Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வைஷ்ணவ பரிபாஷை


Guru

Status: Offline
Posts: 7329
Date:
வைஷ்ணவ பரிபாஷை
Permalink  
 


ஸ்ரீ வைஷ்ணவ பரிபாஷைகளில் சில –/ திவ்ய தேசங்கள்–

 

ஸ்ரீ வைஷ்ணவ பரிபாஷைகளில் சில –

சேஷி -சேஷன் -ஸ்வாமி -அடிமை –

அந்ய சேஷத்வம் -பிறருக்கு அடிமை

அநந்ய சேஷத்வம் -வேறு யாருக்கும் இல்லாமல் -தனக்கும் இல்லாமல் -அவனுக்கு மட்டுமே என்று இருக்கை

பாரதந்தர்யம் -சேஷி உகந்த கைங்கர்யம் செய்வதே கர்தவ்யம்

உபயாந்தரங்கள் -கர்மயோகம் ஞான யோகம் பக்தி யோகம் போன்ற அவனைத் தவிர வேறே உபாயங்கள்

தேவதாந்த்ரம் -அவனைத் தவிர உள்ள ப்ரஹ்மாதி தேவர்கள்
ப்ரயோஜனாந்தரங்கள் -இஹ லோக -ஸ்வர்க்க -கைவல்யங்கள்

சேஷம் -அவன் உண்டு மிகுந்தவை -அவன் உடுத்திக் களைந்தவை-அவன் சூடிக் கொடுத்தவை போல்வன

ஆகிஞ்சன்யம் -கைம்முதல் இல்லாமை

அநந்ய கதித்வம் -போக்கிடம் இல்லாமை

பரமாச்சாரியார் -ஸ்ரீ ஆளவந்தார்

பெரிய உடையார் -ஸ்ரீ ஜடாயு மஹ ராஜர்

பெரிய ஜீயர் -ஸ்ரீ மணவாள மா முனிகள்

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் -ஸ்ரீ பேர் அருளாளர் அம்சம் -ஸ்ரீ நம்பிள்ளை பிரசாதத்தால் திரு அவதாரம்

நம்பூர் வரதாச்சார்யர் ஸ்ரீ நம்பிள்ளை -காவேரியால் அழிந்து விட்டது என்பர்

பெருமாள் திருவடி நிலை -சடாரி -ஸ்ரீ நம்மாழ்வார்

ஆழ்வார் திருவடி நிலை -ஸ்ரீ மதுர கவி எல்லா இடங்களிலும் -ஆழ்வார் திருநகரியில் மட்டும் ஸ்ரீ ராமானுஜன்

ஸ்ரீ பாஷ்யகாரர் திருவடி நிலை -ஸ்ரீ முதலியாண்டான் எங்கும் -திருவேங்கடத்தில் மட்டும் அனந்தாழ்வான்

மா முனிகள் திருவடி நிலை -பொன்னடியாம் செங்கமலம் -ஒண்ணான ஸ்ரீ வானமா மலை ஜீயர்

ஏழு லோகங்கள் -பூ -புவர் -சுவர்கம் – மகர் ஜன-தப லோகம் – சத்யலோகம்

கீழ் ஏழு லோகங்கள் -அதல -விதல -நிதல -கபஸ்திமத் -மகாதல -சுதல -பாதாள லோகங்கள்

மூன்று தோன்று சோதியாய் -ரிக் யஜுர் சாம வேத த்ரயம்

குண த்ரயம் -சத்வ ரஜஸ் தமஸ்

மண்டப த்ரயம் -தியாக மண்டபம் -பெருமாள் கோயில் -ஸ்ரீ காஞ்சி /போக மண்டபம் –கோயில் ஸ்ரீ ரெங்கம் /புஷ்ப மண்டபம் -ஸ்ரீ திருமலை

தத்வ த்ரயம் -சித் அசித் ஈஸ்வர தத்வங்கள்

ரஹஸ்ய த்ரயம் –திருமந்திரம் -த்வயம் -சரம ஸ்லோகம்

அக்ஷர த்ரயம் –அகார உகார மகாரங்கள்

பத த்ரயம் –ஓம் நம நாராயணாய

முனி த்ரயம் -பராங்குச யதிராஜா மா முனிகள் -ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்

அடி த்ரயம் –பொது நின்ற பொன் அம் கழல் -கோயில் -பூவார் கழல் -திருமலை துயர் ஆறு சுடர் அடி -பெருமாள் கோயில்

வ்யூஹ த்ரயம் -சங்கர்ஷண அநிருத்த பிரத்யுமன்

முக்தி தரும் ஷேத்ரங்கள் -அயோத்யா கயா -காஞ்சி -காசி -மதுரா -உஜ்ஜைன் துவாரகா

பக்தி த்ரயம் -பர பக்தி பர ஞானம் பரம பக்தி

விப்ரர்க்கு கோத்ர சரண கூடஸ்தர் -பராசர பாராசார்ய போதாயனாதிகள்

அடியார் த்ரயம் -நீக்கமிலா அடியார் சயமே அடியார் கோதில் அடியார்

ப்ரபன்னர்களுக்கு -பராங்குச பராகால யதிவராதிகள்

அவஸ்த்ய த்ரயம் -ஞான தர்சன ப்ராப்திகள்

அவஸ்த்தை த்ரயம் -தலைமகள்-பேற்றுக்கு த்வரை – திருத்தாயார்-பேறு தப்பாது என்ற துணிவு – தோழி-ஸ்வரூப ஞானம் உணர்த்தி

தாப த்ரயம் -ஆதியாத்மிக ஆதி பவ்திக ஆதி தெய்விக

ப்ராப்யத்துக்கு பர்வத த்ரயம்-ஆச்சார்ய கைங்கர்யம் பிரமம் -பகவத் கைங்கர்யம் மத்யமம் பாகவத கைங்கர்யம் சரமம்

ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள் -ஸ்ரீ பத்ரிநாத் -ஸ்ரீ நைமிசாரண்யம் -ஸ்ரீ புஷ்கரம்-ஸ்ரீ திருமலை – ஸ்ரீ ரெங்கம் -ஸ்ரீ முஷ்ணம் -ஸ்ரீ வான மாமலை

வீர சயனம் -திரு எவ்வுள்ளூர் / வடபத்ர சயனம் -ஸ்ரீ வில்லிபுத்தூர் /தல சயனம் -திருக்கடல் மல்லை /உத்தான சயனம் -திருக்குடந்தை
தர்ப்ப சயனம் -திருப்புல்லாணி /புஜங்க சயனம் -ஸ்ரீ ரெங்கம் /போக சயனம் -திருச்சித்ர கூடம் / மாணிக்க சயனம் -திரு நீர்மலை

சரீரத்தில் நவ த்வாரங்கள் -இரண்டு காதுகள் -இரண்டு கண்கள் -இரண்டு மூக்கு த்வாரங்கள் –
வாய் -மல ஜலம் கழிக்கும் இடங்கள் இரண்டும்

ஸ்ரீ அஹோபிலம் நவ நரசிம்மர் -அஹோபிலம் -வராஹ -மாலோல -யோகானந்த -பாவன-கராஞ்ச -சக்ரவட-பார்க்கவ -ஜ்வாலா

பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள் -திருக்கண்ணங்குடி திருக்கண்ணபுரம் திருக்கண்ண மங்கை திருக்கோவலூர் கபிஸ்தலம்

பஞ்ச ரெங்க ஷேத்ரங்கள் -ஆதி ரெங்கம் ஸ்ரீ ரெங்க பட்டினம் -அப்பக்குடத்தான் என்னும் கோயில் அடி –
கஸ்தூரி ரெங்கன் – ஸ்ரீ ரெங்கம் -ஆராவமுதாழ்வார் திருக்குடந்தை -பரிமள ரெங்கன் இந்தளூர்

பஞ்ச பர்வ புறப்பாடு -ஏகாதசி பவ்ர்ணிமா அமாவாசை ரோஹிணி சரவணம்

பஞ்ச பூதங்கள் -ஆகாசம் -வாயு -அக்னி -நீர் -பிருத்வி

பஞ்ச குணங்கள் -ஸ்பர்சம் சப்தம் ரூபம் கந்தம் ருசி

பஞ்ச பிராணன் -பிராண அபான வ்யான ஸமான உதான

பஞ்ச கர்ம இந்திரியங்கள் -கை -கால் -வாய் -மல மூத்திர ஸ்தானங்கள்

பஞ்ச ஞான இந்திரியங்கள் -கண்கள் காதுகள் மூக்கு நாக்கு தோல்

பஞ்ச யஜ்ஜ்ங்கள் -தேவ பித்ரு பூத மனுஷ்ய ப்ரஹ்ம யஜ்ஜம்

பஞ்ச ஸூக்தங்கள் -புருஷ -விஷ்ணு -நாராயண -ஸ்ரீ பூ நீளா ஸூக்தங்கள்

பஞ்ச ப்ரமேய பிரகாரங்கள் -பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சை

பஞ்ச பிராமண பிரகாரங்கள் -வேத உப ப்ராஹ்மண இதிகாச புராணங்கள் பாஞ்சராத்ர மனு ஸ்ம்ருதி அருளிச் செயல்கள்

பஞ்ச -ஐம்பொன் -தங்கள் வெள்ளி -வெங்கலம் பித்தளை -செப்பு

பஞ்ச துவாரகா -தாகூர் நாத பேட் மூல கங்கிரவ்லி

பணியாயுதங்கள் -சங்கு சக்ர கதை சார்ங்கம் கட்கம்

பஞ்ச சம்ஸ்காரம் -தாபா புண்ட்ர மந்த்ரஉபதேச நாம யாகம் -திருவாராதனம்

அர்த்த பஞ்சகம் -பர ஸ்வ உபாய விரோதி உபேய ஸ்வரூபங்கள்

பஞ்ச முக ஆஞ்சநேயர் -ஹனுமான் -கருடன் -நரஸிம்ஹன்-ஹயக்ரீவர் -வராஹர்

ஆறு ருதுக்கள் -வசந்தம் -கிரீஷ்ம -வர்ஷா ஷரத் ஹேமந்த ஷிசிஸ்ர

ஆறு ருசிகள் -மதுரம் இனிப்பு -அமலா புளிப்பு -லவண உவர்ப்பு -திக உறைப்பு -கடு கசப்பு -கஷாய

ஆறு இயற்கையான குணங்கள் -ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ்

ஆறு ப்ராஹ்மண கர்தவ்யங்கள் -அத்யயனம் -அத்யாபனம்-யஜனம் -யாஜனம் -தானம் -பிரதிகிரஹம்

ஆறு வேத அங்கங்கள் -சீஷா வ்யாக்ரமம் சந்தஸ் நிருக்தம் ஜ்யோதிஷம் கல்பம்

ஆறு ஆந்தர விரோதிகள் -காமம் க்ரோதம் லோகம் மோகம் மதம் மாத்சர்யம்

சப்த நதிகள் -கங்கா – யமுனா -சரஸ்வதி -நர்மதா -சிந்து -காவேரி –

சப்த தீபங்கள் -பிலஷ கிரௌஞ்ச சால்மலி புஷ்கர குச சக ஜம்பூ

சப்த கடல்கள் -உப்பு -கருப்பஞ்சாறு -நெய் -தயிர் -பால் -மது -ஸூத்த நீர்

சப்த வாகனங்கள் -காயத்ரி உஷ்ணிக் அனுஷ்டு பிருஹதீ பங்க்தி திருஷ்டுப் ஜெகதீ

சப்த ரிஷிகள் -அத்ரி -பிருகு -குத்ச வசிஷ்ட கெளதம காஸ்பியா அங்கிரஸ

சப்த ரிஷிகள் -வைவஸ்வத மன்வந்தத்தில் -விச்வாமித்ர ஜமதக்னி பரத்வாஜர் கௌதம அத்ரி வைசிஷ்ட கஸ்யபர்

சப்த ஸ்வரங்கள் -ச ரி க ம ப த நி

ஸ்ரீ ஆளவந்தார் அஷ்ட கிரந்தங்கள் –ஆத்ம சித்தி -சம்யக் சித்தி -ஈஸ்வர சித்தி -கீதார்த்த ஸங்க்ரஹம் –
ஸ்தோத்ர ரத்னம் -சதுஸ் ஸ்லோகி–மகா புருஷ நிர்ணயம் ஆகம பிரமாணம் –

ஸ்ரீ ராமானுஜருடைய நவ கிரந்தங்கள் -ஸ்ரீ பாஷ்யம் -வேதாந்த தீபம் -வேதாந்த சாரம் -வேதாந்த ஸங்க்ரஹம் -ஸ்ரீ கீதா பாஷ்யம்
சரணாகதி கத்யம் -ஸ்ரீ ரெங்க கத்யம் -ஸ்ரீ வைகுண்ட கத்யம் -நித்ய கிரந்தம்

ஸ்ரீ ராமானுஜர் உடைய ஆச்சார்யர்கள் -ஸ்ரீ ஆளவந்தார் கடாக்ஷம் -பெரிய நம்பி -பெரிய திருமலை நம்பி –
திருக்கோஷ்டியூர் நம்பி -திருமாலை ஆண்டான் -ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் -திருக்கச்சி நம்பி

ஏழு மலைகள் -சேஷாத்ரி வேதாத்ரி கருடாத்ரி அஞ்சனாத்ரி வ்ருஷபாத்ரி நாராயணாத்ரி வேங்கடாசலாத்ரி

சதுர்வித ப்ரளயங்கள் -நித்ய -நைமித்திக-நான் முகனின் இரவு காரணம் -பிராகிருத -ஆதியந்திக

————

திவ்ய தேசங்கள் -108-
சோழ தேசங்கள் -40-/பாண்டிய தேசங்கள் -18-/தொண்டை நாடு தேசங்கள் -22-/நடு நாட்டு தேசங்கள் -2-/
மலை நாட்டு தேசங்கள் -13-/ வட நாட்டு தேசங்கள் -11-/ திருப்பாற் கடல் -ஸ்ரீ வைகுண்டம்

கிழக்கு நோக்கி -79-/மேற்கு நோக்கி -19-/வடக்கு நோக்கி -3-/ தெற்கு நோக்கி -7-

திருக் கோலங்கள் -கிடந்த கோலம் -21-/நின்ற கோலம் -60-/வீற்று இருந்த கோலம் 21-

பொய்கையார் -6-/ பூதத்தார் -13-/ பேயார்-15-/திருமழிசையார் -17-/நம்மாழ்வார் -37-/ குலசேகர பெருமாள் -9-/
பெரியாழ்வார் -18-/ ஆண்டாள் -11-/தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -1-/ பாணனார் -3-/ திருமங்கை -86-

புராண ஸ்தலங்கள் -20-/ அபிமான ஸ்தலங்கள் -29-

அனைவரும் மங்களாசாசனம்- கோயில் -247-பாசுரங்கள்
பொய்கையார் -1-/ பூதத்தார் -4-/பேயார் -2-/திருமழிசை -14-/குலசேகரர் -31-/நம்மாழ்வார் -12-/
பெரியாழ்வார்–35- / ஆண்டாள் -10- / தொண்டர் -55-/பாணனார் -10-/கலியன் -73-

வான் திகழும் சோலை மதில் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் -இருந்தாலும்
குறிப்பிட்டு –247-பாசுரங்கள் அருளிச் செயல்களில் உண்டே
பொய்கையார் —1-பாசுரம் -6-
பூதத்தார் –———–4-பாசுரங்கள் —28-/-46-/-70-/-88-
பேயார் —————-2–பாசுரங்கள் –61 -/-62-
திருமழிசையார் –14 -பாசுரங்கள் —திருச்சந்த விருத்தம் –10-பாசுரங்கள்-21-/-49-/-50-/-51-/-52-/-53-/-54-/-55-/-93-/-119-/ நான்முகன் திருவந்தாதி –4-பாசுரங்கள்-3-30-/-36-/-60-
நம்மாழ்வார் ———-12-பாசுரங்கள் —திருவிருத்தம் –1-பாசுரம் -28-/ திருவாய்மொழி-11-பாசுரங்கள் -7-2-
குலசேகரர் ———–-31-பாசுரங்கள் -1-/.-2-/-3-பதிகங்கள் –/-8-10-
பெரியாழ்வார் —35–பாசுரங்கள் –2-7–2-/-2-7-8-/-2-9-11-/–3-3-2-/ பதிகங்கள் -4-8-/-4-9-/-4–10-
ஆண்டாள் ———-10–பாசுரங்கள் –நாச்சியார் திருமொழி -11-பதிகம்
தொண்டர் அடி பொடி ஆழ்வார் –55-பாசுரங்கள் –-திருமாலை –45-பாசுரங்களும் / திருப் பள்ளி எழுச்சி –10-பாசுரங்களும்
திருப் பாண் ஆழ்வார் –10-அமலனாதி பிரான் -10-பாசுரங்களும்
திரு மங்கை ஆழ்வார் –73-பாசுரங்கள் —பெரிய திருமொழி -58–பாசுரங்கள் –1-8-2-/3-7-6 /பதிகங்கள் ,5-4,/5-5,/5-6,/5-7,/5-8,/
பாசுரங்கள் -6-6-9,/7-3-4,/ 8-2-7,/ 9-9-2,/11-3-7,/11-3-8–/ திருக் குறும் தாண்டகம் -4-பாசுரங்கள் -7-/-12-/-13-/-19-/
திரு நெடும் தாண்டகம் -9-பாசுரங்கள் –11,/12,/14,/18,/19,/23,/24,/25,/26./ சிறிய திரு மடல் -1-பாசுரம் -71-/ பெரிய திரு மடல் -1-பாசுரம் -118-

பத்து ஆழ்வார் மங்களாசாசனம்
திருவேங்கடம் -202-பாசுரங்கள் –
பொய்கையார் -10-/பூதத்தார் -9-/ பேயார் -18-/திருமழிசை -15-/குலசேகரர் -11-/ நம்மாழ்வார் -43-/
பெரியாழ்வார்–35- / ஆண்டாள் -10- /பாணனார் -2-/கலியன் -61-

பத்து ஆழ்வார் மங்களாசாசனம்
திருப்பாற் கடல் -51-
பொய்கையார் -1-/பூதத்தார் -2-/ பேயார் -4-/ திருமழிசை -13-/ குலசேகரர் -2-/ நம்மாழ்வார் -9-/
பெரியாழ்வார் -5-ஆண்டாள் -3-/தொண்டர் -1-/ கலியன் -11-

எட்டு ஆழ்வார்கள் மங்களாசாசனம்–ஸ்ரீ வைகுண்டம் – -36-பாடல்களால்
பொய்கையார் -2-/ பேயார் -1-/ திருமழிசையார் -2-/நம்மாழ்வார் -24-/
பெரியாழ்வார் -4-/ ஆண்டாள் -1-/பாணனார் -1-/ கலியன் -1-

ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் -திருக்குடந்தை -51-
பூதத்தார் -2-/ பேயார் -2-/ திருமழிசையார் -7-/நம்மாழ்வார் -11-/பெரியாழ்வார் -3-/ ஆண்டாள் -1-

ஆறு ஆழ்வார்கள் மங்களாசாசனம் –திருமாலிருஞ்சோலை -128-பாசுரங்கள்
பூதத்தார் -3-/பேயார் -1-/ நம்மாழ்வார் -46-/பெரியாழ்வார் -34-/ ஆண்டாள் -11-/கலியன் -33-

ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம்-திரு அயோத்தியை -13-பாசுரங்கள்
குலசேகரர் -4-/ நம்மாழ்வார் -1-/பெரியாழ்வார் -6-/தொண்டர் -1-/கலியன் -1-

ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் – திருக்கண்ணபுரம் -128-
குலசேகரர் -11-/பெரியாழ்வார் -1-/ ஆண்டாள் -1-/நம்மாழ்வார் -11-/ கலியன் -104-…

ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம்–திருக்கோஷ்டியூர்-39-.
பூதத்தார் -2-/ பேயார் -1-/திருமழிசையார் -1-/பெரியாழ்வார் -22-/கலியன் -13-

ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம்-ஸ்ரீ மத் துவாரகா -13-
திருமழிசையார் -1-/ நம்மாழ்வார் -1-/பெரியாழ்வார் -5-/ ஆண்டாள் -4-/ கலியன் -2-…

ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம்–திரு வடமதுரை -50-
நம்மாழ்வார் -10-/பெரியாழ்வார் -16-/ ஆண்டாள் -19-/தொண்டர் -1-/ கலியன் -4-

நான்கு ஆழ்வார்கள் மங்களா சாசனம் –திருக்குறுங்குடி -40-
திருமழிசை -1-/நம்மாழ்வார் -13-/ பெரியாழ்வார் -1-/கலியன் -25-

நான்கு ஆழ்வார்கள் மங்களா சாசனம் –திருப்பாடகம் -6-
பூதத்தார் -1-/ பேயார் -1-/திருமழிசை -2-/ கலியன் -2-

நான்கு ஆழ்வார்கள் மங்களா சாசனம் –திருப்பேர் நகர் -அப்பக்குடத்தான் -33-
திருமழிசை -1-/ நம்மாழ்வார் -11-/ பெரியாழ்வார் -2-/ கலியன் -19-

மூன்று ஆழ்வார்கள் மங்களா சாசனம் –திரு அஷ்டபுஜம் -12-பாசுரங்கள்

மூன்று ஆழ்வார்கள் மங்களா சாசனம்-திரு அத்தியூர் -7-பாசுரங்கள்

மூன்று ஆழ்வார்கள் மங்களா சாசனம் திருவல்லிக்கேணி -12-பாசுரங்கள்

மூன்று ஆழ்வார்கள் மங்களா சாசனம்–திருக்கோவலூர் -21-பாசுரங்கள்

மூன்று ஆழ்வார்கள் மங்களா சாசனம் -திரு ஆய்ப்பாடி -22-

இரண்டு ஆழ்வார்கள் மங்களா சாசனம் -21-திவ்ய தேசங்கள்

ஒரே ஆழ்வார் மங்களா சாசனம் -67-திவ்ய தேசங்கள் –
இவற்றுள் –
கலியன் மட்டும்–47-திவ்ய தேசங்கள் –
நம்மாழ்வார் மட்டும் -16-திவ்ய தேசங்கள்-
திருமழிசை ஆழ்வார் -2- அன்பில் கபிஸ்தலம்
பெரியாழ்வார் -1-கண்டம் என்னும் கடி நகர்
குலசேகரர் -1–திருவித்துவக்கோடு

ஒரே பாசுரம் மங்களா சாசனம் -14-திவ்ய தேசங்கள்
இரண்டு பாசுரங்கள் மங்களா சாசனம் -7-திவ்ய தேசங்கள்
ஸ்ரீ வைகுண்டம் –/ திண்ணனூர் / திருப் புட் குழி/ திருத் தண்கா-திருத் தூப்புல் உறையூர் /
ஸ்ரீ வில்லிபுத்தூர் /திருத் தலைச் சங்க நாண் மதியம்

ஐம்பதுக்கு மேல் பட்ட பாசுரங்கள் மங்களாசாசனம் -7-திவ்ய தேசங்கள்
திருப்பாற் கடல் -51-/திருக்குடந்தை -51-திருமாலிருஞ்சோலை -128-/ திருக்கண்ணபுரம் -128-/
திரு நறையூர் -110-/ திருவேங்கடம் -202-/திருவரங்கம் -247-

——————–

ஸ்ரீ மத் ராமானுஜர் திருக் கோஷ்ட்டியூர் நம்பி இடம் -18-தடவை நடந்தது பிரசித்தம்
திருக் கோஷ்ட்டியூர் நம்பி பல தடவை ஸ்ரீ ரெங்கம் வந்து இவர் நன்மைக்கும் அர்த்தங்களை அருளுவதற்கும் வந்தமையும் உண்டே

1-சம்சார ஆசை தொலைந்து வர வேண்டும்
2-அகங்கார மமகாரங்கள் தொலைந்து வர வேண்டும்
3-ஆத்மஞானங்கள் பெற்ற பின்பு வர வேண்டும்
5-ஐஸ்வர்ய கைவல்ய ஆசைகள் தொலைத்து வர வேண்டும்
6-விஷயாந்தரங்களில் ஆசை தொலைந்து வர வேண்டும்
8-விருப்பு வெறுப்பு -ராக த்வேஷம் இரட்டைகள் தொலைந்து வர வேண்டும்
9-பரதந்தர்ய உணர்வு வந்த பின்பு வர வேண்டும்
10-ஸ்ரீ வைஷ்ணவம் கை கூடிய பின்பே வர வேண்டும்
11-சாத்விக பரிக்ரஹம் கிடைத்த பின்பே வர வேண்டும்
12-பாகவத பரிக்ரஹம் கிட்டிய பின்பே வர வேண்டும்
14-அநந்ய உபாயத்வம் பெற்ற பின்பே வர வேண்டும்
15-அநந்ய பிரயோஜனத்வம் மட்டில் த்வரை கிடைத்த பிறகே வர வேண்டும்
16-அநந்ய போக்யத்வம் கிடைத்த பிறகே வர வேண்டும்
17-ஆச்சார்யரை பற்றிய பின்பே வர வேண்டும்
18-அவர் கிருபையால் திரு மந்த்ரார்த்தம் கை கூடும் –

நமக்கு காட்டி அருளவே இந்த நாடகம் –
ஸ்ரீ ராமானுஜர் -18-படிகளை காட்டி திருமந்த்ரார்த்தம் பெற்று ஆசை யுடையோர்க்கு எல்லாம் வழங்கி -எம்பெருமானார் ஆனார் —

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆச்சார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெரும்மானார் ஜீயர் திரு அடிகளே சரணம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

2.பரமபதம்

 

12. பரமபதம்

பரபக்தி        surrender of the lord
பரஞானம்    actual vision of the lord
பரகதி           To reach the lord
இந்த மூன்றையும் பகவான் ஒரே ஸ்லோகத்தில் சொல்கிறார்.

பக்த்யா த்வநந்யயா ஷக்ய
அஹமேவம்விதோ அர்ஜுன।
ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேந
ப்ரவேஷ்டும் ச பரம்தப॥ 11.54 ॥

எதிரிகளை வாட்டுபவனே! அர்ஜுனா !
ஒருமுகப்பட்ட பக்தியாலேயே(prapatti)
இவ்வாறு என்னை உள்ளபடி அறியவும்
காணவும்(paraGnanam)
அடையவும்(paraGathi) முடியும். 

பரகதி

முக்தி எனும்  பிரம்மத்தை அடைவதே பரகதியாகும். எல்லா பாவங்களையும் விட்டுவிட்டு ஆத்ம தியானம் செய்கின்றவன் வினைகளை நீக்கும் பிரம்மத்தை அடைவான். மனம், வாக்கு, உடல் மூன்றினாலும் எப்பிராணிக்கும் எந்த தீங்கும் செய்யாதவன் அப்போதே பிரம்மத்தை அடைகிறான். அகங்காரமும் கடுமையும் பகையும் அற்றவன் தூக்கமும் அச்சமும் தொல்லையும் இல்லாத மேலான நிலையை பெறுகிறான். மான அவமானத்திலும் பகைவரிடமும் நண்பனிடமும் வேறுபாடு பாராட்டாமல் மௌனமாக இருப்பவன் முக்தியை அடைகிறான். இம்மாதிரி நடவடிக்கைகளுடன் பரமாத்மாவை தியானம் செய்துகொண்டு இருக்கும் ஆத்ம ஞானி அவனுடைய ஞானத்தினாலேயே பரகதி பரமாத்மாவால் அருளப்படுகிறது.

இறுதியில் உயிர்கள் அடையும் இலக்கு என்பது நித்திய கைங்கர்யம் செய்யும் இடமான ஸ்ரீவைகுண்டமாகும்.

மோட்சம் என்பது இறைநிலை அடைதல்

யாரிடமிருந்து உயிர்கள் தோன்றியதோ, யாரால் இந்த பிரபஞ்சம் எல்லாம் வியாப்பிக்க பட்டிருக்கிறதோ அவரை தனது கடமையால் அர்ச்சித்த மனிதன் இறைநிலையை அடைகிறான்.18-46 இவ்வாறு தன்னிலைபெற்ற அந்த யோகி மட்டுமே தானே பிரம்மமாகி பேரானந்தத்தை அடைகிறான்.5-24
ஏனெனில் பிரம்மத்திற்கும், அழிவற்ற மோட்ச நிலைக்கும், நிலையான தர்மத்திற்கும், ஒப்பற்ற சுகத்திற்கும் இருப்பிடம் நானே என்கிறார் புருஷோத்தமர்.14-27 தோன்றாதவர், அழிவற்றவர், என்று சொல்லபடுகின்ற அவரை அடைவதை மேலான நிலை என்று சொல்கின்றனர். எதை அடைந்து திரும்பி வருவதில்லையோ அது எனது மேலான இருப்பிடமாகிய பரமபதம் 8-21 என்கிறார். சொர்க்கத்திற்கு சென்றவர்கள் மீண்டும் பிறக்கிறார்கள் பரமபதத்திற்கு சென்றவர்கள் பிறவியிலிருந்து விடுபட்டு இறை நிலையை அடைகிறார்கள்.

சொர்க்கம்

வேதங்களை அறிந்தவர்களும், சோமபானம் அருந்தியவர்களும், பாவம் நீங்க பெற்றவர்களும், யாகங்களால் என்னை வழிபாட்டு சொர்கத்தை பிராத்திக்கிறார்கள். அவர்கள் நற்செயல்களின் விளைவாக இந்திர லோகத்தை அடைந்து சொர்கத்தில் மேலான தேவ போகங்களை அனுபவிக்கிறார்கள்.9-20 அவர்கள் பரந்த அந்த சொர்க்கத்தை அனுபவித்து, புண்ணிய பலன் தீர்ந்ததும் பூமியை அடைகிறார்கள். வேதங்கள் கூறுகின்ற கர்மங்களை பின்பற்றுபவர்கள் உலகியல் நாட்டம் உடையவர்களாக இவ்வாறு வரவும் போகவும் செய்கிறார்கள்.9-21

காற்று எவ்வாறு இந்த உலகம் முழுவதும் பரவியிருக்கிறதோ அவ்வாறே பகவான் எங்கும் நிறைந்து இருக்கிறார். இது புலன்களுக்கு தென்படாது. அனைத்து உயிர்களும் இறைவனிடத்திலேயே இருக்கின்றன. அசையும் பொருள் அசையா பொருள் அனைத்தும் இறைவனாலேயே தோற்றுவிக்கபடுகிறது. அனைத்து செயல்களையும் இயற்கை செய்கிறது. சொர்க்க வாழ்க்கை வாழ வேண்டும் என்று வேதங்களில் கூறப்பட்ட செயல்களை செய்தும் வழிபாடு செய்தும் கொண்டு இருப்பவர்களை இறைவனே சொர்க்கத்திற்கு எடுத்து செல்கிறார். அவர்களுடைய புண்ணியங்கள் தீர்ந்த பிறகு மீண்டும் அவர்கள் இந்த பூமியில் உயிரினமாக பிறப்பார்கள்.

தியான நிலையை அடைந்து விட்டால் எல்லா உயிர்களிலும் ஆன்ம வடிவில் இருப்பது பகவான் என்பது புரிந்துவிடும். எல்லா உயிர்களிடமும் அன்பாக நடந்து கொள்வான். அனைத்துமே இறைவனின் வடிவம் என்பது புரிந்துவிடும். மேலும் இந்த பிறவியில் ஒருவன் நல்ல காரியங்கள் பல செய்து தியானம் செய்து இறைநிலையை அடைய முயற்சி செய்து கொண்டு இருக்கும் போது இறந்துவிட்டால் அவன் மீண்டும் நல்லோர்கள் மத்தியில் பிறந்து முற்பிறவியில் பாதியில் விட்ட முயற்சியை மீண்டும் தொடர்ந்து செய்து அவன் இறைவனை அடைவான். ஒரு பிறவியிலிருந்து மருபிறவிக்கு செல்லும் போது முந்தய பிறவியின் குணமும் சேர்ந்தே வரும். பூவில் உள்ள மனம் காற்றோடு சேர்ந்து செல்வது போல் மனிதன் இறக்கும் போது அவனுடைய குணமும் ஆன்மாவோடு செல்லும். மறுபிறவியை அதனுடன் தொடருவான்.

இறைவனை அடைந்தால் மட்டுமே பிறவியில் இருந்து விடுபட முடியும். பக்தியுடனும் தூய மனத்துடனும் பக்தன் அளிக்கும் எந்த சிறிய பொருளையும் இறைவன் அன்பாக ஏற்றுகொள்வார். இப்படிபட்ட இறைவன் அனைத்து உயிரையும் சமமாக காண்கிறார். அதேபோல் எந்த மனிதன் அனைத்து உயிரினங்களையும் சமமாக காண்கின்றானோ அவன் இறைவனுக்கு மிகவும் பிரியமானவன். எல்லா வேலைகளையும் செய்யலாம் ஆனால் அதனால் விளையும் பலனில் விருப்பு வெறுப்பு கொள்ளாமல் இறைவனுக்கு அர்பணித்து விட்டு இருந்தால் எந்த பாவத்திற்கும் ஆளாகாமல் இந்த பிறவியிலேயே முக்தி அடையலாம். அதாவது மீண்டும் பிறவா நிலையை அடையலாம். 

அர்ச்சிராதி கதி

பக்தியினால் சரணமடைந்த ஜீவன் அந்திம காலத்தில் பிரம்மன் ஞானியின் ஆத்மா பஞ்ச பூத உடலை விட்டுவிட்டு நுட்ப உடலுடன் சூட்சும நாடி வழியாக பிருமாந்திரத்தை பேதித்துக்கொண்டு
ஓர்சூட்சம சரீரத்தை எடுத்துக் கொண்டு சூரியனின் கதிர்களை பற்றிக் கொண்டு இரவுபகல் மாதம் வருடம் எனும் மனித எல்லைகளை கடந்து மேலே சென்று அர்ச்சிராதி மார்க்கத்தில் அதாவது அர்ச்சி எனப்படும் அக்னிலோகம் வாயு லோகம் ஆதித்ய லோகம் இந்திரலோகம் நான்முகனின் பிரஜாபதி லோகம் ஆகியவற்றைக் கடந்து தேவதைகளின் உலகங்களை அடைந்து அங்கெல்லாம் வரவேற்கப்பட்டு நன்கு உபசரிக்க பட்டு அந்தந்த தேவதைகளால் வழிநடத்தப்பட்டு அவைகளைக் கடந்து ஸ்ரீவைகுண்டத்தில் எல்லையில் ஓடும் விரஜா நதியை அடைகிறான். அந்த நதியில் இறங்கி மங்கல ஸ்நானம் செய்த ஜீவனுக்கு பிறகு திரும்பும் தொடர்பு அற்ற தெய்வீக உடல் கிடைக்கிறது.
அந்த திவ்ய சரீரத்துடன்  ஐரமதீயம் என்னும் ஏரியை அடைகிறான்.பின் சோமஸவனம் என்னும் மரத்தை அடைகிறான் அங்கே வைகுண்ட வாசிகளான  500 அப்ஸரஸ் திரிகள்
மாலைகள் வஸ்திரங்கள் வாசனை திரவியங்கள் என திவ்ய அலங்காரம் செய்து வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்

விரஜாநதியில் நீராடியதால் கர்மாக்களின் காரணமாக ஏற்பட்டிருந்த உலக சம்பந்தம் எல்லாம் கழிய பெற்று அழுக்கு நீங்கிய வைரம் போல தூய்மை பெற்று அந்த பேரொளியுடன் புதிய வஸ்த்திரம் அணிந்து பரமபத வாசல் வழியாக பகவானின் இருப்பிடமாகிய வைகுந்தத்தில் நித்ய கைங்கரியம் செய்து இறைநிலை அடையும்பேறு பெறுகிறான். இங்கே இறைவன் உயர்ந்தவன். அவனுக்கு தாழ்ந்த நிலையில் உள்ள முக்தி அடைந்த ஆன்மாக்கள் தெய்வீக உடலைப்பெற்று பிறவியிலிருந்து விடுதலை அடையும்.

விஸ்ணு புராணம், பிரபஞ்சத்தின் மேற்பகுதி சூரியனை விட 260,000,000 யோஜனைகள் (2,080,000,000 மைல்) தொலைவில் இருப்பதாக விவரிக்கிறது.  சூரியன் முதல் பூமி வரை பூமியானது 100,000 யோஜனைகள், மற்றும் 70,000 யோஜனைகள் பூமியைக் காட்டிலும் அத்தா, வித்தலா, சுத்தலா, தாலத்தலா, மஹாலாலா, ரசாத்தலா மற்றும் பாத்தாலா என ஏழு தாழ்ந்த கிரக அமைப்புகள் உள்ளன.  30,000 யோஜன்கள் இந்த குறைந்த கிரகங்களுக்கு கீழே இருக்கும், சஷா நாகா Garbhodaka Ocean மீது உள்ளது.  அந்த கடல் 249,800,000 யோஜனைகள் ஆழமாக உள்ளது.  இதனால் பிரபஞ்சத்தின் மொத்த விட்டம் சுமார் 500,000,000 யோஜனாக்கள் அல்லது 4,000,000,000 மைல்கள் ஆகும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard