Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஐ' காரம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
ஐ' காரம்
Permalink  
 


'ஐ' காரம் தமிழிக்குப் புதிதல்ல ...


பாகம் 1 / 2

5000 ஆண்டு மேலாக .. சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு ' ஐ' சித்திர குறியீடாக , 'ஐ' ஓசை ஏற்று தமிழியில் பயணித்தே வந்துள்ளது .

'ஐ' தமிழி - தமிழுக்கும் , தமிழருக்கும் புதிதல்ல ; தமிழரோடு ஐக்கியமானது 'ஐ' .

ஆனானபட்ட 'ஐ' ...

தொன் தமிழியில் இல்லை என்றதன் மர்மம் என்ன ? ;

தொன் தமிழியில் 'ஐ' எழுத்துரு (உயிரெழுத்து) இல்லை என்பாரும் , பகுத்தறிவு எனும் பெயரில் 'ஐ' தமிழுக்கு தேவை இல்லை , 'அய்' என்று எழுதுதலே போதும் என்பாரும் இருந்தனர் ; உண்மையில் அது தமிழ் மேல் கொண்ட வாஞ்சையா ? ; மொழி அறிவியல் பூர்வ உணர்வா ? . (ஔ காரத்துக்கும் அதே நிலை)

கிபி 9 -ம் நூற்றாண்டில்தான் 'ஐ' உயிரெழுத்தும் , ஐ - கார எழுத்துகளும் தமிழுக்கு வந்தன என்பது உண்மையா ? ;

தமிழியின் , வட்டெழுத்து 'ஐ' எழுத்துரு காலமும் இருநிலைபடு நிலை ! ;

தலைப்புக்குள் புகுமுன் தமிழறிஞர் குழு வடித்துள்ள தமிழி எழுத்துரு வரலாறுக்குள் சற்றே நுழைந்து வருவோம் :--


~தமிழி எழுத்து - காலம் : கி.மு. 5 - ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3- ஆம் நூற்றாண்டு .

~தமிழ் வட்டெழுத்து - காலம்: கி.பி 3-ஆம் நூற்றாண்டு முதல் 10-ஆம் நூற்றாண்டு .

~தமிழ் எழுத்து - இன்றைய தமிழ் எழுத்து .

 

தமிழி சிகரத்திலா ? .. சிதைவிலா ? ;
தமிழியில் ஐ கார நிலையென்ன ? ;

தமிழி பட்டபாடு ... பெரும்பாடு தமிழர் நாம் அறியாதது ; இடர்பாடுகளுக்கு இடையே தமிழி கடந்த பாதை நீண்டது என்பதால் அதன் கதை நீண்டது .

பகுதி 1a / 2

பேராசிரியர் சு. இராசவேல்
2018

அ )
தமிழனே இந்தியர்களுக்கு எழுத்தறிவைத் தந்தவன். வட இந்தியச் சமணரும் இல்லை, பௌத்தரும் இல்லை. அவர்கள் நம்மிடம் பெற்று அவர்கள் மொழிக்கு ஏற்ப மேலும் குறியீடுகளை உருவாக்கினர். இது கி.மு. 400 -ல் நடந்தது.
https://groups.google.com/forum/…

ஆ)
தமிழ் எழுத்துகளின் தோற்றம் காலம் & வளர்ச்சி

இந்தக் கட்டுரை நீளமானது அல்ல ...
ஓர் உயிரின் ... உணர்வின் தொல்லியல் ஆதங்க வெளிபாடு என படித்து முடித்தபோது மனம் சொன்னது ; சற்றே நெகிழ்ந்தது .

சு. இராசவேல் அவர்கள் மக்களோடு மக்களாக தமிழர் நம்மோடு பேசுவது.....

ஏறக்குறைய 2500 ஆண்டு கால எழுத்தியல் வரலாற்றைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் முதன் முதலில் 1882 - ல் இராபர்ட் சீவல் கண்டு பிடித்த மாங்குளம் கல்வெட்டே தமிழ்நாட்டின் தொன்மையான தமிழ் - பிராமி கல்வெட்டாகும்.
(இனி இதனை தமிழிக் கல்வெட்டுகள் என்றே குறிப்பிடலாம்)

அதன் பிறகு தொடர்ச்சியாக மதுரைப் பகுதியிலும் திருநெல்வேலிப் பகுதியிலும் புதிய தமிழிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு ஆய்வாளர்களால் பலவாறாகப் படிக்கப்பட்டன.

மாங்குளம் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு 42 ஆண்டு பின் கல்வெட்டு அறிஞர் கே.வி.சுப்ரமணிய ஐயர், இக்கல்வெட்டு எழுத்துகள் தமிழ்மொழியுடன் தொடர்புடையவை என்றும் இவ்வெழுத்துகள் அசோகன் பிராமியிலிருந்து முற்றிலும் தமிழுக்காக **உருவாக்கப்பட்ட எழுத்துகள் ; இவ்வெழுத்துகளில் அசோக பிராமிநின்று மாறுபட்ட தமிழுக்கே உரிய ள், ழ், ற், ன் மெய்யெழுத்துகள் உள்ளன என கண்டறிந்தார். இவ்வெழுத்துகள் இந்திய எழுத்துகளில் வேறு எம்மொழிகளிலும் காணப்படவில்லை என்பது இங்கு நோக்கத் தக்கது.

சுப்பிரமணிய ஐயருக்குப் பிறகும் தமிழ்நாட்டில் கிடைக்கின்ற தொன்மையான எழுத்துகளைப் படிப்பதில் பல்வேறு **முரண்பட்ட கருத்துகள் ஆய்வாளர்களிடம் இருந்து வந்தது ; சில அறிஞர்கள் இவ்வெழுத்துகள் தமிழ் எழுத்துகள் என்றும் இவை தமிழ்மொழியில் உள்ளன என்றும் ஆய்வு** நுட்பத்துடன் கூறினர். அவர்களுள் குறிப்பிடத் தக்கோர் இராசமாணிக்கனார், மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார் போன்றோர்.

இவர்களைத் தொடர்ந்து இவ்வாய்வின் ஐராவதம் மகாதேவன்,1966 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அதுவரை கிடைத்த அனைத்து தமிழிக் கல்வெட்டுகளையும் **திறம்பட வாசித்து அவை தமிழ்மொழியில் உள்ள தொன்மை கல்வெட்டுகள் என உலகிற்கு உணர்த்தினார்.

அடுத்து, தமிழ்நாடு அரசின் மேனாள் இயக்குனர்களான இரா. நாகசாமியும் நடன காசிநாதன் அவர்களும் தமிழிக் கல்வெட்டு ஆய்வுகளில் ஈடுபட்டனர்.

கடந்த 2003 -ல் இவ்வாய்வில் மீண்டும் மீள் ஆய்வு செய்து ஒரு முழுமையான ஆய்வு நூலை வெளியிட்ட ஐராவதம் மகாதேவன் கீழ்கண்ட **முடிவுகளைத் தெரிவித்தார் :

1.தமிழ்நாட்டில் கிடைக்கிற தொன்மையான எழுத்து வடிவம் தமிழ் - பிராமி என்றும் அவற்றின் மொழி தமிழ் .

2.இவற்றின் காலம் கி. மு. 2- ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது .

3.வட இந்தியாவில் ஆட்சி புரிந்த மௌரியப் பேரரசன் அசோகன் காலத்தில் முதன் முதலில் பயன்பாட்டில் இருந்த அசோக-பிராமியிலிருந்து அவனுக்குப் பின் வந்த மௌரிய மன்னர்கள் பயன்படுத்திய எழுத்து வகையான மௌரிய பிராமியிலிருந்து தமிழ்-பிராமி (தமிழி) தோற்றுவிக்கப்பட்டது .

**அவரது கல்வெட்டு வாசிப்புகள் ஏற்கக் கூடிய நிலையில் உள்ளன எனினும் அவர் தமிழ்-பிராமி எழுத்துகளுக்கு கொடுத்துள்ள தொடக்க கால எல்லை , அதன் தோற்றம் பற்றிய கருத்து ஆகிய வற்றைப் பல்வேறு காரணங்களால் மீளாய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

அசோகன்-பிராமி

வட இந்தியாவின் எழுத்து வரிவடிவங்களுள் முதன்மையானதாக விளங்கும் எழுத்து வரிவடிவம் பிராமி எனப்படும்.

அசோகன் (கி. மு. 273-236) பௌத்த மதக் கொள்கை பரப்புதலுக்குத் தன்னாட்சிக்குட்பட்ட பகுதியில் கல்வெட்டுகள் வெட்டி வைத்தான். வெட்டப்பட்ட கல்வெட்டுகள் இந்தியாவில் மேற்குறித்த பிராமி எழுத்தில் வெட்டப்பட்டதால் அசோக - பிராமி என அறிஞர்கள் குறிப்பர்.

இவ்வெழுத்தைத் தவிர அசோக மாமன்னன் ஆட்சிக்கு உட்பட்ட வடமேற்கு இந்தியப் பகுதிகளில் கரோச்ட்டி என்ற எழுத்து வகையும் காந்தகார் பகுதியில் கிரேக்க , அராமிக் எழுத்து வகையிலும் கல்வெட்டுகளை அசோகன் வெளியிட்டான். அசோகரின் காலத்தில் வழக்கிலிருந்த மொழி பிராகிருதம் மற்றும் அராமிக், கிரேக்க மொழிகளாகும்.

அசோக-பிராமிக்கு முற்பட்ட பிராமி அசோகனுக்கு முன் வட இந்தியாவில் பெருமளவில் பிராமி எழுத்துகள் காணப்படவில்லை. இருப்பினும் அசோக பிராமிக்கு முன் வட இந்தியாவில் தொடக்க நிலை பிராமி எழுத்துப் பொறிப்புக்கள் மிகக் குறைந்த அளவில் (5 பொறிப்புகள்) கிடைத்துள்ளன . அப்பொறிப்புகளின் அமைப்பில் இருந்து அசோகனுக்கு முற்பட்டவை என ஆய்வர் கருதுவர்.

அவை

(1) பட்டிப்பொருலு பேழைக் கல்வெட்டு,
(2) ஈரான் நாணயப் பொறிப்பு,
(3) பிப்ரவா பேழைக் கல்வெட்டு,
(4) மகச்சிதான் கல்வெட்டு,
(5) சௌகார செப்புத் தகடுப் பொறிப்பு,
(6) கோசுண்டி எழுத்துப் பொறிப்பு

இவற்றுள் முதலாவதாக...

பட்டிப்பொருலு ஆந்திராவில் உள்ள பௌத்த தொடர்புடைய பகுதி. இப்பேழையில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறிப்பு மேற்குறித்த 4 ஊர்களில் கிடைத்ததை விட மாறுபட்டது. எனவே இதனை தென்னக பிராமி வகை என்பர். இந்த அனைத்து எழுத்துப் பொறிப்பு காலம் கிமு.4 -ஆம் நூற்றாண்டு என வரையறுப்பர்.

மகசுதான், சௌகாரா பொறிப்புகள் சந்திரகுப்த மௌரியர் காலத்தில் வெளியிடப்பட்டவை. இரண்டும் வட இந்தியாவில் அக்காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் பற்றிக் குறிப்பிட்டு அரசு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட அரச ஆணைகளாகும். வட இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்தைச் சமண நூல்களும் குறிக்கும். பிற பொறிப்புகள் சமயத் தொடர்புடையவை.

இக்கல்வெட்டுகளில் அசோக-பிராமியில் காணப்படுவதுபோல் கூட்டெழுத்துகள் காணப்படவில்லை. எனவே இவை அசோக பிராமிக்கும் முற்பட்டவை என கருதப்படுகின்றன. இவற்றைத் தவிர இக்கால கட்டத்தில் மக்கள் வழக்கில் எழுத்து முறை இருந்ததற்கான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. எனவே அசோகனுக்கு முன்பு , வட இந்தியாவில் எழுத்தறிவு அரிதாகவே இருந்த நிலை அறிய முடிகிறது.

இப்பொறிப்புகளை அடுத்து வட இந்தியாவில் கிடைக்கின்ற எழுத்துச் சான்றுகள் யாவும் அசோகன் வெளியிட்ட கல்வெட்டுகளே ஆகும். இக்கல்வெட்டுகள் நன்கு வளர்ச்சியடைந்தவை. அசோக-பிராமியில் பயன்படுத்தப்பட்ட மொழி பிராகிருதம் . அதிலும் குறிப்பாக அதனை மகதப் பகுதியில் வழக்கிலிருந்த மொழி வகை என்பர்.

அசோகன் வெளியிட்ட கல்வெட்டுகள் பெரும்பாலும் தன் அலுவலர்களுக்கு அனுப்பப்படும் செய்தியாகவே நேரிடையாக மன்னரால் சொல்லப்பட்டவை போல் எழுதப்பட்டன. இவற்றைப் படித்து மக்களுக்குச் சொல்லுங்கள் என கூறுவதாகவே இக்கல்வெட்டுகள் அமைந்துள்ளன. எனவே அசோகரின் காலத்தில் வட இந்தியாவில் எழுத்தறிவு மேல் மட்ட அளவிலேயே இருந்துள்ளமை அறிய முடிகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தமிழி (தமிழ்-பிராமி)

மேற்குறித்த பொதுவான செய்திகளின் அடிப்படையில் தமிழ் நாட்டில் கிடைக்கின்ற தமிழி எழுத்துகளின் காலத்தை எளிதாக அறிய முடியும். இவ்வெழுத்திலிருந்தே இலங்கை & வட இந்தியாவில் வழங்கி வந்த மொழிகளுக்கு ஏற்ப வர்க்கங்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இவ்வளர்ச்சி அடைந்த பிராமி எழுத்துகள் இலங்கை வழியாகவும் , ஆந்திரா & ஒரிசா வழியாகவும் வட இந்தியாவிற்கு சென்றன.

அவற்றிற்கான சான்றுகளை காண்பதற்கு முன் தமிழி மற்றும் அவற்றில் இருந்து பிறந்த அசோக-பிராமியின் வரிவடிவங்களை பார்ப்பது ஆய்விற்கு உகந்ததாக அமையும்.

அசோகன்-பிராமி

தொன்மைத் தமிழியின் உயிர் எழுத்துகளில் உள்ள உயிர் எழுத்துக் குறியீடுகளே (மொத்தம்- 8) அசோக - பிராமி கல்வெட்டுகளிலும் பயின்று வருகின்றன. இவற்றுடன் அசோக-பிராமியில் ‘ம’ டிவத்தின் பாதி எழுத்தை 'அனுஸ்வரமாக' உருவாக்கி உள்ளனர். அவை – அ ஆ இ ஈ உ ஊ எ ஒ அம் **(அனுஸ்வரம்).

தமிழியில் மெய்யெழுத்துகள் 18 .
அசோக பிராமியின் மெய் எழுத்துகள் 33 .

அவை , அசோகனின் காலத்தில் வழக்கிலிருந்த பிராகிருத / (**மகதைப் பிராகிருதம்) மொழிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டன. இம்மொழிக்கு ஏற்ப வர்க்க ஒலி உச்சரிப்பு வடிவங்களை கொண்டுள்ளன. பெரும்பாலும் இவ்வர்க்க உச்சரிப்பு வடிவங்கள்
தமிழின் மெய் எழுத்துகளின் வல்லின எழுத்துகளை (க, ச, ட, த, ப ) அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர பிராகிருத மொழிக்கு ஏற்ப அசோகன் பிராமியில் சில கூடுதல் எழுத்துகளும் உருவாக்கப்பட்டன. இவை வல்லொலி, மொல்லொலி என ஓர் ஒலிக்கு ஓர் எழுத்தாக வகைபடுத்தப்பட்டன.

தமிழில் ஒலி மாற்றம் பேசுகின்ற நிலையில் இருப்பினும்
அடிப்படையான ஓர் எழுத்தே எழுதுவதற்குப் பயன்பட்டு வருகின்றன. எ-கா. கப்பல், ((Kappal) காந்தி (Gandhi). அசோக பிராமியின் வர்க்க எழுத்துகள் பொதுவாகத் தமிழின் மூல எழுத்துகளான வல்லினத்தில் இருந்து தோன்றியுள்ளமை அதன் அமைப்பில் இருந்து அறிய முடிகிறது. மேலும் தமிழில் உள்ள மூக்கொலி எழுத்துகளே எவ்வித மாறுபாடும் இன்றி அசோகன்-பிராமியிலும் (ங்-வரி வடிவத்தைத் தவிர்த்துப்) பின்பற்றப்பட்டன.

தமிழ் மொழிக்கே உரித்தான சிறப்பு எழுத்துகளான ள, ழ, ற, ன ஆகிய எழுத்துகள் தமிழ்நாட்டில் மட்டுமே வழக்கில் இருந்துள்ளன. தமிழி எழுத்துகள் அசோகன் - பிராமிக்கும் முற்பட்டவை என்பது கீழ்கண்ட பல்வேறு ஆய்வுகளின் மூலம் அறிய முடிவதுடன் இன்றைய இந்திய எழுத்துகளுக்குத் தாயாகத் தமிழ் எழுத்துகள் விளங்கியுள்ளமையையும் அறிய முடிகிறது.

1. வர்க்கம் அற்ற தன்மை

தமிழி எழுத்துகளுக்கு வர்க்க எழுத்துகள் இதுநாள் வரை பயன் பாட்டில் இல்லை. தமிழின் வல்லெழுத்து உருவமே அனைத்து வர்க்க வல்லொலி, மெல்லொலிகளுக்குப் பயன்படுத்தப் படுகிறது. இவ்வர்க்க எழுத்துகள் தமிழ்மொழிக்கு தேவையில்லை என்பது ஐ. மகாதேவன் கருத்து.**இது தவறான கருத்தாகும். காரணம் தமிழில் பல சொற்கள் வர்க்க வல்லொலி, வர்க்க மெல்லொலியைப் பெற்று விளங்குகின்றன. வங்கம், அங்கம், கலிங்கம், அக்கம், பக்கம், மஞ்சள், கொஞ்சல், ஊஞ்சல், ஆகிய நடைமுறையில் உள்ள சொற்களின் உச்சரிப்புக்களை நாம் வலிந்தும் மெலிந்தும் உச்சரிக்கின்றோம். இவற்றை ஆங்கிலத்தில் எழுதுவோர் ((Vangam, Angam, kalingam, akkham, pakkham manjal, konjal, Unjal)) என்றுதான் உச்சரிப்புக்கு ஏற்றவாறு எழுதுவர்.

மொழி தோன்றிய பின்பே எழுத்துகள் உருவாக்கப்பட்டன. மொழிகின்ற தமிழ்மொழிக்கு எழுத்துகளே இல்லாத காலட்டத்தில் அசோக-பிராமியில் எழுத்துகளை வாங்கிப் பயன்பாட்டிற்கு தமிழர்கள் பயன்படுத்தும்போது வர்க்க உச்சரிப்புகள் உள்ளவற்றிற்கு ஏன் அவ்வடிவங்களைப் பயன்படுத்தவில்லை. காலத்தால் முற்பட்டதாகக் கருதத் தக்க மாங்குளம் கல்வெட்டில் உள்ள மன்னன் நெடிஞ்சழியன் பெயர் உச்சரிப்பை ஆங்கிலத்தில் nedinzeliyan என்றே எழுதுவோம்.

வட இந்தியாவில் இருந்து வந்த சமண முனிவர்கள்தான் தமிழ் எழுத்துகளை உருவாக்கினர் என்றால் அவர்களுக்குத் தெரிந்த வடமொழி அசோகன் பிராமி எழுத்துகளிலேயே வர்க்க எழுத்துகளை கல்வெட்டுகளில் பயன்படுத்தி இருக்கலாமே !.

இதே போன்று தமிழிக் கல்வெட்டுகளில் உள்ள பல்வேறு பிராகிருத சொற்கள் தமிழ் எழுத்துகளிலேயே எழுதப்பட்டுள்ளன. வர்க்க எழுத்துகள் தமிழ்ச் சொற்களுக்கு (மொழிக்கு) தேவையில்லை என்ற வாதத்தை பெயரளவில் ஏற்றுக் கொண்டாலும் தமிழ்-பிராமியில் 35 % பிராகிருத சொற்கள் மலிந்துள்ளதாக ஐராவதம் மகாதேவன் பட்டியலிடுகிறார். இச்சொற்களுக்காவது ஏற்கனவே ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட அசோக-பிராமியைப் பயன்படுத்தி இருக்கலாமே? ; எ. காட்டாக தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளில் அதிட்டானம், அதியன், அரிதி, அனாசனம், ஆராதனி, இகுவன், உதயன, கடிகை, கணக, கணி, குடும்பிக, கோப, சாத்தன், தேவ, நந்தசிரி, நிகமம், தம்மம், பாணித, பூதி, ஆரிதன் போன்ற **பிராகிருதச் சொற்கள் உள்ளன. இவையும் தமிழி எழுத்தில்தான் எழுதப்பட்டுள்ளன. தமிழி எழுத்துகள் தொடக்க நிலை எழுத்துகள். அக்கால கட்டத்தில் அசோகன் பயன்படுத்திய வர்க்க எழுத்துகள் தோன்றவில்லை.

பிராகிருத மொழிக்கு ஏற்ப தமிழி பயன்படுத்தும் போது இலங்கை மற்றும் வட இந்திய சமணர்களும் பௌத்தர்களும் வணிகர்களும் இணைந்து வர்க்க எழுத்துகளை அசோகனின் காலத்திற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன் உருவாக்கி உள்ளனர். அக்கால கட்டத்திற்கும் முற்பட்டதே தமிழி .

தமிழகத்திற்கு வருகை புரிந்த சமணத் துறவிகள் தமிழகத்தில் வழக்கில் இருந்த தமிழி எழுத்துகளை கற்று அதனை அடிப்படையாக வைத்து தங்களது மொழிக்கு ஏற்ப வர்க்க எழுத்துகளை உருவாக்கினர். அவ்வாறு உருவாக்கப்பட்ட 2 வடமொழிக்கான எழுத்துகள் தமிழ்நாட்டிலும் கிடைக்கின்றன. அவ்வாறு உருவானதே ஸ மற்றும் த3 (தம்மம்)

தமிழ்நாட்டில் பல்லவர் ஆட்சிக் காலமான கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் வடமொழிக்கு சிறப்பிடம் அளிக்கப்பட்டது. இதன் விளைவாக தமிழ் எழுத்துகளில் வடமொழிக் கல்வெட்டுகளை எழுதுவதில் தடுமாற்றம் ஏற்பட்டதின் விளைவாக அசோகன் பிராமியில் இருந்து வளர்ச்சி பெற்று ஆந்திராவில் கி.பி. 3 - ஆம் நூற்றாண்டில் இருந்த தென்னக பிராமியிலிருந்தும் அடிப்படைத் தமிழ் எழுத்துகளில் இருந்தும் புதியதாக எழுத்துகள் உருவாக்கப் பட்டன. அவை பல்லவ கிரந்தம் எனப்பட்டது. எனவே தமிழ்நாட்டில் முழுமையான வடமொழியின் தாக்கம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில்தான் தோன்றியது என்பது கல்வெட்டு மூலம் புலப்படும் உண்மையாகும்.

‘சிரி’ என தமிழ் பிராமி கல்வெட்டுகளில் எழுதப்பட்ட சொல்லே கி.பி. 5 -ஆம் நூற்றாண்டில் அசோகனின் கூட்டெழுத்து அடிப்படையில் ‘ஸ்ரீ’ என எழுதப்பட்டது. இதிலிருந்து அசோக பிராமியிலிருந்து வளர்ச்சி பெற்ற வர்க்க எழுத்து முறை பல்லவர் காலத்தில் பல்லவ கிரந்தமாக உருவாக்கப்பட்டு பிராகிருத - சமசுகிருத கல்வெட்டுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது என்பதை அறியலாம்.

2. எழுத்துகளின் அமைப்பு

தமிழிக் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள் பெரும்பாலும் தொடக்கநிலை அமைப்புடையவை. கல்வெட்டாய்வர்களுக்கு தொல்லெழுத்தியல் அடிப்படையில் காலத்தைக் கணிப்பது அவ்வெழுத்துகளின் வளர்ச்சிப் பரிமாணங்களைக் கருத்தில் இருத்தியே. இதன்படி அசோக கல்வெட்டு எழுத்து யாவும் சில தமிழிக் கல்வெட்டுகளுக்குப் பிற்பட்டவையாகவே விளங்குகின்றன.

அசோகன்-பிராமி எழுத்துகள் ஒழுங்கான அமைப்பில் பொறிக்கப் பட்டுள்ளன ; முழுமை பெற்ற அமைப்புடையன ; மேலும் ஒரு எழுத்தே பல்வேறு வகையில்எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, பூலர் என்னும் ஆய்வாளர் ‘அ’ உயிர் எழுத்து 8 வகையாக அசோகன் கல்வெட்டில் உள்ளதைக் குறிக்கின்றார்.

தமிழியில் உள்ள அ, ஆ, ம, ர, த மற்றும் பல எழுத்துகள் எழுத்தமைதியில் காலத்தால் முற்பட்டதாக விளங்குகிறது. அசோகனுடைய எழுத்தமைதியை ச்சம்பை அதியமான்
கல்வெட்டில் காணலாம். இக்கல்வெட்டில் உள்ள அதியன் அசோக பிராமியில் குறிக்கப்படும் சதியபுதொ மரபினன் ஆவான்.

3. கூட்டெழுத்துகள் அற்ற தன்மை

அசோக-பிராமியின் மிகப் பெரிய வளர்ச்சி கூட்டெழுத்து முறையாகும். இது அசோகனுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் மேற்குறித்த வட இந்தியக் கல்வெட்டுகளிலோ இலங்கையில் காணப்படும் பிராமி கல்வெட்டுகளிலோ காணப்படவில்லை. தமிழில் இன்று வரை இக்கூட்டெழுத்து வழக்கம் இல்லை.

முதன்முதலாக அசோகனுடைய காலத்திலேயே கூட்டெழுத்து முறை பயின்று வருகிறது. எனவே இச்சொற்கள் யாவும் எழுதப்பட்டோரால் தவறாகவே குறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மெய்யெழுத்துகள் உயிர்மெய் எழுத்துக்கள் வேறுபடுத்திக் காட்டப்பட்டன. கூட்டெழுத்து முயற்சி மூலம் மெய்யெழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகளும் அசோகன்-பிராமியில் இனம் காணப்பட்டு எளிதாக்கப்பட்டன. ஆனால் தமிழ்-பிராமியில் தொடக்க நிலையில் மொழியை அறிந்தே சொற்களைப் படித்தல் வேண்டும். காரணம், தொடக்க காலத் தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் மெய்யெழுத்துகளும் உயிர்-மெய் எழுத்துகளும் ஒரே குறியீட்டில் எழுதப்பட்டன. மெய் எழுத்துகள் புள்ளி அற்று காணப்பட்டன. மேலும் கி.மு.500 எனக் கருதத்தக்க மாங்குளம் மற்றும் சில தொடக்க காலக் கல்வெட்டுகளில் சில சொற்கள் மெய் உயிர்க் குறிகள் தனித் தனியாகக் குறிக்கப்பட்டு உயிர் ஏறிய மெய்யாகக் குறிக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டு:

குவ் + அன் = குவன்,
இத்த + அ = இத்தா,
பாண + அன் = பணான் (அல்) பாணான்,
கடல் + அன் = கடலன்,
கொட்டுபித்த + அ = கொட்டுபித்தா,
பாளி + இய் = பாளீய் (மாங்குளம்).

இதே போன்று தமிழகத்திலும் இலங்கையிலும் கிடைத்த சில நாணயங்களிலும் மேற்குறித்தவாறு மெய்யும் உயிரும் மெய் எழுத்துகளாகக் கொள்ளப்பட்டன.

(எ.கா)

கொல் + இப்புறை, கடல் + அன். இதன் மூலம் தமிழ்நாட்டில் கிடைக்கின்ற சில கல்வெட்டுகளும் நாணயங்களும் தொடக்க நிலையில் உள்ள கல்வெட்டுகளாகும். இவற்றின் காலம் அசோக-பிராமிக்கும் முற்பட்டதாகும் என்பது விளங்கும்.

மேலும்

அசோகன் - பிராமியில் இருந்து தமிழ் தோன்றியிருந்தால் மெய்யெழுத்துகள் கூட்டெழுத்து முறையில் எழுதப்பட்டுப் படிப்போருக்குக் குழப்பநிலை ஏற்படா வண்ணம் இடர்ப்பாடு தடுக்கப்பட்டிருக்கும். இவ்விடர்ப்பாட்டைக் களையும் முயற்சி கிமு 3- ஆம் நூற்றாண்டிற்கு மேல் அசோக-பிராமியைப் பின்பற்றித் தமிழ்நாட்டிலும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

கே.வி இராமன் அவர்களால் வெளியிடப்பட்ட பொன் மோதிரம் ஒன்றில் நெல்வேட்டை ஸஞ என்ற பெயர் கூட்டெழுத்து முறையில் பொறிக்கப்பட்டுள்ளது இங்கு நோக்கத் தக்கது. இதே போன்று கொடுமணல் அகழாய்வில் சில பானை ஓடுகளில் கூட்டெழுத்து முறையில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. எனவே கிமு 3 -ஆம் நூற்றாண்டளவில் கூட்டெழுத்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு இறுதியில் அம்முறை கைவிடப்பட்டு மெய்க்குப் புள்ளியிடும் வழக்கத்தை கி.மு. 2 ஆம் நூற்றாண்டு அளவில் தமிழர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். புள்ளியுடன் கூடிய மெய்யெழுதுக்கள் உள்ள தமிழ்-பிராமிக் கல்வெட்டுகள் பல தமிழ்நாட்டில் கிடைத்துள்ளமை இதற்குச் சான்றாகக் கூறலாம்.

சாதவாகனர் வெளியிட்ட தமிழ் நாணயங்களிலும் மெய் எழுத்துகளுக்குப் புள்ளியிடும் வழக்கம் இருந்துள்ளதை இங்குக் குறிப்பிடலாம். மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிடும் வழக்கம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்க் கல்வெட்டுகளில் நீடித்தது.

4. தமிழி - மக்கள் எழுத்து- அகழாய்வுச் சான்றுகள்

தமிழகத்தில் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்ற அனைத்து ஊர்களில் குறிப்பாக அகழாய்வுகள் செய்யப்பட்ட இடங்களில் பாமர மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகளில் தமிழ்-பிராமி எழுத்துப்பொறிப்புகள் காணலாம் ; இவை தவிர மத்திய தரைக்கடல் பகுதிகளிலும் தமிழ் வணிகர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட மட்கலன்களில் தமிழ் எழுத்துப் பொறிப்புள்ள பானை ஓடுகள் கிடைத்துள்ளன. வணிகர்களின் மூலமாகவும் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த எழுத்துகள் வட இந்தியாவில் பரவியுள்ளன. கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பானை ஓடுகளில் வட இந்திய வணிகர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. இங்கு கிடைக்கின்ற எழுத்துப் பொறிப்பு மட்கலன்களில் 20 % வட இந்தியத் தாக்கம் உள்ளவை. எனவே கொடுமணலுக்கு வந்த வணிகர்கள் தங்களது பெயர்களை பிராகிருத மொழியில் எழுத முயற்சி மேற்கொண்டுள்ளனர். இவற்றுள் பெரும்பாலான எழுத்தாக ஏற்கனவே தமிழகத்தில் வழக்கில் இருந்த **ஸ எழுத்து விரவி உள்ளது. மேலும் அசோக பிராமியின் ஒரு சில எழுத்துகளும் காணப்படுகின்றன. அவை 'ஜ', 'ஹ', 'த3' போன்ற எழுத்துகளாகும். இவ்வெழுத்துகள் உள்ள மட்பாண்டங்கள் கிடைத்த மண்ணடுக்கின் காலத்தை அறிவியல் முறையில் கணக்கிடுதல் வேண்டும். இவை அசோக பிராமி வழக்கத்திற்கு வந்த பிறகே தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கும் கீழ் நிலையில் உள்ள மண்ணடுக்குகளில் தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துப் பொறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. மேலும் பெரும்பாலான பானை ஓடுகளில் வடமொழிப் பெயர்கள் தமிழி (தமிழ்-பிராமி) எழுத்திலேயே எழுதப்பட்டுள்ளன.

எனவே

வட இந்தியாவில் இருந்து வந்த வணிகர்கள் தங்களின் எழுத்துகளை எழுதுவதற்குத் தடுமாறியுள்ளனர். அதனால் ஏற்கனவே தமிழர்களின் வழக்கில் இருந்த தமிழ்-பிராமி எழுத்துகளில் தங்களது பெயர்களை எழுதியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மட்கலன்களில் கீறல் குறியீடுகள் மிகுந்த அளவில் கிடைக்கின்றன. கீறல் குறியீடுகளுடன் தமிழ்-பிராமி எழுத்துகள் சேர்ந்தும் கிடைக்கின்றன. தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புகள் தனித்தும் கிடைக்கின்றன. இவற்றையும் ஆய்விற்கு உட்படுத்துதல் வேண்டும். கீறல் குறியீடுகள் புழக்கத்திற்கு வந்த பின் கீறல் குறியீடுகளுடன் எழுத்துகளைச் சேர்த்து எழுதுகின்றனர். எனவே இக்குறியீடுகள் பொருள் மிக்கதாகவே இருந்திருக்க வேண்டும். இக்குறியீடுகளில் இருந்தே தமிழ்-பிராமி எழுத்துகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்தியாவில் மட்கலன்களில் பெருமளவில் கீறல் குறியீடுகள் கிடைத்துவருகின்ற இடம் தமிழகம் ஆகும். பிற மாநிலங்களில் இக்குறியீடுகள் குறைவாகவே கிடைத்துள்ளன. தொல்லியலாளர் நரசிம்மய்யாவும் இக்கருத்தை வலியுறுத்தி அசோகனுக்கும் முற்பட்ட காலத்தில் தமிழகம் எழுத்தறிவு கொண்ட மாநிலமாக விளங்கியிருத்தல் வேண்டும் என்றும் கீறல் குறியீடுகளில் இருந்தே தமிழி எழுத்துகள் தோன்றியிருத்தல் வேண்டும் என்றும் இத்தமிழ் எழுத்துகளில் இருந்தே அசோகன் பிராமி தோன்றியிருத்தல் வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார். கீறல் குறியீடுகளுக்கும் பொருள் இருந்திருக்கவேண்டும் என்று இவர் கருதுகிறார்.

மௌரியர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த மெகசுதனிசு எழுதிய இண்டிகா நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை; எனினும் அவர் குறிப்பிடுகின்ற சில குறிப்புகள் அக்காலத்தில் வட இந்தியாவில் நிலவியிருந்த சமுதாய நிலையை அறிவதற்குப் பேருதவி புரிகின்றன. அக்காலத்தில் வட இந்தியாவில் மக்கள் எழுத்தறிவு அற்று விளங்கினர் என்பதும் நினைவாற்றல் மூலமே அனைத்து நிகழ்ச்சிகளையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டனர் என்பதையும் அவர் குறிக்கிறார். இதனை ஸ்ட்ராபோ, அர்ரியன் ஆகியோரும் உறுதி செய்கிறர். இந்நிலை அசோகன் காலத்திலும் நீடித்திருந்தது. இதனை இம்மன்னனின் கல்வெட்டுகளின் மூலமும் அறிய முடிகிறது.

அசோகர் தாம் வெளியிட்ட கல்வெட்டுகளின் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைக்க நகர நீதிபதிகளையும் குமாரர், மகாமாத்திரர் போன்ற அலுவலர்களையும் நியமித்தான். மேலும் தாம் வெளியிடுகின்ற தர்ம சாசனம் வருங்கால சந்ததியருக்காக ஏற்படுத்துவதாகவும் இக்கல்வெட்டுகளில் தெரிவித்துள்ளார். மேற்குறித்த செய்திகள் மூலம் அசோகனுடைய காலத்தில் பெரும் பகுதி மக்கள் எழுத்தறிவு அற்றவர்களாகவே விளங்கினர் என்பது புலப்படும். இதே போல் கொடுமணல் & அழகன்குளம் அகழ்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துப் பொறிப்பு மட்கல ஓடுகள் கிமு 3 ஆம் நூற்றாண்டு சார்ந்தவை என காலம் கணிக்கப் பட்டிருக்கையில் **ஐராவதம் அவர்கள் இவற்றை எந்த அடிப்படையில் கி.மு. 2 -ஆம் நூற்றாண்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார் என்பது விளங்கவில்லை.

முனைவர் க. இராஜன் , நடன காசிநாதன் போன்றோர் கருதுவது போல் தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வுகளின் தரவுகளையும் காலத்தையும் **உண்மைக்கு மாறாக, தவறாகக் கணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

அழகன்குளம் அகழாய்வில் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு சார்ந்த மண்ணடுக்குகளில் தமிழ்-பிராமி பொறித்த மட்கல ஓடுகள் கிடைத்ததை அதன் அகழாய்வாளர் நடன காசிநாதன் சுட்டி உள்ளார். இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் வாழ்ந்த இரும்புக் கால மக்கள் படிப்பறிவு மிக்கவராக விளங்கியுள்ளனர் என்பது நன்கு விளங்கும்.

வட இந்தியாவில் பல இடங்களில் மிக அதிக அளவில் அகழாய்வு மேற்கொண்ட பொழுதும் மக்களின் பயன்பாட்டில் இருந்த மட்கலன்களில் எழுத்துப் பொறிப்புகள் காணப் படவில்லை.

ஐராவதம் கூற்றுப்படி காலத்தால் முற்பட்ட அசோகன்-பிராமி எழுத்துகள் அது தோன்றிய வட இந்தியாவில் மக்களின் வழக்காக இல்லாத பொழுது எவ்வாறு மிகக் குறுகிய காலத்திற்குள் தமிழ் நாட்டின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவி இருந்தது ? .

அண்மையில் திண்டுக்கல் பகுதியில் நடுகற்களில் தமிழி எழுத்துப் பொறிப்புக்கள் புளிமான் கோம்பை , தாதப்பட்டி இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் 2 நடுகற்கள் தொல்லெழுத்தியல் அடிப்படையில் கி.மு. 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை.

தமிழகத்தில் அசோகனின் காலகட்டத்தில் அல்லது அதற்கும் சற்று முற்பட்ட கால கட்டத்தில் (கி.மு. 500 அளவில்) இரும்புக் காலப் பண்பாடு தழைத்தோங்கி இருந்ததைப் பல்வேறு அகழாய்வுகளின் மூலம் அறிய முடிகிறது. அதற்கும் முன்பாகவே தமிழகத்தில் இரும்புக் காலப் பண்பாடுக்கும் முற்பட்ட பண்பாடு இருந்துள்ளதை ஆதிச்சநல்லூர், தாண்டிக்குடி அகழாய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும்

இரும்புக்காலத்திற்கு முன்பாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏறக்குறைய கி. மு. 1500 ஆண்டளவில் மக்கள் வாழ்க்கைத் தரம் மிக்கு விளங்கியதை அல்சின் அவர்கள் குறிப்பிடுகிறார். இதற்கு எடுத்துக்காட்டாக, ஆதிச்சநல்லூர் அகழாய்வும் கடந்த காலத்தில் கொடைக் கானல் பகுதியில் பாதர் ஆங்க்லெட் செய்த அகழாய்வுகளும், சமீபத்தில் அதே பகுதியில் உள்ள தாண்டிக்குடியில் க. இராஜன் நடத்திய அகழாய்வுகளும் மெய்ப்பிக்கின்றன.

தமிழகத்தின் **இரும்புக்காலப் பண்பாட்டின் காலம் கி.மு. 500 என்ற நிலையிலிருந்து சற்று முன்நோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனைக் கொற்கை அகழாய்வும் உறுதி செய்கிறது.

அகழாய்வுகளின் தரவுகள் இரும்புக் காலத்தில் மக்களின் வழக்கில் இருந்த தமிழி எழுத்துகளின் காலத்தைக் கி.மு. 500 முன்பாகவே நிர்ணயிக்க வேண்டிய நிலை உள்ளது. இக்கால கட்டத்தில் தமிழ்மக்களின் எழுத்தாக விளங்கிய தொன்மைத் தமிழி எழுத்துகள் இலங்கைக்கும் வடஇந்தியாவிற்கும் சமண, பௌத்தத் துறவிகளாலும் வணிகர்களாலும் எளிதாக எடுத்துச் செல்லப்பட்டு அவர்களின் மொழிக்கு ஏற்பப் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.

அண்மையில் பொருந்தல் மற்றும் கொடுமணல் அகழாய்வுகளில் கிடைத்த மட்கலன்களை அறிவியல் காலக் கணிப்பு செய்த பொழுது எழுத்துப் பொறிப்புகளுடன் கூடிய மட்கலன் கி.மு. 500 ஆண்டளவைச் சார்ந்த்து என உறுதி செய்யப்பட்டது.

இத்தகைய சூழலில் அசோகன் பயன்படுத்திய எழுத்துகளான பிராமி, கரோச்சிடி, அராமிக், கிரேக்க எழுத்து வகைகள் இம்மன்னனின் காலத்தில் ஆட்சி புரிந்து வந்த அயலக நாடுகளில் இருந்தே பெறப்பட்டு, அந்த அந்தப் பகுதிகளுக்கு ஏற்றவாறு பயன்பாட்டிற்கு வந்தன. பிராமி எழுத்தில் இம்மாற்றம் ஏறக் குறைய கி.மு. 4-ஆம் நூற்றாண்டு அளவில் பட்டிபொருலு & கங்கைச் சமவெளியில் இருந்த பௌத்த - சமணத் துறவிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிராகிருத மொழிக்கு ஏற்ப ஏற்பட்ட இம்மாற்றத்திற்கு இலங்கையுடன் கொண்ட சமயத் தொடர்பும் மூல காரணமாக இருந்தது.

5. சந்திரகுப்த மௌரியரின் தென்னக வருகை

வட இந்திய சமணத் துறவிகள் கருநாடகத்தின் சிரவண பொலகோலாவிற்கு வந்து அங்கிருந்து தமிழகம் வந்து தங்கிக் கி.மு. 2 -ஆம் நூற்றாண்டில் தமிழ்-பிராமிக் கல்வெட்டுகளை உருவாக்கினர் என்ற கருத்தும் உறுதியான சான்றுகள் அற்றுள்ளது.

வட இந்தியாவில் இருந்த சமணர்கள் சிரவணபெலகோலாவில் வந்து தங்கி சமயப் பணி ஆற்றிய காலத்தில் ஒரு பிராமி - கல்வெட்டையும் வெட்டி வைக்காததின் காரணம் யாது ? ;

சமணத் துறவிகள் தமிழகம் வந்த பொழுது வடமேற்குத் தமிழகத்தில் உள்ள மலைக் குகைகளில் தங்கி, சமயப் பணி ஆற்றிக் கல்வெட்டுக்களை வெட்டாது மதுரைப் பகுதிகளில் தங்கி அங்குக் கல்வெட்டுக்களை வெட்டுவித்ததற்கான காரணங்கள் யாவை?

மேலும்,

சிரவணபெலகோலாவில் கிடைக்கிற முதன்மை கல்வெட்டு கி.பி.6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. சமண நூல்களில் குறிக்கப்படும் பத்ரபாகு, சந்திர குப்த மௌரியர் சிரவணபெலகோலா வருகை பிற சான்றுகளால் உறுதி செய்யப்படவில்லை. இக்கால கட்டத்தில் மதுரை சங்கத் தமிழின் தலைநகரமாக வளர்ச்சி பெற ஆரம்பித்திருந்தது. தமிழும் எழுத்தும் வளர்ச்சியுறுவதற்கான சூழல்களும் தமிழகத்தில் இருந்துள்ளன. சந்திரகுப்த மௌரியர் கால மெகசுதனீசு தமிழகத்தில் பாண்டியர் ஆட்சி இருந்ததைக் குறிப்பிடுகின்றார்.

6. தமிழ் இலக்கியச் சான்றுகள்

தமிழ் இலக்கியங்கள் மௌரியருக்கு முன்பு இருந்த சில வட இந்திய அரசுகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது. குறிப்பாக, நந்தர்கள் கங்கைச் சமவெளியில் ஆட்சி புரிந்ததையும் அவர் தம் தலைநகர் பாடலிபுத்திரத்தையும் நந்தர்கள் எதிரிகளுக்கு அஞ்சி பெரு நிதியைப் புதைத்து வைத்திருந்ததையும் குறிப்பிடுகின்றன. இதிலிருந்து அசோகருக்கு முற்பட்ட காலத்திலேயே வட இந்திய வரலாற்றைத் தமிழர்கள் நன்கு அறிந்துள்ளனர். மேலும் மௌரியர் தென்னக படையெடுப்பையும் அப்படைகளுக்கு தமிழ் மன்னர்கள் உணவு வழங்கியது குறித்தும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அசோகனுடைய ஆட்சி தற்கால கர்நாடகத்தின் மாஸ்கி வரை நீடித்திருந்ததை இங்கே நினைவுகூர்தல் வேண்டும். மேலும் ராசமாணிக்கனார் கருது கோளான துளுவை ஆண்ட கோசருடன் இணைந்து மௌரியர் வந்தனர் என்ற கூற்று மெய்ப்படும் வகையில் அசோகனுடைய கல்வெட்டுகள் இப்பகுதி வரை கிடைத்துள்ளது இங்கு நோக்கத் தக்கது. எனவே தமிழகத்தில் இருந்த வலிமை மிக்க அரசுகளால் மக்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியிருந்தனர். வணிகர்கள் சமயத் துறவிகள் மூலம் வட இந்தியாவிற்கு எழுத்துக்கள் பரவ இச்சூழல் ஏதுவாக அமைந்திருந்தது.

7. (ஹாதிகும்பா) **ஆஅதிகும்பா கல்வெட்டு

ஒரிசாவை ஆண்ட காரவேலனின் ஆஅதிகும்பா கல்வெட்டில் தமிழ் மன்னர்கள் இம்மன்னனின் ஆட்சியாண்டிலிருந்து 175 ஆண்டு முன்னரே கூட்டணி அமைத்துச் செயல்பட்டதைக் குறிப்பிடுகிறது. இதன் காலம் ஏறக்குறைய கி.மு. 3ஆம் நூற்றாண்டாகும் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். இக்கூட்டணி அசோகனின் தென்னகப் படையெடுப்பை தடுப்பதற்காக ஏற்பட்டிருக்கலாம்.

8. அசோகன் கல்வெட்டுகள்

அசோகனுடைய கல்வெட்டுகளில் அவனது ஆட்சிக் காலத்தில் கிரேக்க நாட்டை ஆட்சி புரிந்த 5 அரசர்களைப் பற்றியும் தமது பேரரசின் அண்டைப் பகுதியில் ஆட்சி புரிந்த சோழர், பாண்டியர், சத்தியபுத்திரர் எனும் அதியமான், கேரள புத்திரர் ஆகியோரைப் பற்றியும் குறிப்பிடுகிறார். எனவே அசோகரின் காலத்தில் தமிழகம் அயல் நாட்டு அரசுகளுக்கு இணையான வலிமை மிக்க அரசுகளைப் பெற்று விளங்கியது என்பது விளங்கும். இக்கால கட்டத்திற்கு முன்னரே பல பெருநில அரசர்களும் குறுநில அரசர்களும் தமிழ் பிராமி எழுத்து பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக பெருவழுதி, குறவன், தித்தன் நாணயங்களைக் குறிப்பிடலாம். இத்தகைய வலிமை மிக்க அரசியல் சூழலில் தமிழ்மொழி வளமை பெற்று அதற்கான வரிவடிவங்கள் தோன்ற, வளர எவ்வித இடர்ப்பாடும் இருக்க வாய்ப்பில்லை.

9. தமிழக இலங்கைத் தொடர்பு

இக்கால கட்டத்தில் இலங்கைக்கான தொடர்பும் இலங்கை சமணத் தொடர்பும் தமிழகத்தில் இருந்து மூல எழுத்துகள் சென்று அவர்களின் மொழிக்கு ஏற்ப கூட்டெழுத்து அற்ற எழுத்துகளுக்கு வழிகோலப்பட்டது.

மகாவம்சம் - பௌத்த நூலில் இலங்கையின் நிர்கந்த சமணர் தமிழகத் தொடர்பு குறிக்கப்பட்டுள்ளது. இத்தொடர்பு கி. மு. 4 அல்லது அதற்குச் சற்று முற்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும். தமிழ்-பிராமியின் ஒத்த எழுத்துகள் பல இலங்கைக் கல்வெட்டுகளில் பயின்று வந்துள்ளமை இங்குக் குறிப்பிடலாம்.
ம, ர போன்ற வடிவங்கள் தமிழ்-பிராமியின் தாக்கத்தை உடையவை. மேலும், இலங்கையின் மொழிக்கு ஏற்ப வர்க்க எழுத்துகள் உருவாக்கப்பட்ட பொழுது அசோக-பிராமியில் காணப்படும் ம மற்றும் ர எழுத்துகளும் இங்குப் பயின்று வந்துள்ளன. அண்மையில் இலங்கையில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த எழுத்துப் பொறிப்பு கி.மு. 5 -ம் நூற்றாண்டு அளவின் சான்றாக அமைந்தது. மேலும் இலங்கை வேந்தன் பாண்டிய மன்னனுடன் திருமண உறவு வைத்திருந்ததை மகாவம்சம் குறிப்பிடுகிறது. இதன் மூலம் பாண்டிய நாட்டுடன் இலங்கைத் தொடர்பு வெளிப்படுகிறது.

சந்திரகுப்த மௌரியர் காலத்தில் இலங்கையின் வங்காளத் தொடர்பு , எழுத்துகளை ட இந்தியாவில் பரப்ப வழி வகுத்தது. மேலும் இதே காலகட்டத்தில் தமிழகத்தின் வடக்கில் இருந்த ஆந்திரர் தொடர்பால், பட்டிப்பொருலு பௌத்த துறவிகள், தமிழகத்தில் வழக்கில் இருந்த தமிழ்-பிராமி எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு, பிராகிருத மொழிக்கு ஏற்ப வர்க்க வடிவங்களுக்கு புதிய வரிவடிவங்களை உருவாக்கினர். மேலும் இங்குத் தமிழ்-பிராமியின் அகர ஆகாரத் தடுமாற்றத்திற்கு முடிவு செய்யப்பட்டுப் புதிய குறியீடுகளும் ஏற்படுத்தப்பட்டன.

10. மௌரிய பிராமி

ஐராவதம் மகாதேவன் தமிழி எழுத்துகள் அசோகனுக்குப் பின் வந்த மௌரிய பிராமியிநின்று தோன்றியதென கருத்துத் தெரிவித்தவர் ; ஆனால் அசோகனுக்குப் பின் கிமு 2 -ஆம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டில் எழுத்து வளர்ச்சி மிக விரைவாகப் பாமர மக்கள் வரை சென்றடைந்த நிலையில் பிராமி தோன்றிய வட இந்தியாவில் இக்கால கட்டத்தில் இன்னும் அதிக வளர்ச்சியைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக கி.மு. 200-க்கும் 100-க்கும் இடையில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில கல்வெட்டுகளே வட இந்தியாவில் கிடைக்கின்றன. குறிப்பாக, அசோகனின் பேரன் தசரதன் வெளியிட்ட நாகர்ச்சூனி குகைக் கல்வெட்டு. (கி.மு.220) , ஆஅதிகும்பா கல்வெட்டு & சில நாணயங்கள். இவற்றிலிருந்து தமிழி எழுத்துகள் தோன்றியது என்பது முற்றிலும் ஏற்புடையதல்ல.

எழுத்துகளின் வளர்ச்சி அதன் தொன்மையையும் பரவலையும் அடிப்படையாகக் கொண்டது. அசோக-பிராமி மௌரிய பிராமியாக பரிமாணம் பெறும் காலத்தில் அது வட இந்தியாவில் பரந்த அளவிலோ அல்லது மக்கள் வழக்கிலோ இல்லை என்பதிலிருந்து அசோக-பிராமி காலத்தால் தமிழ்-பிராமியை விட பிற்பட்டது என்பதை எளிதில் அறியலாம். ஆனால் இதற்கு மாறாக தமிழி எழுத்துகள் கிமு 5-ஆம் நூற்றாண்டளவில் தொடங்கி கிமு 4 - 3 -ஆம் நூற்றாண்டுகளில் மக்களின் வழக்கத்திற்கு வந்துள்ளதை தமிழ்நாட்டில் கிடைத்த மேற்குறித்த எழுத்துப் பொறிப்புள்ள மட்கலன்களும் மற்றும் நாணயங்கள், முத்திரைகள், மோதிரங்கள் உறுதி செய்கின்றன. மேலும் தமிழ் நாட்டில் புலிமான் கோம்பை, தாதப்பட்டி, பொற்பனக் கோட்டை ஆகிய பகுதிகளில் கிடைத்த நடுகற்கள் கால்நடை மேய்க்கின்ற சமூக மக்களும் எழுத்தறிவு மிக்கவர்களாக விளங்கியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. இந்நடுகற்களில் புலிமான் கோம்பை நடுகற்கள் இரண்டு கிமு 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.

11. அசோகன்- கால தமிழிக் கல்வெட்டுகள்.

விழுப்புரம் மாவட்டம், ச்சம்பை தமிழிக் கல்வெட்டின் காலத்தை தொல்லெழுத்தியல் அடிப்படையில் அசோகனுடைய காலத்திற்கு எடுத்துச் செல்லலாம். அசோகனுடைய கல்வெட்டில் குறிக்கப்படும் 'ஸதியபுதோ' என்ற மரபினரில் இலக்கியங்கள் மூலம் பெறப்படும் அதியமான் அரசர்கள் மூவர். அவர்களுள் நெடுமான் அஞ்சி மிகச் சிறந்த மன்னனாக விளங்கியுள்ளான். அசோக-பிராமியின் தாக்கம் ச்சம்பைக் கல்வெட்டில் 'ஸதியபுதோ' என்ற சொல்லின் மூலமும் ‘அ’ எழுத்தின் வடிவமைப்பு மூலமும் தெரிய வருகிறது. க்கல்வெட்டின் காலத்தை ஐராவதம் கிபி முதலாம் நூற்றாண்டிற்கு எடுத்துச் செல்வார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 சங்க இலக்கியங்களில்

1. அதியமான் நெடுமான் அஞ்சி, அவனது மைந்தன்
2. அதியமான் பொகுட்டெழினி, அவனது மைந்தன்
3. அதியமான் நெடுமிடல்
-- ஆகியோர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஐராவதம் காலக் கணிப்புப்படி அதியமான் நெடுமான் அஞ்சியின் காலம் கி.பி. 1-ஆம் நூற்றாண்டு எனில் ஒவ்வொரு மன்னனுக்கும் 25 ஆண்டுகள் ஆட்சியாண்டாகக் கணக்கிட்டால் இம்மூவரின் ஆட்சி கி.பி. 75 லேயே முற்றுப் பெற்றுவிடும். அல்லது கி.பி. 125 வரை முடிவுக்கு வந்துவிடும். அப்படி எனில் அசோகன் கல்வெட்டில் குறிக்கப்படும் அதியமான் என்ற சத்தியபுத்திரர் யார் ?

எனவே

ச்சம்பைக் கல்வெட்டின் காலம் கி. மு. 3ஆம் நூற்றாண்டாகும். இக்கல்வெட்டில் குறிக்கப்படும் அதியமன் நெடுமான் அஞ்சியும் அசோகன் கல்வெட்டில் குறிக்கப்படும் சதியபுதோ அதியன் நெடுமான் அஞ்சியும் ஒருவரே ஆவர். இதை இக்கல்வெட்டின் எழுத்தமைதியும் உறுதி செய்கின்றது.

12. பிற்காலம்

திருப்பரங்குன்றம் கல்வெட்டில் ‘ஆ’ எழுத்து அசோக-பிராமியின் ‘ஆ’ போன்று எழுதப்பட்டுள்ளது. வளைவுக் கோடான அசோகன் ‘ர’ வும் தமிழ்நாட்டில் கிமு 2- ஆம் நூற்றாண்டளவில் காணப்படுகிறது. அம்மன் கோவில்பட்டியில் கிடைத்த கல்வெட்டு அடிப்படையிலும் வளர்ச்சி பெற்ற தமிழ்-பிராமி எழுத்துகள் உள்ள கல்வெட்டுகளின் அடிப்படையிலும் தொடக்க கால தமிழ் மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களின் அடிப்படையிலும் அசோக-பிராமி எழுத்துகளின் காலத்தை முதற்கட்ட தமிழ்-பிராமி காலத்திற்கு பிற்பட்ட காலமாக நிர்ணயிக்க முடியும் எழுத்துகளின் வளர்ச்சி நிலை அடிப்படையில் எளிதாக அறியலாம். அம்மன் கோவில்பட்டி எழுத்து வகை சன்னதி மற்றும் மகாராசுடிரப் பகுதிகளில் கிடைக்கின்ற சாதவாகணர் கால எழுத்து காலத்தை ஒத்துள்ளது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு கல்வெட்டிற்கும் காலத்தை நிர்ணயிக்க முடியும்.

13. எண்கள்

அசோக-பிராமி தமிழி எழுத்துகளுக்கும் பிற்பட்ட கால கட்டத்தைச் சார்ந்தது என்பதற்கு அசோகன் கல்வெட்டுகளில் காணப்படும் சில எண்களின் குறியீடுகளும் ஆகும். 1 முதல் 4 எண்களுக்கும் 100, 400 என எண்களுக்கும் அசோகன் கல்வெட்டுகளில் குறியீடுகள் உள. இது வளர்ச்சி நிலையைக் காட்டுவதாகும்.

தமிழிக் கல்வெட்டுகளில் எண்களுக்கான குறியீடுகள் காணப்படவில்லை. அசோக - பிராமிக்கும் பிற்பட்ட காலமாக விளங்கும் தொண்டூர் கல்வெட்டில் மூன்றிற்கான குறியீடு உள்ளது. அதே போன்று புகளூர் கல்வெட்டில் மூன்றிற்கான மூன்று படுக்கைக் கோடுகளுடன் மூன்று என்ற சொல்லும் உள்ளன.
இதனை **முன்றில் என ஐராவதம் மகாதேவன் படித்து முற்றம் எனப் பொருள் கொண்டுள்ளார். இக்கல்வெட்டில் மிகத் தெளிவாக மூன்றிற்கான மூன்று படுக்கைக் கோடுகளும் உள்ளன. இந்த 2 கல்வெட்டுகளும் காலத்தால் பிற்பட்டவை. அசோக-பிராமியின் தாக்கம் இக்கால கட்டத்தில் இருந்துள்ளதால் எண்களுக்கான குறியீடுகள் தமிழகத்தில் வழக்கத்திற்கு வந்தன. பல்லவர் கால
செப்பேடுகளில் பெரிதும் பயன்படுத்தப்பட்டன.

14. சமணக் குகைக் கலை

தமிழ்நாட்டில் தமிழி எழுத்துகள் கிடைக்கின்ற துறவிகள் தங்கியிருந்த இடங்களான குகைகள் யாவும் இயற்கையாக அமைந்தவை.

இயற்கையான குகைகளிலும் வங்குகளிலும் அவர்கள் தங்கிய பொழுது மழை நீர் உள்ளே விழாதவாறு குகையின் நெற்றியில் மழைநீர் வடிகால்களை கொத்தியும் உயரமான குகைகளை அடைய பாத அளவில் பள்ளங்களை ஏற்படுத்தியும் முனிவர்கள் படுப்பதற்கான கற்படுக்கைகளை வழவழப்பாக வடிவமைத்தும் குடைவரை கலைக்கு வித்திட்டனர். இவை தவிர இக்குகைகளில் குடைவரை கலையின் சிறப்பான அமைப்பைக் காண முடியாது.

ஆனால்

வட இந்தியாவில் அசோகன் காலத்தில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் குடைவரை கலை பரவியிருந்தது. அதற்குச் சான்றாக பராபர், நாககார்ச்சூனிக் குடைவரைகளை குறிப்பிடலாம். வட இந்தியாவில் இருந்து வந்த முனிவர்கள் இக்கலையை அறிந்திருக்க பெரிதும் வாய்ப்பு உள்ள பொழுது இயற்கையான குகைகளில் தங்க
வேண்டிய அவசியம் யாது ?

காரணம்

இக்குகைகளில் தங்கிய துறவிகள் அசோகனின் காலத்திற்கும் முற்பட்டவர்கள். அதற்குப் பின்னர் வந்த சமணத் துறவிகள் இக்குகைகளில் தங்கி சமணக் கடவுளர்களைப் பாறைகளில் புடைப்புகளாக உருவாக்கி வட்டெழுத்துகளில் எழுதியுள்ளனர்.

ஒரிசா பகுதியில் எவ்வித கலை அமைப்பும் இல்லாத சிறிய பெட்டி போன்ற அமைப்புடைய குடைவரைகள் பல உள்ளன. அத்தகைய அமைப்பு கூட தமிழக குகைகளில் காணப்படவில்லை. இவற்றிலிருந்தும் தமிழி எழுத்துகள் காலத்தால் முற்பட்டவை என்பது விளங்கும்.

தொன்மைத் தமிழி எழுத்துகள் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த பாறை & பானைகளில் காணப்படும் கீறல் குறியீடுகளில் இருந்து **கி.மு. 500 அளவில் தோற்றுவிக்கப்பட்டு, தமிழ் மக்களால் சீர் செய்யப்பட்டு, தமிழகத்திற்கு வந்த சமண முனிவர்களால் கற்றுக் கொள்ளப்பட்டு, அவர்கள் மூலமாக இலங்கைக்கும் வட இந்தியாவிற்கும் சென்று, அங்குப் பிராகிருதம் எனப்படும் பாகத வடமொழிக்கு ஏற்ப, மூல தமிழ் எழுத்துகளில் இருந்து வர்க்க எழுத்துகளும் பிற எழுத்துகளும் தோற்றுவிக்கப்பட்டு, மௌரியப் பேரரசன் அசோகனால் பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது என தெளிவாக அறிய முடிகிறது.

தமிழ்நாட்டின் தமிழி எழுத்திலிருந்து நாளடைவில் இருவகை எழுத்துகள் வளர்ச்சி பெற்றன. அவை தமிழ் மற்றும் வட்டெழுத்து. இதே காலகட்டத்தில் பல்லவர்களின் ஆட்சியால் வடமொழி வளர்ச்சியுறத் தொடங்கியது. வடமொழிக் கல்வெட்டுகளை எழுத தமிழில் எழுத்துகள் இல்லாமையால் பல்லவர்கள் அசோக பிராமியிலிருந்து வளர்ச்சி பெற்ற தென்னக எழுத்து வகையிலிருந்தும் தமிழின் மூல எழுத்துகளையும் பயன்படுத்தி புதியதாக கிரந்த எழுத்துகளை உருவாக்கினர். இதுவே பல்லவ கிரந்தம் எனப்பட்டது. இவையே இன்று வடமொழி எழுதுவதற்குத் தமிழ் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் எழுத்துகளில் இருந்து அசோகன் பிராமி கி.மு 3 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்றது. தமிழகம் தவிர பிற மாநிலங்களில் வடமொழியின் தாக்கம் மிகுந்திருந்தபடியால் இவ்வெழுத்துகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வழக்கத்தில் வந்தன.

அவ்வகையில்...

~தெலுங்கு மொழிக்கான முதல் கல்வெட்டு எரிக்கல் முத்துராச்ச தனஞ்செயனின் எர்ரகுடிபாடு களமல்லா என்ற கல்வெட்டாகும். இது கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது.

~கன்னட மொழிக்கான கல்வெட்டு ஹல்மிதி கல்வெட்டு ஆகும். இதன் காலமும் கி.பி. 5ஆம் நூற்றாண்டாகும் .

~13ஆம் நூற்றாண்டு வரை கேரளாவில் தமிழே மொழியாக இருந்து மலையாள மொழி வடமொழிக் கலப்பாக உருவாக்கப்பட்டது. மலையாள மொழியின் முதல் கல்வெட்டு அத்திங்கள் கல்வெட்டாகும். இது 13 -ஆம் நூற்றாண்டினது.

மூலம் - http://fbtamildata.blogspot.com/2018/02/blog-post_77.html

.......................

முனைவர் ராசவேலு அவர்களின் ஐ கார நிலைபாடு கூற்று .....

50 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓலைகளில் மீள் பதிப்பு செய்யப்படுபவை. ஒரு கால கட்டத்தில் பதிப்பிப்பவர்கள் அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்ப மாற்றம் செய்து பதிப்பிப்பர். உயிர் எழுத்து 12 என்று உள்ளது. ஆனால் உண்மையில் 'ஔ' இல்லை 13 வதாக 'ஃ' இல்லை. 'ஐ' க்கு பதில் **400 வரை 'அய்' என எழுதினர். 'ஒள' க்கு பதில் 'அவ்' என எழுதினர். பிற்கால வட இந்தியத் தாக்கம் 'ஐ' திருநாதர் குன்று கல்வெட்டில் வருகிறது. இது சமணர் கல்வெட்டு. 'ஐ' முதன் முதலாக கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் வருகிறது
https://groups.google.com/forum/…

..................

தொல்லியல் ஆர்வலர் கட்டுரையைப் படித்த பின் சிந்தை தூண்டலுக்கு ஆளாவது திண்ணம். தமிழி & தமிழ் பிராமி வேறுபாடு உள்வாங்கி படிக்க வேண்டும் ; புரிய கடினமானது படிப்படியாக பின்னர் அறிந்து கொள்வோம் என எண்ணத் தோன்றியது... காரணம் , தொன்ம தேடல் ... தொன்மை கற்றல் எளிதன்று

இந்திய , தமிழக தொல்லியல் துறையில் உண்மைக்கு குரல் கொடுப்பது என்பது அவ்வளவு எளிய காரியம் அன்று ... அதனை முனைவர் அவர்கள் எழுத்திநின்று .. அவை புலப்படுத்தும் கருத்தினின்று அறிய / உணர முடியும் .

தமிழி உண்மை தேடலில் .. தொல்லியலில் அவர் கண்ட / அறிந்த சரித்திர சான்றுகளை .. இந்திய , தமிழக கல்வெட்டு சுவடுகளை பௌவியமாக நமக்குக் கடத்தி விட்டார் ; தமிழர் நாம் கருத்தாக உள்வாங்கி , சிதைவுறச் செய்த தமிழியின் எழுத்துரு தொன்மத்தை அதன் மூலத்திநின்றே அசல் மாறாமல் உரு ஏற்றும் வல்லமை உளோம்.

~வல்லான் வகுத்ததே அறம் - சில மேலாதிக்க இந்திய உணர்வு.
~வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு - இது தமிழர் அறம்.
~வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் - இதுவே தமிழனின் மரபு ;

(** ஆய்வு கண் கொள்வோம்)

ஐ - தமிழ்ப் பொதுமக்கள் நமது பார்வையில் ....

தொடரும்.

 

ஐ' காரம் தமிழிக்குப் புதிதல்ல ...

'ஐ' தொன் தமிழியில் இல்லை என்றது உண்மையா ?

பாகம் 2 / 2

ஐ - அழகு .

ஐ - 5 - ஐந்து - தமிழ் எண்ணியல் சார்ந்தது .

ஐ - தமிழ் எண்ணிக்கை குறிப்பது = ஐம் - ஐம் பூதம் , ஐம்பது, ஐவர்.

ஐ - மரியாதை குறிப்பது ; ஐ + ஆள்( ஐயாள்) = ஐயர் , ஐயன் , ஐயை .

ஐ - ஐயனார் = கடவுள் / குல தெய்வம் .

ஐ - ஐயம் - குணம் சார்ந்தது - பயம் , சந்தேகம் குறிப்பது.

ஐ - தமிழ் இலக்கணம் - 2 ஆம் வேற்றுமை உருபு .

ஐ - ஐக்கியம் - ஒற்றுமை / இணக்கம் குறிப்பது ;

ஐ - உணர்ச்சி குறிப்பது ...
ஐ ... ஐயோ ! ..வியப்பு குறிப்பது ;
ஐ ... ஐயோ ! ..வலியைக் குறிப்பது ;

ஐயோ = நமன் / யமன் / எமனின் '''மனைவி''' - அதாவது மனிதன் இயலாமையின் / துயரத்தின் விளிம்பில் ஒப்பாரி .. ஓலமிடும் நிலைக்குத் தள்ளும் அவனது சத்தி / சக்தி குறிப்பது ;

iPhone . iPad . iPod . iPod touch -
ஐ-போன் , ஐ-பேட் , ஐ போட் , ஐ-பாட் டச் ... என்னே ! காலத்துக்கு ஏற்ற மின்னியல் உலக ''ஐ'' என தமிழின் எழுத்துரு மகிமை .


•இப்படி எண்ணற்ற சீர்மை வாய்ந்தது தமிழி .. தமிழியல் 'ஐ' எழுத்துரு ; அதனை தமிழ்மொழி பெற்றது பேறு ஆகும் ; அந்த மகிமை அறிந்தும் நீக்க வேண்டும் ; தமிழுக்கு ஐ தேவை இல்லை என்று சொன்னோர் உள் நோக்கம் கண்டிப்பாக வேறொன்றாக இருந்தது ; ஐ தமிழுக்கு தகராறு அல்ல ; அப்படி ஆக்கி & சித்தரித்து விட்டிருக்கிறார்கள் ; 'ஐ' மடை மாற்றி , திசை திருப்பப்பட்ட எழுத்துரு ஆகும்.

•பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்;
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.
-- சித்தர் திருமூலர் .

பொருள் - பின்னால் தயங்கி நின்று ஏன் பிறவி பெறுகின்றனர் ? ; அவர்கள் முந்தைய பிறவிகளில் நன்கு முயன்று தவத்தைச் செய்யாதோர் ஆவார். ஆனால் , நான் நல்ல தவம் செய்திருந்த மையால் தமிழ் சீர் பெற என்னை இறைவன் படைத்த நோக்கம் ஆகும் என திருமூலர் சொல்வதாக பொருள் சொல்வர் .


•திருமூலர் காலத்தை பல்வேறு காலக் கணக்கில் கணிக்கும் நிலையில் திருமூலர் தொன்மத்தில் இருந்தவராக எடுத்துச் செல்லும் தகுதி படைத்த நிலையில் , தமிழ்மொழியின் மூலத் தமிழியில் ஐ இல்லை எனில் அது எங்ஙனம் ? ;

•சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன் என திருநாவுக்கரசர் கூறுகையில் அவர் வழிபட்ட தமிழர் மரபில் 'ஐ' ஆதியில் இல்லை என்றால் நெஞ்சில் நெருடல் வராமல் இருக்குமா ? .

•சித்தர் பாரம்பரியத்திலேயே தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் , தமிழியல் வரலாறுக்கும் என அதி தொண்டாற்றி , வரலாறு காணா துன்பியலைக் கடந்தனர் கருவூறார் சித்தர் மரபினர் ; அவர்கள் போன்ற பல சித்தர் பெருமக்கள் காலமெல்லாம் வார்த்து வளர்த்தெடுத்த தமிழர்தம் தொன் தமிழியில் ஐ இல்லை என்பது எங்ஙனம் ? .


•எல்லாம் , தமிழரை அடிமைபடுத்தி ஆள வந்த பிற மொழிகார இனங்களும் அவர்களின் அரசுகளும் சுமார் ஆயிரம் ஆண்டு முன்னர் தமிழுக்கு தீங்கு இழைத்தனர் ; சிதைத்தனர் ; சின்னம் பின்னம் செய்தனர் ; அந்த விளைவுகளில் ஒன்று ஐ காணாமல் போய் விட்டது ; ஔ-காரம் பதுக்கப்பட்டு இட்டது ; பானை ஓடு , கல்வெட்டு தமிழியில் கிரந்த ஸ , ஸூ ஊடுருவ , அதற்கு உரிய தமிழி வாழ்விழந்துவிட்டது ; ஐ .. ஜ அப்படி என்ன ஆந்திர கிரந்த வகை தென்பிராமி வேறுபாடு வந்திடப் போகிறது ? ; தமிழ் , தமிழர் வரலாறு புரட்டுக்குள் புனையப்பட்டு கிடக்கிறது ; வரலாறு தேடலுக்கான காலமாகிய விக்கிபீடியா அதற்குச் சான்று.


•தொல்காப்பியர் பலர் , அகத்தியர்கள் பலர் ; தமிழ் , தமிழர் வரலாறு ,இலக்கணம் , இலக்கியத்துள் ஊடுருவினர் ; சித்தரியல் மண்ணோ புதைந்திருந்து புதை பொருள் .. தொல் பொருள் என தன்னை வெளிபடுத்துகிறது ; இனியும்.. இன்னும் மறைக்க ,மறுக்க முடியும் என்றே நினைக்கிறார்கள் ! ; போராடுகிறார்கள் ! ;

இந்நிலையில் ...

•சமணர்களோ , பௌத்தர்களோ , அசோகரோ கற்று கொடுத்து தமிழர் எழுத்து அறிவு பெறவில்லை ; கற்றறிந்த தமிழர்களிடமே அனைத்தும் கற்றவர்கள் பிறர் என விளக்கிவிட்டார் தொல் துறை முனைவர் சு. ராசவேலு.


•இலக்கிய தரவுகள் பெரும்பாலும் 50 ஆண்டுக்கு ஒரு முறை ஓலையில் மீள் பதிப்பு செய்யப்படும் . ஒரு கால கட்டத்தில் பதிப்பிப்போர் அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்ப மாற்றம் செய்து பதிப்பிப்பர். உயிர் எழுத்து 12 என உள்ளது. உண்மையில் 'ஔ' இல்லை 13 வதாக 'ஃ' இல்லை. 'ஐ' க்கு பதில் கிபி 400 வரை 'அய்' என எழுதினர். 'ஒள' க்கு பதில் 'அவ்' என எழுதினர். பிற்கால வட இந்தியத் தாக்கம் 'ஐ' திருநாதர் குன்று சமண கல்வெட்டில் வருகிறது. --தொல் துறை முனைவர் சு. ராசவேலு

https://groups.google.com/forum/…

•சமணர்களே ஐ எழுத்துருவை தமிழுக்கு அறிமுகம் செய்தனர் ; சமணம் ஊடாக ஐ காரம் கிபி 3 ஆம் நூற்றாண்டு வந்தது ; கிபி 5 ஆம் நூற்றாண்டில் வந்தது ; கிபி 9 ஆம் நூற்றாண்டில் தமிழியில் ஐ வந்தது என்று பல்வேறு தொல்லியல் குளறுபடிக்கு இடையில் ஐ இன்று பேசப்படுவது ஐ கரம் / காரம் உண்மையில் அவ்வாறு ஆனதல்ல ; எல்லாம் பொய் புரட்டு கட்டுக் கதைகள் ; இன்னும் கொஞ்ச காலத்தில் தமிழ் சமணரும் அடையாளம் இழந்து சைனர் ஆகிடுவர் .

•இப்படியெல்லாம் கேட்டும் படித்தும் நம்மால் அக்கடா - சீவனே - செவனே என மனம் நொந்து சும்மா போக மட்டுமே முடிகிறது ; காரணம் , துறை சார்ந்தோர் அங்ஙனம் பேசுகிறர் / எழுதுகிறர் ;

உண்மை நிலை என்ன ? ;



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 •தொல் துறை முனைவர் சு. ராசவேலு சொல்வதை தமிழர் நாம் உய்த்துணர , உற்று நோக்க , தீர ஆராய , கவனிக்க வேண்டும் .

''நம்மவர் செய்யும் தவறு ஒப்பு நோக்காதது. வட இந்தியப் பிராமி அறியாது - தமிழி தொன்மையை வரையறை செய்தல் - பிறகு பேரறிஞர் சொல்லி விட்டார் என அரைத்த மாவையே அரைக்க வேண்டியதுதான். 99 % கல்வெட்டு ஆய்வாளர்களே இத்தவறு செய்கின்றனர். அறிவியல் காலக்கணிப்பு , கணிப்பு கொடுப்பதில் பொருந்தல் சான்று வந்த பிறகும் கூட ஐராவதம் சொல்லி விட்டார் , நாகசாமி சொல்லி விட்டார் , இவர் என்ன சொல்வது ? என்பர். இவர்களை விட இந்திய கல்வெட்டுகளில் நன்கு ஊறித் திளைத்த பி.ஆர். சீனிவாசன், கே.வி.ரமேசு சம்பத் போன்றோர் உட்பட என்னையும் ஏற்க மாட்டார்கள். ஐராவதம் ஒரு வேளை இன்று இருந்திருந்தால் ஏற்று இருப்பார் ''.
--தொல் துறை முனைவர் சு. ராசவேலு

•தரவுகள் கிடைக்கக் கிடைக்க வெளிச்சம் வரும்.
--தொல் துறை முனைவர் சு. ராசவேலு

•எதோ ஒரு விடிவு வரும் என்று நம்பிக்கையுடன் வருத்தமுற தமிழர் பொதுமக்கள் நாம் வாழ்கிறோம் ; அந்நம்பிக்கை வீண் போகாது ; முனைவர் ராசவேலு சொல்வதுபோல வெளிச்சம் வரும் .

•மூலக்கூறு , ஆதிமூலம் அறியும் ஆற்றல் தமிழ்ப் பொது மக்களிடம் அதீத ஆற்றலுடன் திகழ்கிறது ; பட்டறிவு ,பகுத்தறிவு , குறிப்பறிவு , அதற்கு அப்பால் நுணுக்கிப் பார்க்கும் நுண்ணறிவு , மெய்யறிவு இப்படியாக பயணிப்போம். அது காட்டிக் கொடுக்கும் சுவடுகளை மீட்டி தமிழியை நம்மால் அதன் தொன்ம நிலைக்கே சென்று அடைய முடிகிறது .

•சிந்து சமவெளி 'ஐ' - எண்ணும் , எழுத்தும் எப்படிபட்டது ? ; அது
ஐ - எழுத்தாகவும் எண்ணாகவும் தமிழோடு நீண்ட பாரம்பரியம் மிக்கது ; ஐக்கியமானது. தொன்ம 'ஐ' எழுத்துரு தமிழருக்கு கை கொடுக்கத் தயாராக இருக்கிறது ! ; தமிழர் விழிப்பு படலம் காண்போம்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு --அதிகாரம்:கல்வி குறள் எண்:392

எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்

'ஐ' என்பது தமிழ் எழுத்து மட்டுமல்ல ;
'ஐ' என்றால் r - ௫ - 5 - ஐ - ஐம் - ஐந்து என எண்ணும் ஆகும்.

•ஐ - சிந்து சமவெளி காலம் தொட்டே & இன்னும் ஆதி தொட்டே சுமார் 5000 முதல் 10000 ,11000 ஆண்டுகளாக -- ஆதியில் சித்திர குறியீடாக பின்பு தமிழியாக , தமிழரோடு இணைப்பில் இருப்பது ஐ


I II III IIII IIIII IIIIII IIIIIII - குறுங் - நேர்கோடு இட்டு முறையே 1 2 3 4 5 6 7 என எண்ணியல் கண்டோர் பண்டைய தமிழர் ;

இந்த எண்ணியல் I II III IV V IIV IIIV - Roman எண் குறியீடாக இன்று வரை ஐரோப்பிய உலகில் சிறு மாறுபாடு கண்டு நடப்பில் இருக்கிறது ; இது சிந்து சமவெளி பிறப்பு என தமிழியல் மூலக்கூறு தொடர்ச்சி .

அதில் IIIII - sai = 5 ஆகும் ; இதனை வடக்கின் குய் பழங்குடி சாய் என்பது அன்றைய குறியீடு பொருள் என்கிறர் ; இத்தமிழ் மரபு காலம் முழுதும் & உலகம் முழுதும் விழுது விட்டுள்ளது.

sai / ai ... தமிழரிடை 5 = ஐ - ஐந்து - ஐம் என்று எண்ணியல் / இலக்க பண்பில் துலங்குகிறது .

sai (ai) ... bai ... banj - பஞ் = பாஞ்சாலி , பஞ்சபூதம் (ஐம் பூதம்) , பஞ்சாயத்து , பஞ்சபாண்டவர் என எண்ணியல் சார்பு சொல்லாக & பொருளாக ஆகி வருகிறது ; அனைத்தும் தமிழியல் மூலக் கூறு வேர் கொண்டது . சமசுகிருதத்தில் 5 ஒலிப்பு படத்தில் தரப்பட்டுள்ளது

sai / ai ... bai ... banj - பஞ் - 5 - இந்தியாகிறது.

sai / ai.. fai (five) - ஆங்கிலமாகிறது .


IIIII - s(ai) - ஐ - ஐந்து - சிந்து சமவெளி தொட்டு தமிழில் துலங்கும் எண் 'தமிழியில்' ஆதியில் இல்லை என்பது எங்ஙனம் பொருந்தும் ?


•மாதம் என்பதற்கு சிந்து சமவெளியோர் ....
(B)vill - b (v) = வில் அம்பு ஆள் மாதம் ...Billambalomaan = ஒன்டி / முதல் மாதம் , ரன்டோ , மூன்டோ, நாலோ, (s)ayyo - ayyo - ஐஒ - ஐந்து ,
(S)aro - ஆறோ , ya(r)o - yalo - ஏலோ இவ்வாறாக maan = மாதம் என்று தமிழியல் எண்ணிட்டு மாதத்தைக் குறிக்கின்றனர் ; இவ்விடத்தும் ஐ - ஐஒ - ஐந்து எண்ணியல் துலங்க காணலாம்.
https://www.facebook.com/…/pcb.123263972…/1232639486880609/…

மேலும்

•(s)ai - ஐ - சிந்துவில் எண்ணாக மட்டுமல்லாமல் எழுத்தாகவும் - சொல்லின் பொருளாகவும் துலங்கல் காண்போம்.


(S)AYANN AL - ஐயன் +ஆள் = ஐயனாள் , ஐயாள் , (கிராம சபை ஆள்) பெரியவர் / தலைவர் - பூசாரி ( சித்தர் !) / பஞ்சாயத்தார்போல JUDGE - நீதிமான் ஆவார் ;


1 - 9 எண்ணியலில் ஐந்து - 5 நடுநிலைபோல (S)AI .. (S)AYANN AL ஐயன்+ஆள் - நடுநிலையாளர் ..நீதிமான் .. JUDGE என பொருள் பெறுகிறது . SAI - சாய் ..சாயி .. சாயிபாபா என மக்கள் வழக்கின் பொருள் விருப்பு வெறுப்பு இல்லா - நடுநிலையாளன் - கடவுள் என பொருள் தந்து உதவுவது சிந்து சமவெளி தொன் தமிழ் / தமிழன் மரபு ;

(S)AYANN AL - ஐயன் +ஆள் = ஐயனாள் / ஐயனார் , ஐயாள் / ஐயாளு / ஐயர் / ஐயன் / ஐயா / ஐயை என தமிழுக்கும் மதிப்பு / மரியாதை நிமித்தம் பொருள் கொண்டே ஆகிறர் ; இவ்வாறாக வெகு ஆதி காலம் தொட்டே 'ஐ' தமிழ் எண்ணுக்கும் & தமிழி - தமிழுக்கும் , தமிழருக்கும் புதிதல்ல ; இத்தகு சீவகாந்த சத்திமிகு தமிழை எளிதில் அழித்திட .. வீழ்த்திட முடியுமா ?

ஆனானபட்ட 'ஐ' ...

•தொன் தமிழியில் இல்லை என்றதன் மர்மம் ? ; நீண்ட பயணம் கொண்ட ஐ தமிழியில் வெகு பிற்காலத்தில் மட்டுமே அறியப்பட்டதாக கூறப்படுவது சிதைத்தவர்கள் இல்லாமல் நடவாது ;

•தமிழர் சிந்திக்க வேண்டும். !! ; இது நாள் வரை தொல்லியல் துறையால் சொல்லப்பட்டு வந்தது ஒரு புதிர் மட்டுமல்ல புரட்டு என்பது தமிழர் மனத்தினில் ஆளப் பதிதல் வேண்டும்.

ஐ -- (ai) உண்மை நிலை என்ன


•ஐ - தொன் தமிழியை பிராமிக்குள் பிறிதொரு முகமாக உலாவ விட்டு தமிழியில் இருந்து அதனை உருவி உள்ளனர் ! ; தமிழியில் அதன் அடிச்சுவடு இல்லாது ஆக்கியுள்ளனர் ! ;

சான்று உண்டா ? ;

உண்டு ;

கருதுகோல்கள் -

•தமிழியல் ஐ எழுத்துருவை , தமிழியில் இருந்து உருவி அப்படியே கொண்டு சென்று விட்டனர் ; தொன் தமிழியில் '''உருவப்பட்டு''' தென்பிராமிக்கு சென்றுள்ளது . தமிழியில் ஐ இல்லை என்று சும்மா விடப்பட்டு உள்ளது ; பின்னர் பல்லவ கிரந்த .. ஆந்திர வகையான தென் பிராமிக்கும் , மற்ற எழுத்துரு வகைக்கும் பயன்படுத்தப்பட்டு பிற்கால சமணர்கள் (சைனர்) வாயிலாக தமிழியில்- வட்டெழுத்தில் வந்ததுபோல புகுத்தியுள்ளனர் ; அதனால்தான் கிபி 3 , கிபி 4 , கிபி 9 என இத்தனை கால வேறுபாடு குளறுபடிகள் ...

•பண்டைய தமிழி ஐ எழுத்துரு 3 வகை என கொள்வோம் -

IIIII - ai / AI - சிந்து சமவெளி ஐ

r = ரு - ஐ - தமிழ் எண் / இலக்க ஐ

முக்கோண எழுத்துரு தமிழி ஐ ( படத்தில் )

+ = கூட்டல் போன்ற குறியீடு தமிழியின் பண்டைய 'க' எழுத்துரு 1 எனும் எண் ஆகும் . அதுபோல ரு - r எண்ணியல் குறியீடு 5 எண் குறிக்கிறது ; அது ஏன் ஐ = r தமிழி ஆக முடியாது ? ;

r போன்ற குறியீடுகள் தரும் தொல் எழுத்துருகள் தொன்மங்களில் கிடைத்தால் நடப்பு வாசிப்பிநின்று விடுபட்டு ஐ தமிழி எழுத்தாக படித்துப் பார்த்தால் அவசியம் .


•முக்கோண வடிவம் - தமிழியின் ஐ ஆகும் ; இதனைத்தான் சிதைவு செய்துள்ளனர் ; தமிழ்மொழியில் ஐ ஆணிவேர் விட்ட ஒன்று என்பதால் அது சித்தர் பாரம்பரிய ஓலை சுவடிகளில் , வைத்தீசுவரன் கோயில் போன்ற நாடி சோசியங்களில் துலங்கிய நிலையில் இருப்பதால்.. தொல்லியல் துறை சத்தி மீறி அப்பாற்பட்ட பொது மக்கள் பயன்பாட்டில் உள்ளது ;

எனவே

~நாசுக்காக ஐ எழுத்துரு இல்லை என்றதை...
~ஐ வேண்டாம் என்று முழங்கியது தோல்வியுற ...
ஒரு வித பதட்டத்துடன் வட்டெழுத்தில் மீள் புகுத்தல் செய்துள்ளனர் ; அதன் குளறுபடிகளை கிபி 3 , கிபி 5 , கிபி 9 என படத் தொகுப்பில் காண்கிறோம் என்று கருத்து கொள்வோம். .

•இதுகாறும் உள்ள கல்வெட்டியல் வாசிப்புகள் பல ஊகிக்கப்பட்டவை .. அனுமானிக்கப்பட்டவை ;

எனவே ,

தமிழர் புதிய .. தூய அணுகுமுறை வழி தொன் தமிழி உண்மையை உலகிற்கு வெளிபடுத்த வேண்டும் ; மேற்கண்ட கருதுகோல்கள் கருதி ஆராயப்பட தமிழி / தமிழர் சரித்திரம் தக்க சான்றுகளுடன் நிறுவப்படும். (எ காட்டு-இடுகுறிப்பு கண்ணபிரான் - KRS வாசிப்பு)


'ஐ' தமிழுக்கு வேண்டாம் என்றது வாஞ்சையா ? ; வஞ்சமா ?.

•தொன் தமிழியில் 'ஐ' எழுத்துரு (உயிரெழுத்து) இல்லை என்பார் அடுத்து 'ஐ' தமிழுக்கு தேவை இல்லை 'அய்' என்று எழுதுதலே போதும் என்பாரும் இருந்தனர் ; இது உண்மையில் தமிழ் மேல் கொண்ட வாஞ்சையா ? ; மொழி அறிவியல் பூர்வ உணர்வா ? ; ஔ கரத்துக்கும் அதே நிலை ; தற்போதோ ங கரங்கள் , ஞ கரங்கள் வலைதள குழுமங்களில் அல்லல்படுகின்றன ;


'ஐ' கார பயன்பாட்டு சொற்கள் (எ.கா.) 'அய்' ஆக்குவதன் வழி -- அய்யா / அய்யர் , அய்ந்து , அய்ம்பது , அய்ம்பூதம் , அய்வர் , அய்யாயிரம் , அய்ம்பதாயிரம் , அய்ந்திணை , அய்ம்பொறி என எழுதுவதை இன்று எண்ணிப் பார்க்க முடிகின்றதா ?.

ஐ நீக்கப்பட்டால் இலக்கணத்தின் இரண்டாம் வேற்றுமை உருபு நிலை என்ன ? .

தன் தாய்மொழியைத் ... தமிழை அணுகும் முறை உயிரின் , உணர்வின் நிலையிலிருந்து பிறக்குமாயின் தமிழ் நெடுங்கணக்கு இப்படி துச்சமாய் வெறுப்பு , கசப்பு வார்த்தைகளால் உமிழப் படாது.


பண்டைய குல மக்கள் பேசி , இறை எனப்படுநிலை முன்னோர் முருகன் , சிவன் சங்கம் கண்டு நக்கீரன் , அகத்தியன் எண்ணற்ற சித்தர் பெருமக்கள் நெறிபடுத்தி , கடத்தி தந்த ஒரு மொழி அவ்வளவு குறைபாடு & பயன்பாடின்மையை சுமந்து நிற்குமா ? ; புரிந்துணர்வில் , கற்றல் அணுகுமுறையில் , அவசரப்படுவதில் எங்கோ தவறு இருக்கிறது ! ;

ஆக


தமிழி தொடர்பில் இளைய தலைமுறையினர் புத்தாக்க பாதையில் களம் காண வேண்டும் ; இன்று வரை 5 முதல் 10 % இடங்களே தமிழகத்தில் தொல்லியல் அகழ்வு மேற்பட்டுள்ள நிலையில் தமிழியை முழுமையாக செதுக்கி வரையறை காட்டிட முடியாது. பல்வேறு தமிழி வாசிப்புகளின் பொருள் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. அத்தோடு கிபி 12 முதல் கிபி 15 வரை பேரளவு சீரழித்த கொடுங் குழப்பங்களை தமிழி எழுத்துரு எழுதியலில் காண முடியும் ; இது தமிழர் அடிமைபட்ட காலத்தின் விளைவுகள் ; தொல்காப்பியர் காலத்தில் இருந்த புள்ளி கிபி 12 --கிபி 15 ஓலை சுவடியில் காணமல் போனது எனப்படுவது கவனிக்க வேண்டியது ; மொழி அழிப்பு காரண காரியம் உள்வாங்கப்பட்டு அடுத்த கட்ட நகர்வுக்கு செல்ல வேண்டும்.


தொல்லியல் அறிஞர் சிலர் , சமூகவியல் ஆய்வர் சிலர் சொன்னதை மட்டுமே நம்பி , எவ்வளவோ இழப்புகள் கண்ட தமிழினமாய் இன்று நாம் வாழ்கிறோம் ; இ -மடல் வழி இந்த உண்மைகளை சொல்ல மனந்திறந்த தொல் அறிஞர் சு. ராசவேலு , நடன காசிநாதன் மற்றும் சிலர் தமிழர் நமக்கு விடிவெள்ளி ;

தமிழ்ப் பொதுமக்களாய் ஆய்வு கண் திறப்போம் ; குறிப்பறிவோம் ; நுட்பமாய் நுண்ணறிவுடன் களம் காண்போம். தமிழ் , தமிழர் வரலாறு மெய்ம்மை படைப்போம் ; கட்டுரை கருது கோல்களை ஆராய்வோம் .

தமிழியை உள்ளது உள்ளவாறு மீளாக்கம் செய்வோம் .



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard