Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எட்டுத்தொகை நூல்களுள் திருமால் அவதாரங்கள்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
எட்டுத்தொகை நூல்களுள் திருமால் அவதாரங்கள்
Permalink  
 


 எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று பரிபாடல். அதில் திருமாலின் புகழ் பேசப்படுகிறது.

http://www.tamilvu.org/courses/degree/p202/p2022/html/p202212.htm

1.2.1 திருமால்

ஆதிசேடன் என்னும் பாம்பினை உடையவன்; திருமகளை மார்பில் உடையவன்; ஒரு குழையை உடைய பலதேவனாகவும் இருப்பவன்; அந்தணரின் அருமறைப் பொருளானவன் எனப் போற்றுகிறது பரிபாடல் (பரி. 1:1-14). மற்றும் ஐம்பெரும் பூதங்களாகவும் இருப்பவன் (பரி.13:15-25) என அவன் புகழைச் சொல்லி வழிபடுகின்றனர் மக்கள்.

எல்லாப் பொருளும், பொருளின் தன்மையும் திருமால் என்பதை,

 

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ

 

 

p2022aud.gif

 

(பரி. 3:63-68)

எனப் போற்றுகின்றார் புலவர் கடுவன் இளவெயினனார்.

(தெறல் = வெம்மை, நாற்றம் = மணம், மணி = நீலமணி, மறம் = வீரம், வாய்மை = உண்மை, மைந்து = வலிமை, பூதம் = நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் ஆகிய ஐம்பூதங்கள், வெஞ்சுடர் = சூரியன், திங்கள் = நிலவு, அளி - குளிர்ச்சி)

மேலும் இறைவனின் பெருமையை இயற்கைப் பொருளைக் கொண்டு உணர்த்துகின்றார்.

 

நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;
நின், தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின், சுரத்தலும் வண்மையும் மாரி உள
நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின், நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின், தோற்றமும் அகலமும் நீரின் உள;
நின், உருவமும் ஒளியும் ஆகாயத்து உள;
நின், வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள:

 

 

p2022aud.gif

(பரி. 4:25-32)

(வெம்மை = பகைவரை அழிக்கும் ஆற்றல், தண்மை = அளித்தல்அருளல், சுரத்தல் = விருப்பம் நிகழ்தல், வண்மை = கொடை, புரத்தல் = தாங்குதல், நாற்றம் = மணம், வண்மை = ஒளி, பூவை = காயாமலர், ஒலி = சொல்வருதல் = அவதரித்தல், ஒடுக்கம் = மறைதல், மருத்து = காற்று)

இப்படி உருவப் பொருளிலும் அருவப் பொருளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனாகத் திருமாலைக் காட்டுகின்றது பரிபாடல்ஐம்பெரும்பூதங்களாகவும், கோள்களாகவும் இறைவனைக் கண்ட புலவர்கள் சொல்லினுள் வாய்மை நீ எனச் சுட்டி எண்ணம், பேச்சு, செயல் ஆகிய மூன்றிலும் நெருடல் இல்லாத தன்மையைக் காட்டுகின்றனர்.

1.2.2 அவதாரங்கள்

திருமால் அவதாரங்கள் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, இராம, பலராம, கிருஷ்ண, கல்கி எனப் பத்தாகும்.

• கூர்ம அவதாரம்

 

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர், இந்திரன் இழந்த செல்வத்தை எடுப்பதற்காக. அப்பொழுது மத்தாக இருந்த மேருமலை கடலில் அழுந்தத் தொடங்கியது.

தேவர்களுக்கு உதவ எண்ணிய திருமால் ஆமையாக உருக்கொண்டு மேருமலையைத் தாங்கி நின்றார் என்பது புராணம். இச்செய்தியைப் பரிபாடல் திரட்டின் முதல் பாடல் பின்வருமாறு கூறுகின்றது.

p2022528.jpg

 

 

திகழ் ஒளி முந்நீர் கடைந்தக்கால், வெற்புத்
திகழ்பு எழ வாங்கித் தம்சீர்ச் சிரத்து ஏற்றி
மகர மறிகடல் வைத்து நிறுத்துப்
புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
அமுது கடைய இருவயின் நாண்ஆகி
மிகாஅ இருவடம் ஆழியான் வாங்க
உகாஅ வலியின் ஒருதோழம் காலம்
அறாஅது அணிந்தாரும் தாம்

 

 

p2022aud.gif

(64-71)

(முந்நீர் = திருப்பாற்கடல், வெற்பு = மந்தரமலை, சிரத்து ஏற்றி = உச்சியில் ஏற்றி (ஆமை முதுகில் ஏற்றி), இருதிறத்தோர் = தேவர், அசுரர், அமுது = அமிழ்தம், நாணாகி = கயிறாகி, ஆழியான் = திருமால், அணிந்தார் = மத்தின் கயிறானார்)

• வராக அவதாரம்

 

இரணியனுடன் பிறந்த அசுரன் நிலத்தைச் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலுக்குள் மறைந்து கொண்டான். இச்செய்தியைக் காப்புக் கடவுள் திருமாலிடம் கூறித் தமக்கு உதவுமாறு வேண்டினர் தேவர்கள். திருமால் வராக வடிவில் கடலுக்குள் சென்று தன் கொம்பின் உதவியால் நிலமகளை அசுரனிடம் இருந்து மீட்டான் என்பது கதை.

p2022529.jpg

 

 

கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;

 
(பரி. 2:16-18)

(கேழல் = பன்றி, ஒருவினை = திருவிளையாடல்)

(கடலில் மூழ்கிய நிலத்தைப் பன்றி உருவில் தன் கொம்பால் மேலே கொண்டு வந்தவன்)

• நரசிம்ம அவதாரம்

 

இரணியன், பிரகலாதன் ஆகியோர் பற்றிய கதை நரசிம்ம அவதாரத்தில் இடம்பெறும். இரணியன் தன்னை விலங்கு, மனிதர், தேவர் யாரும் கொல்லக் கூடாது; பகல், இரவு, வீட்டுக்குள், வெளியில் யாரும் எந்த நேரத்திலும் தன்னைக் கொல்லக்கூடாது. ஆயுதங்களாலும், தனக்கு அழிவுவரக்கூடாது எனப் படைப்புக் கடவுள் பிரம்மாவிடம் வரம் பெற்றிருந்தான். எனவே எல்லோரும் தன்னை வணங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினான்.

p2022530.jpg

தந்தை இரணியனை, திருமால் அடியவன் ஆன மகன் பிரகலாதன் வணங்க மறுத்தான். இருவருக்கும் நடந்த வாக்குவாதம் முற்ற இறைவனைக் காட்டு எனத் தந்தை கேட்க, மகன் ‘தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்’ என விடை சொன்னான். இறைவன் நரசிம்ம வடிவங்கொண்டு தூணைப்பிளந்து கொண்டு வந்து இரணியனை இழுத்துத் தன் மடியில் கிடத்தித் தன் நகத்தால் கிழித்துக் கொன்றான் என்பது நரசிம்ம அவதாரமாகும்.

இரணியன்-பிரகலாதன் கதையைப் பாடியுள்ளார் கடுவன் இளவெயினனார் (பரி. 4:10-21).

• வாமன அவதாரம்

 

குள்ள வடிவு கொண்ட அந்தணன் தோற்றத்தில் மகாபலிச் சக்கரவர்த்தியின் செருக்கை அடக்கியது வாமன அவதாரம் ஆகும். அரசனிடம் மூன்று அடி மண் கேட்டு, பின் ஓரடியால் மண்ணையும், ஓரடியால் விண்ணையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் இல்லாமல் போக, மூன்றாவது அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து அவனைப் பாதாளத்திற்குள் தள்ளியது வாமன அவதாரக் கதை.

p2022531.jpg

பெரும்பாணாற்றுப்படை (29-31) என்னும் ஆற்றுப்படை நூல் தொண்டைமான் இளந்திரையன் முன்னோருடன் திருமாலை ஒப்பிட்டுக் காட்டுகின்றது. அந்த இடத்தில் வாமன அவதாரத்தை எடுத்துரைக்கின்றது. கலித்தொகையில் நல்லந்துவனார் பாடிய நெய்தற்கலியிலும் இக்குறிப்பு உள்ளது.

• பரசுராமன் அவதாரம்

 

திருமாலின் கூறாகிய பரசுராமன், முன்பு விடாமல் முயன்று முடித்த வேள்விக்களத்தில், கயிற்றில் சுற்றிக் கட்டப்பட்ட அழகிய தூண்போல என உவமை கூறுவதின் வழி,

p2022532.jpg
 

மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி
கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்
அருங் கடி நெடுந்தூண் போல


p2022aud.gif

(அகநானூறு : 220-5-9)

(மன் மருங்கு = அரசர் குலம், வனப்பு = அழகு, மழுவாள் நெடியோன் = மழுவாகிய வாள்படை உடைய பரசுராமன்)

மதுரை இளநாகனார் பரசுராம அவதாரத்தை சுட்டுகின்றார் (காவலை உடைய தூண் போலத் தலைவியின் ஆகம் காணற்கரியது). ஆக, அகப்பாடலிலும் உவமை கூறும்போது திருமால் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளதை நெய்தல் திணையில் அமைந்த அகநானூற்றுப் பாடல் வழி அறிகின்றோம்.

• இராமன் அவதாரம்

 

இராமன் அரக்கரை வெல்ல, போர் பற்றிய அரிய மறை (இரகசியச்) செய்தியை வானர வீரர்களோடு ஆராய்ந்த பொழுது பறவைகள் ஒலி எழுப்புகின்றன. அவ்வொலி பேச்சுக்கு இடையூறாக இருக்கின்றது. எனவே இராமன் பறவைகளின் ஒலியை, கேட்காமல் செய்தான். பல விழுதுகளை உடைய ஆலமரத்தில் இருந்த பறவைகள் ஒலி எழுப்பவில்லை. எனவே, ஆலமரம் ஒலியின்றி அமைதியாக இருந்தது என்பதை,

p2022527.jpg

 

 

வென்வேற் கவுரியர் தொல் முதுகோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல் வீழ் ஆலம் போல
லி அவிந்தன்று இவ்வழுங்கல் ஊரே

 
(அகம்,70:13-17)

(வென்வேல் = வெற்றிவேல், கவுரியர் = பாண்டியர், முதுகோடி = கோடிக்கரை, இரும் = பெரிய, பௌவம் = கடல், இரங்கும் = ஒலிக்கும், துறை = கடற்கரை)

எனச் சுட்டுகிறார் மதுரை தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார். தலைவன் வரைவு (திருமணம்) உடன்பட்டதும் வதுவை (திருமணம்) கூடும். எனவே அலர் (பழிச்சொல்) பேசுகின்ற இந்த ஊரும் அது போல அலர் அவிந்து கிடக்கும். இப்படிப் பொருத்தமான உவமையாகப் புராணக் குறிப்புகளை அகப்பாடல் பாடிய புலவர்கள் எடுத்தாண்டுள்ளனர். இப்பாடலும் முற்காட்டிய பரசுராம அவதாரத்தைச் சுட்டிய பாடலைப் போன்று நெய்தல் திணையில் அமைந்த அகநானூற்றுப் பாடல்.

• கிருஷ்ண அவதாரம்

நீராடும் போது கண்ணனால் ஆடை கவரப்பட்ட ஆயமகளிர் அணிந்து கொள்ள, குருந்த மரக்கிளை நீருக்குள்ளே வளைந்து செல்லும்படி தம் திருவடியால் மிதித்த திருமால் போல என்னும் உவமை,

 

 

வண் புனல் தொழுநை வார் மணல் அகன்துறை
அண்டர் மகளிர் தண் கழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் போல

 

 
(அகநானூறு : 59 : 3-6)

(தொழுநை = யமுனை, மரம் செல = குருந்த மரம் வளைந்திட, அண்டர் மகளிர் = ஆயமகளிர், ஆயர் = ஆயர் குலத்தை சேர்ந்தவர்; ஆடு, மாடு மேய்க்கும் தொழிலைச் செய்பவர்)

நீர்வளம் பொருந்திய யமுனை ஆற்றில் மணலை உடைய அகன்ற துறையில் நீராடிய ஆயர் மகளிர் குளிர்ந்த தழையை உடுத்திக் கொள்ளக் குருந்த மரம் வளையும்படி மிதித்துத் தந்தான் கண்ணன் என்று கிருஷ்ண அவதாரச் செயலைக் குறிப்பிடுகின்றது.

கம்சன் அனுப்பிய குதிரை வடிவமாக வந்த அசுரனைக் கண்ணன் கொன்றான் என்பது முல்லைக் கலியில் உள்ளது. ஏறு தழுவிய ஆயர்களைத் தோழி தலைவிக்குத் தனித்தனியே காட்டுகின்றாள். ‘காயாம்பூங் கண்ணியைச் சூடிய பொதுவன் ஏறு தழுவிய பிறகு நிற்கும் காட்சி,

 

மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்கொல்
மாயோன் என்று; உட்கிற்று என்நெஞ்சு

 
(103: 53-55)

(மேவார் = பகைவர், விடுத்தந்த = அனுப்பிய, வாய்பகுத்து = வாய் கிழித்து, புடைத்த = அடித்த, ஞான்று வேளை, உட்கிற்று = நினைத்து)

 

என்று கூறுவது அரக்கனை அழித்த கண்ணன் போன்று இருந்தது என உவமையாக இடம் பெற்றுள்ளது.

 

மறம்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறுத்திடுவான் போல்

 
(52:2-3)

(நூற்றுவர் தலைவன் = துரியோதனன், குறங்கு = தொடை)

 


மல்லரை மறம் சாய்த்த மால்போல்

 
(52:5)

எனத் தலைவனுக்கு உவமைகள் வந்து உள்ளன. இதன் வழி நூற்றுவர்களுக்குத் தலைவன் ஆன துரியோதனனை வீமன் அழித்தான் என்றும், மல்லர்களைக் கண்ணன் அழித்தான் என்றும் அறிகின்றோம்.

‘மறம்’ வீழ்த்தப்படுவது அவதாரப் பெருமை என்பதும் புலன் ஆகின்றது.

பாண்டவர்கள் அரக்கினால் செய்த வீட்டில் இருக்கும்பொழுது, இரவில் துரியோதனன் நெருப்பை வைத்துக் கொளுத்தி விடுகின்றான். வீமன்  அரக்குவீட்டை உடைத்து உள்ளே இருந்தவரைக் காப்பாற்றுகின்றான் (25: 1-8).

தலைவன் வெஞ்சுரம் செல்ல இருக்கின்றான் என்கிறாள் தோழி. அகப்பாடல்களில்

  •  

ஏறு தழுவும் போது தலைவனின் தோற்றத்தை உவமிக்கும் போதும்,

  •  

தலைவனைப் பிரிவுணர்த்திய பின் செலவைத் தள்ளிப்போடும் போதும் / தவிர்க்கும் போதும்,

கிருஷ்ண அவதாரக் குறிப்பு உள்ளது.

• பலராமன்

பலராமன் பற்றிய குறிப்பு சங்க நூல்களில் உள்ளது. நற்றிணையில்,


மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி

(நற்றிணை - 32)

p2022534.jpg

(மாயோன் = கண்ணன், அன்ன = போல / ஒத்த, மால்வரைக்கவான = மலைப்பக்கம், வாலியோன் = வெண்மை நிறமுடைய பலதேவன்)

எனத் திருமாலும் பலராமனும் அடுத்தடுத்து இடம் பெறுகின்றனர். பலராமன் நீலநிற ஆடையை அணிந்திருந்ததை நெய்தற்கலி (7) காட்டுகின்றது.

முல்லைக்கலி (5) காளைகளுக்கு உவமையாக கிருஷ்ண - பலதேவர் ஆகிய இருவரைக் கூறும்.

புறநானூறு சிவன்-முருகன் ஆகியோருக்கு இணையாக கிருஷ்ண - பலராமன் ஆகிய இருவரை,

 

கடல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடியோனும்
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண் உயர் புட்கொடி விறல் வெய்யோனும


p2022aud.gif

(புறம். 56: 3-6)

(வளை = சங்கு, புட்கொடி = கருடக் கொடி, நாஞ்சில் = கலப்பை, மேனி = உடம்பு, விறல் = வெற்றி)

என மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார் பாடியுள்ளார். மேலும் அவர்களை வலிமை உடையவர்களாகவும் காட்டுகிறார்.

சோழன் திருமாவளவனும் பாண்டியன் பெருவழுதியும் சேர்ந்திருக்கக் கண்ட காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்,

 

பால்நிற உருவின் பனைக் கொடியோனும்
நீல்நிற உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றா அங்கு

 
(புறம், 58:14-16)

என்று கிருஷ்ணன் பலதேவர்களுக்கு உவமிக்கின்றார்.

ஆக, சங்க இலக்கியங்கள்

  • கிருஷ்ணனும் பலராமனும் வழிபடுதெய்வமாக இருந்ததைக் குறிப்பிடுகின்றன.

     

  • சிவன் - முருகன் வழிபாடு போலவே மக்கள் கிருஷ்ண -பலராமர் வழிபாட்டையும் செய்தனர்.

     

     

  • பலராமனை வலிமைக்கு உதாரணமாகக் காட்டுகின்றனர் புலவர்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: எட்டுத்தொகை நூல்களுள் திருமால் அவதாரங்கள்
Permalink  
 


1.2.3 வழிபடு கடவுள்

பாரதம் பாடிய என்ற சிறப்பையும் பெயரோடு பெற்றிருக்கின்ற புலவர் பெருந்தேவனார்.

 

மா நிலம் சேவடி ஆக, தூ நீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன், என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே

 

p2022aud.gif

என நற்றிணைக்குக் கடவுள் வாழ்த்துப்பாடி, திருமாலை முழுமுதற் கடவுளாகக் காட்டுகின்றார். திருமால், ஐம்பெரும் பூதம், மதியம், சூரியன், திசை, இப்படி எல்லாம் அவன், அவனே உலகத்து உயிர், உயிர்கள் அனுபவிக்கும் பொருள், வேதத்தின் பொருள் எனவே அவனை வணங்குவோம் என்பர்.

எனவே நிலத்தை அவன் திருவடியாகவும் கடலை அவன் ஆடையாகவும், திசையை அவன் கை ஆகவும், சந்திரன் சூரியன் ஆகியவற்றை அவன் இரு கண்களாகவும் கண்டு உருவகப்படுத்தி உள்ளார். இறைவனையும் இயற்கையையும் பிரித்தறிய முடியாது என்பது பொருள்.

வழிபடு கடவுள் என்றால் கோவிலும் இருக்கத்தானே செய்யும். எனவே வழிபாட்டையும் அதற்கான வழிமுறைகளையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

1.2.4 வழிபாடு

பதிற்றுப்பத்து நான்காம் பத்தில் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் பற்றிப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார் அந்நாட்டு மக்கள் படித்துறையில் நீராடி, துளசி மாலையை மார்பில் அணிந்துள்ள ஆழிப்படையை உடைய செல்வனாகிய திருமாலை வழிபட்டுச் சென்றனர்.

 


‘செல்வன் சேவடி பரவி’

 
(பதிற்றுப்பத்து 4:1:9)

(பரவி = வணங்கி)

எனப் பாடியுள்ளார். திருமாலை வழிபட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர் என்பதால் திருமாலுக்குரிய உருவ வழிபாடும் இடமும் (கோவில்) சங்க காலத்தில் இருந்தன என்பதையும் அறிகின்றோம்.

திருமாலிருஞ்சோலை (அழகர்கோயில்), இருந்தையூர் ஆகிய இடங்களைத் திருமால் இடமாகக் காட்டுகின்றன பரிபாடலும் பரிபாடல் திரட்டும். திருமுருகாற்றுப்படையும் அறுபடை வீடு பற்றிப் பேசும்போது திருமாலைக் குறிப்பிடுவதால் திருமாலுக்குரிய வழிபாட்டு இடம் உண்டென்பது பெறப்படுகின்றது.

 

 

• வழிபடுதல்

மக்கள் திருமாலை வழிபட்டதை,

நலம் புரீஇ அம்சீர் நாம வாய்மொழி
இது என உரைத்தலின் எம்உள் அமர்ந்து இசைத்து இறை
இருக்குன்றத்து அடிஉறை இயைக! எனப்
பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே

p2022aud.gif (பரி. 15:63-66)

(நலம் புரீஇ = நன்மை செய்யும், நாம வாய்மொழி = வேதம், இருங்குன்றம் = திருமாலிருஞ்சோலை, பெரும் பெயர் இருவர் = நம்பி மூத்தபிரானும் வசுதேவனும்)

என்று பரிபாடல் காட்டுகின்றது. சுற்றத்தாரோடு சென்று

 

, . . . . . . . . மரபினோய் நின்அடி
தலை உற வணங்கினேம், பல்மாண் யாமும்
கலிஇல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்
‘கொடும்பாடு அறியற்க, எம் அறிவு:

 

p2022aud.gif

(பரி. 2: 72-76)

(கடும்பு = சுற்றம், கலி இல் = துளக்கமற்ற (அசைவற்ற), ஏத்தி = உயர்த்தி, வாழ்த்தி = போற்றி, பரவுதும் = வணங்குகிறோம், கொடும்பாடு = கொடிய துன்பம்)

 

. . . . . . . .நின் அடி தொழுதனெம்
பல்மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்
முன்னும் முன்னும் யாம்செய்தவப் பயத்தால்
இன்னும் இன்னும்எம் காமம் இதுவே.


p2022aud.gif

(பரி. 13:61-64)

(பல்மாண் = பலமுறை, அடுக்க = அடுத்தடுத்து, காமம் = விருப்பம்)

எனத் தொடர்ந்து திருமால் திருவடியை வணங்கும் அருள் வேண்டும் எனப் பாடுகின்றார் நல்வழுதியார்.

 திருவடி

திருமாலுடைய திருவடி பிறவிப் பெருங்கடலைக் கடக்கத் துணை செய்வது: பிறப்பறுக்கும் திருவடி.

 

மா அயோயே மா அயோயே!
மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி
மணிதிகழ் உருபின் மாஅயோயே!

 
(பரி. 3:1-3)

(மறு பிறப்பு அறுக்கும் = பிறவித்துன்பம் ஒழிக்கும், மாசுஇல் = தூய்மையான, மணி திகழ் உருபின் = நீல மணி போன்ற நிறம் உடையவன்)

எனப் புகழ்ந்து,

 

முதல் முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இல்லை, பிறப்பித்தோர் இலையே

 
(பரி:3:71-72)

திருமால் உலகில் முதல், இடை, இறுதியில் படைப்பு, அளிப்பு (காத்தல்), அழிப்பு போன்றவை செய்தலால் அவன் பிறவா பிறப்பு இல்லை எனச் சிறப்பிக்கின்றது.

1.2.5 இராமகாதைக் குறிப்பு

இளஞ்சேட்சென்னி என்ற மன்னனைப் பாணர்கள் பாடிப் பரிசில் பெறுகின்றனர். அவற்றுள் அணிகலன்களும் செல்வமும் அடங்கும். தாங்கள் பெற்ற அணிகளுள் விரலுக்குரிய மோதிரத்தைக் காதுக்கும், காதுக்குரியதை விரலுக்கும், இடையில் அணிவதைக் கழுத்துக்கும், கழுத்துக்குரியதை இடைக்குமாக இப்படி மாறி மாறி அணிந்து கொள்வது வேடிக்கை ஆகவும், நகைப்புக்கு இடமாகவும் உள்ளது. எப்படி?

 

கடுந்தெற ல்இராம னுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கன்
செம்முகப் பெருங்கிளை யுழைப்பொலிந் தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே

 

p2022aud.gif

புறநா: ( 378: 18-22)

(மதரணி = ஒளிரும் அணிகலன், அரக்கன் = இராவணன், வௌவிய = கவர்ந்த, பெருங்கிளை = குரங்குக் கூட்டம், இழை = அணிகலன்)

 

 

இராமனுடன் வாழ்ந்த சீதையை அரக்கன் கவர்ந்து கொண்டு வந்தான். அப்பொழுது சீதை தான் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாகக் கீழே போட்டாள். அவை குரங்குக் கூட்டங்களின் கையில் கிடைத்தன. அக்குரங்குகளுக்கு நகைகளை எப்படி எங்கு அணிவது எனத் தெரியவில்லை. எனவே அவை மாறி மாறி அணிந்து கொண்டன. அதுபோலச் ‘சோழன் கோயிலில்’ பரிசில் பெற்ற பாணர்கள் கூட்டமும் செய்தது எனப் புறநானூறு இராமாயணத்தில் வரும் நிகழ்வுக் குறிப்புகளை உவமையாகக் காட்டுகின்றது.

1.2.6 பாரதப் போர்க்களம்

மகாபாரதத்தின் கிருஷ்ண அவதாரச் சிறப்பும், இராமாயணத்தின் ராம அவதாரப் பொலிவும் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் உள்ளன.

கலித்தொகையில் இசைக் கருவிகள் ஒலிக்க மாட்டின் கொம்புகளுக்கு இடையில் விழுந்து ஆயர்கள் ஏறு தழுவிய இடம் ஆகிய தொழுவம் (தொழுஉ) பாரதப் போர்க்களம் போல் உள்ளதாம்.

 

புரிபு மேல்சென்ற நூற்றுவர் மடங்க
வரி புனைவல்வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும் தொழூஉ

 
கலி (104 : 57-59)

(நூற்றுவர் = கௌரவர், ஐவர் = பாண்டவர், பொருகளம் = போர்க்களம், தொழுஉ = மாடுகள் கட்டும் இடம்)

1.2.7 பாரதக் கதைக்குறிப்பு

ஏறு தழுவும் பொதுவனை (முல்லை நிலப்பெயர்) ஏறு குத்தி அதன் கொம்பினால் புண் உண்டாகின்றது. அதிலிருந்து இரத்தம் வழிகின்றது; அவன் அஞ்சவில்லை. அக்காட்சி பாரதப் போரில் பாஞ்சாலி கூந்தலைப் பற்றியவனைக் கொன்று சபதம் நிறைவேற்றிய வீமனை நினைவு படுத்துகிறது. பாடல்:

 

அம் சீர் அசைஇயல் கூந்தற் கைநீட்டியான்
நெஞ்சம் பிளந்துஇட்டு நேரார் நடுவண், தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்

 
(101:18-20)

துச்சாதனனைக் கொன்று வஞ்சினம் நிறைவேற்றிய வீமனைப் போல் காட்சி தருகின்றான் பொதுவன் என உவமை வழி, பாரதப்போரில் பாண்டவரின் வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளதைக கலித்தொகையில் முல்லைக்கலியின் முதல் பாடல் வழி அறிகின்றோம்.

முல்லைக் கலிப் பாடல்களில்,

  •  

வீமனின் வீரம் பொதுவனின் தோற்றத்திற்கு உவமிக்கப் படுகின்றது
  •  

துச்சாதனன் பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றிய செய்தி

  •  

பாரதப் போர்க்களம்

  •  

அவதாரச் சிறப்பு

போன்ற பல செய்திகள் முல்லைத்திணையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆயர்களின் கடவுளாக, ஆயர்களின் வாழ்வோடு ஒன்றிய பெருமாளை, அந்நில மக்கள் வாழ்வை, நிலமும் பொழுதுமாக வைத்துப் பாடிய புலவர்கள் பதிவு செய்திருப்பது இலக்கியப் பாரம்பரியத்திற்கு வளம் சேர்த்திருப்பதோடு, ஆழ்வார் பாசுரங்களுக்கும் வித்திட்டிருக்கின்றது.

1.2.8 ஐம்படைத்தாலி

புறநானூற்றில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடிய இடைக்குன்றூர் கிழார் வாகைத்திணையில் அரச வாகைத் துறையில் ‘ஐம்படைத்தாலி களைந்தன்றும் இலனே’ (புறநானூறு : 77:7) எனப் பாடுகின்றார்.

 

ஐம்படைத்தாலி என்னும் இத்தொடருக்கு உரையாசிரியர்கள் சங்கு, சக்கரம், கதாயுதம், வாள், வில் ஆகிய ஆயுதங்களின் வடிவமாக அமைக்கப்படும் ஓர் ஆபரணம். பஞ்சாயுதமென்றும் பிறந்த ஐந்தாம் நாளில் பிள்ளைகளுக்கு அணிவித்தல் மரபென்றும் கூறுவர். இந்த உரையும் திருமால் காத்தல் கடவுள் எனக் கருதிய மக்களின் நிலையைக் காட்டுகின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

1.3 சங்க இலக்கியம் - பத்துப்பாட்டு

 

 

பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்களிலும் முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி ஆகிய நூல்களிலும் திருமாலைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றைப் பார்க்கலாமா?

1.3.1 திருமுருகாற்றுப்படை

திரு ஆவினன்குடி பற்றிச் சொல்லும்போது புலவர் நக்கீரர் திருமாலைப் ‘புள் அணி நீள் கொடிச் செல்வன்’ (அடி.151) என்றும்; காத்தற் கடவுள் என்றும் சுட்டுகின்றார்.

1.3.2 சிறுபாணாற்றுப்படை

சிறிய யாழை வைத்திருக்கும் பாணனை ஆற்றுப்படுத்தும் சிறுபாணாற்றுப்படையில்,

 

கா எரியூட்டிய கவர்கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்
பணி வரை மார்பன், பயந்த நுண்பொருட்
பனுவலின் வழாஅப் பல்வேறு அடிசில்


p2022aud.gif

(239 -242)

 

பற்றிப் பேசும்போது வீமன் மடை (சமையல்) நூலில் குறிப்பிட்டபடியே ஒய்மாநாட்டு நல்லியக்கோடன் அரண்மனையில் பல்வேறு வகை உணவுகள் சமைத்தனன் என்ற குறிப்பு உள்ளது.

அர்ச்சுனன் காண்டவ வனத்தைத் தீயிட்டுக் கொளுத்திய செய்தியும் கூறப்படுகின்றது.

1.3.3 பெரும்பாணாற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படையில் திருமாலைப் பற்றி ஆங்காங்குச் செய்திகள் உள்ளன.

 

இரு நிலம் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை

 
( 29-30)

(திருமறு மார்பு = திருமகள் பொருந்திய மார்பு, முந்நீர் = கடல்)

என ஈரடியால் மூவுலகும் அளந்த திருமாலைக் காட்டுகின்றார்.

 

. . . . . . . . . . . .நீடு குலைக்
காந்தள் அம்சிலம்பில் களிறு படிந்தாங்கு
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்

 
(அடி.371-373)

(காந்தள் = மலர், சிலம்பு = மலை)

மலையில் படிந்த யானைபோல, பாம்பணையில் பள்ளி கொண்ட திருமால் என விளக்கி, திருவெஃகாவில் திருமால் வழிபாடு இருந்ததைக் காட்டுகின்றார்.

கலித்தொகையில் பொதுவனின் ஏறு தழுவிய வீரத்தையும் வெற்றியையும் காட்டப் பாரதப் போர்க்களம் உவமையாக வந்துள்ளது. புறநானூற்றில் மன்னனின் வெற்றியையும் கொடைச் சிறப்பையும் காட்டும் பொழுது கௌரவர் பற்றிய குறிப்பும், போர்க்களம் பற்றிய குறிப்பும் உள்ளது.

பெரும்பாணாற்றுப்படையில்,

 

ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய
பேர் அமர்கடந்த கொடுஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல

 
(415 - 417)

(ஈர்ஐம்பதின்மர் = நூற்றுவர், களம் = போர்க்களம்)

எனப் பாரதப்போர் நிகழ்வும், வெற்றியும் பற்றிப் பாடுகின்றார் உருத்திரங் கண்ணனார். எனவே சேரநாட்டிலும் தொண்டை நாட்டிலும் தோன்றிய இலக்கியங்கள் பாரதப்போர் பற்றிய குறிப்பை மன்னன் பெற்ற வெற்றியைப் பாடும்போது பதிவு செய்துள்ளன.

 

நீல்நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்
தாமரைப் பொகுட்டின் காண் வரத்தோன்றி

 
(403-404)

(நெடியோன் = திருமால், நான்முகன் = பிரமன், பொகுடு = (தாமரை) மலர்)

என்னும் அடிகள் திருமாலின் கொப்பூழ் - அதில் இருந்து தோன்றிய தாமரை மலரில் பிரமன் தோன்றினான் என்று சுட்டுகிறது.

1.3.4 முல்லைப்பாட்டு

முல்லைப்பாட்டின் தொடக்கத்தில் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் மகன் நப்பூதனார், திருமால் சக்கரப்படையும் சங்கும் கைகளில் உடையவன் என்பதை,

 

நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல

 
(1-3)

(நேமி = சக்கரம், வலம்புரி = சங்கு, மாதாங்கு = திருமகளைத் தாங்கியிருக்கிற, மாஅல் = திருமால்)

என்றும், மாவலியிடம் மூன்றடி மண்கேட்டுப் பின் நெடியோனாய் உலகம் அளந்தவன் என்றும் திருமால் பற்றிய செய்திகளை மூன்று அடிகளில் பெய்து வைத்துள்ளார். ஆக, திருமால் தோற்றப் பொலிவு வெளிப்படையாகவும், அவதாரச் சிறப்புக் குறிப்பாகவும் பெறப்படுகின்றது.

1.3.5 மதுரைக்காஞ்சி

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிய புலவர் மாங்குடி மருதனார், மறவர்கள் திருமாலுக்குரிய ஓண நாளில் தேறல்(கள்) உண்டு மகிழ்ந்து திரிந்தனர். இதை,

 

கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நல்நாள்

 

 
(590-591)

(மாயோன் = கண்ணன், ஓண நல்நாள் = கண்ணன் பிறந்த நாள்)

எனப் பாடியுள்ளார்.

ஆக, திருமாலுக்குரிய திருவோண நாளை மதுரை மாநகரில் சங்ககாலத்தில் சிறப்பாக மக்கள் கொண்டாடினர் என்பதை அறிகின்றோம்.

சங்க இலக்கியத்தில்,

அவதாரம் பற்றிய செய்திகள் குறிப்பாக மட்டும் உள்ளன.

இராமன், வராகம் (கேழல்) ஆகிய அவதாங்கள் மட்டும் பெயரோடு உள்ளன.

திருமால் பற்றிய செய்திகள் பரிபாடலிலும் கலித்தொகையிலும் அதிகமாக உள்ளன.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

"நின் ஒக்கும் புகழ் நிழலவை.... எண்ணிறந்த புகழவை"[பரிபாடல்1]

"வாய்மை வயங்கிய வைகல் சிறந்த நோன்மைநாடின் இருநிலம்"                 [பரிபாடல்-2]

"நின் புகழ் உருவின கை"
                                     [பரிபாடல்-3]
"சேவல் ஓங்கு உயர்கொடிச் செல்வ ஏவல்இன் முதுமொழி கூறும் நற்புகழவை"             [பரிபாடல்-13]

"அன்பது மேஎய் இருங்குன்றத்தான்"[பரிபாடல்-15]

"நல்லவை எல்லாம் இயைதரும் தொல்சீர் குளவாய் அமர்ந்தான் நகர்"                 [பரிபாடல் திரட்டு]

"தாவா விழுப்புகழ் மாயோன்"
     [தொல்காப்பியம் பூவைநிலை]

"தேயா விழுப்புகழ் தெய்வம்"
                          [முல்லைக்கலி-3]

"புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை"    [புறநானூறு-56]

"வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் புகழ்தல் உற்றார்க்கு மாயோன் அன்ன"[புறநாநூறு-57]



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
எட்டுத்தொகை நூல்களுள் திருமால் அவதாரங்கள்
Permalink  
 


"வாய்மொழிப் புலவ"
"நலம்முழுது அளைஇய புகர் அருகாட்சிப் புலமும் நீ"

"நாவல் அந்தணர் அருமறைப் பொருளே நின் ஏவல் உழந்தமை கூறும்"                       [பரிபாடல்-1]

"வடுஇல் கொடுகையின் உயர்ந்தோர் ஆய்ந்த கெடுஇல் கேள்வியின் நடு ஆகுதலும்"
"என்னும் நாவல் அந்தணர் அருமறைப் பொருளே"

"கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் நின்உருபு"  [பரிபாடல்-2]

"மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய்மொழி உரைதர வலந்து  வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீஎன மொழியுமால் அந்தணர் அருமறை"

"ஏஎ இன கிளத்தலின் இனமை நற்கு அறிந்தனம்"

"பதினாயிரம் கை முதுமொழி முதல்வ"

"முன்னைமரபின் முதுமொழி முதல்வ"

"தொல் இயல் புலவ"

"வேதத்து மறை நீ"   [பரிபாடல்-3]

"மாநிலம் இயலா முதல்முறை

அமையத்து நாம வெள்ளத்து

நடுவண் தோன்றிய வாய்மொழி

மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டு நின்"[பரிபாடல் -3]

"அவை நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை"

"பாப்புப் பகையைக் கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை ஏவல்இன் முதுமொழி கூறும்"
                                     [பரிபாடல்-13]

"நலம்புரீஇ அம்சீர் நாம வாய்மொழி இது என உரைத்தலின்"           [பரிபாடல்-15]



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: எட்டுத்தொகை நூல்களுள் திருமால் அவதாரங்கள்
Permalink  
 


சங்ககாலச் சமயம் வைணவமே!

 

||ஸ்ரீமதே இராமாநுஜாய நம||

சங்ககாலத்தில் சிவனைப் பரம்பொருளாகக் கூறும் சைவமும், சக்தியைப் பரம்பொருளாகக் கூறும் சாக்ததமும், எந்த மதமும் இருந்ததில்லை. திருமாலை பரம்பொருளாக் கூறும் வைணவ மதம் ஒன்றேயிருந்தது என்பதையும் அசைக்க முடியாத படி நிலைநாட்டவே இந்த பதிவு!

சங்ககாலத்திலே சிவன், முருகன், இந்திரன், வருணன்
முதலான மற்ற தெய்வங்களுக்கு மிகுதியான பாடல்கள் இருந்தாலும் அப்பாடல்களில் பரம்பொருளுக்குரிய பெருமைகள் எதுவுமே பாடப்படவில்லை. திருமால்பற்றிய பாடல்களிலேயே பரம்பொருளுக்குரிய அத்தனை பெருமைகளும் காணக்கிடக்கின்றன. இதிலிருந்து சங்ககாலத்திலிருந்த அனைவருமே திருமாலை வேதம் புகழும் பரம்பொருளாகக் கொண்டிருந்தனர் என்றும், மோட்சத்தை விரும்பியவர்கள் அவனையே அடைந்து அதைப் பெற்றுப் போந்தனர் என்றும், மற்ற பயன்களை எளிதில் பெறவிரும்பியவர்கள் மற்ற தெய்வங்களையும் வழிபட்டனர் என்றும் விளங்குகிறது.

மேலும்; அக்காலத்தில் வைஷ்ணவமதம் ஒன்றே வைதிக மதமாகச் சான்றோர்களால் கொள்ளப்பட்டது என்னும் நிலையையே இது காட்டுகிறது.

(1) உலகைப் படைத்தளித்து
அழிக்கும் பெருமை.
(2) எல்லாம் அறியும் பெருமை.
(3) எல்லாம் வல்லவனாய் இருக்கை.
(4) எங்கும் வியாபித்திருக்கை.
(5) தன்னை அண்டியவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமற்செய்து வீட்டுலகத்தை அளிக்கவல்லவனாயிருக்கை.
(6) நற்குணங்கள் அனைத்திற்கும் கொள்கலமாகவும், தாழ்ந்த தன்மைகள் எதுவுமே இல்லாதவனாகவும் இருக்கை.
(7) எவராலும் அளவிட்டு அறியமுடியாதவனாயிருக்கை.
(8) மனிதர்களைக் காட்டிலும் உயர்ந்த தேவர்களுக்கெல்லாம் ஆதிதேவனாய், ஒத்தாரும் மிக்காரும் இல்லாதவனாயிருக்கை.
(9) உயிர்களுக்கெல்லாம் இயற்கை உறவினனாயிருக்கை. (10) முற்கூறிய ஒன்பது பெருமைகளும் இவனுக்கே உள்ளதாக வேதத்தால் சொல்லப்படுகிறவனாயிருக்கை - என்னும் பரம்பொருளுக்கேயுள்ள பத்து தனித் தன்மைகள் திருமால் ஒருவனுக்கே பரிபாடல் முதலான சங்கநூல்களில் சங்ககாலச் சான்றோர்களால் முழங்கப்பட்டுள்ளன என்றும், சிவன், கொற்றவை, முருகன், இந்திரன், வருணன் முதலான எந்த தெய்வத்திற்கும் இத்தன்மைகள் உள்ளதாகக் கூறப்படவில்லை.

முதலில் சர்வ சக்தன் திருமால் ஒருவனே! என முழங்கும் சங்ககால பாடல்கள் சிலவற்றை  பார்ப்போம்!

பாரதம் பாடிய பெருந்தேவனாரால் பாடப்பட்ட பின்வரும் நற்றிணைக் கடவுள் வாழ்த்துப் பாடலாகும்:

“மாநிலஞ் சேவடி யாகத், தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை யாக,
விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற வெல்லாம் பயின்று, அகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப-
தீதற விளங்கிய திகிரி யோனே.”

(வளைநரல் = சங்கொலி, பௌவம் = கடல், உடுக்கை = ஆடை, திகிரி = சக்கரம்).

[இப்பாடலில், உலகத்திற்குக் காரணப்பொருளாகிப் பிரபஞ்சமாய் நிற்கும் பரப்பிரம்மமாக, வேதமுதற் பொருளாக, சக்கரப் படையை ஏந்திய மாயோன் விளங்கி நிற்பதாக பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார். ஆகையால், பூமியை அவன் பாதமாகவும், சிறந்த நாதத்தை உடைய வெண்சங்குகளைக் கொண்ட கடலினை அவன் ஆடையாகவும், ஆகாயத்தை உடலாகவும், நான்கு திசைகளையும் நான்கு கரங்களாகவும், கதிரவனையும் திங்களையும் அவன் கண்களாகவும் உருவகப்படுத்துகிறார் பெருந்தேவனார்.]

பரிபாடலைக் காண்போம்!

முதல்முறை, இடைமுறை, கடைமுறை தொழிலில் பிறவாப் பிறப்பிலை பிறப்பித்தோர் இலையே" [பரிபாடல் 3 - 71,72]

[ திருமால் எடுக்கும் பலவகைப்பட்ட அவதாரங்கள் அனைத்தும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைச் செய்வதற்கே என்றும், அவன் தானே தன்விருப்பத்தால் பிறக்கிறானேயொழிய அவனைப் பிறப்பித்தவர்கள் எவரும் இலர் என்றும் முழங்கிற்று.]

"நின் ஏவலுள் பணிந்தமை கூறும் நா வல் அந்தணர் அருமறைப் பொருளே" [பரிபாடல் 1-12,13]

[நாவன்மையுடைய அந்தணர் ஓதும் அருமறைப்பொருள் உலகனைத்தும் உனக்கு வசப்பட்டிருப்பதைக் கூறும்]

"சாயல் நினது வான் நிறை என்னும் நாவல் அந்தணர் அருமறைப் பொருளே!" [பரிபாடல் 2-56,57]

[நினது நிறமும் அருளும் நீர் நிறைந்த மேகத்தையொக்கும் என்று நாவன்மையுடைய அந்தணர் ஓதும் அருமறைப்பொருள் கூறும்].

"மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய் மொழி உரைதர" [பரிபாடல்3-10,11]

[மாயப்பிரானே! உலகம் முழுவதும் உன்னிடமிருந்தே உண்டாயிற்று என்பதை அழியாத வேதம் ஓதுவதைக்கொண்டு நாம் சொன்னோம்]

"மறுபிறப்பு அறுக்கும் மாசில் சேவடி
மணிதிகழ் உருபின் மாஅயோயே" [பரிபாடல் 3 - 2,3]

[மறுபிறப்பை அறுத்துவிடும் குற்றமற்ற திருவடிகளையுடைய நீலமணியைப்போன்ற திருமேனியைக்கொண்ட மாயோனே] 

"மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் மாயோய்! நின் வயின் பரந்தலைய உரைத்தேம். மாயா வாய்மொழி உரை தர" [பரிபாடல் 3 - 9,10,11] 

[மாயோனே! எல்லா உலகங்களும், உலகினில் உள்ள ஜீவர்கள் அனைவரும் உன்னிடமிருந்தே உண்டானவர்கள் என்பதை அழியாத வேதம் சொல்ல நாங்கள் உரைத்தோம்.]

"தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீயென மொழியு மால் அந்தணர் அருமறை" [பரிபாடல்3-13,14]

[தாமரைப் பூவில் பிறந்த பிரமனும் அவனது தந்தையும் திருமாலாகிய நீயே என்று அந்தணர் ஓதும் அருமறை முழங்குகின்றது.]

"பாப்பு பகையைக் கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை ஏவலின் முதுமொழி கூறும்"
                    [பரிபாடல் 13-38,39,40]

[பாம்புக்கு பகையான கருடனைக் கொடியாக் கொண்ட அழியாத செல்வமுடைய திருமாலை எவராலும் இயற்றப்படாத முதுமொழியான வேதம் பரம்பொருளாகக் கூறும்.]

"விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் (பரி..40)
அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; (பரி..45)
ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்
மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், (பரி..50)
நிலனும், நீடிய இமயமும், நீ."

[பெருமை பொருந்திய  அந்தணர்களால் காக்கப்படும் அறம் நீ.

அன்பர்களுக்கு அன்பும் நீயாவாய்.

நல்ல நெறியில் நில்லாதவர்களைத் திருத்தி ஆட்கொள்ளும் மறக்கருணையும்  நீ யாவாய்,பகைவர்களுக்குச் செய்யும் துன்பமும் நீ.வானில் திகழும் சந்திர சூரியர்களும் நீயேயாவாய்.ஐந்து திருமுடிகளை யுடைய  ஈசனும், அவன் புரியும் ஸம்ஹாரமும் நீ.வேதமும், ப்ரம்மனும் அவன் செய்யும் படைத்தல் தொழிலும் நீ.ஆகாயமும், பூமியும், நெடிதுயர்ந்த இமய மலையும் நீயே.]

"அதனால்,
‘இன்னோர் அனையை; இனையையால்‘ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய (பரி..55)
மன்னுயிர் முதல்வனை ஆதலின்,
நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!"
 
[இவ்வாறு பல பொருள்களாக நீயே இருக்கிறாய். ஆதலினாலே, நீ இப்படி இருக்கிறாய், இன்னாரை ஒத்திருக்கிறாய்  என்று உவமித்துச் சொல்லத் தகுதியுள்ளவர்கள் யாரும் இல்லை.பொன்னால் ஆன  சக்கரப்படையை  வலக்கையில் ஏந்திய நீ எல்லா உயிர்களுக்கும் முதல்வனாக இருக்கிறாய். பெரும் புகழ் படைத்த நீயே  உனக்கு நிகராகும்.]
 
"இரு கை மாஅல்! முக் கை முனிவ! நாற் கை அண்ணல்! ஐங் கைம் மைந்த! அறு கை நெடுவேள்! எழு கையான! எண் கை ஏந்தல்! ஒன்பதிற்றுத் தடக்கை மன் பேராள! பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! 
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள! பதினாயிரம் கை முதுமொழி முதல்வ! நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்! அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல் இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை"(பரிபாடல் 3)
 
"ஒருசார் -அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி விறற்புகழ் நிற்ப விளங்கிய கேள்வித் திறத்தில் திரிவில்லா அந்தணர் ஈண்டி அறத்தில் திரியா பதி" (பரிபாடல்திரட்டு முதல் பாடல் 18,21)
[திருமால் திருப்பதியான அந்த இருந்தையூரில் ஒருபுறம்-அறம், வேதமோதுதல், தவம்புரிதல் ஆகியவற்றில் நிறைவுபெற்று, மிக்க புகழோடு, விளங்கிய கேள்வித்திறமுடைய குற்றமில்லாத அந்தணர் ஒன்றுசேர்ந்து வேதநெறியில் வழுவாது வாழுமிடம் உள்ளது.]
 
இதுபோல் எல்லாம் வல்ல சர்வசக்தியுடையதாக வேறொரு தெய்வத்தை பாடியிருக்கிறார்களா?
மேலும்.; 
"மா அயோயே! மாஅயோயே.! மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி மணிதிகழ் உருபின் மாஅயோயே!" என்றும் உயிர்களின் மறுபிறப்பை அறுக்கும் குற்றமற்ற திருவடிகளையுடைய அப்ராக்குதத் திருமேனியை உடையவன் திருமாலே என்றும் சங்ககாலச் சான்றோர்களான கடுவன்இளவெயினனார், கீரந்தையார்,நல்லெழுநியார், இளம்பெருவழுதியார் முதலான பெரியவர்கள் பாடியிருக்கிறார்கள்.
, "நாறு இணர்த்துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்" [பரிபாடல் 15 - 15,16] [மணம்மிக்க துழாய் மாலையை அணிந்த திருமால் அளித்தாலல்லது எவராலும் வீட்டுலகத்திற்கு ஏறமுடியாது] என்றும் திருமாலே மோட்சமளிக்கவல்லவன் என முழங்கப்பெற்றது. இவற்றிலிருந்தும், சங்ககாலத் தமிழர் சமயம் வைணவமே சங்ககாலத்தில் அனைவரும் விஷ்ணுவையே பரம்பொருளாகக்கொண்ட வைஷ்ணவர்களாகவே விளங்கினர் என்றும், சிவன், சக்தி, முருகன் முதலான மற்ற எந்த தெய்வத்தையும் எவருமே பரம்பொருளாகக் கொள்ளவில்லையென்றும் கையிலங்கு நெல்லிக்கனியாகவும், வெள்ளிடை மலையாகவும் விளங்குகிறது. வேதத்தின் பரம்பொருளாகச் சொல்லப்பட்ட திருமாலை வேதத்தை ஓதும் அந்தணர்களே.! இராண்டாயிரம் வருடத்துக்கு மேலாக ஆலயங்களில் வேதத்தைக்கொண்டு வழிபாடு செய்து வந்தனர் என்று விளங்குகிறது. 
 
மேலும், சங்ககாலத்தில் வைணவம் நிலைத்து நின்று என்பதற்கு தொல்காப்பியத்தில் சான்று.;
 
"நூலே கரகம் முக்கோல் மனையே
ஆயுங்காலை அந்தணர்க்குரிய
"
[தொல்காப்பியம் பொருளதிகாரம் 9.71]
 
என்று சொல்லியிருப்பதிலிருந்து பூணூலையும், முக்கோலாகிற திரிதண்டத்தையும் தரித்த பெரியவர்களே அந்தக்காலத்தில் சந்நியாசிகளாகக் கருதப்பட்டனர் என விளங்குகிறது. பூணூலும், முக்கோலுமில்லாத சைவசந்நியாசிகளும், அத்வைத சந்நியாசிகளும் அக்காலத்தில் தோன்றவில்லையென்றோ, சான்றோர்களால் சந்நியாசிகளாகக் கருதப்படவில்லையென்றோ விளங்குகிறது. மற்ற சங்க இலக்கியங்களிலும்'முக்கோற்பகவர்' என்று இவர்களை பாகவத சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களாக எடுக்கையால் இவர்கள் பாஞ்சராத்ரத்தைப் பின்பற்றுபவர்கள் எனத்தேறுகிறது. இவ்வண்ணமாக, சங்ககாலத்தில் விஷ்ணுவைப் பரம்பொருளாகக் கொண்ட வைஷ்ணவ மதம் ஒன்றே வைதிகமதமாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. 
(தொடரும்..)


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பகவான் திருமால் பற்றிய சிலவற்றை காண்போம்;

"சாயல் நினது வான் நிறை என்னும் நாவல் அந்தணர் அருமறைப் பொருளே!"
[பரிபாடல் 2-56,57]
"நினது நிறமும் அருளும் நீர் நிறைந்த மேகத்தை மேகத்தையொக்கும் என்று நாவன்மையுடைய அந்தணர்  ஓதும் அருமறைப்பொருள் கூறும்"

"மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய் மொழி உரைதர"
[பரிபாடல் 3-10,11]
"மாயப்பிரானே! உலகம் முழுவதும் உன்னிடமிருந்தே  உண்டாயிற்று என்பதை அழியாத வேதம் ஓதவதைக்கொண்டு நாம் சொன்னோம்"

"தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீயென மொழியுமால் அந்தணர் அருமறை"
[பரிபாடல் 3-13,14]
"தாமரைப் பூவில் பிறந்த பிரம்மனும் அவனது தந்தையும் திருமாலாகிய நீயே என்று அந்தணர் ஓதும் அருமறை முழங்குகிறது"

"பாப்புப் பகையைக் கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை ஏவலின் முதுமொழி கூறும்"
[பரிபாடல் 13-38,39,40]
"பாம்புக்குப் பகையான கருடனைக் கொடியாகக் கொண்ட அழியாத செல்வமுடைய திருமாலை எவராலும் இயற்றப்படாத முதுமொழியான வேதம்
பரம்பொருளாக் கூறும்"

"புவ்வத்தாமரை புரையும் கண்ணன்
வௌவல் கார்இருள் மயங்குமணி மேனியன்
எவ்வயின் உலகத்தும் தோன்றி அவ்வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்"
[பரிபாடல் 15-49,52]

'கண்ணன் இந்த உலகின் துன்பத்தை போக்க இந்த பூமியில் அவதாரமாக வந்தருளும் முழுமுதல் கடவுளாம்'

சிலப்பதிகாரத்தில், மதுரைப் புறஞ்சேரியில் உள்ள ஆயர்கள், ஆய்ச்சிகள் அனைவரும் குரவையிட்டு கண்ணனை ஆராதிக்கிறார்கள்....

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் 1
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே;
பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் 2
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே;
மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் 3
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே;
[- சிலப்பதிகாரம் 17. ஆய்ச்சியர் குரவை]

ஆதிசேடன் என்னும் பாம்பினை உடையவன்; திருமகளை மார்பில் உடையவன்; ஒரு குழையை உடைய பலதேவனாகவும் இருப்பவன்; அந்தணரின் அருமறைப் பொருளானவன் எனப் போற்றுகிறது பரிபாடல் (பரி. 1:1-14). மற்றும் ஐம்பெரும் பூதங்களாகவும் இருப்பவன் (பரி.13:15-25) என அவன் புகழைச் சொல்லி வழிபடுகின்றனர் மக்கள்.

எல்லாப் பொருளும், பொருளின் தன்மையும் திருமால் என்பதை,

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ ; சொல்லினுள் வாய்மை நீ; 
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ; 
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ

(பரி. 3:63-68)

எனப் போற்றுகின்றார் புலவர் கடுவன் இளவெயினனார்.

(தெறல் = வெம்மை, நாற்றம் = மணம், மணி = நீலமணி, மறம் = வீரம்,வாய்மை = உண்மை, மைந்து = வலிமை, பூதம் = நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர் ஆகிய ஐம்பூதங்கள், வெஞ்சுடர் = சூரியன், திங்கள் = நிலவு, அளி - குளிர்ச்சி)

மேலும் இறைவனின் பெருமையை இயற்கைப் பொருளைக் கொண்டு உணர்த்துகின்றார்.

நின், வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;
நின், தண்மையும் சாயலும் திங்கள் உள; 
நின், சுரத்தலும் வண்மையும் மாரி உள
நின், புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள; 
நின், நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின், தோற்றமும் அகலமும் நீரின் உள; 
நின், உருவமும் ஒளியும் ஆகாயத்து உள;
நின், வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள:

(பரி. 4:25-32)

(வெம்மை = பகைவரை அழிக்கும் ஆற்றல், தண்மை = அளித்தல், அருளல்,சுரத்தல் = விருப்பம் நிகழ்தல், வண்மை = கொடை, புரத்தல் = தாங்குதல்,நாற்றம் = மணம், வண்மை = ஒளி, பூவை = காயாமலர், ஒலி = சொல்,வருதல் = அவதரித்தல், ஒடுக்கம் = மறைதல், மருத்து = காற்று)

இப்படி உருவப் பொருளிலும் அருவப் பொருளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனாகத் திருமாலைக் காட்டுகின்றது பரிபாடல்.ஐம்பெரும்பூதங்களாகவும், கோள்களாகவும் இறைவனைக் கண்ட புலவர்கள் சொல்லினுள் வாய்மை நீ எனச் சுட்டி எண்ணம், பேச்சு, செயல் ஆகிய மூன்றிலும் நெருடல் இல்லாத தன்மையைக் காட்டுகின்றனர்.

1.2.2 அவதாரங்கள்

திருமால் அவதாரங்கள் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, இராம, பலராம, கிருஷ்ண, கல்கி எனப் பத்தாகும்.

• கூர்ம அவதாரம்

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தனர், இந்திரன் இழந்த செல்வத்தை எடுப்பதற்காக. அப்பொழுது மத்தாக இருந்த மேருமலை கடலில் அழுந்தத் தொடங்கியது.

தேவர்களுக்கு உதவ எண்ணிய திருமால் ஆமையாகஉருக்கொண்டு மேருமலையைத் தாங்கி நின்றார் என்பது புராணம். இச்செய்தியைப் பரிபாடல் திரட்டின் முதல் பாடல் பின்வருமாறு கூறுகின்றது.

3vmB8JVXU5TqIChHXLZ7eLFL0qvpydeovM_clGA2

திகழ் ஒளி முந்நீர் கடைந்தக்கால், வெற்புத்
திகழ்பு எழ வாங்கித் தம்சீர்ச் சிரத்து ஏற்றி
மகர மறிகடல் வைத்து நிறுத்துப்
புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
அமுது கடைய இருவயின் நாண்ஆகி
மிகாஅ இருவடம் ஆழியான் வாங்க
உகாஅ வலியின் ஒருதோழம் காலம்
அறாஅது அணிந்தாரும் தாம்

(64-71)

(முந்நீர் = திருப்பாற்கடல், வெற்பு = மந்தரமலை, சிரத்து ஏற்றி = உச்சியில்ஏற்றி (ஆமை முதுகில் ஏற்றி), இருதிறத்தோர் = தேவர், அசுரர், அமுது = அமிழ்தம், நாணாகி = கயிறாகி, ஆழியான் = திருமால், அணிந்தார் = மத்தின் கயிறானார்)

• வராக அவதாரம்

இரணியனுடன் பிறந்த அசுரன் நிலத்தைச் சுருட்டிஎடுத்துக்கொண்டு கடலுக்குள் மறைந்து கொண்டான்.இச்செய்தியைக் காப்புக் கடவுள் திருமாலிடம் கூறித் தமக்குஉதவுமாறு வேண்டினர் தேவர்கள். திருமால் வராக வடிவில் கடலுக்குள் சென்று தன் கொம்பின் உதவியால் நிலமகளை அசுரனிடம் இருந்து மீட்டான் என்பது கதை.

dig4DcoPso4kjLzfg1iPiCrjbt9U1cComRYB-1tB

கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;

(பரி. 2:16-18)

(கேழல் = பன்றி, ஒருவினை = திருவிளையாடல்)

(கடலில் மூழ்கிய நிலத்தைப் பன்றி உருவில் தன் கொம்பால் மேலே கொண்டு வந்தவன்)

• நரசிம்ம அவதாரம்

இரணியன், பிரகலாதன் ஆகியோர் பற்றிய கதைநரசிம்ம அவதாரத்தில் இடம்பெறும். இரணியன் தன்னைவிலங்கு, மனிதர், தேவர் யாரும் கொல்லக் கூடாது; பகல், இரவு, வீட்டுக்குள், வெளியில் யாரும் எந்த நேரத்திலும்தன்னைக் கொல்லக்கூடாது. ஆயுதங்களாலும், தனக்கு அழிவுவரக்கூடாது எனப் படைப்புக் கடவுள் பிரம்மாவிடம் வரம் பெற்றிருந்தான். எனவே எல்லோரும் தன்னை வணங்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினான்.

ktfuKKNEcwk4IwgSM7nwkmEREiu7EdMKkwj-Q0Y8

தந்தை இரணியனை, திருமால் அடியவன் ஆன மகன் பிரகலாதன்வணங்க மறுத்தான். இருவருக்கும் நடந்த வாக்குவாதம் முற்ற இறைவனைக் காட்டு எனத் தந்தை கேட்க, மகன் ‘தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்’ என விடை சொன்னான். இறைவன் நரசிம்ம வடிவங்கொண்டு தூணைப்பிளந்து கொண்டு வந்து இரணியனை இழுத்துத் தன் மடியில் கிடத்தித் தன் நகத்தால் கிழித்துக் கொன்றான் என்பது நரசிம்ம அவதாரமாகும்.

இரணியன்-பிரகலாதன் கதையைப் பாடியுள்ளார் கடுவன் இளவெயினனார் (பரி. 4:10-21).

• வாமன அவதாரம்

குள்ள வடிவு கொண்ட அந்தணன் தோற்றத்தில் மகாபலிச் சக்கரவர்த்தியின் செருக்கை அடக்கியது வாமனஅவதாரம் ஆகும். அரசனிடம் மூன்று அடி மண் கேட்டு, பின் ஓரடியால் மண்ணையும், ஓரடியால் விண்ணையும் அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் இல்லாமல் போக, மூன்றாவது அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து அவனைப் பாதாளத்திற்குள் தள்ளியது வாமன அவதாரக் கதை.

phaBxIUhRWJmJYtnH8WcVJd5L1oycBO1CN6lzfWF

பெரும்பாணாற்றுப்படை (29-31) என்னும் ஆற்றுப்படை நூல் தொண்டைமான் இளந்திரையன் முன்னோருடன் திருமாலை ஒப்பிட்டுக் காட்டுகின்றது. அந்த இடத்தில் வாமன அவதாரத்தை எடுத்துரைக்கின்றது.கலித்தொகையில் நல்லந்துவனார் பாடிய நெய்தற்கலியிலும் இக்குறிப்பு உள்ளது.

• பரசுராமன் அவதாரம்

திருமாலின் கூறாகிய பரசுராமன், முன்பு விடாமல் முயன்று முடித்த வேள்விக்களத்தில், கயிற்றில் சுற்றிக் கட்டப்பட்ட அழகிய தூண்போல என உவமை கூறுவதின் வழி,

H7bnZ3QXmdjL4w6SVce7CkFw6Qtn32BZrgL0LsIO

மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி 
கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்
அருங் கடி நெடுந்தூண் போல

(அகநானூறு : 220-5-9)

(மன் மருங்கு = அரசர் குலம், வனப்பு = அழகு, மழுவாள் நெடியோன் = மழுவாகிய வாள்படை உடைய பரசுராமன்)

மதுரை இளநாகனார் பரசுராம அவதாரத்தை சுட்டுகின்றார் (காவலைஉடைய தூண் போலத் தலைவியின் ஆகம் காணற்கரியது). ஆக, அகப்பாடலிலும் உவமை கூறும்போது திருமால் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளதை நெய்தல் திணையில் அமைந்த அகநானூற்றுப் பாடல் வழி அறிகின்றோம்.

• இராமன் அவதாரம்

இராமன் அரக்கரை வெல்ல, போர் பற்றிய அரிய மறை(இரகசியச்) செய்தியை வானர வீரர்களோடு ஆராய்ந்தபொழுது பறவைகள் ஒலி எழுப்புகின்றன. அவ்வொலி பேச்சுக்கு இடையூறாக இருக்கின்றது. எனவே இராமன் பறவைகளின் ஒலியை, கேட்காமல் செய்தான். பல விழுதுகளை உடைய ஆலமரத்தில் இருந்த பறவைகள் ஒலி எழுப்பவில்லை. எனவே, ஆலமரம் ஒலியின்றி அமைதியாக இருந்தது என்பதை,

dcT9zEVoXmxD9Ev02b3h817VH3YTM5wKqlvOq9VI

 

வென்வேற் கவுரியர் தொல் முதுகோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை 
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த 
பல் வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ்வழுங்கல் ஊரே

(அகம்,70:13-17)

(வென்வேல் = வெற்றிவேல், கவுரியர் = பாண்டியர், முதுகோடி = கோடிக்கரை, இரும் = பெரிய, பௌவம் = கடல், இரங்கும் = ஒலிக்கும், துறை= கடற்கரை)

எனச் சுட்டுகிறார் மதுரை தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார். தலைவன் வரைவு (திருமணம்) உடன்பட்டதும் வதுவை (திருமணம்) கூடும். எனவே அலர் (பழிச்சொல்) பேசுகின்ற இந்த ஊரும் அது போல அலர் அவிந்து கிடக்கும். இப்படிப் பொருத்தமான உவமையாகப் புராணக் குறிப்புகளை அகப்பாடல் பாடிய புலவர்கள் எடுத்தாண்டுள்ளனர். இப்பாடலும் முற்காட்டிய பரசுராம அவதாரத்தைச் சுட்டிய பாடலைப் போன்று நெய்தல் திணையில் அமைந்த அகநானூற்றுப் பாடல்.

• கிருஷ்ண அவதாரம்

நீராடும் போது கண்ணனால் ஆடை கவரப்பட்ட ஆயமகளிர் அணிந்துகொள்ள, குருந்த மரக்கிளை நீருக்குள்ளே வளைந்து செல்லும்படி தம் திருவடியால் மிதித்த திருமால் போல என்னும் உவமை,

வண் புனல் தொழுநை வார் மணல் அகன்துறை
அண்டர் மகளிர் தண் கழை உடீஇயர் 
மரம் செல மிதித்த மாஅல் போல

(அகநானூறு : 59 : 3-6)

(தொழுநை = யமுனை, மரம் செல = குருந்த மரம் வளைந்திட, அண்டர் மகளிர் = ஆயமகளிர், ஆயர் = ஆயர் குலத்தை சேர்ந்தவர்; ஆடு, மாடு மேய்க்கும் தொழிலைச் செய்பவர்)

நீர்வளம் பொருந்திய யமுனை ஆற்றில் மணலை உடைய அகன்ற துறையில் நீராடிய ஆயர் மகளிர் குளிர்ந்த தழையை உடுத்திக் கொள்ளக்குருந்த மரம் வளையும்படி மிதித்துத் தந்தான் கண்ணன் என்று கிருஷ்ண அவதாரச் செயலைக் குறிப்பிடுகின்றது.

கம்சன் அனுப்பிய குதிரை வடிவமாக வந்த அசுரனைக் கண்ணன்கொன்றான் என்பது முல்லைக் கலியில் உள்ளது. ஏறு தழுவிய ஆயர்களைத் தோழி தலைவிக்குத் தனித்தனியே காட்டுகின்றாள். ‘காயாம்பூங் கண்ணியைச் சூடிய பொதுவன் ஏறு தழுவிய பிறகு நிற்கும் காட்சி,

மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை 
வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்கொல்
மாயோன் என்று; உட்கிற்று என்நெஞ்சு

(103: 53-55)

(மேவார் = பகைவர், விடுத்தந்த = அனுப்பிய, வாய்பகுத்து = வாய் கிழித்து,புடைத்த = அடித்த, ஞான்று = வேளை, உட்கிற்று = நினைத்து)

என்று கூறுவது அரக்கனை அழித்த கண்ணன் போன்று இருந்தது என உவமையாக இடம் பெற்றுள்ளது.

மறம்தலைக் கொண்ட நூற்றுவர் தலைவனைக் 
குறங்கு அறுத்திடுவான் போல்

(52:2-3)

(நூற்றுவர் தலைவன் = துரியோதனன், குறங்கு = தொடை) 

மல்லரை மறம் சாய்த்த மால்போல்

(52:5)

எனத் தலைவனுக்கு உவமைகள் வந்து உள்ளன. இதன் வழி நூற்றுவர்களுக்குத் தலைவன் ஆன துரியோதனனை வீமன் அழித்தான் என்றும், மல்லர்களைக் கண்ணன் அழித்தான் என்றும் அறிகின்றோம்.

• பலராமன்

பலராமன் பற்றிய குறிப்பு சங்க நூல்களில் உள்ளது. நற்றிணையில்,

மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி

(நற்றிணை - 32)

kC7oFH3ZCZ0QIwEL7uxLNE-Oq98PqINtnpifs6BX

(மாயோன் = கண்ணன், அன்ன = போல / ஒத்த, மால்வரைக்கவான = மலைப்பக்கம், வாலியோன் = வெண்மை நிறமுடைய பலதேவன்)

எனத் திருமாலும் பலராமனும் அடுத்தடுத்து இடம் பெறுகின்றனர். பலராமன் நீலநிற ஆடையை அணிந்திருந்ததை நெய்தற்கலி (7) காட்டுகின்றது.

முல்லைக்கலி (5) காளைகளுக்கு உவமையாக கிருஷ்ண - பலதேவர் ஆகிய இருவரைக் கூறும்.

புறநானூறு சிவன்-முருகன் ஆகியோருக்கு இணையாக கிருஷ்ண - பலராமன் ஆகிய இருவரை,

கடல்வளர் புரிவளை புரையும் மேனி 
அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடியோனும் 
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண் உயர் புட்கொடி விறல் வெய்யோனும

(புறம். 56: 3-6)

(வளை = சங்கு, புட்கொடி = கருடக் கொடி, நாஞ்சில் = கலப்பை, மேனி = உடம்பு, விறல் = வெற்றி)

என மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரனார் பாடியுள்ளார். மேலும் அவர்களை வலிமை உடையவர்களாகவும் காட்டுகிறார்.

சோழன் திருமாவளவனும் பாண்டியன் பெருவழுதியும் சேர்ந்திருக்கக் கண்ட காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்,

பால்நிற உருவின் பனைக் கொடியோனும்
நீல்நிற உருவின் நேமியோனும் என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றா அங்கு

(புறம், 58:14-16)

என்று கிருஷ்ணன் பலதேவர்களுக்கு உவமிக்கின்றார்.

ஆக, சங்க இலக்கியங்கள்

கிருஷ்ணனும் பலராமனும் வழிபடுதெய்வமாக இருந்ததைக் குறிப்பிடுகின்றன.

பலராமனை வலிமைக்கு உதாரணமாகக் காட்டுகின்றனர் புலவர்கள்.

1.2.3 வழிபடு கடவுள்

பாரதம் பாடிய என்ற சிறப்பையும் பெயரோடு பெற்றிருக்கின்ற புலவர் பெருந்தேவனார்.

மா நிலம் சேவடி ஆக, தூ நீர் 
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன், என்ப 
தீது அற விளங்கிய திகிரியோன

என நற்றிணைக்குக் கடவுள் வாழ்த்துப்பாடி, திருமாலை முழுமுதற் கடவுளாகக் காட்டுகின்றார். திருமால், ஐம்பெரும் பூதம், மதியம், சூரியன், திசை, இப்படி எல்லாம் அவன், அவனே உலகத்து உயிர், உயிர்கள் அனுபவிக்கும் பொருள், வேதத்தின் பொருள் எனவே அவனை வணங்குவோம் என்பர்.

எனவே நிலத்தை அவன் திருவடியாகவும் கடலை அவன் ஆடையாகவும், திசையை அவன் கை ஆகவும், சந்திரன் சூரியன் ஆகியவற்றை அவன் இரு கண்களாகவும் கண்டு உருவகப்படுத்தி உள்ளார். இறைவனையும் இயற்கையையும் பிரித்தறிய முடியாது என்பது பொருள்.

வழிபடு கடவுள் என்றால் கோவிலும் இருக்கத்தானே செய்யும். எனவே வழிபாட்டையும் அதற்கான வழிமுறைகளையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

1.2.4 வழிபாடு

பதிற்றுப்பத்து நான்காம் பத்தில் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் பற்றிப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார் அந்நாட்டு மக்கள் படித்துறையில் நீராடி, துளசி மாலையை மார்பில் அணிந்துள்ள ஆழிப்படையை உடைய செல்வனாகிய திருமாலை வழிபட்டுச் சென்றனர்.

‘செல்வன் சேவடி பரவி’

(பதிற்றுப்பத்து 4:1:9)

(பரவி = வணங்கி)

எனப் பாடியுள்ளார். திருமாலை வழிபட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர் என்பதால் திருமாலுக்குரிய உருவ வழிபாடும் இடமும் (கோவில்) சங்க காலத்தில் இருந்தன என்பதையும் அறிகின்றோம்.

திருமாலிருஞ்சோலை (அழகர்கோயில்), இருந்தையூர் ஆகிய இடங்களைத் திருமால் இடமாகக் காட்டுகின்றன பரிபாடலும் பரிபாடல் திரட்டும். திருமுருகாற்றுப்படையும் அறுபடை வீடு பற்றிப் பேசும்போது திருமாலைக் குறிப்பிடுவதால் திருமாலுக்குரிய வழிபாட்டு இடம் உண்டென்பது பெறப்படுகின்றது.

• வழிபடுதல்

மக்கள் திருமாலை வழிபட்டதை,

நலம் புரீஇ அம்சீர் நாம வாய்மொழி
இது என உரைத்தலின் எம்உள் அமர்ந்து இசைத்து இறை
இருக்குன்றத்து அடிஉறை இயைக! எனப்
பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே

 (பரி. 15:63-66)

(நலம் புரீஇ = நன்மை செய்யும், நாம வாய்மொழி = வேதம், இருங்குன்றம் = திருமாலிருஞ்சோலை, பெரும் பெயர் இருவர் = நம்பி மூத்தபிரானும் வசுதேவனும்)

என்று பரிபாடல் காட்டுகின்றது. சுற்றத்தாரோடு சென்று

, . . . . . . . . மரபினோய் நின்அடி
தலை உற வணங்கினேம், பல்மாண் யாமும்
கலிஇல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்
‘கொடும்பாடு அறியற்க, எம் அறிவு:

(பரி. 2: 72-76)

(கடும்பு = சுற்றம், கலி இல் = துளக்கமற்ற (அசைவற்ற), ஏத்தி = உயர்த்தி,வாழ்த்தி = போற்றி, பரவுதும் = வணங்குகிறோம், கொடும்பாடு = கொடிய துன்பம்)

. . . . . . . .நின் அடி தொழுதனெம் 
பல்மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்
முன்னும் முன்னும் யாம்செய்தவப் பயத்தால்
இன்னும் இன்னும்எம் காமம் இதுவே.

(பரி. 13:61-64)

(பல்மாண் = பலமுறை, அடுக்க = அடுத்தடுத்து, காமம் = விருப்பம்)

எனத் தொடர்ந்து திருமால் திருவடியை வணங்கும் அருள் வேண்டும் எனப் பாடுகின்றார் நல்வழுதியார்.

 திருவடி

திருமாலுடைய திருவடி பிறவிப் பெருங்கடலைக் கடக்கத் துணை செய்வது: பிறப்பறுக்கும் திருவடி.

மா அயோயே மா அயோயே!
மறுபிறப்பு அறுக்கும் மாசுஇல் சேவடி
மணிதிகழ் உருபின் மாஅயோயே!

(பரி. 3:1-3)

(மறு பிறப்பு அறுக்கும் = பிறவித்துன்பம் ஒழிக்கும், மாசுஇல் = தூய்மையான, மணி திகழ் உருபின் = நீல மணி போன்ற நிறம் உடையவன்)

எனப் புகழ்ந்து,

முதல் முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இல்லை, பிறப்பித்தோர் இலையே

(பரி:3:71-72)

திருமால் உலகில் முதல், இடை, இறுதியில் படைப்பு, அளிப்பு (காத்தல்), அழிப்பு போன்றவை செய்தலால் அவன் பிறவாத பிறப்பு இல்லை எனச் சிறப்பிக்கின்றது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard