Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யாகம் சொர்கம் நரகம் மோட்சம் -வள்ளுவர் காட்டிய வைதீகம்-


Guru

Status: Offline
Posts: 7329
Date:
யாகம் சொர்கம் நரகம் மோட்சம் -வள்ளுவர் காட்டிய வைதீகம்-
Permalink  
 


5i.jpg 5p.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

5o.jpg

சுவர்க்கம் நரகம்

வையத்துள் வாடிநவாங்கு வாடிநபவன் வான்உறையும்

தெடீநுவத்துள் வைக்கப்படும். (50)

இவ்வுலகத்தில் வாழவேண்டிய முறைப்படி இல்லறத்தில்

வாடிநபவன், தேவலோகத்தில் வாடிநகின்ற தேவர்களில் ஒருவனாக

எண்ணப்படுவான்.

செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்திருப்பான்,

நல்விருந்து வானத் தவர்க்கு. (86)

வந்த விருந்தினர்களை உபசரித்து, இன்னும் வரும் விருந்தினர்

களையும் உபசரிக்க எதிர்பார்த்திருப்பவன், இறந்தபின் தேவ

லோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல விருந்தினனாக இருப்பான்.

செடீநுயாமல் செடீநுத உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது. (101)

முன்பு எந்த உதவியும் செடீநுயாமலிருக்கும்போது ஒருவன்

முன் வந்து செடீநுத உதவிக்குப்பதிலாக, இவ்வுலகத்தையும்,

தேவலோகத்தையும் கொடுத்தாலும் அவ்வுதவிக்கு ஈடாகாது.

அடக்கம் அமரர்உள் உடீநுக்கும், அடங்காமை

ஆர்இருள் உடீநுத்து விடும். (121)

மனம், வாக்கு, காயங்கள் கெட்டவழியில் போகாமல்

அடக்கிக்கொள்ளும் குணம். அக்குணமுடையவனைத் தேவலோ

கத்திற்கு அனுப்பி இன்பம் அனுபவிக்கச்செடீநுயும். அவைகள்

அடங்காமல் கெட்டவழியில் செல்லும் குணம் அக்குணம்

உடையவனை நிறைந்த இருட்டுலகமாகிய நரகத்திற்குச்

செலுத்திவிடும்.

நல்ஆறு எனினும் கொளல்தீது, மேல் உலகம்

இல் எனினும் ஈதலே நன்று. (222)

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: யாகம் சொர்கம் நரகம் மோட்சம் -வள்ளுவர் காட்டிய வைதீகம்-
Permalink  
 


(8)  யாகம்‌

அவி சொரிந்து ஆயிரம்‌ வேட்டலின்‌ ஒன்றன்‌

உயிர்‌ செகுத்து உண்ணாமை நன்று (259)

நெருப்பில்‌ நெய்‌ முதலிய அவிகளைச்‌ சொரிந்து, ஆயிரம்‌ யாகம்‌ செய்வகதைக்காட்டிலும்‌, ஒரு பிராணியின்‌ உயிரைக்‌ கொன்று தின்னாமலிருத்தல்‌ சிறந்தது.

ஆயிரம்‌ யாகம்‌ செய்வதால்‌ வரும்‌ புண்ணியத்தைவிட ஒரு உயிரைக்கொன்று தின்னாமலிருப்பதால்‌ வரும்‌ புண்ணியமே சிறந்தது; இதுவே இந்தப்‌ பாடலின்‌ கருத்து.

இக்குறளில்‌ யாகம்‌ செய்வதால்‌ புண்ணியம்‌ உண்டு என்பதை மறுக்கவில்லை. யாகம்‌ புண்ணிய காரியம்‌ என்பதை ஒப்புக்கொள்ளுகிறார்‌. யாகத்தைக்‌ காட்டிலும்‌ ஒரு உயிரைக்‌ கொன்று அதன்‌ உடலைப்‌ புசியாமவிருப்பதில்‌ அதிக புண்ணியம்‌ உண்டு என்றுதான்‌ கூறுகிறார்‌.

ஜாதி என்னும்‌ பகுதியில்‌ எடுத்துக்காட்டிய

அந்தணர்‌ நூற்கும்‌, அறத்திற்கும்‌, ஆதியாம்‌

நின்றது மன்னவன்‌ கோல்‌.

ஆபயன்‌ குன்றும்‌, அறுதொழிலோர்‌ நூல்மறப்பர்‌,

காவலன்‌ காவான்‌ எனின்‌.

என்ற இரு பாடல்களிலும்‌ திருவள்ளுவர்‌ வேதங்களில்‌ கூறப்படும்‌ வேள்விகளை ஓஒப்புக்கொண்டிருக்கிறார்‌.

“அந்தணர்‌ நூற்கும்‌” என்ற பாடலில்‌ பிராமணர்களின்‌ வேதத்தையும்‌, அந்தவேத சம்பந்தமான ஒழுக்கங்களையும்‌ காப்பாற்ற வேண்டியது அரசன்‌ கடமை என்று கூறப்‌ படுகின்றது.

அபயன்‌ குன்றும்‌” என்ற பாடலில்‌, அரசன்‌ ஒழுங்காக அரசாட்சி செய்யாவிட்டால்‌ பிராமணர்கள்‌ தங்கள்‌ வேதத்தையும்‌, வேதசம்பந்தமான ஒழுக்கங்களையும்‌ மறந்து விடுவார்கள்‌ என்று சொல்லப்படுகின்றது.

வேதங்களில்‌ யாகம்‌ செய்யவேண்டும்‌ என்று கூறப்படுகின்றது. யாகங்களின்‌ மூலம்‌ தேவர்களைத்‌ திருப்தி செய்தால்‌ தான்‌ இவ்வுலகில்‌ மழைபெய்யும்‌; பயிர்கள்‌ வளரும்‌; உணவுப்‌ பொருள்கள்‌ கிடைக்கும்‌; மக்கள்‌ பசி பட்டி னியின்றி வாழ்வார்கள்‌. இவை வேத சாஸ்திரங்களின்‌ கருத்து.

பிராமணர்களுக்குரிய ஓழுக்கங்களில்‌ யாகம்‌ செய்தல்‌ ஒன்று; யாகம்‌ செய்துவைத்தல்‌ ஒன்று. இவ்விரண்டு தொழில்‌ களையும்‌ அவர்கள்‌ தவறாமல்‌ செய்ய வேண்டும்‌. இன்றேல்‌ அவர்கள்‌ “பிறப்பொழுக்கம்‌” குன்றியவர்கள்‌ அவார்கள்‌. இவைகளைச்‌ செய்வதற்கு அரசன்‌ உதவி செய்யவேண்டும்‌.

மேலே காட்டிய பாடல்களைக்கொண்டு திருவள்ளுவர்‌ வேதவேள்வியை நிந்தனை செய்யவில்லை; வந்தனை செய்கிறார்‌ என்றே கொள்ளவேண்டும்‌.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard