நாலடியார் , பொருட்பால், அரசு இயல் :20 : தாளாண்மை 200
உழைத்து உண்ணலே பேரின்பம்
. பெரு முத்தரையர் பெரிது உவந்து ஈயும்
கருணைச் சோறு ஆர்வர் கயவர், கருணையைப்
பேரும் அறியார், நனி விரும்பு தாளாண்மை
நீரும் அமிழ்து ஆய்விடும்.
கருத்துரை :- இலவசமாகப் பெற்று உண்னும் விருந்து உணவைவிடத் தானே முயன்று உழைத்துக் குடிக்கும் தண்ணீர், உழைத்தவனுக்கு அமிழ்தத்தை நிகர்த்தது ஆகும்.
தெளிவுரை- பெருமுத்தரையர் பெரிதும் மகிழ்ந்து அன்னதானம் செய்வர் அவர் வழங்கும் பொரியலுடன் கூடிய சோற்றை முயற்சி எதுவும்
செய்யாமல் கயவர் வாங்கி உண்பர். பொரிக்கறியையும் சோற்றையும் அறியாதவராய்த் தம் அயரா உழைப்பால் தாம் முயன்று பெற்ற தண்னீர் கூட உழைப்பாளிக்கு அமிழ்தத்தை ஒத்த இன்பம் தருவதாகும்
தெளிவுரை :- வளப்பம் மிக்க பெரிய உலகத்து வாழ்வோரும், மிகுந்த செல்வராக இருந்த போதிலும், ஏழைக்கு இரங்காத கொடியவர் வறியரே. வறுமையுற்ற போதும் சென்று யாரிடமும் யாசிக்காதவர் பெரும் முத்தரையருக்கு இணையான செல்வராவார்.
சிறப்புறை :- பெரும் முத்தரையரின் பெருமை இரண்டாம் முறை பேசப் படுகின்றது.