Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் மொழிபெயர்ப்புகள்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
திருக்குறள் மொழிபெயர்ப்புகள்
Permalink  
 


  Nathaniel Edward Kindersley Specimens of Hindoo Literature London (W. Bulmer and Co.) 1794 Selections—Verse Made the first ever translation of the Kural text into English in a chapter titled 'Extracts from the Teroo-Vaulaver Kuddul, or, The Ocean of Wisdom' in his book Specimens of Hindoo Literature[30] Not translated.

Francis Whyte Ellis Thirukural on Virtue (in verse) with Commentary Madras 1812 (reprint 1955) Selections—Mixed Incomplete translation—only 120 couplets translated, 69 in verse and 51 in prose

French

பிரெஞ்சு176718
AnonymousKural de Thiruvalluvar, SelectionsParis1767Selections

Latin

 

லத்தீன்17303
Constanzo BeschiThirukural (Books I and II)London1730Partial—Prose

German

ஜெர்மன்18038
August Friedrich CaemmererThirukural waith German TranslationLeipzig1803



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

திருக்குறள் மொழிபெயர்ப்புகள்

தேமொழி

Oct 15, 2022

siragu kural1

வாழ்வியல் நெறிகளின் களஞ்சியமான திருக்குறள் தமிழ் இலக்கியங்களுள் மிகவும் அதிக மொழிபெயர்ப்புகள் கண்ட இலக்கியம். ஈரடிகளும் ஏழு சொற்களும் கொண்ட 1,330 குறள் வெண்பா செய்யுள்களில்அறம், பொருள், இன்பம் என்ற முப்பால் பகுப்புகளில் தமிழரின் மெய்யியலை வள்ளுவர் வழங்கியிருக்கிறார். உலகில் பலருக்கும், எக்காலத்திலும் பயன் தரும் நெறிகளாக இருப்பதாலும், பாடல்களின் கவிநயத்தாலும் பலராலும் விரும்பப்பட்டுப் பல மொழிகளிலும் திருக்குறள் கருத்துகள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட எந்த ஒரு சமயக் கோட்பாடுகளையும் முதன்மைப்படுத்தாத வள்ளுவத்திற்கு மற்ற சமய நூல்கள் போன்ற ஆதரவு பெற்ற பரப்புரை வாய்ப்புகள் இருந்ததில்லை. கடந்த கால தமிழக அரசர்களும் கூட திருக்குறளை முதன்மைப்படுத்தி தங்களுக்குப் பெருமை சேர்த்துக் கொண்டதில்லை.

கற்றோர் தமிழராக இருந்தாலும், அல்லது அவர் அயலாராக இருந்தாலும் குறளின் அறிமுகம் கிட்டிய பிறகு, குறளின் சிறப்பினால் கவரப்பட்டு குறளை பலகாலம் கடத்தியும் பிறமொழிகளில் பரப்பியும் வந்துள்ளனர். திருக்குறளின் பரந்துபட்ட வளர்ச்சிக்கு ஐரோப்பியர்களின் இந்திய வருகையே காரணமாக இருந்தது என்றால் அது மிகைப்படுத்துதல் இல்லை. சமயம் பரப்ப வந்த ஐரோப்பியக் கிறித்துவ சமயப் பரப்புரையாளர்களும், ஆட்சிப் பொறுப்பேற்ற மற்ற பிற ஐரோப்பியர்களும் சமயம் கடந்த நோக்குடன் திருக்குறளை அணுகிய பொழுது திருக்குறளால் கவரப்பட்டு அதைப் பலர் அறியச் செய்யும் முயற்சியில் இறங்கினர். அவர்கள் காலத்தில் அறிமுகமாகியிருந்த அச்சு இயந்திரங்களும், அச்சு நூல் வடிவில் குறளை வெளியிட வேண்டும் என்ற ஆர்வமும் 19 ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு திருக்குறளைப் பொதுமக்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தது.

மொழிபெயர்ப்புகளை வகைப்படுத்துதல்:

முதன்முதலில் 1812-ம் ஆண்டு அச்சுக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து அச்சில் உள்ள நூலாகத் திகழ்கிறது திருக்குறள். அத்துடன், உலகின் அதிகமாக, இன்றைய கணக்கின்படி 46 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பண்டைய படைப்புகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. பெரும்பாலும் திருக்குறள் மொழிபெயர்ப்புகளை வகைப்படுத்துகையில் இந்திய மொழிகளில் திருக்குறள், ஐரோப்பிய மொழிகளில் திருக்குறள், ஆசிய மொழிகளில் திருக்குறள் என்று வகைப்படுத்துவது வழக்கமாக உள்ளது.

கமில் சுவெலபில் தாம் மேற்கொண்ட ஆய்வுப்படி, 1975-ம் ஆண்டின் முடிவில் திருக்குறள் 20 மொழிகளுக்குக் குறையாமல் மொழிபெயர்க்கப்பட்டிருந்ததாகத் தனது நூலில் குறிப்பிட்டிருந்தார். இந்த 2022 ஆம் ஆண்டின் கணக்குப்படி; 46 மொழிகளில், 210 மொழி பெயர்ப்புகள் வரை திருக்குறள் வெளியாகியுள்ளது. 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை தரமணியில் இயங்கிவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 58 பழங்குடியின மொழிகள் உட்பட 102 மொழிகளில் மொழிபெயர்க்கத் துவங்கிவிட்டதாக அறிவித்துள்ளது. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் ஒவ்வொரு மொழிக்கும் முதல் மொழிபெயர்ப்பு ஆண்டு, எத்தனை மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன என்ற தகவல்களையும் காணலாம்.

இந்திய மொழிகளில்: மலையாளம், இந்தி, தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், ஒரியா, வங்காளம், குஜராத்தி, உருது, கொங்கணி, மராத்தி, பஞ்சாபி, மணிப்பூரி, ராஜஸ்தானி, சௌராஷ்டிரா, வாக்ரி போலி, சந்தாலி ஆகிய 17 மொழிகளிலும்,

ஐரோப்பிய மொழிகளில்: ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், ரஷ்யன், இலத்தீன், போலிஷ், செக், டேனிஷ், டச்சு, ஃபின்னிஷ், இத்தாலியன், நார்வேஜியன், ஸ்வீடிஷ், போர்த்துகீசியம், ஸ்பானிஷ், ஹங்கேரியன், கிரேக்கம் ஆகிய 17 மொழிகளிலும்,

ஆசிய மொழிகளில்: அரபு, மலாய், சீனம், ஃபிஜியன், ஜப்பானியம், கொரியன், சிங்களம், பர்மியம் , தாய், கரோ, இந்தோனேசியம், கம்போடியம் ஆகிய 12 மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்ப்புகள் வெளியாகியுள்ளன.

பிறமொழியில் குறளின் மொழிபெயர்ப்பு என்றால் இதுவரை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் மலையாள மொழியில் திருக்குறள் முதலில் 1595 ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மலையாள மொழியில் குறளின் 16 ஆம் நூற்றாண்டு மொழிபெயர்ப்பு நூல் ஓலைச்சுவடியாகக் கிடைத்திருக்கிறது. இருப்பினும், இந்தியமொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு 19 ஆம் நூற்றாண்டில்தான் அதிக எண்ணிக்கையில் வெளியாகத் துவங்கின. இந்திய மொழிகளிலேயே மலையாளத்தில்தான் அதிக எண்ணிக்கையில் திருக்குறள் 16 முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்ட முதல் ஐரோப்பிய மொழி இலத்தீன் மொழியாகும். திருக்குறளை 1730 ஆம் ஆண்டு இலத்தீனில் மொழி பெயர்த்தவர் வீரமாமுனிவர் என்று தமிழர்களால் அறியப்படும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi, 1680 — 1747) என்ற இத்தாலிய நாட்டுக் கத்தோலிக்க கிறித்தவ சமயப் பரப்புரையாளர். இவர் குறளின் காமத்துப்பால் பகுதி சமய பரப்புரையாளர் படிக்க ஏற்றதல்ல என்ற கருத்தைக் கொண்டிருந்ததால், குறளின் அறம், பொருள் பிரிவுகளை மட்டும் மொழி பெயர்த்துவிட்டு, காமத்துப்பாலைத் தவிர்த்து விட்டார்.

ஐரோப்பிய மொழிகளில் ஆங்கிலத்தில்தான் திருக்குறள் அதிக முறையாக 69 முறை மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நதானியேல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி (Nathaniel Edward Kindersley) என்பவரால் 1794 இல் ஆங்கிலத்தில் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது. அவர் ஒரு சில குறள்களை மொழிபெயர்த்துத் தான் எழுதிய ‘ஸ்பெசிமென்ஸ் ஆஃப் இந்து லிட்ரேச்சர்’ (Specimens of Hindoo Literature) என்ற நூலில், ‘எக்ஸ்ட்ராக்ட்ஸ் ஃப்ரம் தி திருவள்ளுவர் குறள்’ (Extracts from the Teroo-Vaulaver Kuddul, or, The Ocean of Wisdom) என்ற தலைப்பு கொண்ட அத்தியாயத்தில் கொடுத்திருந்தார்.

பின்னர், பிரான்சிஸ் வைட் எல்லிஸ் (Francis Whyte Ellis), 1812 ஆம் ஆண்டு தான் எழுதிய ‘திருக்குறள் ஆன் விர்ச்யூ வித் கமெண்ட்டரி’ (Thirukural on Virtue (in verse) with Commentary) 120 குறள்களை மொழிபெயர்த்து வெளியிட்டார். தொடர்ந்து, 1840ஆம் ஆண்டில் வில்லியம் ஹென்றி ட்ரூ (William Henry Drew) முதல் 630 குறட்பாக்களை மொழிபெயர்த்து வெளியிட்டார். பின்னர், 1885 ஆம் ஆண்டில் ஜான் லாசரஸ் (John Lazarus) விடுபட்ட பகுதியை மொழிபெயர்த்ததுடன், வில்லியம் ஹென்றி ட்ரூ மொழிபெயர்த்தவற்றையும் மேம்படுத்தி திருக்குறள் மொழிபெயர்ப்பை முழுமையாக்கினார். சார்லஸ் கோவர்(Charles E. Gover) 1872 ஆம் ஆண்டில் ஒரு சில குறள்களையும், எட்வர்ட் ஜூவிட் ராபின்சன் (Edward Jewitt Robinson) 1873ஆம் ஆண்டிலும் காமத்துப்பால் தவிர்த்துப் பிற பகுதிகளையும் எனக் குறளின் முழுமையுறாத ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டனர்.

இவ்வாறு முழுமையற்ற வகையில் பகுதி மொழிபெயர்ப்புகளாக வெளிவந்து கொண்டிருந்த திருக்குறள் மொழிபெயர்ப்புகளுக்குப் பிறகு, முதல் முறையாகத் தனி ஒரு மொழிபெயர்ப்பாளரால் முழுமையாக ஜி.யு. போப் அவர்களால் 1886ஆம் ஆண்டில் திருக்குறள் ‘எ கலெக்க்ஷன் ஆஃப் தி இங்லீஷ் டிரான்ஸ்லேஷன் ஆஃப் திருக்குறள்’ (A Collection of the English Translation of Thirukural) என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டது. ஜி.யு. போப் செய்த மொழிபெயர்ப்பு உலக அளவில் திருக்குறளைக் கொண்டு சேர்த்தது. அவருக்குப் பிறகு பிறகு 30 ஆண்டுகள் கழித்து வ. வே. சு. ஐயர் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார். கே. எம். பாலசுப்பிரமணியம், சுத்தானந்த பாரதியார், ஆ. சக்கிரவர்த்தி, மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, சி. இராஜகோபாலசாரி எனப் பலர் திருக்குறளை அதன் பிறகு முழுமையாகவோ அல்லது பகுதி மொழிபெயர்ப்புகளாகவோ வெளியிட்டனர். இவ்வாறுமுழுமையாகவோ, பகுதி மொழிபெயர்ப்பாகவோ 69 திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்புகள் 2022 ஆண்டு வரை வெளியாகியுள்ளது. இவற்றில் 37 மொழிபெயர்ப்புகள் முழுமையானவை.

மொழிபெயர்ப்புகள் குறித்த மதிப்பீடுகள்:

திருக்குறளுக்கு உரை எழுதுவோரின் பண்பாட்டுப் பின்னணி அவரது உரைகளில் எதிரொலிப்பது போல, மொழிபெயர்ப்பாளர்களின் பண்பாட்டுப் பின்னணியும் மொழிபெயர்ப்புகளில் எதிரொலிப்பது உண்டு. மொழிபெயர்ப்புகள் செய்யுள் வடிவிலோ, அல்லது உரைநடையாகவோ அல்லது இரண்டும் கலந்த வகையிலோ அமைவதும் உண்டு. ஆரம்பக் கால திருக்குறள் மொழிபெயர்ப்புகள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களால் பிறிதொரு மொழியிலோ, அல்லது அயல் மொழிக்காரர்கள் தமிழ் கற்றறிந்து தங்கள் மொழியில் மொழி பெயர்ப்பதாகவோ அமைந்து வந்தது. ஜி.யு. போப் ஆங்கில மொழிபெயர்ப்பிற்குப் பிறகு, ஆங்கிலத்திலிருந்து பிறமொழிகளுக்கு மொழிபெயர்ப்பது அதிகரித்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில்தான் குறள் பல தெற்காசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இவற்றில் சில அதுவரை வெளிவந்த குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தழுவியே செய்யப்பட்டவை ஆகும்.

திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் அனைத்தும் உரை விளக்கங்களாக மட்டுமே உள்ளன என்று 2015ஆம் ஆண்டு டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகள்“ என்ற பொருண்மையில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் கூறுகின்றன. ஜி.யு.போப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பின் அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ள மொழிபெயர்ப்பு நூல்களைச் சுட்டிக் காட்டியதுடன், இதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்கள் அனைத்தும் மூல நூலுடன் நெருக்கமாக அமைந்துள்ளதே தவிர, அதில் கவிதை நயம் போன்றவை வெளிப்படவில்லை என்றும், திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் அனைத்தும் உரை விளக்கங்களாக மட்டுமே கருத முடியும் ஆய்வாளர்கள் கருதியுள்ளார்கள். இக்கட்டுரைகள் நூல் வடிவிலும் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது.

 “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள்” என்று இடைக்காடரும்

“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள்” என்று ஒளவையாரும்

திருக்குறளின் பொருள் பொதிந்த நுண்மையைப் பாராட்டியுள்ளனர். இச்சிறப்பிற்கு ஏழு சீர்களுக்குள் கூறவந்த அனைத்தையும் அடக்கிவிடும் ஆற்றல் கொண்ட குறள் வெண்பா அமைப்பே காரணம். எனினும் இச்சிறப்பே பிறமொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும் பொழுது மொழி நடையின் அழகு குறையாமல் பாடல் வடிவில் குறளைக் கொண்டு செல்ல சிக்கலாகவும் அமைந்துவிடுவதாகவும் கருதப்படுகிறது.

‘குறள் ஒரு சீர்மை உடையது. தெளிவாக உணர்ந்து அறியத்தக்கது. ஒருமைப்பாட்டினைக் கொண்டிருந்த ஒரு நாகரிகத்தைச் சித்தரித்துக் காட்டும் ஓர் ஒருங்கு இணைந்த ஓவியம்’ என்று திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் ஜி.யு.போப் குறிப்பிடுகிறார். மொழிபெயர்ப்பு முயற்சிகளில் திருக்குறள் தனது கவிதைச் சிறப்பையும் கவர்ச்சியையும் இழந்துவிடுவதாக மொழிபெயர்ப்பாளர்களும் தமிழில் திருக்குறள் அறிந்தவர்களும் உணர்கிறார்கள். குறளின் செய்யுள் அழகையும் பாடலின் கருத்துச் சிறப்பையும் மொழிபெயர்ப்பதைச் சவால் கொண்டதாகவே சுவெலபில் அவர்களும் குறிப்பிடுகிறார். அத்துடன், குறளை மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்வதைக் குறித்துக் கூறுகையில், “நடையழகிலோ சொல்வன்மையிலோ எந்த ஒரு மொழிபெயர்ப்பும் திருக்குறளின் தமிழ் மூலத்திற்கு இணையாக இருக்க இயலாது” திருக்குறள் கூறும் உண்மையான பொருளை எந்த ஒரு மொழிபெயர்ப்பைக் கொண்டும் அறிய முடியாது என்றும் குறளின் தமிழ் மூலத்தைப் படிப்பதன் வாயிலாக மட்டுமே வள்ளுவர் கூறிய ஆழ்பொருளை அறிய முடியும் என்றும் சுவெலபில் கூறுகிறார்.

References:

https://en.wikipedia.org/wiki/Kural

https://en.wikipedia.org/wiki/Tirukkural_translations

https://en.wikipedia.org/wiki/Tirukkural_translations_into_English

https://en.wikipedia.org/wiki/List_of_translators_into_English

https://en.wikipedia.org/wiki/List_of_Tirukkural_translations_by_language



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

முன்னோர் வழிபாடு குறித்த சமூகப்பண்பாட்டு ஆய்வு

தேமொழி

Jan 22, 2022

siragu munnor vazhipaadu

தனது சமூகப்பண்பாட்டு ஆய்வுநூல்கள் வரிசையின் 6ஆவது நூலாக தமிழர்களின் கதிரவன், காலதேவன், நாகர் வழிபாடுகளை விளக்கி ‘முன்னோர் வழிபாடு’ என்ற நூலை எழுதியுள்ளார் முனைவர் செ. இராஜேஸ்வரி. இதற்கு முன்னர் இவ்வரிசையில் பண்பாட்டு நகர்வுகள் தமிழ் நாட்டில் இருந்து ஜப்பானுக்கு, பெண்தெய்வ வழிபாடு, தேவேந்திரன், மருதநிலப் பெண்தெய்வங்கள், இருநிலத்தில் திருமுருகன் போன்ற நூல்களின் மூலம் நமது சமூகப் பண்பாட்டின் பல்வேறு கோணங்களை ஆய்வுக் கோணத்தில் அணுகியவர் முனைவர் இராஜேஸ்வரி. மேலும் மற்றுமொரு சமூகப் பண்பாட்டுப் புலத்தை ஆய்வு கோணத்தில் அணுகி அவர் அறிந்ததை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒரு சிறந்த முயற்சி.

தமிழர்களின் பொங்கல் வழிபாட்டுக்கும், இந்தியர்களின் வழிபாட்டுக்குரிய கடவுளாகவும் கதிரவன் இடம் பெற்றிருந்தது என்ற விளக்கங்களையும் கடந்து, கதிரவன் வழிபாடு ஒரு வேளாண் சமூகத்தின் இயற்கை வழிபாடாகத் துவங்கி உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகளில் உள்ள பண்டைய வழிபாட்டில் இடம் பிடித்தது என்பதைச் சான்றுகள் காட்டி விளக்குகிறார். நிறுவனமயமான பெருஞ்சமயங்கள் மக்களைக் கவரும் நோக்கில் கதிரவன் வழிபாட்டை எவ்வாறு தங்களுக்குள் உள்வாங்கிக் கொண்டன என்பதன் மூலம் உலகம் முழுவதும் மனித இனம் வழிபாட்டு முறைகளின் பரிணாம வளர்ச்சி ஒரேகோட்டில் சென்றுள்ளது என்பதை நாம் அறிய முடிகிறது.

இயற்கை வழிபாட்டில், வளமையின் அறிகுறியாக நாகத்தை உலகம் முழுவதும் பழங்குடியினர் வழிபட்டுள்ள ஒற்றுமை என்பதும் தொன்மையானது. பழங்குடித் தமிழர்கள் நாகர்கள் என அழைக்கப்பட்டது தொன்மை மரபு. பிடாரன் பிடாரி என அழைக்கப்பட்ட நாக இனத் தெய்வங்கள் பின்னர் தமிழர் மண்ணில் சிவனாகவும், காளியாகவும் உருமாற்றம் பெற்றனர் என்பதையும்; நாக வழிபாட்டில் காணப்பெறும் பற்பல நம்பிக்கை அடிப்படையிலான வழிபாடுகளையும் சடங்குகளையும் நூலின் மூலம் அறிய முடிகிறது.

காலத்தைக் கணக்கிட்டு வாழ்க்கையை முடித்துவைக்கும் காலன் அல்லது எமன் என்ற கருத்தாக்கத்திற்கு இணையான உருவாக்கமும் வழிபாடும் சடங்குகளும் கூட உலகம் முழுமையும் தொல்குடிகளிடம் வழங்கி வந்துள்ளமையைக் காண முடிகிறது. காலனின் பண்பு, சார்பு நிலையற்று அறத்தின் அடிப்படையைக் கொண்டதாகவும் எங்கும் கருதப்பட்டுள்ளது. மறைந்த தங்கள் முன்னோர்களையே குலதெய்வங்களாகக் கருதி வழிபட்ட முன்னோர் வழிபாடும் உலகம் முழுமையும் தொல்குடிகளிடம் உண்டு என்பதையும், தொல்காப்பியத்திலும் அது குறித்த செய்திகள் இருப்பதையும் நூலில் தொகுத்துள்ளார் முனைவர் செ. இராஜேஸ்வரி.

“மக்கள் முக்கிய நிகழ்வுகளை தொன்மக் கதைகளின் மூலம் சமயத்தில் வைத்துப் பாதுகாக்கின்றனர்” என்றும் “கருத்தியல்கள்தான் வண்ணத்தையும் வடிவத்தையும் தெய்வங்களுக்கு அளிக்கின்றன” என்றும் ஆசிரியர் இந்நூலில் சமயவழிபாட்டின் சாரத்தைக் குறிப்பிடுவது மக்களின் வழிபாட்டு முறைகளைச் சுருக்கமாக சுட்டுகிறது எனலாம்.

அச்சத்தின் காரணமாகவோ அன்பின் காரணமாகவோ, அல்லது கைவிட மனமற்ற பழக்க வழக்கங்களின் காரணமாகவோ தொன்றுதொட்டு வழிவழியாக வந்த மரபு வழிபாடுகளும் அவற்றின் சடங்குகளும், இந்நாட்களில் அறிவியல் விளக்கங்களுக்குப் பிறகு மதிப்பிழக்கும் நிலை பகுத்தறிவு பாதையில் நிகழும் இயல்பான ஒரு மாறுதல். ஆனால், எதனையும் எவரையும் நிலையில் உயர்த்துவதற்கோ, அல்லது அவர்களைத் தரம் தாழ்த்தும் ஒரு நிலைக்குத் தள்ளுவதற்கோ அவர்கள் மீது தங்களின் நோக்கத்திற்கு தக்கவாறு கதைகள் புனையப்பட்டால் போதுமானது. சாதாரண மக்களை அப்புனைவுகள் சென்றடைந்துவிட்டால் குறிக்கோள் நிறைவேறிவிடும் என்பது வழிபாட்டின் வரலாற்றின் மாறுதல்களுக்கு மற்றொரு காரணமாகவும் நிறுவன சமய வளர்ச்சியின் அடிப்படையாகவும் இருந்துள்ளது. இவற்றின் ஊடே மக்களும் தங்கள் பண்டைய வழிபாட்டு முறைகளைக் காலத்திற்கு ஏற்ப மாற்றினாலும் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து கொண்டிருப்பதும் வியப்பளிக்கிறது.

இவ்வாறாக வழிபாட்டுக் கருத்தாக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும், மறைவும் என்பதன் அடிப்படையைத் தெளிவாக அறிந்தவருக்கு நூல் முழுவதும் அதற்கான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. விளக்கங்களுடன் அவற்றுக்கேற்ற படங்களும் கைகோர்த்து நூலைச் சுவைமிக்கதாக மாற்றியுள்ளது. முன்னோர் வழிபாடுகளைப் பற்றிய பண்டைய தொன்மக் கதைகளையும் குறிப்புகளையும் கொண்ட தொகுப்பாகவும் உருவெடுத்துள்ள இந்த நூல், மானுடவியல் கோணத்தில் வழிபாட்டின் வளர்ச்சியையும் பரவலையும் அறிய விரும்புவோருக்கு இன்றியமையாத நூலாகும்.

மொழிபெயர்ப்பு நூல்கள், கவிதைத் திறனாய்வு நூல்கள், சிறுகதைகள், எம். ஜி. ஆர். பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் என்று தொடர்ந்து 40 நூல்களுக்கும் குறையாமல் ஏறக்கனவே பலநூல்களை வெளியிட்டு தமது எழுத்துப்பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் முனைவர் செ. இராஜேஸ்வரி இந்த நூலின் மூலம் சமூகப்பண்பாட்டுக் களத்தில் அரிய தகவல்கள் தரும் மற்றொரு நூலை அளித்துள்ளது பாராட்டத்தக்கது.

நூல் விவரம்:

தலைப்பு: முன்னோர் வழிபாடு

நூலாசிரியர்: முனைவர் செ. இராஜேஸ்வரி

பொருண்மை: சமூகப்பண்பாட்டு ஆய்வு

விலை: ரூ. 200

வெளியீடு: – மே 2021, சந்திரோதயம் பதிப்பகம்

3/422, திருவள்ளுவர் தெரு, தினமணி நகர், மதுரை-18.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard