Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ச்ன குதாராவிலுள்ள பொ.யு.ஐந்தாம் நூற்றாண்டு ஆடல்வல்லான்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
ச்ன குதாராவிலுள்ள பொ.யு.ஐந்தாம் நூற்றாண்டு ஆடல்வல்லான்
Permalink  
 


 

294568707_754246752556192_16363797866771

   Nataraja  Gupta – 5th Century A.D. – Nachna, Madhya Pradesh

நச்ன குதாராவிலுள்ள பொ.யு.ஐந்தாம் நூற்றாண்டு ஆடல்வல்லானின் சிற்பம்உடைந்த நிலையில் இருப்பினும் இங்கே டோல ஹஸ்தமாக வலக்கரத்தை இடப்புறத்தே வீசும் வண்ணம் வடிக்கப்பட்டுள்ளதை காணுங்கள்குப்தர்கள் காலத்திலேயே நடன கோலத்தில் எம்பெருமான் வடிக்கப்பட்டதற்கு முக்கியமான தரவு இச்சிற்பமே.

காதணியும் பிற்காலத்தை ஒட்டிய நடைமுறையின்றி வலக்காதில் பத்ரகுண்டலமும் இடது காது மடலினில் ஸ்படிக குண்டலமும் அணிவிக்கப்பட்டுள்ளது விந்தையிலும் விந்தை...
Siva Nataraja of Nachna Panna, MP, 400-499 CE, Purple Sandstone. Note Patrakundla in right ear and Sphatiga Kundala in left ear. The right normal arm is swung across his chest as seen from the position of his shoulders. One hand on right side shows Abhaya Mudra.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: ச்ன குதாராவிலுள்ள பொ.யு.ஐந்தாம் நூற்றாண்டு ஆடல்வல்லான்
Permalink  
 


IMG_20220801_163312.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

170px-Tomb_of_Darius_I_Image_of_Darius_I
 
காதணியும் பிற்காலத்தை ஒட்டிய நடைமுறையின்றி வலக்காதில் பத்ரகுண்டலமும் இடது காது மடலினில் ஸ்படிக குண்டலமும் அணிவிக்கப்பட்டுள்ளது விந்தையிலும் விந்தை...
Siva Nataraja of Nachna Panna, MP, 400-499 CE, Purple Sandstone. Note Patrakundla in right ear and Sphatiga Kundala in left ear. The right normal arm is swung across his chest as seen from the position of his shoulders. One hand on right side shows Abhaya Mudra.
Image from VMIS Gallery

பூமரா கோயில் அல்லது பர்குலீஸ்வரர் கோயில் (இக்கோயிலை பூமரா கோயில்பூப்பரா கோயில்பூம்ரா கோயில் என்றும் அழைப்பர்) (Bhumara Temple, sometimes called Bhumra or Bhubhara), இது கிபி 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டின் குப்தர்கள் காலத்து இந்து கற்கோயில் ஆகும். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கபப்ட்ட இக்கோயில் மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான சத்னா நகரத்திற்கு தென்மேற்கில் 40 கிமீ தொலைவில் உள்ளது.[3][2][4]சதுர வடிவில் அமைந்த இக்கோயில் ஒரு மண்டபத்துடன் கூடியது.[5]தற்போது இக்கோயிலின் பெரும்பகுதிகள் சிதிலமடைந்து உள்ளது. இக்கோயில் சுற்றுப் பிரகாரங்களைக் கொண்டது. இக்கோயிலின் கருவறையின் நுழைவாயிலில் கங்கை மற்றும் யமுனா தேவிகளின் சிற்பங்கள் கொண்டுள்ளது.[1][6] இக்கோயில் கருவறையின் ஒருமுக சிவலிங்கம் குப்தர்களின் கலைநயத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

 

Bhumara Temple, sometimes called BhumraBhubhara or Bharkuleswar, is a 5th or 6th-century Gupta era Hindu stone temple site dedicated to Shiva near Satna, in the Indian state Madhya Pradesh.[4][3][5] The temple has a square plan with a sanctum and Mandapa.[6] While much of it is in ruins, enough of the temple structure and works of art have survived for scholarly studies. The temple is notable as one of the early examples of an architecture that included an enclosed concentric pradakshina-patha (circumambulation path). Like other early Gupta era Hindu temples, it includes a decorated entrance to the sanctum flanked by Ganga and Yamuna goddesses, and intricately



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

எலிபெண்ட்டா குடைவரையில்

292975723_3030861403830075_4163202634978

இராஷ்டிரகூடரின் காலத்தைச் சார்ந்த மும்பையின் புறநகர்ப்பகுதியான கரபுரி என்னும் எலிபெண்டா தீவுகளின் மகோன்னதமான ஆடல்வல்லானைப்பற்றி விவரித்திருந்தது

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

நடராஜரின் தாண்டவக்கோலம் பதின்மூன்று அடி அகலமும் பதினொன்று அடி உயரமும் உள்ள புடைப்புச் சிற்பமாக மேற்கு சுவற்றின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளதுநிருத்தமூர்த்தியாக கருதப்படும் இவர் பெரும்பாலும் சேதமுற்றவரேஇவரது எட்டு கரங்களில் பலவற்றைக் காணவில்லைலலித கரணத்தில் நடனமிடும் இவரின் இடுப்பிற்கு கீழே உள்ள பெரும்பகுதிகளையும் காணவில்லைவலக்கரம் ஒன்றில் தூக்கிப்பிடிக்கப்பட்ட பரசுவில் வளைந்து நெளிந்து தொங்கும் நாகம் நம்மை வியப்புற வைக்கிறதுஇடது கரம் ஒன்றினில் தனது உத்தரீயத்தின் ஒரு பகுதியை தூக்கி பிடித்தவாறும் இந்த சிற்பத்தில் காண்பித்துள்ளனர் ( இத்தகு பாணி இன்னும் நிறைய சிற்பங்களில் நம்மால் காண முடிகிறதுஒருவேளை இதுவே பின்னாளில் சோழஅரசர்களின் காலத்தில் செப்புப்படிமங்களில் இடது தோளின் மீது வடிக்கப்படும் உத்தரீயத்திற்கு முன்னோடியோ தெரியவில்லைஆயினும் எனக்கு அப்படியும் இருக்கலாம் என்று ஊகிக்கத்தோன்றுகிறது ). பிற கரங்களுள் வலது முன் கரம் டோலஹஸ்தமாக இடப்புறமாக வீசி ஆடும் வண்ணம் காணப்படுகிறதுஇவரது வலது துடையின் மேலெழும்பிய பகுதி வலது முழங்காலை மடித்து லலித கரணமாகவே வைத்திருப்பதை நமக்கு உணர்த்துகின்றதுஸ்தித பாதமாக இருக்கவேண்டிய இடது கால் முழுவதிலும் முற்றாக சேதமடைந்து இடுப்பு பகுதியிலிருந்தே இல்லாதது மிகவும் வருந்தத்தக்க ஒன்றுஇவரைச்சுற்றி உள்ள மேற்பகுதிகளில் பிரம்மாவிஷ்ணுஇந்திரன்அரம்பையர் முதலானோர் இருக்க பிருங்கியும் கணேசரும் இந்திரனும் கார்த்திகேயனும் இவரது வலப்பக்கத்தில் காட்சி தருகிறார்கள்ஈசனின் இடப்பக்கம் அம்பிகையும் பரமனின் களி நடனத்தைக் காணஇருபுறமும் சேடியரும் பூதகணங்களும் பிற இருடியரும் சுரர்களும் படை சூழபிரபஞ்ச இயக்கத்தைதனது தாள லய ஸ்ருதிகளுடன் பரமேஸ்வரன் நிருத்த மூர்த்தியாக தரிசனம் அளிக்கிறார்என்னே சிற்பிகளின் கற்பனை வளம்என்னே அவர்தம் சீரிய பணிஎத்துணை நேரம் நோக்கினும் சலிக்காத ஆனந்த காட்சியல்லவா இதுஇதுவன்றோ நமது பிறவிப்பேறுஇதைக்காணத்தானே நாவுக்கரசர் கயிலையை நோக்கி மெய் தேய கடும் பயணம் செய்தார்ஈசனால் அம்மை என அழைக்கப்பட்ட காரைக்கால் கண்ட கனிஅமுதம் பரமனின் பேரானந்தத்தருளினால் ஆலங்காட்டிலேயே இக்காட்சியை தரிசனம் செய்ய நேர்ந்ததுஇந்த காணுதற்கரிய காட்சியை காணவல்லோ புலிக்கால் முனிவரும் பதஞ்சலி மகரிஷியும் தில்லை வனக்காட்டில் கடுந்தவம் செய்து இறைவனடி ஏகினர்... 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard