Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உலகம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
உலகம்
Permalink  
 


உலகத்தார் (2)
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
  உள்ளத்துள் எல்லாம் உளன் - குறள் 30:4
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
  அலகையா வைக்கப்படும் - குறள் 85:10

 முதல்

 
 உலகத்தார்க்கு (1)
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
  எழுவாரை எல்லாம் பொறுத்து - குறள் 104:2

 முதல்

 
 உலகத்து (7)
விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து
  உள் நின்று உடற்றும் பசி - குறள் 2:3
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
  பொன்றாது நிற்பது ஒன்று இல் - குறள் 24:3
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு
  தெள்ளியர் ஆதலும் வேறு - குறள் 38:4
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
  எ பால் நூலோர்க்கும் துணிவு - குறள் 54:3
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
  வள்ளியம் என்னும் செருக்கு - குறள் 60:8
செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
  இயற்கை அறிந்து செயல் - குறள் 64:7
வீழ்வாரின் இன் சொல் பெறாஅது உலகத்து
  வாழ்வாரின் வன்கணார் இல் - குறள் 120:8

 முதல்

 
 உலகத்தும் (1)
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
  ஒப்புரவின் நல்ல பிற - குறள் 22:3

 முதல்

 
 உலகத்தொடு (1)
எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு
  அவ்வது உறைவது அறிவு - குறள் 43:6

 முதல்

 
 உலகத்தோடு (1)
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
  கல்லார் அறிவிலாதார் - குறள் 14:10

 முதல்

 
 உலகம் (13)
வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
  தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று - குறள் 2:1
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
  வானம் வழங்காது எனின் - குறள் 2:9
கெடுவாக வையாது உலகம் நடுவாக
  நன்றி-கண் தங்கியான் தாழ்வு - குறள் 12:7
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம்
  இல் எனினும் ஈதலே நன்று - குறள் 23:2
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த
  இன்னா உலகம் புகல் - குறள் 25:3
அருள் இல்லார்க்கு அ உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு
  இ உலகம் இல்லாகி ஆங்கு - குறள் 25:7
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
  பழித்தது ஒழித்துவிடின் - குறள் 28:10
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
  உயர்ந்த உலகம் புகும் - குறள் 35:6
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
  கூம்பலும் இல்லது அறிவு - குறள் 43:5
எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு
  அவ்வது உறைவது அறிவு - குறள் 43:6
பண்பு உடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
  மண் புக்கு மாய்வது மன் - குறள் 100:6
சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
  உழந்தும் உழவே தலை - குறள் 104:1

 முதல்

 
 உலகியல் (1)
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார்
  உண்மை நிலைக்கு பொறை - குறள் 58:2

 முதல்

 
 உலகு (30)
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
  பகவன் முதற்றே உலகு - குறள் 1:1
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
  வான் இன்று அமையாது ஒழுக்கு - குறள் 2:10
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
  பெருமை பிறங்கிற்று உலகு - குறள் 3:3
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
  வகை தெரிவான்-கட்டே உலகு - குறள் 3:7
பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு
  புத்தேளிர் வாழும் உலகு - குறள் 6:8
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு
  என் ஆற்றும்-கொல்லோ உலகு - குறள் 22:1
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்
  பேர் அறிவாளன் திரு - குறள் 22:5
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
  போற்றாது புத்தேள் உலகு - குறள் 24:4
தினல் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
  விலை பொருட்டால் ஊன் தருவார் இல் - குறள் 26:6
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
  தள்ளாது புத்தேள் உலகு - குறள் 29:10
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
  பெருமை உடைத்து இ உலகு - குறள் 34:6
இன் சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால்
  தான் கண்டனைத்து இ உலகு - குறள் 39:7
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
  கவி கை கீழ் தங்கும் உலகு - குறள் 39:9
தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு
  காமுறுவர் கற்று அறிந்தார் - குறள் 40:9
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு
  கொள்ளாத கொள்ளாது உலகு - குறள் 47:10
நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்
  கோடாமை கோடாது உலகு - குறள் 52:10
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்
  கோல் நோக்கி வாழும் குடி - குறள் 55:2
குடி தழீஇ கோல் ஓச்சும் மா நில மன்னன்
  அடி தழீஇ நிற்கும் உலகு - குறள் 55:4
கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை
  உண்மையான் உண்டு இ உலகு - குறள் 58:1
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
  உரிமை உடைத்து இ உலகு - குறள் 58:8
வினை-கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை
  தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு - குறள் 62:2
எனை திட்பம் எய்திய-கண்ணும் வினை திட்பம்
  வேண்டாரை வேண்டாது உலகு - குறள் 67:10
கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை
  விடாஅர் விழையும் உலகு - குறள் 81:9
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை
  இன்மையா வையாது உலகு - குறள் 85:1
பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன்
  தகைமை-கண் தங்கிற்று உலகு - குறள் 88:4
இளி வரின் வாழாத மானம் உடையார்
  ஒளி தொழுது ஏத்தும் உலகு - குறள் 97:10
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
  பண்பு பாராட்டும் உலகு - குறள் 100:4
குற்றம் இலனாய் குடி செய்து வாழ்வானை
  சுற்றமா சுற்றும் உலகு - குறள் 103:5
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
  கெடுக உலகு இயற்றியான் - குறள் 107:2
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
  தாமரைக்கண்ணான்_உலகு - குறள் 111:3


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard