Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Nivedita Louis -சாந்தோம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Nivedita Louis -சாந்தோம்
Permalink  
 


சாந்தோம் தோமையார் தேவாலயத்தில் ஒரு சிறு அருங்காட்சியகம் உண்டு. இதில் உள்ள இரண்டு முக்கிய கல்வெட்டுகள், சோழர் காலத்தியவை. இன்னும் பல போர்த்துகீசிய கல்வெட்டுகளும் உண்டு. இன்று வரை தேவாலயம் என்றுமே அவற்றை மறைத்தது இல்லை. 1893ஆம் ஆண்டு தேவாலயம் புதுப்பிக்கப்பட்ட போது தோண்டப்பட்ட குழிகளில் இருந்து கிடைத்த மண் பாண்டங்கள், எலும்புத் துண்டுகள், நாணயங்கள் போன்றவை இங்கே பாதுகாக்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் பகுதியில் செய்த அகழாய்வில் டெரா சிகிலாடா, அரட்டைன் வகை பானை ஓடுகள் இங்கே கிடைத்ததை உறுதி செய்துள்ளன. அவை காலக் கணிப்பு செய்யப்பட்டனவா என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை. சங்க காலம் முதலே இந்த இடம் உயிர்ப்புடன் இருந்து வருகிறது.

மக்கள் யார் வேண்டுமானாலும் அருங்காட்சியகம் திறந்திருக்கும் சமயம் இவற்றை சென்று பார்வையிடலாம். திடீர் என சில ஆண்டுகளாக கொடிமரம் இருப்பதால் அது இந்து ஆலயம், உள்ளே உள்ள பொருள்கள் இந்துக்களின் பொருள்கள் என்று வாதிட்டு வருகின்றன சில்லறை இந்து அமைப்புகள். மீண்டும் சொல்கிறேன். சோழனும், சங்க கால பானை செய்த குயவனும் எம் தமிழன். உங்களைப் போன்ற வந்தேறிய முக்கால் அரை வேக்காடு இந்துத்துவ வெறியர்கள் அல்ல. தமிழ் கிறிஸ்துவர்கள் லண்டனில் இருந்து இறக்குமதி ஆனவர்கள் அல்ல. மண்ணின் மைந்தர்கள். பூர்வகுடிகள். வந்தேறிய ஆரியர்கள் என்ன சார் எங்கள் தமிழ் பண்பாடு மீது கைவைப்பது? கடும் கண்டனங்கள்.

//POLICE SECURE SAN THOME CATHEDRAL
This follows a small group, said to be members of a pro-Hindu outfit barging into the Cathedral Museum on the campus this morning and charging that some articles on display here are from ancient temples. Police were alerted and a small posse screens visitors now.//- news and picture from Vincent D Souza



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Nivedita Louis Shalin Maria Lawrence நேத்து தானே பேசினோம்? அதுக்குள்ள ஆரம்பிச்சுட்டாங்க பாருங்க
Nivedita Louis அதான் சொன்னேன்ல பா..ஒரு கட்டுரை ரொம்ப நாளா சுத்தல்ல இருக்கு...அத base பண்ணி..இதெல்லாம் பண்ணுதுங்க
Nivedita Louis ஈஷ்வர் ஷரன். He is the one spearheading this I guess. Earlier too he was the kingpin in same problem. He has been repeatedly writing and propagating that Shiva temple was at the site of Santhome church which was pulled down by Portuguese. No proof whatsoever. Mere hate speech and venomous writing.
Shalin Maria Lawrence Nivedita Louis Yes I ve read that book...They are trying to bring a babur mosque kind of thing here.
Shalin ably supported by Subramanian Swami.
Shalin ithellam oru pozhaippu ivangaluku...2000 varushama thirudittu thane irukkanga. Innum adangalaiya?
Nivedita Louis we shall not leave it.Remember what happened when jayalalitha s cut out as mother mary was put .Namma kitta vachikka venam.
Shalin at the end of this I think I'll become a devout Christian. Thanks to these morons.
கண்டிப்பாக பாபர்மசூதி விவகாரம் போல ஆக நம்மூர்ல விடமாட்டாங்க
Nivedita Louis
1) எங்க ஏரியாவுல எப்படி உங்க சர்ச் இருக்கலாம்?
2) நாகப்பட்டினம் பக்கத்தில் உள்ள சர்ச்சும் கண்ண உறுத்திக்கிட்டுத்தான் இருக்கு
Shalin Maria Lawrence Nivedita Louis they are turning me into one..same pattern happened after babri masjid demolition
Louis Irudayadasan
1. சாந்தோம் போர்த்துகீசியர்கள் கோட்டை. மயிலாப்பூர் தெப்பக்குளமே நவாப் போனாபோகுதுன்னு பெரிய மனசோட குடுத்த கொடை
2. நாகப்பட்டினம் பக்கத்து சர்ச் எல்லாம் இவனுங்க கிட்டக்க கூட போக முடியாது. நாலு ஸ்டேட் இன்வால்வ்டு
Shalin Maria Lawrence Merry Christmas doli
Aiswarya Rao So unsettling!


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 Rhoda Alex இப்படி நேரம் பார்த்து காய் நகர்த்தும் யுக்தி மனதை பதைக்கவைக்கிறது. மதவெரியர்கள் சூடேரி இருக்கும் இந்த சமயத்தில் .. 
சோழர் காலத்து கல்வெட்டு தேவாலய வளாகத்தில் இருப்பது பெருமை தானே. நல்லினக்கம் தானே - இதை அவர்கள் என்று புரிந்துக்கொண்டு ....
நாங்கள் மட்டும் நல்லாயிருக்கனும் என்ற கீழ் நிலையின் வெளிப்பாடு. வருத்தம்.
Rhoda Alex இந்த மத நல்லிணக்கம் தான் அவர்களை பயம் கொள்ளச் செய்கிறது! அதைக் குலைப்பது எப்படி என்று தான் வெறி பிடித்து சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
Kiranya Kabali koyil layum indha santhome church museum pathi mention panirkradha pathen .. unga santhome walkla paathadhala nalla relate Pana mudinjudhu ...Elam Nalla dhane poitu iruku inga... En ipdi pandranga
Nivedita Louis Kiranya ingeyum edhavadhu try pannalam, vote vizhumnu than...
Srinivasennore Srinivasennore எதுக்கு போலீஸ்?
Nivedita Louis Srinivasennore Srinivasennore உள்ளே அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க
Louis Irudayadasan Nivedita Louis டெல்லி மாடலாக இல்லாமல் இருந்தால் சரி.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இசுலாமியர் ஒன்று பட்டாவது போராட்டத்தில் முன் நிற்கிறார்கள். கிறிஸ்துவர்கள்? ரோமை கத்தோலிக்கர் தனி, சிரிய கத்தோலிக்கர் தனி, சி.எஸ்.ஐ. தனி, டி. இ.எல்.சி. தனி, லூத்தரன் தனி, மார்த்தோமா தனி. இவர்கள் போக புதிய கிறிஸ்துவர்கள் தனி. அவர் சர்ச்சுக்கு இவர் போனதே இல்லை, இவர் ஆலயத்துக்குள் அவர் கால் வைத்தது இல்லை. கேட்டால் விக்கிரகம் இருக்கிற இடத்தை பார்த்தாலே பாவம், அங்கே பேய் இருக்கிறது, சாத்தான் இருக்கிறது என்று கதைகள் வேறு.

நீங்க இப்டியே பிரிஞ்சே இருங்க சார். அவன் செங்கல் செங்கலா பேர்த்துட்டு போட்டும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இந்த கபாலீஸ்வரர் கோயில் சாந்தோம் சர்ச்சுக்கு உள்ள தான் இருந்துச்சு குரூப் எல்லாம் இதை படிப்பீங்கன்னு நம்புறேன். (இது வரை உங்களை நான் பிளாக் பண்ணலைன்னா!) இந்த போஸ்ட் அவங்களுக்கு மட்டும் தான்!

கபாலீஸ்வரர் கோயில் முருகன் சந்நிதிக்கு முன்னாடி இந்த போர்த்துகீசிய கல்லறைக் கல் இருக்கு. கல்லறை அப்டின்னா உங்களுக்கு நன்னா புரியும்னு நம்பறேன். அதுல "CEV.NA ERA D64(6)3" அப்படின்னு போர்த்துகீசிய மொழியில எழுதி இருக்கு. என்ன அர்த்தம் அப்டின்னா "64(6)3ஆம் ஆண்டில் இறந்த" அப்டின்னு அர்த்தம். இந்த ரெண்டாவது 6 பின்னாடி வேலை பொழப்பு இல்லாத யாரோ போட்டது. கல்வெட்டு தேதி சரின்னா 643ஆம் வருஷம் போர்த்துகீசிய மனிதன் யாரோ ஒருத்தன் செத்த இடத்த நீங்க இப்ப ஆட்டைய போட்டு அது மேல கோயில் கட்டி இருக்கீங்க அப்டின்னு நான் சொல்லலாமா?

அதே கோயில் கல்யாண மண்டபத்தில "E.DE SEVS HE RDEIROS" அப்படின்னு இன்னொரு போர்த்துகீசிய கல்வெட்டு இருக்கு. "இன்னாரும் அவர் பிள்ளைகளும்" அப்டின்னு அதுக்கு அர்த்தம். ஆக யார் இடத்தை, யார் ஆட்டைய போட்டான்னு நீங்க சொல்லணும். அப்படியே கல்லறைக் கல்லைக்கூட விட்டு வைக்காம சுட்டுக்கிட்டு போய் நீங்க கோயிலா கட்டுன அழகு ஒரு பக்கம்னா இன்னொரு பக்கம் நேமினாதர் கோயில் என்ன ஆச்சு, மயிலாப்பூர் புத்தர் ஏன் இன்னும் பரிதாபமா அருங்காட்சியகத்தில் இருக்காருன்னும் சொல்லிட்டு போகணும்.

எந்த பௌத்த விகாரத்தை, சமண கோயிலை கபாலி கோயிலா மாத்தினீங்க, எந்த போர்த்துகீசிய கல்லறையை கொள்ளை அடிச்சு கல்லு திருடினீங்க அப்டின்னு சொல்லிட்டு சாந்தோம் சர்ச்சு பக்கம்

வாங்க. ரைட்டா?

 

Nivedita Louis
22 hrs ·இன்னிக்கும் சாந்தோம் மயிலாப்பூர் கல்வெட்டுகள் பத்தி, அங்கு கிடைத்த ராஜேந்திரன், ராஜராஜன் கல்வெட்டுகள் பத்தி, போர்த்துகீசிய கல்வெட்டுகள் பத்தி படிச்சு தெரிஞ்சிக்கணும் அப்டின்னா இந்த புஸ்தகம் தான் ஆதார மூலம். இதுல எந்த மத வேறுபாடும் இல்லாம தமிழர், இசுலாமியர், ஆர்மீனியர், போர்த்துகீசியர் கல்வெட்டுகள் பத்தி தெளிவா எழுதி இருக்கு. நூலை வெளிக்கொண்டு வந்தது மயிலாப்பூர் "கிறிஸ்துவ டயசீஸ்", ஆண்டு 1936. எழுதியவர் - பாதிரியார் ஹாஸ்டன்! கோயில் அங்கே இருந்ததை மறைக்கும் எண்ணம் இருப்பவர்கள் ஏன் இந்த நூலை வெளிகொணர வேண்டும்? சிந்தியுங்கள்!
 

படத்தில் இருப்பது வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சாமி கோயில் கருவறை. வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் அழகுறக் காட்சி தருகிறார். அவர்களுக்கு மேலே குடைவரை சிற்பமாக மகாவீரர் அருள் தருகிறார். கோயில் தங்களுடையது என்று அமைதியும் நல்லிணக்கமும் விரும்பும் சமணர்கள் யாரிடமும் சண்டையிடவில்லை. இதையும் அமைதியாக கடந்து போகிறார்கள். சிற்ப அமைப்பு கொண்டு இதன் காலம் கண்டிப்பாக கிபி 6-8 ஆம் நூற்றாண்டு இருக்கலாம் என்று கணிக்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். ஹிந்து தர்மம் யாரை காவு வாங்கி இருக்கிறது? பௌத்தமும் சமணமும் இன்று காணாமல் போக யார் காரணம்?

எல்லா மதமும் அமைதியாக நல்லிணக்கத்துடன் இருப்பதையே தமிழர் விரும்புகிறோம் என்பதை மட்டும் பதிவு செய்து கொள்கிறேன்.

 

JeyaVeera Pandian ஜைனன் என்றும் அமைதியானவன் இல்லை. ஜைனனுடன் ஒப்பிடும் போது பாப்பான் கத்துக்குட்டி.

இன்றைய ஜைனன் இந்து மதத்தில் மேல் ஏறி பார்ப்பனர்களை இயக்குகிறான். பார்ப்பனருக்கும் ஜைனனுக்கும் தங்கள் ஆதிக்கம் தான் முதன்மைக் குறிக்கோள்.

பாப்பான் தன் மதக் கருத்துக்கு எதிரான கோயில் வழிபாட்டில் மணியாட்டுகின்றான். ஜைனன் தன்னையும் இந்து என அரசியலமைப்புச் சட்டம் கூறியதை ஒரு போதும் எதிர்த்ததில்லை.

ஜைனனும் இன்றைய பிராமணனும் சங்க காலத்திலிருந்து இன்று வரை சகாக்கள் தான்.
 
Nivedita Louis JeyaVeera Pandian தமிழ் சமணர் பற்றியே என் பதிவு. மடைமாற்ற வேண்டாம். சுவேதாம்பரர்கள் பற்றிய என் கருத்து வேறு.
  • JeyaVeera Pandian Nivedita Louis சமண படுக்கைகள் யாருடையது . கழுவேற்றப்பட்ட சமணர் தமிழ் சமணர் தானே. இந்த சமணர் தான் தமிழை வடமொழிமயமாக்க முயற்சித்தனர்.

    பக்தி இயக்கம் பார்ப்பனர் இயக்கம் என்கிறீர்களா.

    அனைத்து மதங்களும் அம்மதங்கள் தோன்றிய பகுதியில் அக்காலகட்டத்தின் புரட்சியை செய்துள்ளன். பின்னர் இம்மதங்கள் அனைத்தும் எப்போதும் வன்முறையாளர் பக்கம் மட்டுமே நிற்கும். பக்தி இயக்க மதங்களும் இன்று வன்முறையாளராக மாறியது இப்படித்தான். அன்று ஜைனரும் பௌத்தரும் மக்களுக்கு சுமையாக நின்றதால் துரத்தப்பட்டார்கள். அவர்கள் இடத்தில் இன்று சைவம், வைணவம், வைதீகம் கூட்டணி போட்டு மக்கள் மீதான வன்முறையாளராக உள்ளனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

CITY EXPLORER METROPLUS

St. Thomas and the city

GEETA PADMANABHAN

CHENNAI, OCTOBER 04, 2016 16:38 IST

 

 

 

UPDATED: NOVEMBER 01, 2016 22:54 IST

San Thome Basilica, Santhome  

 

Wrote Marco Polo: “It is in this province, which is styled the Greater India, at the gulf between Ceylon and the mainland, that the body of Messer St. Thomas lies, at a certain town having no great population.” The Portuguese arrived in the 16th Century, were shown the tomb by Armenian merchants, excavated it in 1523, found a few relics and rebuilt the shrine.

By 1893, the church, again in disrepair, was demolished to give way for the present one. In 1956, the church was declared a minor Basilica. In 2002, in a further renovation, a new passage to the tomb from outside and a museum of St. Thomas memorabilia were added. The spear that killed the saint, stones that have deeds of St. Thomas etched on them, and two postage stamps are part of the collection.

The cathedral became a centre of conversation when the tsunami that devastated areas all around left the newly-renovated church untouched. Folklore has it that St. Thomas had mounted a log of wood at the top of the steps leading to the Cathedral saying the sea would not pass that point. People believe this “miraculous post” kept the sea away that fateful day.

Little Mount

The story of St. Thomas’ association with Chennai begins in a tiny cave in Little Mount (Chinnamalai) at Saidapet. The apostle is believed to have lived and preached here. The cave’s mouth is about 5 feet in height and one-and-a-half feet in width. Another opening supposedly leads to a tunnel through which the apostle is believed to have escaped his assailants. The clear palmprint near the tunnel’s entrance and the footprint at the foot of the hillock are believed to be those of St. Thomas. The freshwater spring nearby is supposed to have appeared miraculously to quench the thirst of his followers.

A portrait of St. Thomas, a Portuguese inscription, a tiny church built by the Portuguese in 1551 and a masonry cross at the top of the hill add to the place’s importance. A new circular modern church dedicated to our Lady of Health, has been built to commemorate the 19th Century of St. Thomas’ martyrdom.

St. Thomas Mount

A flight of 160 steps, built by the Armenian merchant Coja Petrus Uscan, leads to the top of St. Thomas Mount. Here you get to see what is believed to be a piece of St. Thomas’ bone and the “bleeding” cross, that legend says was carved by St. Thomas himself. It is while he was praying before it that he is said to have been martyred, and it was stained with his blood. This Cross was discovered in the 16th Century by workers digging to lay the foundation for the Church. People believe it sweated blood on December 18 every year from 1551 to 1704 AD.

Also, look for the picture of Our Lady or the Scapular of St. Thomas, said to have been painted by St. Luke the Evangelist and brought here by St. Thomas.

 

C



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ity explorer History & Culture

The ruins of Chennai and their stories

Geeta Padmanabhan

December 20, 2016 15:38 IST

Updated: December 20, 2016 21:01 IST

Wellesley House  

We narrate the stories of some ruins that lie in the shadows of the city’s historic past

Wooden post

The wooden post on the seashore behind the Santhome Basilica stands forlorn, surrounded by garbage. It is fixed on a pyramid-shaped concrete platform, and on the church-side, the base bears an inscription — St. Thomas Pole: In gratitude to God for saving Santhome from Tsunami 2004”.

Historian Vakula Varadarajan says that in 1635, Santhome was encircled by a large fort with three bulwarks on the seaside and four gates equipped with guns. Its Western gate extended up to the present-day Appu Mudali street. In time, most of its Eastern walls were washed away by waves. In 1672, the fort was captured by the French, but two years later, Santhome was besieged and occupied by the Golkonda Sultanate and the Dutch with support from the British. The fort was demolished, but the old flag-staff (the pole) survived.

 

The pole at Fort St. George  

 The church believes St. Thomas, soon after his arrival in India in 52 CE, used his girdle to remove a large wooden log blocking the mouth of a local river, fashioned a post out of the log and planted it, stating “the sea would never cross the pole”. Following the Tsunami, parish priest Fr. Lawrence Raj claimed the pole or “St. Thomas Tree” miraculously saved the Basilica and Santhome from the waters.

However, Michael Prabhu, 65, who calls himself a Catholic apologist, questions this claim. He lived with his grandparents in a bungalow 200 metres from the gates of the Cathedral “for the first 19 years of my life”, and remembers seeing this 20 ft-high weather-worn wooden pole. “To the best of my knowledge… it holds no known historic significance… and was never associated with St. Thomas,” he says.

North Gate

Laterite stone and black granite went into the construction of the semi-octogonal fort St. George.

During Frenchman De Lally’s attack on the Fort in December 1758, his army looted the black town outside. People rushed to enter the fort for safety, but Col. William Draper refused to let them in. Lally attacked the Northern gate, failed, and returned to Pondicherry in February 1759.

North Wall at Fort St. George  

 

This battle-scarred gate has a couple of cultural associations.

Baluswamy Dik****har, who introduced the violin to Carnatic music, visited the fort many times with dubasish/businessman Manali Muthukrishna Mudali, who was close to Pigot the then governor.

Francis Whyle Ellis (1778-1819), who translated the Arathuppaal of Thirukkural to English, minted “Thiruvalluvar” coins, inscribed Thirukkural on the walls of Royapettah Periapalayathamman temple and dug 27 wells in Madras, received goddess Ekavalli Amman at the northern gate every Aadi with a pottu-thali and a yellow silk sari.

Wellesley House

You’ll find Wellesley House, a ghost of a bungalow, in the quiet Church/Charles Street at Fort St. George. A large portion of the House collapsed on November 18, 1980, and a banyan tree has taken over its walls.

The structure holds its dignity in its large windows, king-size rooms, wide staircases and spacious landings. A barely-readable plaque, embedded on the front wall, is a measure of the mansion’s neglect. The mansion, built in 1796, gets its name from brothers Arthur Wellesley and Governor-General of India Richard Wellesley.

Wellesley House  

 

According to Varadarajan, Richard came to Madras en route to Mysore and stayed in the house. In February 1799, both Wellesleys marched to Mysore.

In May, Tipu was killed and while Richard returned to Calcutta, Arthur went to Maharashtra to wage war against the Marathas and returned to Madras on his way to England.

In 1808, with public subscription, a portrait of Arthur was painted by John Hoppner of the Royal Academy. It was displayed at the Banquetting Hall (Rajaji Hall). Now, it is in the Madras Museum. Arthur Wellesley returned to England with a large fortune. In 1815, he defeated Napoleon at Waterloo, was made Duke of Wellington, and became Prime Minister of England twice.

Cornwallis Cenotaph at Rajaji Salai

When news of the Treaty of Seringapatam and Tipu Sultan’s defeat reached Madras, the European residents organised a fund-raising campaign to erect a statue for Cornwallis. Thomas Banks, a famous sculptor, was entrusted with the job; the statue arrived in Madras, and was erected on May 15, 1800, under a cupola on the Eastern side of parade ground inside the fort. The ground was named Cornwallis Square. In 1805, Cornwallis visited Madras on his way to Calcutta to take charge of Governor-Generalship for the second time on May 6. A cenotaph was erected in Teynampet, and this road was named Cenotaph Road. Later, the cenotaph was moved to the compound of Bentinck’s Building, then the Supreme Court of Madras, on First Line Beach Road. Bentinck’s Building was demolished in 1980.

In 1925, the statue was moved out of Cornwallis Square to the cenotaph. It stood there for three years. In 1928, dust from the harbour and the salt breeze forced it to be moved to Connemara Library.

Till 1950, Cornwallis stood at library and then moved to Fort Museum. The cupola at the parade ground was shifted there too. The cenotaph at First Line Beach is now a public toilet!

Maadi Thottam

It is difficult to trace a park front that has plaques from many eras. Maadi Poonga, aka Hanging Gardens of Chennai, lying above Ibrahim Sahib Street near the Royapuram railway station, is under the protection of the Archaeological Survey of India. The park was renovated in 2009 by the Chennai Corporation at a cost of Rs. 7.5 lakh. Despite that, the park is in a state of neglect.

The small park is the only surviving piece of the original Madras Fort wall built in 1772-1773 by the British soon after Hyder Ali plundered the Fort area twice in 1767 and 1769. Built by Paul Benfield, the 30 ft-wide wall had enough room for fortification and ran for a length of six km (3.5 miles) from Wall Tax Road and had 17 bastions. The park was developed adjacent to the fortification wall.

It is an interesting exercise to walk on the road below the thottam to trace the wall visible in several places.

Alas, the wall-top has been built over, leaving you wondering if visitors to the park realise its historical significance.

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

sant%2Bnive%2B01.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

94591246_10222249735498538_3347481168151 95642360_10222249742578715_4715542072856



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

95497073_10222250889407385_2838218705362 95148797_10222249790579915_7290251117131



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

94596052_10222250895527538_8263466968120 94589816_10222250893847496_2584928725682



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 94702504_10222250857846596_4010665285915  b.jpg 95317981_10222250888527363_1683972203344

 



-- Edited by admin on Wednesday 29th of April 2020 12:37:06 PM

__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Butler%2B-1.jpg Butler%2B-2.jpgButler%2B-3.jpg

Butler%2B-4.jpg Butler%2B-5.jpg Butler%2B-6.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

எழுத்தாளர் விநாயக முருகனுக்கு:

அவர் எழுதும் மதராசும் மண்ணும் தொடரில் ஒரு பகுதியாக ஆர்மீனியர்கள் பற்றிய அரைகுறை புரிதலுடன் தவறான தகவல்களுடன் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அது சம்பந்தப்பட்ட காணொளியில் pilagiarism வேறு. இதைக் கண்டித்து நான் எழுதிய எதிர்வினைக்கு வழக்கமான தன் மட்ட புத்தி பாணியில் பதில் சொல்லி இருக்கிறார் விநாயக முருகன்.

ஆர்மீனிய மக்கள் இன்னும் இங்கே ஒரு சிலர் இருக்கிறார்கள், அவர்களை நன்கு அறிவேன். சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து எந்தத் தகவலும் பெறாமல், யூடியூபில் உள்ள 2014ஆம் ஆண்டு மைக் ஸ்டீபான் என்ற ஆர்மீனியர் தன் நண்பருக்கு தந்த பேட்டியை வைத்துக் கொண்டு, தனக்கே எல்லாம் தெரியும் என்று நினைத்து கதை அளந்து வைத்திருக்கிறார் அந்த எழுத்தாளர்.

ஆர்மீனியா விடுதலை பெற்றதே 90களில். கி. பி. 3 முதலே ஓட்டோமான், பாரசீகம், துருக்கி, ரஷ்ய நாடுகளின் தொடர் படையெடுப்பால் புலம் பெயர்ந்த ஆர்மீனிய மக்கள் உலகெங்கும் சுற்றித் திரிந்து 1990களுக்குப் பின்பு தான் அவர்கள் நாட்டில் குடியேறினார்கள். கிறிஸ்துவ மதத்தை கிபி 301ஆம் ஆண்டு தங்கள் நாட்டின் மதமாக ஏற்றுக்கொண்டவர்கள் ஆர்மீனிய மக்கள். கிறிஸ்தவத்தை நாட்டின் மதமாக முதன்முதலில் ஏற்றுக்கொண்டது ஆர்மீனியா தான். ஆர்மீனியா அரசியல் சட்ட வடிவம் உருவானது 1991ஆம் ஆண்டில். ஆனால் மாதிரி சட்ட வரைவு சென்னையில் 1773ஆம் ஆண்டு எழுதப்பட்டது, நம் எழுத்தாளர் எழுதி தள்ளியிருக்கும் அதே ஆர்மீனிய ஆலயத்தில் தான். பெயர் ஸ்னேர் ஆஃப் குளோரி. அதில் 521 ஆர்ட்டிகில்கள் உண்டு. பிரெஞ்சு டிக்லரேஷன் ஆஃப் இண்டிபண்டன்ஸ் எழுதப்பட்டது இதற்குப் பின்பு தான் (1789). இந்த சட்ட வரைவை எழுதியவர்கள் ஷகமீர் ஷகமீரியான், பெட்ராஸ் உஸ்கான், ஹரதுன் ஷ்மோவானியன்.

இதில் பெட்ரஸ் உஸ்கான் 1746 முதல் 1749 வரை ஆங்கிலேயர் பாதுகாப்பில் ஃபோர்ட் செயின்ட் டேவிடில் வசித்தார். அவர் கட்டிய மர்மலாங் பாலம் பற்றிய நான்கு மொழி கல்வெட்டு இன்றும் சைதை பாலத்தின் அருகே இருக்கிறது, ஆர்மீனிய கான்சுல் ஜெனரல் சிவக்குமார் சார் தலையிட்டு அதை பத்திரப்படுத்தி வைத்த காரணத்தால் உஸ்கானின் பெயரை சொல்லியபடி இன்றும் நகரில் நிற்கிறது. தன் இறப்புக்குப் பின் 7 லட்ச ரூபாயை "சென்னை நகர மக்களுக்கு" உயில் எழுதி வைத்து விட்டு செத்தார் உஸ்கான். மதராசின் மிக நீளமான உயில் இதுவே. என் உடல் இங்கே இருக்கட்டும், இதயம் ஆர்மீனியா செல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக் கொள்ள, அவரது இதயம் தங்கப் பேழையில் நியூ ஜுல்ஃபா நகரில் உள்ள ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே இவரது ஆளுயர ஓவியத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயம் 1712 ஆம் ஆண்டு ஃபோர்ட் செயின்ட் ஜார்ஜ் உள்ளே கட்டப்பட்டது. (Church of Astvatzatzin) பிரெஞ்சுப் படைகள் நாசம் செய்ததால், 1749க்குப் பின் உள்ளே கட்ட இடம் வழங்கப்படாத காரணத்தால் கறுப்பர் நகரில் சகாமீர் சூல்தானியன் தந்த நிலத்தில் கட்டப்பட்டது. ஆலயம் கட்டுவதற்கு முன்பே 1765ஆம் ஆண்டு ஆலயத்தின் ஷமீர் ரூம் கட்டப்பட்டது. ஆலயம் 1772ஆம் ஆண்டு தான் ஆர்மீனிய தெருவில் கட்டப்பட்டது. இந்த ஷஹமீர் கையில் நெமிலி கிராமமே பார்மானாக எழுதித் தரப்பட்டு இருந்தது. முத்துக்கள், ரோஸ் வாட்டர் வணிகம் செய்து வந்தவர் இவர். 1664ஆம் ஆண்டு மயிலாப்பூர் ஆளுநராக மார்கஸ் இரசாதோ என்ற ஆர்மீனியரை நியமித்தார் கோல்கொண்டா சுல்தான். கோஜா பனூஸ் என்ற ஆர்மீனியருக்கும் சர் ஜோசையா சைல்டு என்ற கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிக்கும் இடையே 22 ஜூன், 1688ஆம் ஆண்டு மதராசில் ஆர்மீனிய மக்கள் வணிகம் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. 1690ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி ஆல்டர்மென் பதவியில் ஆர்மீனியர்கள் இருந்தார்கள்.

கோட்டைக்குள் இருந்த கோஜா நசர் ஜானின் வீடு தான் இன்றைய கிளைவ் பங்களா. உஸ்கான் மட்டுமே வெள்ளையர் நகரத்தில் வசித்தார் என்று நம் எழுத்தாளர் எழுதி இருப்பதும் தவறு. 1702ஆம் ஆண்டு நசர் ஜான் கட்டிய வீட்டை பிடுங்கிக்கொண்டு 1752ஆம் ஆண்டு ஆர்மீனியர்களை கோட்டைக்குள் இருந்து வெளியே விரட்டினர் ஆங்கிலேயர்.

சாம் மற்றும் கிரேகரி சாம் ஆகிய இருவரும் தான் 1836ஆம் ஆண்டு சென்னை சேம்பர் ஆஃப் காமர்சுக்கு வித்திட்ட ஆர்மீனியர்கள். அதன் நிறுவன தலைவர்கள் இவர்கள் இருவரும். இது போக சென்னையில் துறைமுகம் அமைய முதல் முயற்சியை எடுத்தவர்கள் இவர்களே. இந்த இருவரின் கல்லறையும் அதே ஆர்மீனிய ஆலயத்தில் உள்ளது. சாமுவேல் மூரத் மற்றும் எட்வர்டு ராஃபேல் ஆகிய இரு ஆர்மீனிய வைர வியாபாரிகள் இங்கு செய்த வணிகத்தில் ஈட்டிய பொருளில், வெனிஸ் நகரில் தொடங்கிய இறையியல் கல்லூரி தான் மூரத் ரஃபேலியன் தியலாஜிக்கல் காலேஜ். (Collegio Armeno Moorat Raphael). எட்வர்டு ராஃபெல் 1788ஆம் ஆண்டு கர்நாட்டிக் வங்கியை தொடங்கியவர்களில் ஒருவர். தென்னிந்தியாவின் முதல் ஜாயின்ட் ஸ்டாக் வங்கி இது! 1729 ஆம் ஆண்டு "ஆர்மீனிய நாட்டின் நினைவாக" என்று சாந்தோம் ரீட்டாஸ் ஆலயத்தில் கல்வெட்டு வெட்டி வைத்தார் உஸ்கான்.

இது தவிர இதே ஆலய வளாகத்தில் ஷ்மோவானியன் அமைத்த அச்சுக் கூடத்தில் இருந்தே அஸ்தரார் என்ற ஆர்மீனியா நாட்டின் முதல் பத்திரிகை வெளிவந்தது. ஆண்டுதோறும் தந்தையின் நினைவு நாளை ஒட்டியே பிப்ரவரி மாதம் இங்கே ஆராதனை நடைபெறும். ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் ஆராதனைக்கு உலகெங்கும் உள்ள ஆர்மீனிய மக்கள் வருவதுண்டு. மைக் உள்பட. ஆறில் இரண்டு கோயில் மணிகளை தாமஸ் மியர்ஸ் அண்டு கம்பெனி செய்து தந்துள்ளார்கள். லண்டனின் பிக் பென் கடிகாரத்தை செய்து தந்தவர்கள் இந்த நிறுவனத்தினர்.

கோரம்சிமீ லீம்பிருகன் என்ற ஆர்மீனிய பெண்மணி தான் நாட்டின் முதல் "பிரீ - நூப்ஷியல்" என்ற திருமணத்துக்கு முந்தைய சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை செய்து கொண்டவர். ஆர்மீனிய குழந்தைகளுக்காக ஆர்மீனிய ஆர்ஃபன் ஃபண்ட் ஏற்படுத்தி ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கான ரூபாயை வழங்கிய இவருக்கு, இவரது நினைவாக கல்வெட்டு ஒன்றும் இந்த ஆலயத்தில் உண்டு.

இதில் ஃபேஸ்புக் ஆன்டி என்று வேறு எனக்கு பெயர் வைத்திருக்கிறார். நேரில் என்னைப் பார்த்தால் செருப்பை கழற்றி அடிப்பாராம். ஆர்மீனிய மக்கள் பற்றி நான் அவருக்கு தெரியாத விஷயங்களை தெளிவாக இந்தப் பதிவில் எழுதி அவரை அடித்தே விட்டேன் என்று நினைக்கிறேன். புரிந்தால் வரலாற்றை தேடிப் பிடித்து, படித்து எழுதட்டும். இனிமேலாவது! அப்புறம் மைக், நரசய்யா போன்றவர்களின் புகைப்படங்கள் காணொளிகள் பயன்படுத்தியது தொடர்பாக அவர்களுக்கு கிரெடிட் போடட்டும்!



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

வர்ணாசிரம தர்மமும்
சதிராட்டமும்...!

புலம்பலாம்,கதறலாம்,பிதற்றலாம்…செய்யுங்கள்!

’’அய்யோ, உலகம் கெட்டுக் கெடக்கே…, வர்ணாசிரம தர்மம் மீறப்பட்டுடுத்தே! அவா,அவா தொழிலை அவா,அவா செய்தான்னா தானே லோகம் சேஷமா இருக்கும்..! இப்ப இருக்கிற கலிகாலத்திற்கு காரணமே குலத் தொழில் தவறி…எல்லாரும்,எல்லாமுமா இருக்க விருப்பம் காட்றது தான்…!’’

இப்படி ஸொல்றது யாரு! பத்மா மாமி!

ரொம்பச் சரி, மாமி, நீங்க ஏன் நாட்டியமாடுறேள்..!
அது தாசிகுலத்தவாவின் குலதர்மம் அல்லவா? அதை உங்களாவா கபளீகரம் பண்ணிக் கொண்டு இன்னைக்கு திரும்பின திக்கெல்லாம் நாட்டிய பள்ளி நடத்தி கல்லா கட்டறேளே..!

நல்லா நடத்துங்க..அதையெல்லாம் இழுத்துமூடிட்டு உங்களை உச்சவிருத்தி பண்ணி வாழணும்னு நான் கேட்கமாட்டேன்!

ஆனா, அநியாயமா உங்களை நிலை நிறுத்திக்கிறதுக்காக தழிழர் கலையான சதிராட்டத்திற்கு பரத நாட்டியம் என்று பெயர் மாற்றி ’பரதமுனி’ என்ற ஒரு கற்பனை சிருஷ்டியை சிருஷ்டித்து,அவர் தான் பரதக்கலையை உருவாக்கியவர் என்கிறீர்களே! யோகிகளின் குலத்தொழில் அப்பவே மாறிடுத்தா?

’சதிர்’ எப்படி பரதமானது என்ற சதியைச் சொல்லவா?
ஒதுங்கறதுக்கு ஒரமாக இடம் வேணும்னு பரிதாபமாக கேட்பீங்க, இடம் கிடைத்ததும்,மடத்தையே முழுசா வளைத்து போட்டுட்டு..மடத்தின் உரிமையாளனையே தெருவில் இறக்கிவிட்ருவீங்க…இது தான் சதிர் விவகாரத்துல நடந்தது!

பல நூற்றாண்டுகளாக தேவதாசிகுலத்தவங்க தான் சதிராட்டக் கலையை வளர்த்து நடனமாடி சிறப்பித்து வந்தாங்க..! நம் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் தொடங்கி சமீபத்தில் முனைவர் எஸ்.சாந்தினிபீ எழுதியுள்ள ’கல்வெட்டுகளில் தேவதாசி’ வரை எத்தனையோ ஆதார நூல்கள் அன்றைய தேவதாசிகளின் உயர்ந்த,மரியாதைக்குரிய, சமூக அந்தஸ்த்தை பறைசாற்ற உள்ளன!

1930 களின் மத்தியில் பிராமணப்பெண்ணான ருக்குமணிதேவி, மயிலையில் இருந்த கெளரி அம்மாளிடமும்,பந்தாநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை,கணபதி முதலியார் ஆகியோரிடமிருந்தும் சதிராட்டம் கற்றார்! முதலில் கல்கி போன்றவர்கள், ’’நம்மாத்து பொண்ணுங்க சதிராட்டம் கத்துகிடறதா…அது தாசிகளின் கலையில்லையோ.’’என்று பொங்கி எழுந்தனர்.

ஆனால்,காலப்போக்கில் தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட நிலையில் தாசிகள் ஆடிய நாட்டியக் கலையை பாதுகாக்க அரசாங்கம் முன்வராத நிலையில்,இந்தக் கலையை கற்றுக் கொண்ட பிராமணப் பொண்ணுங்க தங்களுக்கு இதில் ஒரு சிறப்பான எதிர்காலம் உண்டு என்று கணித்தார்கள்!

அவர்களுக்குத் தான் அகில இந்திய அளவில் அரசியல் சமூக ‘லாபி’ ஒன்று எப்போதும் உண்டு தானே! தான் கற்ற சதிராட்டத்திற்கு ’பரதம்’ என்று பெயரிட்டு அதை டெல்லியில் அரங்கேற்றினார் ருக்குமணி அருண்டேல்!

அந்த நிகழ்விற்குச் சென்ற நாட்டியமேதையும்,தேவதாசி வம்சத்தின் வழிவந்தவருமான பாலசரஸ்வதியம்மா அந்த மேடையில் ஏறி உடனே அதை கண்டித்தார்! ’’இது பாரம்பரியமாக நாங்கள் வளர்த்தெடுத்த சதிராட்டம்! இதை பரதம் என்று அழைப்பது தவறு’’ என்றார்!

ஆனால்,ருக்குமணி அருண்டேல் பிடிவாதமாக அந்த சொல்லையே பயன்படுத்தியதோடு, ’’தேவதாசிகளின் சதிராட்டத்தில் வரும் சிருங்கார ரசம் ஆபாசமானது. நான் அதை புனிதப்படுத்தி உள்ளேன்’’ என்றார்.

உண்மை என்னவென்றால் சிருங்கார ரசம் என்பது தான் நாட்டியக் கலையின் மிக உன்னத கலைவெளிப்பாடு! முதலில் அது பிராமணப் பெண்ணான ருக்குமணிக்கு சரியாக கைகூடவில்லை! ஆகவே, ‘’சீச்சி,அந்தப் பழம் புளிக்கும்’’ என்று பழித்தார்! அத்துடன் தமிழ் நாட்டில் எந்த சபாவிலும் பாலசரஸ்வதியம்மாள் போன்றவர்களை போதிய வாய்ப்பில்லாமல் ஒதுக்கவும் செய்தனர்!

பாலசரஸ்வதியம்மாவின் நாட்டியம் உலகின் பல நாடுகளில் அரங்கேறியது! உலகின் பிரபல பத்திரிகைகள் பாலசரஸ்வதி நாட்டியத்தை வியந்து எழுதியுள்ளன! பிரபல இயக்குனர் சத்தியஜித்ரே பாலசரஸ்வதி குறித்து டாக்குமெண்டரி எடுத்துள்ளார்! அவரது நாட்டியத்தில் உள்ள நளினம் இன்னொருவரிடம் பார்க்கவே முடியாத சிறப்பு வாய்ந்தது என்று அந்த காலகட்டத்தில் அனைவராலும் புகழப்பட்ட பாலசரஸ்வதி காலபோக்கில் காணமலாக்கப்பட்டார்!

அதே போல பத்மாவின் சமகாலத்தவரான நாட்டிய உலகின் அதிசயமாகப் பார்க்கப்பட்டவரான ஸ்வர்ணமுகியைப்( நடிகர் சிலம்பரசனின் பெரியம்மா) போல 108 கரணங்களையும் ஒரே நேரத்தில் ஆடமுடிந்த இன்னொரு நாட்டிய தாரகையை உலகம் இன்றுவரை பார்க்கவில்லை! உடம்பில் எலும்பு என்ற ஒன்று இருக்கிறதா..? என்று வியக்கும் அளவுக்கு உடம்பை வில்லாக வளைப்பதில் வித்தகர்! உலகம் எங்கும் வலம் வந்து புகழ் கொடி நாட்டிக் கொண்டிருந்தவரான ஸ்வர்ணமுகியை ஓரம்கட்ட பத்மா செய்த அரசியலைச் சொல்ல இங்கு பக்கம் போதாது!

என்னுடைய பதினைந்து வயதில் சென்னை பல்கலைக் கழக மண்டபத்தில் நான் ஸ்வர்ணமுகியின் நாட்டியத்தைப் பார்த்து மெய்மறந்து விக்கித்து போனேன்! அதற்கு பிறகு பத்மாவின் நடனத்தை தொழில் முறையில் போட்டோ ஜர்னலிஸ்டாக பார்த்து, பலமுறை படம் பிடித்துள்ளேன்.

ஸ்வர்ணமுகியின் நளினத்தையும்,வேகத்தையும், பாவங்களையும் பாதியளவு கூட பத்மாவிடம் பார்க்கமுடியவில்லை! இந்த அனுபவம் என்னைப் போல ஸ்வர்ணமுகியின் நாட்டியத்தை பார்த்த யாருக்குமே இருக்கும்!

பாலசரஸ்வதி,ஸ்வர்ணமுகி போன்றவர்களின் நடனம் உன்னதமாக இருந்ததற்கு அவர்களின் மரபணுவிலேயே அந்தக் கலை கலந்து இருந்ததும், நான்கு வயத்திலிருந்து காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து ஆடி,ஆடி அதைத் தவிர எதுவும் தெரியாதவர்களாக அவர்கள் வளர்க்கப்பட்டதும் கூட காரணமாயிருக்கலாம்!

அப்படிப்பட்டவர்களையும்,அவர்களின் மரபையும் சூழ்ச்சியால் ஒழித்துக் கட்டிவிட்டுத் தான், பத்மா மாமி இன்று வர்ணாசிரம தர்மம் பற்றி நமக்கு கிளாஷ் எடுக்குறாங்க..!

பேராசையின் பெருவுருவாக முதன்முதலாக வர்ணாசிரம தர்மத்தை முற்றாக கைவிட்டவர்களே பிராமணர்கள் தான்! பொருளாதார பலன்களுக்காக எத்தனையோ பேரின் குலத்தொழிலை கொன்றொழித்ததே நீங்கள் தான்!

ராணவத் தளபதி தொடங்கி நகை வியாபாரம் வரையிலும் எந்த பதவியில் அல்லது தொழிலில் இன்று பிராமணன் இல்லை! எல்லா இடங்களிலும் இடத்தை கொடுத்தால் மடத்தை அபகரித்த கதை தானே!

முன் நாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார்
மூன்றுமழை பெய்யுமடா மாதம்!
இந்நாளில் பொய்மை பார்ப்பார்- இவர்
ஏது செய்தும் காசுபெற பார்ப்பார்..!
என்று பார்ப்பன குலத்தில் விதிவிலக்கான மிகச்சிலரில் ஒருவனான எங்கள் பாரதியே பாடியுள்ளானே!

காலந்தோறும் அரசியல் அதிகாரங்களோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு வரலாறு நெடுகிலும் நீங்கள் ஆடிய,இன்னும் ஆடிக் கொண்டிருக்கும் ’சதி’ராட்டங்கள் கொஞ்சமா? நஞ்சமா?

ஆனால்,ஒன்றை உறுதியாகச் சொல்வேன்! உங்களைப் போன்றவர்கள் இன்று ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களை பயன்படுத்தி பல அரசியல் ஆதாயங்களை அடைந்து கொள்ளலாமே ஒழிய, ஒருபோதும் புதையுண்டு போன வர்ணாசிரமத்தை மீட்டெடுக்க முடியாது!

சாவித்திரி கண்ணன்
மூத்த பத்திரிகையாளர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

போதகர்களின் பரிதாப நிலை

கிறிஸ்தவர்களிடையே நிலவும் சாதி என்னும் கொடுமையான கோமாளித்தனத்துக்கு பொதுநிலையினரை மட்டும் குறை சொல்வதில் பயனில்லை. பல்லாண்டுகள் இறையியல் படித்த பாதிரிகள்தான் அதிக பொறுப்பேற்கவேண்டும்.

ஒருமுறை திருநெல்வேலியில் *'நாடார்'* என்னும் சாதி உணர்வால் பீடிக்கப்பட்ட ஒரு 'சுவிசேஷ ஊழியர்' என்னுடன் பேசும்போது, _"சென்னை பேராயத்தில் இதுவரை ஒருமுறைகூட நாடார் ஜாதியை சார்ந்தவர்கள் பேராயர் பதவிக்கு வந்ததில்லை. சென்னை கிறிஸ்தவர்களின் சாதிவெறியை பார்த்தீர்களா அண்ணே?"_ என்றார். உடனே நான், _"அந்த பதவிக்கு வருபவர்களை ஊழியக்காரர்களாக பார்க்காமல் சாதி அடிப்படையில் பாகுபடுத்தியே பார்க்கிறீர்களே! அப்படிப் பார்த்தால் திருநெல்வேலி பேராயத்தில் ஒருமுறையாவது ஒரு தாழ்த்தப்பட்டவர் பேராயராக பதவி ஏற்றிருக்கிறாரா?"_ என்று கேட்டேன். இயேசுவின் இரட்சிப்பை பிறருக்கு நற்செய்தியாக அறிவிக்கும் ஒரு 'ஊழியருக்குள்' இருக்கும் சாதி உணர்வைப் பாருங்கள்!

கடவுள் உண்டு என தெரியாத ஒருவரிடம் இருக்கும் மனிதநேயமும் மனமுதிர்ச்சியும்கூட வேதாகம கல்லூரிகளை நடத்தும், மறைநூலை கரைத்துக் குடித்த பெரும்பான்மையான பண்டிதர்களிடமே இல்லையே!

CSI, CNI, Lutheran, Catholic, Methodist, Adventist, Baptist, AG சபைகளின் ஊழியர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துத்துவ சாதி உணர்வு உடையவர்களாகத்தான் 'ஊழியம்' செய்கிறார்கள். படுகேவலமாக கிறிஸ்தவர்கள் பிரிந்து வாழ்ந்தாலும், மானம்கெட்ட போதகர்களுக்கு இந்த நிலைமையை நினைத்து கொஞ்சம்கூட உணர்வு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. கிறிஸ்தவம் சாதி சாக்கடைக்குள் சிக்கியிருக்கிறது என்று பிறர் குறை சொல்லுமளவுக்கு இது நாறிப்போய் கிடக்கிறதே என்ற ஆதங்கம் அவர்களுக்கு இல்லை.

இந்த நிலையில் பல போதகர்கள் தங்களுடைய பெயர்களுக்கு முன் *'Reverend' (பயப்படத்தக்க, பெருமதிப்புக்குரிய)* என்னும் பட்டப் பெயரை தங்களுக்கு தாங்களே எழுதிக்கொள்கிறார்கள். அப்படி சொன்னால்தான் மக்கள் கொஞ்சமாவது அவர்களை மதிக்கிறார்கள் என நினைக்கிறார்கள். ஆனால், சாதி உணர்வோடு வாழ்பவருக்கு சமூக நலம்விரும்பிகளிடம் எப்படி பெருமதிப்பு கிடைக்கும்? அவரை ஒரு ஆன்மீக வழிகாட்டியாக, ஆத்மார்த்த முன்னோடியாக எப்படி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்? இவர்கள் வெள்ளை அங்கி அணிவதால் மட்டும் எல்லாரும் இவர்களை ஆன்மீக தலைவர்கள் என்று நம்பிவிடுவார்களா? அவர்களால் திருச்சபையோரை கட்டுப்படுத்த முடியாவிட்டால் தங்களை 'பயபக்திக்குரிய போதகர்கள்' என அவர்கள் தங்களை அழைத்துக்கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

கத்தோலிக்க பாதிரியார்கள் பல்லாண்டுகள் மறைக் கல்விப் பள்ளியில் (Seminary) கற்றுத்தேறித்தான் *'பாதிரியார்'* பட்டத்தை பெறுகிறார்கள். அவர்களுடைய ஆன்மீகபணிக்கு குடும்ப உறவு தடையில்லாமல் இருப்பதற்காக இல்வாழ்வை துறந்து, திருமணம் செய்யாமல் இந்த பொறுப்புக்கு வருகிறார்கள். ஆனால், பெரும்பான்மையான பாதிரிகள் இந்த சாதிப்பிசாசிடமிருந்து விடுதலை இல்லாமலேயே காலம் தள்ளுகிறார்கள். அவர்களது வெளிப்புறம் வெண்மையான அங்கியால் போர்த்தப்பட்டிருந்தாலும் உள்ளே சாதி அழுக்கோடுதான் 'அருட்பணி' செய்கிறார்கள். சாதியத்துக்கு எதிராக போதிக்கும் துணிவு இல்லாதவர்கள், பேராயர், பிரதம பேராயர் என்ற பதவி பெயர்களோடு தலையில் தொப்பியையும், கையில் குச்சியையும் கெம்பீரமாக பிடித்துக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இப்படிப்பட்ட வயிற்று பிழைப்பு வியாபாரிகள் தங்கள் போதக வேலையை விட்டுவிடுவதே சாலச்சிறந்தது. ஊழியனுக்கு ஊழியத்தால் பிழைப்பு உருவாகும். ஆனால், வயிற்றுப் பிழைப்புக்காக மட்டும் ஊழியத்தை கையில் எடுப்பது கடவுளுக்கு செய்யும் துரோகமல்லவா! பூமியிலே சாதி வெறியிலிருந்து மனம்திருந்தும் ஊழியர்களின் பொருட்டு பரலோக இராஜ்ஜியத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று நினைக்கிறேன்.

இப்படிப்பட்ட வேடதாரிகளை பற்றி ஆண்டவர் கூறுகிறார், _"குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால், ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள். வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப் புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால், அவற்றின் உட்புறத்தையோ கொள்ளை பொருட்களாலும், தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது, அதன் வெளிப்புறமும் தூய்மையாகும். வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன. அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லாவகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே நீங்களும் வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கிறீர்கள். ஆனால், உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்" (மத்தேயு 23:24-28)._

_"சூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி, என்று சாத்திரம் சொல்லிடுமாயின் அது சாத்திரமன்று சதியென்று கண்டோம்"_ என்றும் _"சாதிகள் இல்லையடி பாப்பா. குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"_ என்றும் சுப்பிரமணிய பாரதியார் சொன்னார். அவர் வருணாசிரமப்படி 'பிராமணர்' என்ற உயர்சாதி என அழைக்கப்படும் குடும்பத்தில் பிறந்தவர். அவர் கிறிஸ்து என்ற நிஜமான இரட்சகரைப் பற்றி தெரியாமல் _'பத்திரகாளி'_ என்ற ஒரு விக்கிரகத்தை வணங்கிய, ஒரு இந்துத்துவ சிந்தனையாளர். அவரே சாதி ஏற்றத்தாழ்வு கொள்கையை 'பாவம்' என்று குறிப்பிடுகிறார்.

இயேசுவை அறியாத *ஔவை* பெருந்தகை 12-ம் நூற்றாண்டிலேயே, _"சாதி இரண்டொழிய வேறில்லை. சாற்றுங்கால் நீதிவழுவா நெறிமுறையின் மேதினியில் இட்டார் பெரியார், இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி"_ என்று புரட்சி முழக்கமிட்டார். ஆனால், பல்லாண்டுகள் வேதாகமக் கல்லூரிகளில் படித்த கிறிஸ்தவ பாதிரிகளோ கிறிஸ்தவத்துக்கு சம்பந்தமே இல்லாத இந்துத்துவ சாதிவெறியோடு அலைகிறார்கள்.

*கிறிஸ்துவால் சாதியத்தை ஒழிக்கமுடியுமா?*

_சத்தியத்தை அறிவீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32),_

_குமாரன் (கிறிஸ்து) உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் (யோவான் 8:36),_

_கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலை உண்டு (2கொரிந்தியர் 3:17)_

என்ற வசனங்களை மேற்கோள் காட்டி *நற்செய்தி கூட்டங்கள், பேரின்ப பெருவிழாக்கள், எழுப்புதல் கூட்டங்கள், சமாதான பெருவிழாக்களில்* பலமணி நேரம் பிரசங்கம் செய்யும் போதகர் நம்மிடையே பலருண்டு. _"இயேசு கிறிஸ்து பாவத்திலிருந்து, சாபத்திலிருந்து, நோய்களிலிருந்து விடுதலையை தருகிறார்"_ என்று பல மேடைகளில் பேசப்பட்டு நான் என் சொந்த காதுகளால் கேட்டிருக்கிறேன். ஏதோ மிகவும் பிரமாண்டமான விடுதலையை கிறிஸ்தவர்கள் உறுதியளிக்கிறார்களே! என எண்ணி கிறிஸ்தவர்களின் கூடுகை அழைப்பிதழை மதித்து, பலர் கிறிஸ்தவ கூட்டங்களில் ஆர்வமுடன் பங்கெடுக்கிறார்கள்; பாடல்களை கேட்கிறார்கள்; நடனங்களை காண்கிறார்கள்; போதனைகளை கேட்கிறார்கள். ஆனால், தங்கள் மனதை அரித்துக்கொண்டிருக்கும் இந்துத்துவ சாதி அடிமைத்துவத்திலிருந்து விடுதலை தரும் வார்த்தைகள் கிறிஸ்தவரால் பேசப்படவில்லையே எனும் விரக்தியிலேயே பலர் ஏமாற்றத்தோடு திரும்புகின்றனர். விரக்தியின் உச்சக்கட்டத்தில் பலர் _'கடவுளே இல்லை'_ எனும் பரிதாப முடிவுக்கே வந்துவிடுகின்றனர். அப்படித்தான் நாத்திகம் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது.

_"இயேசு கிறிஸ்து என் நோய்களை குணமாக்கினார்; வறுமையிலிருந்து, கடன்களிலிருந்து விடுவித்தார்; குடும்ப பிரிவினையிலிருந்து காத்தார்; தோல்வியிலிருந்து தூக்கினார்; தற்கொலை சிந்தையிலிருந்து இரட்சித்தார்; கொலைவெறியிலிருந்து விடுவித்தார்; குடிவெறியிலிருந்து நிவாரணம் தந்தார்"_ என்று சாட்சி சொல்வோர் நம்மிடையே பலர் உண்டு. அதற்காக இறைவனுக்கு உள்ளம் கனிந்து நன்றி செலுத்துகிறேன். ஆனால், எனக்கு அறிவு தெரிந்தநாள்முதல், _"சாதி உணர்வு என்னும் முக்கியமான உளவியல் பிரச்சனைக்கு கிறிஸ்துவால் விடுதலை தரமுடியும்"_ என யாரும் எங்கும் பேசி நான் பார்த்ததில்லை. _"நான் சாதி உணர்வுடையவனாக இருந்தேன். கிறிஸ்து சாதி உணர்விலிருந்து என்னை விடுவித்தார்; இனிமேல் எனக்கோ, என் பிள்ளைகளுக்கோ, என் பேரப்பிள்ளைகளுக்கோ திருமணம் வரும்போது இந்துத்துவ சாதிவேறுபாட்டு கொள்கையை நான் கடைபிடிக்க மாட்டேன்"_ என்று யாரும் அறிக்கை விடுத்து நான் கேட்டதும் இல்லை. அப்படியானால் இந்த முக்கியமான ஆன்மீக பிரச்சனைக்கு தீர்வுகாணும் வலிமை உலக மீட்பர் இயேசு கிறிஸ்துவுக்கு இல்லையா என்னும் கேள்வி சாதியால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் மேலோங்குகிறது. எல்லாம்வல்ல கடவுளுக்கு சாதியத்திலிருந்து கிறிஸ்தவர்களை விடுவிப்பது அசாத்தியமா?

நான் இரட்சிக்கப்பட்ட நாட்களில், _"நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறீர்களா சகோதரரே?"_ என்று சிலர் என்னிடம் கேட்டது ஞாபகம் இருக்கிறது. _"எதற்காக நான் பரிசுத்தஆவியை பெற்றுக் கொள்ளவேண்டும்?"_ என்று திருப்பி கேட்டபோது சிலர், _"பரிசுத்த ஆவியானவர் பாவத்தை கண்டித்து உணர்த்துவார்"_ என்றனர். பெரும் பான்மையான கிறிஸ்தவர்கள் தங்களை ஆவியை பெற்றவர்கள் என்றுதான் சொல்கிறார்கள். பிறரை, 'கீழ்சாதி' என புறக்கணிப்பது தவறு என்பது கடவுள் நம்பிக்கையே இல்லாதோருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால், _"நான் பிறரை, 'கீழ்சாதி' என்று இழிவாக நினைப்பதை தவறு என்று பரிசுத்த ஆவியானவர் சுட்டிக்காட்டினார், கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட எல்லாரையும் சகோதரர்களாக நினைக்கும் மனப்பக்குவத்தை ஆவியானவர் தந்தார்"_ என்று பெரிய அளவில் யாரும் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோமா? ஆவியானவருக்கு இடம் கொடுக்காமல் அவர் நம்மை மாற்றவும் முடியாதே! நான் இப்படி சொல்வதால் ஆவியானவருக்கு எதிராக பேசுகிறேன் என்று தயவுசெய்து நினைத்துவிடாதீர்கள்.

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விடுதலையைத் தேடி கிறிஸ்தவத்துக்கு வருவதுபோல, சாதியால் பாதிக்கப்பட்டோர் சமத்துவத்தை தேடி இயேசுவிடம் வந்திருந்தால் _"மருத்துவரால் கைவிடப்பட்ட என்னை கிறிஸ்து குணமாக்கினார்"_ என்று பலர் சாட்சியம் சொல்வதுபோல, _"நான் சாதிவெறி உடையவனாக இருந்தேன்; இயேசு என்னை சாதிவெறியிலிருந்து விடுவித்தார்; நான் தாழ்வு மனப்பான்மை உடையவனாக இருந்தேன். தாழ்வு மனப்பான்மையிலிருந்து இயேசு என்னை விடுவித்தார்"_ என்று பலர் சாட்சியம் சொல்லியிருப்பார்கள். அது கடவுளுக்கு எவ்வளவு மகிமையாக இருந்திருக்கும்!

சில கிறிஸ்தவர்கள் தங்களிடம் சாதியில்லை என்று சொல்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் ஆதாரம் என்னவென்றால், _"நான் பணிசெய்யும் இடத்தில் எல்லா சாதியினரிடமும் சகஜமாக பழகுகிறேன்; பேருந்தில் பயணம் செய்யும்போது சாதி பார்க்காமல் அமர்கிறேன்; வங்கியில் பணம் எடுக்க, ரேஷன் கடையில் பொருட்களை வாங்க வரிசையில் நிற்கும்போது நான் சாதி பார்ப்பதில்லை; ஆனால், திருமணத்தில் மட்டும்தான் சாதி பார்ப்பேன்"_ என்கிறார்கள். அப்படி பார்த்தால் பெரும்பான்மையான இந்துக்களும் இன்று அப்படித்தான் இருக்கிறார்கள். சினிமா தியேட்டர்களில், பொதுமக்கள் கூடும் பொது இடங்களில், போக்குவரத்து வாகனங்களில், மதுபான கூடங்களில் எங்குமே இந்துக்கள் சாதி பார்ப்பதில்லையே! திருமணத்தில் மட்டும் தானே சாதி பார்க்கிறார்கள். இந்த விடயத்தில் நமக்கும் இந்துக்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது? இப்படிப்பட்டவர்களைப் பற்றித்தான் ஆண்டவர், _"வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்; உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலைவில் இருக்கிறது. இவர்களது இறையச்சம் மனனம் செய்த வெறும் மனித கட்டளையைச் சார்ந்ததே!" (எசாயா 29:13)_ என்கிறார்.

*நற்செய்தி அறிவிக்க எதிர்ப்பு ஏன்?*

இந்துக்கள் கடைபிடிக்கவேண்டிய இந்த கடைந்தெடுத்த சாதி மூடநம்பிக்கையை, கிறிஸ்தவர்கள் நாம் அன்பு பற்றாக்குறையால் கடைபிடித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற நாம் எதிர்பார்ப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? நம் மதத்தை எப்படியாவது வளர்த்துவிடவேண்டும் என்ற மதவெறி அல்லவா இது! கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்தவ முறைமைப்படி சமத்துவத்தோடு வாழாமல் இந்துக்களுடைய முறைப்படி சாதியத்தைக் கடைபிடித்துக் கொண்டிருக்கையில் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மாற நாம் எப்படி வற்புறுத்தமுடியும்? (வாசிக்கவும்: கலாத்தியர் 2:14). நாமே அனுபவிக்காத ஆன்மீக விடுதலையை பிறருக்கு வாக்குறுதியளிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இதெல்லாம் நமது மதவெறியை அல்லவா காட்டுகிறது! சுயபெருமைக்காக அல்லவா கிறிஸ்தவத்தை கடைபிடிப்பதுபோல் நடிக்கிறோம்! இது நமக்காக உயிரை தந்த கடவுளுக்கு நாம் செய்யும் பச்சை துரோகமல்லவா?

கிறிஸ்தவர்களின் இந்த பிற்போக்குத்தனம் இந்த நாட்டிலுள்ள எல்லா கிறிஸ்தவ எதிர்ப்பாளர்களுக்கும் தெரியும் என்பதே கேவலமான உண்மை.

குமரி, நெல்லை, கோவை போன்ற மாவட்டங்களில் கிறிஸ்தவர்களுக்கு இந்துக்களிடமிருந்து எதிர்ப்புகளும் துன்பங்களும் அதிகமாக வருவதன் காரணம் என்ன? எந்த மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக சாதிவெறி உடையவர்களாக இருக்கிறார்களோ அங்குள்ள சாதியால் பாதிக்கப்பட்ட தலித்துகளே கிறிஸ்தவர்களின் மதமாற்ற 'ஊழியங்களுக்கு' எதிர்த்து நிற்கிறார்கள். இது எனது ஆய்வின் முடிவு.

அண்மையில் குமரி மாவட்டத்தில், சில கிறிஸ்தவர்கள் வெள்ளை உடை உடுத்தி ஒரு கிராமத்துக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். உடனே அந்த ஊர் இந்துக்கள் இவர்களை தடைசெய்து, கெட்ட வார்த்தையால் திட்டி இவர்களுடைய நெற்றியில் திருநீறுபூசி அனுப்பினார்களாம். சாதிவெறி என்று வரும்போது இந்துக்களைவிட அணுவளவு கூட வித்தியாசம் இல்லாத கிறிஸ்தவ பரிசேயர்களுக்கு அவர்கள் பட்டை போட்டு விட்டதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்தானே! இந்துத்துவ சாதிவெறி பிடித்தவர்களுக்கு பரிசுத்தவான்களின் வேடம் எதற்கு? தலித் இந்துக்கள் சாதிச் சிறைச்சாலையில் அவ்வளவு அவமானப்பட்டாலும், கருணாமூர்த்தி இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளாத காரணம் என்ன என்பதை நாம் சிந்திக்கவேண்டும் அல்லவா!

ஒரு மனிதனுடைய பிறப்புக்கு காரணம் அவரல்ல. இந்துத்துவாவால் அடிமைப்படுத்தப்பட்ட ஒருவர் திருமணம் செய்வதோ, அந்த குடும்பத்தில் ஒரு குழந்தை பிறப்பதோ தவறு என்று நாம் சொல்லமுடியுமா? ஒரு மனிதன் ஏழையாக பிறந்ததற்கோ, கறுப்பான தோலோடு பிறந்ததற்கோ அவர் பொறுப்பேற்கமுடியுமா?

எந்த மதவாதிகள் சாதியுணர்வு உடையவராக இருந்தாலும் மக்கள் புரிந்துகொள்வார்கள். ஆனால், அன்பே உருவான கிறிஸ்து என்னும் கருணாமூர்த்தியை கடவுளாக வணங்கும் கிறிஸ்தவர்களே சாதியுணர்வாளர்களாக இருப்பதை யாரால்தான் புரிந்துகொள்ள இயலும்? சாதியம் என்னும் தேசிய கொடுமையிலிருந்து இயேசு என்னும் உலக இரட்சகரால் விடுதலை கொடுக்கமுடியாது என்ற முடிவுக்கு வந்துதான் கிறிஸ்தவத்தை அவர்கள் தேர்வு செய்யவில்லை. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று நம் மூதாதையர்கள் சொன்னது கிறிஸ்தவத்தை பொறுத்தவரை எவ்வளவு உண்மையாக இருக்கிறது!



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தோமா எனும் தாமஸ் இந்தியாவுக்கு வந்தார் எனும் ஆதாரம் எதுவும் உறுதியாக இல்லை, பைபிளில் இயேசுவுக்கு பின் சீடர்களுக்கு பரிசுத்த ஆவி வந்து அவர்கள் யூதரல்லா மக்களுக்கு இயேசுவினை போதிக்க தொடங்கும் பொழுது அந்த ஆவி அவர்களை மேற்கு நோக்கித்தான் ஏவிற்று

இதை அப்போஸ்தலர் நடபடிகள் எனும் புத்தகம் தெளிவாக சொல்கின்றது, ஆக ஒரு அப்போஸ்தலனும் முதலாம் நூற்றாண்டில் இந்தியா பக்கமே வரவில்லை

கிறிஸ்துவின் சீடர்களில் தோமா வித்தியாசமான பேர்வழியாக இருந்திருக்கின்றான், எதையுமே வித்தியாசமாக நோக்கும் சிந்தனை அவனுடையது, இயேசு உயிர்த்ததை நம்பாத அளவு பகுத்தறிவாளனாக இருந்திருக்கின்றான், பின் இயேசுவந்து அவனை நம்ப வைத்திருக்கின்றார்

தோமா எழுதிய நற்செய்தி ஒன்று உண்டு, அது வில்லங்கமானது என்பதால் மறைத்துவிட்டார்கள்

அந்த தோமா ஒரு சீட கூட்டத்தை வைத்திருந்தான், அது தோமா வழி கிறிஸ்தவமானது. கேரளாவுக்கும் அரேபியாவுக்கும் எக்காலமும் தொடர்பு என்பதால் அன்றே தோமாவழி கிறிஸ்தவம் கேரளாவுக்கு வந்தது

இயேசுவுக்கு பின் கிட்டதட்ட 300 ஆண்டுகளுக்கு பின் இவை கேரளாவுக்கு வந்தன‌

சிரிய கிறிஸ்தவம், தோமாவழி கிறிஸ்தவம் எல்லாம் கேரளாவுக்கு வந்தன, யூதர் கேரளாவில் வசித்தது போல அவர்களும் மிக மிக குறைந்த எண்ணிக்கையில் சத்தமின்றி இருந்தார்கள்

ஆம் யூதர் கிபி 70ம் ஆண்டில் ஜெருசலேம் ஆலயம் இடிக்கபட்ட கலவரத்தில் கொச்சிக்கு வந்தார்கள், இன்றும் அவர்கள் பரம்பரையும் அடையாளமும் கொச்சியில் உண்டு

அரேபிய கேரள தொடர்புகள் அப்படியாவனை பின்பு இஸ்லாமும் அப்படியே 7ம் நூற்றாண்டில் வந்தது, பாரத கண்டத்தில் இஸ்லாம் கால்வைத்த முதல் இடம் கேரளமே, ஆனால் சிறிய அளவில்தான் அது இருந்தது

வாஸ்கோடகாமா எனும் போர்த்துகீசியன் 15ம் நூற்றாண்டில் கேரளாவின் கள்ளிகோட்டையில் கால்வைத்ததில் இருந்து இங்கு கிறிஸ்தவ காலணியாக்கமும் மதமாற்றமும் தொடங்கியது,

கேரளாவில் கள்ளிகோட்டை பக்கம் அதை போர்த்துகீசியர் செய்ய, வாஸ்கோடகாமா கடும் எதிர்ப்பினை சம்பாதித்து கள்ளிகோட்டையில் கொல்லவும் பட்டான்

வாஸ்கோடகாமா கொல்லபட்டபின்பு போர்த்துகீசியர் கோவா பக்கம் சென்றனர் அங்கிருந்து மங்களூர்வரை தங்கள் சாம்ராஜ்யத்தை நீட்டிக்க போராடினர், போர்த்துகீசியர் வாள்முனை துப்பாக்கி முனையில் கடும் மதமாற்றம் செய்த சாட்சிகள் வரலாற்றில் உண்டு, அவை அவுரங்கசீப் காலத்தை விட பயங்கரமான ரத்த சரித்திரம்

பிரான்சிஸ் சவேரியார் வந்ததெல்லாம் அப்பொழுதுதான், வடக்கே நிலமை சிக்கலாக அவர் தன் ஜாகையினை தென்னகதிற்கும் இலங்கைக்கும் கிழக்காசியாவுக்கும் மாற்றி கொண்டார்

ஆம் வடக்கே எதிர்ப்பு அப்படி இருந்திருக்கின்றது, போர்த்துகீசிய மதமாற்ற கொடுமைகளும் ஆக்கிரமிப்பும் மகா கொடியதாக இருந்திருக்கின்றது

நம்ம ஊர் வேலுநாச்சியர் போல மங்களூர் பக்கம் அப்பாக்கா என்பவள் 15ம் நூற்றாண்டிலே அவர்களை ஓட அடித்திருக்கின்றாள்

பெரும் எதிர்ப்பு வந்தபின் போர்த்துகீசிய கோஷ்டி அடங்கியது, இதன் பின் சில இடங்களில் மட்டும் துறைமுகம் பக்கம் சமத்தாக வியாபாரம் பார்த்திருக்கின்றது போர்த்துகீசிய கோஷ்டி, அன்று பிரான்ஸ், பிரிட்டன், டச்சு கம்பெனி எல்லாம் இந்தியாவுக்கு வரவில்லை

தென்னகத்தில் ஆளில்லா கடற்கரை பகுதியில் சிறிய கோட்டையும் வியாபாரமும் செய்தபடி சில இடங்களில் அது கால்பதித்தது, அப்படி சென்னை பக்கமும் வந்தது

கோவாவுக்கு அடுத்தபடியாக சென்னை அவர்களின் முக்கிய கேந்திரமாக இருந்தது, அன்று அது சென்னை அல்ல மாறாக போர்த்துகீசியரான மெட்ரூஸ் என்பவன் சமாதி இருந்த இடத்தை மெட்ராஸ் என அழைத்தனர்

அப்பொழுது கிறிஸ்தவம் போர்த்துகீசிய பகுதியான மெட்ராஸுக்கு கோவா போலவே ஊடுருவிற்று, அதில் தோமா வழி கிறிஸ்தவர்களும் உள்ளே வந்தார்கள்

கோவாவில் போர்த்துகீசியர் கிறிஸ்தவமதம் பரப்ப செய்த வெறியாட்டம் மகா கொடுமையானது, எனினும் அவர்களுக்கு முழு வெற்றியில்லை

அப்படி சென்னையிலும் சில முயற்சிகள் நடந்தன, அப்பொழுது ஒரு தோமாவழி கிறிஸ்தவ துறவி கொல்லபட்டு அவன் உடல் சென்னை கடற்கரையில் அடக்கம் செய்யபட்டிருக்கலம்

அதை தூய ஆலயம் என அடையாளமிட்டு, போர்த்துகீசிய மொழியில் சாந்தோ ஆக்கியிருக்கலாம் என்பார்கள்

செயின்ட் எனும் ஆங்கில சொல் போர்த்துகீசிய மொழியில் சாந்தோ என மாறும், செயின்ட் நிக்கோலஸ் சாந்தா கிளாஸ் ஆனது, செயின்ட் குரூஸ் சாந்தா குருஸ் ஆனது போல செயின்ட் ஆலயம் சாந்தா ஆலயம் ஆனது

பின்பு சாந்தோம் ஆனது

இவை எல்லாம் 15ம் நூற்றாண்டு சம்பவங்கள், இதனால் சென்னை பரங்கிமலை ஆலயம் சென்னை சாந்தோமின் பழமை 500 ஆண்டுகளை தாண்டாது

இப்படி மெட்ராஸ் பக்கம் நடமாடிய போர்த்துகீசியர் கொழும்பு மலாக்கா என ரவுண்ட் அடித்தனர், அப்படி ஒரு நேரம் பயணிக்கும்பொழுதுதான் வேளாங்கண்ணி பக்கம் ஒதுங்கி அங்கு ஆலயம் அமைத்தனர்

இப்படியாக அவர்கள் தென் கடற்கரை எல்லாம் ஆடிபாடி திரிந்து ஆலயம் கட்டுவதும் மகிழ்வதுமாக இருந்தனர், இன்றும் தென்னக கடற்கரை கிறிஸ்தவ பெயர்கள் போர்த்துகீசிய பெயர்களாகவே இருக்கும்

நெல்லை மாவட்ட வடக்கன்குளம் ஆலயம் கூட போர்த்துகீஸ் காலத்தில் தொடங்கபட்டதே

பின்பு 16ம் நூற்றாண்டில் பிரிட்டானியர் வந்து போர்த்துகீசியரை மெட்ராஸில் இருந்து அடித்துவிரட்டி ஜார்ஜ் கோட்டையினை கட்டி வலுவாக காலூன்றினர், அதன் பின் தமிழகத்தில் இருந்து விடைபெற்ற போர்த்துகீசிய கோஷ்டி கோவாவிலே அடைக்கலமானது

அங்கு அவர்கள் மேலும் ராஜ்யத்தை விரிக்க எண்ணினர், மாவீரர் சிவாஜி அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தான் பின்னாளில் அவன் வீழ்ச்சிக்கு பின் பிரிட்டானியர் போர்த்துகீசியரை முழங்காலில் நிறுத்தினர்

சுதந்திர இந்தியாவில் பட்டேல் கோவாவினை இந்தியாவோடு இணைத்தார்

இதுதான் போர்த்துகீசியர் இந்தியாவில் ஆண்ட வரலாறு

அவர்கள் சென்னையினையும் கொஞ்சகாலம் ஆண்டனர், அப்பொழுதுதான் பரங்கிமலை, சின்னமலை , சாந்தோம் எல்லாம் உருவாயின‌

கோவா போல மதராஸையும் முழு கிறிஸ்தவ பூமியாக்க அவர்கள் விரும்பினர், அதற்கு சில வலுவான ஆதாரங்களை உருவாக்க தோமையார் பரங்கிமலையில் மரித்து சாந்தோமில் அடக்கம் செய்யபட்டார் என கதை கிளப்பினர்

அந்த புரட்டுகதை இக்காலம் வரை நிலைத்திருக்கின்றது.

ஆனால் கோவா போல் சென்னை முழுவதும் மாறவில்லை அதற்கு ஏகபட்ட காரணங்கள் உண்டு. முதல் காரணம் சென்னையில் அடையாளமிட்டு இருந்த இந்து ஆலயங்கள்,

ஆம் கிராமங்களும் சிறிய நகரங்களுமாக இருந்த அன்றைய சென்னையில் இருந்த பெரும் ஆலயங்கள் சென்னையின் தன்மையினை அன்று காத்தன.

இரண்டாம் காரணம் வியாபாரத்தை மட்டும் கவனித்த பிரிட்டிஷ்காரன், அதாவது கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டிஷ்காரன்,

(மிஷனரி குழப்பமெல்லாம் பிரிட்டன் அரசிடம் இந்தியா சென்றபின்புதான் தலைவிரித்து போட்டு ஆட தொடங்கின, அது நேருவின் புண்ணியத்தால் இன்னும் ஆடிகொண்டிருக்கின்றது விரைவில் அடக்கம் செய்யபடும்)

இதனால் சொல்கின்றோம் செயின்ட் தாமஸ் மலை, சாந்தோம் ஆலயம் எல்லாம் தோமாவின் அடையாளமே அல்ல, அவன் இந்தியா வரவே இல்லை

பைபிளில் பரிசுத்த ஆவி அப்போஸ்தர் கிழக்கே செல்ல கூடாது மேற்கேதான் செல்ல வேண்டும் என பவுல் என்பவனுக்கு உத்தரவிட்ட பின் அனைத்து அப்போஸ்தலரும் மேற்கேதான் சென்றனர்

இதில் தோமா மட்டும் எப்படி கிழக்கே வந்திருக்க முடியும்? அப்படி வந்தால் அவன் பரிசுத்த ஆவியின் கட்டளையினை மீறியவன் இல்லையா?

இதை இப்படி நோக்கலாம்

இயேசு பிறந்தபொழுது கிழக்கே இருந்துதா ஞானிகள் சென்றார்கள், ஆம் இங்கு ஞானமும் அறிவும் தெளிவும் தத்துவமும் சனாதன‌ மதமுமான நல்ல‌ மார்க்கமும் இருந்தது.

இதனால் கிழக்கே கிறிஸ்தவ போதகர்கள் வர பரிசுத்த ஆவி அனுமதிக்கவில்லை. ஐரோப்பா எனும் அன்றைய காட்டுமிராண்டி தேசத்துக்கே சில விஷயங்கள் தேவைபட்டன‌

வாழும் பொழுது இயேசு தன் போதனையிலே சொன்னார் "மருத்துவன் நோய் அற்றவனுக்கு அன்று, நோய் உற்றவனுக்கே தேவை"

இதனால் கிறிஸ்தவ அப்போஸ்தலர்களை அந்த தெய்வம் ஐரோப்பாவுக்கு அனுப்பியது

ஆம் இந்துமதத்தின் ஒரு பாதிப்பு கிறிஸ்துவில் தெரிந்தது, இயேசு ஒரு சித்தரின் சாயல். அதுதான் ஐரோப்பாவுக்கு அவர் வழி செல்ல தெய்வம் வழிகாட்டியது.

பின் அவர்கள் நமக்கே வந்து "ஹூ இஸ் காட்" என்பதெல்லாம் காலத்தின் கோலம்

இயேசு பிறந்தபொழுது நட்சத்திரம் கணித்து சென்று பார்க்கும் அளவு அன்றே இத்தேசம் மிகபெரும் அறிவில் இருந்தது, இதனால்தான் பரிசுத்த ஆவி அப்போஸ்தலரை கிழக்கே அனுப்பாமல் மேற்கே அனுப்பியது.

இதனால் தோமா இந்தியா வந்தார். சைவம் வைணவம் அவர் வழி, திருகுறள் அவர் சொன்னது என எவனும் சொன்னால் அவனிடம் பேசாதீர்கள்

இயேசுவுக்கு முன்பே "அன்பே சிவம்" என உரக்க சொன்ன பூமி இது, அதைத்தான் அன்பே கடவுள் என போதித்தார் இயேசு

இதனால் உறுதியாக சொல்லலாம், விஷயம் இங்கிருந்து அங்கு சென்றதே தவிர, அங்கிருந்தெல்லாம் இங்கு வரவில்லை.

இந்துமதத்தின் அடி நாதம் மேற்கே பரவி அது யூதேயாவில் உருமாறி ஐரோப்பாவுக்கு சென்று, பின் இந்தியாவுக்கே புதிய லேபலில் கிறிஸ்தவம் என வந்தது,.

அவ்வளவுதான் விஷயம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard