Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவர் யார்?


Guru

Status: Offline
Posts: 7329
Date:
திருவள்ளுவர் யார்?
Permalink  
 


திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?  தேமொழி Feb 1, 2020

 

siragu thiruvalluvar yaar2

திருவள்ளுவர் வரலாறு எனக் கூறப்பட்டதில் புனைவுகளை அடையாளம்கண்டு, அது குறித்து மேற்கொண்ட ஆவண ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் மூலம் வள்ளுவர் ஓர் இளவரசர் என்று அடையாளம் கூறியவர் பண்டிதர் அயோத்திதாசர். அயோத்திதாசர் எழுத்துக்கள் மீது தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து அவற்றை நூல்களாகவும் கட்டுரைகளாகவும் வெளியிட்டு வருபவர் எழுத்தாளர் திரு. கௌதம சன்னா. பண்டிதர் அயோத்திதாசர் ஆய்வுகளின் அடிப்படையில் ஜூன் 2018 ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் திருக்குறள் மாநாட்டில் கௌதம சன்னா தான் வழங்கிய திருவள்ளுவர் குறித்த ஆய்வுரையை மேலும் விரிவுபடுத்தி அதற்கு நூல் வடிவம் கொடுத்ததுடன், நூலுக்காகத் தான் ஆய்வு மேற்கொண்ட ஆவணங்களையும் பின்னிணைப்பாக இந்த நூலில் கொடுத்துள்ளார். ஓவியர்-சிற்பக்கலைஞர் சந்ரு அவர்கள் வடிவமைத்து, தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பால் டிசம்பர் 2019 ல் ஜெர்மனியில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவரின் ஐம்பொன் சிலையின் அழகிய படம் இந்த நூலின் மேலட்டையை அலங்கரிக்கிறது. ஜெர்மனியின் அருங்காட்சியகத்தில் வள்ளுவர் சிலை நிறுவும் விழாவன்று வெளியிடப்பட்ட நூல் இது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

நூலில் முனைவர் க.சுபாஷிணியின் பதிப்புரை. சங்ககாலத்துக்குப் பின்னர் மிக நீண்ட வைதீக தாக்கத்தினால் தமிழகச் சூழலில் கவனிப்பாரற்று புறக்கணிக்கப்பட்ட நிலைக்குச் சென்றிருந்த திருக்குறள், ஐரோப்பியச் சமயப் பரப்புரையாளர் வருகையின் பின்னர் மீண்டெழுந்ததையும், அவர்களால் திருக்குறள் ஆர்வத்துடன் ஆராயப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு, அச்சு நூல்கள் வடிவில் திருக்குறள் மறுமலர்ச்சி கண்டதையும் விவரிக்கிறது. ஐரோப்பியர் பங்களிப்பு ஒதுக்கப்பட முடியாத இடத்தை திருக்குறள் வரலாற்றில் பெற்றுள்ளது என்பதுதான் உண்மை. குறள் தந்த திருவள்ளுவரை அண்மையில் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஓர் ஒற்றை அடையாளமாக இந்த 21 ஆம் நூற்றாண்டு முன்னிலைப்படுத்தியுள்ள வரவேற்கத்தக்க மாற்றத்தைச் சுட்டுகிறார் சுபாஷிணி.

தமிழ் இலக்கியங்கள் சுவடியிலிருந்து 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் அச்சேற்றப்பட்டது. குறளும் வள்ளுவரும் பரவலாக அறியப்படத் தொடங்கிய இக்காலகட்டத்தில், வள்ளுவர் யாரென்பது குறித்துப் புனைவுகளும் கட்டுக்கதைகளும் வள்ளுவரின் வரலாறாக அச்சு நூல்கள் வழியாகவும் மக்களிடையே புகுத்தப்பட்டன. அவற்றை மீள்பார்வை செய்து “திருவள்ளுவர் யார்?” என்று ஆராய்ந்து கௌதம சன்னாவால் அவர் கோணத்தில் அளிக்கப்படும் விளக்கமே 150 பக்கங்கள் கொண்ட இச்சிறிய நூல். திருவள்ளுவர் யார் என அறிந்து கொள்ள முற்படுகையில் திருக்குறளின் நீண்ட புனைகதை வரலாற்றையும் இந்நூல் மூலம் நம்மால் அறிய முடிகிறது.

நூலின் முதல் பகுதியில் பண்டிதர் அயோத்திதாசர் வாழ்க்கை குறித்தும், சமுதாயத்திற்கும் இலக்கியத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்தும் சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறது. பண்டிதர் அயோத்திதாசரின் பாட்டனார் கந்தப்பன் என்பவர் தன்னிடம் இருந்த திருக்குறள் சுவடியை அச்சுப் பதிப்பிற்குக் கொடுத்து உதவிய பெருந்தகை. இதனால் திருக்குறள் அச்சுப் பதிப்பு முயற்சிகளின் வரலாற்றை அறிவதும் தவிர்க்க இயலாத தேவையாகிறது.

எனவே, நூலின் இரண்டாம் பகுதி குறளின் பதிப்பு வரலாறு குறித்து விரிவாக விவரிக்கிறது. திருக்குறளின் முதல் பதிப்பு எது, எந்த ஆண்டில் அது யாரால் பதிப்பிக்கப்பட்டது என்பதை விளக்கும் பகுதி இது. ஐரோப்பியப் பாதிரிமார்களாலும் மற்ற பிற ஐரோப்பியராலும் பிறமொழிகளில் குறளின் பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறினாலும், திருக்குறள் முதலில் ‘தமிழில்’ தஞ்சையைச் சேர்ந்த ஞானப்பிரகாசர் என்பவரால் 1812 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாகக் குறிப்புகள் பதிவாகியுள்ளன. ஜார்ஜ் ஆரிங்டனின் பணியாளரான கந்தப்பன் (பண்டிதர் அயோத்திதாசரின் பாட்டனார்) தன்னிடம் இருந்த திருக்குறள் சுவடியை ஆரிங்டன் வழியாக பிரான்சிஸ் வைட் எல்லீஸ் அவர்களிடம் சேர்ப்பித்து, 1831 ஆம் ஆண்டு தாண்டவராய முதலியார் மற்றும் முத்துசாமிப்பிள்ளை ஆகியோரால் திருக்குறள் அச்சேறுகிறது என்கிறது மற்றொரு குறிப்பு. இத்தகவலைப் பண்டிதர் அயோத்திதாசர் பதிவு செய்திருக்கும் ஒரு குறிப்பின் மூலம் அறிய முடிகிறது.

ஆனால் இக்குறிப்புகள் கொடுக்கும் ஆண்டுகள் முரண் என்று ஆய்வு கூறுவதை அடியொட்டி முதலில் ஞானப்பிரகாசர் வெளியிட்ட நூலுக்கான சுவடி யாரிடம் இருந்து பெறப்பட்டது என்ற ஆராய முற்பட்டு, 1812இல் வெளியான திருக்குறள் நூலானது கந்தப்பனால் எல்லீசிடம் சேர்ப்பிக்கப்பட்ட சுவடியின் பதிப்பே என்பது காட்டப்படுகிறது. கந்தப்பனால் எல்லீசிடம் சேர்ப்பிக்கப்பட்ட அந்த குறளின் சுவடியை எல்லீஸின் பதிப்பு நிறுவனத்தின் மேலாளர் முத்துசாமிப்பிள்ளையும், ஞானப்பிரகாசரும் அச்சு நூலக வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஞானப்பிரகாசர் அச்சகத்தார் என்பதால் அக்கால பதிப்பு வழக்கப்படி அவர் பெயர் திருக்குறள் பதிப்பின் மேலட்டையில் இடம்பெற்றுள்ளது. ஆகவே ஞானப்பிரகாசர் அச்சகத்தார் பதிப்பித்தவர் அல்ல. வேப்பேரியில் இருந்த அவரது அச்சகத்தை எல்லீஸ் பயன்படுத்த வேண்டிய நிலைக்குக் காரணம், பதிப்பு வெளியிடப்பட்ட ஆண்டில் எல்லீஸின் சொந்த அச்சகம் உருவாகாததால், எல்லீசிடம் இருந்த திருக்குறள் சுவடி ஞானப்பிரகாசர் அச்சகத்தால் அச்சு நூலாகப் பதிப்பிக்கப்பட்டது என்று விளக்குகிறார் ஆசிரியர்.

மூன்றாம் பகுதி, “திருக்குறளா அல்லது திரிகுறளா” எது சரி என்ற கேள்வியை எழுப்பி, அயோத்திதாசர் தந்த விளக்கமான தன்ம, சூத்திர, விநய பிடகங்கள் (மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பம்) என்ற முந்நூலை வழிநூலாகக் கொண்டு திராவிட மொழியில் அறம், பொருள், காமம் என்ற முப்பால் விளக்கம் தரும் நூல்தான் “திரிகுறள்” என்ற விளக்கம் அறிமுகப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து அதற்கான பண்டிதர் அயோத்திதாசர் கொடுத்த விளக்கத்தை விரிவாக நூல் அலசுகிறது. அதாவது பாலி மொழியில் திரிபிடக வாக்கியங்களாக அறியப்பட்ட புத்தரின் போதனைகளின் அடியொட்டி வள்ளுவரால் தமிழ் குறள் வெண்பாக்களாக எழுதப்பெற்றவையே ‘திரிக்குறள்’ என்பது அயோத்திதாசர் தந்த விளக்கம்.

வள்ளுவரின் மேல் புகுத்தப்பட்ட புனைவுகள்:

இதுவரை கூறப்பட்ட அறிமுகப் பகுதிகளைத் தொடர்ந்து வரும் நூலின் நான்காம் பகுதியானது நூல் உருவான நோக்கத்தை முன்னிறுத்துகிறது. ‘புனைவுகளில் சிக்கிய வள்ளுவர்’ என்ற இப்பகுதியே ‘திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?’ என்று கேள்விகளுக்குப் பல நூல்கள் வழியாகவும் ஆவணங்கள் வழியாகவும் விடை காண முற்படுகிறது. வள்ளுவரின் வரலாறு என்று பலர் கூறிச்சென்ற, சான்றுகளற்ற புனைவுகளின் தொகுப்புகளை படிப்போருக்கு அறிமுகப்படுத்தும் பகுதி இது. இப்பகுதிக்கு உதவிய ஆவணங்களை நூலாசிரியர் நூலில் பின்னிணைப்பாகவும் இணைத்திருப்பது பாராட்டத்தக்கது.

பார்ப்பன குல தந்தைக்கும், பறையர் குல தாய்க்கும் பிறந்தவர் வள்ளுவர் என்ற புனையப்பட்ட கதைகளின் பின்னணிக்குக் காரணம், வள்ளுவர் குலத்தில் பிறந்த ஒருவருக்கு மிக்க அறிவுத் திறத்தை வெளிப்படுத்தக்கூடிய நூலொன்றை இயற்றும் திறன் இருந்திருக்க வழியில்லை என்ற கருத்தில் மக்களைச் சாதி அடிப்படையில் பொதுமைப்படுத்தும் கோணத்தில் உருவான சிந்தனையன்றி வேறில்லை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரையும் ஒரு பிரிவுக்குள் அடக்கிவிட மக்கள் ஆர்வத்துடன் செயல்பட்டுப் புனைவுகளை உருவாக்கினர் என்பது ஒரு கசப்பான உண்மை.

எல்லீஸ் முயற்சியில் வெளியிடப்பட்ட திருக்குறள் நூலில் திருவள்ளுவர் வரலாறு குறித்த புனைவுகள் எதுவும் தமிழிலோ ஆங்கிலத்திலோ இடம்பெறவில்லை. அச்சுக்குச் சென்ற திருவள்ளுவமாலை நூலில் சில பாடல்கள் இடைச்செருகலாக நுழையப்பட்டிருப்பதைச் சுவடி தந்து உதவிய கந்தப்பனார் கண்டறிந்து அதை ஜார்ஜ் ஆரிங்டனிடம் முறையிட்டார் என்று பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தி ஒன்று அயோத்திதாசரால் சுட்டிக் காட்டப்படுகிறது.

திருக்குறளின் முதல் அச்சுப்பதிப்பு வெளியான பிறகு, அதைத் தொடர்ந்து பல பதிப்புகள் பலராலும் வெளியிடப்பட்டன. அங்குதான், அப்பொழுதுதான் கற்பனைகள் கட்டவிழ்ந்து ஓடத்துவங்கின. ஆறு கட்டுக்கதைகளை அயோத்திதாசரே தமது தமிழன் இதழில் ஆவணப்படுத்தியுள்ளார் என்கிறார் நூலாசிரியர் சன்னா.

முதல் புனைவின் உரிமையாளர் திருத்தணிகை விசாகப்பெருமாள் ஐயர். இவர் 1831 இல் தனது திருக்குறள் பதிப்பு நூலின் இறுதியில் ஆதி என்ற பறைச்சிக்கும், பகவன் என்ற பார்ப்பனனுக்கும் இடையில் ஏற்பட்ட முறை தவறிய திருமண (அதாவது சாதிக்கலப்பு திருமணம்) உறவில் பிறந்த 7 பிள்ளைகளில் ஒருவர் வள்ளுவர். அவர் மயிலாப்பூரில் வாழ்ந்த காலத்தில் வைசிய குலப்பெண் ஒருவரை மணந்தார், திருக்குறள் எழுதினார் என்ற பாடலை எழுதி பின்னிணைப்பாகச் சேர்த்தார்.

அடுத்து 1837 இல் திருவள்ளுவமாலை நூலை வெளியிட்ட அவரது தம்பி சரவணப் பெருமாள் ஐயர் அந்த ஏழு குழந்தைகளும் யார் யாரென்றும் எங்குப் பிறந்து எங்கு வளர்ந்தனர் என்றும் கதையை விரிவுபடுத்தி வெளியிட்டார். இவரின் கதை வள்ளுவரின் தாத்தா பாட்டி காலம் வரை பின்னோக்கி நீண்டுவிட்டது.

மூன்றாம் முறையாக வரலாற்றுப் புனைவைப் புகுத்தியவர் வேதகிரி முதலியார். இவர் 1850 இல் தனது கதையைச் சரவணப் பெருமாள் ஐயரிடம் இருந்து எடுத்து தாம் பதிப்பித்த திருக்குறள் பதிப்பில் இணைத்து விட்டதாகத் தெரிகிறது.

வள்ளுவரின் பெற்றோர் ஆதி என்ற பறைச்சி, பகவன் என்ற பார்ப்பான் என்பதுதான் அனைத்து வரலாற்றுப் புனைவுகளிலும் காட்டப்படுகிறது. வள்ளுவரின் ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ என்பதே 1831-1850 ஆண்டுகளுக்கிடையே உருவான அனைத்துப் புனைவுகளுக்குமான தொடக்கப் புள்ளி. வள்ளுவரின் சொல்லைக் கொண்டே அவரை அடையாளப்படுத்திவிட எடுத்த முயற்சிகளின் விளைவு இது.

இருப்பினும், இக்கதைகளுக்கும் மூலக்கதைகளை வேதநாயகம் பிள்ளை தொகுத்த ஆவணங்கள் சில குறிப்பிடுகின்றன, அவை பின்னர் மெக்கன்சி ஆவணங்களின் தொகுப்பில் இடம் பிடித்தவை என்கிறார் நூலாசிரியர். அக்கதைகள் இராம அவதாரம் வரை கற்பனைகளை நீட்டிச் செல்பவை என அறிய நேர்கையில், உண்மையிலேயே மக்களின் மிதமிஞ்சிய கற்பனைத் திறனைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

வேதநாயகம் பிள்ளை தொகுத்த ஆவணப் பகுதி காட்டும் கதை (1772), விசாகப்பெருமாள் ஐயர் (1831), சரவணப் பெருமாள் ஐயர் (1837), வேதகிரி முதலியார் (1850) காட்டிய பதிப்புக் கதைகளை மேலதிகத் தகவலாகப் பின்னிணைப்பாக நூலில் கொடுத்துள்ளார் கௌதம சன்னா. உருவாக்கப்பட்ட ஒரு கதை ஒவ்வொரு முறையும் வளர்ந்து பல துணை கதைகளையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பரிணாம வளர்ச்சி அடையும் இந்த கதைகள் வளரும் முறையானது, புராணக் கதைகள் உருவாகிப் பல்கிப் பெருகி வளர்ந்த விதம் குறித்து ஆய்வோருக்கு மிகவும் உதவக்கூடிய ஒரு கருவூலம். மேலும் இத்துறையில் ஆய்வுகள் செய்ய விரும்புவோருக்கு உதவும் பகுதி இது. புனைவுகளின் நோக்கம் வழியே அக்கால மக்களின் சிந்தனை ஓட்டத்தையும், அவர்கள் சிந்தனை மீது சமூகம் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தையும் சமூக வரலாற்றில் ஆர்வம் உள்ளோர் எடைபோடலாம்.

இவற்றில் சிலவற்றில் ஆதி பார்ப்பனக் குடும்பத்துப் பெண் என்ற கோணங்களும் உண்டு. இக்காலத் திரைப்படங்களில் காட்டப்படுவது போன்று, பிரிந்து போன குடும்பத்தினர் தங்களின் குடும்பப் பாடலைப் பாடி தொலைந்து போனவரைத் தேடிப் பிடிக்கும் முறையில் கூட ஒரு கதை இருந்திருக்கிறது (பக்கம்-58, 118) என்பதும் படிக்கும் பொழுதே புன்முறுவலை வரவழைக்கும் ஒரு வேடிக்கை. கடவுளர் ஒருவர் மீது ஒருவர் சாபம் விட்டுக் கொண்டு பூமியில் பிறப்பது முதற்கொண்டு இக்கதைகளில் புராணப் புனைவு இலக்கணங்கள் எவையும் விட்டுவைக்கப் படவில்லை. இவற்றுடன் ‘கபிலர் அகவல்’ பாடலையும் ஆசிரியர் இணைத்திருக்கலாம்.

பின்னிணைப்புகள் காட்டும் அனைத்து திருவள்ளுவர் வரலாற்றுப் புனைவுகளுக்கும் மூலக்கதை ‘கபிலர் அகவல்’ என்றே இருந்திருக்க வாய்ப்புண்டு (பார்க்க – கபிலக்கல், குடவாயில் பாலசுப்பிரமணியன்). சோழர், பாண்டியர் ஆட்சிகள் தமிழகத்தில் சரிந்த 14ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து சாதிச் சண்டைகள் கட்டுக்கடங்காமல் உச்சக்கட்டத்திற்குப் போன ஒரு காலத்தில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் சாதிகளைக் குறிப்பிட்டவாறே எழுதப்பட்டது வழக்கமானது. எடுத்துக்காட்டாக காளமேகப் புலவர் எழுதிய தனிப்பாடல்கள் என்ற தொகுப்பைக் குறிப்பிடலாம். இப்போக்கைக் கட்டுப்படுத்த எண்ணி பேதங்களைச் சாடும் உள்ளம் கொண்டோரும் அக்காலத்திலிருந்துள்ளனர். எல்லா சாதியிலுள்ளோரையும் மனிதர்கள் தான் எனக் காட்ட இக்காலகட்டத்தில் எழுந்த நூல்கள் பெரிய புராணம், கபிலர் அகவல் போன்றவை.

கபிலர் அகவலில் சங்கப்புலவர்கள், சங்ககால மாந்தர்களை உள்ளடக்கி அறிவுக்குச் சாதி பேதமில்லை எனக்காட்ட வள்ளுவர், கபிலர், ஒளவையார், அதியமான், உப்பை, உருவை, வள்ளி என அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். அவர்கள் பெற்றோரே பறையரும்-பார்ப்பனரும் கலப்பு மணம் செய்தோர்தான் எனக் காட்ட ஒரு புனைவு உருவாக்கப்பட்டுள்ளது. இப்புனைவில் பெற்றோர் பெயர் தேர்வுக்கு ‘ஆதி பகவன் முதற்றே உலகு’ என்ற குறளின் வரியே அடியெடுத்துக் கொடுத்திருக்கிறது என்பதையும் காண முடிகிறது. இப்பிள்ளைகள் எழுவரும் வள்ளுவர், பார்ப்பனர் (கபிலர்), பாணர் (ஒளவை), வேளிர் (அதியமான்) என கொடுக்கப்படும் குலப்பிரிவுகள் யாவும் சங்கப் பாடல்கள் குறிப்பிடும் உண்மைச் செய்திகள்தான். மனிதர்கள் எவ்விடத்தில் வளர்க்கப்பட்டாலும் மேன்மையானவர்களே என்று காட்டும் ஒரு முயற்சியே கபிலர் அகவல் பாடல் உருவான நோக்கம். “தமிழின் வளர்ச்சி எல்லாவிடத்தும் என்பது தான் நூல் யாத்தோனின் உள்ளக்கிடக்கையாக இருந்திருத்தல் வேண்டும்” என குடவாயிலாரும் தம் கட்டுரையில் குறிப்பிடுவார். அவ்வாறுதான் பெரியபுராணமும் அனைத்துக் குலத்தில் பிறந்தோரையும் கடவுளின் அன்பர்களாக உயர்த்திக் காட்ட முயலும். ஆனால் நம் மக்கள் படிப்பதில் கொள்ள வேண்டிய கருத்தைக் கொள்வார் இல்லை என்பதுதான் நடைமுறை வழக்கு.

கபிலர் அகவல் கொடுத்த செய்திகளையே சான்றாக வைத்து மேலும் மேலும் சாதி கதைகளை எழுதி வள்ளுவர் மேல் திணித்தார்கள். ஆக, இக்கதைகள் “கி.பி. 14ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 19ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டத்தில் தமிழ்மக்கள் கபிலர் பற்றி இக்கதைகளையே அறிந்திருந்தனர்” என்று குடவாயிலார் சொல்வது மறுக்க முடியாத உண்மை. இக்கதைகளையே நூல் வெளியிட்ட விசாகப்பெருமாள் ஐயர், அவரது தம்பி சரவணப் பெருமாள் ஐயர், வேதகிரி முதலியார் போன்றோர் தாம் ஆற்றும் இலக்கியப் பணியாக நினைத்து தாங்கள் வெளியிட்ட திருக்குறள் நூல்களில், தங்கள் கைவண்ணத்தில் உருவாக்கி இணைத்து விட்டிருக்கின்றனர். இவையாவும் மக்கள் அறிந்து அவர்களிடம் ஏதோ ஒரு வகையில் புழங்கிக் கொண்டிருந்த வள்ளுவரின் பிறப்பு வரலாற்றுப் புனைவுகள்தாம். வைதீக சமயம் இதுபோன்ற கற்பனைக் கதைகளைக் கேள்வி கேட்காமல் ஏற்போராகவே பக்தி என்ற பெயரில் தமிழரின் அறிவை மழுங்கடித்து வைத்திருந்தது இன்றும் வைத்திருக்கிறது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

வள்ளுவர் குறித்த பற்பல கட்டுக்கதைகளை ஆசிரியர் கௌதம சன்னா தம் நூலில் அறிமுகப்படுத்திய பின்னர், அதற்கு அடுத்து வரும் பகுதி சைவ சமய, வைதீக சமய தாக்கத்தில் உருவிழந்து போன வள்ளுவர் யார் என்ற கேள்வியை அயோத்திதாச பண்டிதர் தனது ஆய்வுக் கோணத்தில் அணுகியதை விளக்கும் பகுதியாக அத்தியாயம் 5 முதல் 13 வரை அமைகிறது.

siragu thiruvalluvar yaar1

திருவள்ளுவ நாயனார் மற்றும் திருவள்ளுவ சாம்பனார் என அறியப்படும் புலவர்கள் இரு வேறு புலவர்கள் என்பார் பண்டிதர் அயோத்திதாசர். திருவள்ளுவ நாயனார் குறள் தந்தவர். ஞானவெட்டியான் நூலை எழுதிய திருவள்ளுவ சாம்பனார் என்பவர் நாயனாருக்கும் பிற்காலத்தவர். மாமதுரைக் கச்சன் (அல்லது வடமதுரைக் கச்சன்) என்று அறியப்படும் ‘கூர்வேல் வழுதி’ என்ற அரசனுக்கும் ‘உபகேசி என்ற அரசிக்கும் பிறந்து நாயனார் என்ற பெயர் சூட்டப்பட்ட இளவரசன்தான் குறள் யாத்த வள்ளுவராக நாம் அறியப்படும் திருவள்ளுவ நாயனார் எனக் கூறும் அயோத்திதாசர் ‘நல்கூர் வெளியார்’ என்பர் எழுதிய ‘திரிகுறள் சாற்றுக்கவி’ பாடலில் செந்நாப் போதரின் பெற்றோர் யாவர் எனக் குறிக்கும் வரிகளை இதற்குச் சான்றாகக் காட்டுகிறார்.

உலக இன்பங்களில் பற்றற்று வளரும் வள்ளுவ நாயனார் பெற்றோர் அனுமதியுடன் துறவறம் பூண்டு பௌத்த சங்கத்தில் சேர்கிறார், அக்காலத்தில்தான் குறள் எழுதினர் என்று கூறும் அயோத்திதாசர் அதற்கு ‘கீரந்தையாரின்’ சாற்றுக்கவி பாடலை சான்றாக முன்வைக்கிறார். சிலாசாசன தியான பஞ்சரத்தினப்பா என்ற வள்ளுவரின் வரலாறு கூறும் பாடல் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் (கல்வெட்டில் பதிப்பிக்கப்பட்டு இன்று காணாமல் மறைந்து போன) கல்வெட்டில் உள்ள பாடல் மற்றொரு சான்றாகப் பண்டிதரால் காட்டப்படுகிறது. இந்த ‘திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில்’ என்பது முன்னர் வீரராகுல விகாரையாக இருந்து, பின்னர் வைணவக் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது, அதற்கு அங்குள்ள பெளத்த பரிநிர்வாண சிலை சான்று எனப் பண்டிதரின் கள ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகிறது (பக்கம்- 90). திருவள்ளூர் தான் வள்ளுவர் திருக்குறளை நிலைபெறச் செய்த இடமாகக் காட்டப்படுகிறது. வள்ளுவர் பிறந்த காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்றும் (பக்கம்- 90), வள்ளுவர் பிறந்து வாழ்ந்த இடங்களாகப் பாடல்களில் காட்டப்படும் ஊர்கள் இன்றும் திருவள்ளூர் பகுதியில் இருப்பதும், அப்பகுதியில் மேலும் பல பௌத்த பின்னணி பெயர் கொண்ட ஊர்களும் அமைந்திருப்பது தற்செயலானதல்ல, ஒரு காலத்தில் இங்கு பௌத்தம் செழித்திருந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது என்கிறார் நூலாசிரியர்.

வள்ளுவர் யார்? அவர் பின்னணி? என்ன என்ற வரலாற்று ஆய்வில் ஆதி மற்றும் பகவனின் கைவிடப்பட்ட குழந்தை அவர், ஆதி-பகவனின் ஏழு பிள்ளைகளான சேரமான்/சிலைமான்/அதியமான், கபிலர், வள்ளுவர், உப்பை, உருவை, ஔவை, வள்ளியம்மை என்ற எழுவரில் ஒருவர் என்ற கோணம் மட்டுமோ, அல்லது அயோத்திதாசர் காட்டும் இளவரசர் என்ற கோணமோ மட்டும் இல்லை.

சமயக் கருத்துகளின் அடிப்படையில் அவர் சமணர் என்று வாதிடுவோரும் உண்டு. அவர்கள் குறளின் கருத்துக்கள் சுட்டும் சமண கொள்கைகளின் அடிப்படையிலோ, அல்லது சமணர்கள் தங்கள் வழிபாட்டில் பலநூறு ஆண்டுகளாக வள்ளுவரைப் போற்றும் வழக்காற்றியல் அடிப்படையிலோ அக்கோணத்தை முன்வைப்பர் (பார்க்க, “தமிழகத்தில் ஜைனம்”, ஜீவபந்து டி. எஸ். ஸ்ரீபால்). வள்ளுவரின் மற்றொரு வரலாற்றுக் கோணமாக, குறளின் கருத்துகளை அகச் சான்றுகளாகக் கொண்டும், அவரது வள்ளுவர் என்ற பெயரின் அடிப்படையில் ஆராய முற்படும் அண்மைய ஆய்வுச் செய்திகளும் உண்டு. அக்கோணத்தில் வள்ளுவரை வழிபடும் கேரள வரலாற்றுத் தகவலோஅல்லது வள்ளுவர் என்ற பெயரின் அடிப்படையில் வள்ளுவ நாடு அவர் பிறப்பிடமாக இருக்கக்கூடும் என்ற ஆய்வுக் கோணங்களோ கூட உண்டு (பார்க்க, “திருவள்ளுவர் பிறந்தது குமரி மண்ணில்”, டாக்டர் எஸ். பத்மநாபன் ஆய்வுகள்).

இத்தகைய மாறுபட்ட வரலாற்றுக் கோணங்களும் வள்ளுவர் யார் என அவர் பின்னணியை ஆராயும் இந்த நூலில் ஓரிரு பத்திகளில் கூட காட்டப்படவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதனால், வள்ளுவரின் வரலாறு குறித்து ஆய்வு செய்ய விரும்பும் இந்த நூலின் நோக்கத்தை, முழுமையை நோக்கிச் செல்லாத நிலையில் உள்ள ஒரு குறைபாடாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, அயோத்திதாசர் பண்டிதரின் பார்வையில், அவர் ஆய்வின் அடிப்படையில் வள்ளுவர் யார் என்பதற்கு அவர் வைத்த சான்றுகளுக்கு இந்நூலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என முடிவெடுக்கலாம். சமண, சைவ வள்ளுவர் உரிமை கோரல்களுக்கிடையே வள்ளுவரின் பௌத்த உரிமை கோரலுக்குரிய தரவுகளையும் விவரிப்பதுதான் நூலின் கோணம் எனக் கொள்ளலாம்.

திருவள்ளுவர் யார்? அவரது பின்னணி என்ன?

- பண்டிதர் பார்வைகளின் மீது ஒரு மீளாய்வு:

திருவள்ளுவர் யாரென்று கூறும் அயோத்திதாசர் ஆய்வுகளும் அவரது முடிவுகளுமே மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்பதை நாம் மறக்கலாகாது. நூலாசிரியர் கௌதம சன்னாவும் நூலின் இறுதி அத்தியாத்தை அதற்கெனவே ஒதுக்கியுள்ளார் (பக்கம்- 97).

வள்ளுவரின் பௌத்தப் பின்னணி என்ற வரலாறு குறித்துப் பரவலாக அறியப்படாத செய்திகளைப் பண்டிதர் அயோத்திதாசர் தேடி எடுத்து வழங்கியுள்ளார். அவரால் வள்ளுவர் குறித்து ஆய்வுலகத்திற்கு மற்றொரு கோணம் காட்டப்பட்டுள்ளது. வள்ளுவர் வாழ்வின் பின்னணி குறித்து அயோத்திதாசர் கூறும் செய்திகளில் இயற்கைக்குச் சவால் விடும் கற்பனைப் புனைவுகள் எதுவும் இல்லை என்பதுடன், தனி மனிதர் ஒருவர் அரச குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, துறவியாக மறைந்த இயல்பான வாழ்க்கைமுறையும், அம்மனிதர் அறிவுரைகளாகக் கொடுத்த சமூகப் பங்களிப்பும், அவரை அவற்றுக்காக நினைவுகூர விரும்பிய மக்களும், இன்றும் அவர் பெயரை ஒட்டி அமைந்துள்ள ஊரும் போன்ற செய்திகளைப் பண்டிதர் காட்டும் வள்ளுவரின் வரலாற்றுக் கோணத்தின் மூலம் நாம் அறிகிறோம்.

சைவர் தாங்கள் வழக்காற்றிலிருந்த கருத்துகளின் அடிப்படையில் புனைவுப் புராணங்கள் தோற்றுவித்தனர் என்ற அதே அளவையை பௌத்த உரிமை கோரல் பதிவுகளுக்கும் நாம் நீட்டிக்கலாம். பிறர் மேற்கொண்ட அதே முறையில் அவர்களும் தாங்கள் வழக்காறு மூலம் அறிந்தவற்றின் அடிப்படையில் வள்ளுவர் ஒரு பௌத்த இளவரசர் என்று பஞ்சரத்தினப் பாடல் எழுதியிருக்கலாம், கோயிலில் (இன்று மறைந்துவிட்டதாகக் கூறப்படும்) கல்வெட்டாக வெட்டி வைத்திருக்கலாம் (பக்கம்- 89). தொல்பொருள் ஆய்வாளர் புராணக்கதைகள் கூறும் கல்வெட்டுத் தகவலை அத்தகைய நம்பிக்கை அக்கால மக்களிடம் இருந்தது என்ற அளவில் மட்டும்தான் ஏற்றுக் கொள்வது வழக்கம்.

மேற்கொண்டு, அயோத்திதாசர் தந்த விளக்கமான தன்ம, சூத்திர, விநய பிடகங்கள் (மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பம்) என்ற முந்நூலை வழிநூலாகக் கொண்டு திராவிட மொழியில் அறம், பொருள், காமம் என்ற முப்பால் விளக்கம் தரும் நூல்தான் “திரிகுறள்” என்பதும் (பக்கம்- 89, 91) ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். “திரிபிடகத்தை புத்த தன்மமென்றும், திரிக்குறளை திருவள்ளுவர் தன்மமென்றும் கூறத்தகும்” என்பதும் கூட பண்டிதர் கருத்துதான் (பக்கம்- 91). அதாவது, திரிபிடகத்தை முன்மாதிரியாகக் கொண்டாலும் திருவள்ளுவர் கூறும் மெய்ப்பாடு தனித்துவம் பெற்றது என்ற விளக்கம் தருகிறார் அயோத்திதாசர்.

மேற்கூறப்பட்ட பௌத்த நூல் கருத்துகளையும் திருக்குறள் கருத்துகளையும் ஒப்பிட்டு எந்த அளவு ஒப்புமை இருக்கிறது என ஆராய்ந்து அறிய வேண்டியது நம் முன் எதிர் நிற்கும் மற்றொரு பெரும் ஆய்வு. முனைவர் நாகசாமி வடமொழியிலிருக்கும் ஒருசில நூல்களை அடியொற்றி திருக்குறள் எழுதப்பட்டது என்று கூறுவதை எந்த அளவில் ஒப்பிட்டு, இரு கோட்பாடுகளுக்கு இடையில் இருக்கும் அடிப்படை கொள்கை மாறுபாடு கொண்ட பொருந்தா கருத்துகளைச் சுட்டிக் காட்டி அவர் கருத்தை நாம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோமோ அதை இங்கு நினைவு கூரல் தகும். அதே போன்ற ஓர் இலக்கிய ஒப்பீட்டு ஆய்வுமுறை குறள் மற்றும் திரிபிடக பௌத்த நூல்களின் கருத்துகள் மீதும் வைக்கப்பட வேண்டும். அந்த வகையில், கௌதம சன்னா வள்ளுவர் குறித்த புதிய ஆய்வுகளுக்கான பாதையை இந்நூலின் வழியாக ஆய்வாளர்களுக்கு அகலத் திறந்து வைத்துள்ளார்.

அறிவியல் அடிப்படையில், சான்றுகள் மூலம் வரலாற்றைக் கட்டமைக்காத இந்திய வழக்கமும், புராணக்கதை புனைவுகளை உண்மை என்று நம்பி அவற்றை வரலாறாகக் கூறும் முறையும் இந்திய வாரலாற்றுப் புலத்தில் நிலவும் மிகப் பெருங்குறைபாடு. மேலை நாட்டுக் கல்வியின் தாக்கத்தில் சென்ற இரு நூற்றாண்டுகளாக இந்தியாவின் அணுகுமுறை வரலாற்றைக் கட்டமைப்பதில் மாற்றம் கண்டுள்ளது என்பதுதான் உண்மை. இன்று மரபணு ஆய்வுகள், தொல்லியல் தடயங்கள் மூலம் வரலாற்றை நாம் மீட்டுருவாக்கம் செய்து வரும் ஒரு நிலைக்கு நாம் மாறிவிட்டாலும் கூட, புனைவு எது? உண்மை எது? எது அறிவியலுக்குப் புறம்பானது? எவை இயற்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டவை? என்பதை நம்மைச் சுற்றியிருக்கும் பலர் இந்த நூற்றாண்டிலும் சீர்தூக்கிப் பார்க்க மறுக்கும் நிலைக்குப் புராணக்கதைகளை எதிர்க் கேள்விகள் கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையில் மக்கள் ஊறிப் போயிருப்பதே காரணம்.

அந்த வகையில்…. காலந்தோறும் திருவள்ளுவர் வரலாறு என்ற பேரில் வள்ளுவர் மீது தொடர்ந்து தூவப்பட்டு புழுதியாகப் படிந்துவிட்ட புனைகதைகள் என்ற தூசியைத் தட்டி வள்ளுவர் வரலாற்றை மெருகுபடுத்த முற்பட்ட கௌதம சன்னா அவர்களின் முயற்சிக்குப் பாராட்டுகள். வள்ளுவர் குறித்த மற்றொரு கோணத்தை இந்த நூல் மூலம் அறிமுகப்படுத்தியதற்கும் பாராட்டுகள். அவரது எளிமையான எழுத்து நடை சிறப்பு. நூலைப் படிப்போர் எவரும் வரலாறு என அறிமுகப்படுத்தும் புனைவுகளை ஆய்வுக் கோணத்தில் கேள்வி எழுப்பி சீர் தூக்கி ஆராயும் மனப்பான்மை பெற்றிடுவர் எனவும் நம்பலாம்.

“மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற கருத்தைப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வலியுறுத்திய வள்ளுவம் என்றும் உண்மையை நோக்கி நடைபோட முயலும் ஆய்வாளர்களுக்கு உறுதுணையாகவே இருக்கும்.

நூல் விவரம்:

திருவள்ளுவர் யார் ?

கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்

ஆசிரியர்: கௌதம சன்னா

முதற்பதிப்பு – டிசம்பர் 2019

வெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பு

விலை: ரூ.180/-



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இயேசு மத நிராகரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
 
Jump to navigationJump to search

இயேசு மத நிராகரணம் என்பது சிவப்பிரகாசர் பதினேழாம் நூற்றாண்டில் கிறித்தவ மத கருத்துக்களை எதிர்த்து செய்யுள் வடிவில் எழுதப்பட்ட நூலாகும். சதுரகராதி எழுதிய வீரமாமுனிவர் காலத்திய இந்நூல் கிறித்தவத்தை முற்றிலுமாக நிராகரிக்கும் விதமாகவும் அதன் கருத்துக்களை எதிர்க்கும் விதமாகவும் படைக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]

எழுதியவர்[தொகு]

சிவப்பிரகாசர்,[1] "கற்பனைக் களஞ்சியம்" என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் சிற்றிலக்கியப் புலவர். இவர், "கவி சார்வ பெளமா", "நன்னெறி சிவப்பிரகாசர்", "துறைமங்கலம சிவப்பிரகாசர்" என்று பலவாறாக அழைக்கப்பட்டார். தமிழகத்தில் சைவ வளர்ச்சிக்கு வித்திட்ட சமய குரவர்களான சம்மந்தர்,சுந்தரர்அப்பர்,மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் "நால்வர் நான்மணி மாலை" என்ற கவிதை நூலை இவர் எழுதினார். இவர் முப்பத்து நான்கிற்கும் மேற்பட்ட சைவ சமயச் சார்புள்ள நூல்களை இயற்றியுள்ளார்.[2]

விளக்கம்[தொகு]

சிவப்பிரகாசர் எடுத்துக்காட்டுக்களுடன் கிறித்தவத்துக்கு எதிரான கருத்துக்களுடன் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். வரலாற்றின் படி இராபர்ட் தெ நோபிலி உடன் இந்துத்துவம் மற்றும் கிறித்துவம் ஆகியவற்றின் வேறுபாடுகளைப்பற்றி சமயவாதம் புரிந்ததாக கூறுவார். ஆனால் வேறுசிலரோ கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி என்று அழைக்கப்படும் வீரமாமுனிவர் உடன்தான் வாதம் புரிந்தார் என்று கூறுவர். தற்போது இப்புத்தகத்தின் எந்த பிரதியும் எங்குமே இருப்பதாக அறியப்படவில்லை. சில எழுத்தாளர்கள் அந்நூல் சிலரால் முற்றிலுமாக எரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

சிவப்பிரகாசரின் சகோதரர் வேலையர் அவர்களின் வழிவந்த ஆசிரியராக பணியாற்றி பின்பு பெஞ்ச் மாஜிஸ்ரேட் ஆக சமூக பணியாற்றிய எஸ். வி. எஸ் இரத்தினம் தனது தன்வரலாற்று நூலான "நான் உங்கள் தோனி" என்ற நூலில் இயேசு மத நிராகரணம் குறித்து எழுதியுள்ளார்.[3] அந்த புத்தகத்தில் தனது தாத்தாவும், சுந்தரேசனார்ன் மகனுமான சூசை என்கிற சாமிநாத தேசிகர்இடம் "இயேசு மத நிராகரணம்" நூலின் பிரதி பனையோலையில் இருந்ததாகவும் பின்னர் சிலகாலத்தில் காணமற்போனதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காண்க[தொகு]

வீர சைவம்

தாரங்கள்[தொகு]

  1.  "சென்னை நூலகம் - Tamil Literature Books - Moral Books - Nanneri". chennailibrary.com. பார்த்த நாள் 2014-07-28.
  2.  "Tamil Literature". Lisindia.net. பார்த்த நாள் 2014-07-28.
  3.  "Naan Ungal Thoni (download torrent) - TPB". Tpb-proxy.com (2014-05-26). பார்த்த நாள் 2014-07-28.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

G%2BSan%2B01.jpg

G%2BSan%2B02.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

G%2BSan%2B03.jpg

G%2BSan%2B04.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

G%2BSan%2B05.jpg

G%2BSan%2B06.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

G%2BSan%2B07.jpg

G%2BSan%2B08.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

G%2BSan%2B09.jpg

G%2BSan%2B10.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

G%2BSan%2B11.jpgG%2BSan%2B12.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்

“பகையாளி குடியை உறவாடிக் கெடு”ப்பதில் கை தேர்ந்த பார்ப்பனக் கும்பல் திருக்குறளுக்கு ‘உரை’ எழுதி கெடுக்க முயல்வதை அம்பலப்படுத்துகிறது இப்பதிவு.

 
 

ண்மைக் காலத்தில் பார்ப்பனியமானது வள்ளுவரை இந்துத்துவாவிற்குள் உள்வாங்கும் முயற்சியில்  முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பாரதீய சனதா கட்சியானது  காவி உடையுடனும், பட்டைப் பூச்சுடனும் வள்ளுவரின் உருவத்தினையே மாற்றி வெளியிட்டு, அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

பார்ப்பனியமானது நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கும் ஒரு முறை ஒன்றுள்ளது. அதாவது தன்னால் எதிர்த்து நின்று அழிக்க முடியாத ஒன்றினை உள்வாங்கி அழிப்பது என்பதே அந்த முறையாகும். இதனை அவர்கள் தங்களது புராணங்களிற்கேற்ப ‘திருராட்டிர ஆலிங்கனம்’ என்பார்கள் {போரில் தோற்கடிக்க முடியாத வீமனைத் துரியோதனின் தந்தையான திருராட்டிரன்  ஆசி வழங்குவது போல அணைத்துக் கொல்ல முயன்ற கதை}. இத்தகையவர்களிடம் எச்சரிக்கையாகவிருக்க வேண்டும் என்பதனையே வள்ளுவன் பின்வரும் குறளில் கூறியிருப்பார்.

‘தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து”.  –குறள் 828

இன்றைக்குத் திருக்குறளைத் தனதாக்கும் முயற்சியிலீடுபடும் பார்ப்பனியமானது கடந்த காலத்தில் எவ்வாறு எல்லாம் திருக்குறளை எதிர்த்து வந்துள்ளது எனப் பார்ப்போம்.

திருக்குறளை காலகாலமாக எதிர்த்துவந்த பார்ப்பனியம் :

அண்மையில் நடைபெற்ற பார்ப்பனர்கள் மாநாட்டில் எச்.ராஜா திருக்குறளினை மேற்கோள் காட்டி, குறளானது ஒரு வைதீக நூலாகும் எனக் கூறியிருந்தார்.

‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்,
நிலமிசை நீடுவாழ் வார்.’ (குறள் 3)

என்ற குறளில் வள்ளுவன் வீடு பேறு (மோட்சம்) பற்றிப் பேசியிருப்பதால், இது ஒரு இந்து நூலாகும் என்கின்றார். இதற்கான பதிலாக  இந்துக்களின் உலகக்குருவான (ஜகத் குரு) சங்கராச்சாரியாரது (சந்திரசேகரேந்திர சரசுவதி) முன்பொரு முறை கூறிய  கூற்றினையே பதிலாகக் கொடுக்கலாம்.

“திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளே இருக்கின்றன.  வீடு என்பது இல்லை. நாற்பொருளைக் குறிப்பிடாத திருக்குறளை ஓதக் கூடாது” என்கின்றார்.  இதோ உலகக்குருவே ‘திருக்குறள் வீடுபேறு பற்றிப் பேசவில்லை’ என்று கூறிவிட்டார்.  இது தெரியாமல் எச்.ராஜா ஏதோ கதை விடுகின்றார்.

சங்கராச்சாரியார் தனது திருக்குறள் மீதான வெறுப்பினை இதனுடன் நிறுத்தவில்லை. கீழுள்ள ஆண்டாள் பாடலைக் கேள்விப் பட்டிருக்கலாம்.  திருப்பாவையின் இரண்டாவது பாடல், ‘வையத்து வாழ்வீர்காள்’ எனத் தொடங்கும்.

நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
நாட்காளே நீராடி மையிட்டெழுதோம்
மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம்
தீக்குரலை சென்றோதோம்

இப் பாடலின் இறுதி வரியான ‘தீக்குரலை சென்றோதோம்’ என்ற வரிகளின் பொருள் ‘கோள் (தீக்குரல்) சொல்ல மாட்டோம்’ என்ற பொருளிலேயே வருகின்றது. இதனை மாற்றித் ‘தீக்குறளை (தீய குறளான திருக்குறளை)’ ஒதோம் என ஆண்டாள் குறிப்பிட்டதாகப் பொய் விளக்கம் வேறு கொடுத்திருந்தார்.

படிக்க:
♦ கோகிலாம்மாவின் பாவமும், சங்கராச்சாரியின் புண்ணியமும் !
♦ கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !

இவ்வாறான ஒரு புரட்டினை சங்கராச்சாரியார் ஆத்திசூடியிலும் செய்துள்ளார்.  ஆத்திசூடி ‘அறம் செய விரும்பு’ , ‘ஆறுவது சினம்’  என அ, ஆ, இ… என எழுத்துவரிசையில் இடம்பெறும்.

இந்த எழுத்து வரிசையில் ய, ர, ல, வ –க்கு

இயல்பு அலாதன செய்யேல்’

அரவம் ஆட்டேல்’

இலவம் பஞ்சில் துயில்’

வஞ்சகம் பேசேல்’

வரிகள் வந்துவிட்டன (ட,ண .. போன்ற எழுத்துகள் முதலெழுத்தா வராத போது, இரண்டாம் எழுத்தா வரும்).

அடுத்த எழுத்து ‘ற’. இது (ற) முதல் எழுத்தாக வரமுடியாது என்பதால் இரண்டாம் எழுத்தாகவே வரும்.

‘அறனை மறவேல்’ என்பதே எழுத்துவரிசைப்படி சரியாக அமையும்.

அறனை மறவேல் = அறம் (Ethics) மறக்காதே!

இங்குதான் சங்கராச்சாரியார் புகுந்து விளையாடினார். ‘ற’ வினை ‘ர’ ஆக மாற்றி, “அறன்” -> “அரன்” எனக் கடவுளாக மாற்றிவிட்டார். இவரது தில்லுமுள்ளினை அடுத்த வரியான ‘அனந்தல் ஆடேல்’ (ன) காட்டிக்கொடுத்துவிட்டது.  இவ்வாறு மதத்தின் பெயரால் பல தமிழ்க்கொலைகள் நடந்துள்ளன. இலக்கணப்படி ‘அறனை மறவேல்’ என்பதே சரியானது என வெளிப்படையாகத் தெரிந்தபோதும், தெய்வத்தின்_குரல் முன்னால் தமிழ் எல்லாம் எடுபடவில்லை.

‘திருக்குறள் வைத்திருக்கும் வீடு உருப்படாது’ என்றொரு புரளியும் இவர்களால் பரப்பப்பட்டது. திருக்குறளில் முதல் பத்துக் குறள்கள் மட்டுமே படிக்கக்கூடியவை என்றும், ஏனையவை எல்லாம் கவர்ச்சி மிகு திரைப்படங்கள் போலானவை (காமத்துப் பால் குறித்து) என்றெல்லாம் காலத்திற்கு காலம் சங்கராச்சாரியார் குறள் மீது குறை பட்டுக்கொண்டே வந்துள்ளார்.  இத்தகைய பார்ப்பனர்களின் முந்திய கால ஒவ்வாமையே திருக்குறள் ஒரு வைதீக நூலன்று என்பதனைத் தெளிவாக்கும்.

திருக்குறளிற்கான பொய் விளக்கவுரைகள் :

வைதீக மதத்தினர் ஒரு புறத்தே திருக்குறளினை எதிர்த்துக் கொண்டே, மறுபுறம் குறளிற்கான வைதீகம் சார் பொய் உரைகளை எழுதிக்கொண்டுமிருந்தார்கள். கடவுள் வாழ்த்து எனப் பின்நாளில் பெயரிடப்பட்ட முதல் பத்துக் குறள்களை தமக்குச் சார்பாகப் பயன்படுத்தவும் முனைந்தார்கள். இது பற்றி ஏற்கனவே வினவுத் தளத்தில் நான் ஒரு கட்டுரை  (திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம்: பரிமேலழகர் முதல் நாகசாமி வரை ) எழுதியுள்ளதால் அதனைக் கடந்து விடுகின்றேன்.

அவற்றினை விட ‘வாமண அவதாரம்’ பற்றி வள்ளுவர் கூறியுள்ளார் என்கின்றார்கள். எங்கே எனப் பார்த்தால் பின்வரும் குறளினைப் பாருங்கள்.

“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு”- (610)

இதில் எங்கே வாமண அவதாரம். ‘அடி அளந்தான்’ என்றாலே வாமண அவதாரமா?  எனது  பாட்டி முன்பு,  நான் சிறுவனாகவிருக்கும் போது அருகிலிருக்கும் கடையில் போய் பொருட்களை வாங்கி வா என்பதனை ‘ஒரு நாலடி நடந்து வாங்கிட்டு வா’ என்பார். நல்லவேளை இதனையே 4 இற்குப் பதில் 3 அடி எனக் கூறியிருந்தால், அதனையும் வாமண அவதாரம் எனப் பொருள் கொண்டிருப்பார்கள். மன்னன் திருமாலின் மூன்றடி போல உலகினையே பெறுவான் எனில் இரண்டாவது அடியாகத் திருமால் வானிலே கால் வைத்த மாதிரி மன்னன் வானையும் கைப்பற்றுவானா!

இன்னொரு இடத்தில் ஊழ் என்று வருகின்றதாம். வரட்டுமே அதனால் என்ன.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்” .  (குறள் 619)

இங்கு வள்ளுவர் தெய்வத்தால் முடியாததும் உன் முயற்சியால் முடியும் என்கின்றார்.  உடனே மற்றொரு குறளைக் காட்டுவார்கள்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்”.  (குறள் 380).

இங்கு ஊழ் எல்லாவற்றையும் விடப் பெரியது எனப்படுகின்றதே! இந்த ஊழ் தொடர்புடைய செய்திகளைச் சங்ககாலப் பாடல்களிலும் காணலாம்.  இந்த ஊழினை அடிப்படையாகக் கொண்டே ஆகூழ் (நல்லூழ்)=Good luck , போகூழ் (தீயூழ்)= Bad luck போன்ற சிறப்பான தமிழ்ச் சொற்கள் உருவாகின (அதிஸ்டம், துரதிஸ்டம் என்பன தமிழ்ச் சொற்களல்ல என்பன மட்டுமல்லாமல், அவை ஆகூழ்-போகூழ் போன்ற ஆழமான பொருளுடையனவல்ல).

படிக்க:
♦ திருவள்ளுவரை  அவமதித்த  கா(வி)லி  கும்பலை  கண்டித்து  ஆர்ப்பாட்டம் !
♦ திருவள்ளுவரை  விழுங்கத்  துடிக்கும்  காவிப் பாம்பு  !

மேலே  வள்ளுவர் முரண்பட்ட குறள்களை கூறுவது சூழல் வேறுபாடே. அதாவது ஒருவர் கடுமையாக முயற்சிசெய்து கமஞ்செய்து பயிர்கள் வளரும்போது, ஒரு இயற்கைப் பேரிடர் மூலம் எல்லாம் அழிந்துவிடுகின்றது என வைப்போம், அவரிற்கு ஊழை வலியுறுத்தும் குறள்கள். அவரினை ஆறுதல்படுத்த அக் குறள்கள். அதற்காக ஒருவர் ஊழ் வழியேதான் எல்லாம் நடக்கும் என நினைத்து செயற்படாமலேயே இருந்தால், முயற்சிக்கும் ஏற்ற பலன் உண்டு, ஊழின் தாக்கத்தை குறைத்துக்கொள்ள முடியும் (மெய்வருத்தக் கூலி தரும்) என்ற குறள்.  வள்ளுவன் முரண்படவில்லை. சூழல்தான் வேறுபடுகின்றது. சூழலிற்கேற்ப குறளைப் பயன்படுத்துவது எங்களது பொறுப்பு. எனவே குறளில் குறிப்பிடப்படும் ‘ஊழ்’ என்பது பார்ப்பனியம் குறிப்பிடும் ‘விதி’ அன்று.

அடுத்ததாக வள்ளுவர் மறுபிறப்பு பற்றிக் குறிப்பிடுவதாக ஒரு கதை விடுகின்றார்கள்.  அதற்காக அவர்கள் காட்டும் குறள் இதோ.

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து” (குறள்  398)

இதற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கம் யாதெனில் ஒருவருடைய கல்வியானது ஏழு பிறப்புக்களிற்கும் (ஜன்மங்களிற்கும்) தொடர்ந்து வரும் என்பதாகும். யாராவது பிறக்கும் போது ஏதாவது முற்பிறப்புக் கல்வி அறிவுடன் பிறக்கிறார்களா என்ன!  எல்லோருமே அ, ஆ இலிருந்து தானே தொடங்குகின்றார்கள். அவ்வாறாயின் அதன் உண்மையான விளக்கம் என்ன?

இவை ஒரு வகைச் சித்தர்களின் கோட்பாடு அல்லது ஆசிவகக்கோட்பாடு.  அங்கு அவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் உள்ள ஏழு நிலைகளைக் குறிக்கின்றனவே தவிர, ஆன்மாவுடன் தொடர்புடையதல்ல. இதனையே களவாடி ஆன்மாவுடன் தொடர்புபடுத்தி, ஏழு பிறப்புக்களாக்கி, இப் பிறப்பில் சூத்திரனாகப் பிறந்தாலும் அதனையேற்று உனது கடமையினைச் செய்தால் மறுபிறவியில் உயர்நிலையினை அடையலாம் (கீதை) எனக் கதை கட்டிவிட்டனர்.

ஆசிவகத்திலோ சித்தர்களை அவர்களின் அறிவுவளர்ச்சிக்கேற்ப அவர்களது நிலைகளை கறுப்பு, நீலம், பச்சை, சிகப்பு, மண்ணிறம், வெள்ளை, நீர்வண்ணம் என 7 நிலைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இதில் நீர்வண்ணம் என்பது அதியுயர் முத்தி நிலை. இதில் ஒவ்வொரு நிலையினை அடைதலும் ஒவ்வொரு பிறப்பு ஆகும்.  இக் கோட்பாட்டினை இன்றும் தமிழ்நாட்டின் ஊர்களிலுள்ள ஐயனார் சிலைகளின் நிறங்களை கூர்ந்து பார்ப்பதனூடாக விளங்கிக்கொள்ளலாம் {சில ஊர்களில் காலப்போக்கில் இடைநிலை நிறங்கள் மாறுபட்டிருக்கலாம்}.

இந்த சித்தமரபுக் கோட்பாட்டினை வலியுறுத்தி வள்ளுவனும் ஆறு குறள்களைத் தந்துள்ளார். அவையாவன;

♦ “எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்” (குறள் -62)

♦ “எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு ”(107)

♦ “ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து” ( 126)

♦ “ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து” ( 398)

♦ “புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்”- (538)

♦ “ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான் புக்கழுந்தும் அளறு”- (835)

இக் குறள்களிற்கும் பரிமேலழகர் போன்ற வைதீகச் சார்பாளர்கள் மனிதனின் ஏழு ஜன்மக்கோட்பாட்டிற்கு ஆதரவாக உரை எழுதிவைத்துவிட்னர். ஆனால் ஆன்மா மூலம் ஒருவர் பெற்ற கல்வி அடுத்த பிறவிக்குப் பயன்படுமா எனில் இல்லை. மறுபுறத்தே இக் குறள்களை சித்தமரபுக் கோட்பாட்டிற்குப் பொருத்திப் பாருங்கள், அச்சொட்டாகப் பொருந்தும் அல்லவா!!!

இவ்வாறு வைதீகப் புரட்டுக்களைத் தோலுரித்துக் கொண்டே போகலாம். அது மிக நீண்டு செல்லும் என்பதனால் இத்துடன் முடிக்கின்றேன்.

படிக்க:
♦ தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 
♦ கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !

குறள்களிற்கு  சங்கிகள் சொல்லும் விளக்கங்களைக் கேட்டால், எனக்கு கவிக்கோ எழுதிய ஒரு கவிதைதான் நினைவிற்கு வருகின்றது.

வள்ளுவரும் மாணவரானார்
திருக்குறளில் தேர்வு எழுதப்போனார்
முடிவு வெளியாச்சு பெயிலானார்
காரணம் அவர் படிக்கவில்லை கோனார்”.

–கவிக்கோ

{கோனார் உரை = குறளிற்கு எழுதப்படும் உரைகள். வள்ளுவனிற்கே இவர்கள் எழுதிய உரைகள் விளங்காது ஏனெனில் அவர் எழுதியது அறம்+பொருள்+காமம் என்பனவே. வீடு (ஆன்மீகம்) அல்ல. இக் கவிதை பரிமேலழகர் உரைக்கும் பொருந்தும்}

குறளிற்கு வள்ளுவனே ஒரு உரை எழுதியுள்ளான் தெரியுமா!  என்ன வள்ளுவனே தனது குறளிற்கு உரை எழுதினாரா! என வியக்கவேண்டாம். ஒரு குறள்தான் அந்த உரை.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”. (423)

வள்ளுவரின் உடையின் நிறம் :

இப்பொழுது கட்டுரை தொடங்கிய இடத்திற்கே வந்தால் வள்ளுவனின் வடிவம் கற்பனை என்ற போதிலும், அவனது உருவத்திற்குப் பொருத்தமான உடை நிறம் வெள்ளையே ஆகும்.  நாம் மேலே பார்த்த நிறக் கோட்பாடுகளிற்கமைய அறிவின் உச்சியிலிருக்கும் வள்ளுவனைக் குறிக்க வெள்ளையே பொருத்தமான நிறமாகும்.  மேலும் தமிழர்களின் மரபுரீதியான ஆடையாகவும் வெள்ளை நிற வேட்டியே காணப்படுகின்றது.

இதனாலேயே ‘வெளிது’ என்ற பெயரில் சங்க காலத் தமிழரின் ஆடை அடையாளங் காட்டப்படுகின்றது {வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து டீஇப் பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவி` – புறநானூறு 279}. இதுவே தமிழக அரசாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவமும் ஆகும். இதனைக் காவியாக்குவதோ அல்லது கருப்பு ஆக்குவதோ தேவையற்ற வேலை.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திருவள்ளுவர்

Thiruvalluvar in Tamil

              திருவள்ளுவர் (Thiruvalluvar in tamil), இவர் மதம் சாதி என்ற எந்தவித பாகுபாடும் இல்லமல் அனைத்து தமிழர்களாலும் போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழும் ஒறே தமிழன் ஆவார்.

திருவள்ளுவரின் பிறப்பு மற்றும் வரலாற்றை உறுதியாக கூற போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை அல்லது கிடைத்தும் மறைக்கப்படுகின்றது என தான் கூற முடியும்.

சங்க கால புலவர்களான அதியமான், ஔவையார் மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்து உள்ளது. இதன் மூலம் சங்க கால புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரை பற்றிய செய்தியை தருகிறார்.

திருவள்ளுவர் சிலை - லண்டன்

லண்டனில் உள்ள திருவள்ளுவர் சிலை

எனவே மாமூலனாருக்கு முன்பே ஔவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் (சங்க காலத்தில் ஔவையார் என்ற பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்பால் புலவர்கள் இருந்துள்ளனர்). மாமூலனார் கி.மு 4 ஆம் நூற்றாண்டு செய்தியை கூறுகின்றதால், திருவள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும் என அறிய முடிகின்றது.

திருவள்ளுவர் வரலாறு

(Thiruvalluvar History in Tamil)

கடைச் சங்க காலம் எனப்படும் கி.மு. 400 க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த மாமூலனார் எனும் புலவர் மற்றும் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட காலத்தில் வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஒலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் என எதுவும் உறுதியாகத் தெரியவில்ல,  எனினும் இவர் கி.மு. முதல் நூற்றாண்டில், இன்றைய  சென்னைக்கு அருகில் மயிலாப்பூர் எனும் ஊரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

திருவள்ளுவர் பிறந்த ஊர்

இவர் இயற்றிய திருக்குறளின் அடிப்படையில் இவர் தாயார் பெயர் ஆதி என்றும், தந்தையார் பெயர் பகவன் என்றும், மதுரை நகரில் வாழ்ந்ததாகவும்  கருத்து கூறுவோரும் உண்டு.

திருவள்ளுவர் சிலை - சிங்கப்பூர்

சிங்கப்பூரில் உள்ள பிரபல MDIS கல்வி நிலைய வளாகத்தில் திருவள்ளுவர் சிலை.

காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து  மார்கசெயன் என்பவர் வள்ளுவரின் கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் நம்பபடுகுறது .

திருவள்ளுவர் ஆண்டு

திருவள்ளுவர் ஆண்டு (திருவள்ளுவர் பிறந்த வருடம்கி.மு.31 ஆம் என்று ஆராய்ச்சியாளர்கள் அனுமானித்துள்ளனர். மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், இவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என நம்பப்பட்டு, தமிழ் மக்கள் வள்ளூவர் பிறந்த ஆண்டை அடிப்படையாக கொண்டு தி.மு., தி.பி. ( திருவள்ளுவருக்கு முன், பின் ) என்று காலத்தை பிரித்து பயன்படுத்துகிறார்கள்.

திருவள்ளுவர் ஆண்டு என்பது வழக்கமாக பயன்படுத்டும் ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்டப்பட வேண்டும்.

1971-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் நாட்குறிப்பிலும், மேலும், 1972-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும், திருவள்ளுவர் ஆண்டு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

திருக்குறள் பற்றி சில தகவல்கள்

இவர் குறளி இன்ற இனத்தை சார்ந்தவர் என்பதால், குறளி என்ற வார்த்தை மருவி குறளாகி விட்டது எனவும். ஒன்றரை வரிகளில் சுருக்கமாக எழுதப்பட்டதால் உரை எழுத இதை ஆய்ந்தவர்கள் திரு என்ற அடைமொழியை அதன் முன்னால் சேர்த்து திரு குறள் என அழைத்தார்கள்.

திருக்குறள் பற்றி சுவையான தகவல்கள்

மணக்குடவர் திருவள்ளுவர் காலத்தவராக இருந்திருக்க முடியாது என்றாலும் வள்ளுவரை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். இனவேதான் குறளுக்கு முதன் முதலில்  உரை எழுதியவர் இவரே ஆவார்.

மணக்குடவர் எப்போதோ எழுதிய திருக்குறளின் மூலத் தொகுப்பை கண்டு பிடித்து, சென்ற நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் 1812 ம் ஆண்டு ஓலை சுவடியில் இருந்து அச்சில் திருக்குறளை ஏற்றியவர் தஞ்சையை சேர்ந்த ஞானப்பிரகாசன் ஆவார்.

திருக்குறளிள் 133 அதிகாரங்களூம் 1330 பாக்கள் (குறள்) உள்ளது, மொத்தமாக உள்ள எழுத்துக்கள் 42,194.

திருக்குறள் பற்றி விரிவாக பார்க்க…. 

 

திருவள்ளுவர் சிறப்பு பெயர்கள்

thiruvalluvar in tamil

 

  • தெய்வப் புலவர்
  • செந்நாப் புலவர்
  • தெய்வத் திருவள்ளுவர்
  • செந்தாப் போதார்
  • திருத்தகு தெய்வத் திருவள்ளுவர்
  • தெய்வப் புலமைத் திருவள்ளுவர்
  • தேவர் திருவள்ளுவர்
  • பொய்யில் புலவர்
  • வள்ளுவ தேவன்(ர்)
  • வள்ளுவர்
  • தேவிற் சிறந்த திருவள்ளுவர்
  • நாயனார்
  • மாதாநுபங்கியார்
  • முதற் பாவலர்
  • தேவர்
  • புலவர்
  • பெருநாவலர்
  • பொய்ய மொழியார்

என்று பல சிறப்புப்பெயர்களாலும் இவரை அழைப்பர்.

திருவள்ளுவர் பற்றி பிற புலவர்களின் பாராட்டுகள்

பல புலவர்கள் இணைந்து தொகுத்த நூல் திருவள்ளுவமாலை இதன் மூலமாக வள்ளுவரின் சிறப்பினை அறியலாம்.

திருவள்ளுவமாலை பாடல் விளக்கம்

இவரை,

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

என பாரதியாரும்,

வள்ளுவனைப் பெற்றதால்
பெற்றதே புகழ் வையகமே

என பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.

1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கலாமா என்ற விவாதத்தில் ஆங்கிலேய தளபதி ஒருவர் “இந்தியாவின்மிகபெரியசொத்தானதிருக்குறளைநாம்எடுத்துவந்தாகிவிட்டதுஇனிஇதுவெறும்மண்தான்இனவேஅதுநமக்குதேவைஇல்லை” என்று கூறினாராம்.

திருவள்ளுவரின் நினைவிடங்கள்

திருவள்ளுவர்

உலக மக்களின் முன், தமிழர்கள் பெருமையாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் தான் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்பினாலோ, அரசாண்டதாலோ இவர் இப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன்னுடைய அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார்.

ஆனால்,

இதனை உணர்ந்த தமிழர்கள் எத்தனை?
இன்று திருக்குறள் உள்ள வீடுகள் எத்தனை?
குறலை படிப்பவர்கள் எத்தனை?

 

திருவள்ளுவர் திருக்கோயில்

இது, திருவள்ளுவர் அவதரித்ததாக கருதப்படும் மயிலாப்பூர் இங்கு திருவள்ளுவருக்குத் தனிக்கோயில் உள்ளது. இவர் அவதரித்த இலுப்ப மரத்துக்கடியில், பெற்றோர் ஆதி மற்றும் பகவனுடன் கூடிய சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவரையும், திருக்கோயிலையும் இங்கே  சென்று நாம் கட்டாயம் பார்க்க வெண்டும்.

thiruvalluvar temple - திருவள்ளுவர் கோயில்

சென்னை மயிலாப்பூரில்உள்ள திருவள்ளுவர் திருக்கோயில்

மேலும், தாரசுரம் ஐராதிஸ்வரர் கோயிலில்  வள்ளுவரின் சிலையும் தெய்வசிலைகளுடன் உள்ளது.

வள்ளுவர் கோட்டம்

valluvar kottam

வள்ளுவர் கோட்டம்

இது திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு ம்ற்றும் வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ளது. இந் நினைவகம்,1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27ஆம் நாள் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1976 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

திருவள்ளுவர் சிலை

திருவள்ளுவருக்கு இந்தியவில் மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளில் சிலை வைக்கப்பட்டுள்ளது, இதில் குறிப்பாக இந்தியாவின் தென் கோடியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை மிகவும் குறிப்பிடதக்கது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

குமரியில் வள்ளுவர் சிலை

வள்ளுவர் சிலை

கன்னியாகுமரியில் 133 அடி உயரமுள்ள வள்ளுவர் சிலை

இந்தியாவின் தென் கோடியில் முக்கடல் சங்கமிக்கும் இடமான குமரியில், இவரின் புகழைப் பறைசாற்றும் விதமாக வள்ளுவருக்கு ஒரு பிரம்மாண்டமான சிலை ஒன்று தமிழக அரசால் 2000 ஆண்டின் துவக்கத்தில் நிறுவப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இச்சிலை, 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ளது. இச்சிலையை அமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது என இதை வடிவமைத்த சிற்பி கணேசன் கூறுகிறார்.

மேலும், சிலையின் உட்புறச் சுவற்றில், ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் என 133 குறட்பாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ள்து.

லண்டனிலுள்ள ரஸ்ஸல் ஸ்கொயரில் இருக்கும் ‘ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் மற்றும் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ்’ என்னும் கல்வி நிறுவனத்தில், வள்ளுவரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

ஹரித்துவாரில் வள்ளுவரின் சிலை

தமிழ் புலவர் திருவள்ளுவரின் புகழை வட இந்திய மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை நதி கரையில் அவரது சிலையை நிறுவ பா.ஜனதா எம்.பி. தருண்விஜய் ஏற்பாடு செய்தார். இதற்காக தமிழகத்தில் இருந்து 12 அடி உயர வள்ளுவரின் திருவுருவ சிலை தயாரிக்கப்பட்டு, ஹரித்துவார் கொண்டு செல்லப்பட்டது.

thiruvalluvar statue at haridwar

ஹரித்துவாரில் வள்ளுவரின் சிலை

ஆனால் இந்த சிலை திறப்பில் நிறைய சர்ச்சைகளும் நடைப்பெற்றது என்பது வருத்தமான செய்தி.

திருக்குறள் அரங்கேற்றம்

மதுரையில் தமிழ் அரசர்கள், சங்கம் வைத்து  தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது.  கடைசியாக இருந்த சங்கம் கி.மு.300க்கும் கி.பி.250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது.

avvaiyaar

திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய ( கீழ் சாதி பிரிவை சேர்ந்தவர் என்பதால் ) மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது

மதுரையை “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். இந்த செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்த்தால், வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், இவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது.

வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் நிறைய உள்ளபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது இவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் திட்டமிட்டே அழிக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகத்திற்கு இடம் தருகின்றது  

இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது. இதை, காலம் காலமாய் வழங்கி வரும் கதைகளாளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை’ என்ற நூலில் உள்ள சில பாடல்கள் மூலமும் தெறியமுடிகின்றது.

அக்கதைகளில் ஒன்று

மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றம் செய்ய வள்ளுவர் சென்றார். மற்ற புலவர்கள் இவருக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. இனவே இதை எதிர்த்து தன்னுடைய நூலை சங்கப் பலகையின் மேல் வைத்தாராம். அப்பலகை மற்ற புலவர்களை பொன்தாமரை குளத்தில் தள்ளிவிட்டது, பின் திருக்குறளை மட்டும் ஏற்றுக் கொண்டதாம்.

எது எப்படியோ வள்ளுவருக்கும் மற்ற புலவர்களுக்கும் இடையே ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. மதம் மற்றும் சாதி கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் வள்ளுவர். இதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை’யில் சில பாடல்கள் உண்டு.

அதில் ஒரு பாடல்

ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று

பாடலின் பொருள்

மதம் மற்றும் சாதி போன்ற சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறகூடாது என  ரிக்யசூர்சாம மற்றும் அதர்வண என்கிற நூல்களை, மற்றவர்கள் படிக்க கூடதபடி ஆரியர்கள் பல பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு, அந்த நூலின் உன்மை கருத்துகளை மறைத்து விட்டார்கள்.

ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார். இது தான் இப்பாடலின் பொருள்.

இக்கருத்துக்களையும்,  வள்ளுவரின் குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, இவர் ஒரு சமூக சீர்த்திருத்த அறிஞராக அழுத்தமாக மனதில் பதிந்து விடுவார் இன்பதே உன்மை.

அரசுப்பேருந்துகளில் திருக்குறள்

அரசுப்பேருந்துகளில் திருக்குறள்

1967-ல் அண்ணாவின் அமைச்சரவையில் திரு மு.கருனாநிதி பொதுப்பணி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப்பேருந்துகளிலும் திருவள்ளுவரின் படத்தையும், திருக்குறளையும் பொறிக்கச் செய்ய, அன்றைய அண்ணாவின் அரசு ஆணை பிறப்பித்தது.

இன்று வள்ளுவத்தின் நிலை

தி.மு.க, பிறகு அ.தி.மு.க மீண்டும் தி.மு.க என ஆட்சிக்ள் மாறிய போதெல்லாம், தமிழகத்தில் கை வைக்காத ஒரே ஒரு இடம் என்றால் அது அரசுப்பேருந்துகளில் உள்ள திருக்குறள்தான்.

அப்படிப்பட்ட திருக்குறள் தற்போது அரசுப்பேருந்துகளில் ஆங்காங்கே சிதைக்கப்பட்டுள்ளது, மேலும் திருவள்ளுவரின் உருவமும் அரசு பேருந்துகளில் சிதைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சில பேருந்துகளில் திருக்குறளையே காணவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் 2017-ல் எழுந்தது.

புதுப்பிக்கப்படாத திருக்குறள் பலகைகள்

அரசுப்பேருந்துகளில் ஆண்கள், பெண்கள் என்று இருக்கையை குறிப்பிடும் வாசகங்களும், பயணிகளிடம் டிக்கெட் இல்லை என்றால் அபராதம் என்பது குறித்த பலகைகளும் ஸ்டிக்கர்களும் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றது. ஆனல், திருக்குறல் மற்றும் ஐயன் திருவள்ளுவர் நிலை மட்டும் பரிதாபகரமாக உள்ளது.

பராமரிப்புப்கள் இல்லாத குமரி வள்ளுவர் சிலை

குமரி முனையில் உள்ள வள்ளுவரின் சிலை

குமரி முனையில் உள்ள வள்ளுவரின் சிலை

முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் உள்ள வள்ளுவரின் சிலைக்குக் கடல்காற்றினால் மெல்ல மெல்ல ஏற்படும் அரிப்பு மற்றும் சேதாரத்தை தடுத்திட ஆண்டுதோறும் ரசாயனக் கலவை பூசப்பட வேண்டும். ஆனால் இப்பராமரிப்புப் பணிகளின் நிலமை மிகவும் மோசமாகவே உள்ளது.

பள்ளி புத்தகங்களில் வள்ளுவர்

thiruvalluvar photo in school books

சமச்சீர் கல்விக்கான பள்ளிப்பாடப் புத்தகங்களில் அச்சிடப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்தையே மறைக்கின்ற காலதிற்கு தமிழகம் வந்துவிட்டது, இதன் விளைவு அடுத்த தலைமுறைக்கு நாம் வள்ளுவரின் பெயரை மட்டும் அல்ல அவர் உலகுக்கே வகுத்த கொடுத்த வாழ்வியலையும் அழித்துவிடுவோம்.

அதை மாற்ற விரும்பினால், தங்கள் குழந்தைகளுக்கு தமிழ வரலாறு மற்றும் கலாச்சரம் பற்றி கூற நாம் வள்ளுவரின் குறளை கற்று கொடுக்க மறவாதிற்கள்.

நன்றி.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

History of Thirukkural manuscripts

தீயில் எரிய இருந்த திருக்குறள் ஓலைச்சுவடியை ஆங்கிலேயரிடம் பதிப்பிக்க ஒப்படைத்த'கோவை கந்தப்பன்' By Mathivanan Maran | Updated: Tuesday, November 5, 2019, 16:32 [IST] சென்னை: தம்மிடம் தீயில் எரிக்க கொடுத்த ஓலைச்சுவடிகள் பழுதடையாமல் இருந்ததால் ஆங்கிலேயரிடம் பதிப்பிக்க சமையல்காரர் கந்தப்பன் கொடுத்தார்; அந்த ஓலைச்சுவடிகள்தான் திருக்குறள் என்று புலவர் செந்தலை கவுதமன் கூறியுள்ளார். அவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் கோவையில் திராவிட சிறகுகள் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் புலவர் செந்தலை கவுதமன் பேசிய வீடியோ தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் புலவர் செந்தலை கவுதமன் பேசியதாவது: சென்னை மாகாண ஆட்சியராக இருந்தவர் எல்லீஸ். அவரது பெயரில் மதுரையில் இன்றும் நகர் இருக்கிறது. சென்னையில் வீதி இருக்கிறது. அவர்தான் சமஸ்கிருதத்தால் கறைபடியாத ஒரு மொழி தமிழ் என்று உலகுக்கு சொன்னார். அந்த தமிழை கொண்டு 40-க்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கிறது என்றார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் ஓலைச்சுவடிகளை சேகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக ஹாரிங்டன் இருந்தார். அவரிடம் சமையல் பணி செய்தவர் கந்தப்பன். கந்தப்பனிடம் தீயில் எரிப்பதற்காக ஏராளமான ஓலைச்சுவடிகள் இருந்தன. இந்த ஓலைச்சுவடிகளில் சில பழுதடையாமல் இருந்தன. அவற்றை ஹாரிங்டனிடம் ஒப்படைத்தார் கந்தப்பன். அதன் மூலமாக எல்லீஸுக்கு அந்த ஓலைச்சுவடிகள் சென்றடைந்தன. அந்த ஓலைச்சுவடிகள்தான் திருக்குறள். அந்த ஓலைச்சுவடிகளை ஒப்படைத்த கந்தப்பன், கோவை கிணத்துடக்கடவு அருகே உள்ள அரசம்பாளையத்தைச் சேர்ந்தவர். அவர்தான் தமிழன் என்ற அரசியல் சொல்லை முதன் முதலில் கொடுத்த அயோத்திதாச பண்டிதரின் பாட்டன். காஷ்மீரை தொடர்ந்து நாகாலாந்து பிரச்சனைக்கும் சுமூக தீர்வை உருவாக்கும் மத்திய அரசு! அதுதான் முதன் முதலில் அச்சேறிய திருக்குறள் நூல். அந்த நூல் வெளியான ஆண்டு 1812-ம் ஆண்டு. இவ்வாறு புலவர் செந்தலை கவுதமன் பேசினார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/history-of-thirukkural-manuscripts-367528.html



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

நல்லாத்தான் நடக்குது திருவள்ளுவர் நாடகம்..! மோடிக்கு சூடு வைக்கும் வன்னி அரசு.

திருவள்ளுவருக்கு காவி கட்டிவிட்டு பட்டை அடித்து ஹிந்துத்துவா சாமியாராக அவரை மாற்ற முயற்சிக்கும் பா.ஜ.க.வின் லீலைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறார் விடுதலை சிறுத்தைகளின் வன்னி அரசு. இதோ அவரது அறிக்கை.

திருக்குறள் இன்று உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது என்றால் 'பட்லர்'கந்தப்பன் அய்யா தான் காரணம். இவர்தான் திருக்குறளை காப்பாற்றி பாதுகாத்தவர். பழைய பொருட்களை எரித்து சுத்தம் செய்து கொண்டிருந்தார் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியர் எல்லீஸ் துரை. அப்போது துரையிடம் பணிபுரிந்த பட்லர் கந்தப்பன் பார்வையில் திருக்குறள் சுவடி பட்டது.

1816 ஆம் ஆண்டு அந்த திருக்குறளை காப்பாற்றி பாதுகாத்தார்.திருக்குறளின் பெருமையை உலகுக்கு அளித்த அந்த கந்தப்பன் வேறு யாருமல்ல, பவுத்த அரசியலை, தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்த அயோத்திதாசப்பண்டிதரின் தாத்தா.

சித்தமருத்துவ பின்னணியில் வாழ்ந்த குடும்பம் தான் பண்டிதரின் குடும்பம். பவுத்த பின்னணி.

அப்படிப்பட்ட குடும்பத்தினர் மீட்டெடுத்த திருக்குறள் இன்றைக்கு விவாதமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பா.ஜ.க.வால் காவி வண்ணம் பூசப்பட்டுள்ளார் திருவள்ளுவர்.

'தெய்வத்தான் ஆகாது' என்று சொன்ன அய்யன், 'எனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்' என்று கடவுளால் எந்த வேலையும் ஆகாது நீயே தான் செய்யவேண்டும் என்று சொன்ன திருவள்ளுவரை மதச்சாயம் பூசுகிறது பாஜக.

'நான்கு வர்ணத்தை நானே படைத்தேன்' என்னும் பகவத்கீதையின் சனாதனத்தை ஏற்று நடைமுறைப்படுத்த துடிக்கும் பாஜக, 'பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்' என்னும் சனநாயகத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் திருவள்ளுவரை பாஜக காவி வர்ணம் பூசுகிறது.

இந்துத்துவத்தை மூலதனமாக்கி கிறத்துவ, இசுலாமிய மதங்களுக்கு எதிராக வெறுப்பரசியலை

செய்து வரும் பாஜக, திருவள்ளுவருக்கு மத அடையாளத்தை திணிக்கிறது.

ஏன் திருவள்ளுவரை பாஜக தமது அரசியலுக்கு பயன்படுத்துகிறது?

இந்த திருவள்ளுவர் அரசியலை தருண் விஜய் என்னும் பாஜக எம்பி மூலமாக நீண்ட காலத்துக்கு முன்பே செய்ய முயன்றது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதுமட்டுமல்லாது தமிழகத்திலிருந்து எடுத்து போன திருவள்ளுவரை எப்படி கோணிச்சாக்கில் போட்டு அவமதித்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.

அதன்பிறகு பிரதமர் மோடி அடிக்கடி திருக்குறளை சொல்ல ஆரம்பித்தார். இதுவெல்லாம் திருக்குறளின் மீதான பற்றா? அல்லது தமிழின் மீதான அக்கறையா? அப்படி பற்று இருந்தால் தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கலாமே? இந்தியை -சமஸ்கிருதத்தை ஏன் தமிழ்நாட்டில் திணிக்க வேண்டும்?

இந்தியா முழுக்க பாஜக தமது மத அடையாள அரசியலை வெற்றிகரமாக செயல்படுத்திக்கொண்டு ஆட்சியை பிடித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் அது முடியவில்லை. வரும் 2021 - பொதுத்தேர்தலுக்குள் பாஜக எந்த அடையாள அரசியலையாவது பிடித்து தமிழர்களின் வாக்குகளை வேட்டையாட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதிதான் இந்த திருவள்ளுவர் அரசியல்.

தமிழருக்கு தமிழுக்கு முதலில் பாஜக எதிரி அல்ல என்பதை அறிவிக்கும் முயற்சிதான் தாய்லாந்து மொழியில் திருக்குறளை மோடி வெளியிட்டது. தமிழ்நாட்டில் திருக்குறளுக்கான அங்கீகாரத்தை அப்படியே பாஜக அரசியலுக்கான அங்கீகாரமாக மாற்ற முயற்சிக்கிறது. அதன் ஒரு உத்தி தான் வள்ளுவருக்கு பட்டை அடித்து காவி உடுத்தியது. இந்த முயற்சி என்பது பாஜகவின் கேவலமான அரசியலாகும். மலிவான அரசியலாகும். இது ஒரு ஏமாற்று உத்திதான் என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திருக்குறள் என்றுமே மறைந்தே இல்லையே, தமிழகத்தில் பல சுவடிகள் இருந்தன, வெவ்வேறு ஊரில் பல பாதிரிகள் படித்த நூல் பட்டியலில் திருக்குறள் உள்ளது, 1730ல் ஜோசப் பெஸ்கி லத்தீன் மொழி பெயர்ப்பு, கிண்டெர்ஸ்லே 1794ல் டச்சு மொழி, 1767ல் ப்ரென்சு மொழியிலும் மொழி பெயர்த்தலே நிகழ்ந்துள்ளதே, மேலும் இந்த பாட்டனார் கந்தப்ப பட்லர் சுவடிகளை அடுப்பில் போடும் போது வெள்ளைகார துரை வாங்கி அதை காப்பாற்றியதாகவும் கதை. 

மலையாளம்1595
August Friedrich CaemmererThirukural waith German TranslationLeipzig1803
AnonymousKural de Thiruvalluvar, SelectionsParis1767
லத்தீன்1730

 English

Nathaniel Edward KindersleyTeroovalluvar Kurral or The Ocean of WisdomLondon (W. Bulmer and Co.)1794
ஆங்கிலம்1794
Constanzo BeschiThirukural (Books I and II)London1730

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard