Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தெய்வம் தெய்வ வகை வானேர்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
தெய்வம் தெய்வ வகை வானேர்
Permalink  
 


தெய்வம்

கடவுளேத் தெய்வம் என்ற சொல்லால் குறித்தல் தொல்காப்பியர் காலத்திலேயே இருந்தது. சொல்லதி' காரத்திலும் பொருளதிகாரத்திலும் தெய்வம் என்ற சொல்லே ஆளுகிருர் தொல்காப்பியர். திருவள்ளுவர் அச் சொல்லேப் பல இடங்களில் எடுத்து ஆள்கிரு.ர். கடவுள் என்ற சொல்லைத் தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் பல இடங்களிற் காணலாம். திருக்குறளிலோ கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத் தலைப்பில் மட்டும் அச் சொல் காணப்படுகிறதேயன்றி, நூலுக்குள் ஒரிடத்திலும் வரவில்லை.

தெய்வம் என்ற சொல் முழு முதற் கடவுளேக் குறிக்கவும் வரும்; தேவர்களேக் குறிக்கவும் வரும். இந்த இரண்டு வகையிலும் திருவள்ளுவர் அச் சொல்லே வழங்குகிருர்.

இன்ப துன்பம் என்னும் இரண்டும் முறையே முன் செய்த கல்வினை தீவினைகளின் பயனக உயிர்களுக்கு வருவன. முன்னே வினையை ஊழ், வினே, விதி, நியதி, பால் என்று பல சொற்களால் சொல்வதுண்டு. திரு வள்ளுவர் ஊழ் என்று தனியே ஒர் அதிகாரமே அமைத் திருக்கிருர். ஊழ் சடமாதலின் அது தானே பயனைத் தராது. ஆதலின் ஊழ்வினேக்கு ஏற்றபடி பயனை ஊட்டும் ஒரு பொருள் இருக்க வேண்டும். அப்பொருளே பரம் பொருளாகிய கடவுள். ஊழின்படியே நுகர்ச்சியை வரையறை செய்வதல்ை கடவுளேப் பால் வரை தெய்வம் என்று குறிப்பதுண்டு.

'பால்வரை தெய்வம் வினேயே பூதம்

ஞாயிறு திங்கள்’ (கிளவியாக்கம், 57)

என்ற தொல்காப்பியச் சூத்திரம் வினையைத் தனியாகவும், பாலாகிய அதனே வரையறை செய்யும் தெய்வத்தை வேருகவும் வைத்துப் பேசுகிறது. -

திருவள்ளுவர் பால்வரை தெய்வத்தைத் தெய்வம் என்ற பெயரால் இரண்டு இடங்களில் குறிக்கிருர்.

தெய்வத்தான் ஆக தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் (619)

என்பது ஒன்று. ஆள் வினையுடைமையாகிய முயற்சியின் பெருமையைச் சொல்லும் குறள் இது. ஊழ் மிக வலிது. அதன்படியே யாதும் நிகழும். ஆயினும் முயற்சிக்கும் ஒரளவு பயன் உண்டு என்பதைச் சொல்ல வரும் குறள் இது. பால்வரை தெய்வத்தால் கருதிய பயன் ஆகா விட்டாலும், முயற்சி உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியைத் தரும் என்பது இதன் பொருள். முயன்ற வினே, பால்வகையால் கருதிய பயனேத் தராது ஆயினும், முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியளவு தரும்; பாம் ஆகாது’ என்று பரிமேலழகர் உரை எழுதுகிருர். தெய்வம் என்பதற்குப் பால்வகை யென்று உரை கூறினும் பால்வரை தெய்வத்தையே அது குறித்ததாகக் கொள்ள வேண்டும்.

வகுத்தான் வகுத்த வகைஅல்லால் கோடி - தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது (377)

என்னும் குறள் ஊழ் என்னும் அதிகாரத்தில் வரும் இறுதிப் பாட்டு. ஐம்பொறிகளாலும் நுகர்வதற்குரிய பொருள்கள் கோடி சேர்த்து வைத்தவருக்கும் ஊழ் வினேயின்படி நுகர்ச்சி கைகூடுமேயன்றி, அவ்வளவையும் நுகர்தல் அரிதாகும்' என்பது பொருள். இங்கே ஊழ் வினேயை, 'வகுத்தான் வகுத்த வகை’ என்று தெளி வாகச் சொல்கிருர் திருவள்ளுவர். வகுத்தான் ஒருவன் உண்டு; அவன் வகுத்த வகை ஒன்று உண்டு. வகை என்பது பாலாகிய ஊழ். அதை வகுத்தான் பால்வரை தெய்வம் என்று தொல்காப்பியம் கூறும் கடவுள்,

ஆகவே, ‘தெய்வத்தான் ஆகா தெனினும்' என்ற குறளில் வரும் தெய்வம் என்பது பால்வரை தெய் வத்தையே குறிப்பதாகக் கொள்வதுதான் பொருத்தமாகும். "இதை நான் எழுதினேன்' என்றும், இது என் கை எழுதியது” என்றும் கருத்தாவுக்கும் கருவிக்கும் உள்ள ஒற்றுமை பற்றிக் கூறுவதுபோல, பால்வரை தெய்வத்தின் செயலேயே பாலின்மேல் ஏற்றிக் கூறுவது உபசார வழக்கு.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் (1023)

என்பதிலும் தெய்வம் வருகிறது. குடிசெயல் வகை என்னும் அதிகாரத்தில் உள்ளது இக் குறள். என் குடியின உயரச் செய்வேன் என்று கொண்டு, ஏற்ற வகையில் முயற்சி செய்யும் ஒருவனுக்குத் தெய்வம் ஆடையை இறுக்கிக் கட்டிக்கொண்டு உதவி செய்ய முன் வரும் என்பது இதன் பொருள். * . .

இங்கும் தெய்வம் என்பது பால்வரை தெய்வம் என்ற கருத்தில் வந்ததே. முன் நடப்பார் செயல் நியதிமேல் ஏற்றப்பட்டது” என்பது பரிமேலழகர் உரை. கியதியாகிய  பாலேத் தெய்வமாகக் குறித்தார் திருவள்ளுவர் என்னும் பொருள்பட உரை எழுதினர் அவர். முன் சொன்ன ஒற்றுமை நயத்தின்படி கியதி என்றது பால்வரை தெய் வத்தை என்றே கொள்ளவேண்டும்.

தெய்வம் தொழாஅள் கொழுநற் ருெழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை (55)

என்பது பலரும் பலமுறை கூறும் குறள்.

'தன் கொழுநனேயே தெய்வமென்று கருதிப் பிற தெய்வத்தைத் தொழாத கற்புடையவள், பெய்யென்று சொன்ன அளவிலே மழை பெய்யும் என்பது இதன் பொருள். -

தெய்வத்தைத் தொழுவது யாவருக்கும் கடமை யாயினும் கற்புடை மகளிருக்கு அது வேண்டுவதன்று என்ற கருத்தை இது கூறுகிறது. பிற நூல்களும் இந்தக் கருத்தை வற்புறுத்துகின்றன. -

இங்கே, தெய்வம் தொழுவதற்குரியது என்ற கருத்தும் இருக்கிறது. பரிதியார் என்ற உரையாசிரியர் ‘குலதேவதை' என்று பொருள் கூறுவார். தெய்வத் துக்குப் பல உருவங்களும் நாமங்களும் உண்டு. அதனல் பல தெய்வங்கள் என்று சொல்லும் வழக்கு உண்டாயிற்று. வழிவழியே குலத்தினர் வழிபடத் தாமும் வழிபட்டு வரும் கடவுளே, வழிபடு தெய்வம்’ என்று குறிப்பது ஒரு மரபு.

வழிபடு தெய்வம் கண்கண் டாஅங்கு” -

என்று நற்றிணையில் வருகிறது.

'வழிபடு தெய்வம் நிற்புறம் காப்ப’’ என்பது தொல்காப்பியம்,  பால்வரை தெய்வம் என்று குறிப்பதுபோல, வழிபடு தெய்வம் என்று குறிப்பதும் மரபு. தெய்வம் தொழாஅள்’ என்பதல்ை ஏனேயோர் வழிபடு தெய்வத்தைத் தொழும் வழக்கம் உள்ளவர் என்பதும், கற்புடை மகளிர் கணவரையே வழிபடு தெய்வமாகக் கொள்வர் என்பதும் புலகிைன்றன. .

ஆகவே, தெய்வம் என்பதற்குப் பால்வரை தெய்வம், வழிபடு தெய்வம் என்று பொருள் விரிக்கும் படி திருவள்ளுவர் ஆள்கிருர் என்பதைக் கண்டோம். ஒரு தொடர் கடவுளின் செயலேயும், மற்றென்று அவர் மாட்டுப் பிறர் செய்யும் செயலையும் குறித்து கிற்கின்றன.

திருக்குறளில் தெய்வம் என்ற சொல்லைத் தேவர்கள் என்ற பொருளிலும் திருவள்ளுவர் அமைக்கிறர்.

தென்புலத்தார் தெய்வம் . விருந்தொக்கல் தான் என்ருங் கைம்புலத்தா ருேம்பல் தலை (43)

என்னும் குறளில் தெய்வம் என்ற சொல் வருகிறது. இங்கே தனிப்பெருந் தெய்வமாகிய கடவுளே அது குறிப்பதாகவும் கொள்ளலாம்; தேவர்களேக் குறிப்பு தாகவும் கொள்ளலாம். பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐந்திடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல் வாழ் வானுக்குச் சிறப்புடைய அறமாம் என்பது பரிமேலழகர் உரை. அவர் தெய்வம் என்பதற்குத் தேவர் என்று உரை கொண்டார். அதற்கேற்ப விசேட உரையில், தெய்வம்  என்பது சாதி யொருமை என்று இலக்கணம் எழுதினர். ஐவர் திறத்தும் ஆற்றும் அறத்தைப் பஞ்ச யக்ஞம் என்பர் வடநூலார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும் (50)

என்னும் குறளில் தெய்வம் என்ற சொல்லைத் தெளி வாகத் தேவர் என்ற பொருளிலே திருவள்ளுவர் அமைத்தார். வான் உறையும் என்ற அடையும், தெய்வத்துள் என்பதில் உள்ள பன்மைக் குறிப்பும் அந்தப் பொருளைத் தெளிவாக்குகின்றன. வானுல கத்தில் உறையும் தேவர்களுக்குள் ஒருவனுக வைக்கப் படுவான்’ என்று பொருள் விரிக்கும்போது இது பின்னும் தெளிவாகிறது. -

சிறந்தவனேத் தேவரைப்போல மதிப்பது வழக்காத லின் வாழ்வாங்கு வாழ்பவனைத் தேவருள் ஒருவகை எண்ணும் கிலே அமைந்தது. இவ்வாறே வேறு ஒருவனும் தேவருக்குள் ஒருவகை மதிக்கப்பெறுவான் என்ற கருத்தை வேறு ஒரு குறளில் கூறுகிருர்.

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல் (702)

என்பது அக் குறள். குறிப்பறிதல் என்னும் அதிகாரத்தில் வருவது அது. பிறர் மனத்தில் நிகழ்வதை ஐயப்படாமல் உறுதியாக உணரும் ஆற்றல் பெற்றவனே, மனிதனே யானுலும் தேவர்களோடு ஒப்ப மதிக்க வேண்டும் என்பது இதன் பொருள். இங்கும் தெய்வம் என்ற சொல் தேவரைக் குறித்து கின்றது. இவ்வாறு வரும் இடங்களிலெல்லாம், தெய்வம் என்பது தொகுதி ஒருமை என்றே கொள்ள வேண்டும்.

திருவள்ளுவர் ஆறு இடங்களில் தெய்வம் என்ற சொல்லே ஆள்கிருர். ஊழ்வினேயின்படி இன்ப துன்பங்களே வரையறுக்கும் பால்வரை தெய்வம் என்று சில இடங் களிலும், வழிபடு தெய்வம் என்று ஓரிடத்திலும், தேவர் என்று சில இடங்களிலும் பொருள்கொள்ளும்படி அச் சொல் அமைந்திருக்கிறது என்பதை இதுகாறும் சொன்ன வற்ருல் உணர்கிருேம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தெய்வ வகை

திருவள்ளுவர் பொதுவாகத் தெய்வம் என்று குறிக்கும் இடங்களைப் பற்றி முன் கட்டுரையில் ஆராய்ந் தோம். அந்தச் சொல்லால் முழுமுதற் கடவுளேக் குறிப் பதும், தேவர்களேக் குறிப்பதும் உண்டென்பதை அறிந் தோம். -

இப்போது, குறிப்பிட்ட சில தெய்வங்களேப் பற்றி அவர் கூறும் செய்திகளேக் கவனிப்போம்.

திருமாலே இரண்டிடங்களில் குறிக்கிருர் திருவள்ளுவர். அடியளந்தான், தாமரைக் கண்ணுன் என்று இரண்டு தொடர்களால் சுட்டுகிருர் அப்புலவர் பெருமான்.

மடியிலா மன்னவன் எய்தும், அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு - (610) என்பது ஒரு குறள். தன் அடியாலே எல்லா உலகையும் அளந்த இறைவன் எவற்றை அளந்தானே அவை அனைத்தையும் சோம்பல் இல்லாமல் முயற்சி செய்யும் அரசன் அடைவான்’ என்பது இதன் பொருள்.

இங்கே திருமாலேச் சுட்டியது போலவே திருஞான சம்பந்தப் பெருமானும் திருத்துங்கானே மாடத்துத் திருப்பதிகத்தில், -

'மலர்மிசைய நான்முகனும் மண்ணும் விண்ணும்

தாய அடியளந்தான் காண மாட்டாத் - த&லவர்க் கிடம்போலும்’ - (9)

என்னும் பாசுரத்தில் 'தாய அடியளந்தான் என்று கூறுகிருர். இந்தக் குறளில் திருமால் திரிவிக்கிர மாவதாரம் எடுத்து உலகை அளந்த செய்தி வருகிறது.

தாம்வீழ்வார் மென்ருேள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்னன் உலகு (1103)

என்பது திருமாலேக் கூறும் மற்ருெரு குறள். இது காமத்துப்பாலில் வருகிறது. தலைவியோடு இன்புற்ற தலைவன் தான் பெற்ற இன்பத்தை எண்ணிக் கூறும் கூற்ருக அமைந்தது இது. தாம் விரும்பும் மகளிரது மெல்லிய தோளில் துயின்று பெறும் இன்பத்தினும் திருமாலின் உலகத்தில் பெறும் இன்பம் இனியதோ? என்பது இதன் பொருள். ஜம்புலன்களையும் நுகர் வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் ம்ெல்லிய தோளின்கண் துயிலும் துயில்போல் வருந்தாமல் எய்தலாமோ, அவற் றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம் என்று பரிமேலழகர் உரை விரித்தார்.

இங்கே திருமாலேத் தாமரைக் கண்ணுன் என்று கூறி, அவனுறையும் உலகம் பேரின்பம் தருவதென்ப தைக் குறிப்பாற் பெற வைத்தார். தாமரைக் கண்ணுன் என்பதற்கு மணக்குடவர் இந்திரனென்றும், காளிங்கர் பிரமன் என்றும் பொருளுரைத்தனர். இந்திரனத் தாமரை போன்ற கண்ணுன் என்று சொல்வது மரபன்று; இந்திரனுலகு என்று உரைப்பாரும் உளர்; தாமரைக் கண்ணன் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மை யறிக’ என்று பரிமேலழகர் அதை மறுத்தார். தாமரைக்கண்ணன் என்பதில் உள்ள கண் என்பதற்கு இடம் என்று பொருள் கொண்டு, தாமரையாகிய இடத்தில் உள்ளவன் என்பதல்ை பிரமனேக் குறிப்பதாகக் கூறினர் காளிங்கர். இன்பம் தருவது பிரமனுலகு என்று சொல்வது பெரு வழக்கு அன்ருதலின் அந்த உரையும் பொருந்தாது. திருமாலேப் புண்டரீகாட்சன் என்றும் கமலக் கண்ணன் என்றும் கூறுவது மரபு. அதனை ஒட்டியே தாமரைக் கண்ணுன் என்ருர் திருவள்ளுவர்.

திருமாலின் தேவியாகிய திருமகள் செல்வத்துக்குத் தெய்வமென்றும், அந்தப் பிராட்டியின் திருவருளால் பொருள்வளம் உண்டாகும் என்றும் கூறுவது இந்நாட்டு tDffl { • திருக்குறளாசிரியரும் செல்வம் உண்டாகும் என்று சொல்ல வரும் சில இடங்களில் திருமகள் வருவாள் என்று சொல்கிரு.ர்.

விருந்து ஓம்பி இல்வாழ்க்கையை நடத்துகிறவ ரிடத்திலும், பிறர் பொருளே வெஃகாதவரிடத்திலும், சோம்பலின்றி முயற்சி செய்பவரிடத்திலும் திருமகள் சே வாள் என்கிரு.ர். • , -

முகம் விரும்பி கல்விருந்தினரைப் பேணுபவருடைய வீட்டில் மனம் குளிர்ந்து திருமகள் தங்குவாளாம்.

அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து நல்விருந்து ஒம்புவான் இல். - (84)

அறம் இன்னதென்று அறிந்து, பிறர் பொருளே விரும்பாமல் இருப்பவர்களே, எவ்வாறு அடைய வேண்டுமோ அந்த வகையை அறிந்து திருமகள் அடைவாளாம்.

அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன் அறிந்து ஆங்கே திரு. (179)

திருமகள் இன்னுர் இன்னுரை விட்டு நீங்கி விடுவாள் என்பதையும் சில இடங்களில் சொல்லுகிரு.ர். அழுக்காறு என்ற பாவி திருமகளே ஒட்டிவிட்டு நரக வாதனையில் செலுத்திவிடும் என்பது ஒரு குறளின் கருத்து,

அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். (168)

ஓர் அரசனிடம் ஒருவன் துணையாய் நின்று அவனுடைய அதிகாரியாக இருக்கிருண். மிகவும் உண்மை யாக உழைக்கும் அவனே அயலாளுக "}া ও ঠা கினேப்பானைல் அவ்வரசனிடமிருந்து திருமகள் நீங்கி விடுவாள். -

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே ருக நினைப்பான நீங்கும் திரு. (519)

பரத்தையர் தொடர்பு, கட்குடி, சூதாடுதல் ஆகிய மூன்றையும் உடையவர்களிடமிருந்து திருமகள் நீங்கி விடுவாள். . .

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு. (519)

திருமகளுடைய தமக்கையை முகடியென்றும், தவ்வையென்றும் கூறுவர். வறுமையும் துன்பமும் அவள் இருக்கும் இடத்தில் இருக்குமாம். திருமகளேயும், தவ்வையையும் ஒருங்கே கூறும் குறட்பாக்கள் இரண்டு  உண்டு. பொருமைக்காரனிடமிருந்து திருமகள் நீங்க, அங்கே அவளுடைய தமக்கை வந்து குடி. புகுவாளாம்.

அவ்வித் தழுக்கா றுடையானச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். (167)

அழுக்காறுடையவனேத் தன் தமக்கைக்குக் காட்டி, 'நீ இவனிடமே இரு' என்று சொல்லிவிட்டுத் திருமகள் நீங்குவாள் என்று நயமாகச் சொல்லுகிரு.ர்.

சோம்பல் உள்ளவனிடம் முகடி ഉ.ജി)i-്. சோம்பல் இல்லாமல் முயற்சி செய்பவனிடம் திருமகள் தங்குவாளாம்.

மடிஉளாள் மாமுகடி என்ப; மடிஇலான் தாள்உளாள் தாமரையி னுள். - (617)

‘கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; திருமகள் மடியிலானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவார் அறிந்தோர்’ என்பது பரிமேலழகர் உரிை. .

சூதென்னும் முகடியால் மூடப்பட்டார் (936)

என்று தனியே மூதேவியைக் குறிக்கும் குறள் ஒன்று உண்டு. அங்கே சூதை முகடியாக உருவகித்தார்.

மேலே சொன்ன குறட்பாக்களால் திருமகள் செங்கிற முடையவளென்பதும், தாமரை மலரில் உறைபவ ளென்பதும், செல்வத்துக்குத் தலைவி என்பதும் பெறப் பட்டன. தவ்வையாகிய மூதேவி கரிய நிறமுடையவ ளென்பதையும், திருமகளுக்கு மூத்தவளென்பதையும் உணர்கிருேம். செய்யவள், செய்யாள், தாமரையினள், திரு என்ற பெயர்கள் திருமகளுக்கு வழங்கும் என்பதையும் அறிந்துகொள்கிருேம்.

உலகத்தைப் படைப்பவனேப் பிரமன் என்று புராணங்கள் கூறும். படைப்பு, காப்பு, அழிப்பு என்ற மூன்று தொழில்களில் முதலாவது படைப்பு. பிரமனே எல்லாருடைய தலையிலும் எழுதி விதிக்கின்ருன் என்று கூறுவார்கள்; அதனுல் விதி என்ற பெயரும் அவனுக்கு வழங்கும். இந்த இரண்டையும் இணைத்து ஒரு குறளில் பிரமனே கினேக்கிருர் திருவள்ளுவர்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். (1063)

‘உலகைப் படைத்தவனகிய பிரமன், ஒருவன் இரந்து அதனுல் உயிர் வாழ்வதை விரும்பி விதித்தானுல்ை, அந்தப் பிரமனும் எங்கும் திரிந்து கெட்டுப் போவானுக!' என்று பிரமனேச் சபிக்கிருர் வள்ளுவர். இங்கே விதித்தலேயும் உலகை இயற்று தலையும் அவனுடைய செயல்களாகக் குறிப்பித்தலேக் காண்க. . .

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. (377) என்ற குறளில் வரும் வகுத்தான் என்பது பால்வரை

தெய்வத்தைக் குறிப்பதாகக் கொள்ளாமல், பிரமனேச் சுட்டியதாகக் கொள்வதும் பொருந்தும். -

பிறவிக்குக் காரணமாக இருப்பவன் பிரமன் என்றுள்ள மரபைப் போலவே, இறப்புக்கு ஒருவன் காரணமாக இருக்கிருன் என்பதும் ஒரு மரபு. அவனேக் கூற்று என்றும் கூற்றம் என்றும் திருவள்ளுவர் சொல்கிரு.ர். உடம்பினின்றும் உயிரைக் கூறுபடுத்துவதனுல் கூற்று என்ற பெயர் வந்தது. - -

தவம் புரிபவர்கள் கூற்றுவனையும் வெல்லும் ஆற்றலைப் பெறுவார்கள் என்பதைப் பல பெரியார்கள் கூறியிருக் கிருர்கள். இந்தக் கருத்தை,

கூற்றம் குதித்தலும் கைகூடும், நோற்றலின்

ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு (269) என்ற குறளில் கூறுகிருர். இதற்கு, தவத்தான் வரும் ஆற்றலேத் தலைப்பட்டார்க்குக் கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம்’ என்று பரிமேலழகர் உரை கூறினர். மணக்குடவர், குதித்தல்-தப்புதல். இது மார்க்கண்டேயன் தப்பிற்ை போல என்றது என்று எழுதினர்.

கொல்லாமையை விரதமாகக் கொண்டவனுக்கு வாழ்நாள் இடையே கூற்றுவனது துன்பம் வராது என்று ஒரு குறளில் குறிப்பித்தார்.

கொல்லாமை மேற்கொண்

டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிர்உண்ணும் கூற்று. - (326)

முழு ஆயுளும் வாழ்வார் என்பது இதன் கருத்து. பரிமேலழகர் இந்தக் கருத்தைப் பின்வருமாறு விளக்குவார்: மிகப் பெரிய அறம் செய்தாரும் மிகப் பெரிய பாவம் செய்தாரும் முறையானன்றி இம்மை தன்னுள்ளே அவற்றின் பயன் அநுபவிப்பர் என்னும் அறநூல் துணிபு பற்றி, இப்பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான்; படாளுகவே, அடியிற் கட்டிய வாழ்நாள் இடையூறின்றி  எய்தும் என்பார், வாழ்நாள் மேற் கூற்றுச் செல்லாது என்ருர். செல்லாதாகவே காலம் நீட்டிக்கும்; நீட்டித் தால் ஞானம் பிறந்து உயிர் வீடுபெறும் என்பது கருத்து.'

கூற்றம் இறப்பைத் தரும் என்பதை, கூற்றத்தைக் கையால் விளித்தற்ருல் ஆற்றுவார்க் காற்ருதார் இன்ன செயல் (894) என்பதிலும் குறிப்பித்தார்.

கூற்றம் மாற்ற முடியாத பெருவலிமையுடையது என்பதை, மாற்ருருங் கூற்றம்’ என்று தொல்காப்பியர் குறிப்பதனுல் உணரலாம். திருவள்ளுவர்,

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் - ஆற்ற லதுவே படை (765) என்ற குறளில் குறிப்பாக அதைப் புலப்படுத்தினர்.

உப்பிற்கும் காடிக்கும் கூற்று (1050) பண்டறியேன் கூற்றென் r

பதன; இனியறிந்தேன் (1083) என்பவற்றில் உருவக வகையிலும், -

கூற்றமோ கண்ணுே பிணையோ (1085)

என்பதில் உவமையாகவும் கூற்றத்தைச் சொல்கிரு.ர்.

இதுவரையில் கூறியவற்ருல் முழுமுதற் கடவுளே அவருக்குரிய பண்புகளால் கடவுள் வாழ்த்தில் எடுத்துரைத்து, பிற இடங்களில் தெய்வம் என்றும் அவரைக் கூறிய திருவள்ளுவர் திருமால், திருமகள், முகடி, பிரமன், கூற்றுவன் ஆகிய தெய்வ வகை களேப் பற்றியும் கூறியிருக்கிருர் என்பதை அறிந்தோம். அவர் கூறும் மற்றத் தேவர்களைப் பற்றி அடுத்தபடி பார்ப்போம், 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

வானேர்

இம்மை, மறுமை, வீடு என்று மூன்று கிலே களேச் சொல்வது ஒரு மரபு. இம்மை என்பது இந்த உலக வாழ்வு; மறுமை என்பது இந்த உலக வாழ்வுக்குப் பிறகு அமையும் வாழ்வு. அந்த வாழ்வு சொர்க்க இன்ப வாழ்வாகவும் இருக்கலாம்; நகரத் துன்ப வாழ்வாகவும் இருக்கலாம். அதன்பின் மீண்டும் இங்கே வந்து உயிர் பிறக்கும்; அல்லது வீட்டை அடையும். வீடு என்பது மீட்டும் பிறப்பு இறப்புக்களில் அகப் படாமல் என்றும் மாருமல் உள்ள இன்ப வாழ்வு. இதையே மோட்சமென்றும் முக்தியென்றும் சொல்வார்கள். இவ்வுலகில் நல்வினை செய்தவர்கள் தேவ லோகத்தில் சொர்க்க இன்பம் பெற்று நல்வினைப் பயன் முடிந்தபின் வீடு பெறுவார்கள். சொர்க்கத்தைத் துறக்கமென்றும் வானுலகு என்றும் சொல்வது வழக்கம். வானுலகத்துக்கு அப்பால் விடு என்ற கிலே இருப்பதைத் திருவள்ளுவர் கூறுகிருர், -

யானென தென்னும் செருக்கறுப்பான் வானுேர்க்

குயர்ந்த உலகம் புகும். - - (346) என்பதில் வானோர்க்கு உயர்ந்த உலகம்’ என்பது வீட்டைக் குறித்து கிற்கிறது. வானேர்க்கும் எய்தற்கரிய வீட்டுலகம்’ என்பது சொற்பொருள். -

இந்த உலகத்துக்கும் வீட்டுலகத்துக்கும் இடையே இன்ப வாழ்வை உடையதாக இருப்பது அமரருலகு.

அங்கே வாழ்கிறவர்கள் தேவர்கள். அமரருலகைப் பற்றியும் பல செய்திகளைத் திருவள்ளுவர் சொல்கிருர், புண்ணியம் புரிந்தவர்கள் அந்தப் புண்ணியப் பயனே நுகரத் துறக்கம் செல்வார்கள் என்பது ஒரு நம்பிக்கை.

'புண்ணியம் புரிவோர் புகுவது துறக்கம் என்னுமீ தருமறைப் பொருளே’

என்பது கம்பர் வாக்கு. புண்ணியம் என்பது கல்வினே. கல்வினை பல வகைப்படும். திருவள்ளுவர், இன்னது செய் தார் அல்லது இன்னபடி வாழ்ந்தார் துறக்கம் அடைவார் என்று பல குறள்களில் சொல்கிரு.ர்.

கற்புடைய பெண்டிரும், விருந்து ஒம்புவாரும், அடக்க முடையவரும், பிறர் பொருளேத் திருடாதவரும் தேவருல கத்தை அடைவார்கள் என்கிரு.ர்.

பெற்ருற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. . (58)

(பெண்கள் தம்மை மனவியராகப் பெற்ற கணவனே வணங்கி அவனைத் தம் வசமாகப் பெற்ருரால்ை தேவர்கள் வாழும் உலகின்கண் அவர்களால் பெருஞ் சிறப்பினேப் பெறுவார்கள்.) .

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு. (86)

[தம்மிடம் வந்து செல்லும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பிவிட்டுப் பின்பு வரும் விருந்தினர்களை எதிர் பார்த்து

கிற்கும் இல்வாழ்வான் மறுபிறப்பில் தேவலோகத்தில் உள்ள அமரர்களுக்கு நல்ல விருத்தினன் ஆவான்.) 

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். (121)

(அடங்கியிருக்கும் இயல்பு ஒருவனைத் தேவருலகத்துக்குச் செலுத்தும்; அடங்காமையோ தங்குவதற்கரிய இருள் கிரம்பிய நரகத்தில் செலுத்தும்.) -

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை; கள்ளார்க்குத் தள்ளாது புத்தேள் உலகு. (290)

(களவினேச் செய்பவருக்கு உடம்பும் தவறும்; களவு செய் யாதவருக்குத் தேவருலகமும் தவருது.1

மனிதர்களேவிடத் தேவர்கள் உயர்ந்தவர்கள். ஆதலின் யாரையேனும் சிறப்பித்துச் சொல்லும் போது அவர்களுக்கு உவமையாகத் தேவர்களேச் சொல்வார்கள்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும் (50) என்ற குறள், வாழும் வகையில் செம்மையாக இவ்வுலகத் தில் வாழும் ஒருவனே வானுலகில் வாழும் தேவருள் ஒரு வகை எண்ணி மதிப்பார்கள் என்று கூறுகிறது. அப்படியே கேள்விச் செல்வம் உடையவர்களும் தேவர்களோடு ஒப்ப மதிக்கப் பெறுவார்கள் என்று ஒரு குறள் கூறுகிறது.

செவியுணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின்

ஆன்ருரோ டொப்பர் நிலத்து. (413) செவியுண வாகிய கேள்வியின உடையார் நிலத்தின் கண்ணர் ஆயினும் அவி உணவினையுடைய தேவ ரோடு ஒப்பர்’ என்று பரிமேலழகர் இதற்கு உரை கூறி, துன்பம் அறியாமையான் தேவரோடு ஒப்பர் என்று கூறினர்’ என்று விளக்குவார். -

நிலவரை'நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்ருது புத்தேள் உலகு (234) என்பது ஒரு குறள். ஒருவன் இந்த நிலவுலகத்தின் எல்லேயில் இறவாமல் நீண்டு நிற்கும் புகழ் உண் டாகும்படி செய்வானுயின், தேவருலகம் அவனே மதிக்குமே யன்றித் தன்னை அடைந்த ஞானிகளே மதியாது’ என்பது இதன் பொருள். இங்கே தேவர்களும் போற்றும் வகையில் வாழும் வாழ்வு ஒன்று உண்டு என்பதைக் குறிக்கிருர் வள்ளுவர். அதன் வாயிலாகத் தேவர்கள் போற்றுவது ஒருவனுடைய பெருமைக்குத் தலே யளவு என்ற கருத்தையும் புலப்படுத்துகிரு.ர். புகழும், புத்தேளுலகு போற்றுதலும் ஒருங்கே கிடைத்தலைச் சொல்கிருர்.

வேறு ஒரு குறளில் புகழ் இம்மையிலும் புத்தேளுலகு மறுமையிலும் பெறுவதற்குரியவை என்பதை எதிர் மறை வாயிலாகக் குறிப்பிக்கிருர். மானம் இழத்து தன்னே இகழ்வார் பின்னே சென்று வழிபட்டு கிற்றல் மிகவும் இழிவானது. மனிதன் புகழுக்காக ஒன்று செய்யவேண்டும்; இல்லேயானல் அமரருலக வாழ்வுக்காகவாவது ஒன்று செய்யவேண்டும். மானம் இழந்து கிற்றலால் இந்த இரண்டுமே இல்லையாகி விடும். அப்படி இருக்க, அத்தகைய செயலைச் செய்வது ஏன்?-இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிருர் திரு வள்ளுவர். - -

புகழ்இருருல்; புத்தேள்நாட்டு உய்யாதால், என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை. - (966) 

பயவாது; ஏனேப் புத்தேள் உலகத்துச் செலுத்தாது; இனி அவனுக்கு அது செய்வது யாது?) \a

இங்கே புத்தேள் நாடு செல்வது சிறப்பு என்ற கருத் துக் குறிப்பாக அமைந்திருக்கிறது. -

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவி னல்ல பிற - (213)

என்ற குறள் தேவருலகத்தில் மிகச் சிறந்தவற்றைக் காணலாம் என்னும் கருத்தைத் தன்னுட் பொதிந்து கொண்டு கிற்கிறது. தேவலோகத்திலும் இதைக் காண முடியாது’ என்று சொல்லும்போது அந்த உண்மை தேவலோகத்தின் சிறப்பைக் காட்டுகிற தல்லவா?

தேவலோகம் சிறந்த போகத்தைத் தருவது.

புலத்தலிற் புத்தேள்நாடு உண்டோ, நிலத்தொடு

நீர்இயைந் தன்னு ரகத்து. (1323)

(நிலத்தோடு நீர் கலந்தாற் போன்ற ஒற்றுமையை உடைய காதலரிடம் ஊடல் கொள்வதைப் போல, நமக்கு இன்பம் தரும் தேவருலகம் உண்டோ?) -

உவமை சொல்லும்பொழுது உயர்ந்த பொருளையே எடுத்துக் கூறவேண்டும். தாமரை போன்ற முகம் என்னும்போது முகத்தைக் காட்டிலும் சிறந்தது தாமரை என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டே அந்த உவமை எழுகிறது.

"உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலே’ என்று உவமையின் இலக்கணத்தைத் தொல்காப்பியம் கூறுகிறது. ஆதலின் இங்கே புலவியின்பின் வரும் இன்பத்தைச் சொல்ல வந்த தலைவி, அது தேவருல கத்திற் பெறும் இன்பத்தினும் சிறந்ததென்று சொல் கிருள். தேவருலக இன்பமே எல்லா வகை இன்பத் துக்கும் அளவு கோலாக சிற்றலே அவள் கூற்றுக் காட்டு கிறது.

பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரத்தில் வரும் குறள் ஒன்றில், எவ்வளவு பெரியவகை இருந்தாலும் பெண் வழிச் செல்கிறவனுக்குப் பெருமை இல்லே’ என்ப தைச் சொல்கிறது.

இமையாரின் வாழினும் பாடிலரே. இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர். (906)

[தம் மனைவியினுடைய மூங்கிலேப் போன்ற தோளுக்கு அஞ்சுகிறவர்கள் தேவர்களேப் போல வாழ்ந்தாலும் பெருமை இல்லாதவ ராவார்கள்.)

இங்கே மிக்க பெருமையோடு வாழ்பவர் என்பதை? குறிக்க, இமையாரின் வாழினும்’ என்கிருர். ஆதலின் தேவராக வாழ்வது பெருமைப்பட வாழ்வதற்குத் தலேயளவு என்பது புலகிைறது.

எல்லா வகையாலும் சிறந்த வாழ்வை உடைய தேவர்கள் சுதந்தரம் உடையவர்கள்; தாம் விரும்பிய யதை விரும்பியவாறே செய்யும் உரிமையும் ஆற்றலும் பெற்றவர்கள். இதைக் கயமை என்னும் அதிகாரத் தில் வரும் ஒரு குறள் புலப்படுத்துகிறது. இழிகுணம் உடையவர்களாகிய கயவர்களைப்பற்றிக் கிண்டலாகப் பேசும் குறள் அது.

கயவர் தேவர்களேப் போன்றவர்கள். ஏன் தெரியுமாக் தேவர்கள் தம் மனத்துக்கு விருப்பமானதைச் செதுவார்கள். கயவரும் அப்படித்தான் செய்கிறர்கள்’ என்கிருர், -

தேவர் அனயர் கயவர்; அவரும்தாம் மேவன செய்தொழுக லான். - (1370)

தேவர்கள் தாம் விரும்புவனவற்றைச் செய்து வாழ் கிறவர்கள் என்ற உண்மையை உளம் கொண்டு பாடியது இது. 

பயவாது; ஏனேப் புத்தேள் உலகத்துச் செலுத்தாது; இனி அவனுக்கு அது செய்வது யாது?) \a

இங்கே புத்தேள் நாடு செல்வது சிறப்பு என்ற கருத் துக் குறிப்பாக அமைந்திருக்கிறது. -

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவி னல்ல பிற - (213)

என்ற குறள் தேவருலகத்தில் மிகச் சிறந்தவற்றைக் காணலாம் என்னும் கருத்தைத் தன்னுட் பொதிந்து கொண்டு கிற்கிறது. தேவலோகத்திலும் இதைக் காண முடியாது’ என்று சொல்லும்போது அந்த உண்மை தேவலோகத்தின் சிறப்பைக் காட்டுகிற தல்லவா?

தேவலோகம் சிறந்த போகத்தைத் தருவது.

புலத்தலிற் புத்தேள்நாடு உண்டோ, நிலத்தொடு

நீர்இயைந் தன்னு ரகத்து. (1323)

(நிலத்தோடு நீர் கலந்தாற் போன்ற ஒற்றுமையை உடைய காதலரிடம் ஊடல் கொள்வதைப் போல, நமக்கு இன்பம் தரும் தேவருலகம் உண்டோ?) -

உவமை சொல்லும்பொழுது உயர்ந்த பொருளையே எடுத்துக் கூறவேண்டும். தாமரை போன்ற முகம் என்னும்போது முகத்தைக் காட்டிலும் சிறந்தது தாமரை என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டே அந்த உவமை எழுகிறது.

"உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலே’ என்று உவமையின் இலக்கணத்தைத் தொல்காப்பியம் கூறுகிறது. ஆதலின் இங்கே புலவியின்பின் வரும் இன்பத்தைச் சொல்ல வந்த தலைவி, அது தேவருல கத்திற் பெறும் இன்பத்தினும் சிறந்ததென்று சொல் கிருள். தேவருலக இன்பமே எல்லா வகை இன்பத் துக்கும் அளவு கோலாக சிற்றலே அவள் கூற்றுக் காட்டு கிறது.

பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரத்தில் வரும் குறள் ஒன்றில், எவ்வளவு பெரியவகை இருந்தாலும் பெண் வழிச் செல்கிறவனுக்குப் பெருமை இல்லே’ என்ப தைச் சொல்கிறது.

இமையாரின் வாழினும் பாடிலரே. இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர். (906)

[தம் மனைவியினுடைய மூங்கிலேப் போன்ற தோளுக்கு அஞ்சுகிறவர்கள் தேவர்களேப் போல வாழ்ந்தாலும் பெருமை இல்லாதவ ராவார்கள்.)

இங்கே மிக்க பெருமையோடு வாழ்பவர் என்பதை? குறிக்க, இமையாரின் வாழினும்’ என்கிருர். ஆதலின் தேவராக வாழ்வது பெருமைப்பட வாழ்வதற்குத் தலேயளவு என்பது புலகிைறது.

எல்லா வகையாலும் சிறந்த வாழ்வை உடைய தேவர்கள் சுதந்தரம் உடையவர்கள்; தாம் விரும்பிய யதை விரும்பியவாறே செய்யும் உரிமையும் ஆற்றலும் பெற்றவர்கள். இதைக் கயமை என்னும் அதிகாரத் தில் வரும் ஒரு குறள் புலப்படுத்துகிறது. இழிகுணம் உடையவர்களாகிய கயவர்களைப்பற்றிக் கிண்டலாகப் பேசும் குறள் அது.

கயவர் தேவர்களேப் போன்றவர்கள். ஏன் தெரியுமாக் தேவர்கள் தம் மனத்துக்கு விருப்பமானதைச் செதுவார்கள். கயவரும் அப்படித்தான் செய்கிறர்கள்’ என்கிருர், -

தேவர் அனயர் கயவர்; அவரும்தாம் மேவன செய்தொழுக லான். - (1370)

தேவர்கள் தாம் விரும்புவனவற்றைச் செய்து வாழ் கிறவர்கள் என்ற உண்மையை உளம் கொண்டு பாடியது இது. 

இதுவரையில் கூறியவற்ருல் தேவருலகம் இன்ப வாழ்வை உடையதென்றும், நல்வினே செய்வார் அவ்வுலக வாழ்வு பெறுவாரென்றும், அவ்வாழ்வு மிகச் சிறந்ததென்றும், பெருமைக்கும் இன்பத்துக்கும் 2- 6յ16Ծ3ԼԸ)tԱ T 5 எடுத்தாளும் உயர்வுடையதென்றும், அதற்கும் மேற்பட்டது வீடென்றும் அறிந்துகொள் ளலாம். தேவர்கள் நல்லவர்களேத் தம் உலகத்துக்கு வரவேற்பவர்கள் என்பதும், சுதந்தர வாழ்வுடையவர் என்பதும், இவ்வுலகத்தார் எடுக்கும் விழாவும் செய்யும் பூசையும் உடையவர் என்பதும், வேள்வியில் தரும் அவியுணவைப் பெறுபவர் என்பதும் தெரியவரு கின்றன.

கடவுளேயும் தெய்வங்களேயும் தேவர்களையும் பற்றித் திருவள்ளுவர் கூறிய செய்திகளைப் பார்த்தோம். அணங்கு, தென்புலத்தார் என்று வேறு சிலரை அங்கங்கே அவர்

குறிக்கிரு.ர். -

. மோகினிப் பிசாசு என்று ஒன்று இருப்பதாகவும் அது ஆடவனேப் பற்றில்ை அவன் சோர்ந்து போவா னென்றும் நாட்டு மக்கள் சொல்வதுண்டு. அது போன்று தாக்கணங்கு என்ற தெய்வம் ஒன்று உண்டு. 'திண்டி வருத்தும் தெய்வம்' என்று அதைச் சொல்வார்கள்.

ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப மாய மகளிர் முயக்கு . (918)

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு . . . (1081)

என்று அதனே அணங்கு என்றே திருவள்ளுவர் கூறுவார். முதலில் உள்ள குறளின் உரையில் அணங்கு - காம நெறியான் உயிர் கொள்ளும் தெய்வ மகள்' என்று பரிமேலழகர் எழுதினர். பரத்தையருடைய பழக்கம் தாக்கணங்கு தாக்கியதை ஒக்கும் என்பது குறளின் கருத்து. இரண்டாவது குறள், தலைவியை முதல் முதலிலே கண்ட தலைவன் அவளே ஐயுற்றுக் கூறியது. அழகு மிகுதி 故_HTö இருத்தலாலும், தன்னே வருத்தியதாலும், அணங்கோ? என்று ஐயுற்ருன்.

ஒரு குறளில் தாக்கணங்கு என்னும் தொடரையே ஆளுகிரு.ர்.

தலேவி தன்னைப் பார்த்தபோது அப்பார்வை தன்னே வருத்தியதாகச் சொல்கிருன் தலைவன்.

நோக்கினுள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானக்கொண் டன்ன துடைத்து. (1082)

'இந்த அழகி நான் தன்னைப் பார்த்தவுடன் அதன் எதிரே என்னைப் பார்க்கும் பார்வை, தாக்கி வருத்தும் இயல்பையுடைய அணங்கு ஒரு சேனையையும் துணைக்குக் கொண்டு வந்தாற் போன்ற தன்மையை உடையதாக இருக்கிறது என்பது இதன் பொருள். தாக்கும் இயல் புடைய அணங்காதலின் அதற்கு இப்பெயர் வந்தது.

"தாக்கணங் காவ தெவன்கொல் அன்னய்' என்று ஐங்குறுநூற்றிலும், "தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டு’ என்று சிலப்பதிகாரத்திலும் இப்படியே வேறு பல நூல்களிலும் தாக்கணங்கைப் பற்றிய செய்திகள் வருகின்றன.

தென்புலத்தார் என்ற ஒரு வகையினரைத் திரு வள்ளுவர் குறிக்கிருர். பிதிரர் என்றும் பிதிர்த் தேவதைகள் என்றும் கூறப்பெறுபவர்கள் அவர்கள்.

தென்புலத்தார் தெய்வம்

விருந்தொக்கல் தான் என்ருங் கைம்புலத்தா ருேம்பல் தலை. (43)

'பிதிரராவார் படைப்புக் காலத்து அயனுற் படைக்கப் பட்டதோர் கடவுட் சாதி; அவர்க்கு இடம் தென்திசை யாதலின், தென்புலத்தார் என்ருர்’ என்று பரிமேலழகர் விளக்கம் கூறுகிருர். முன்னேர்களே நோக்கிச் செய்யும் கடன்களாலாய பயன்களே அவர்களுக்கு உரியனவாகச் செய்யும் அதிகாரமுடையவர்கள் இவர்கள் என்பார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 இந்திரன் முதலியோர்

- தேவர்கள் வாழும் உலகம் வானுலகம். அவர் களுக்குத் தலைவன் இந்திரன். இந்திரன் துய்க்கும் இன்பம் மிகப் பெரியது. இந்திர போகம், இந்திர திருவம் என்று வழங்குவதிலிருந்து so. 6); gp1601–tti வாழ்க்கையின் சிறப்பை உணரலாம். அவனேத் திரு வள்ளுவர் இரண்டு இடங்களில் குறிக்கிருர். நீத்தார் பெருமையைச் சொல்ல வந்த அவர், வானுளோருக்குத் தலைவனும் பேராற்றலுடையவனுமான இந்திரனே தவ முடையோரின் முன் தோல்வியுறுவான் என்று சொல்லுகிருர், - -

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலும் கரி. - (25)

'புலன்களில் செல்கின்ற அவா. ஐந்தினையும் அடக்கினனது வலிக்கு, அகன்ற வானத்து உள்ளார் இறைவனகிய இந்திரனே அமையும் சான்று’ என்று பரிமேலழகர் உரை கூறி, தான் ஐந்து அவியாது சாபம் எய்தி கின்று, அவித்தானது ஆற்றல் உணர்த்தினைதலின், இந்திரனே சாலும் கரி என்ருர்’ என்று விளக்கினர். அகலிகையை விரும்பிக் கோதம முனிவரால் சாபம் பெற்ற வரலாற்றை தினந்தே இந்த விளக்கத்தைப் பரிமேலழகர் எழுதினரென்று தோற்று கிறது. - இந்திரைேடு தொடர்புடைய புராணக் கதையையே. திருவள்ளுவர் உளம் கொண்டு இந்தக் குறளே அமைத்திருக்கிருர். அவர் உள்ளத்திற் கொண்ட கதையில் ஐந்தவித்தான் ஒருவனும் இந்திரனும் தவத்தின் ஆற்றலே வெளிப்படுத்தும் நிகழ்ச்சியும் இருத்தல் வேண்டும். நீத்தார் பெருமை தோன்றச் செய்து தன் சிறுமையைப் புலப்படுத்தியதனுல்தான் இந்திரனேக் கரியாக்கினர்.

இந்தக் குறளின் உரையில் காளிங்கர் என்னும் உரையாசிரியர், தன் பதம் கருதித் தவம் செய்யும் நீத்தார் மாட்டுத் திலோத்தமை முதலிய தெய்வ மகளிரை விடுத்து, மற்று அத் தவம் அழித்து, தவம் அழியாமை நிலைகிற்கையாலும், தனது பதம் விரும்பாமை யாலும் தானே சான்ருய் அமையும் என்று கூறுகிரு.ர். இந்திரன் தவம் அழியாமல் நிற்பவன் என்றும், தன் பதம் விரும்பாதவன் என்றும் அவர் கூறுகிருர். திலோத்தமை முதலியவர்களால் தவம் குலைவாரினும் இந்திரன் தவம் உடையவனென்பது அவர் கொள்கை போலும்! அந்தத் திலோத்தமை முதலியோரால் பலகாலும் இன்பம் துய்க்கும் இந்திரன் ஐந்தவித்தானுக இருப்பது எப்படிப் பொருந்தும்?

மணக்குடவர், இந்திரன் சான்று என்றது, இவ்வுல கின்கண் மிகத் தவம் செய்வார் உளரானல், அவன் தன் பதம் இழக்கின்ருகை நடுங்குமாதலான், இது தேவரினும் வலியன் என்றவாறு’ என்று எழுதினர். மணிமேகலையில், ஆபுத்திரன் பலருக்கும் சோறு அளித்துப் பசிப்பிணி மருத்துவகை விளங்கிய பொழுது, அவனுடைய அறச் செயலால் பாண்டு கம்பலம் நடுங்குவதைக் கண்டு அஞ்சிய இந்திரன் அவனிடம் வந்து அவனுக்கு ஆசை காட்டியதாக ஒரு வரலாறு வருகிறது. தவம் செய்பவர் களுடைய கிலே கண்டு இந்திரன் தன் பதத்தை இழக்க நேருமோ என்று அஞ்சி அவர் தவத்துக்கு ஊறு விளக்கப் புகுந்ததாகப் பல கதைகள் புராணங்களில் வருகின்றன. இவற்றை எண்ணியே மணக்குடவர் உரை விரித்தார் என்பது தெளிவு.

இந்திரன் ஐந்து அவியாமல், தவம் மிக்கவரினும் ஆற்றல் குறைந்தவன் என்ற கருத்தை உடையவர் திருவள்ளுவர் என்பதில் தடை ஏதும் இல்லை.

இந்திரனே, அகல் விசும்புளார் கோமான்’ என்று அறிந்து இந்திரன் என்ற பெயரையும் இக்குறளில் சொல் கிருர். தேவர்களுக்கு அவன் அரசன் என்பதையும் இதனுல் உணர்கிருேம்.

இந்திரனேப் பற்றிய செய்தி வரும் மற்ருெரு குறளில் அவனே வேந்தன் என்ற பெயரால் குறிக்கிருர்,

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். - (889)

'காத்தற்கு அருமையான உயர்ந்த விரதங்களே உடையார் வெகுள்வாராயின், அவர் ஆற்றலான் இந்திர னும் தன் பதம் இழந்து கெடும்’ என்பது பரிமேலழகர் உரை. நகுடன் என்பான் இந்திரன் பதம் பெற்றுச் செல் கின்ற காலத்துப் பெற்ற களிப்பு மிகுதியான் அகத்தியன் வெகுள்வதோர் பிழை செய, அதனல் சாபம் எய்தி அப்பதம் இடையே இழந்தான் என்பதை உட்கொண்டு இவ்வாறு கூறினர்' என்று மேலும் விளக்கினர் அவ்வுரை யாசிரியர். . .

இங்கும் தவத்தில்ை சிறப்பு அடைந்தவர்களின் பெருமையையும், இந்திரனுடைய ஆற்றற் குறைவையும் இக் குறள் எடுத்துக் காட்டுகிறது. பரிமேலழகர் கூறிய கதையையே எண்ணித் திருவள்ளுவர் இதை அமைத்தார் என்று சொல்ல இயலாது. ஆனாலும் ஏந்திய கொள்கை யார் சீறியதனுல் இந்திரன் தன் பதவியை இழந்த வரலாறு ஒன்றை எண்ணியே அவர் இந்தக் குறளேப் பாடியிருக்க வேண்டும். -

வேந்தனும் என்ற உம்மை இந்திரன் பேராற்றல் உடையவன் என்பதைக் குறிக்க நின்றது. எவ்வளவு பெரிய ஆற்றலே உடையவனாக இருந்தாலும் தவ முனிவர் ஆற்றலுக்கு முன் அவன் ஆற்றல் குறைவுபடும் என்ற கருத்தை வற்புறுத்தவே இவ்வாறு சொன்னர்.

வேந்தன் என்பது இந்திரனுடைய பெயர்.

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்’

(அகத்திணை, 5)

என்பது தொல்காப்பியம். -

இந்தக் குறளால் வேந்தனகிய இந்திரன் பேரரசன் என்பதும், ஆயினும் தவத்தினர் ஆற்றலுக்கு எதிரே அவன் ஆற்றல் தாழ்வுறும் என்பதும் புலனுயின. -

ஓரிடத்தில் திருவள்ளுவர் காமனே கினைப்பூட்டுகிரு.ர். மக்களுடைய உள்ளத்தில் காம உணர்ச்சியை ஊட்டும் தேவன் அவன். காமத்துப் பாலில் தனிப்படர் மிகுதி என்ற அதிகாரத்தின் ஒரு குறளில் அவனைப் பற்றிய செய்தி வருகிறது.

பருவரலும் பைதலும் காணுன்கொல் காமன்

ஒருவர்கண் நின்ருெழுகு வான். 

இது தோழியை நோக்கித் தலேவி கூறியது. தலைவ னுடைய பிரிவினுல் துன்புற்ற தலைவி சொல்கிருள்; என் காதலருடைய பிரிவினல் நான் துன்புறுகிறேன். அவர் துன்புறுவதில்லே போலும்! என்னிடம் காமத்தை உண் டாக்கி இந்தத் துன்பத்தைத் தருபவன் காமன். அவன் என் காதலர்பாலும் இத்தகைய துன்பத்தை உண் டாக்காமல் பட்சபாதத்துடன் இருக்கிருன். அவருக்கும் துன்பம் உண்டானல் என்னேப் பிரிந்திருப்பதை விட்டு வந்து சேர்வார். அப்படி வாராமையில்ை காமன் எனக்கு மட்டும் இந்த வருத்தத்தை உண்டாக்குகிருன் என்று தோன்றுகிறது. கடவுளாக உள்ள காமன் இப்படி ஒரு பட்சமாக நின்று ஒழுகுவது முறையாகுமா? அப்படித் தான் செய்வதனால் எனக்கு உண்டான துன்பத்தையும் வருத்தத்தையும் காணமாட்டானே? கண்டால் கருணை பிறக்குமே!’ என்ற எண்ணத்தோடு இவ்வாறு கூறு கிருள் தலைவி.

'காமன் ஒருவரிடத்தே நின்று போர் செய்கிருன்; அவன் எனக்கு உண்டான துன்பத்தையும் வருத்தத்தையும் காணுனே? என்பது பாட்டின் பொருள்.

விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறு பட்டான்; இனி யான் உய்யுமாறு என்ன என்பதாம்’ என்று பரிமேலழகரும், நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணுனே? காண்பாயிைன், நம்மை வருத்தானே, தெய்வமாகலான்’ என்று மணக் குடவரும் எழுதியுள்ளார்.

காமன் தெய்வம் என்பதும், நடுகிலேயும் கருணையும் உடைமை தெய்வத்தின் இயல்பு என்பதும் இந்தக் குறளால் உய்த்துணரப் பெறுகின்றன. காமன் ஒருவர் கண் நின்று ஒழுகுவான்’ என்று பொதுவாகச் சொன்னலும், அவன் ஒழுகுதலாவது, தனக்குத் துன்பம் உண்டாகும்படி செயல் செய்வதே என்பது, பருவரலும் பைதலும் காணுன்கொல் என்பதல்ை தெளிவாகும்.

அறத்தைத் தெய்வமாகக் கொள்வது ஒரு மரபு. அறக் கடவுள், தர்மதேவதை என்று சொல்வார்கள். திருக்குறளில் அறக் கடவுள் சில இடங்களில் காட்சி தருகிறது. அன்பு இல்லாதவர்களே அறக்கடவுள் ஒறுக்கிறது; கோபம் இன்றிக் கற்று அடங்கியவனுக்கு நலம் செய்ய அவன் செல்லும் வழியில் அவன் வரும் செவ்வி பார்த்து நிற்கிறது; பிறனுக்குக் கேடு சூழ்பவனுக்குக் கேடு பயக்கிறது.

என்பி லதனை வெயில்போலக் காயுமே - அன்பி லதன அறம். (77)

'எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து வருத்துவதைப்போல, அன்பு இல்லாத உயிரை அறக் கடவுள் வருத்தும் என்பது பொருள். எலும்பு இல்லாத புழுவை வெயில் தனியே கொடுமை செய்து வருத்துவதில்லை. எல்லா இடங்களிலும் வீசுவதுபோல நடுநிலையில் நின்று அது வீசுகிறது. ஆயினும் தன்னுடைய வலியின்மையால் புழு அதனைத் தாங்காமல் மாய்கிறது. அவ்வாறே அறக்கடவுள் நடு கிலேயில் நின்று தன் ஆணேயைச் செலுத்துகிறது. அன்பு இல்லாத உயிர்கள் அவ்வாணமுன் கிற்கமாட்டாமல் ஒழிகின்றன. 

அன்பு உள்ளாரை அறம் காய்வது இல்லை என்ற பொருளும் இதல்ை பெறப்படுகிறது. -

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. (130).

அறக் கடவுள் யாரிடம் சேரலாம் என்று ஏங்கி நிற்கிறதாம். எவன் சினத்தை அடக்கினவனே, எவன் நன்கு கற்று அடக்கத்திற் சிறந்து நிற்கிருனே அவன் வருகிருன் என்று தெரிந்து, அவன் வரும் வழியில் காலம் பார்த்து நிற்குமாம்.

இப்பெற்றியான அறம் தானே சென்று அடையும் என்பதாம் என்று பரிமேலழகர் இக்குறளின் கருத்தை உரைப்பார். -

தியாருக்குத் தீங்கு விளையக் காரணமாகும் அறக் கடவுள், நல்லாருக்கு நன்மை செய்யும் என்ற உண்மையை இந்த இரண்டு குறள்களாலும் தெரிந்து கொள்ளலாம்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க; குழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு. (204)

தீவினை அச்சம் என்னும் அதிகாரத்தில் வருவது இக் குறள். ஒருவன் பிறனுக்குக் கேடு உண்டாக்கும் காரியத்தை மறந்தாவது எண்ணக் கூடாது; அப்படி எண்ணினால் அவனுக்குத் தீங்கு உண்டாக்கும் காரியத்தை அறக்கடவுள் எண்ணும்' என்பது இதன் பொருள். . . .

பிறனுக்குத் தீங்கு புரிய எண்ணுவதே அறத்திற்கு மாறுபாடானது. அவ்வாறு எண்ணுபவனுக்கு அறக் கடவுளின் தண்டனே கிடைக்கும் என்று இந்தக் குறளால் கூறினர். .

அறக் கடவுள் நடுகிலேயில் நிற்பது என்பதும், நன்மை செய்வார்க்கு நன்மை தந்து, திமை செய்வார்க்குத் தீமை விளையக் காரணமாவதென்பதும் இவற்ருல் புலணு கின்றன. . -

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard