Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தெய்வம் - அந்தணர் - வானத்தவர்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
தெய்வம் - அந்தணர் - வானத்தவர்
Permalink  
 


ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்

தெய்வத்தோ டொப்பக் கொளல்குறள் 702: குறிப்பறிதல்.  
மணக்குடவர்உரை:பிறர் நினைத்ததனை ஐயப்படுதலின்றித் துணிந்து அறியவல்லாரைத் தேவரோடு ஒப்பக் கொள்க.
ஐயப்படாமல் அடுத்தவனின் மனத்தில் உள்ளதை உணர வல்லவனை (அவன்  மனிதனே ஆனாலும்தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்.         குறள் 1023: குடிசெயல்வகை.
மணக்குடவர் உரை:குடியை யோம்புவனென்று கருதி முயலுமவனுக்குத் தெய்வம் மடிதற்றுக் கொண்டு தான் முற்பட்டு முயலும்மடிதற்றல் - தொழில்செய்வார் ஆடையை இறுக உடுத்தல்.
தன் குடியையும் நாட்டையும் உயர்வடையச் செய்திட ஓயாது செயல் செய்யும்  ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்



-- Edited by admin on Monday 21st of February 2022 10:53:45 AM

__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

தென்புலத்தார்தெய்வம்விருந்தொக்கல்தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.                 குறள் 43: இல்வாழ்க்கை.
மணக்குடவர்உரை:பிதிரர்தேவர்புதியராய் வந்தார்சுற்றத்தார்தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கைதனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒருகூறு அரசற்குக் கொடுத்து ஒழிந்தவைந்து கூறினுந் தான் கொள்வது ஒரு கூறென்றற்குத் தன்னையு மெண்ணினார்இது தலையான இல்வாழ்க்கை வாழும் வாழ்வு கூறிற்றுஎன்னைஇவையெல்லா மொருங்கு செய்யப்படுதலின் மேற்கூறிய அறுவரும் விருந்தினது வகையினரென்று கொள்ளப்படுவர்.
முவரதராசன்உரை:தென்புலத்தார்தெய்வம்விருந்தினர்சுற்றத்தார்தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
கலைஞர்உரை:வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல்வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல்விருந்தோம்பல்சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்.
சாலமன்பாப்பையாஉரை:இறந்து தென்திசையில் வாழ்பவர்தேவர்கள்விருந்தினர்சுற்றத்தார்தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.                 குறள் 50: இல்வாழ்க்கை.
மணக்குடவர்உரை:இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன்இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.
முவரதராசன்உரை:உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன்வானுலகத்தில் உள்ள தெய்வமுறையில் வைத்து மதிக்கப்படுவான்.
சாலமன்பாப்பையாஉரை:மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன்பூமியில் வாழ்ந்தாலும்வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.                 குறள் 55: வாழ்க்கைத் துணைநலம்.
மணக்குடவர்உரை:தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய்எல்லாத் தெய்வமுந் தன்கணவனென்றே கருதிஅவனை நாடோறுந் தொழுதெழுமவள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.
முவரதராசன்உரை:வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!.
சாலமன்பாப்பையாஉரை:பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவிபெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.                    குறள் 619: ஆள்வினையுடைமை. 
மணக்குடவர் உரை:புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும்இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது
ஊழின் காரணத்தால் ஒரு செயல் நமக்கு உதவ முடியாது  போனாலும்முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும்

  செம் தண்மை பூண்டு ஒழுகலான் - குறள் 3:10
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
  நின்றது மன்னவன் கோல் - குறள் 55:3
 
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
  பிற ஆழி நீந்தல் அரிது - குறள் 1:8

மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
  பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4

செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
  நல் விருந்து வானத்தவர்க்கு - குறள் 9:6


சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
  வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு - குறள் 2:8
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
  வானம் வழங்காது எனின் - குறள் 2:9
ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்
  வானம் நணியது உடைத்து - குறள் 36:3
முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி
  ஒல்லாது வானம் பெயல் - குறள் 56:9
வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு
  வீழ்வார் அளிக்கும் அளி - குறள் 120:2

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
  உயர்ந்த உலகம் புகும் - குறள் 35:6

  சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
  வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு - குறள் 2:8
இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள்
  அமை ஆர் தோள் அஞ்சுபவர் - குறள் 91:6
வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
  தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று - குறள் 2:1

உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு
  அமிழ்தின் இயன்றன தோள் - குறள் 111:6

 அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
  சிறு கை அளாவிய கூழ் - குறள் 7:4

 அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்
  அல்லார் முன் கோட்டி கொளல் - குறள் 72:10

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்

  தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 5:10
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
  செத்தாருள் வைக்கப்படும் - குறள் 22:4
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
  இறை என்று வைக்கப்படும் - குறள் 39:8
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
  அலகையா வைக்கப்படும் - குறள் 85:10


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard