Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இல்வாம்வோர்‌ கடமை


Guru

Status: Offline
Posts: 7329
Date:
இல்வாம்வோர்‌ கடமை
Permalink  
 


இல்வாம்வோர்‌ கடமை

அனைவரிடத்திலும்‌ அன்புடன்‌ பழகுதல்‌; புதிதாக வரும்‌ விருந்தினர்க்கு உணவிட்டு உதவி செய்தல்‌; எப்பொழுதும்‌ இனிய சொற்களையே இயம்புவது; பிறர்‌ செய்த நன்றியை மறவாமல்‌ மனத்தில்‌ வைத்திருப்பது; நீதிக்கு மாறாக நடக்காமல்‌ நடுநிலைமையிலே நடப்பது; கெட்ட வழியிலே செல்லாமல்‌ நல்ல வழியிலே அடங்கி நடப்பது; எந்த நெருக்கடி நேர்ந்தாலும்‌ நல்லொழுக்கத்தைக்‌ கைவிடாமல்‌ வாழ்வது; பிறர்‌ புரியும்‌ தீமைகளைப்‌ பொறுத்துக்‌ கொள்வது; பிறர்‌ வாழ்வைக்‌ கண்டு பொறாமைப்‌ படாமல்‌, தாம்‌ முன்னேறுவதற்கு முயல்வது;மற்றவர்களை அவர்கள்‌ இல்லாத இடத்திலே பழித்துப்‌ பேசாமல்‌ இருப்பது; தீமைகளைக்‌ கண்டு அஞ்சி அவைகளைச்‌ செய்யாமல்‌ இருப்பது; பலர்க்கும்‌ உதவி செய்வதன்‌ பெருமையை அறிந்து அவ்வழியிலே நடப்பது; வறியோர்க்கு உதவி செய்து அவர்கள்‌ துன்பத்தைத்‌ தீர்ப்பது; எல்லோரும்‌ புகழும்படி. சிறந்த செயல்‌களைச்‌ செய்து வாழ்வது; இவைகள்‌ எல்லாம்‌ இல்லறத்தில்‌ உள்ளோர்‌ செய்யவேண்டியவை; பின்பற்ற வேண்டியவை. இவைகள்‌ அண்களும்‌ பெண்களும்‌ பின்பற்ற வேண்டியவைகள்‌. ஆயினும்‌ வள்ளுவர்‌ இவற்றை அண்களுக்குக்‌ கூறுவது போலவே சொல்லுகிறார்‌.

இல்லாதவர்‌ பின்பற்றுவது எப்படி?

இல்லறத்தில்‌ இப்போர்‌ யற்றவேண்டிய௰ கடமை இல்லறத்தில்‌ இரு இயற்ற டிகளில்‌ குறிப்பாகச்‌ சிலவற்றை மட்டும்‌ கழே காணலாம்‌.

“துறந்தார்க்கும்‌ துவ்வா தவர்க்கும்‌ இறந்தார்க்கும்‌

இல்வாழ்வான்‌ என்பான்‌ துணை

இல்லறத்திலே வாழ்கின்றவன்‌, துறவிகளுக்கும்‌ உணவின்றி வருந்தும்‌ வறியோர்களுக்கும்‌, அதரவின்றி இறந்தவர்களுக்கும்‌ துணையாவான்‌.” (ஞெ.42)

தென்‌ புலத்தார்‌ தெய்வம்‌ விருந்துஒக்கல்‌ தான்‌ என்று ஆங்கு

ஐம்புலத்து ஆறுஒம்பல்‌ தலை.

முன்னோர்கள்‌ (பிதிரர்‌) தெய்வம்‌, விருந்தினர்‌ (அதிதிகள்‌) சுற்றத்தார்‌, தான்‌, என்னும்‌ இந்த ஐந்து இடத்தில்‌ உள்ளவர்‌களையும்‌, அறநெறிப்படி காப்பாற்றுவது இல்வாழ்விலே இருப்பவனுடைய தலை சிறந்த கடமையாகும்‌” (கு.43)

“இருந்து ஓம்பி இல்வாழ்வது எல்லாம்‌, விருந்து ஓம்பி

வேளாண்மை செய்தற்‌ பொருட்டு

இல்லறத்திலே இருந்து செல்வங்களைப்‌ பாதுகாத்து இல்லறம்‌ நடத்துவதெல்லாம்‌, விருந்தினரைப்‌ பாதுகாத்து, அவர்களுக்கு உதவி செய்யும்‌ பொருட்டே யாகும்‌” (ஞ.81)

இல்லறத்தார்க்குச்‌ சொல்லப்படும்‌ இம்மூன்று குறள்‌ களையும்‌ நன்றாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்‌. இக்குறள்‌ களின்‌ கூற்றை அறங்களை - இந்நாட்டில்‌ உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும்‌ இன்று பின்பற்றி நடக்க முடியுமா? இந்‌ நாட்டு மக்கள்‌ இதற்கேற்ற வாழ்க்கை வசதி பெற்று வாழ்கின்றார்களா?

இடமும்‌, பொருளும்‌ இருந்தால்‌ தான்‌ துறவிகளுக்குத்‌ துணை செய்ய முடியும்‌; வறுமையுள்ளவர்களுக்கு வழங்க முடியும்‌. இறந்தவர்களுக்கு ஆவன செய்ய முடியும்‌.

முன்னோர்களை வழிபடுவதற்கும்‌, தெய்வத்தைப்‌ பணிவதற்கும்‌, விருந்தினரைப்‌ பேணுவதற்கும்‌, சுற்றத்தாரைப்‌ பாதுகாப்பதற்கும்‌, தன்னைத்‌ தான்‌ காத்துக்‌ கொள்ளுவதற்கும்‌ பொருளும்‌ இடமும்‌ வேண்டும்‌. இவைகள்‌ இல்லாமல்‌ என்ன செய்ய முடியும்‌2

வறியவர்கள்‌ அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு முடியாமல்‌ அவதிப்படுகின்றனர்‌. மக்கள்‌ சமுதாயத்தில்‌ பெரும்‌பாலோர்‌ வறியவர்கள்தாம்‌. இவர்கள்‌ விருந்தினரைப்‌ பேணுவது எப்படி?

வள்ளுவர்‌ காலத்திலே வறியவர்கள்‌ வாழ்ந்தனர்‌; தந்நதலங்‌ கருதாத துறவிகள்‌ இருந்தனர்‌; ஆதரவற்று அலைவோரும்‌ இருந்தனர்‌; இவர்களைக்‌ காப்பாற்றும்‌ பொறுப்பு இல்லறத்‌தார்க்குரியது என்பதே முன்னோர்‌ கொள்கை. இக்கொள்கையையே வள்ளுவரும்‌ ஒப்புக்கொண்டு உரைத்தார்‌.

“தந்தைகயாக இருப்பவன்‌ தன்‌ மகனைப்‌ படிக்க வைப்பதே மகனுக்குச்‌ செய்யும்‌ முதற்‌ கடமை” என்ற வள்ளுவர்‌ குறளை மனத்திலே மறவாமல்‌ வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. இதை மறவாத ஓவ்வொரு தந்தையும்‌ மகனைப்‌ படிக்க வைக்கவே முயற்சி செய்வான்‌. இப்படி, ஒவ்வொருவரும்‌ முயற்சி செய்வார்‌களானால்‌ வெற்றி காண்பார்கள்‌. தங்கள்‌ பிள்ளைகளைப்‌ படிக்க வைக்கும்‌ பொறுப்பை அரசாங்கம்‌ ஏற்றுக்‌ கொள்ள வேண்டும்‌ என ஒன்றுபட்டு வற்புறுத்துவார்களானால்‌ நிறை வேறாமற்‌ போகாது. இத்தகைய சிறந்த கடமைகளை வலியுறுத்துகிறார்‌ வள்ளுவர்‌.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard