Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பைபிள் கட்டுக் கதை என வரலாற்று ஆசிரியர் சொல்வது- ஜெருசலேம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
பைபிள் கட்டுக் கதை என வரலாற்று ஆசிரியர் சொல்வது- ஜெருசலேம்
Permalink  
 


பைபிள் கட்டுக் கதை என வரலாற்று ஆசிரியர் சொல்வது- 3 ஜெருசலேம்

 
பைபிள் கதைகளின் முக்கிய ஆணிவேர், எபிரேயர்கள் இஸ்ரேல் எனும் கானான் பிரதேசத்திற்கு வந்தேறி அன்னியர், ஆனால்  தொன்மக் கதைப்படி, இஸ்ரேலின் உள்ளூர் தேவன் யாவே அழைத்தார் என கதை. பிறகு பஞ்சம் வர ஆபிரகாமின் பேரன் யாக்கோபு காலத்தில் எகிப்து சென்றிட, 2 தலைமுறை பின்னர் 400 வருடம் பின்பு கானானில் 10 நாட்டு இன மக்கள் செழிப்பாய் வாழ்ந்தவர்களை இனஅழிப்பு -படுகொலை செய்து ஆக்கிரமித்தனர் எனக் கதை
No%2BExodu.jpg
 
சிலகாலம் பின்பு அரசாட்சி வர சவுல், தாவீது, சாலமோன் என 3 அரசர் கதைகள் பைபிளில் உள்ளன.

 நாளாகமம் 21:தாவீதிடம் ஜனங்களின் எண்ணிக்கையைச் சொன்னான். இஸ்ரவேலில் 1,100,000 பேர் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். யூதாவில் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள்4,70,000 பேர். 6. யோவாப்- லேவி மற்றும் பென்யமீன் கோத்திரங்களைக் கணக்கிடவில்லை.

தாவீது ஒரு பெரும் நாட்டு அரசர் என்பதாய் புனையும் கதைகள்
நாளாகமம் 22:14 தாவீது“சாலொமோன், நான் கடினமான வேலை செய்து கர்த்தருக்கு ஆலயம் கட்ட திட்டமிட்டேன். நான் 3,750 டன் தங்கம் கொடுத்திருக்கிறேன். 37,500 டன் வெள்ளி கொடுத்திருக்கிறேன். நிறுத்துபார்க்க முடியாத அளவிற்கு வெண்கலமும் இரும்பும் கொடுத்திருக்கிறேன். மரமும் கற்களும் கொடுத்திருக்கிறேன். சாலொமோன், உன்னால் மேலும் சேர்க்க முடியும். 
 
பைபிள் தொன்மக் கதையில் ஜெருசலேம் மிகவும் முக்கியம் வாய்ந்தது, பொமு 10ம் நூற்றாண்டில் சாலமோன் எனும் கதை அரசன் யூத இஸ்ரேல் தேவனுக்கும் மற்ற தேவன்களுக்கும் ஆலயங்கள் கட்டியதாய் கதை.
2 நாளாகமம்1:14சாலொமோன் தனது படைக்காகக் குதிரைகளையும் இரதங்களையும் சேகரிக்க ஆரம்பித்தான். சாலொமோனிடம் 1,400இரதங்களும் 12,000 குதிரை வீரர்களும் இருந்தார்கள். அவற்றை அவன் இரதத்துக்குரிய நகரங்களில் இருக்கச்செய்தான். அவர்களில் சிலரை அரண்மனையிருந்த எருசலேமிலும் இருக்கச் செய்தான்.15 எருசலேமில் சாலொமோன் ஏராளமாகத் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்தான். அங்கே பொன்னும் வெள்ளியும் கற்களைப் போன்று ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தன. சாலொமோன் கேதுருமரங்களையும் ஏராளமாகச் சேகரித்தான். அவை மேற்கு மலை பள்ளத்தாக்கில் உள்ள காட்டத்தி மரங்களைப் போன்று ஏராளமாக இருந்தன. 16 சாலொமோன் எகிப்திலிருந்தும் கியூவிலிருந்தும் குதிரைகளை வாங்கி வந்தான். அரசனின் வியாபாரிகள் கியூவிலிருந்து குதிரைகளை வாங்கி வந்தனர்.17 சாலொமோனின் வியாபாரிகள்600 சேக்கல் வெள்ளிக்கு ஒரு இரதத்தையும் 150 சேக்கல் வெள்ளிக்கு ஒரு குதிரையையும் வாங்கி வந்தனர். பிறகு இதே விதத்தில் அந்த வியாபாரிகள் குதிரைகளையும் இரதங்களையும் ஏத்தியரின் அரசர்களுக்கும் ஆராம் அரசர்களுக்கும் கொண்டுபோய் விற்றார்கள்.
 
 
No%2BJerusalem.jpgNo%2BJerusalem1.jpgDavid%2BPalace.jpg David%2BPalace1.jpg

 
 

 
 
ஜெருசலேம் என்பது கிராமமா? சிறு ஊரா?


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: பைபிள் கட்டுக் கதை என வரலாற்று ஆசிரியர் சொல்வது- ஜெருசலேம்
Permalink  
 


யாத்திராகமம்- விடுதலைப் பயணம் கட்டுக்கதையே

 

 

images?q=tbn:ANd9GcQrkWG1vqY7lDNPNUW_kUbrlOR-3DQQaAN0cWEX28Z4Y92biOAtxg  images?q=tbn:ANd9GcSdd8XFP7FLL_0LwNeS1U5PuuIMfdUAQ9PWFQB5C2_dgv3O4anv images?q=tbn:ANd9GcSD6i6yZutlw4RPZxFZZq4NLMb0LX-GOKNh8lt6L-CQrn8RC2mo
பைபிளின் அடிப்படை ஆணிவேர் கதை- எபிரேயர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்; இன்றைய இஸ்ரேல் – கானான் தேசம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு. பாபிலோனின் அன்னியரான ஆபிரஹாம் கர்த்தரால் தேர்ந்தெடுத்து அவர் வாரிசுகளுக்கு மட்டும் அரசியல் ஆட்சியுரிமை. பேரன் காலத்தில் பஞ்சம் வர தன் குடும்பத்தோடே 70 பேராக செல்கின்றனர். அங்கே சில காலம் வாழ்ந்தபின் எகிப்தியர் வேகமாக வளர ஆண்குழந்தைகளை கொலை சுய்யுமாறு எகிப்து மன்னர் சொல்ல தாதிகள் செய்யவில்லை.  எபிரேயர்களால் ஆண் குழந்தைகளை வளர்க்க முடியாத சூழ்நிலையில் மோசேயின் தாய் குழந்தையை விடுடு, எகிப்து அரச குடும்பத்தில் வளரும்படி செய்கிறார். கர்த்தர் சொல்ல மோசே தலைமயில் 30 லட்சம் எபிரேயர்கள் எகிப்திலிருந்து வெளியேரி வந்ததாகக் கதை.
வழியில் இர்ந்த செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிட ஒரே இரவில் 30 லட்சம் எபிரேயர் அப்பக்கம் செல்ல துரத்தியவர்களை கடல் விழுங்கியதாம். பின்னர் சாக்கடலும் வழிவிட்டதாம். பின் கானான் நாட்டு மண்ணின் மைந்தர்களை கொலை செய்து அடிமைப்படுத்தி எபிரேயர்கள் தங்கள் பகுதியை கைப்பற்றியதாகக் கதை.
அப்போஸ்தலர் நடபடிகள்7:5 இங்குக் கடவுள் அவருக்கு ஓர் அடி நிலம்கூட உரிமையாகக் கொடுக்கவில்லை. அவருக்குப் பிள்ளையே இல்லாதிருந்தும் இந்த நாட்டை அவருக்கும் அவருக்குப் பின் வரும் அவர் வழி மரபினருக்கும் உடைமையாகக் கொடுக்கப்போகிறேன் என்று கடவுள் வாக்குறுதி கொடுத்தார்.6 மேலும், அவர்தம் வழிமரபினர் வேறொரு நாடடில் அன்னியராய்க் குடியிருப்பர்.நானூறு ஆண்டுகள் அவர்கள் அங்கே அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்று கடவுள் கூறியிருந்தார்14 பின்பு யோசேப்பு தம் தந்தை யாக்கோபையும் தம் உறவினர் அனைவரையும் அங்கு வருமாறு சொல்லி அனுப்பினார். அவர்கள் எழுபத்தைந்து பேர் இருந்தனர்.15 யாக்கோபு எகிப்து நாட்டுக்குச் சென்றார். அவரும் நம் மூதாதையரும் அங்கேயே காலமாயினர்.
ஆதியாகமம்46:2726 யாக்கோபின் புதல்வர்களுடைய மனைவியரைத் தவிர அவரது வழிமரபாக எகிப்தில் குடிபுகுந்தோர் மொத்தம் அறுபத்தாறுபேர்.27எகிப்து நாட்டில் யோசேப்பிற்குப் பிறந்த புதல்வர்களோ இருவர். ஆகவே எகிப்தில் குடிபுகுந்த யாக்கோபின் குடும்பத்தார் எல்லோரும் எழுபதுபேர் ஆவர்.
போனது 70 பேர். திரும்பிவந்தது –
எண்ணாகமம் 1:45 ஆக மொத்தம் இஸ்ரயேலில் மூதாதையர் வீடுகள் வாரியாக இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்களாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை:46 மொத்தம் எண்ணப்பட்டோர் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது பேர். 6,03550
எண்ணாகமம்26:51ஆக, இஸ்ரயேலின் ஆண் மக்கள் தொகை ஆறு லட்சத்து ஓராயிரத்து எழுநூற்று முப்பது-6,01,730
யாத்திராகமம்12:37இஸ்ரயேல் மக்கள் இராம்சேசிலிருந்து சுக்கோத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர். இவர்களில் குழந்தைகள் தவிர நடந்து செல்லக்கூடிய ஆடவர் மட்டும் ஏறத்தாழ ஆறு லட்சம் பேர் ஆவர்.-6,00,000.
இது லேவியர் ஜாதி இல்லாமல், பின் மனைவிகள், குழந்தைகள், கிழவர்-கிழவிகள்.
70 பேர் இரண்டே தலைமுறையில் 30 லட்சம் ஆனர்.
யாத்திராகமம் 1:.8இவ்வாறிருக்க, யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.9 அவன் தன் குடிமக்களை நோக்கி, ″ ″ இதோ, இஸ்ரயேல் மக்களினம் நம்மை விடப் பெருந்தொகையதாயும் ஆள்பலம் வாய்ந்ததாயும் உள்ளது.
15எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது:16 ″ ″ எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள்: ஆண்மகவு என்றால் அதைக் கொன்றுவிடுங்கள்: பெண்மகவு என்றால் வாழட்டும்″ ″ .17 ஆனால், அந்த மருத்துவப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை. மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள்.
21இம்மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், அவர் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார்
யாத்திராகமம்2:லேவி குலப்பெண் ஓர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள்: அது அழகாயிருந்தது என்று கண்டாள்: மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள்.3 இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், அதனுக்காகக் கோரைப்புல்லால் பேழை ஒன்று செய்து அதன்மீது நிலக்கீல், கீல் இவற்றைப் பூசினாள்: குழந்தையை அதனுள் வைத்து நைல்நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டுவைத்தாள்.4 அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்துகொள்ளக் குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள்.5 அப்போது பார்வோனின் மகள் நைல்நதியில் நீராட இறங்கிச் சென்றாள். அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக்கொண்டிருந்தனர். அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள்: அதைத் திறந்தபோது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள்: அது அழுதுகொண்டிருந்தது.6 அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள்.
இந்த குழந்தை மோசேயின் 80வது யயதில் யாத்திரை எனக் கதை.
அப்போஸ்தலர் நடபடிகள்7:5,6,14 மேலே சொன்னவை. இங்கே 70 பேர் 400 வருடம் .
பவுலின் கலாத்தியர் கடிதம் 3:17 ல் 430 வருஷம்
மோசே இறக்க யோசுவா தலைமியில் வந்தவர்கள் 12 கோத்திரங்களும் இஸ்ரேலைப் பிரித்துக் கொண்டதாகக் கதை. அதில்
யோசுவா 17:1 யோசேப்பின் முதல் மகனான மனாசேயின் குலத்திற்குக் கிடைத்த நிலப்பகுதியின் விவரம்: மனாசேயின் முதல் மகனும் கிலயாதின் தந்தையுமானமாக்கிர் போர்வீரனாக இருந்ததால் அவனுக்குக் கிலயாதும் பாசானும் அளிக்கப்பட்டன.
இந்த மாக்கீர் கதையைப் பார்ப்போம்.
ஆதியாகமம் 50:22 யோசேப்பும் அவர் தந்தையின் வீட்டாரும் எகிப்தில் குடியிருந்தனர். யோசேப்பு நூற்றுப்பத்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.23 எப்ராயிமின் மூன்றாம் தலைமுறையைப் பார்க்கும் வரையிலும் மனாசேயின் மகன் மாக்கிரின் குழந்தைகள் தம் மடியில் விளையாடும் வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார்.
 1.ஜோசப் தலைமுறை- மகன் - 2.மானசே-பேரன் - 3.மாக்கிரின் போது திரும்பி வந்தாயிற்று
ஜோசப் உயிரோடு இருக்கும்போதே "மாக்கீர் குழந்தைகள் தம் மடியில் விளையாடும் வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார்."
ஜோசப் உயிரோடு இருந்தபோது மாக்கீர் குழந்தை பெற்றாயிற்று; கதைப்படி 40 வருடம்
 பயணம்- பின் மாக்கீர் இஸ்ரேல்
சென்றதைப் பார்த்தோம். 
எகிப்தினர் ஆண்குழந்தைகளை கொலை செய்த்தாக வேறு கதை. 120 வயதில் மோசே இஸ்ரேல் வருமுன் இறந்ததாக் கதை, அப்படி என்றால் அவர் மாகிரினும் வயதில் பெரியவர், அதாவது குழந்தைக் கொலை கதைகள் எல்லம் பொய்.
 

உண்மை என்ன?

இஸ்ரேல் தலை நகர்- டெல் அவிவ் பல்கலைகழக அகழ்வாராய்ச்சித் துறைத் தலைவர்.
பைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்? -நேர்மையான அகழ்வாராய்ச்சிகள் ஆபிரஹாம் முதல் சாலமன்
வரை அனைத்துமே தவறு. ஜெருசலேமில் சாலமன் காலத்திற்குப் பிறகு தான் மக்கள் குடியேற்றமே நடைபெற்றன. இவற்றை
சொல்லும் நூல் -
The Bible Unearthed :Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts எழுதியவர்Finkelstein, Israel, and Silberman, Neil Asher, Simon & Schuster 2002,
ISBN 0-684-86912-8
images?q=tbn:ANd9GcQKTd8J-ltk9SQS8WHiqk1z2vDmwD9x_x40BKHf6NbALej9zzWI
http://www.mediafire.com/view/?y177tc2oa3tegam

இந்நூல் சொல்வது-எகிப்க்து சென்றது 40 வருடம் 30 லட்சம் பேர் பயணம் எல்லாமே கட்டுக் கதை.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 No%2BExodu.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பைபிளை வரலாற்று ஆசிரியர் ஏன் நிராகரிக்கின்றனர்.

 
கிறிஸ்துவத் தொன்மக் கதை நூலான பைபிள் கதைகள்படி கதை சம்பவங்கள் இஸ்ரேல் நாட்டில் நிகழ்ந்தவை. இஸ்ரேலில் கடந்த 150 வருடமாய் நிகழ்ந்த தொல்லியல் ஆய்வுகள் முழுமையாய் ஆய்வுக் கட்டுரையாய் நூல்களாய் வெளி வந்தது 1960ல். பைபிள் கதைகள் அத்தனையுமே வெற்று கட்டுகதை கற்பனை புனையல்கள் என தொல்லியல் நிருபித்துவிட்டது. 
Liveranis.jpg
வில்லியம் ஆல்ப்ரைட், ஜான் ப்ரைட் & நோத் போன்ற அறிஞர்கள் ஆராவாரமாய் பத்திரிக்கைகளில் பைபிள் சம்பவ ஆதாரம் எனச் சொன்னவை ஏதும் அவர்களுடைய முழுமையான தொல்லியல் ஆய்வு ரிபோர்டு கட்டுரைகளில் உறுதி செய்ய சான்றுகள் இல்லை.


எபிரேய பைபிள் கட்டுக் கதைகள்படி 30லட்சம் மக்கள் எகிப்திலிருந்து வந்தேறிகளாய் கானானில் மண்ணின் மைந்தர்கள் எனப் பத்து நாட்டு மக்களை இனப் படுகொலை செய்து குடியேறியதாய் கதை.
603,550." எண்ணாகமம் 1:45-46  601,730."எண்ணாகமம் 26:51
லட்சம் குடும்பம் என்றால் + பெண்கள் - குழந்தைகள், முதியோர் 6x 5 - 30,00,000 ஆகும்.
எபிரேயருக்கு இஸ்ரேலின் கடவுள் கர்த்தர் அந்த மண்ணின் மைந்தர்களை 10 நாட்டு மக்களை அழிக்க உதவியதாயும், இனப் படுகொலை நிகழ்ந்தன எனவும் பைபிள் கதை சொல்கிறது. 
 
ஆதியாகமம் 15:19 இந்த பூமி கேனியர்கெனிசியர்,கத்மோனியர்20 ஏத்தியர்பெரிசியர்ரெப்பாயீமியர்,21 எமோரியர்,கானானியர்கிர்காசியர் மற்றும் எபூசியருக்குச் சொந்தமானதாகும்என்றார்.
 உபாகமம் 20:1“நீங்கள் உங்கள் எதிரிகளை எதிர்த்து, போருக்காகக் செல்லும்போது குதிரைகளையும், இரதங்ளையும், உங்களிடமிருப்பவர்களைவிட மிகுதியான ஜனங்களையும் அவர்களிடம் கண்டால், அவற்றைக் கண்டு பயப்படாதிருங்கள். ஏனென்றால் எகிப்து தேசத்திலிருந்து வெளியே அழைத்து வந்த உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடு கூடவே இருக்கின்றார்
 உபாகமம் 6:10..நீங்கள் இதுவரை உருவாக்காத வளமான பெரிய நகரங்களைத் தருவார். 11 நீங்கள் வைத்திராத சிறந்த நல்ல பொருட்கள் பலவற்றைக்கொண்ட வீடுகளை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் இதுவரைத் தோண்டியிருக்காத கிணறுகளைத் தருவார். நீங்கள் இதுவரைப் பயிரிடாத திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் போன்றவற்றை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் திருப்தியாக உண்ணலாம்.

பைபிள் கதைப்படி பத்து நாடுகளில் சில 30 லட்சம் யூத்ர்களைவிட அதிகமான மக்கள் கொண்டது எனவும் சொல்கிறது. 10 நாடு மொத்தம் - ஒரு சில குறைவு - ஒருசில பெரிது சராசரி 25 லட்சம் எனில் கானானில் நுழைந்தபோது 2 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும்.                                                              உள்ளே  நுழைந்து 480 வருடம் பின்பு ஜெருசலேம் யாவே ஆலயம் சாலமோன் கட்டியதாய் கதை.(1ராஜாக்கள் 6:1).தாவீது காலத்து மக்கள் தொகை என பைபிள் கதைஅகள் சொல்வது 

 1 நாளாகமம் 21: எனவே தாவீது யோவாப்பிடமும், ஜனங்கள் தலைவர்களிடமும், “போய் அனைத்து இஸ்ரவேலரின் எண்ணிக்கையையும் கணக்கிடு. நாட்டிலுள்ள ஒவ்வொருவரையும் பெயர்செபா முதல் தாண் வரையுள்ள அனைவரையும் கணக்கிடு. பிறகு எனக்குச் சொல். மொத்தத்தில் ஜனங்கள் தொகை எத்தனை என்று கணக்கிட்டு எனக்குச் சொல்” என்றான். 

 அவன் தாவீதிடம் ஜனங்களின் எண்ணிக்கையைச் சொன்னான். இஸ்ரவேலில் 1,100,000 பேர் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். யூதாவில் வாளைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் 4,70,000 பேர்.

 
தாவீது மக்கள்  கணக்கெடுப்பு போது இஸ்ரேலில் படை வீரர்கள் மட்டுமே 15.7 லட்சம், அதிலும் இரு கோத்திரம் சேர்க்காமல் எனக் கதை. அவர்களையும் சேர்த்தும் யூதர் அல்லாதவர்கம் மற்றும் ஊன்முற்றொர் எனக் கொண்டு 20 லட்சம் குடும்பம் என்றால் 1 கோடி மக்கள் தாவீது ஆட்சியில் என ஆகும்.
 
தொல்லியல் அகழ்வாய்வில் இன்று உள்ள தொழில் நுட்பம் கொண்டு இஸ்ரேல், யூதேயா முழுமையாய் துல்லியமாய் சர்வே செய்து - பல பகுதிகளில் அகழ்வாய்வுகளும் முடிந்து விட்டது. இந்த ஆய்வுகளினை தொகுத்த அனைத்தையும் ஒரு டேபிளில் வரலாற்று ஆசிரியர் மரியோ லிவரேணி நூலில் தந்துள்ளது. (Page-123)

Liveranis1.jpg

தொல்லியல் அகழ்வாய்வுபடி மொத்த கானான் பகுதிகளில் 8ம் நூற்றாண்டு இடையே (பொ.மு. 750) தான் உச்ச கட்டமாய் வளர்ச்சியும் மக்கள் தொகை அதிகமாய் வாழ்ந்தனர், அப்போது 1000க்கும் மேற்பட்ட ஊரிகளில் 3000 கிராமங்கள், சிறு ஊர்களில் மொத்தம் 4.25லட்சம் மக்கள் குடியிருந்தனர்.
 

பைபிள் சொல்லும்  கதைகள்படியாக 17மண்டலமாய் பிரிக்க, அதில் 3 பகுதிகள் என்றுமே எபிரேயர் கீழ் வந்ததே இல்லை. அதாவது இஸ்ரேலியர் வாழ்ந்த பகுதி மக்கள் தொகை - பெண்கள்+ குழந்தைகள், முதியோர் + வீரர் 3.6 லட்சம் மட்டுமே - 2850 பல்வேறு கிராமங்களில்.
நாம் தெளிவாய் வரலாற்று கண்ணோட்டத்தில் பார்த்தால் - கிரேக்கர் காலத்திற்குமுன் இஸ்ரேல் யூதேயா என நாடுகள் இருந்ததே இல்லை, இவை அசிரியா கீழான நியாயதிபதிகள்   கீழ்(பஞ்சாயத்து தலைவர்கள்  ) கீழான சிறு சிறு ஊர்/கிராமங்கள்.

 நாம் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக பேராசிரியர்கள் நூலில் பார்ப்போம்
Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
oup.jpg

The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them. Page-77

எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர். அந்தக் கடற்கரையேரப் பகுதியின் சிறு பகுதியே அவர்கட்கு முழு உலகமும்.
With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.  Pages- 87,88

ஒரு சில தவிற கானானிய அல்லது இஸ்ரேலின் எந்த ஒரு நகரமும் ரோமன் எகாதிபத்த்ய ஆட்சிக்குக் கீழ் (பொ.ச.மு.63) வரும் முன்பு ஒரு அமெரிக்க கால்பந்து மைதான அளவு தான் இருந்தது. கிராமங்கள் கால்பந்து விளையாடும் பகுதி மட்டும் தான். தாவிதின் ஜெருசலேம் என்பது 300’ -1300 அடிகல் கொண்டது. ஜெருசலேம் நகர எல்லைக்குள் வீடுகள் கொச்சை- கொச்சையாக ஒரு வரிசையின்றி, செல்வதற்கு சிறு பாதை மட்டும்- தெருச் சாலை கிடையாது. கிரேக்கர் ஆக்கிரமிப்புக்கு முன் பொது மக்களுக்கு என அரசினால் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பொதுக் கட்டங்களும் கிடையாது என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை.

Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them.  Page-77

The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle.
The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further.
It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought.  Pages 86-87.

வெளிநாடுகள் பழைய ஏற்பாட்டில் ஒரு ராணுவ ரீதியான் நட்போ-எதிரியோ என்றும், இஸ்ரேலின் சிறு எல்லைக் கடவுள் கர்த்தர் தவிற மற்ற கடவுள்களின் மக்கள் என்றே பார்த்தனர், மற்றபடு மற்றநாடுகளைப் பற்றி சிறு ஆர்வமும் இல்லை.

பொருளாதார வளர்ச்சிக்கு இருந்த எளிதான வாய்ப்பான- கடல் வாணிகம் எப்பொழுதுமே செய்யவில்லை, தங்களை அந்த தரைப் பகுதி எல்லையினுள் அட்க்கி வாழ்ந்தனர். ஆரம்பத்தில் பிலிஸ்தியரால் கடல் வாணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்கப் பட்டாலும், இருவருக்குமான போர்கள் பைபிள்படி- பிலிஸ்தியர் இஸ்ரெலை ஆக்கிரமிப்பு தடுக்கவே. எந்த ஒரு தடுப்பும் இன்றியும் கடலோர நாடான இஸ்ரேலியர் கடல் வாணிகம் செய்யவே இல்லை.
இஸ்ரேலியர்-பக்கத்து நாட்டினர் பினீசியர்கள்- எகிப்தியர் கடல் வாணிகத்தில் ஈடுபடவிட்டனர். இஸ்ரேலியர்-பழைய ஏற்பாட்டின் மூட நம்பிக்கையான தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதி- தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்ற ஒரு சிறு விஷயத்திலேயே உழன்றனர்.
பழைய ஏற்பாட்டின்படி கடல் இஸ்ரேலியருக்கு ஒரு வாழ்க்கைப் பட்குதியாகவே இல்லை.
81Umh-5oiiL._SL1500_.jpg


இன்னுமொரு நூல் – • Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8.                            இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல்.
இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.                                 
1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல.     
                     2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை.                                         3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.                                                                                                                                                       4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை.                                                         5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.                                                                                                                                                       
 6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள்.     
     7. ஜெருசலேம் தேவாலயம் என ஏதும் சாலமோனால் கட்டப் படவில்லை.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

பைபிளை ஏன் வரலாற்று ஆசிரியர்கள் முழுமையாய் நிராகரித்தனர்.

உலகின் மதிப்பு மிக்க பல்கலைக் கழக தொல்லியல் பேராசிரியர் பைபிள் கதைகளை இன்று சிறிதும் வரலாறு இல்லை, எல்லாமே மனிதக் கற்பனை என நிராகரிக்கின்றனர்.

தொல்லியல் மிகுந்த வளர்ச்சி பெற்று உள்ளது. எல்லாத்துக்கும் வீடியோ ஆதாரம், கார்பன் டேட்டிங் ஆதாரம் கொடுக்க வேணும்.

1950க்கு முன் சர்ச் மற்றும் கிறிஸ்துவப் பணக்கார சங்கங்கள் கொடுத்த நன்கொடை கொண்டு ஆய்வை செய்ய தொடங்க வேண்டும், பைபிளிற்கு ஆதாரம் உள்ளது எனுமடி அறிக்கை விட்டால் மேலும் பணம் எனச் சென்றது. அன்றைய மிகவும் பேசப்பட்ட ஆய்வாளர்கள்- வில்லியம் ஆல்ப்ரைடு,ஜான் ப்ரைட்,நோத் என்பவர்கள்.

கையில் பைபிளை வைத்துக் கொண்டு தோண்டுகையில் கிடைத்த பொருட்களை எல்லாம் பைபிளின் இந்த ராஜா, இந்த போர் எனத் தொடர்பு படுத்தி மேம்போக்காய் செய்திகள் பத்திரிக்கைகளில் ஆராவாரமாய் விட்டனர்.  அவர்கட்கு தொடர்ந்து பணம் கிடைத்தது, 2ம் உலகப் போருக்குபின் உருவான இஸ்ரேல் நாடு எனும் அரசியல் சூழலிற்கு இவை உதவின.1960க்குப்பின் தங்கள் ஆய்வு முடிவுகளை நூலாய் ஆதாரம் கொண்டு விளக்கக் கட்டுரையாய், நூலாய் வடிக்கும்போது, தோண்டும்போது கிடைத்தவை ஏதும் அவர்கள் பத்திரிக்கையில் சொன்னவைகள் தான் என உறுதி செய்யப் போதாது என்றே இருந்தது.

தொல்லியல் முடிவுகளை பல்கலைக் கழகங்கள் ஆராயத் தொடங்கின; கிடைத்த பொருட்களை துல்லியமாய் காலம் குறிக்க கார்பன் 14 முறை உதவியது. முன்பு கிடைத்த ஏடுகள், கல்வெட்டு எழுத்துக்கள் முறையாய் வாசிப்பு பெற்றன, முன்பு பைபிள் தொடர்புள்ளவை என்பவை எல்லாமெ குருட்டாம் போக்கில் உளறப் பட்டவை என்பது தெளிவாகின- உதாரணமாய் எகிப்தில் பிரமீடுகளில் எபிரேயர் பெயர்கள் உள்ளதாய் படித்தவை ஒன்று கூட இல்லை என ஆனது. மேலும் புதிய இடங்களில் கிடைத்த தொல்லியல் முடிவுகள் ஒவ்வொன்றும் வெளிவந்தன.

இஸ்ரேல் முழுவதும் சர்வே செய்யப் பட்டு அவற்றில் எந்தப் பகுதியில் எப்போது மக்கள் குடியேறினர், அன்றைய நிலையில் அந்த கிராமம்/ஊர் எவ்வளவு பெரியது, எத்தனை மக்கள் வசித்தனர் என்பது முழுமையாய் துல்லியமாய் கணக்கெடுக்கப் பட்டது. என்றுமே இஸ்ரேல் – பாலஸ்தீனப் பகுதி அதிக அளவில் மக்கள் குடியேறிய பகுதி இல்லை, வாழ்ந்த மக்கள் நாடோடிகள் – ஆடு; மாடு மேய்த்து வேட்டை ஆடியவகள்; அரசு ஆட்சி, பொது நிர்வாக் அமைப்பு ஏதும் அமையவில்லை, ரோடுகள் இல்லை, இவை எல்லாமே கிரேக்கர் காலத்தில் தான், பின்னர் ரோமன் காலத்தில் தான் வந்தன என்று தெளிவானது.

With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government. Pages- 87,88 Bible As Literature

The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.   Page-77

இஸ்ரேல் முழுவதும் சர்வே படியாய் உச்சக் கட்டமாய் அங்கு பொமு.8ம் நூற்றாண்டில் மொத்த மக்கள் தொகை

Liverani

அதாவது தாவீது ராஜா காலத்தில் படைவீரர் மட்டும், இஸ்ரேலின் 10 கோத்திரம் மட்டும் 14 லட்சம் எனக் கதை, மீதமுள்ள் இரு கோத்திரம் சேர்த்து 17 லட்சம், ஒரு குட்ம்பத்திற்கு 5 பேர் எனக் கொண்டால் மக்கள் தொகை அன்னியரை சேர்த்த்டு ஒரு கோடி வரும். ஜெருசலேம் ஒரு பெரு நகர் என்கிறது பைபிள் கதைகள்.
கானான் பகுதியை 17 பிரிவாய் பிரித்து அங்கே 1000 ஆண்டில் உச்ச மக்கள் தொகை -0ம்7 750ல் 4 லட்சமே ; கிட்டத் தட்ட 3000 கிராமம், சிறு ஊராய்; அந்தக் காலக் கட்டத்தில் மிகப் பெரிய ஊற் என ஜெருசலேம் 7000ம் மக்கள் தொகை பெற்றது ( 50 ஆண்டு முன்பு 700தான்)

 

 

 

பைபிள் வெறும் கட்டுக் கதை, தொல்லியல் அகழ்வாராய்வு ஆய்வு முடிவுகள்
விவிலியம் பழைய ஏற்பாடு பொமு 3ம் நூற்றாண்டில் ஆரம்ப வடிவம் பெற்றது. 3ம் நூற்றாண்டின் வரை தோரா எனும் நியாயப் பிரமாணங்கள் என்ற சொல் எங்கேயும், எந்த இலக்கியத்திலும் சரி கல்வெட்டுக்களிலும் சரி காணப்படவில்லை. விவிலியம் வாய் மொழியில் சொன்னார்கள் எனில்… அப்படி அவர்கள் சொன்னார்கள் என்றத் தகவலாவது காணப்பட வேண்டும் அல்லவா…இது வரை அத்தகைய ஒன்று பொமு காலங்களில் இருந்ததாகவும் சரி விவிலியம்படி மக்கள் பிரிந்து இருந்தார்கள் என்பதற்கும் சரி சான்றுகளே இல்லை. எபிரேயர்கள் நாடோடிகள், காட்டுமிராண்டிகள், ஆடு மாடு மேய்த்தல் , வேடன் போன்ற தொழில் செய்தவர்கள், கிரேக்கர், ரோமன் காலத்தில் தான் நாகரிக வளர்ச்சி பெற்று, பட்டணங்கள் அமைத்தனர். எபிரேய மொழி வளர்ச்சியற்ற மொழி, அதில் உயிர் எழுத்துக்கள் கிடையாது, அவை சேர்க்கப்பட்டது பொகா 8௰ நூற்றாண்டில் தான், பழைய ஏடுகள் அழிக்கப்பட மிகப் பழைய ஏடுகள் 10ம் நூற்றாண்டினது தான்.

எகிப்து மன்னன் சிஷாக் பொமு 10ம் நூற்றாண்டு இறுதில்யில் பாலஸ்தீனம் முழுக்கப் படை எடுத்து வென்றதைக் கல்வெட்டாக பதித்து உள்ளபடி அப்போது யூதேயா- இஸ்ரேல் இரு நாடுகளுமே கிடையாது. அடுத்த நூற்றாண்டில் எஸ்ரேல் சிறு பட்டணமாய் வளர்ந்தது( 1 லட்சம் மக்கள்), பொமு 725வரை யூதேயா கிடையாது, அசிரியர் படைஎடுத்து இஸ்ரேலை அழிக்க கானானியர்கள் யூதேயாவில் குடியேறினர், 1500 மக்கள் தொகை கொண்ட ஜெருசலேம் 15000 தொட்டதாம்.

ஆனால் பழைய ஏற்பாடு முழுதும் சீயோன் என ஜெருசலேம் போற்றல் உள்ளது. ஜெருசலேம் தேவாலயம் என்ற சொல்லையே எங்கும் காண முடியவில்லை. சாக்கடல் சுருள்கள் எனும் பொமு 100-பொகா 400 இடையிலான பழைய ஏற்பாடு சுருள்கள் காட்டுவது, பழைய ஏற்பாடு புனைக் கதைகள் உருவான காலமே அப்போது தான் என்பதை உணரலாம். புதிய ஏற்பாடு கதை நாயகன் ஏசுவின் காலத்தில் பழைய ஏற்பாட்டின் இரு பகுதிகள் தான்( சட்டங்களும்- தீர்க்கர்களும்; கேதுபிம் எனும் எழுத்துக்கள் புனையல்கள் சேர்க்கப்படவில்லை.

இன்றி பைபிளியல் – தொல்லியல், வரலாற்று ஆய்வில்,
இத்தாலியின் ரோம் பல்கலைக் கழகத்தின் ஜியோவன்னி கார்பினி, மையோ லிவெர்னி, கார்லோ சகக்னி எனும் வரலாற்று பேராசிரியர்கள்.
இங்கிலாந்தின் ஷெப்பீல்ட் பல்கலைகழகத்தின் பில் டேவிஸ் மற்றும் பேராசிரியர் கீத் ஒயிட்லம்;,
இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியல் துறைத் தலைவர் இஸ்ரேல் பின்கெல்ஸ்டின்; மற்றும் பேராசிரியர்கள் உஷ்கின், ஹெர்சாக்.
கோபன் ஹேகன் பல்கலைகழக பழைய ஏற்பாடு துறையின் தாமஸ் தாம்சன் மற்றும் நீல் பீட்டர் லேம்சே எனப் பல்வேறு பன்னாட்டு பல்கலை கழகங்களும் எவற்றை மெஇபித்துள்ளனர்.
மொழியியல் வேர்சொல்படி எபிரேயம் எனும்படி ஆய்வில் பியட்ரோ ப்ரோன்சரொலி மற்றும் அக்கெல் க்னப் எனும் வரலாற்று மொழியியல் பேராசிரியர்கள் நிருபித்தனர்.
இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக் கழக வரலாற்று பேராசிரியர் ஷொல்மொ சண்ட்ஸ் எகிப்தில் எபிரேயர்கள் என்றுமே வாழ்ந்ததில்லை, ஆபிரகாம், மோசஸ், தாவீது, சாலமோன் என்பவை கட்டுக்கதை கதாபாத்திரங்கள்; பாபிலோன் வெளியேற்றம் என்பதும் கட்டுக்கதை என தொல்லியல் அகழ்வாய்வுகளின் படி நிறுவினார்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard