உதித்தமைந்த நாற்குற் றுயிரும் - துதித்தமுதென்
றாதி மொழிக்குந் தசாங்கத் தயலுக்குந்
தீதிலவே யென்றார் தெரிந்து.

7.
தெரிந்த யரலமேற் சேர்ந்தவா வோவும்
புரிந்தவற் றொற்றாய்தப் புள்ளி - விரிந்த
அளவொடுகான் மாத்திரையு மாமென் றறிந்தோர்
உளவென்றார் நஞ்சென் றொழி.

8. வருணப் பொருத்தம்
ஒழியா வுயிரனைத்து மொற்றுமுத லாறும்
அழியா மறையோர்கா மென்பர் - மொழியும்
அடைவேயோ ராறு மரசர்க்கா மென்பர்
படையாத சாதிகளின் பண்பு.

9.
பண்பார் வணிகர்க்காம் பாங்கி லவறனக்கள்
மண்பாவுஞ் சூத்திரர்க்கா மற்றையவை - நண்பால்
அரனரிசேய் மால்கதிர்கூற் றாய்மழைபொன் மெய்க்கும்
பிரமன் படைப்புயிர்க்குப் பேசு.

10. நாட்பொருத்தம்
பேசு முயிரடைவே நான்காரல் பின்னைந்து
மாசிலாப் பூராட மற்றொருமூன் - றாசிலாப்
பேருத்தி ராடமா மென்று பெரிதுணர்ந்தோர்
பாரித்தார் நாளின் பரிசு.

11.
பரிசுடைய கவ்வரியி னான்கிரண்டு மூன்றுந்
தெரிவுடைய மூன்றடைவே செப்பிற் - பிரிவுடைய
ஓணமே யாதிரையே யொண்புநர்பூ சம்பூசம்
பேணி யுரைத்தார் பிரித்து.

12.
பிறிந்த சகரத்து நான்கைந்து பின்மூன்
றறிந்த கலமுதன்மூன் றாகுஞ் - செறிந்த
ஞகரத் தொருமூன்று நன்குணர்ந்தோ ராய்ந்த
புகர்தீ ரவிட்டமாம் போற்று.

13.
போற்றுந் தகரமிரண் டேழ்மூன்றும் பொய்தீர்ந்தோர்
சாற்றுவர் சோதி முறஞ்சதயம் - வேற்றனுடங்
கேட்டைபூ ரட்டாதி கேணகரத் தோராறும்
வாட்டமிலா மும்மூன்றும் வந்து.

14. 
வந்த பகரத்து நான்கிரண்டா றுத்திரந்தொட்
டந்தமிலா மூன்றாகு மவ்வடைவே - வந்ததற்பி
னாறுமக மூன்றுடன்மூன் றாயிலியம் பூரமா
மாறின் மகரத்தின் மாட்டு.

15.
மாட்டும் யகரத்துள் யாவுத் திரட்டாதி
ஈட்டியயூ காரயோ காரங்கள் - காட்டிய 
மூலம் வகரத் தொருநான்கு ரோகணிமான்
தோலாத நான்கெனவே சொல்.

16. 
சொல்லியநாண் மூவொன்ப தாகத் துணிந்தொன்று
புல்லியமூன் றைந்தேழ் பொருந்தாவா - மல்லனவற்
றட்டம ராசி வயினா சியமிவையும்
விட்டொழித்தல் நன்றெனவே வேண்டு.

17.கதிப் பொருத்தம்
வேண்டுங் குறில்வன்மை யீறொழிந்தால் விண்ணோர்க்காம்
ஆண்ட நெடின்முதனான் கந்தமொழித் - தீண்டிய
மென்மையா மக்கட் கிவையிரண்டு மெய்க்கதிக்கு
நன்மையா முன்மொழிக்கு நாட்டு.

18.
நாட்டிய ஒஓ யரலழ நல்வன்மைக்
கீட்டிய வந்த மிவைவிலங்காங் - காட்டா
தொழித்த நரகர்க்கென் றோதினா ரின்ன
வெழுத்தாகா வாதி யிடை.

19. கணப் பொருத்தம்
ஆதி யிடையிறுதி முற்றுநே ராநிரையென் 
றோதுவர்நீர் தீமாக மொண்சுவர்க்கந் - தீதிலோர்
சொற்றார் மதிபரிதி கானிலமா நீர்மதியு
முற்றாகி யாமுன் மொழிக்கு.

20.
முன்மொழி யாகலான் மூவசைச்சீ ரல்லன
நன்மைசால் தெய்வ நவிலாமை - முன்மொழிக்
கீட்டிய தொன்மை யிலக்கணங்க ளிவ்வகையே
காட்டு மகலக் கவிக்கு.

21. வெண்பா
திருமங்கை நின்றகலாள் தெவ்வுநோய் நீங்கும்
தருமங்கள் நீங்கலாச் சார்வார் - இருநிலத்து
மன்னருள்ளார் தாழுந்தாள் வச்சணந்தி மாமுனிவன்
இன்னருளால் நோக்கு மிடம்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்தப் பாட்டியலும்

இரண்டாவது செய்யுளியல்

1.
கவிகமகன் வாதியே வாக்கியெனக் காசில்
புவியின்மேல் நால்வர் புலவர் - கவிகடாம்
ஆசு மதுரமே சித்திரம்வித் தாரமெனப்
பேசுவோர் நால்வர்க்கும் பேர்.

2. ஆசுகவி
பேரெழுத்திற் சொல்லிப் பொருளிற் பெருங்கவியிற்
சீரலங்கா ரத்திற் றெரிந்தொருவன் - நேர்கொடுத்த
உள்ளுரைக் கப்போ துரைப்பதனை யாசென்றார்
எள்ளாத நூலோ ரெடுத்து.

3. மதுரகவி
எடுத்த பொருளினோ டோசை யினிதாய்
அடுத்தவைசெஞ் சொல்லா யணியுந் - தொடுத்த
தொடையும் விளங்க வவைதுதிப்பச் சொல்லின்
இடமுடைய மாமதுர யாப்பு.

4. சித்திரகவி
யாப்புடைய மாலைமாற் றாதியா வேனையவும்
வாய்ப்புடைய சொல்லின் வகுத்தமைத்து - நீப்பிலா
வண்ணமுந் தொன்னூன் மரபு வழுவாமற்
பன்னுவது சித்திரத்தின் பா.

5. வித்தாரகவி
பாங்கார் தொடர்நிலைப்பாப் பல்பாதஞ் சேர்தனிப்பா
ஈங்கலப் பாக்க ளிரண்டாகும் - ஆங்குத்
தொடர்நிலைப்பா வின்விகற்பஞ் சூழ்வளையாய் சொல்லிற்
கடையிலவே யென்றுரைத்தார் கண்டு.

6. பிள்ளைக்கவி
கண்டுரைக்கிற் பிள்ளைக் கவிதெங்வங் காக்கவெனக்
கொண்டுரைக்குந் தேவர் கொலையகற்றி - ஒண்டொடியாய்
சுற்றத் தளவா வகுப்பொடு தொல்விருத்தம்
முற்றுவித்தல் நூலின் முறை.

7.
முறைதருமூன் றாதிமூ வேழீறாந் திங்கள்
அறைகநிலம் பத்துமாண் டைந்தேழ் - இறைவளையார்க்
கந்தஞ் சிறுபறையே யாரதியா மூன்றொழித்துத்
தந்தநில மோரேழுஞ் சாற்று.

8. 
சாற்றரிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி
மாற்றரிய முத்தமே வாரானை - போற்றரிய
அம்புலியே யாய்ந்த சிறுபறையே சிற்றிலே
பம்புசிறு தேரோடும் பத்து.

9. பல்சந்தமாலை, அந்தாதி
பத்தாதி நூறந்தம் பல்சந்த மாலையாம்
ஒத்தாய வெண்பா வொருநூறா - ஒத்தசீர்
அந்தாதி யாகுங் கலித்துறையு மவ்வகையே
வந்தா லதன்பே ரவை.

10. கலம்பகம்
வைக்கும் புயந்தவம்வண் டம்மனை பாண்மதங்கு
கைக்கிளைசித் தூசல் களிமடக்கூர் - மிக்கமறம்
காலந் தழையிரங்கல் சம்பிரதங் கார்தூது
கோலுங் கலம்பகத்தின் கூறு.

11. 
கூறு மொருபோகு வெண்பாக் கலித்துறைகள்
மாறின் முதலுறுப்பா மன்விருத்தம் - வேறகவல்
வஞ்சித் துறைவிருத்தம் வான்றுறைவெண் பாமருட்பா
எஞ்சாக் கலியினங்கொண் டீட்டு.

12. 
ஈசர்க்கு நூறிழிபைந் தையர்க் கிகலரசர்க்
காசற்ற தொண்ணூ றமைச்சருக்காம் - ஏசா
எழுபானைம் பான்வணிகர்க் கேனையோர்க் காறைந்
திழிபிற் கலம்பகப்பாட் டீண்டு.

13. ஒலியந்தாதி, மும்மணிக்கோவை
ஈண்டிய முப்பதா யீரெண் கலைவண்ணம்
மூண்டதொலி யந்தாதி முப்பதாம் - ஆண்டகவல்
முன்முறையே வெண்பா கலித்துறைய வந்தாதி
மும்மணிக்கோ வைக்கு முதல்.

14. ஊர் நேரிசை வெண்பா, ஊர் இன்னிசை வெண்பா
முதல்வனூ ரின்பேரான் மொழிவன வெண்பா
அதனைத்தொண் ணூறெழுபா னைம்பான் - மதர்விழியாய்
இன்னிசைவெண் பாவிற்கு மொக்கு மியற்பெயர்
அன்னவற்றாற் கட்டுரைத்தா ராய்ந்து.

15. கோவை, கைக்கிளை
ஆய்ந்த கலித்துறைதான் நானூறா கப்பொருண்மேல்
வாய்ந்தநற் கோவையா மற்றுரைப்பின் - ஏய்ந்த
ஒருதலைக் காம முரைப்பவையை யைந்தாய்
வருவிருத்தங் கைக்கிளையா மன்.

16. மும்மணிமாலை, நான்மணிமாலை
மன்னிய வெண்பா கலித்துறை மன்னர்பா
முன்னியமுப் பான்மும் மணிமாலை - மன்விருத்தம்
நாட்டிய நாற்பது நான்மணி மாலையாம்
ஈட்டியவந் தாதியா யேய்ந்து.

17. இருபாவிருபஃது, இரட்டைமணிமாலை, இணைமணிமாலை
ஏய்ந்த விருபா விருபதுவெண் பாவகவல்
ஆய்ந்த விரட்ரட மணியிருபான் - ஏய்ந்தசீர்
வெண்பா கலித்துறையா மேவிய நான்கானூ
றொண்பா விணைமணியா மோர்.

18. ஒருபாவொருபஃது, பன்மணிமாலை
ஓர்ந்தகவல் வெண்பா கலித்துறையென் றொன்றினால்
ஆர்ந்தவொரு பாவெருப தம்மானை - கூர்ந்தொருபோகு
ஊச லொழித்தாற் கலம்பகப்பா வெண்மாலை
பேசிய பன்மணியாம் பின்பு.

19. தசாங்கம்
புல்லு மலையாறு நாடூர் புனைதார்மா
கொல்லுங் களிறு கொடிமுரசம் - வல்லகோல்
என்றிவை நஞ்செழுத்தோ டேலா வகையுரைப்ப
நின்ற தசாங்கமென நேர்.

20. சின்னப்பூ, தசாங்கப்பத்து
நேருந் தசாங்கத்தை நேரிசை வெண்பாவால்
ஈரைம் பதுதொண்ணூ றீண்டெழுபான் - ஓரைம்பான்
தேர்ந்துரைக்கிற் சின்னப்பூ வீரைந்தாற் செப்பினார்
நேர்ந்த தசாங்க நிலை.

21. விருத்த வகை
நிலையார் குடைசெங்கோ லூர்நாடு நீள்வேல்
கொலையார் களிறு குதிரை - சிலைவாள்
இவற்றின்மேன் மன்விருத்த மீரைந்தாய் வந்தால்
அவற்றின்பேர் நாட்ட லறிவு.

22. ஊர் வெண்பா, அலங்கார பஞ்சகம்
அறிந்திடி லூர்வெண்பா வையிரண்டாம் வெள்ளை
செறிந்த கலித்துறைசீர் மன்பா - அறைந்த
கலங்காத மன்விருத்தங் காண்டகைய வண்ணம்
அலங்கார பஞ்சகமென் றார்.

23. ஊசல், நாழிகை வெண்பா
ஆங்கவிருத் தத்தா லறைந்தகலித் தாழிசையால்
ஓங்கியசுற் றத்தளவா யூசலாம் - போங்கடிகை
தேவர்க்குங் காவலர்க்குந் தேர்ந்துரைக்க வெண்பாவை
மேவியநா லெட்டாக வேய்ந்து.

24. அட்டமங்கலம், நவமணிமாலை, தசப்பிராதுற்பவம்
வேய்ந்த விருத்தங்க ளெட்டட்ட மங்கலமாம்
வாய்ந்தன வொன்பான் மணிமாலை - ஆய்ந்தங்
கிசைத்திடுவர் மால்பிறப்பா லீரைந்து வாழ்த்துத்
தசப்பிரா துற்பவமாந் தந்து.

25. நயனப்பத்து, பயோதரப்பத்து
தந்துரைத்த மன்விருத்தஞ் சார்ந்த கலித்துறைதான்
அந்தமுறுங் கண்முலைமே லையிரண்டாய் - வந்தால்
நயன பயோதரப்பத் தாமென்று நன்னூற்
பயனுணர்ந்தார் முன்பு பகர்.

26. பெண்கள் பருவம்
பகருங்கா லைந்தேழ் பதினொன்று பன்மூன்
றகலாத பத்தொன்பா னையைந் - திகலாத
முப்பத்தொன் றீரிருபான் பேதைமுத லோர்க்குச்
செப்புவராண் டெல்லைத் திறம்.

27. உலா, குழமகன்
திறந்தெரிந்த பேதை முதலெழுவர் செய்கை
மறந்தயர வந்தான் மறுகென் - றறைந்தகலி
வெண்பா வுலாவாங் குழமகன்மேன் மேவிலவ்
வொண்பாக் குழமகனா முற்று.

28. வளமடல்
உற்ற அறம்பொருள்வீ டெள்ளி யுயர்த்தின்பம்
பொற்றொடி காதற் பொருட்டாகப் - பெற்றி
உரைத்தகலி வெண்பா மடலிறைவ னொண்பேர்
நிரைத்த வெதுகை நிறுத்து.

29. அங்கமாலை, பாதாதிகேசம், கேசாதிபாதம்
நிறுத்த வெளிவிருத்த நீடுறுப்பில் வந்தால்
குறித்தங்க மாலையாக் கொள்க - உறுப்பமைந்த 
பாதாதி கேசமுங் கேசாதி பாதமுமா
ஓதுங் கலிவெண்பா வொன்று.

30. ஆற்றுப்படை
ஒன்றா மகவலா லொண்புலவர் யாழ்ப்பாணர்
குன்றாத சீர்பொருநர் கூத்தரே - என்றிவரை
ஆங்கொருவ னாற்றுப் படுத்த பரிசறைந்தால்
பாங்காய ஆற்றுப் படை.

31. தானைமாலை, வஞ்சிமாலை, வாகைமாலை
படைத்திறஞ் சொல்லின் பகர்தானை வஞ்சி
எடுத்துமேற் சேறல் இயம்பின் - அடுத்தமைந்த
வெற்றியுரை வாகையாம் வேந்தன்பா வொன்றினால்
உற்றுரைத்து மாலைப்பே ரோது.

32. தாரகைமாலை, மங்கலவள்ளை
ஓதுசந்தத் தாலுரைத்தல் ஒண்தா ரகைமாலை
கோதிலாக் கற்பிற் குலமகளை - நீதிசேர்
மங்கல வள்ளை வகுப்பொடு வெண்பாவால்
இங்காமொன் பானென் றிசை.

33. யானைவஞ்சி
இசைந்த நிலங்குலம் ஒத்த வெழிலோ
டசைந்த பிராயத் தளவும் - இசைந்தமதம்
துன்னவஞ்சி வீடுயிர்கோன் மன்னன் தொடர்ந்தணைத்தல்
சொன்னவஞ்சி யானைத் தொழில்.

34. மெய்க்கீர்த்தி, கையறமோதாப்பா
தொழிலார்ந்த மெய்க்கீர்த்தி சொற்சீ ரடியால்
எழிலரசர் செய்தி யிசைப்பார் - மொழியுங்கால்
கையற மோதார் கலிவஞ்சி யென்றிவற்றால்
பொய்தீர்ந்த நூலோர் புரிந்து.

35. புகழ்ச்சிமாலை, நாமமாலை
புரிந்த மயக்கவடி வஞ்சியால் பொய்தீர்
திருந்திழையார் சீர்பேர் சிறக்கத் - தெரிந்துரைத்தான்
மன்னும் புகழ்ச்சிநன் மாலையா மைந்தர்க்காம்
பின்னாம மாலைப்பேர் பெற்று.

36. இரட்டைமணிமாலை, வருக்கமாலை
பெற்றசீர் மன்விருத்தம் வெண்பாப் பெயர்ந்திருபான்
மற்றை யிரட்டைமணி மாலையாம் - பொற்றொடியாய்
மன்னகவ லெட்டாய் வருக்கவெழுத் தான்வருமேல்
முன்வருக்க மாலை மொழி.

37. செருக்கள வஞ்சி, வரலாற்று வஞ்சி முதலியன
மொய்யின் திறம்வஞ்சிப் பாவின் முடித்துரைத்தல்
செய்யின் செருக்கள வஞ்சியாம் - தையால்
வழியுரைத்தல் வஞ்சி வரலாறாம் மற்று
மொழியுரைத்தல் தன்பெயரா மூண்டு.

38. பரணி
மூண்ட அமர்க்களத்து மூரிக் களிறட்ட
ஆணடகை யைப்பரணி யாய்ந்துரைக்க - ஈண்டிய 
நேரடியே யாதியா நீண்டகலித் தாழிசை
ஈரடிகொண் டாதியுட னீறு.

39. 
ஈறில் வணக்கங் கடைநிலம்பேய் என்பனவும்
வீறுசா லையைக்கு மெய்ப்பேய்கள் - கூறித்
திறப்படச் சொல்லினவுஞ் செப்பின் பிறவும்
புறப்பொருள்நூல் கொண்டு புகல்.

40. பெருங்காப்பியம்
புகரில் வணக்கம் பொருப்பறமே யாதி
பகர்தல் கடல்கோள் பருவம் - நிகரில்
தலைவனைக் கூறல் தபனனிந்து தோற்றம்
சிலைமணந்தோர் போரின் செயல்.

41. 
செயலார் முடிசூடல் சீர்ப்புதல்வர்ப் பேறோ
டயலார் பொழில்புனல்புக் காடல் - இயலுமூண்
மந்திரத்தூ தாடல் வருமிகல் விக்கிரமம்
சந்துசெல வும்பிறவுஞ் சார்ந்து.

42. 
சார்சுவையே பாவம் விளக்கி யினத்தொடுபாக்
கூருரையே பாடையே கொண்டிலம்பம் - நேர்சருக்கம்
நீப்பில் பரிச்சேதம் நேர்ந்துவரு மேற்பெருங்
காப்பியமா மென்று கருது.

43. காப்பியம், புராணம்
கருதுசில குன்றினுமக் காப்பியமா மென்பர்
பெரிதறமே யாதி பிழைத்து - வருவதுதான்
காப்பிய மாகுங் குலவரவு காரிகை
யாப்பிற் புராணமே யாம்.

44. அகலக்கவிகளில் சிலவற்றிற்குச் சிறப்பு
ஆய வகப்பொருண்மே லாசிரியப் பாவினுள்
மேயசீர் வஞ்சியடி மேவாது - தூய
அகப்பொருண்மே லன்றி யருங்கலிகள் வாரா
தொகப்பெறா வஞ்சி தொடர்ந்து.

45. அகலக்கவியின் பெயர்கள்
தொடர்ந்த பெயர்கள் தொழிலளவு காலம்
இடம்பொருள் பாவுறுப்போ டெல்லை - நுடங்கிடையாய்
பாடினான் பாடுவித்தான் பாடப் படுபொருளான்
நீடும் பிறவு நிறைந்து.

46. கமகன், வாதி
நிறைமதியால் கல்வியால் நீள்கலைகள் கல்லா
தறையு மவன்கமக னாகும் - முறைமேற்கோள்
புல்லு மெடுத்துக்காட் டேது புகலுமவன்
நல்வாதி யென்றே நவில்.

47. வாக்கி
நவிலு மறமுதல் நான்குமயங் காமல்
புவியதனிற் கேட்டோர் புகழக் - கவிப்பனுவல்
குன்றாத சொல்லால் தெளிவுபெறக் கூறுவோன்
நன்றாய வாக்கியென் றார்.

48. புன்கவிஞர்
ஆரொருவன் பாக்களை யாங்கொருவ னுக்களிப்போன்
சோரகவி சார்த்தொலியிற் சொல்லுமவன் - சீரிலாப்
பிள்ளைக் கவிசிறந்த பின்மொழிக்காம் புன்மொழிக்காம்
வெள்ளைக் கவியவனின் வேறு.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்தப் பாட்டியலும்

மூன்றாவது பொதுவியல்.

1. நாற்பாச் சாதி இடம் நிறம்
வேறுமறை யோராதி நாற்சாதி வெள்ளைமுதல்
கூறுநிலை முல்லை குறிஞ்சியே - மாறா 
மருதநிலம் நெய்தல்நிறம் வான்மையே செம்மை
கருதரிய பொன்மையே கார்.

2. நாற்பா நாள் இராசி
கார்த்திகை மாசிபனை குன்றாதி காட்டுகநாள்
மூத்த விராசிநான் மூன்றினையும் - நீர்த்தசீர்
மேதினிமே லாசிரியம் வஞ்சிகலி வெள்ளையென
ஓதியமே டாதியா லோட்டு.

3. நாற்பாத் தேவதையாதி
ஒட்டுமதி பொன்வெள்ளை யொண்கதிரோன் சேயகவல்
காட்டியமால் காரி கலிக்காகும் - ஈட்டும்
புகர்பாம்பு வஞ்சிக்காம் பூவிரையோ டாடை
பகர்நிறத்தாற் கொள்கவணி பாட்டு.

4. பாடும் விதம்
பாட்டுடையோ னூர்ப்பே ரியற்பேர் படவெதுகை
நாட்டிடினு மப்பேர் நவிலடியின் - காட்டுமுதற்
சேர்ந்த வனுவாகச் சீர்முன் னியற்றிடினும்
வாய்சிறப் பென்கை வழக்கு.

5. உறுப்புச் செய்யுள்
வழக்குள் மரபியலுள் நேர்ந்து வழுவா
திழுக்கி வடவெழுத்தை யின்பம் - வழுக்காது
முன்னையோர் பாட்டிற் பயின்ற மொழியன்றோ
சொன்ன வுறுப்பின் துணிபு.

6. 
துணிதற் கரிது பொருளென்றுஞ் சோர்வு
பணிவுற்ற சொன்மேற் பகுத்தும் - அணிபொருட்டால்
மற்றுமுண் டென்று முரைப்போர் வழுச்சொல்லின்
இற்றன்றோ பாவி னிழுக்கு.

7. அகலக்கவி புகல்வோர்
இழுக்கிலா நாற்குலத்தோ ரெப்பொருளுந் தேர்ந்தோர்
ஒழுக்கறந் தெய்வ முடையோர் - விழுக்கவிகள்
ஈரிரண்டு முத்தமிழும் வல்லோரே யெஞ்ஞான்றும்
சீரார் கவியுரைப்போர் சென்று.

8.
சென்றவிரு பான்தொடங்கிச் சேருமெழு பானளவும்
நின்றபரு வத்துறுப்பு நீங்காதோர் - ஒன்றில்
அகலாப் பிணியில்லோ ரன்றோபாக் கொண்டு
புகலப் பெறுவார் புகழ்ந்து.

9. நல்லவை
புகழுந் தருமநெறி நின்றோர்பொய் காமம்
இகழுஞ் சினஞ்செற்ற மில்லோர் - நிகழ்கலைகள்
எல்லா முணர்ந்தோ ரிருந்த விடமன்றோ 
நல்லா யவைக்கு நலம்.

10. நிறையவை
நலனடக்கஞ் செம்மை நடுவுநிலை ஞானம்
குலனென் றிவையுடையோர் கோதில் - புலனில்லோர்
சென்று மொழிந்தனவுங் கேட்போர் செறிந்தவிடம்
அன்றோ நிறைந்த அவை.

11. தீய அவை
அவையின் திறமறியா ராய்ந்தமர்ந்து சொல்லார்
நவையின்றித் தாமுரையார் நாணார் - சுவையுணரார்
ஆய கலைதெரியா ரஞ்சா ரவரன்றோ
தீய அவையோர் செருக்கு.

12. அந்தணரியல்பு
குன்றாநூ லங்கைமறை கோவணங்கோன் முத்தீயும்
நன்றாய வேள்வி நளினமும் - அன்றிக்
குடைசமிதை குண்டிகைபுற் கோத்திரமென் றின்ன 
உடையாரை யந்தணரென் றுன்னு.

13.
உன்னல ரன்கழலை யோங்கியசீ ரங்கியயன்
என்னவுவ மித்த லிவரென்றே - நன்மறைகள் 
ஓதலே யோதுவித்தல் வேட்டலே வேட்பித்தல்
ஈத லிரத்தலென் றேத்து.

14. மன்னரியல்பு
ஏத்திய பூவைநிலை யெல்லோன் கழல்வாழ்த்தல்
காத்தன்முடி சூட்டல் களம்வேட்டல் - தீத்தொழில்கள்
வெண்குடைசெங் கோல்கவரி வெற்றியரி யாசனமும்
மண்குலவு மன்னர் வளம்.

15. 
வளர்த்தல் குடிகமையஞ் சாதுரங்கம் வாய்மை
விளைத்தல் பொருணெறியா மெய்ந்நூல் - அளத்தலே
உம்ப ருவமை யுரைகோ ளிவையுடையார்
இம்ப ருலகுக் கிறை.

16. பூவைசியரியல்பு
இறையஞ்சா தேருழல் வித்தீதல் புரிந்து
மறைகொண் டழல்வளர்த்து வாய்மை - பொறையுடைமை
என்றிவையுங் காத்து நிரையோம்ப லென்பவே
குன்றா வணிகர் குணம்.

17. தனவைசியரியல்பு
குணங்கோடாக் காத்தல் கொழுநிதிக்கோன் தன்னை
வணங்க லவன்புகழே வாழ்த்தல் - அணங்கார்
இடத்தேகி வாணிகத்தா லீட்டலெரி வேட்டல்
படைத்தோர் வணிகரென் பார்.

18. சூத்திரரியல்பு
பார்திகழு மூவர் பணித்த பணியொழுகல்
ஏருழுத லீதல் பிழையாமை - பார்புகழக்
கோட்ட மிலாமை யொருமைக் குணம்பிறவும்
காட்டினார் சூத்திரர்தம் கண்.

19. சிறப்புப்பாயிர இலக்கணம்
கண்ணாய தெய்வ மிறைஞ்சிக் கருதுநூல்
பண்ண அதிகாரம் பாரித்தல் - எண்ணும்
மதியோர் சிறப்பென்பர் வானவரை வாழ்த்தா
அதிகார முஞ்சிறப்பென் றாக்கு.

20. 
ஆக்கியோன் பேர்வழி யேயெல்லை யாப்பந்நூற்
போக்கிடஞ்சொல் வோர்நுதலிற் றாயபயன் - தாக்கியவிவ்
எட்டினொடுங் காலங் களங்கள ரணமியம்பப்
பட்டாலு மப்பெயரே பன்னு.

21. 
பன்னிய நூற்பேர் பகர்ந்தோன்பேர் காரணமும்
துன்னும் பயனறவுஞ் சொல்லினும் - முன்னைச்
சிறப்பா மவற்றுட் சிலவேறி னாலும்
பெறப்படுமா முன்னைப் பெயர்.

22. பொதுப்பாயிரத்திலக்கணம்
பெயரார்நூ லீவோ னியல்பீயும் பெற்றி
அயராது கொள்வோ னளவும் - அயர்வின்றிக்
கோடன்மர பீரிரண்டுங் கூறல்பொதுப் பாயிரமாம்
பாடல்சால் நூலின் பயன்.

23. 
பயனான்காய் மூவகைத்தாய்ப் பன்மூன் றுரைத்தாய்
இயலுடைத்தாய் மூவாம லேழு - செயன்மதத்தாய்ப்
பத்தாய்க் குணங்குற்றம் பத்தொழிந் தெண்ணான்காம்
உத்தியது நூலென் றுரை.

24. 
உரைத்தநதி சீயமோ டொண்பருந்து தேரை
நிரைத்ததொழிற் சூத்திரத்தி னின்று - விரைக்குழலாய்
செம்பொருள் ஞாபகமாஞ் செய்தி நியதியாம்
கம்பமிலா நூலின் கருத்து.

25. 
கருத்தெச்ச நுட்பம் பொழிப்பகலங் காட்டி
உரைத்த வுதாரணமு முண்டேல் - விருத்தியாம்
பூண்ட கருத்தும் பொழிப்பு முதாரணமும்
காண்டிகையென் றோதல் கடன்.

26. அகலக்கவி கேட்பிக்கும் முகூர்த்தம்
கடனா மகரவா காரங் கதிரோன்
உடனா யெழுங்கடிகை யோராறு - இடனாகி
ஏனை யுயிர்ககூறு மிவ்வகையால் வந்துதித்தால்
ஆனமுதன் மூன்று மழகு.

27. 
அழகாக முன்மொழிக்க ணாராய்ந் தனவும்
அழகாகச் சொல்லினவு மன்றி - அழகாகச்
செய்யுட் குரைத்தனவு மெல்லாஞ் செயிர்தீரச்
செய்யினன் றன்றாயிற் றீது.

28. 
தீதிலா நூலுரைத்த தீதிலாச் செய்யுளைத்
தீதிலோர் நல்லவையிற் சேர்த்ததற்பின் - ஆதிசொல்
பாவிற் கியைய வுரைக்கிற் பலபொருளும்
தாவில் பொருளோடுஞ் சார்ந்து.

29. 
சாந்தின் மெழுகித் தரளத் திரள்பரப்பிக்
காந்தி மணிகனகங் கண்ணுறீஇ - வாய்ந்தலர்ந்த
தாமமு நாற்றி விளக்கிட்டுச் சாறவிசில்
நாமகளை யேற்றுவித்த னன்கு.

30. நன்குணர்ந்தோ ராய்ந்த தமிழ்நூலின் நன்னெறியை
முன்புணர்ந்து பாட்டியனூன் முற்றுணர்ந்து - பின்புணரும்
நல்லார்முன் னல்லாய் நலமார் கவியுரைக்க
வல்லாத லன்றோ மதி.

அவையடக்கம்
என்களங்கம் யாவையும் நீக்கி யினிதருளி
நன்களந்தை நூலோடு நாட்டுவரால் - தென்களந்தை
மன்பெயரான் வண்புகழான் வச்சணந்தி மாமுனிவன் 
தன்பெயரால் நாட்டுந் தமிழ்.

வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்தப் பாட்டியலும்

மூன்றாவது பொதுவியல்.

1. நாற்பாச் சாதி இடம் நிறம்
வேறுமறை யோராதி நாற்சாதி வெள்ளைமுதல்
கூறுநிலை முல்லை குறிஞ்சியே - மாறா 
மருதநிலம் நெய்தல்நிறம் வான்மையே செம்மை
கருதரிய பொன்மையே கார்.

2. நாற்பா நாள் இராசி
கார்த்திகை மாசிபனை குன்றாதி காட்டுகநாள்
மூத்த விராசிநான் மூன்றினையும் - நீர்த்தசீர்
மேதினிமே லாசிரியம் வஞ்சிகலி வெள்ளையென
ஓதியமே டாதியா லோட்டு.

3. நாற்பாத் தேவதையாதி
ஒட்டுமதி பொன்வெள்ளை யொண்கதிரோன் சேயகவல்
காட்டியமால் காரி கலிக்காகும் - ஈட்டும்
புகர்பாம்பு வஞ்சிக்காம் பூவிரையோ டாடை
பகர்நிறத்தாற் கொள்கவணி பாட்டு.

4. பாடும் விதம்
பாட்டுடையோ னூர்ப்பே ரியற்பேர் படவெதுகை
நாட்டிடினு மப்பேர் நவிலடியின் - காட்டுமுதற்
சேர்ந்த வனுவாகச் சீர்முன் னியற்றிடினும்
வாய்சிறப் பென்கை வழக்கு.

5. உறுப்புச் செய்யுள்
வழக்குள் மரபியலுள் நேர்ந்து வழுவா
திழுக்கி வடவெழுத்தை யின்பம் - வழுக்காது
முன்னையோர் பாட்டிற் பயின்ற மொழியன்றோ
சொன்ன வுறுப்பின் துணிபு.

6. 
துணிதற் கரிது பொருளென்றுஞ் சோர்வு
பணிவுற்ற சொன்மேற் பகுத்தும் - அணிபொருட்டால்
மற்றுமுண் டென்று முரைப்போர் வழுச்சொல்லின்
இற்றன்றோ பாவி னிழுக்கு.

7. அகலக்கவி புகல்வோர்
இழுக்கிலா நாற்குலத்தோ ரெப்பொருளுந் தேர்ந்தோர்
ஒழுக்கறந் தெய்வ முடையோர் - விழுக்கவிகள்
ஈரிரண்டு முத்தமிழும் வல்லோரே யெஞ்ஞான்றும்
சீரார் கவியுரைப்போர் சென்று.

8.
சென்றவிரு பான்தொடங்கிச் சேருமெழு பானளவும்
நின்றபரு வத்துறுப்பு நீங்காதோர் - ஒன்றில்
அகலாப் பிணியில்லோ ரன்றோபாக் கொண்டு
புகலப் பெறுவார் புகழ்ந்து.

9. நல்லவை
புகழுந் தருமநெறி நின்றோர்பொய் காமம்
இகழுஞ் சினஞ்செற்ற மில்லோர் - நிகழ்கலைகள்
எல்லா முணர்ந்தோ ரிருந்த விடமன்றோ 
நல்லா யவைக்கு நலம்.

10. நிறையவை
நலனடக்கஞ் செம்மை நடுவுநிலை ஞானம்
குலனென் றிவையுடையோர் கோதில் - புலனில்லோர்
சென்று மொழிந்தனவுங் கேட்போர் செறிந்தவிடம்
அன்றோ நிறைந்த அவை.

11. தீய அவை
அவையின் திறமறியா ராய்ந்தமர்ந்து சொல்லார்
நவையின்றித் தாமுரையார் நாணார் - சுவையுணரார்
ஆய கலைதெரியா ரஞ்சா ரவரன்றோ
தீய அவையோர் செருக்கு.

12. அந்தணரியல்பு
குன்றாநூ லங்கைமறை கோவணங்கோன் முத்தீயும்
நன்றாய வேள்வி நளினமும் - அன்றிக்
குடைசமிதை குண்டிகைபுற் கோத்திரமென் றின்ன 
உடையாரை யந்தணரென் றுன்னு.

13.
உன்னல ரன்கழலை யோங்கியசீ ரங்கியயன்
என்னவுவ மித்த லிவரென்றே - நன்மறைகள் 
ஓதலே யோதுவித்தல் வேட்டலே வேட்பித்தல்
ஈத லிரத்தலென் றேத்து.

14. மன்னரியல்பு
ஏத்திய பூவைநிலை யெல்லோன் கழல்வாழ்த்தல்
காத்தன்முடி சூட்டல் களம்வேட்டல் - தீத்தொழில்கள்
வெண்குடைசெங் கோல்கவரி வெற்றியரி யாசனமும்
மண்குலவு மன்னர் வளம்.

15. 
வளர்த்தல் குடிகமையஞ் சாதுரங்கம் வாய்மை
விளைத்தல் பொருணெறியா மெய்ந்நூல் - அளத்தலே
உம்ப ருவமை யுரைகோ ளிவையுடையார்
இம்ப ருலகுக் கிறை.

16. பூவைசியரியல்பு
இறையஞ்சா தேருழல் வித்தீதல் புரிந்து
மறைகொண் டழல்வளர்த்து வாய்மை - பொறையுடைமை
என்றிவையுங் காத்து நிரையோம்ப லென்பவே
குன்றா வணிகர் குணம்.

17. தனவைசியரியல்பு
குணங்கோடாக் காத்தல் கொழுநிதிக்கோன் தன்னை
வணங்க லவன்புகழே வாழ்த்தல் - அணங்கார்
இடத்தேகி வாணிகத்தா லீட்டலெரி வேட்டல்
படைத்தோர் வணிகரென் பார்.

18. சூத்திரரியல்பு
பார்திகழு மூவர் பணித்த பணியொழுகல்
ஏருழுத லீதல் பிழையாமை - பார்புகழக்
கோட்ட மிலாமை யொருமைக் குணம்பிறவும்
காட்டினார் சூத்திரர்தம் கண்.

19. சிறப்புப்பாயிர இலக்கணம்
கண்ணாய தெய்வ மிறைஞ்சிக் கருதுநூல்
பண்ண அதிகாரம் பாரித்தல் - எண்ணும்
மதியோர் சிறப்பென்பர் வானவரை வாழ்த்தா
அதிகார முஞ்சிறப்பென் றாக்கு.

20. 
ஆக்கியோன் பேர்வழி யேயெல்லை யாப்பந்நூற்
போக்கிடஞ்சொல் வோர்நுதலிற் றாயபயன் - தாக்கியவிவ்
எட்டினொடுங் காலங் களங்கள ரணமியம்பப்
பட்டாலு மப்பெயரே பன்னு.

21. 
பன்னிய நூற்பேர் பகர்ந்தோன்பேர் காரணமும்
துன்னும் பயனறவுஞ் சொல்லினும் - முன்னைச்
சிறப்பா மவற்றுட் சிலவேறி னாலும்
பெறப்படுமா முன்னைப் பெயர்.

22. பொதுப்பாயிரத்திலக்கணம்
பெயரார்நூ லீவோ னியல்பீயும் பெற்றி
அயராது கொள்வோ னளவும் - அயர்வின்றிக்
கோடன்மர பீரிரண்டுங் கூறல்பொதுப் பாயிரமாம்
பாடல்சால் நூலின் பயன்.

23. 
பயனான்காய் மூவகைத்தாய்ப் பன்மூன் றுரைத்தாய்
இயலுடைத்தாய் மூவாம லேழு - செயன்மதத்தாய்ப்
பத்தாய்க் குணங்குற்றம் பத்தொழிந் தெண்ணான்காம்
உத்தியது நூலென் றுரை.

24. 
உரைத்தநதி சீயமோ டொண்பருந்து தேரை
நிரைத்ததொழிற் சூத்திரத்தி னின்று - விரைக்குழலாய்
செம்பொருள் ஞாபகமாஞ் செய்தி நியதியாம்
கம்பமிலா நூலின் கருத்து.

25. 
கருத்தெச்ச நுட்பம் பொழிப்பகலங் காட்டி
உரைத்த வுதாரணமு முண்டேல் - விருத்தியாம்
பூண்ட கருத்தும் பொழிப்பு முதாரணமும்
காண்டிகையென் றோதல் கடன்.

26. அகலக்கவி கேட்பிக்கும் முகூர்த்தம்
கடனா மகரவா காரங் கதிரோன்
உடனா யெழுங்கடிகை யோராறு - இடனாகி
ஏனை யுயிர்ககூறு மிவ்வகையால் வந்துதித்தால்
ஆனமுதன் மூன்று மழகு.

27. 
அழகாக முன்மொழிக்க ணாராய்ந் தனவும்
அழகாகச் சொல்லினவு மன்றி - அழகாகச்
செய்யுட் குரைத்தனவு மெல்லாஞ் செயிர்தீரச்
செய்யினன் றன்றாயிற் றீது.

28. 
தீதிலா நூலுரைத்த தீதிலாச் செய்யுளைத்
தீதிலோர் நல்லவையிற் சேர்த்ததற்பின் - ஆதிசொல்
பாவிற் கியைய வுரைக்கிற் பலபொருளும்
தாவில் பொருளோடுஞ் சார்ந்து.

29. 
சாந்தின் மெழுகித் தரளத் திரள்பரப்பிக்
காந்தி மணிகனகங் கண்ணுறீஇ - வாய்ந்தலர்ந்த
தாமமு நாற்றி விளக்கிட்டுச் சாறவிசில்
நாமகளை யேற்றுவித்த னன்கு.

30. நன்குணர்ந்தோ ராய்ந்த தமிழ்நூலின் நன்னெறியை
முன்புணர்ந்து பாட்டியனூன் முற்றுணர்ந்து - பின்புணரும்
நல்லார்முன் னல்லாய் நலமார் கவியுரைக்க
வல்லாத லன்றோ மதி.

அவையடக்கம்
என்களங்கம் யாவையும் நீக்கி யினிதருளி
நன்களந்தை நூலோடு நாட்டுவரால் - தென்களந்தை
மன்பெயரான் வண்புகழான் வச்சணந்தி மாமுனிவன் 
தன்பெயரால் நாட்டுந் தமிழ்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

வெண்பாப் பாட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
Jump to navigationJump to search

வெண்பாப் பாட்டியல் என்பது ஒரு பாட்டியல் நூல். இதற்கு வச்சணந்திமாலை என்னும் இன்னொரு பெயரும் வழங்கிவருகின்றது. இதை இயற்றியவர் குணவீர பண்டிதர் எனப்படும் புலவர் ஆவார். இவரே நேமிநாதம் என்னும் இலக்கண நூலையும் இயற்றியவர். குணவீர பண்டிதரின் ஆசிரியரான வச்சணந்தி (வஜ்ர நந்தி) என்பாரின் பெயரைத் தழுவியே இந்நூலுக்கு வச்சணந்திமாலை என்னும் பெயர் ஏற்பட்டது எனத் தெரிகிறது. இன்று முழுமையாகக் கிடைக்காத இந்திரகாளியம் என்னும் இலக்கண நூலை முதல் நூலாக வைத்தே குணவீர பண்டிதர் இதனை இயற்றியுள்ளார்[1].

காலம்[தொகு]

இந்த நூல் தோன்றிய காலம் 13 ஆம் நூற்றாண்டு. [2] [3]

அமைப்பு[தொகு]

மொத்தம் 100 வெண்பாக்களைக் கொண்டு அந்தாதி முறையில் அமைந்த இந்த நூல் மூன்று இயல்களைக் கொண்டது. அவை, முதன் மொழியியல், செய்யுளியல், பொதுவியல் என்பன. முதன் மொழியியலில் 22 பாடல்களும், செய்யுளியலில் 40 பாடல்களும், பொதுவியலில் 38 பாடல்களும் உள்ளன.

முதன்மொழியியல்

சொல், எழுத்து, தானம், பால், உணா, வருணம், நட்சத்திரம், கதி, கணம், முதலான பொருத்தங்கள் 22 வெண்பாக்களில் கூறப்பட்டுள்ளன.

செய்யுளியல்

ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி, பிள்ளைக்கவி, பல்சந்தமாலை, அந்தாதி, கலம்பகம், ஒலியந்தாதி, மும்மணிக்கோவை, ஊர்நேரிசை, ஊர்இன்னிசை, கோவை, கைக்கிளை, மும்மணிமாலை, நான்மணிமாலை, இருபா இருபது, இரட்டைமணி மாலை (இரண்டு வகை), இணைமணி மாலை, தசாங்கம், சின்னப்பூ, தசாங்கப்பத்து, விருத்தவகை நூல்கள், ஊர்வெண்பா, அலங்கார பஞ்சகம், ஊசல், நாழிகை வெண்பா, அட்டமங்கலம், நவமணிமாலை, தசப்பிராதுற்பவம், நயனப்பத்து, பயோதரப்பத்து, பெண்கள் பருவம், உலா, குழமகன், வளமடல், அங்கமாலை, பாதாதிகேசம், கேசாதிபாதம், ஆற்றுப்படை, தானைமாலை, வஞ்சிமாலை, வாகைமாலை, தாரகமாலை, மங்கலவள்ளை, யானைவஞ்சி, மெய்க்கீர்த்தி, கையறமோதரப்பா, புகழ்ச்சிமாலை, நாம மாலை, வருக்கமாலை, செருக்கள வஞ்சி, வரலாற்று வஞ்சி, பரணி முதலான சிற்றிலக்கியங்களுக்கும், பெருங்காப்பியத்துக்கும் இப்பகுதியில் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. மேலும் அகலக்கவி, கமகன், வாதி, வாக்கி, புன்கவிஞன் ஆகிய கவிஞர்களுக்கும் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. இதில் 48 வெண்பாக்கள் உள்ளன.

பொதுவியல்

இதில் நால்வகைப் பாக்களுக்கும் சாதி, நிறம், இடம், நாள், இராசி, தேவதை போன்றவை கூறப்பட்டுள்ளன. மேலும் அந்தணர், மன்னர், பூவைசியர், தனவைசியர், சூத்திரர் முதலானோர் இயல்புகளும் கூறப்பட்டுள்ளன. அதிலு 30 வெண்பாக்கள் உள்ளன.

குறிப்புகள்[தொகு]

  1.  இளங்குமரன், இரா., 2009. பக். 274.
  2.  சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு, முதல் பதிப்பு 1936, மூன்றாம் பதிப்பு 1951, கொ. இராமலிங்கத் தம்பிரான் விளக்க உரையுடன்.
  3.  இதன் உரையில் வரும் கந்தபுராணம்கூர்ம புராணம் போன்ற மேற்கோள் நூல்களைக் கொண்டு இது 16 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது எனக் கொள்பவர் கருத்து பொருந்தாது.

உசாத்துணைகள்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
  • இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

3.1.5 வச்சணந்தி மாலை

 

தொல்காப்பியர் காலத்திற்குப் பின்பு  எழுந்த தொடர்நிலைச்செய்யுட்களிலும் பக்தி நூல்களிலும் சிற்றிலக்கிய மரபுகள் தோன்றின.இம்மரபுகளுக்கு வகுக்கப்பட்ட இலக்கணம் ‘பாட்டியல் நூல்கள்’ என்ற பெயரில் வழங்கலாயிற்று. நூல்வகைகள், அவற்றின் அமைப்புமுதலியவற்றைப் பற்றியும், ஒரு நூலின் முதற்பாட்டின் முதற்சீர் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் பாட்டியல் நூல் கூறும். ஒரு நூலில் பாடப்படும் (பாட்டுடைத்) தலைவனின் வருணத்துக்கு ஏற்றபடி அந்தச் சீர், பாடல்களின் எண்ணிக்கை முதலியவை அமைய வேண்டும் என்று அது குறிப்பிடும். நால்வகை வருணத்தை அடிப்படையாக வைத்து நூலை இயற்ற வேண்டும் என்பதும் அதில் கூறப்படுகிறது.

இவ்வகைப் பாட்டியல் நூல்களில் ஒன்றான வச்சணந்தி மாலையின் ஆசிரியர் குணவீர பண்டிதர். முதன்மொழியியல், செய்யுளியல், பொதுவியல் என்ற மூன்று பிரிவுகளை உடையது இந்நூல். வெண்பாக்களால் ஆனதால் இதை வெண்பாப் பாட்டியல் என்ற பெயராலும் அழைத்தனர். இந்நூல் முழுவதும் அந்தாதி யாப்பில் இயற்றப்பட்டுள்ளது. அந்தாதித் தொடையில் இயற்றப்பட்ட முதல் இலக்கணநூல் இது எனலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 http://premalathavj.blogspot.com/2013/09/blog-post.html



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard