Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பண்டைத் தமிழ்நாட்டில் பிராமணியம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
பண்டைத் தமிழ்நாட்டில் பிராமணியம்
Permalink  
 


பண்டைத் தமிழ்நாட்டில் பிராமணியம்

அத்திவெட்டி வே.சிதம்பரம்  பிரிவு: செம்மலர் - ஆகஸ்ட் 2009 

இந்திய சமூக, அரசியல் வரலாற்றில் பிராமணியம் மிக முக்கியமான இடத்தைப் பெற்று வந்துள்ளது. தமிழக வரலாற்றில் இன்றுவரை பிராமணியம் பிரச்சனைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிராமணியத்தின் தோற்றம் பற்றி அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. பண்டைத் தமிழகத்தில் பிராமணியம் கால் கொள்ளத் தொடங்கியதை சங்க இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சங்க இலக்கியங்களில் பிராமணர்கள், அந்தணர், பார்ப்பனர், முனிவர், நான்மறையாளர், இரு பிறப்பாளர் என்று அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பிராமணர்களின் தோற்றம் பற்றி வரலாற்றுப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் ``ஆரிய வாழ்க்கை முறையைத் தென்னிந்தியாவில் பரப்புவதற்காக ஒரு பேரியக்கம் தொடங்கியது.'' (தென்னிந்திய வரலாறு பக்கம்) என்று கூறி விட்டு மேலும் அவர் ``தென்னிந்தியா ஆரிய மயமாவதற்கு ஏழெட்டு நூற்றாண்டுகள் ஆயின. அந்த நீண்ட காலத்தில் ஆரிய வாழ்க்கை முறை சிறிது சிறிதாக வேரூன்றியதன் பயனாகத் தென்னிந்தியாவில் ஒரு புதிய பண்பாடு தோன்றி வளர்ந்தது'' (பக். 127) என்று கூறுகிறார். இந்தப் புதிய பண்பாடு ஏன் தோன்றியது? தமிழ்ச்சமூகத்தில் அதற்கான தேவை என்ன? என்பவை ஆய்வுக்குரியவை.

தமிழக வரலாற்றினை ஆய்வு செய்த அறிஞர்கள் பிராமணர்களின் புதிய பண்பாடு பற்றி சில குறிப்புகளை கூறியுள்ளனர். பிரிட்டிஷ் ஆய்வாளர் J.R.Marr ``சங்கத் தொகை நூல்களில் பிராமணர்களின் வழக்கங்கள் புராணக் கடவுள்களின் கதைகள் குறிப்பிடப்படுவதிலிருந்து தமிழ்ச்சமூகத்தில் இந்தோ ஆரியரின் ஊடுருவல் எந்த அளவுக்கு இருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. (The Eight Anthologies பக். 457) என்று குறிப்பிடுகிறார்.

அமெரிக்க பேராசிரியர் ழுநடிசபந.டு.ழயசவ ``பிராமணர்கள் நீண்ட காலத்திற்கு முன் வட இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள்.'' (The Poems of Ancient Tamil 155) என்று கூறுகிறார். ஆனால் பேராசிரியர் கே.கே.பிள்ளை ``பிராமணர்கள் எல்லோரும் ஆரியர்கள் அல்ல, தமிழகத்தில் இருந்த ஒரு பிரிவினர் பிரமாணர்களாக மாறினர் என்பது பிராமணர்களில் `வடமா' என்ற பிரிவு இருப்பதிலிருந்து தெரிகிறது.'' (Aryan Influence in Tamilaham during sangam Ephoch) என்று மாறுபட்ட கருத்தைக் கூறியுள்ளார். ஆனால் George L.Hart பிரமாணர்கள் எல்லோரும் வடநாட்டிலிருந்து வந்தவர்கள்தான். தமிழ்நாட்டில் உள்ளவர் பிராமணராக மாறினர் என்ற கருத்து தவறு என்று மறுக்கிறார். அதற்குக் காரணமாக அவர் கூறுவதாவது:- ``பிராமணர்கள் தமிழ்நாட்டின் பழமையான கருத்தான தெய்வீக புனிதம் (Sacred) என்பதுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அதிலிருந்து தங்களை விலக்கி வைத்துக் கொண்டனர். அதனால் தாங்கள் களங்கப்பட்டு விடாமல் பார்த்துக் கொண்டனர்'' (பக். 55) இக்கருத்து மேலும் ஆய்வுக்குரிய ஒன்றாகும்.

தமிழக வரலாற்றில் சங்க காலம் என்று அறியப்படுகிற காலம் கி.மு. முதல் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையான கால கட்டமாகும். இந்த காலகட்டத்தில் தமிழ்ச்சமூகம் அடிப்படையில், குல மரபுக்குழுச் சமூகமாக (Tribes) இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த குழுச் சமூகத்திலிருந்து அரசு (STATE) என்ற அமைப்பு உருவான காலகட்டத்தைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன என்று பேராசிரியர் க.கைலாசபதி ஒரு கருதுகோளை (HYPOTHESIS) முதலில் வெளியிட்டார். கைலாசபதி கூறுகிறார். ``சான்றோர் இலக்கியம் காட்டும் தமிழர் சமுதாயம் நாகரிக உலகின் நுழைவாயிலிலே நிற்கும் சமுதாயமாகும். கிறிஸ்து சகாப்தம் தொடங்குவதற்கு ஏழெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழக வரைப்பிலே நூற்றுக்கணக்கான குலமரபுக்குழுக்கள் (Tribes) சிதறிக் கிடந்தன. நூற்றுக்கணக்கான குலங்களிலிருந்து காலப்போக்கிலே தமிழகத்தில் மூன்று அரசுகள் உருவாகின. முடியுடை வேந்தர் தலை தூக்கினர். தமிழகம் நாகரிக உலகில் நுழைந்தது. அதாவது அரசு தோன்றியது'' (பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் பக்கம் 24, 25) பேராசிரியர் கைலாசபதியின் இந்த கருதுகோளை உறுதிப்படுத்துகிறார் பேராசிரியை ரொமிலா தாப்பர் ``For the Tamils this was period of evolution from tribal chief tainships to kingdoms” (A History of India Pg-105).

பேராசிரியர் கைலாசபதி இந்த கருதுகோளை வெளியிட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை விரிவான ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. குழுச்சமூகத்தில் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு என்பது ஏற்படவில்லை. குழுவில் எல்லோரும் சமம். தனிச்சொத்து என்ற எதுவும் அந்தக் காலத்தில் கிடையாது. சமூகத்தில் தனிச்சொத்துடைமை என்பதும் அதன் காரணமாக மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு என்பதும் அதன் உச்சமாக `அரசு' என்ற அமைப்பும் உருவானது வரலாற்றின் மிக முக்கிய ஒரு கட்டமாகும். தமிழக வரலாற்றிலும் குழு நிலையிலிருந்த சமூகம் சிதைவடைந்து அரசு அமைப்பு தோற்றம் கொள்ளும்பொழுது சமூகத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது என்பதற்கு சங்க இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

தமிழக வரலாற்றில் தோன்றிய புதிய அரசும், அதன் அடிப்படையான உயர்குடிமக்களும் தங்களின் புதிய வாழ்க்கை முறையை அங்கீகாரம் செய்ய ஒரு புதிய கோட்பாட்டை எதிர்நோக்கினர். இந்தப் புதிய தேவையை நிறைவு செய்ய தமிழகத்தில் பிராமணர்கள் தங்களின் புதிய பண்பாட்டைப் புகுத்தினர். பிராமணிய பண்பாட்டின் தோற்றத்தை அரசின் தோற்றத்துடன் இணைத்து புதிய கருத்தை உருவாக்கியவர் பேராசிரியர் கோசாம்பி. ``பிராமணியத்தின் வளர்ச்சி என்பது குழு சமுதாயத்தில் அரசனை தலைமையாகக் கொண்ட வர்க்கங்களின் தோற்றத்தைக் குறிப்பதாகும்'' என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். (An Introduction to the study of Indian History - 122).

கோசாம்பி பொதுவாக வரைவு செய்த இந்தக் கருத்து தமிழக வரலாற்றிற்கும் பொருந்தி வரும் ஒன்றாகும். தமிழ்ச் சமூகத்தில் அரசு தோன்றுவதற்கான சூழலை முதலில் பார்ப்போம். இது பற்றிய ஓர் அறிமுக ஆய்வினை பேராசிரியர் கா.சிவத்தம்பி செய்துள்ளார். தனது ``Organization of Political Authority in early Tamilnadu'' என்ற கட்டுரையில் தமிழகத்தில் அரசு உருவாக்கம் பற்றி அறிவதற்கு முதற்படியாக அது பற்றிய சொற்களை ஆய்வு செய்து விளக்கியுள்ளார். இக்கட்டுரை அரசின் தோற்றம், வளர்ச்சி பற்றி விரிவாக ஆய்வு செய்வதற்கான ஒரு நுழைவுவாயிலை அமைத்துத் தந்துள்ளது.

பேராசிரியர் சிவத்தம்பி தனது மேற்கண்ட கட்டுரையில் அரசு உருவாவதற்கு அடிப்படையாக உள்ள காரணங்களைப் பல்வேறு ஆய்வாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தொகுத்துத் தந்துள்ளார். அதில் முக்கியமானவை. (1) உற்பத்திப் பெருக்கம்- அதன் மூலம் உபரி உருவாக்கம் (2) சமூகத்தில் ஏற்றத் தாழ்வான மக்கள் பிரிவினர் உருவாதல், (3) பண்ட மாற்றுக்குப் பதிலாக வணிகம் வளர்ச்சியடைதல், (4) தனிச்சொத்துடைமை - இவை அரசு உருவாவதற்கு அடிப்படை அமைவனவாகும்.

பேராசிரியர் சிவத்தம்பி தனது Drama in Ancient Tamil Society நூலில் தமிழ்நாட்டில் அரசு உருவாக்கம் பற்றி மேலோட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். அதில், தனிச்சொத்துடைமை அடிப்படையில் நிலவுடைமை சமுதாயம் (Fudalism) தோன்றியதால் அரசு தோன்றியது என்ற வாய்பாட்டைக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் நிலவுடைமை சமுதாயம் தோன்றியது மிகப்பிந்திய காலத்தில் ஆகும். சங்க காலத்தில் நிலவுடைமைச் சமுதாயத்திற்கான சிறு தோற்றமே ஏற்பட்டிருந்ததாகவே கொள்ள முடியும். அரசு தோன்றுவதற்கான முக்கிய அடிப்படைக் காரணிகளில் ஒன்றான உபரி உற்பத்தி என்பதும் கூட பெருஅளவில் ஏற்பட்டு விடவில்லை. உள்நாட்டு வணிகத்தை விட வெளிநாட்டு வணிகத்தின் மூலமே அதிக செல்வம் சேர்ந்தது. இந்த செல்வம் நகரங்களில் புதிய மக்கள் பிரிவை உருவாக்கியது. பாசன வசதி பெற்ற நதிக்கரை பிரதேசங்களில் விவசாயத்தில் உபரிச் செல்வம் ஒரு சிலர் கைகளில் சேர்ந்தது.

தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகள் நதிக்கரைகளிலேயே உருவாயின. உலகம் பூராவுக்கும் இந்த விதி பொதுவானது ஆகும். பட்டினப் பாலை, மதுரைக்காஞ்சி முதலியவற்றில் நகரங்களில் வாழ்ந்த செல்வந்தர்கள் வாழ்க்கை நிலைமை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வாழ்ந்தோர் பெரும்பாலோர் மிக ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்தனர் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. சமுதாயத்தில் ஏற்பட்ட இந்த ஏற்றத்தாழ்வு அரசு உருவாவதற்கான காரணத்தைத் தந்தது. குழு நிலையில் வாழ்ந்த சமுதாயத்தில் ரத்த உறவுடைய குழு உறுப்பினர் என்ற நிலைக்குப் பதிலாக அரசு உருவான பின் நில எல்லையில் வாழும் நாடு என்ற கருத்து உருவானது. மேலும் தனியான படை என்ற அமைப்பும் உருவானது. குழு சமூகத்தில் தனியான படை கிடையாது. குழு உறுப்பினர் அனைவரும் ஆயுதம் தாங்கிப் போரிட்டனர்.

சங்க இலக்கியத்தில் `படை' என்ற சொல் வரும் இடங்களைக் கூர்ந்து கவனித்தால் `படை' சேர, சோழ, பாண்டிய அரசர்களிடம் மட்டுமே இருந்த உண்மை புலப்படும். மற்றக் குழுத் தலைவர்களான வேளிர், சீறூர் மன்னர்களிடம் படை இருந்ததாக அறிய முடியவில்லை. மேலும் `படைஞர்' என்ற சொல் சங்க இலக்கியத்தில் ஒரே ஓர் இடத்தில் மட்டும் (பதிற்றுப் பத்து 25) குறிப்பிடப்படுகிறது. `படைஞர்' என்ற சொல் நிரந்தரப் படையின் உறுப்பினர் என்று பொருள் கொண்டதாகக் காணப்படுகிறது. மேலும், குமரிப்படை தழீய கூற்று வினையாடவர் (புறநானூறு 294) என்றும் ``நின் படைகொள் மாக்கள்'' *(புறம் 29) என்றும் படைவீரர்கள் குறிப்பிடப்படுகின்றனர். மேற்குறிப்பிட்ட படை வீரர்கள் மூவேந்தரின் படை வீரர்களே. நிரந்தரப்படை என்பது அரசு என்ற அமைப்புடன் இணைந்த ஒன்று. இது சங்க காலத்தில் உருவாகத் தொடங்கி விட்டதை அறிய முடிகிறது.

சங்க இலக்கியத்தில் `வேந்தர்' என்ற சொல் சேர, சோழ, பாண்டியர்களை மட்டுமே குறித்தது. மேலும் `வம்வேந்தர்' என்ற சொல் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது. இது புதிய `வேந்தர்' என்ற பொருளைக் குறிக்கிறது. வேந்தர்கள் புதிதாக உருவானவர்கள் என்பதையே இந்தச் சொல் குறிக்கிறது எனலாம். மேலும் வேந்தர்களுக்கு மட்டும் குடை, முரசு, முடி உரியது என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

புதிதாக உருவான அரசு அதன் தலைமையில் உள்ள அரசன். இதன் நிலைபேற்றை உறுதிப்படுத்த சடங்குகள், வேள்விகள் செய்யப்பட்டன. இத்தகைய வேள்விகளை முன்னின்று நடத்தியவர்கள் பிராமணர்கள். குழுநிலைச் சமுதாயத்தில் பிராமணர்களுக்கு இடம் இல்லை. சங்க இலக்கியத்தில் குழுத் தலைவர்கள் வேள்வி செய்ததாகவோ அல்லது பிராமணர்களைக் கொண்டு வேறு சடங்குகள் செய்ததாகவோ ஒரு குறிப்பும் இல்லை. பெரும்பான்மையான மக்களுக்கும், பிராமணர்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. பெரும் அரசர்களாகக் குறிப்பிடப்பட்ட சேர, சோழ, பாண்டியர்களே வேள்வி செய்தனர். அவர்கள் அவைகளிலே பிராமணர்கள் இடம் பெற்றனர்.

பிராமணர்கள் பற்றி சங்க இலக்கியம் கூறுவனவற்றை தொகுத்து நோக்கலாம். சங்க இலக்கியத்தில் பிராமணர்கள் அந்தணன், பார்ப்பான், நான்மறையாளன், முனிவன் என்று குறிப்பிடப்படுகின்றனர். பிராமணன் என்ற சொல் குறிப்பிடப்படவில்லை. பிராமணர்கள் வேதம் அறிந்தவர்கள். அதனைத் தினந்தோறும் ஓதுபவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.

``அறம்புரி கொள்கை நான்மறை முதல்வன்''- புறம் 93

ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை

நான்மறை முதல்வர் சுற்றமாக'' - புறம் 26

அந்தணர் வேதம் ஓதுதலை வண்டுகளின் ரீங்காரத்துடன் ஒப்பிட்டு,

``தாதுண் தும்பி போது முரன்றாங்கு

ஓதல் அந்தணர் வேதம் பாட'' - மதுரை காஞ்சி 655, 656

என்று கூறப்பட்டுள்ளது.

வேதம் அறிந்தமை பிராமணர்களின் தனிச்சிறப்பு. தமிழ்ச்சமூகத்தில் வேறு யாரும் வேதம் அறிந்திருந்ததற்கான குறிப்பு ஏதும் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை.

பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.

``ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்

ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்

அறம் புரி அந்தணர்'' - (பதிற்றுப்பத்து 24)

என்று குறிப்பிடப்படுகின்றனர். இதுவும் பிராமணர்களின் தனித்தன்மைச் செய்கைகளாக குறிப்பிடப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது. மேலும் `பிராமணர்கள் அந்திக்காலத்தே, தீயை வளர்ப்பர், தம் கடமையைச் செய்வர்.

``அந்தி அந்தணர் அயர'' - குறிஞ்சிப்பாட்டு 225

அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்

முத்தீவிளக்கிற்றுஞ்சும் - புறம் 2

பிராமணர்கள் வேள்வி நடத்தி வைத்த செயல் சங்க இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

``நெய்மலி ஆவுதி பொங்கப் பன் மாண்

வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி

யூபம் நட்ட வியன்களம் பவகொல்'' - புறம் 15

``வேத வேள்வி துறை முடித்தூ உம்'' - புறம் 224

``வேள்வி முற்றிய கேள்வி அந்தணர்க்கு

அருங்காலம் நீரோடு சிதறி''

``அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்

ஆவுதி நறும்புகை'' - பட்டினப்பாலை 54, 55

வேள்வி செய்விக்கும் சிறப்பு பிராமணர்களுக்கு மட்டுமே இருந்தது. வேறு யாரும் வேள்வி செய்வித்தாகக் குறிப்பு இல்லை.

பிராமணர்கள் தனியாக வாழ்ந்தனர். அங்கு நாய், கோழி போன்றவை இல்லை என்று குறிப்பிடப்படுகிறது. கிளிகளுக்கு வேதம் சொல்லிக் கொடுத்தனர் என்ற செய்தி கூறப்படுகிறது.

``பைஞ்சேறு மெழுகிய படிவ நன்னகர்

மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது

வளைவாய்க்கிள்ளை மறைவிளி பயிற்று

மறை காப்பாளர் உறை பதி'' - பெரும்பாணாற்றுப்படை 298-301

அந்தக் காலத்திலேயே அக்ரகாரங்கள் தமிழகத்தில் தோன்றி விட்டன என்பதை இது தெரிவிக்கிறது.

பிராமணர்களுக்கும், அரசர்களுக்கும் உள்ள தொடர்பு பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

``பார்ப்பார்க்கல்லாது பணி பறியலையே'' (பதிற்றுப்பத்து 63) என்று சேரவேந்தனை சிறப்பித்து கூறப்படுகிறது. பார்ப்பனருக்கு அரசர்கள் எவ்வளவு முக்கியத்துவம் அளித்தனர் என்பது இதனால் விளங்கும். மேலும் சோழ அரசன் ஒருவன்,

``நின் முன்னோரெல்லாம்

பார்ப்பார் நோவன செய்யலர்'' - புறம் 43

என்று குறிப்பிடப்படுகிறான். பார்ப்பனருக்கு எந்த தீங்கும் அரசர்கள் செய்யமாட்டார்கள் என்ற செய்தி கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. பாண்டிய அரசனுடைய அவையில் பிராமணர் இருந்தனர் என்பதை

``நான்மறை முதல்வர் சுற்றமாக'' - புறம் 26

என்று குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.

பிராமணர்கள் அரசனுக்கு அருகில் இருந்து ஆலோசனை கூறி அவனை வழி நடத்தும் இடத்தில் செல்வாக்குடன் இருந்தனர் என்பது சங்க இலக்கியத்தால் அறியப்படுகிறது. இதனை உறுதி செய்து பேராசிரியர் George L.Hart தனது The Poems of Ancient Tamil என்ற நூலில் ``Brahmins seem to have identified themselves closely with the Kings'' (ஞ-54) என்று கூறுவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

பிராமணர்களுக்கும் புதிதாக தமிழகத்தில் தோன்றிய அரசுக்குமான நெருங்கிய பிணைப்பை உறுதி செய்யும் ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் காணக் கிடக்கின்றன. பிராமணர்களும் அவர்களின் புதிய பண்பாடும், அரசும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் ஆகும். தமிழக வரலாற்றில் சங்க காலத்தை அடுத்து பல்லவர், சோழர் காலங்களில் தமிழ்ச் சமுதாயம் நிலவுடைமை சமுதாயமாக வளர்ச்சியடைந்த பின் அதன் தத்துவமாக பிராமணியம் முழுமை அடைந்து சமூக ஆதிக்கம் பெற்றதை அறிய முடிகிறது.

சங்க காலத்தில் தொடங்கிய பிராமணிய தத்துவ வளர்ச்சியுடன் சமஸ்கிருத மொழியும் தமிழ்ச்சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. பல்லவ, சோழர் ஆட்சிக்காலத்தில் சமஸ்கிருத மொழி கோவில்களில் தமிழைப் புறந்தள்ளி ஆதிக்கம் பெற்றது. தெய்வங்களின் பெயர்கள் சமஸ்கிருதமாயின. வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் நிலைபெற்றது. ஆனால் சாதாரண பொதுமக்கள் வழிபட்டு வந்த கிராமப்புறத் தெய்வ வழிபாட்டில் பிராமணர், சமஸ்கிருத ஆதிக்கம் ஏற்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கோயில்கள் சமூக ஆதிக்க நிறுவனமாக செயல்பட்டன. கோயில்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளனவோ அவர்கள் சமூகம் ஆதிக்கம் செலுத்தினர். அரசனை தலைமையாகக் கொண்ட பெரும் நிலவுடைமையாளர்கள் கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பது சோழர் கால கல்வெட்டுக்களிலிருந்து நன்கு தெரிய வருகிறது. சமூகத்தின் இந்த ஆளும் வர்க்கங்களுக்கு பிராமணியம் தத்துவமாக விளங்கியது. சமூக ஆதிக்க சக்திகள் பிராமணர்களையும், சமஸ்கிருத மொழியையும் ஊட்டி வளர்த்தனர்.

பிராமணிய தத்துவத்தின் ஆதிக்கம் இன்று வரை வலுவாக ஆதிக்கம் செலுத்தி வருவது தெரிந்ததே. பிராமணிய மதம் தான் இந்து மதம் என்று பெயர் பெற்றது. இந்து மதம் என்பது இஸ்லாம், கிறிஸ்தவம் போல் உருவாக்கப்பட்ட மதம் அல்ல. பல்வேறு வழிபாட்டு முறைகள் மற்றும் கடவுள்கள் இணைத்த ஒரு கூட்டு உருவாக்கம் ஆகும். இதுபற்றிய ஆய்வு இன்னும் ஆழமாகவும், அகலமாகவும் செய்யப்பட வேண்டும். 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அந்தணர் அந்நியரே! ஆரியரே!

அதிஅசுரன்

“அவன் அடிமை என்பதை அவனுக்கு உணர்த்துங்கள்; அவன் கிளர்ந்தெழுவான்” என்றார் அம்பேத்கர். “நீங்கள் சூத்திரர்கள், சட்டப்படி சாஸ்திரப்படி தேவடியாள் மக்கள்” என்றார் பெரியார். பார்ப்பனர்களால் - அந்தணர்களால் - ஆரியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட மக்களிடம் அவர்களின் அடிமைத்தனத்தை உணர்த்தி, மூளைக்கு இடப்பட்ட விலங்கை உணரவைத்து அவ்விலங்குகளை உடைத்தெறிந்த தலைவர்கள் வடநாட்டில் அம்பேத்கர்; தென்னாட்டில் பெரியார்.

மிகப்பெரும் பண்பாட்டுப் புரட்சியை, சமுதாயப் புரட்சியை அண்மைக்காலத்தில் தம் கண்முன்னே  நம் பெற்றோர்கள் கண்டிருக்கிறார்கள்; நமக்கு முந்தைய தலைமுறை கண்டிருக்கிறது. அந்தப் பண்பாட்டுப் புரட்சியால் வாழ்வுபெற்ற இக்காலத் தலைமுறை தன் இனத்தின் விடுதலை வரலாற்றை முற்றிலும் அறியாமலிருக்கிறது. அதேசமயம்  அடிபட்ட ஆரிய இனம் - அந்தணர் குலம் - பார்ப்பனக் கூட்டம் நம் வரலாற்றின் அடிப்படைகளையே அரிச்சுவடியே இல்லாமல் அழிக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் அடையாளம்தான் சிந்துசமவெளி அல்ல இந்து சமவெளி; சரஸ்வதி பள்ளத்தாக்கு என்ற கதைகளெல்லாம். சங்க பரிவாரங்களின் - சங்கராச்சாரிகளின் இந்த வரலாற்று கரசேவக் பணிகளை தம் தோள்மேல் போட்டு ஏவல்செய்ய தமிழ்நாட்டில் கடும்போட்டியே நடக்கின்றது. அந்த மகாபாரத, மகாவம்சக் கனவுக்காரர்களை நாம் அவ்வப்போது அடையாளம் காட்டித்தான் வருகிறோம்.

தமிழ்த்தேசியத்தின் மாபெருந் தலைவனாக ம.பொ.சியைக் கொண்டு வந்தார்கள். சக தமிழ்த் தேசியரான சுப.வீரபாண்டியன் அவர்களாலேயே ம.பொ.சியின் பார்ப்பன மூளை தோலுரிக்கப்பட்டது. பார்ப்பானுக்கு மட்டுமல்ல, பார்ப்பனக் கொள்ளைக்கு ஆதாரமான இந்திய தேசியக் கொள்ளைக்கும், மார்வாடிக் கூட்டுக்கொள்ளைக்கும் வால்பிடித்தவர்  என அம்பலப்பட்டுப்போனார் ம.பொ.சிவஞானம். ம.பொசியின் அரசியல் அண்மைக்காலத்தில் நடந்தவைதான். எனவே அவற்றிற்கான ஆதாரங்களை யார் வேண்டுமானாலும் உடனே பார்த்துவிடலாம். பார்த்து அம்பலப்படுத்திவிடுவோம். எனவே கொஞ்சம் பின்னோக்கிப் போகிறார்கள். சங்க இலக்கியங்கள், இலக்கணங்கள், வரலாறுகள்  என நமக்குப் புரியாத தளங்களில் களங்களை அமைக்கிறார்கள்.

பார்ப்பான் - பார்ப்பனியம் ஒழியும் வரை இந்த மக்களுக்குத் தலைவன் பெரியார்தான். மக்கள்விடுதலைத் தத்துவம், விடுதலைக் கருவி பெரியாரியல்தான். இது அறிவியல்பூர்வமாக செய்துகாட்டப்பட்ட முடிவு. எனவே பெரியாரை, பெரியாரியலை, திராவிடர் கருத்தியலை அழித்தொழிப்பதே பார்ப்பனருக்கு அவசியமான பணி.  ஆகவே பெரியாரியலுக்கு எதிராக  பார்ப்பன தொல்காப்பியத்தையும், ஆரியக் கைக்கூலி இராஜராஜனையும் சங்க இலக்கியங்கள், வரலாறுகள் போன்ற முட்டுக்களால் தூக்கி நிறுத்திக்கொண்டுள்ள ஒரு கூட்டம் அம்பலப்படுவதை இனி பார்ப்போம்.

“அந்தணர் என்னும் பிரிவினர் தமிழ்ச்சமூகத்தின் அறிவாளர்கள் ஆவர். அரசு உருவாக்கத்தின்போது அரசர்களுக்கான அறிவுரைகள் வழங்கியும்,  மெய்யியல் துறைகளில் ஈடுபட்டும் வந்தவர்கள் அந்தணர்கள் ஆவர். இவர்கள் தமிழர்களே.”

இப்படி ஒரு கண்டுபிடிப்பு ஆர்.எஸ்.எஸ்.ஸின் விஜயபாரதத்தில் வரவில்லை. அவர்களின் ‘ரகஸ்ய கார்யவாஹ்’ செந்தமிழன் தமிழர் கண்ணோட்டம் இதழில் எழுதியுள்ளார். இக்கண்டுபிடிப்புக்கு அவர் ஆதாரம் என்ன தெரியுமா? எதாவது ஒரு கல்வெட்டா?  வரலாற்று ஆய்வறிஞர்களின் கருத்தா? அகழ்வாராய்ச்சி முடிவுகளா? ஆதாரப்பூர்வமான எதுவும் இல்லை. ‘பொய் இருக்குது மலைபோல, புளுகத்தான் நேரமில்ல’ என்னும் பண்பாட்டாளர்களுக்குப் புகலிடம் சங்க இலக்கியங்கள்தானே! பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கிய நூல் ஒன்றில் வரும் பாடல். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் புகழ்ந்து குமட்டூர் கண்ணனார் என்ற பார்ப்பனப் புலவர் பாடிய பாடல் தான் அவர் காட்டும் ஆதாரம். பதிற்றுப்பத்தில் முதல் பத்து இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை. இரண்டாம் பத்தில் முதல் பாடல் அதாவது 21 ஆம் பாடல் என்று வைத்துக் கொள்வோம்.  முழுமையான முதல் பாடல் இதுதான்.

வரை மருள் புணரி வான் பிசிர் உடைய,
வளி பாய்ந்து அட்ட துளங்கு இருங் கமஞ் சூல்
நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி,
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழு முதல் தடிந்த பேர் இசை,
கடுஞ் சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு-
செவ் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப,
அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின்,
மணி நிற இருங் கழி நீர் நிறம் பெயர்ந்து,
மனாலக் கலவை போல, அரண் கொன்று,
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை;
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங் கடம்பின்
கடியுடை முழு முதல் துமிய ஏஎய்,
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர்,
நார் அரி நறவின், ஆர மார்பின்,
போர் அடு தானைச் சேரலாத!-
மார்பு மலி பைந் தார் ஓடையொடு விளங்கும்
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப்
பொலன் அணி எருத்தமேல் கொண்டு பொலிந்த நின்
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்,
ஆரியர் துவன்றிய, பேர் இசை இமயம்
தென்அம் குமரியொடு ஆயிடை
மன் மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே.

இப்பாட்டின் பொருள்,

“காற்று கடலுள் புகுந்து நீரை அள்ளிக்கொண்டு மேகமாக உலவும். முருகப் பெருமான் கடலுக்குள் சூரனை அழித்தபோது கடலே செந்நிறம் பெற்றது. இந்த நெடுஞ்சேரலாதன் மேகம்போல் படையுடன் சென்றான். முருகனைப் போலப் பகைவரைக் கொன்று உப்பங்கழிகளையெல்லாம் குங்குமம் கரைத்தது போலச் செந்நிறமாக்கினான். கடற் கொள்ளையர் கடம்பர் பகையை முடித்தபோது இந்த நிலை. பகைவரை வென்ற சேரன் பகைவரின் காவல் மரமான கடம்பமரத்தை கொண்டுவந்து கடம்ப மரத்தால் தனக்கு முரசு செய்துகொண்டான். இந்த வெற்றிப் பெருமிதத்தோடு யானைமீது வந்த சேரனைக் கண்டு புலவர் வாழ்த்துகிறார்.

முருக்கமரம் பூத்திருக்கும் மலைக்காட்டில் தூங்கும் கவரிமான் வயல் வெளியில் வளர்ந்திருக்கும் நரந்தம்புல்லை மேயக் கனவு காண்பது போல், இமயத்தில் இருந்துகொண்டு குமரியைக் கைப்பற்றக் கனவு கண்டுகொண்டிருந்த ஆரியமன்னர்களையெல்லாம் வென்று அந்த நிலப்பரப்புகளிலெல்லாம் தன் புகழ் பரவும்படி செய்தான்.”

அந்தணர் என்பவர்கள் ஆரியர்கள் இல்லை. அவர்கள் தமிழர்கள் என்பதற்கு தமிழர் கண்ணோட்டம் சொல்லும் ஆதாரம் என்ன தெரியுமா? வடக்கே உள்ள ஆரியர்களை எதிர்த்து நெடுஞ்சேரலாதன் போரிட்டான். அதை குமட்டூர் கண்ணன் என்ற அந்தணர் புகழ்ந்து பாடுகிறார். அதுதான் பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்து என பாடலைக் காட்டுகிறார் செந்தமிழன்.  ஒரு ஆரியனை எதிர்த்து வென்றதை மற்றொரு ஆரியன் புகழ்வானா? புகழமாட்டான். எனவே குமட்டூர் கண்ணன் என்ற அந்தணர் தமிழ்நாட்டு அந்தணர்; ஆரியர்  அல்ல. இதுதான் செந்தமிழனின் கண்டுபிடிப்பு.

மேற்கண்ட பதிற்றுப்பத்துப் பாட்டில் தமக்குத் தேவையான நான்கு வரிகளை மட்டும் வெட்டி எடுத்து அந்த வரிகளுக்கு மட்டும் பொருள் தந்திருக்கிறது தமிழர் கண்ணோட்டம். ஆனால் அந்தப் பாட்டின் தொடக்க வரிகளில் அக்காலத்திலேயே தமிழினம் ஆரியமயப்பட்டுவிட்டது என்பதை நன்றாகவே விளக்கியுள்ளது. முருகக்கடவுள் சூரனை அழித்தபோது என்ற பொருள்படும் வரிகள்தான் முதலில் வருகின்றன.

திணைவழிப்பட்ட நாகரிகக் காலங்களில் கொற்றவையின் மகனாக புரிந்துகொள்ளப்பட்ட முருகன் கடைச்சங்க காலத்திலேயே ஆரிய மயமாகிவிட்டான். பரிபாடல் என்னும் சங்க இலக்கியத்தில் வரும் செவ்வேள் பாடல்களில் அதற்கான ஆதாரங்கள் விரிவாக உள்ளன.

ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ஆர் எயில் ஓர் அழல்-அம்பின் முளிய,
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஓரு வரம் கொண்டு,
.....................................................
.....................................................
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்
பயந்தோர் என்ப, பதுமத்துப் பாயல்;

பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே,
அரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன்,
எரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென,
அறு வேறு துணியும் அறுவர் ஆகி,
ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்!

- பரிபாடல்

கொற்றவையின் மகனாக இருந்த முருகன் இப்பாடல்வழியே சிவபெருமானின் மகனாக உருவெடுக்கிறான். சிவபெருமானின் விந்தணுக்களின் சூட்டைத்தாங்க முடியாத வாயு அதை அப்படியே சரவணப் பொய்கையில் விடுகிறான். அதைக்குடித்த  கார்த்திகைப் பெண்கள் ஆறுபேருக்கு முருகன் பிறக்கிறான். இந்த ஸ்கந்த புராணம் பரிபாடலாக வருகிறது.  ஆரியர்களின் தலைவன் இந்திரன் அசுரர்களுடன் போரிட்டு வெல்லமுடியாமல் போனதால் தேவர்கள் முருகனிடம் முறையிட்டனர். இந்திரனுக்காக அசுரர்களை அழிக்கும் போரில் அசுரர்களை வெல்கிறான் முருகன். அதற்குப் பரிசுதான் ஆரியத்தலைவன் இந்திரனின் மகள் தெய்வானை முருகனுக்கு இரண்டாம் தாரமாக கொடுக்கப்படுகிறாள். காலப்போக்கில் குறிஞ்சி மகளாக அறியப்பட்ட வள்ளி இரண்டாம் இடத்துக்குப் போகிறாள்.

நாம் முதலில் பார்த்த பதிற்றுப்பத்துப் பாடலில் இதுதான் வருகிறது. அசுரர்களை அழித்த முருகனைப் போல... என்று பாடல் தொடங்குகிறது. தேவ அசுரப் போராட்டம் தமிழ்நாட்டு எல்லைக்குள்ளேயே வந்து விட்ட பின்பு -  ஆரியர்களின் தலைவன் இந்திரனின் படைத்தலைவனாக முருகன் மாறிவிட்ட பின்பு வேறு எந்த ஆரியர்களை எதிர்த்து இமயத்துக்குப் போனான் நெடுஞ்சேரலாதன்? அதே பதிற்றுப்பத்து பாடலில் மகாபாரதக் கதையும் வருகிறது. இரண்டாம் பத்தில் நான்காம் பாடலில்

போர் தலைமிகுத்த ஈர் ஐம்பதின்மரொடு
துப்புத் துறைபோகிய, துணிவுடை ஆண்மை,
அக்குரன் அனைய கைவண்மையையே;
அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர், பீடு, அழித்த செருப் புகல் முன்ப!
கூற்று வெகுண்டு வரினும், மாற்றும் ஆற்றலையே;

என்ற வரிகளில் மகாபாரதக்கதையில் வரும் கௌரவர்கள் கர்ணன் பற்றிய குறிப்புகள் உள்ளன.  மேலும் இரண்டாம் பத்தின் பாடப்பெற்ற தலைவனான நெடுஞ்சேரலாதனின் தந்தை உதியஞ்சேரல் என்ற சேர மன்னனைப் பற்றி ஒரு முக்கியச் செய்தி புறநானூற்றுப் பாடலில் வருகிறது. புறநானூற்றில் இரண்டாம் பாடலில்

அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ,
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!

மகாபாரதப் போருக்கு பெருஞ்சோறு கொடுத்தானாம் உதியஞ்சேரல், எனவே அவனுக்கு அதாவது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தந்தைக்கு பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்று பெயரே வந்தது. பதிற்றுப்பத்தும், புறநானூறும் எழுதப்பட்ட கடைச்சங்க காலம் சுமார் கி.பி 2 ஆம்  நூற்றாண்டு. ஆனால் மகாபாரதம் நடந்த கதை என்று ஒரு வாதத்திற்கு ஒப்புக்கொள்வதாக இருந்தாலும், அந்தக் கதை கி.மு 14 ஆம் நூற்றாண்டில் நடந்ததாகவும் - தொகுக்கக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியிருக்க கி.பி 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உதியஞ்சேரல் எப்படி மகாபாரதப் போரின்போது உதவியிருக்க முடியும்? மேலும்

.....அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை......

என்னும் புறநானூற்றின் 378 ஆவது பாடலில் இராமன், சீதை பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

ஆக, ஸ்கந்த புராணம், ஆரியஇந்திரன் வழிபாடு, மகாபாரதம், இராமாயணம் எல்லாம் தமிழர்களிடம் செல்வாக்குப் பெற்ற பின்பு வேறு எங்கு போய் ஆரியர்களை எதிர்க்கிறான் நெடுஞ்சேரலாதன்?

கி.மு 1000 -ஆம் ஆண்டு வாக்கிலேயே ஆரியர்கள் தமிழ்நாட்டுக்குள் ஊடுருவத் தொடங்கி விட்டார்கள். வடநாட்டுப் பார்ப்பனர்கள் கி.முவிலேயே தென்னாட்டு அந்தணர்களோடு திருமண உறவு கொண்டுள்ளனர். ஆயிர கணக்காக நடந்த இக்கலப்புகள் வட - தென் நாடுகளில் வாழ்ந்த பார்ப்பனர்களுக்கிடையே மட்டுமே நடந்தன  என்று ஈழத்து அறிஞர் ந.சி.கந்தையா அவர்கள் தமது ‘தமிழர் சரித்திரம்’ என்னும் நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார். இறுக்கமான  வர்ணாஸ்ரமக் கோட்பாடுகளையும் சாதிப்பிரிவினைகளையும் வாழ்வில் வழுவாது கடைபிடிக்கும் வடபகுதி பார்ப்பனர்கள் தென்னாட்டில் அந்தணர்களுடன் மட்டுமே மணஉறவு, கொள்வினை, கொடுப்பினைகள் வைத்திருந்தனர். தமிழன் வேலாயுதன் முருகனையே தமது தோலாயுதத்தால் வென்ற கதை போல, ஒருசில திணைத்தலைவர்களை, குறுநில மன்னர்களை ஆரியர்களாக, ஆரிய அடிமைகளாக ஆக்குவதற்காக சில வெள்ளைத்தோல் வேள்விகளும் நடந்திருக்கலாம். ஆனால் வரலாற்றில் குறிப்பிடும் அளவுக்கு நடக்கவில்லை. ஆரியர்களின் அகண்டபாரதத்தின் - ஆரியவர்ஷத்தின் இரத்த உறவாக அந்தணர்கள் மட்டுமே இருந்தனர்.

பதிற்றுப்பத்து எழுதிய காலத்திலிருந்து கணக்கு பார்த்தால். அதாவது பதிற்றுப்பத்து காலத்துக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரியர்கள் தமிழ்நாட்டுக்குள் வந்து  கலந்துவிட்டார்கள்.  பதிற்றுப்பத்து காலத்தில் ஆதிக்கத்திற்கே சென்றுவிட்டார்கள். அக்கால இலக்கியங்கள் அவர்கள் வசமாகிவிட்டது. அக்காலத்தில் தமிழர்களின் தெய்வமாக அறியப்படும் முருகன் கதையையே மாற்றிவிடும் அளவுக்கு, முருக வழிபாட்டையே திருத்தி அமைக்கும் அளவுக்கு ஆரியர்கள் சமூக ஆதிக்கத்தில்  உயர்ந்திருந்திருக்கிறார்கள்.

ஆகவே ஆரியர்களுடன் போராடுவது என்றால் அது ஒரு வில்லும் வாளும் ஏந்திய போராட்டமாக இருந்திருக்க முடியாது. தோழர் பெரியார் நடத்தியது போன்ற ஒரு பண்பாட்டுப் புரட்சிதான் நடந்திருக்க வேண்டும். ஸ்கந்த புராணம் கொளுத்தப்பட்டிருக்க வேண்டும். மகாபாரதமும் இராமாணயணமும் எரிக்கப்பட்டிருக்க வேண்டும். பார்ப்பனர்களால் ஏமாற்றிப் பிடுங்கப்பட்ட பிரம்மதேயங்கள் நெடுஞ்சேரலாதனால் கையகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்தணனோ, பார்ப்பானோ, பிராமணனனோ எவனாக இருந்தாலும் உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும். உற்பத்தியில் ஈடுபடுத்தியிருக்க வேண்டும். அதுவே ஆரியர்களுக்கு எதிரான போராட்டம். அப்படி ஒரு திசைநோக்கி நெடுஞ்சேரலாதன் செல்லவில்லை. குமட்டூர் கண்ணன் என்ற பார்ப்பான் அப்படி ஒரு இலக்குநோக்கி நெடுஞ்சேரலாதனை அனுப்பவில்லை.

வடநாட்டில் ஆண்ட ஒரு மன்னரை எதிர்த்து வென்றானாம். அதற்கான எந்த ஆதாரங்களும் எந்த வரலாற்று ஆய்வாளருக்கும் இதுவரை கிடைக்கவில்லை. அப்படி ஒரு போர் நடந்ததற்கான எந்தக் கல்வெட்டையும் எந்த ஒரு பிராமி கல்வெட்டையும் ஆதாரமாக யாரும் காட்டவில்லை.  தமிழ்நாட்டிலோ அல்லது வடநாட்டிலோ பாரதம் கூறும் 56 தேசங்களின் கல்வெட்டுக்களிலோ எங்கும் நெடுஞ்சேரலாதனின் போர் பற்றி ஆதாரம் இல்லை. இப்படி நடக்காத ஒரு போரைக்காட்டி அதில் ஆரியர்களை வென்றான் என கட்டுக்கதையைச் சொல்லியிருக்கிறான் குமட்டூர் பார்ப்பான். அதற்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா? நெடுஞ்சேரலாதன் குமட்டூர் கண்ணன் என்ற தமிழ்(?)அந்தணனுக்கு தனது ஆட்சியிலிருந்த 500 ஊர்களை பிரம்மதேயமாக வழங்கியுள்ளான். அதே பதிற்றுப்பத்தில் பதிகத்துக்கு அடுத்து இந்தக் குறிப்பு உள்ளது.

பிரம்மதேயம் என்பது பார்ப்பனர்களுக்கு - பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகும். மற்றவர்களுக்கு வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.  500 ஊர்களை பிரம்மதேயமாகப் பெற்றவன் பார்ப்பான் தானே? எப்படி தமிழன் ஆனான்?

ஒரு ஆரியனை எதிர்த்ததை மற்றொரு ஆரியன் புகழ்வானா என்கிறார் செந்தமிழன். காஞ்சிபுரத்தில் சங்கரராமன் என்ற பார்ப்பானைக் கொலை செய்த சங்கராச்சாரி தமிழனா? அதே அந்தணன் தானே? அதே பிராமணண் தானே? அதே ஆரியர்களின் தலைவன்தானே? அந்தக் கொலைகாரன் சங்கராச்சாரிப் பார்ப்பானை உள்ளே தூக்கிப் போட்டு அசிங்கப்படுத்திய ஜெயலலிதா தமிழச்சியா? பாப்பாத்தி தானே?

நெடுஞ்சேரலாதன் நடத்திய போருக்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படியே நடத்தியிருந்தாலும் அது ஆரியருக்கு எதிரான சரியான போர் இல்லை. எனவே அப்போரை ஆரியப்பார்ப்பான் குமட்டூர் கண்ணன் புகழ்ந்ததில் வியப்பேதும் இல்லை.

இதோடு நிறுத்தவில்லை செந்தமிழன் அவரது இரண்டாம் கண்டுபிடிப்பு இதைவிடக் கேவலம். குமட்டூர் கண்ணன் ஒரு தமிழ் அந்தணன் என்று முதலில் எழுதுகிறார்.  அடுத்த சில வரிகளில் அவர் அந்தணர் இல்லை. சங்க காலத்துப் பாணர் குலத்தைச் சேர்ந்த தமிழர் என எழுதியுள்ளார். ஒரு பார்ப்பானை தமிழனாக்குவதற்கு இலக்கியங்களை வைத்துக்கொண்டு படாதபாடுபட்டிருக்கிறார். பாவம் இலக்கியங்கள் கூட அவருக்கு கைகொடுக்கவில்லை என்பதைப் பார்ப்போம். கண்ணன் ஒரு பாணர் குலத்தான் என்பதற்கு
செந்தமிழன் தரும் சான்று இதோ,

வயவர் வீழ வாள் அரில் மயக்கி,
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப
உண்மின் கள்ளே! அடுமின் சோறே!
எறிக திற்றி! ஏற்றுமின் புழுக்கே!

என்னும் இரு பாடல்களைக் காட்டுகிறார். இப்பாடலில் “எம் பாணர் மகளிர் அனைவருக்கும் ஒளிவீசும் அணிகலன்கள் வழங்கினாய்” என்ற பொருள்படும் வரிகள் வருகின்றன. இதில் எம் பாணர் என குமட்டூர் கண்ணன் சொல்வதால் அவர் ஒரு பாணர் குலத்தவர் என்கிறார் செந்தமிழன்.

பாணர், பாடினி, விறலியர், கூத்தர் எனப்பட்டோர் சங்ககாலத்தில் இசை மற்றும் ஆடல் பாடல்களில் வல்லவராக இருந்தனர். நல்ல இலக்கியத் தரமான பாடல்களை இயற்றுவதிலும் வல்வராக இருந்தனர். விழாக்காலங்களில் மக்களிடமும், போர் வெற்றி காலங்களில் அரசர்களிடமும் பாடி, ஆடி பரிசில் பெற்று வந்தனர். காலப்போக்கில் செய்யுள்களை இயற்றுவதில் திறன்வாய்ந்த சில புலவர்கள் பாணர்களையும் விறலியர்களையும் உடன் இணைத்துக்கொண்டு ஒரு கலைக்குழுவை உருவாக்கி, கலைக்குழுவோடு மன்னர்களைச் சந்திப்பது என்ற மரபு உருவானது. அதோடு பாணர்களின் பாத்திரங்களை புலவர்கள் தாமே ஏற்றுப் பாடும் மரபும் இருந்தது. இம்முறைகளைப்பற்றி டாக்டர் தமிழண்ணல் அவர்கள் 1969 ஆம் ஆண்டிலேயே தமது முனைவர் பட்ட ஆய்வில் தெரிவித்துள்ளார். அவரது ஆய்வு ‘சங்க மரபு’ என்ற பெயரில் நூலாக அச்சிடப்பட்டுள்ளது.

புறநானூற்றில் ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவர் செருப்பாழி எறிந்த சோழன் இளஞ்சேட் சென்னியைப் புகழ்ந்துபாட தன்னோடு ஒரு கலைக்குழுவையும் அழைத்துச் சென்றதாகப் பாடுகிறார்.

விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்,
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை......
.......அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே,
இருங்குளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே. - புறநானூறு . 378

மேலும் வல்வில் ஓரி என்னும் மன்னன் வேட்டைக்காக காட்டுக்குள் சென்றபோது அதைக் கேள்விப்பட்ட வன்பரணர் என்னும் புலவர் பாணர்கள் அடங்கிய தம் கலைக்குழுவை உடன் அழைத்துச்சென்று  வல்வில் ஓரியைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்றுச் சென்றுள்ளார். அந்தப் பாடல்

வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்,
புழல்தலை புகர்க்கலை உருட்டி, உரல்தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும், - புறநானூறு . 152

இதுபோல பாணர், விறலியர் அடங்கிய கலைக்குழு ஒன்றை உடன் அழைத்துச் சென்றுதான் நெடுஞ்சேரலாதனைப் புகழ்ந்து பாடியுள்ளான் குமட்டூர் பார்ப்பான். அதனால்தான் “எம் பாணர் மகளிர்” எனப் பாடியுள்ளான். ஆகவே பாணர்குலம் வேறு; குமட்டூர் கண்ணன் வேறு. 500 ஊர்களைப் பிரம்மதேயமாகப் பிடுங்கியவன் வரலாற்றின்படி  நிச்சயம் பார்ப்பானே. பாணர்களைத் தம்முடன் அழைத்துச் சென்று நெடுஞ் சேரலாதனை ஏமாற்றி 500 ஊர்களைப் பிடுங்கிக்கொண்டு, பாணர்களுக்கு வெறும் அரிசிச்சோற்றையும், ஆட்டுக்கறிக் குழம்பையும் சில நகைகளையும் கொடுத்துவிட்டு பாணர்களையும் விறலியர்களையும்  ஏமாற்றியிருக்கிறான் குமட்டூர் பார்ப்பான் என்ற உண்மையை திராவிடர்கள் அறியச் செய்த செந்தமிழன் அவர்களுக்கு நன்றி.

அந்தணர்கள் என்னும் பார்ப்பனர்களைத் தமிழர்கள் என உறுதிப்படுத்தத் துடிப்பது அவர்கள்  பல நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திவரும் ஆரியச்சுரண்டலை நிலைநிறுத்தவே, நீடிக்கவே பயன்படும். பார்ப்பன ஆதிக்கம் ஒழியாமல் ஒருவேளை தனிநாடோ, தமிழ்த்தேச தன்னுரிமையோ கிடைத்தாலும் அந்த நிலையிலும் சாதி, தீண்டாமைகள் ஒழியப்போவதில்லை. பூஜை, புணஸ்காரங்கள் குறையப்போவதில்லை. பிறவிச்சுரண்டல்காரர்களான - பிறவிஆதிக்கவாதிகளான - ஒட்டுமொத்த இந்திய ஒருமைப்பாட்டின் சின்னங்களான, காவலர்களான இந்தப் பார்ப்பனக்கூட்டத்திற்கு, தமிழர்கள் - ஒரே இனத்தவர் என்ற அங்கீகாரமும் கிடைத்துவிட்டால் நமக்கு - அதாவது திராவிடத் தமிழர்களுக்கு கிடைக்கும் எந்த உரிமையும், எவ்வகை விடுதலையும் நீடிக்காது.

 உண்மையான இனவிடுதலைக்கு, ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கு எதிரான பார்ப்பனர்களை தமிழர்கள் என அங்கீகரிப்பதற்கு தமிழர் கண்ணோட்டம் ஆதாரமாகத் தந்த இலக்கியப்பாடல்கள் மிகவும் பித்தலாட்டமானது. அறிவியலுக்கும் வரலாற்றுக்கும் முரணானது. அந்தணர்கள் குறித்து சங்க இலக்கியங்கள் சொல்லியுள்ள மேலும் சில செய்திகளைப்பற்றி இனி பார்ப்போம்.     



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 தமிழ் இலக்கண - இலக்கியங்களில் வர்ணாஸ்ரமம்

கோ.இமயவரம்பன்   -  “தமிழனுக்குத் தெளிவான இலக்கியமோ, வரலாறோ இல்லை. இன்று இருக்கும் இலக்கியங் களிலும் கூட கலப்பற்ற “தமிழர் பண்பாடு” என்பது காணமுடியாத ஒன்றாகவே இருக்கின்றது. அவைகளில் பெரிதும் ஆரியக்கடவுள், மதம், சாதிப் பழக்க வழக்கங்கள் கொண்ட கருத்துக்களே பரவலாகக் காணக்கிடக்கின்றன” என்பது தமிழர்தம் ஒரே பாதுகாவலரான தந்தை பெரியார் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மேடைகளில் இலட்சக்கணக்கான மக்கள் முன்பு எடுத்து உரைத்துவரும் கருத்துக்களாகும்.

இக்கருத்துக்களுக்குத் சான்று பகர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். திராவிடர் கழகத்துக் காரர்களுக்கு அதாவது சுயமரியாதைக்காரர்களுக்கு மக்கள் அறிவு வளர்ச்சி பற்றி நாட்டங்கொள்வதே முக்கியம் அன்றி, அறிவைத்தடை செய்யும் வகையில் மொழிப் பற்றோ, இலக்கியப் பற்றோ, நாட்டுப் பற்றோ மற்றும் எந்தப்பற்றோ தேவை இல்லை என்பதே கொள்கையாகும். பகுத்தறிவு உணர்ச்சி யுடன் சுயமரியாதைக் கண்ணோட்டத்துடனுமே சங்க இலக்கியங்களின் தன்மை இந்தக் கட்டுரையில் ஆராயப்பட்டு இருக்கிறது.

நம் தமிழ் நாட்டில் பார்ப்பனர்களின் ஆதிக்கமும் வர்ணாசிரமக் கோட்பாடுகளும் பன்னெடு நாட்களுக்கு முன்னரேயே புகுந்தவிட்டது எனலாம். அகத்தியர் போன்ற ஆரிய முனிவர் தமிழகம் போந்து, தமிழ் கற்று அதன் மூலம் தங்களது நச்சுக் கருத்துக்களை எல்லாம் புகுத்தி இருக்கின்றனர். இன்றைக்கு நமக்குக் கிடைத்துள்ள காலத்தால் முற்பட்ட நூலாகிய தொல்காப்பியத்தில் கூடப் பார்ப்பனர்தம் வர்ணாசிரமக் கருத்துக்கள் காணப்படுகின்றன என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

ஆரியர்களால் ஏற்படுத்தப்பட்ட பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற வர்ணாசிரமப் பிரிவுகள் நான்கும் தொல்காப்பியத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பெயரில் காணப்படுகின்றன. இதனைப் தமிழ்ப்புலவர்கள் “அது எப்படி வர்ணாசிரமப் பிரிவுகளாகும் ! தொல் காப்பியர் கூறும் இந்த நான்கு பிரிவுகளும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டனவே அல்லாது வர்ணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல” என்று வாதிடுகின்றனர்.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் புறத்திணையியலில்,

“அறுவகைப் பட்ட பார்ப்பனர் பக்கமும்

ஐவகை மரபின் அரசர் பக்கமும்

இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும் ”

(74ம் சூத்திரம்)

என வரும் சூத்திரத்திற்கு உரை எழுத வந்த இளம்பூரணர் கருத்தினை ஈண்டு காண்போம்.

அறுவகைபட்ட பார்ப்பனர் பக்கம் : அவையாவன : ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்.

ஐவகை மரபின் அரசர் பக்கம் : ஓதலும், வேட்டலும், ஈதலும், படை வழங்குதலும், குடி ஓம்புதலும் ஆகும்.

வணிகருக்குரிய அறு பக்கமாவன : ஓதல், வேட்டல், ஈதல், உழவு, வணிகம், நிரை யோம்பல்

வேளாண் மாந்தர்க்குரிய ஆறு பக்கமாவக : உழவு, உழவு ஒழிந்த மற்ற தொழில், விருந்தோம்பல், பகடு புறந்தரல், ஏனைய மூவர் வழிபாடு வேதம் ஒழிந்த கல்வி

என்று கூறியுள்ளார்.

பார்ப்பன உரையாசிரியரான நச்சினார்க்கினியரும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் என்பதற்கு ஓதலும், வேட்டலும், ஈதலும், உழவும், நிரை ஓம்பலும், வணிகமும் ஆகிய அறுவகை இலக்கணத்தை உடைய வணிகப் பக்கமும் என்றும் வேதம் ஒழிந்த ஓதலும், ஈதலும், உழவும், நிரை ஓம்பலும், வணிகமும், வழிபாடும் ஆகிய அறுவகை இலக்கணத்தை உடைய வேளாளர் பக்கமும் என்றும் கூறுகின்றனர்.

இதிலிருந்து, நான்காம் வருணத்தனாகிய சூத்திரனுடைய தொழில் பார்ப்பானுக்குத் தொண்டூழியம் செய்வது என்பதைத் தான் உரையாசிரியர்கள் வழிபாடு என்ற பெயரில் குறிப்பிடு கின்றார்கள் என்பதையும், சூத்திரன் வேதத்தைப் படிக்கக் கூடாது என்று மனு நீதி கூறுவது போலவே இவர்கள் நான்காம் பிரிவினரான வேளாளன் வேதம் ஒழிந்த கல்வியைத்தான் கற்க அருகதை உடையவர் என்று கூறவதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.

பண்டிதர்கள் கூறலாம் உரையாசிரியர்கள் செய்த குற்றத்திற்கு நாம் எப்படி தொல்காப்பியத்தையே குறை கூறுவது என்று!

“ மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணங்

கீழோர்க் காகிய காலமும் உண்டே ”

என்ற சூத்திரத்தில் அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூன்று பிரிவினர்களுக்கும் உரியகாரணம் (சடங்குகள்) கீழோர்களாகிய வேளாண் மாந்தர்க்கும் ஆகிய காலமும் இருந்தது என்று குறிக்கின்றார்.

இது மட்டும் அல்ல : தொல்காப்பியத்தில் சிறு தெய்வ வணக்கங்கள், யூபம் நட்ட வேள்வி, அரசனைத் திருமாலுக்கு ஒப்பிட்டுச் சொல்லும் பூவை நிலை போன்ற ஆரியக் கருத்துக்கள் மலிந்துள்ளதை வேறு தனிக் கட்டுரையில் காண்போம். ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் காலமாகிய கடைச் சங்க காலத்திலும், இந்த வர்ணாசிரமக் கொள்கை தமிழகத்தில் நன்கு வேர் ஊன்றி இருந்திருக்கின்றது. அவன் பாடிய புறநானூற்றுப் பாடலிலே,

“ வேற்றுமை தெரிந்த நாற்

பாலுள்ளும்      

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவன்

அவன்  கட்படுமே”

எனக்குறிப்பிட்டுள்ளான். மேலும் கபிலர் போன்ற பார்ப்பனப் புலவர்கள்,

“ யானோ மன்னும் அந்தணன் ” என்று இறுமாப்புடன் கூறிக்கொள்கின்றனர்.

சங்க காலத்தில் இறுதியில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தை அடுத்த படியாக நோக்குவோம்.

கோவலன், கண்ணகியையும் கவுந்தி அடிகளையும் புறஞ்சேரியில் வைத்துவிட்டுத் தான்மட்டும் மதுரை நகர் வீதிகளை எல்லாம் கண்டு மகிழ்ந்து திரும்புவதைக் கூறும் ஊர்காண் காதையில், மதுரை வீதிகளில் விற்கப்படும் ஒன்பது வகை மணிகளைப் பற்றிக் கூறும் பகுதியில் இளங்கோவடிகள் ஒன்பது வகை மணிகளில் ஒன்றான வைரத்தைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிள்றார்.

“ காக பாதமும் களங்கமும் விந்துவும்

 ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா

 நூலவர் நொடிந்த நுழை நுண்கொடி

 நுால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும் ”  

இதற்கு உரை எழுத வந்த உரையாசிரியர்கள் எல்லாம் நால்வகை வருணத்து ஒளியினைக் குறிக்க

“ அந்தணன் வெள்ளை அரசன் சிவப்பு

 வந்த வைசியன் பச்சை சூத்திரன்

 அந்தமில் கருமை என்றறைந்தனர் புலவர் ”

எனவரும் பரஞ்சோதி முனவரின் திருவிளையாடற்புராணத்துத் திருவாலவாய்ப் படலத்தின் (25) செய்யுளை எடுத்துக் காட்டியுள்ளனர்.

இத்துடன் மட்டும் விட்டர்களா? இல்லை. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற இந்நான்கு வருணத்தாரும் தத்தமது வருணத்திற்கு உரிய மணிகளையே அணிய வேண்டும்; அப்படி அணிந்தால்தான் பலவித நன்மைகள் உண்டாகும் என்றும் கூறியுள்ளனர்.

அந்தணர்க்கு ஒப்பான வெள்ளை நிறம் உள்ள வைரத்தை அணிவோர் ஏழ் பிறப்பும் அந்தணராகவே பிறப்பார்களாம்.

“ மறையோர் அணியின் மறையோராகிப்

   பிறப்பேழும் பிறந்து வாழகுவரே ” என்றும்

மன்னர்க்கு ஒப்பாகக் கூறப்படும் சிவப்புநிற வைரத்தை அணிந்தால் அரசர்களுக்கெல்லாம் பேரரசனாக ஏழு பிறப்பும் பிறப்பான்.  

“ மன்னவ ரணியின் மன்னவர் சூழ  

   இந் நில வேந்தவராவர் எழு பிறப்பும் ”  என்றும்

வணிகர்க்கு ஒப்பாகக் கூறப்படும் பச்சை நிற வைரத்தை அணிந்தவர் சிறந்த செல்வராக உலகினில் வாழ்வர்.

“ வணிகர் அணியின் மனிப்பொன் மலிந்து  

  தணி வற வடைந்து தரணியில் வாழ்வர் ”  என்றும்

சூத்திரர்க்கு ஒப்பாகக் கூறப்படும் கறுப்புநிற வைரத்தை அணிந்தால் சிறந்த மனைவி,பொன், நெல், நல்வாழ்வு முதலியன பெற்று இவ்வுலகின்கண் நீடு வாழ்வர்.  

“ சூத்திரர் அணியின் தோகையர் கனக நெல்

   வாய்ப்ப மன்றி மகிழந்து வாழ்கு வரே ”  

என்றும் மேற்கோள்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

மேலும் சிலப்பதிகாரம் அழற்பட்டு காதையில் மதுரை மாநகரில் அந்தணர், சாதிப்பூதம், அரசர் சாதிப் பூதம், வணிகர் சாதிப்பூதம், வேளாளர் சாதிப்பூதம், என்பதாக நான்கு பூதங்கள் இருந்தனவாக இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.

அந்தணப் பூதமாவது: பசுமையான முத்துவடம் அணிந்த நிலவு போல் விளங்கும். மிக்க ஒளியினை யுடைய நான்குமுகன் யாகத்திற்கென உரைத்த வகுப்புகளோடே முத்தீ வாழ்க்கையின் இயல்பினின்றும் பிழையாத தலைமை அமைந்த ஆதிப் பூதமாகிய அந்தணக் கடவுளும்,

“ நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளி

  முத்தீ வாழக்கை முறைமையின் வழா அ

    வேத முதல்வன் வேள்விக் கருவியோடு

ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும் ” என்றும்

அரச பூதத்தை: செவ்விய ஒளியினையுடைய பவளம் போலத் திகழ்கின்ற ஒளியினைப் பொருந்திய மேனியை உடையனாய், ஆழந்த கடல்சூழ்ந்த இவ்வுலகினை ஆளும் மன்னனைப் போல, முரசமும், வெண் கொற்றக் குடையும், கவரியும், கொடியும், புகழமைந்த தோட்டியும், வடித்த வேலும், வடிகயிறும் எனப்படும் இயைபினனாய் அளிவிடற்கரிய சிறப்புக்களையுடைய அரசர்களைப் போரின்கண் தோல்வியுறச் செய்து இந்நிலத்தை தனதாக்கிக்கொண்டு செங்கோலோச்சிக் கொடிய செயல்களை நீக்கி நீதியினை மேற்கொண்டு தன்பெயரை நிறுத்துதற்குரிய புகழினை மிகுந்து உலகின்கண் காக்கின்ற உரை அமைந்த சிறப்பினையுடைய நெடியோன் எனும் பாண்டியனை ஒத்த அதிக வரியினையுடைய அரச பூதமாகிய கடவுளும்

“ பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன்

ஆழக்கடல் ஞாலமாள் வோன் தன்னின்

முரைசோடு வெண்குடை கவரி நெடுங்கொடி

உரைசா லங்குசம் வடிவேல் வடிகயிறு

என இவைபிடித்த கையினன் ஆகி

எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி

மண்ணகம் கொண்டு செங்கோ லோச்சிக்

கொடுந் தொழில் கடிந்து கொற்றங் கொண்டு

நெடும் புகழ் வளர்த்து நானிலம் புரக்கும்

உரைசால் சிறப்பின் நெடி யோன் அன்ன

அரச பூதத்து அருந்திறற் கடவுளும்  ” என்றும்

வணிக பூதத்தை: சிவந்த நிறமுடைய பொன்னை ஒத்த மேனியையுடையனாய் நிலை பொருந்திய சிறப்பினையும் மறம் பொந்திய வேலினையுமுடைய அரசர்க்குரிய தலைமையமைந்த முடிதவிர மற்றையன பூண்ட கலன்களையுடையனாய், வாணிகம் செய்யும் முறையானே பெரிய உலகினை காத்துக் கலப்பையையும் துலாக்கோலையும் ஏந்திய கையினையுடையனாய் உழவுத் தொழிலானே உலகுக் குதவும் குற்றமற்ற வாழக்கைக்குரியோன் எனப்படுவோனாகிய விளங்கும் ஒளியினையுடைய தலை மீது குழவித்திங்களையணிந்த இறைவனது திருவடி போலும் ஒளிமிளிரும் மிகப்பெரிய  வணிக பூதமாகிய கடவுளும்,

“ செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன்

மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர்

அரைசுமுடி யொழிய அமதந்த பூணினன்

வாணிக மரபின் நீள்நிலம் ஓம்பி

நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன்

உழவுத் தொழிலுதவும் பழுதில் வாழக்கைக்

கிழவன் என்போன் கிளரொளிச் சென்னியன்

இளம்பிறை சூடிய இறைவன் வடிவினோர்

விளங் கொளிப் பூத வியன்பெருங் கடவுளும்” எனவும்

வேளாள பூதத்தை: கழுவப்பட்ட நீலமணி போன்ற மேனியனாய் ஒள்ளிய கருநிறஞ் சேர்ந்ந உடையினனாய் , உலகினை ஆளுதற்கேற்ற உழுபடை முதலியவற்றுடன் பொருந்திப் புலவர் பாடுதற் கேற்ற ஈகைத்துறை பலவற்றிலும் முடியச் சென்ற ஆரவாரம் மிக்க கூடற்கண்ணே (மதுரையின் கண்) பலியினைப் பெறும் பூத்த தலைவனென்னும் வேளாண் பூதமும்,

“ மண்ணுற திருமேணி புரையும் மேனியன்

ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன்

ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப்

பாடற் கமைந்த பலதுறை போகிப்  

கலிகெழு கூடற் பலிபெறு பூதத்  

தலை னென்போன் தானுந் தோன்றி ”

என்றும் கூறியுள்ளார்.

சீவக சிந்தாமணியின் நான்கு வருணப் பாம்புகள்:

கி.பி 9ம் நூற்றாண்டில் செய்யப்பட்ட சிந்தாமணியில் பாம்புகளில் கூட நால்வகை வருணங்கள் உண்டென்று கூறப்பட்டுள்ளது. இந்நூலில் சூத்திரர் என்ற சொல்லே வெளிப்படையாக எடுத்தாளப்பட்டிருக்கின்றது.

“ அந்தணண் நாறும் ஆண்பா

லவியினை அலர்ந்த காலை

நந்தியா வட்டம் நாறும்

நகைமுடி அரசனாயின்

தந்துயா முரைப்பிற் றாழைத்

தடமலர் வணிகன் நாறும்

பந்தியாப் பழுப்பு நாறின்

சூத்திரன் பால தென்றான் ”

(பதுமையார் அலம்பகம் 1294-ம் செய்யுள்)

இதன் பொருள்: பாம்பு கடித்த இடத்தில் பசுவின் பாலின் ஆவியின் வாடை நாறினால் அது பார்ப்பனச்சாதிப் பாம்பாகும். நந்தியா வட்டச் செடி மலர்ந்த காலத்தில் நாறும் மணத்தினை வீசுமாயின் அது அரசசாதிப் பாம்பாகும். தாழைமலர் மணம் நாறுமாயின் அது வணிக சாதிப் பாம்பாகும். மற்றொன்றும் கூறாத அரிதாரம் நாறுமானால் அது சூத்திரச் சாதிப் பாம்பாகும் என்று கூறியுள்ளது.

வச்சணந்தி மாலை (வெண்பா பாட்டியல்) கூறும் வர்ணாசிரமம்  

உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும், வல்லெழுத்துக்கள் ஆறும் பார்ப்பன வருணம் என்றும்; த, ந, ய, ர, ப, ம இவ்வாறு மெய்யும் அரச வருணம் என்றும்;  ல, வ, ற, ன இந்நான்கும் வணிக வருணம் என்றும்; தமிழுக்கே சிறப்பெழுத்துக்கள் எனப்பெருமையாகக் கூறப்படும் ழ, ள இவ்விரண்டும் சூத்திர வருணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

நான் முன்பு திருவிளையாடற் புராணத்தில் பார்ப்பான் நிறம் வெண்மை, அரசன் - செம்மை, வணிகன் - பச்சை, சூத்திரன் -கறுப்பு என்று கூறியிருப்பதாகக் கூறினோம். அதுபோலவே இந்நூலிலும் பாக்களுக்கு கூட நிறம் கூறப்பட்டுள்ளது.

வெண்பா - வெண்மை,  ஆசிரியப்பா - செம்மை,  கலிப்பா- பொன்மை, வஞ்சிப்பா - கருமை  

என்று கூறுகின்றது. மேலும் வெண்பா - பிராமண குலமென்றும், ஆசிரியப்பா - சத்திரிய குலமென்றும், கலிப்பா - வைசிய குலமென்றும், வஞ்சிப்பா - சூத்திர குலமென்றும் குலப் பொருத்தங்கள் கூறுகின்றது. அத்துடன் விட்டதா? இல்லை. வெண்பாவால் அந்தணனைப் பாடவேண்டுமாம். ஆசிரியப் பாவால் அரசனைப் பாடவேண்டுமாம். கலிப்பாவால் வைசியனைப் பாடவேண்டுமாம். வஞ்சிப்பாவால் சூத்திரனைப் பாடவேண்டுமாம்.

கலம்பகம் பாடவும் நிபந்தனை:

ஒருவன் கலம்பகம் என்ற நூல் செய்ய விரும்பினால் தேவருக்கு நூறு பாட்டும், அந்தணர்க்குத் தொண்ணூற்றைந்து  பாட்டும்,  அரசர்களுக்குத் தொண்ணூறு பாட்டும், அமைச்சருக்கு எழுபது பாட்டும், வணிகருக்கு ஐம்பதும், சூத்திரனுக்கு முப்பதுமாக பாட வேண்டுமாம். என்னே இக்கால வர்ணா சிரமத்தின் கொடுமை !          

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 சங்க இலக்கியங்களில் பார்ப்பனரும், வேத வேள்விகளும்

சங்க இலக்கியங்கள் எனப்படும் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்களில் பார்ப்பனர்களைப் பற்றிய செய்திகள் வந்துள்ளனவற்றைக் காண்போம்.

சங்ககாலம் எனப்படுவது இன்றைக்கு சற்றேறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும். .இந்தக் காலப்பகுதிகளில் எழுந்த இலக்கியங்களில் எல்லாம் ஆரியர்களின் வடமொழி வேத வேள்விகள், வைதீகநெறிகள், பண்பாடுகள் இன்ன பிறவும் காணப்படுகின்றன.

வேத வேள்விகள்

வடநூல்களில் கூறப்பட்ட வேதமுறைப்படியே தமிழக மன்னர்கள் வேள்விகள் இயற்றியிருக் கின்றனர்.ஒரு பாண்டிய மன்னன் வடநூல் முறைப்படிப் பலயாகங்கள் இயற்றியமையின் காரணமாக பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனப் பெயர் பெற்றான்.  மற்றும் ஒரு சோழமன்னன் இராஜசூய யாகம் செய்து அதன் காரணமாக இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று பெயர் பெற்றுள்ளான்.

பண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியானவன் வேதநெறிப்படி யாகங்கள் பல நடத்தியவன். பொரி, சமித்து முதலியவற்றில் நெய்யைச் சொரிந்து வேள்விகள் இயற்றிய யூபஸ்தம்பம் ( யாக ஸ்தம்பம்) பல நட்டுள்ளான். இவனை நெட்டிமையார் என்னும் புலவர் பாடிய 15-ம் புறநானூற்றுப் பாடலில் இச்செயதி தெளிவாக குறிக்கப்படுகின்றது.

“ நற்பனுவ னால் வேதத்

தருஞ்சீர்த்திப் பெருங் கண்ணுறை

நெய்ம்மலி ஆவுதி பொங்கப்பன்மாண்

வீயாச் சிறப்பின் வேள்விமுற்றி

யூபம் நட்டவியன்களம் பலகொல் ”

இந்த யூபஸ்தம்பம் நடும் வழக்கம் தொல்காப்பியர் காலத்திலேயே தமிழகத்தில் புகுந்துவிட்டது. தொல்காப்பியர் சூத்திரத்திலேயே “ யூபம் நட்டவியன் வேள்வி ” என்று வருகின்றது.

யாக சாலையின் அமைப்பானது வட்ட வடிவு உடையதாகவும் பல மதில்களை உடையதாகவும் இருத்தல் வேண்டும். அதன் நடுவில் பருந்து விழுங்குவது போன்று செய்யப்பட்ட இடத்தில் யூப ஸ்தம்பம் நட வேண்டும்.

இப்படிப் பருந்து வடிவமாகச் செய்யப்படுவதற்குக் கருட சயனம் என்று கூறுவர் வடநூலார். கரிகாற்பெருவளத்தான் இறந்துபடவே கையறு நிலையால் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடிய 224-ம் புறப்பாட்டில் இச்செய்தி காணப்படுகிறது.

“ பருதி யுருவில் பல்படைப் புரிசை  

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்

வேதவேள்வித் தொழில் முடித்ததூஉம் ”

பா: 224: 7 - 9.

இப்படி யூபஸ்தம்பம் நட்டு வேள்வி செய்யும் செய்தி சோழன் நலங்கிள்ளியைப் போற்றி கோவூர்க்கிழார் பாடிய 400-ம் புறப்பபாட்டில் வந்துள்ளது.

“ வேள்வி தலிந்த வேள்வித் தூணத்

திருங்கழி யிழிதரும் ஆர்கலி வங்கம் ”

பா: 400: 19, 20.

சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர் பாடிய புறநானூற்றுப் பாடலில் “பாப்ப்பான் கவுணியன் விண்ணந்தாயன் ஆறங்கள் களாலும் உணரப்பட்ட வேதத்துக்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோர்களாகிய புறச்சமயத் தார் (புத்தர், சமணர்) களின் மிகுதியை வீழ்த்தவேண்டியும், அவர்களது கருத்துக்களை மக்கள் ஏற்காமல் இருக்கவும் செய்ய இருபத்தொரு வேள்வித்துறைகளையும் குறைவின்றிச் செய்து முடித்தவர்களின் மரபில் வந்தவன் என்று கூறப்படுகின்றான்.

“ ஆறுணர்ந்த ஒருமுது நூல்

இகல் கண்டோர் மிகல் சாய்மார்

மெய்யன்ன பொய்யுணர்ந்து

பொய்யோராது மெய்கொளீ இ

மூவேழ் துறையும் முட்டின்று போகிய

உரைசால் சிறப்பின் உரவோர் மருக ”   

புறம் 166, 4. 9

இதில் கூறப்படும் ஆறங்கங்கள் வியாகரணம், சோதிடம், நிருத்தம், சந்தம், சிட்சை, கற்பக மென்னும் வடமொழி ஆறங்கங்களேயாகும். 21 வேள்விகள் என்ன என்றால், இந்த யாக நூல்கள் உணர்த்தும் சோம யக்ஞம் ஏழு, ஹவிர் யக்ஞம் ஏழு, பாக யக்ஞம் ஏழு ஆக இருபத்து ஒன்றாகும். (யக்ஞம் என்றால் யாகம் ஆகும்)

“ புலப்புல்வாய்க் கலைப்பச்சை

சுவற்பூண்ஞான் மிசைப் பொலிய

மருங்கடித்த அருங்கற்பின்

அறம் புகழ்நத வலை சூடிச்  

சிறு நுதற்பே ரகலல் குற்  

சில சொல்லிற் பல கூந்தனின்

நிலைக் கொத்தநின்  றுணைத் துணைவியர்

தமக்கமைந்த தொழில்  ”   

புறம் 166, 11, 18

மற்றும் பார்ப்பனர்கள் வடநூல்கள் கூறும் ஆகவனியம், காருகபத்தியம், தென்றிசையங்கி என்னும் முத்தீக்களை வளர்த்த வேள்விகள்.  அந்திக் காலங்களில் செய்யப்படும் கடன்கள் செய்தல் ஆகிய செய்திகள் சங்க நூல்களில் பல இடங்களில் காணக்கிடக்கின்றன.

அந்தி அந்தணரருங்கடனிறுக்கும் முத்தீ - புறம் 2; 22 - 23

ஒன்று புரிந் தடங்கிய இருபிறப்பாளர்

முத்தீப் புரைய - புறம் 367: 12-13

மூன்று வகைக் குறித்த முத்தீச்செல்வத் திருபிறப்பாளர் - திருமுருகாற்றுப்படை  181-182

அறம்புரி அருமறை நவின்ற நாவின்

திறம்புரி கொள்கை அந்தணர் - அய்ங்குநூறு 387

கேள்வி அந்தணர் கடவும்

வேள்வி ஆவயின் உயிர்க்கும் என்நெஞ்செ - கலி 36

அந்தி அந்தணர் எதிர்கொள் - கலி 119

ஒதுடை அந்தணன் எரிவலம் செய்வான் போல - கலி 69

விரிநூல் அந்தணன் விழவு தொடங்கிய

புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப - பரிபாடல் 11

இருபிறப்பு, இருபெயர் ஈரநெஞ்சத்து

ஒருபெயர் அந்தணர் - பரி : 14

ஒருமுகம்

மந்திரவிதியின் மரபுளிவழாஅ

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே   - திருமுறுகாற்றுப்படை 94 -96

பார்ப்பனர்களுக்கு பொன் பொருள் தாரை வார்த்து அளித்தல்

தாரைவார்த்தல், தாராமுகூர்த்தம் என்பனவல்லாம் வடநூல் முறைமைகளேயாகும். ஆனால் பண்டைக் காலத்து மன்னர்கள் பார்ப்பனர்களுக்குப் பொன்னும் பொருளும் வடநூல் முறைமைப்படித் தாரை வார்த்து அளித்திருக்கின்றனர்.

“ ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப்

பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து”

புறம் 367 : 4-5

“ கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு

அருங்கலம் நீரொடு சிதறி ”

புறம் 361 : 4-5

எனக் கூறப்பட்டுள்ளன. மற்றும் அரசன் பார்ப்பனனுக்கு நிலமும் பசுவும் அளித்தல் பதிற்றுப் பத்து (பா 6: 45) போன்ற நூல்களிலும் காணப்படுகின்றது.

இப்படிப் பார்ப்பனர்கள் மன்னர்களைத் தம்வயப்படுத்திக் கொண்டு அவர்கள் மனங்குளிரும் படிப் புகழ்ந்து பொன்னும் பொருளும் பெற்றதோடு மேல்நிலையும் அடைந்து வாழ்ந்திருக்கின்றனர்.

மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு வருத்தம் தரும்படியான செயலைச் செய்ய அஞ்சியிருக்கின்றனர்.

‘ ஆர்புனை தெரியல் நின்முன்னோ ரெல்லாம்

பார்ப்பார் நோவன செய்யலர் ’     

புறம் 43: 13-14

‘ஆன்முலை அறுத்த அறன் இலோர்க்கும்

மாண் இழை மகளிர் கருத் சிதைத்தோருக்கும்

பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்

வழுவாய் மருங்கின் கழுவாயும் உள ’

புறம் கா 34

இப்புறப்பாடலில் ஆண்முலை அறுத்தல், மகளிர் கருச்சித்ைதல் போன்றே பாப்பனர்க்குத் துன்பம் விளைவிப்பதும் கொடிய குற்றம் என்ற எண்ணத்தை சங்க காலத்தில் வேரூன்றச் செய்து விட்டனர்.

மன்னன் வேற்று நாட்டுமீது படை எடுத்துச் செல்லுங்கால் முதலாவதாக பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளிகள், பிள்ளை இல்லாதவர்கள் ஆகியவர்களை போருக்கு முன் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றுவிடும்படி எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும் இவர்களுக்குத் தீங்கு இழைத்தல் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளன. இங்கும் பார்ப்பனர்களுக்கு நோவன செய்யலாகாது என்ற கருத்தை அரணாக அமைத்துக் கொண்டனர்.

ஆவும் ஆன் இயல் பார்ப்பன

மாக்களும்

பெண்டிரும் பிணி

யுடையீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு

அரும் கடன் இறுக்கும்

பொன் போல் புதல்வர்ப

பெறா அதீரும்

எம் அம்பு கஎவிடுதும் நும்

அரண்சேர்மின்

புறம்: பா. 9

இப்பாடல் வடநூல்படி யாகம் பல செய்தவனாகிய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டியமையார் என்னும் புலவர் பாடியதாகும்.

பண்டைக்காலத்திலேயே பாப்பனர்கள் மக்களோடு கலந்து பழகாமல் தனித்து இருந்து ஆச்சார அனுஷ்டானங்களைக் கையாண்டு ஒழுகி வந்திருக்கின்றனர். இச்செய்தி பரிபாடல் பாட்டு ஒன்றால் உணரக் கிடக்கின்றது.

வைகையாற்றில் தண்ணீருடன் ஈக்கள் மொய்க்கும்படியான மது கலந்து வருகின்றது என்றும் ஆற்றில் ஆடவர்களும் பெண்டிர்களும் நீராடுங்கால் அவர்கள் மீது பூசியுள்ள மணப் பொடிகள் எல்லாம் ஆற்றில் அடித்து வரப்படுகின்றன என்றும் எண்ணி, பார்ப்பனர்கள் வைகையாற்றில் குளிப்பதை யொழித்தனர். மேலும் வைகையாற்றுத் தண்ணீரில் தேன் கலந்து வருவதாகவும் அது வழுவழுப்புற்றது என்றும் எண்ணிப் பார்ப்பனர்கள் அதில் வாய்கூடக் கழுவுவதில்லையாம்.

“ ஈப்பாயக் அடுநறாக் கொண்டது இவ்யாறு எனப்

பார்ப்பார் ஒழிந்தார் படிவு

மைந்தர் மகளிர் மணவிரை தூவிற்று என்று

அந்தணர் தோயலர் ஆறு

வையை தேம்வேவ வழுப்புற்றென

அய்யர் வாய்பூசுறார் ஆறு.  

பரிபாடல் திரட்டு 2 : 58,63

இச்செய்திகள் ஒருக்கால் கற்பனையாகவும் இருக்கக்கூடும் என்றாலும் அந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் வைதீக ஆசாரம் உடைய மனப்பான்மையினராக வாழ்ந்திருந்தனர் என்பதை இவ்வடிகள் காட்டுகின்றன அல்லவா?

பார்ப்பனர்கள் தங்கள் சாதி உயர்வைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்றே அணிந்து கொள்ளும் சாதிக்குறியாகிய பூணூலைச் சங்ககாலத்தில் கூட அணிந்துகொண்டு பெருமை பாராட்டி இருந்திருக் கின்றனர். பார்ப்பனர்கள் உபநயனத்துக்கு முன் அதாவது பூணூல் தரித்துக் கொள்வதற்கு முன் ஒரு பிறப்பும் உபநயனத்திற்குப் பிறகு ஒரு பிறப்புமாக இருபிறப்பினை உடையவர்கள் என்று வடநூல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாகவே பார்ப்பனர்கள் தங்களை இருபிறப்பாளர்கள் என்று இன்றும் பெருமை யாகக் கூறிக்கொள்வதைக் காண்கிறோம். உபநயனுத்துக்கு முன் பார்ப்பான் பார்ப்பனத்தன்மை உடையவன் ஆகமாட்டான் என்றும், உபநயனத்துக்குப் பின்பே அவன் பார்ப்பனத்தன்மை அடைகிறான் என்றும் இப்படி உபநயனக் காலத்திற்குப் பின்புதான் அவன் வேதமந்திரங்கள் ஜபிக்கவும் ஆச்சார அனுஷ்டானங்களுக்கு உரியவனாகவும் ஆகின்றான் என்றும் கூறப்பட்டிருக்கின்றன. இந்தக் கொள்கைள் சங்க காலத்திலேயே நன்கு வேரூன்றிவிட்டன என்று சொல்லாம்.

“ ஒன்று புரிந்தடங்கிய இருபிறப்பாளர் ”  

புறம் 367 : 12

இருபிறப்பு, இருபெயர் ஈரநெஞ்சத்து

ஒரு பெயர் அந்தணர்

பரிபாடல் 14

இருபிறப்பாளர் பொழுதறிந்து நுவல

திருமுருகு 182

என்று பார்ப்பனர்களின் இருபிறப்புகள் கூறப்பட்டுள்ளன.

மற்றும் பார்ப்பனர்கள்  சாதிக் குறியாகிய பூணூலைத் தோளில் அணிந்திருந்தார்கள் என்றும் அந்தப் பூணூல் ஒன்பது நூல்களால் மூன்று புரிகளாக ஆக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளன.

‘ ஒன்பது கொண்ட மூன்று புரி நுண்ஞாண் ’

திருமுருகு : 183

‘ புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப ’

பரிபாடல் 11

இதுவரை மேலே எடுத்துக் காட்டிய செய்திகளால் சங்க காலத்திலேயே தமிழர்களுக்குப் புறம்பான பார்ப்பனரும் அவர்தம் வேத வேள்விகளும் மற்ற பண்பாடுகளும் புகுந்துவிட்டன என்பதை ஓரளவுக்குக் கண்டோம். அடுத்த கட்டுரையில் சங்க இலக்கியங்களில் புராணக்கதைகள் என்ற தலைப்பில் ஓர் பகுதி காண்போம். இந்தக் கட்டுரைகளின் கருத்தே பார்ப்பனர் வேறு, நாம் வேறு, நம் பண்பாடு வேறு என்பவற்றை தெளிவுபடுத்தவது என்பதே ஆகும்.

‘உண்மை’  14.02.1970, 14.03.1970, - தொடரும்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பழந்தமிழகம்:

    பழந்தமிழகத்திலும் வகுப்புகள் இருந்தன. வேந்தர், அரசர், வேளிர் போன்றவர்கள் ஆளும் வகுப்பாக இருந்தனர். பிசிராந்தையார் புறம் 191ஆம் பாடலில் குறிப்பிடும் அந்தணர், தாபதர், அறிவர், கணியர் போன்ற கொள்கைச்சான்றோர் ஒரு வகுப்பாக இருந்தனர். இவர்கள் அறிவு, ஆய்வு, ஒழுக்கம், பொதுநலம், துறவு ஆகியவற்றில் சிறந்தவர்கள். தொல்காப்பியப் பொருளதிகாரம் கற்பியலில் உள்ள 13, 14ஆம் பாடல்கள், தலைவன் தலைவிக்கு நல்லவற்றை கற்பித்தலும், அவர்கள் அறவழி தவறி நடக்கும்பொழுது இடித்துரைத்து அறிவுரை கூறி நல்வழிப்படுத்தலும் அறிவர்கள் எனப்படும் சான்றோர்களின் கடமையாகும் என்கிறது. ஆகவே அறிவர்கள் எனப்படும் கணியர்களும் சான்றோர்கள் என்பதை தொல்காப்பியம் கூறியுள்ளது. சான்றோர்கள் குறித்துக் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற அரச இளவல் தனது புறம் 182ஆம் பாடலில், தேவர்களின் அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாதவர்கள்; யாரையும் வெறுக்காதவர்கள்; கோபம் இல்லாதவர்கள்; அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சுபவர்கள்; புகழுக்காகத் தம் உயிரையும் கொடுப்பவர்கள்; பழி வருமெனின் உலகமே கிடைத்தாலும் ஏற்காதவர்கள்; அயர்வே இல்லாதவர்கள் ஆகிய நற்குணங்களைப்பெற்று தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்கள் எனக்கூறுகிறான். வள்ளுவனின் 99ஆவது அதிகாரமான ‘சான்றாண்மை’ சான்றோர்களின் பண்பு நலன் குறித்துப்பேசுகிறது. மேலும் வள்ளுவன் ‘நீத்தார் பெருமை’ என்ற மூன்றாவது அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களில் இவர்களின் நற்குணங்களைப் பற்றிக்கூறுகிறான். அதன் பத்தாவது குறள் “அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டுஒழுக ழான்” என்கிறது. அதன்மூலம் ‘அந்தணர்’ என்போர்தான் சான்றோர்கள் எனக்கூறுகிறான் வள்ளுவன். வான் சிறப்புக்குப்பின் மூன்றாவது அதிகாரமாக இது வைக்கப்பட்டுள்ளது என்பது அதன் சிறப்பை உணர்த்துகிறது. நீத்தார் என்பது எல்லாவற்றையும் துறந்தவர்களை, பற்றில்லாதவர்களைக் குறிக்கும்.

  வணிகர்கள், வேளாண்மை செய்யும் நிழக்கிழார்கள் ஆகியவர்களில் செல்வந்தர்களும், உயர்ந்தோர்கள் எனப்படுவோரும் மூன்றாவது வகுப்புக்கு உரியவர்கள் ஆவர். சிறுகுறு வணிகர்களும் & தொழில்செய்பவர்களும், சிறுகுறு வேளாளர்களும், போர்வீரர்களும், பார்ப்பனர், பாணர், கூத்தர், பொருநர், விறலி போன்றவர்களும், இன்னபிறரும் நான்காவது வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். முதல் மூன்று வகுப்பினர் மேலோர் ஆவர். இந்த நான்காவது வகுப்பினர் கீழோர் ஆவர். இழிதொழில்களையும், அடிமைத் தொழில்களையும் செய்யும் இழிசனர், சண்டாளர் போன்றவர்கள் ஐந்தாவது வகுப்பைச் சேந்தவர்கள் ஆவர். தமிழகத்தில், சங்ககாலத்தில் சாதிகள் இருக்கவில்லை. சங்க இலக்கண இலக்கியங்களில் சொல்லப்படும் விடயங்களைக் கொண்டு மேற்கண்ட ஐந்து வகுப்புகளை அடையாளம் காணமுடியும். இந்த ஐந்து வகுப்புகளும் தொழிலை, செல்வத்தை அடிப்படையாகக் கொண்டவைகளாகும். இவை பிறப்பை அடிப்படையாகக் கொண்டவையல்ல. ஆனால் இதில் கடைசி வகுப்பை விலக்கி மீதி நான்கு வகுப்புகளை மட்டுமே தொல்காப்பியம் வகுப்புகளாகக் குறிப்பிடுகிறது. பண்டைய கிரேக்க உரோம சமூகங்களைப் போலவே தமிழகத்திலும் சங்ககாலத்தில் பூசாரிகள் வலிமையற்ற வகுப்பாகவே இருந்தனர். பக்தி காலகட்டத்திலும் அதன்பின்னரும்தான் பூசாரிகளாகிய பார்ப்பனர்கள் தமிழ்ச் சமூகத்தில் வலிமை மிக்க வகுப்பாக ஆனார்கள்.

அந்தணரும் பார்ப்பாரும்:

  அந்தணரும் பார்ப்பாரும் வேறு வேறு வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் அந்தணர் என்பது சில இடங்களில் பார்ப்பார், பார்ப்பனர் என மாற்றப்பட்டுள்ளது என்பதோடு நிறைய பார்ப்பனர் சார்ந்த, வைதீகம் சார்ந்த இடைச்செருகல்களும் செய்யப்பட்டுள்ளன. சான்றாக சாமி சிதம்பரனார் தனது தொல்காப்பியத்தமிழர் என்ற நூலில் அறுவகைப்பட்ட அந்தணர் பக்கம் என்பது பார்ப்பனர் பக்கம் என மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்(1) அவர் தொல்காப்பியச் சான்றுகளைக்காட்டி அந்தணர் வேறு, பார்ப்பனர் வேறு என்பதை உறுதிப்படுத்துகிறார். தொல்காப்பியத்தில் உள்ள பொருளதிகாரத்தில் உள்ள 620, 622, 632 (மரபியல்:72,74,84) ஆகிய பாடல்களைக்கொண்டு அந்தணர் அரசருக்குச் சம்மானவர் எனவும் நான்கு வகுப்புகளில் முதல் வகுப்பினர் எனவும் கூறப்படுகின்றனர். ஆனால் பார்ப்பனர் நிலை வேறு. பொருளதிகாரத்தின் 175, 191(கற்பியல்:36,52) ஆகிய பாடல்களிலும், பொருளதிகாரத்தின் 494(செய்யுளியல்-185) ஆம் பாடலிலும் தலைவன், தலைவி ஆகியவர்களின் களவிலும் கற்பிலும் பாணன், பாங்கன், தோழி, செவிலி ஆகியவர்களோடு சேர்ந்து உதவி செய்பவர்களாகக் பார்ப்பனர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் என சாமி சிதம்பரனார் கூறுகிறார். தலைவன், தலைவியின் பிரிவு நிலையில் பார்ப்பாரின் கூற்று ஆறு என பொருளதிகாரத்தின் 175(கற்பியல்-36)ஆம் பாடல் கூறுகிறது. காமநிலை உரைத்தல், தேர்நிலை உரைத்தல், கிழவோன் குறிப்பினைக்கூறுதல், நிமித்தம் கூறல், செலவறு கிளவி(தலைவன் உறுதியாகப்பிரிந்து போவதைத் தலைவிக்குத் தெளிவாகக் கூறுதல்), செலவழங்கு கிளவி(பிரிவதைத் தள்ளிப்போடும் செலவழுங்கள் பற்றிக்கூறுதல்) ஆகிய ஆறுமாகும். மேலும் அகம் 24ஆம் பாடலில் பார்ப்பனன் வளையல் செய்பவனாக இருக்கிறான். என்கிறார். ஆகவே அந்தணர் வேறு, பார்ப்பனர் வேறு எனவும் ஆனால் இருவரும் தமிழர்களே எனவும் பார்ப்பனர்கள் அந்தணர்களைவிடக் கீழ் நிலையில் உள்ளவர்கள் எனவும் சாமி சிதம்பரனார் கூறுகிறார்(2). ஆகவே சங்ககாலத்தில் அந்தணர்கள் முதல் அல்லது இரண்டாம் வகுப்பைச்சேர்ந்த மேலோராகவும், பார்ப்பனர்கள் நான்காம் வகுப்பைச்சேர்ந்த கீழோராகவும் இருந்துள்ளனர் எனத்தெரிகிறது.

கபிலர்–அந்தணர்:

  அந்தணர்களுக்குச் சான்றாகக் கபிலரை எடுத்துக்கொள்வோம். அவர்தான் சங்ககாலப் புலவர்களில் தன்னை அந்தணர் எனக் கூறிக்கொண்ட பெருமைக்குரியவர். புறம் 200ஆம் பாடலில் விச்சிக்கோவிடம் தான் பரிசிலன், பெருமைக்குரிய அந்தணன் எனவும், புறம் 201ஆம் பாடலில் இருங்கோவேளிடம் தான் அந்தணன், புலவன் எனவும் கூறிக்கொள்கிறார். ஆக கபிலர் தன்னை பரிசிலன் எனவும், புலவன் எனவும் பெருமைக்குரிய அந்தணன் எனவும் கூறிக்கொள்கிறார். அவர் புறத்தில் 28, அகத்தில் 18, நற்றிணையில் 20, குறுந்தொகையில் 28, ஐங்குறுநூறில் 100, 7ஆம் பதிற்றுப்பத்தில் 10 ஆகமொத்தம் 204 பாடல்கள் பாடியுள்ளார்(3). கலித்தொகையில் உள்ள பாடல்கள் அவர் பாடியதல்ல. அவரது பாடல்கள் அவர் ஒரு பொருள்முதல்வாதி என்பதை உறுதிப் படுத்துகின்றன. சான்றாக புறம் 105 முதல் 124 வரையுள்ள பாடல்கள் பாரி குறித்தும் மலையமான் குறித்தும் அவர் பாடியவைகளாகும். அப்பாடல்கள் இயல்பானதாகவும், இயற்கையைப் பாடுபவனாகவும், அறிவியல்தன்மை உடையவனாகவும், மூட நம்பிக்கைகளை, சடங்குகளை, குறிசொல்வதை மறுப்பதாகவும், பொருள்முதல்வாதத்தன்மை கொண்டதாகவும் இருக்கின்றன. முனைவர் க.நெடுஞ்செழியன் அவரை ஆசீவகச் சமயத்தவர் எனவும் ஆசிவக மரபுப்படி வடக்கிருந்து உயிர் துறந்தவர் எனவும் அவரது பாடல்களில் ஆசிவக மெய்யியல் சிந்தனைகள் இடம்பெறுகின்றன எனவும் கூறுகிறார்(4).

  கபிலர் எண்ணிய மூலவரின் பெயரைக்கொண்டுள்ளார் என்பதோடு அவரது பாடல்களில் எண்ணியச் சிந்தனைகளும் இடம்பெறுகின்றன எனலாம். கபிலர் தனது சம காலப்புலவர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். மாறோக்கத்து நப்பசலையார் என்பவர் கபிலரை “புலனழுக்கற்ற அந்தணாளன்”(புறம்-126) எனவும், பொருந்தல் இளங்கீரனார், “செறுத்த செய்யுட் செய் செந்நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்”(புறம்-53) எனவும், நக்கீரர், “பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்”(அகம்-78) எனவும் பெருங்குன்றூர் கிழார் “வயங்கு செந்நாவின்……..நல் இசைக்கபிலன்” (பதிற்றுப்பத்து-85) எனவும் புகழ்ந்து பாடியுள்ளனர்(5). கபிலரின் புலமைச்சிறப்பை மட்டுமின்றி அந்தணர் எனப்படும் சான்றோருக்குரிய அவரின் ஒட்டுமொத்த பண்பு நலன்களின் சிறப்பையும் குறிக்கும் அடிப்படையில்தான் அவரை மேற்கண்ட சங்கப்புலவர்கள் புகழ்ந்துள்ளனர் எனலாம். கபிலரைப்புகழ்ந்து பாடிய நக்கீரர், மாறோக்கத்து நப்பசலையார், பெருங்குன்றூர் கிழார், பொருந்தல் இளங்கீரனார் ஆகிய நால்வரும் மிகச்சிறந்த புலவர்கள் ஆவர். பெருமைக்குரிய அந்தணன் எனக் கூறும் தகுதி பெற்றவர் என்பதால்தான் கபிலர் அந்நால்வராலும் புகழப்பட்டுள்ளார். கபிலர் பொருள்முதல்வாதி; ஆசிவகச் சமயச் சார்பாளர்; வைதீக மரபுக்கு எதிரானவர்; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியும், பிசிராந்தையாரும், வள்ளுவரும் கூறும் அந்தணர் எனப்படும் தமிழ்ச்சான்றோருக்குரிய பண்புகளை, அதற்கானத் தகுதிகளைக் கொண்டிருப்பவர். அவர் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டாகும்.

  கபிலரின் குறுந்தொகைத்தலைவி(குறுந்:288), ‘தலைவன் விரைந்து மணம் முடிக்காமல் தரும் துன்பத்தின் இனிமையை விடவா தேவருலகம் இனிமையானது’ எனத் தோழியிடம் கேள்வி எழுப்புகிறாள். அக்கவிதை, “இனிதோ- இனிதுஎனப் படூஉம் புத்தேள் நாடே?” என முடிகிறது. கபிலர் அதில் ‘இனிது எனச்சொல்லப்படும் தேவருலகம்’ எனக்கூறுவதன் மூலம் தேவருலகம் இனிமையானது எனச்சொல்லப்படுகிறது. ஆனால் இனிமையானது அல்ல எனக் கூறுவதோடு தேவருலகம் என்ற ஒன்று இல்லை எனவும் கூறுகிறார் எனலாம். தேவருலகத்தை மறுப்பதன் மூலம் இப்பாடல் கடவுள் மறுப்பும், வைதீக எதிர்ப்பும் கொண்ட பாடல் எனலாம். கபிலர் எண்ணியப்பொருள்முதல்வாதி என்பதை இப்பாடல் உறுதி செய்கிறது.

  கபிலரின் குறிஞ்சிப்பாட்டு ஆசிவக ஊழியியலை அடிப்படையாகக் கொண்டது என்கிறார் முனைவர் க.நெடுஞ்செழியன்(6). தமிழுக்கு மட்டுமே உரிய அகத்திணை மரபின் சிறப்பை, தமிழ் அகப்பொருள்நெறி குறித்தத் தெளிவை ஆரிய அரசன் அறிவதற்காகப் பாடியதுதான் அவரது குறிஞ்சிப்பாட்டாகும். அப்பாட்டின் அடிக்குறிப்பு “ஆரிய அரசன் பிரகதத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு முற்றியது” என்கிறது. கபிலர் தாம் பாடிய 7ஆம் பதிற்றுப்பத்தில் செல்வக்கடுங்கோ வாழியாதனின் வடதிசைப்படையெடுப்புக்கான படையை ‘தண்டமிழ் செறித்து’(பதிற்றுப்பத்து-63, வரி-9) எனக் குறிப்பிடுகிறார். அதன்மூலம் அப்படை சேரர்களோடு, சோழ பாண்டியர்களையும் கொண்ட தமிழ்ப்படையாகவே இருந்தது என்பதை அவர் குறிப்பிடுகிறார். தமிழ் மொழி மீதும், தமிழ்ப் பண்பாட்டின் மீதும் அவருக்கிருந்த பற்றை, தான் ஒரு தமிழ்ச்சான்றோன் என்பதில் அவருக்கு இருந்த பெருமையை அவரது பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. சங்ககாலத்துக்கு 1000 வருடங்களுக்குப்பின் வந்த உரையாசிரியர்கள் அல்லது அதற்கு முந்தைய ஏடெழுதியவர்கள் தங்களுடைய காலகட்டச் சிந்தனையைக் கொண்டு கபிலர் போன்ற சான்றோர்களை, வைதீகப் பார்ப்பனர்களாக ஆக்கத் தேவையான இடைச்செருகல்களையும் திருத்தங்களையும் செய்துள்ளனர் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

தொல்காப்பியம்:

   tholkaappiya thamizhar தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியரை ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என அதன் சிறப்புப் பாயிரம் கூறுகிறது. ஐந்திரம் என்பது உலகாயதம், ஓகம், எண்ணியம் ஆகிய மூன்றையும் கொண்டது. இதில் உள்ள ஓகம் என்பது சிறப்பியம், நியாயவியல் ஆகிய இரண்டும் சேர்ந்தது. ஆகவே உலகாயதம், சிறப்பியம், நியாயவியல், எண்ணியம் ஆகியவைகளைக்கொண்ட ஐந்திரத்தை முழுமையாகக் கற்றவன் தொல்காப்பியன் என்பதையே ஐந்திரம் நிறைந்தவன் என்பது குறிக்கிறது எனலாம். ஆகவே தொல்காப்பியர் ஒரு உலகாயதப் பொருள்முதல்வாதி என்பதோடு ஒரு எண்ணியவாதியும் ஆவார். ஐந்திரம் கற்ற தொல்காப்பியன் தனது நூலில் படிமுறைக்கோட்பாடு, ஐம்பூதக்கோட்பாடு, அளவையியல் கோட்பாடு, காரணகாரியக்கோட்பாடு, இன்பியல் கோட்பாடு ஆகிய அறிவுசார் துறைகளை விரிவாகவும் செறிவாகவும் கூறியுள்ளார். தொல்காப்பியர் கூறியுள்ள இக்கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதுதான் சங்க இலக்கியத்தின் மெய்யியல் கூறுகளாகும். ஐந்திரம் என்பது தமிழிய அறிவியல் கல்வி முறையாகும். அதனால்தான் தொல்காப்பியர் மேலே குறிப்பிட்ட கோட்பாடுகளைப்பற்றி பேசும் போதெல்லாம் அவை தனது முன்னோர் கூறியது என்றே கூறிச்செல்கிறார். பகுத்தறிவையும், காரணகாரியக் கோட்பாட்டையும், தருக்கவியலையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு அறிவுப்பள்ளிதான் தமிழிய ஐந்திரக்கல்வி முறையாகும்(7). அதனால்தான் ஐந்திரக்கல்வி முறையைச் சாணக்கியனும் கம்பனும் வேதங்களைவிட மேலான கல்விமுறையாகக் குறித்துள்ளனர்.

  தொல்காப்பியரின் ஐந்திர மெய்யியல் & அறிவியல் பின்புலத்தின் அடிப்படையில்தான் நாம் தொல்காப்பியத்தைக் காணவேண்டும். அப்பொழுது தான் தொல்காப்பியத்தில் உள்ள இடைச்செருகல்களை, திருத்தங்களை அடையாளங்கண்டு ஒரு தெளிவைப்பெறமுடியும். தொல்காப்பியருக்கு 1500 ஆண்டுகள் கழித்து வந்த, வைதீகச்சிந்தனை ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்துக்குரிய உரையாசிரியர்களின் கருத்தில் இருந்துதான் இன்றும் தொல்காப்பியம் பார்க்கப்படுகிறது. தொல்காப்பியரின் காலம் என்பது வளர்ச்சிபெற்ற வணிக நகர அரசுகள் இருந்த காலம். பொருள்முதல்வாதச் சிந்தனை ஆதிக்கம் வகித்த காலம். இந்தப்புரிதல் இல்லாத பொழுது தொல்காப்பியத்தை முறையாகப் புரிந்து கொள்ளல் என்பது இயலாத காரியம். தொல்காப்பியத்தின் சிறப்பினை உணர்ந்த இரசிய மொழியியல் அறிஞர் டாக்டர் கபில் சுவெலபில் அவர்கள், “தொல்காப்பியம், மனித அறிவாற்றல் எவ்வளவு வியத்தகு உச்சநிலை எய்தக்கூடும் (one of the finest monuments of human intelligence) என்பதைக் காட்டும் சிறந்த சான்றுகளுள் ஒன்று. இலக்கியக் கொள்கையில் வேறு எந்தப் பண்டைய மொழிகளிலும் இல்லாத சிறந்த கருத்துக்களைத் தொல்பொருள் செய்யுளில் தொல்காப்பியம் கூறுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்(8).

தொல்காப்பியப் பொருளதிகாரம்: புறத்திணையியல்

    தொல்காப்பியப் பொருளதிகாரம் 9 இயல்களைக் கொண்டது. இதில் இரண்டாவதாக உள்ள புறத்திணையியலில் வெட்சித்திணை முதல் பாடாண்திணை வரையான ஏழு திணைகள் குறித்த விளக்கம் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு திணையிலும் நடைபெறும் போர் குறித்த நிகழ்வுகள் துறைகளாகப் பிரிக்கப்பட்டு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

1.வெட்சித்திணை: போர் தொடங்குவதற்கு முன் பகைவரின் ஆநிறைகளைக் கவரும் வெட்சித்திணையும், பகைவர் அதை மீட்கும் கரந்தைத்திணையும் குறிஞ்சிக்குப் புறமாக உள்ள வெட்சித்திணையில் அடங்கும். ஆநிறைகளைக்கவரும் வெட்சித்திணையில் 14 துறைகளும், ஆநிறைகளை மீட்கும் கரந்தைத்திணையில் 21 துறைகளும் உள்ளன. கரந்தைத்திணையில் உள்ள கடைசி 5 துறைகள் ஆநிறை மீட்ட போரில் இறந்த வீரனுக்கு நடுகல் நட்டு வழிபடுதல் சார்ந்த துறைகளாகும். வீரர்களின் குடிப்பெருமையைக் கூறும் ‘குடிநிலை’ துறையும், போர்க்கடவுளான கொற்றவையின் பெருமையைக்கூறும் ‘கொற்றவை நிலை’ துறையும் வெட்சித்திணைக்கு உரியவைகளாகும். ஆகமொத்தம் 14+21+2=37 துறைகளாகும்.

2.வஞ்சித்திணை: மண்ணாசை கொண்டு போரிட வந்த பகைவனை எதிர்த்துப் போரிடுவது முல்லைத்திணைக்குப் புறமாக உள்ள வஞ்சித்திணையாகும். இதில் 13 துறைகள் உள்ளன. இதில்தான் ‘பெருஞ்சோற்று நிலை’ துறையும் தோற்ற மன்னன் குறித்துப்பாடும் ‘கொற்றவள்ளை’ துறையும் உள்ளது.

3.உழிஞைத்திணை: மதிலை முற்றுகையிடுவதும் பாதுகாப்பதும் மருதத் திணைக்குப் புறம்பான உழிஞைத்திணையாகும். இதில் மதில் முற்றுகைக்கு 4 துறையும், மதில் காத்தலுக்கு 4 துறையும் உள்ளன. இவை போக இரு நிலைக்கும் பொதுவாக உள்ள துறைகள் 12 ஆகும். இதில் வெண்குற்றக்குடை, வாள் ஆகியவைகளுக்குச் சிறப்பு செய்யும் துறைகளும் அடங்கும்.

4.தும்பைத்திணை: வேந்தர்களின் வலிமையைக்காட்ட நிகழும் போர், நெய்தல் திணைக்குப்புறம்பான தும்பைத்திணையாகும். இதில் 12 துறைகள் உள்ளன.

5.வாகைத்திணை: வெற்றியின் அடையாளமான வாகைத்திணை, பாலைத் திணையின் புறமாகும். போர்வெற்றிக்குப்பின் நடக்கும் நிகழ்வுகள் 9 மறத்துறைத் துறைகளாகவும், அகவாழ்வில் வெற்றி பெறுவதற்கான 9 துறைகள், அறத்துறைத் துறைகளாகவும் தரப்பட்டுள்ளன. ‘வேலினது வென்றி’ என்ற துறை வேலின் சிறப்பைப் புகழ்வதாகும். ‘அவிப்பலி’ என்பது வீரன் ஒருவன், வேந்தனின் வெற்றிக்காகத் தன் உயிரைப் பலி கொடுப்பதாகும்.

6.காஞ்சித்திணை: வாழ்வின் நிலையாமை குறித்தும், போருக்கு பிந்தைய நிகழ்வுகள் குறித்தும் விளக்கம் தரும் காஞ்சித்திணை, பெருந்திணையின் புறமாகும். இதில் போர்க்கள நிகழ்வுகள் குறித்துப் 10 துறைகளும், பிற இட நிகழ்வுகள் குறித்துப் 10 துறைகளும் உள்ளன.

7.பாடாண்திணை: ஐந்து புறத்திணைகளிலும் சிறப்புற்று விளங்கும் ஆண்மகனின் புகழைப்பாடும் பாடாண்திணை, கைக்கிளைத்திணையின் புறமாகும். இதில் பத்துப் பத்து துறைகளாக 20 துறைகள் உள்ளன. இதில் ஆநிரைகளைக்கொடையாக வழங்கும் ‘வேள்வி நிலை’ என்ற துறையும், பிறந்த நாளைக் கொண்டாடும் ‘பெருமங்கலம்’ துறையும், முடிசூட்டு விழாவைக்கொண்டாடும் ‘சீர்த்தி மண்ணுமங்கலம்’ துறையும், நாள்-கோள், புள் போன்ற நிமித்தங்கள் பார்க்கும் ‘நிமித்தம் பார்த்தல்’ துறையும் அடங்கும்.

 ஏழு திணைகளின் மொத்தத் துறைகள் 130 ஆகும். புறத்திணை சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் இந்த 130 துறைகளில் அடங்கும். வேந்தனின் பிறந்த நாள் விழா, முடிசூட்டு விழா, வெண்கொற்றக்குடை, வாள், வேல் ஆகியவைகளுக்குச் சிறப்புச் செய்யும் விழாக்கள், நடுகல் வழிபாடு, நிமித்தம் பார்த்தல், வேள்விநிலை போன்ற பல துறைகள் இதில் இருக்கின்றன(9).

வேள்வி: தொல்காப்பியத்தில் வேள்வி செய்தல்

   ‘வேள்வி நிலை’ என்ற துறையில் வெற்றிபெற்ற வேந்தன் ஆநிரைகளைப் பரிசாக வழங்கும் நிகழ்வுதான் உள்ளது. ஆனால் ‘வேள்வி செய்தல்’ குறித்தத் துறை எதுவும் இல்லை. ஆகவே வேள்வி செய்தல் என்பது தொல்காப்பியர் காலத்தில் நடைபெறவில்லை எனலாம். இந்த 130 துறைகள் போக வாகைத்திணையில் 7 பாகுபாடுகள் தரப்பட்டுள்ளன. அவை அறுவகைப்பட்ட பார்ப்பனர் பக்கம், ஐவகை மரபின் அரசர் பக்கம், இருமூன்று மரபின் ஏனோர் பக்கம், அறிவன் தேயம், நாலிரு வழக்கில் தாபதப்பக்கம், பொருநர்கண்பக்கம், அனைநிலைவகை ஆகியன. முதல் பாகுபாட்டில் உள்ள பார்ப்பனப்பக்கம் என்பது அந்தணர்பக்கம் என இருக்கவேண்டும் என்பது முன்பே சொல்லப்பட்டுள்ளது. இந்த அந்தணர் பக்கம் அந்தணர்களுக்கான ஆறு கடமைகள் அல்லது ஒழுக்கங்கள் குறித்து பேசுவதற்குப் பதிலாக, அதில் வேதச்சார்பான பார்ப்பனப் பூசாரிகளின் பணிகள்தான் சொல்லப்பட்டுள்ளன. அங்குதான் வேள்வி செய்தல், வேள்வி செய்வித்தல் முதலியன வருகின்றன.  அந்தணர்களுக்கு மட்டுமல்லாது, வேந்தர், வணிகர் ஆகியவர்களுக்கும் வேள்வி செய்தல் ஒரு கடமையாக ஒரு ஒழுக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதே சமயம் அறிவர்களுக்கும், போர் செய்யும் பொருநர்களுக்கும் வேள்வி செய்தல், வேள்வி செய்வித்தல் முதலிய கடமைகளோ ஒழுக்கங்களோ இல்லை. தாபதர்களான துறவிகளுக்கும் இவை இல்லை. ஆகவே இந்த 7 பாகுபாடுகளுக்கான கடமைகளிலும், ஒழுக்கங்களிலும் இடைச்செருகல்களும், திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன என்பது உறுதி.

  130 புறத்திணைத்துறைகளிலும் வேள்வி செய்தல் என்பது இல்லை எனும்பொழுது அன்று வேள்வி செய்தல் என்பது இருந்திருக்காது எனலாம். அன்றைய தமிழகத்தில் சான்றோர் உயர் குண நலன்களையும் பண்பு நலன்களையும் பெற்று அந்தணர் என்ற மிக உயர்நிலையில் இருந்தனர் எனவும், பார்ப்பனர்கள் கீழ்நிலையில் இருந்தனர் எனவும் முன்பே குறிப்பிட்டோம். அன்றைய தமிழகத்தில் நகர்மைய அரசுகள் நன்கு வளர்ந்திருந்ததோடு, உலகளாவிய வணிகப் பொருளாதார மேன்மையையும் கொண்டிருந்தன எனவும் பேரரசுகள் இல்லை எனவும் அதன் விளைவாக அன்றைய தமிழ்ச் சமூகத்தில் எண்ணியம், சிறப்பியம், நியாயவியல், உலகாயதம் போன்ற பொருள்முதல்வாதச் சிந்தனைகள் இருந்தன எனவும் முன்பே குறிப்பிட்டுள்ளோம். இந்நிலையில் அன்றைய அந்தணர்களுக்கும், வேந்தர்களுக்கும், வணிகர்களுக்கும் வேள்வி செய்தலும், வேதமறைகளை ஓதுதலும்தான் முக்கியக் கடமையாகச் சொல்லப்பட்டுள்ளது என்பது வேடிக்கையான விடயமாகும். அதே சமயம் துறவிகளான தாபதர்களுக்கும், அறிவர்களுக்கும், போர்வீரர்களுக்கும் அக்கடமைகள் இல்லை. ஆகவே இந்தப்பாகுபாடுகளில் உள்ள கடமைகளிலும், ஒழுக்கங்களிலும் இடைச்செருகல்களும், திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

மீமாம்சமும் வேள்விச்சடங்கும்:

  வேள்விச்சடங்கு என்பது வேத அடிப்படையிலான மீமாம்சக் கருத்தியல் நடைமுறையாகும். அதே சமயம் இம்முறை வைதீகக் கருத்தியலுக்கு மாறுபாடான முறையுமாகும். மீமாம்சம் என்பது அடிப்படையில் கடவுள் மறுப்பையும், நாத்திகத்தையும் கொண்டதாகும். வேதங்கள் இறைத்தன்மை வாய்ந்தவை, பரிபூரணமானவை, மாறாத் தன்மையையும், நித்தியத்தையும் கொண்டவை என்பதும், யாகம்செய்தல், மந்திரம் ஓதுதல், சமயச் சடங்காற்றுதல் ஆகிய கருமங்கள்தான் ஆன்ம முக்தி அடைவதற்கான ஒரே வழி என்பதும், வேதங்களும், பிராமணங்களும் மனிதனுக்குத் தேவையான அனைத்து மெய்யறிவையும் கொண்டுள்ளன என்பதும் மீமாம்சகர்களின் கோட்பாடாகும். வேதங்களின் மீது மாறாப்பக்திகொண்ட இவர்கள் கடவுளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் இவர்கள் ‘நாத்திகர்’ ஆனார்கள். மீமாம்சத்தில் நாத்திக உள்ளடக்கம் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. மீமாம்ச இலக்கியங்களில் கடவுளுக்கு எதிரான மிக ஆணித்தரமான பிரகடனங்களும், கடவுளுக்கு எதிரான தருக்கவியல் விளக்கங்களும் மிக ஏராளமாக உள்ளன. கடவுள் என்பது வெறும் கட்டுக்கதை. வேத தெய்வங்கள் வெறும் வார்த்தைகள் என்கின்றனர் இவர்கள். இந்தியத்தத்துவ வரலாற்றில், வேதத்தைப் புனிதமாகக் கருதும் மீமாம்சகர்கள், ‘கடவுள் மறுப்பாளர்கள்’ என்பதும் ‘நாத்திகர்கள்’ என்பதும் ஒரு வியப்பான விடயமாகும்.

   வேள்விச்சடங்குகள் என்பன கடவுள் மறுப்பையும், நாத்திகத் தன்மையையும் கொண்டன என்பதால் சங்கப் பிற்காலகட்ட வேந்தர்கள் சிலர் செய்த வேள்விச்சடங்குகளைக்கொண்டு அவர்களை வைதீக ஆதரவாளர்கள் எனக்கொள்ளமுடியாது என்பதுதான் இங்கு கவனிக்கவேண்டிய விடயமாகும். கி.மு.3ஆம் நூற்றாண்டுக்குப்பின் மீமாம்ச வேள்விச்சடங்குகள் தக்காணத்திலும் வட இந்தியாவிலும் ஆளுவோர்களிடம் செல்வாக்கு பெற்றதாக ஆகியிருந்தது. அதன் விளைவே தமிழகத்திலும் ஒரு சில வேந்தர்களிடம் எதிரொலித்தது எனலாம். ஆனால் சிறு, குறு மன்னர்களிடமும், வேளிர்களிடமும், பொதுமக்களிடமும் அது செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. அதுபோன்றே சங்ககாலத்தில் அந்தணர் எனப்படும் சான்றோர்கள்தான் தமிழகத்தில் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தனர். பார்ப்பனர்கள் கீழ்நிலை மக்களாகவே இருந்தனர். ஆனால் இடைச்செருகல்களும், திருத்தங்களும் இருவரும் ஒருவரே என்ற மயக்கத்தை ஏற்படுத்தி பார்ப்பனர்கள் சங்ககாலத்தில் உயர்நிலையிலும் செல்வாக்கோடும் இருந்தனர் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

பார்வை:

1.தொல்காப்பியத்தமிழர், சாமி சிதம்பரனார், மணிவாசகர் பதிப்பகம், டிசம்பர்-2000, பக்:88 & தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் சுபாசு சந்திரபோசு, இயல், 2016, பக்:52.

  1. தொல்காப்பியத்தமிழர், சாமி சிதம்பரனார், மணிவாசகர் பதிப்பகம், டிசம்பர்-2000, பக்:87-93 & தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் சுபாசு சந்திரபோசு, இயல், 2016. பக்:140,141.

3.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்:508.

4.ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம், முனைவர் க.நெடுஞ்செழியன், மனிதம் பதிப்பகம், டிசம்பர்-2002, பக்:179-186.

5.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்:514 & அகம், புறம், ப.பத்து ஆகிய நூல்கள்.

6.சங்க இலக்கியக்கோட்பாடுகளும் சமயவடிவங்களும், முனைவர் க.நெடுஞ்செழியன், பதிப்பாசிரியர்-இரா.சக்குபாய், அக்டோபர்-2009, பக்:11,12.

  1.  “ “  “ பக்: 31-34.

8.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 71.

9.தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் சுபாசு சந்திரபோசு, இயல், 2016, பக்: 36-70. & தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் கி.இராசா பாவை, டிசம்பர்-2007, புறத்திணையியல் - பக்: 31-61.

(தொடரும்)

- கணியன் பாலன், ஈரோடு



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பழந்தமிழகத்தில் வகுப்புகள் - 2

தொல்காப்பியப் பொருளதிகாரம்-மரபியல்:

            தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் கடைசி இயல் மரபியல் ஆகும். உயர்திணை, அஃறிணை ஆகியவைகளின் ஆண்பால், பெண்பால், இளமைக்குரிய மரபுப்பெயர்களைப் பற்றி இந்த இயல் பேசுகிறது. முக்கியமாக அஃறிணையில் ஓருயிர் முதல் ஐந்துயிர் வரையான உயிர்களின் ஆண்பால், பெண்பால், இளமைக்குரிய மரபுப்பெயர்கள் ஆகியன பற்றி இவ்வியல் விரிவாகப்பேசுகிறது. இதன் இறுதியில் பொது மரபுநிலை குறித்தும், நூல்கள் மரபுநிலை திரியாமல் எழுதப்படவேண்டும் என்பதாலும், பண்டைய விடயங்களை, மரபுகளை பாதுகாத்து வைப்பதும் நூல்கள்தான் என்பதாலும் நூல்கள் குறித்தும் இந்த மரபியல் விரிவாகப் பேசுகிறது எனலாம். மக்கள்தான் உயர்திணை என்பதையும் அவர்களின் ஆண்பால், பெண்பால், இளமைப் பெயர்கள் என்பன ஆண், பெண், பிள்ளை எனவும் மரபியல் குறிப்பிடுகிறது. மரபியலில் மொத்தம் 112 பாக்கள் உள்ளன. அதில் 72 முதல் 86 வரையான 15 பாக்கள் சமூக வகுப்புப் பிரிவுகள் குறித்துப் பேசுகிறது. புறத்திணை இயலில் வாகைத்திணையில் தமிழ்ச் சமூகத்தின் 7 பாகுபாடுகளும் அவர்களுக்குரிய கடமைகளும் ஒழுக்கங்களும் சொல்லப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழ்ச் சமூக வகுப்புப் பிரிவுகளின் மரபியல் அடிப்படையிலான உரிமைகள் குறித்து மரபியலில் உள்ள 72-86 வரையான பாக்கள் பேசுகிறது எனலாம்.

      kaniyan balan book on tamil history  இங்கு முதலில் அந்தணருக்குரிய மரபுரிமைகளைப் பற்றிப் பேசாமல் அவர்களிடம் இருக்கும் உரிமைப்பொருட்கள் சொல்லப்படுகின்றன. அவை முப்புரி நூல், கமண்டலம், முக்கோல்தண்டு, அமரும் பலகை ஆகியன. அடுத்ததாக அரசருக்குரியன என படை, கொடி, குடை, முரசு, குதிரை, களிறு, தேர், மாலை, முடி முதலியன சொல்லப்பட்டுள்ளன. முதலிருவருக்கும் இவை இவை உடையன எனச்சொல்லிய பின் வணிகருக்கு வணிக வாழ்க்கையும், 8 தானியங்களை விளைவிக்கவும், விற்கவும் உரிமையுண்டு எனவும் சூடும் பூவும், குலத்திற்கான பூவும் வணிகருக்கு உண்டு எனவும் கூறுகிறது.  வேளாளர்களுக்கு உழுது, உணவை பிறருக்கு அளித்தல் பணி மட்டும் உண்டு எனவும் வேந்தன் மூலம் படையும் மாலையும் பெற வேளாளர் உரிமை பெற்றவர் எனவும் கூறுகிறது. வணிகர் வேளாளர் அல்லாத பிற மக்கள் வேந்தனின் அனுமதியோடு வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், வாள் ஆகியவைகளைப்பெற உரிமையுடையவர்கள் என்பதும், இழிந்தோர்க்கு இந்த உரிமைகள் இல்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.  நான்கு வகுப்பில் இடையிலுள்ள அரசர், வணிகர், வேளாளர் எனப்படும் நிலக்கிழார்கள் ஆகியோர் படை வைத்துக்கொள்ளும் உரிமை கொண்டவர்கள் என்பதும் சொல்லப்பட்டுள்ளது. இதில் வேளாளர் அரச அனுமதியோடு படையும் கண்ணியும் வைத்துக்கொள்ளலாம் என்பது தனியாகச் சொல்லப்பட்டுள்ளது(மரபியல்-83). ஆனால் வணிகர்கள் படை வைத்துக்கொள்வதற்கான உரிமை குறித்து தனியாகச் சொல்லப்படவில்லை. இவை மரபியலில் 72-86 வரையான 15 பாக்களில் சொல்லப்பட்டுள்ளன(10).

வணிகரும் வேளாளரும் மூன்றாவது வகுப்பினர்:

          உரையாசிரியர்கள் பொதுவாக வணிகர்கள் மூன்றாவது வகுப்பு எனவும், வேளாளர்கள் நான்காவது வகுப்பு எனவும் பின் இறுதியில் வருபவர்கள் இழிசனர் என்றும் கூறுகிறார்கள். வணிகர், வேளாளர் தவிர இதரர்கள் குறித்து உரையாசிரியர்கள் எதுவும் சொல்லவில்லை. ஆனால் தொல்காப்பிய பொருளதிகார மரபியல் இதரர் குறித்தும் பேசுகிறது(மரபியல்-85). தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணையியலில் உள்ள வாகைத் திணையில் ஏழு பாகுபாடுகள்(புறத்திணையியல்-16) சொல்லப்பட்டுள்ளன. முதலாவது அந்தணர், இரண்டாவது அரசர், மூன்றாவதில் வணிகர், வேளாளர் ஆகிய இருவரும் இருப்பதாக உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். பின்னர் 4.அறிவர், 5.தாபதர், 6.போர்வீரரான பொருநர், 7.அனை நிலை வகை எனும் இதர வெற்றிவகையாளர்கள் என ஏழு பாகுபாடுகள் சொல்லப்பட்டுள்ளன. இதன்படி மூன்றாவதாக வருபவர்கள் வணிகரும், வேளாளரும் ஆவர். மொத்தம் நான்கு வகுப்புகள்தான் என்பதால் புறத்திணையியலுக்குரிய வாகைத்திணையின் ஏழு பாகுபாட்டில் உள்ள அறிவர், தாபதர் ஆகியவர்கள் சான்றோர்கள் என்பதால் அவர்கள் அந்தணர்களின் முதல் வகுப்பிலும், போர்வீரர்கள், இதர வெற்றி வகையாளர்கள் ஆகியோர் நான்காம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்(11).

        மரபியலில் முன்பு கூறியவாறு முதலில் அந்தணர், இரண்டாவது அரசர், மூன்றாவதாக வணிகர், நான்காவதாக வேளாளர் கூறப்படுகின்றனர். ஐந்தாவதாக வேளாளர், வணிகர் அல்லாத பிறர் குறித்தும்(மரபியல்-85) இறுதியாக இழிசனர் குறித்தும் கூறப்பட்டுள்ளது. இதன்படி இழிசனர் இல்லாது ஐந்து வகுப்புகள் ஆகின்றன. ஆனால் இழிசனர் இல்லாது நான்கு வகுப்புகள்தான் இருக்கின்றன என்பதால், புறத்திணையியலில் வாகைத் திணைப் பாகுபாட்டில் உள்ளவாறு வணிகர், வேளாளர் ஆகிய இருவரையும் ஒரே வகுப்பாக ஆக்கும்பொழுது 1.அந்தணர், 2.அரசர், 3.வணிகர்&வேளாளர், 4.பிறர் அல்லது ஏனையோர் என நான்கு வகுப்புகள் ஆகின்றன. இறுதியாக இழிசனர் வருகின்றனர். ஆகையால் மூன்றாவது வகுப்பில் வணிகர், வேளாளர் ஆகிய இருவரையும் சேர்க்கப்படவேண்டியது அவசியமாகிறது..

    மேலும் படை வைத்துக்கொள்ளும் உரிமை இடைப்பட்ட இரண்டாவது, மூன்றாவது ஆகிய இரு வகுப்புகளுக்கு மட்டுமே உண்டு என்பது மரபியலில் சொல்லப்பட்டுள்ளது(மரபியல்-78). அதற்கு உரையாசிரியர்கள் அரசர், வணிகர் ஆகிய இருவருக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு எனக் கூறியுள்ளனர். ஆனால் வேளாளர் அரசனின் அனுமதியோடு படை வைக்கும் உரிமை உடையவர் என்பது சொல்லப்பட்டுள்ளது(மரபியல்-83). வணிகருக்கு அந்த உரிமை குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. ஆகவே இடைப்பட்ட இரு வகுப்புகளில் மூன்றாவது வகுப்பைச்சேர்ந்த வணிகரைவிட வேளாளர்தான் படை வைத்துக்கொள்ளும் உரிமை உடையவர்களாக இருக்கின்றனர் எனலாம். வேளாளர், வணிகர் இருவருமே அரச அனுமதி இல்லாது படை வைத்துக்கொள்ள இயலாது. வேளாளர் எனப்படும் நிலக்கிழார்கள் ஊர்க்காவலுக்காகவும், போரின்போது அரசருக்கு உதவும்பொருட்டும் படைகளை வைத்திருக்கவும், வணிகர்கள் தங்கள் வணிகத்துக்கான பொருட்களைப் பாதுகாக்கும்பொருட்டு படைகளை வைத்திருக்கவும் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது உண்மையே. ஆனால் அரச அனுமதி இன்றி இவைகளை யாரும் வைத்திருக்க இயலாது. நிலப்பிரபுத்துவக் காலத்தில் நிலமானியத் திட்டங்களில் நிலக்கிழார் எனப்படும் நிலப்பிரபுக்கள் படை வைத்திருந்தனர். நமது பழந்தமிழ் அரசுகள் நகர்மைய, நகர அரசுகளாக இருந்தன. நகர்மைய அரசுகளில் நகரத்தைச்சுற்றி நூற்றுக்கணக்கான ஊர்கள் இருந்தன. இந்த ஊர்களின் பாதுகாப்புக்காக நிலக்கிழார்கள் பொறுப்பில் ஊர்க்காவல்படைகள் இருந்தன.

         ஆகவே இவைகளை வைத்துப்பார்க்கும் பொழுது இடைப்பட்ட இரு வகுப்புகள் மட்டும்தான் படை வைத்துக்கொள்ளும் உரிமை உடையவர்கள் எனும்பொழுது வேளாளர் இடைப்பட்ட மூன்றாவது வகுப்பில் வந்துவிடுகிறார். வேளாளருக்கு அரச அனுமதியோடு படை வைத்துக்கொள்ளும் உரிமை சொல்லப்பட்டுள்ளது(மரபியல்-83) என்பதை முன்பே குறிப்பிட்டோம். ஆகவே படை வைத்துக்கொள்ளும் உரிமை உடையவர் என்ற அடிப்படையில் வேளாளர் வணிகருடன் சேர்ந்து மூன்றாவது வகுப்புக்குரியவராக ஆகின்றார்.  இறுதியாக ஏனோர் அல்லது பிறர் உரிமை குறித்து மரபியல் 85ஆம் செய்யுள் பேசுகிறது. ஆகவே இந்தப் பிறர்தான் 4ஆம் வகுப்பினர் ஆவர். வேளாளர் 4ஆம் வகுப்பு எனில் இந்தப்பிறர் அல்லது ஏனோர் என்பவர்கள் 5ஆம் வகுப்பாக ஆவார்கள். அதன்பின் இறுதியாக இழிசனர் வருகின்றனர். அப்பொழுது இழிசனர்போக மொத்தம் 5 வகுப்புகள் இருக்கும். ஆனால் இழிசனர் இல்லாது மொத்தம் நான்கு வகுப்புகள்தான் இருக்கவேண்டும் என்பதால் வேளாளர்கள் மூன்றாம் வகுப்புக்குரியவர்களாக ஆகின்றனர்(12).   

     தொல்காப்பியப் பொருளதிகாரம் அகத்திணையியலில் உள்ள 28ஆம் பாடல் கல்வியும், தூதும் உயர்ந்தவர்களுக்குத்தான் எனக் கூறுகிறது. அதன் 34ஆம் பாடலுக்குப் பொருள்தரும் இளம்பூரணர் நாட்டைக்காப்பதற்கான கடமையில் வேந்தனை அடுத்து தூது போன்ற பணியைச் செய்வதற்கு உரியவர்கள் வணிகரும் வேளாளரும் தான் என்கிறார். தூது போவதற்கு உரியவர் வேளாளர் என்பதால் அவர்கள் உயர்ந்தவர்கள் ஆகின்றனர். அதன் 32ஆம் பாடல்படி காவற்பிரிவின்போது மன்னருக்குத் துணையாக இருக்கும் உரிமை வணிகருக்கும் வேளாளருக்கும் உரியது என்கிறார் இளம்பூரணர். அதே சமயம் அதன் 33ஆம் பாடல் கல்விற்கான பிரிவு உயர்ந்தோருக்கு உரியது என்கிறது என்பதால் அப்பாடலுக்கு கல்வி கற்பதற்கான பிரிவு வணிகருக்கு மட்டுமே உரியது எனப் பொருள் கூறுகிறார் இளம்பூரணர். ஆனால் கல்வியும், தூதும் உழுவித்து உண்ணும் வேளாளருக்கும் உரியது என நச்சினார்க்கினியார்(தமிழ் இலக்கணப்பேரகராதி, அகம்-4, ப-74) கூறுவதாகக் கூறுகிறார் முனைவர் ச.சுபாசு சந்திரபோசு(13). உழுவித்து உண்ணும் வேளாளர்கள் என்போர் நிலத்தில் மற்றவர்களைக் கொண்டு வேளாண்மை செய்பவர்கள், அதாவது நிலக்கிழார்கள் ஆவர். பொருளதிகாரத்தின் அகத்திணையியலில் உள்ள 28, 32, 33, 34 ஆகிய நான்கு பாடல்களையும், அதற்கான உண்மைப்பொருளையும், அதற்கு இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியவர் தந்த பொருளையும் இணைத்துப் பார்க்கும்பொழுது கல்வி, தூது, மன்னருக்கு உறுதுணையாக இருப்பது, நாட்டைக்காக்கும் கடமை செய்வது ஆகியன வணிகர், வேளாளர் ஆகிய இருவருக்கும் உரியது என்பதால் இருவரும் உயர்ந்தவர்கள் ஆகின்றனர் எனலாம். ஆகவே இப்பாடல்களின் படியும் வணிகரும், வேளாளரும் மூன்றாம் வகுப்பைச் சேர்ந்த உயர்ந்தவர்கள் ஆகின்றனர். வைதீகச் சிந்தனைப்படி வேளாளர் சூத்திர வகுப்புக்குரியவர்கள் என்ற கருத்தில் உரையாசிரியர்கள் இருந்ததால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலுக்கும் வேறு வேறான பொருளைக்கூறியுள்ளனர். வணிகரும் வேளாளரும் மூன்றாம் வகுப்பைச்சேர்ந்த உயர்ந்தோர்கள் எனக் கொள்ளும் பொழுது இப்பாடல்கள் தெளிவான பொருளைத்தரக்கூடியவனாக ஆகும்.

           ஆகவே பல கோணங்களில் ஆய்வு செய்யும்பொழுதும் வேளாளர்கள் எனப்படும் நிலக்கிழார்கள் மூன்றாம் வகுப்புக்குரியவர்களாகவே ஆகின்றனர். புறத்திணையியலில் உள்ள வாகைத் திணையின் பாகுபாட்டில் வணிகர், வேளாளர் ஆகிய இருவரையும் சேர்த்து மூன்றாவது வகுப்பினராகவே உரையாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். வைதீக மரபுப்படி வேளாளர்கள் ‘சூத்திரர்’ என்பதால் தொல்காப்பியம் உருவாகி, 1500 வருடங்களுக்குப்பின் வந்த உரையாசிரியர்கள் வைதீகச் சிந்தனையின் அடிப்படையில் வேளாளர்களை நான்காவது வகுப்பாக, அதாவது கீழோராகக் கொண்டு உரை எழுதியுள்ளனர் எனலாம். மேலும் இதில் செய்யப்பட்ட இடைச்செருகல்களும், திருத்தங்களும் இதற்குக் காரணமாகலாம்.

நான்காம் வகுப்பு:

         நான்காம் வகுப்பில் மக்களில் பெரும்பாலோர் வருவர். வேளாளர்களில் உழுவித்து உண்ணும் பெரும் நிலக்கிழார்கள் மட்டுமே மூன்றாம் வகுப்புக்குரியவர்கள் ஆவர். அவர்களில் சொந்த நிலத்தில் உழுது உண்ணும் சிறு குறு உழவர்களும், மற்றவர்களும், வேட்டுவர், இடையர், மீனவர் போன்ற நால்வகை நிலத்து வேளாண்மை மக்களும் நான்காம் வகுப்புக்குரியவர்களே ஆவர்.  அதுபோன்றே பெருவணிகர்கள் தவிர, சிறு குறு வணிகம், தொழில் போன்றனவற்றைச் செய்பவர்களும், கருமான், தச்சர் போன்ற சொந்தக்கருவிகளைக்கொண்டு சொந்தமாகத் தொழில் செய்பவர்களும் நான்காம் வகுப்புக்குரியவர்களே ஆவர். பாணர், கூத்தர் போன்றவர்களும், சிற்பி, ஓவியர் போன்ற பல்வேறு கலைஞர்களும் இதில் அடங்குவர். பார்ப்பனர்களும் நான்காம் வகுப்பினரே என்பது முன்பே சொல்லப்பட்டுள்ளது. வீரர்கள், அரசின் பணியாளர்கள் போன்றவர்களும் இதில் அடங்குவர். பொதுவாக முதல் மூன்று வகுப்பில் இல்லாதவர்கள் இதில் அடங்குவர். அதனால்தான் தொல்காப்பியர் பொருளதிகார மரபியல் 85ஆம்பாடலில் ஏனோர் எனக்குறிப்பிட்டார். அதாவது முதல் மூன்று வகுப்பில் சொல்லப்படும் உயர்ந்தோர்கள் அல்லாத பிறர் அனைவரும் இதில் அடங்குவர் என்பதே அதன் பொருளாகும். மரபியலில் அடுத்த 86ஆம் பாடலில் இழிசனர்கள் தனியாகச்சொல்லப்படுவதால் இழிசனர்கள் இதில் அடங்கார். ஆகவே உயர்ந்தோர்கள், இழிசனர்கள் ஆகிய இருவரும் இல்லாத ஏனையவர்கள் நான்காம் வகுப்புக்குரியவர்கள் எனலாம். மிகக்கேவலான அருவருப்பான தொழிலைச் செய்பவர்களே இழிசனர்கள் எனப்படுவதால் அவர்கள் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்திருப்பர். ஆகவே மக்கள்தொகையில் பெரும்பாலோனோர்கள் இந்த நான்காம் வகுப்பைச் சேர்ந்தவர்களே ஆவர். நான்காம் வகுப்புக்குரியவர்கள் கீழோர் எனப்பட்டாலும், கல்வி பெறல், தொழில் செய்யல், சொத்து சேர்த்தல் போன்ற அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு இருந்தன. ஆதலால் கீழோர் மேலோர் ஆவது இயல்பானதாக இருந்தது. அதனால்தான் அவர்கள் வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், வாள் ஆகியனவற்றைப் பெறும் உரிமை உடையவர்கள் என மரபியலின் 85ஆம் பாடல் கூறுகிறது.

அந்தணர்களின் மரபியல் உரிமைகள்:        

      அந்தணர்களிடம் இருந்ததாகச் சொல்லப்படும் கமண்டலம், முக்கோல் தண்டு, அமரும் பலகை ஆகியன தாபதர் எனப்படும் துறவிகளிடமும், அறிவர், கணியர் போன்றவர்களிடமும் இருந்துள்ளன. குறுந்தொகை 277ஆம் பாடலில் அறிவரான கணியர் ஒருவரிடம் சேமச்செப்பு எனப்படும் கமண்டலம் இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே அந்தணர்களுக்கு உரியவையாகச் சொல்லப்பட்டவை அந்தணர், அறிவர், தாபதர் ஆகியவர்களுக்கும் உரியவையாக இருந்துள்ளன என்பதுதான் உண்மை. ஆகவே இதன்படியும் அந்தணர் எனப்படும் சான்றோரில் அறிவர், கணியர், தாபதர் ஆகியவரும் அடங்குவர் எனலாம். அந்தணர் எனப்படும் சான்றோரில் அறிவர், கணியர், தாபதர் ஆகியவர் அடங்குவர் என்பது முன்பே விளக்கமாகவும், விரிவாகவும் சொல்லப்பட்டுள்ளது. கற்றல், கற்பித்தல், ஆய்வு செய்தல், அறிவுரை கூறுதல், பிரச்சினைகளை, தகராறுகளைப் பேசித்தீர்த்து வைத்தல், அரசர் முதல் அனைவராலும் மதிக்கப்படுதல் போன்றவைகளே அந்தணர் எனப்படும் சான்றோர்களின் மரபியல் உரிமைகளாக இருக்க முடியும். ஆனால் இங்கு சொல்லப்பட்ட உரிமைப்பொருட்கள் பொருத்தமாகப் படவில்லை.

          மரபுப்படி சான்றோர்கள் வேந்தனுக்கும் அறிவுரை கூற உரிமை உடையவர்கள் என்பதை சங்க இலக்கியம் பேசுகிறது. ஆனால் இங்கு அந்தணர்களுக்குச் சொல்லப்பட்ட உரிமைப்பொருட்கள் வைதீகக் கண்ணோட்டத்தில் சொல்லப்பட்ட இடைச்செருகல்களாகத் தெரிகிறது. பார்ப்பனர்களும் இப்பொருட்களை வைத்திருந்தனர் என்பதை குறுந்தொகை 156ஆம் பாடல் பதிவு செய்துள்ளது. அதில் முள்முருங்கை மரத்தில் செய்த தண்டும், கமண்டலமும் வைத்திருந்த பாங்கனான பார்ப்பனனிடம் ‘எழுதப்படாத உனது வேதத்தில் காதலர்களைச் சேர்த்து வைக்கும் மந்திரம் ஏதாவது இருக்கிறதா’ எனக் கேலியோடு பாண்டியர் தலைவன் வினவுகிறான். ஆகவே சங்ககாலத்தில் பார்ப்பனர்களும், வேதமும் மதிக்கப்படவில்லை என்பதை இப்பாடல் உறுதி செய்கிறது. எனினும் பார்ப்பனர்கள் தாங்கள் சங்க காலத்தில் பெரும் செல்வாக்கு பெற்று, உயர்தோர்களாகவும் இருந்தோம் எனக் காட்ட இடைச்செருகல்கள், திருத்தங்களின் மூலம் முயற்சி செய்தனர் என்பதை இந்த உரிமைப் பொருட்கள் வெளிப்படுத்துகின்றன எனலாம்.

அரசரும், அந்தணரும்:

         அரசர், அந்தணர் ஆகிய இவர்களில் அந்தணர் முதல் வகுப்பாகவும் அரசர் இரண்டாம் வகுப்பாகவும் சொல்லப்பட்டுள்ளனர். ஆனால் தொல்காப்பியப் பொருளதிகார மரபியலில் அந்தணருக்கு உரியவை அனைத்தும் அரசருக்கும் உரியவை என்பது சொல்லப்பட்டுள்ளது(மரபியல்-74). அதே சமயம் அரசனுக்கு உரிய படை, குடை முதலியவைகள் அந்தணருக்கு உரியவை ஆகா. மேலும் நெடுந்தகை, செம்மல் முதலிய புகழுரைகள் பாடாண்திணை மரபுப்படி அரசருக்கு மட்டுமே உரியவை எனவும் அவை அந்தணருக்குப் பொருந்தி வாராது எனவும் சொல்லப்பட்டுள்ளது(மரபியல்-75). அதே சமயம் அரசருடைய கருமங்களில் வரையரை இல்லாமல் பங்குகொள்ள மட்டுமே அந்தணர்கள் உரிமை உடையவர்கள் என்பதும் சொல்லப்பட்டுள்ளது(மரபியல்-84). இந்த விளக்கங்களின்படி அரசன் அந்தணரைவிட உயர்ந்தவனாகவே கருதப்பட வேண்டியவன் ஆவான். சங்க இலக்கியச்சான்றுகளின் படியும் நடைமுறையில் அரசன் அந்தணர்களைவிட மிக உயர்ந்தவனாகவே இருந்துள்ளான். அப்படி இருந்தும் முதலாவதாக அந்தணரும், இரண்டாவதாக அரசரும் சொல்லப்பட்டுள்ளனர் என்பது வைதீகச் சிந்தனைகளின் விளைவாக ஏற்பட்ட இடைச்செருகலாக இருக்கலாம்.   ஆகவே 1.அரசர், 2.அந்தணர், 3.வணிகர்&வேளாளர், 4.இதரர் அல்லது ஏனோர் என்கிற வரிசை முறையே தொல்காப்பியகால வரிசை முறை எனலாம்.

மேலோர், கீழோர், இழிசனர்:

          தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் உள்ள 31, 142, 626, 633, 634 ஆகிய ஐந்து பாக்கள் மேலோர், கீழோர், இழிசனர் ஆகியனர் குறித்துப் பேசுகிறது. இதன் அகத்திணையியலில் உள்ள 31ஆம் பாடல் “மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே” எனக்கூறுகிறது. இதன் மூலம் மொத்தம் நான்கு வகுப்புகள்தான் சொல்லப்படுகின்றன என்பது உறுதியாகிறது. இதன் கற்பியலில்(பா-2) உள்ள 142ஆம் பாடல், “மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் கீழோர்க்கும் ஆகிய காலமும் உண்டே” என்கிறது. இதன்படி நால்வரில் மூவர் மேலோர் என்பதும் நான்காம் வகுப்புக்குரியவர் கீழோர் என்பதும் சொல்லப்படுகிறது. இதன் பொருளதிகார மரபியலில்(பா-78) உள்ள 626ஆம் பாடல், “இடை இருவகையோர் அல்லது நாடின் படைவகை பெறாஅர் என்மனார் புலவர்” என்கிறது. ‘இடை இருவகையோர்’ என்பதன் மூலம் மொத்தம் நால்வர் என்பது இங்கும் உறுதியாகிறது. அதே பொருளதிகார மரபியலில்(பா-85) உள்ள 633ஆம் பாடலின் இறுதி வரி “மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய” என்கிறது. இப்பாடல் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வர்களுக்குப்பின் வருகிறது. ஆகவே இந்த நால்வர் போக ஐந்தாவதாக ஏனையோர் அல்லது பிறர் இருந்தனர் என்பதை இப்பாடல் சொல்கிறது. உரையாசிரியர்களும் வேளாளர் அல்லாத பிறர் எனத் தெரிவிக்கின்றனர். ஆகவே இந்த நால்வர் அல்லாத பிறர் இருந்தனர் என்பது உறுதியாகிறது. அதே பொருளதிகார மரபியலில்(பா-86) உள்ள அடுத்த 634ஆம் பாடல், “அன்னராயினும் இழிந்தோர்க்கு இல்லை” என்கிறது. இதன் மூலம் இந்தப் பிறருக்குப்பின் இழிசனர் என்பவர் இருந்தனர் எனத்தெரிகிறது. மேற்கண்ட ஐந்து பாடல்கள் போக அதே பொருளதிகாரத்தில் 28, 33, 36, 213 ஆகிய நான்கு பாடல்களில் உயர்ந்தோர் என்ற சொல், மேலோர் என்ற பொருளில் வருகிறது. இதில் முதல் மூன்று பாக்கள் அகத்திணையியலிலும், இறுதிப்பாடல் பொருளியலிலும் வருகிறது(14).

         மேற்கண்ட பாடல்களின் மூலம் மேலோர், கீழோர், இழிசனர் ஆகிய மூன்று பிரிவுகள் இருந்தன எனவும் மொத்தம் நான்கு வகுப்புகள் எனவும்  தெரிகிறது. நாம் முன்பு செய்த ஆய்வின் மூலம் கிடைத்த முடிவின்படி மூன்றாவது வகுப்பில் வணிகர், வேளாளர் ஆகிய இருவரையும் சேர்க்கும் பொழுது, 1.அந்தணர், 2.அரசர், 3.வணிகர்&வேளாளர் ஆகிய மேலோர் மூவர் எனவும் கீழோரான நாலாவது வகுப்பில் இதரர், போர்வீரர், பார்ப்பனர், பாணர் போன்றவர்களும் வருவர். இறுதியாக இழிசனர் என்பவர்கள் வருவர். இம்முறைதான் இப்பாடல்களில் உள்ள விடயங்களுக்குப் பொருந்தி வருகிறது என்பதோடு வேளாளரை வைதீகச் சிந்தனைப்படி நான்காவது வகுப்பாகக் கொண்டதுதான் பல குழப்பங்களுக்குக் காரணம் எனவும் தெரிகிறது. படை வைத்துக்கொள்வதும், தூது செல்வதும், வேந்தனுக்கு உதவுவதும் வேளாளர் கடமை எனும்பொழுது தொல்காப்பியர் வேளாளர்களை மேலோர் எனக்கொண்டே இவைகளைக் கூறியுள்ளார் எனலாம்.

        சங்ககால இலக்கண இலக்கியங்களைக்கொண்டும் இன்ன பிற சான்றுகளைக்கொண்டும் பழந்தமிழகத்தில் நான்கு வகுப்புகளும் இறுதியாக இழிசனரும் இருந்தனர் என முடிவு செய்யலாம் அவைகளில் 1.அந்தணர், 2.அரசர், 3.வணிகர்&வேளாளர், 4.இதரர் அல்லது ஏனோர் ஆகிய நான்கு வகுப்புகளை மட்டுமே தொல்காப்பியர் வகுப்புகளாகக் கூறுகிறார். இதில் இதரர், வீரர், பார்ப்பனர், பாணர் போன்றோர் கீழோர் எனப்படும் நான்காம் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இழிசனர் எனப்படும் இறுதி வகுப்பினருக்குத் தொல்காப்பியர் காலத்தில் எந்த உரிமையும் இருக்கவில்லை எனத் தெரிகிறது. கிரேக்கத்திலும், உரோமிலும் அடிமைகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதுபோல் இங்கும் இழிசனர்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை எனலாம். இறுதியாக அந்தணர், அரசர் என்ற வரிசை முறை மாற்றப்பட்டு, முதல்வகுப்பில் அரசரும், இரண்டாம் வகுப்பில் அந்தணரும் வைக்கப்படவேண்டும் என்பதே தொல்காப்பிய வரிசை முறையாகவும், பழந்தமிழ்ச் சமூகத்தின் வரிசைமுறையாகவும் இருந்திருக்கமுடியும்.

சங்ககாலக் கல்வியும், திருமணமும்:

      பழந்தமிழ்ச் சமூகத்தில் வகுப்புகள் இருந்தன. ஆனால் சாதிகள் இல்லை. வகுப்புகள் தொழில், செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவானவை. ஆனால் சாதி என்பது அகமணமுறையைக்கொண்டதும், பிறப்பின் அடிப்படையில் இருப்பதும் ஆகும். ஆகவே சாதி, வகுப்பு இரண்டும் வேறு வேறானவை ஆகும். சங்ககாலத்தில் உடன்போக்கு என்பது சமூக அங்கீகாரம் பெற்ற திருமணத்திற்கு முந்தைய நிகழ்வாகும். சங்ககாலத்தில், நால்வகுப்பிலுள்ள அனைத்துப் பெண்களும் அனைத்து ஆண்களோடும் உடன்போக்கு மேற்கொண்டு திருமணம் செய்துகொண்டனர் என்பதை சங்கப்பாடல்கள் உறுதி செய்கின்றன. செல்வந்தர் மகள் ஏழையை மணப்பதும், ஏழைப்பெண் செல்வந்தனை மணப்பதும் நடைபெற்றதை சங்க இலக்கியம் பேசுகிறது. அதன்மூலம் அகமணமுறையும் சாதியும் சங்ககாலத்தில் இல்லை என்பது உறுதியாகிறது(15). அதுபோன்றே, மிகமிகச்சாதாரண மனிதர்களில் பெரும்பாலோர் எழுதப்படிக்கத் தெரிந்திருந்தனர் என்பதோடு அவர்களில் பலர் சங்க இலக்கியப் படைப்புகளைப் படைக்கும் அளவு கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்தனர்(16). பாணர், விறலி, குயத்தியர் போன்ற நான்காம் வகுப்புக்குரியவர்களும் சங்க இலக்கியங்களைப் படைக்கும் திறன் பெற்றவர்களாக இருந்தனர். தொல்காப்பியப் பொருளதிகாரம் அகத்திணையியலில் உள்ள 33ஆம் பாடலுக்கான உரையில் நச்சினார்க்கினியர் கல்வி நால் வகுப்பாருக்கும் உரியது எனக்கூறியுள்ளார். வள்ளுவரும் மேல் குடிப்பிறப்பினராயினும், கீழ் குடிப்பிறப்பினராயினும் கல்லாதவருக்குப் பெருமை இல்லை எனக் கூறுகிறார்(குறள்-409). ஆகவே சங்ககாலத்தில் அனைவரும் கல்வி கற்பதற்கான உரிமை கொண்டவராக இருந்தனர் என்பது உறுதியாகிறது.

        மேற்கண்ட விளக்கங்களின் காரணமாகக் கீழோர் எனப்படும் நாலாவது வகுப்பினர் வீரம், கல்வி, தொழில், வணிகம், செல்வம் ஆகியவைகளின் காரணமாக மேலோர் ஆவது என்பதும் மேலோர் கீழோர் ஆவது என்பதும் சங்ககாலத்தில் இருந்து வந்தது எனலாம். சிறந்த வீரர்கள் வேந்தர்கள் மூலம் நிலம் பெற்று நிலக்கிழார் ஆவதும், சாதாரண மக்களில் நன்கு கல்வி கற்றவர்கள் அறிவர், தாபதர், அந்தணர் என ஆவதும், தொழில், வணிகம் ஆகியவற்றைத்தொடங்கி அதில் பெரும் செல்வந்தவர்கள் ஆவதும் கீழோர் மேலோர் ஆவதற்கு வழி செய்தது எனலாம். மிக ஏழ்மை நிலையில் உள்ளவர் பெரும் செல்வந்தர் ஆகி சமூகத்தில் உயர்நிலையை அடைவதும், உயர்நிலையில் இருந்த பெருஞ்செல்வந்தர் வறியவர் ஆகி சமூகத்தில் கீழ்நிலையை அடைவதும் இன்றும் உலகெங்கும் இருந்து வருவதுபோல்தான் சங்ககாலத்திலும் இருந்து வந்தது எனலாம். கல்வி, செல்வம் ஆகியவற்றின் அடிப்படையில் இன்றும் உலகம் முழுவதும் வகுப்புகள் இருப்பது போல்தான் அன்றும் வகுப்புகள் இருந்தன.

முடிவுகள்:

           பழந்தமிழ்ச்சமூக வகுப்புகள் குறித்து இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகளின் வழியாகக் கீழ்கண்ட முடிவுகளை நாம் வந்தடையலாம்.

1.அந்தணர்கள் என்பவர்கள் சான்றோர்கள் ஆவர். தாபதர், அறிவர், கணியர் போன்றவர்களும் இதில் அடங்குவர். அந்தணர்களும் பார்ப்பனர்களும் வேறு வேறானவர்கள். அந்தணர்கள் எனப்படும் சான்றோர்கள் உயர்ந்தோர்கள் ஆவர். பார்ப்பனர்கள் கீழோர் எனப்படும் நான்காம் வகுப்பினர் ஆவர்.

2.தொல்காப்பியர் காலத்தில் வேள்வி செய்தல் என்பது இருக்கவில்லை. வேள்வி செய்தல் என்பது வைதீகத்துக்கு மாறுபட்ட நாத்திகமும் கடவுள்மறுப்பும் கொண்ட மீமாம்சக் கருத்தியலாகும். கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் ஒருசில தமிழக வேந்தர்களால் இது செய்யப்பட்டது. ஆனால் பொது மக்களிடத்தில் அது செல்வாக்கு பெற்றிருக்கவில்லை.

3.அந்தணர், அறிவர், தாபதர் போன்ற சான்றோர்கள் முதல் வகுப்பையும் அரசர்கள் 2ஆம் வகுப்பையும் வணிகர்களும், வேளாளர்களும் மூன்றாம் வகுப்பையும் சேர்ந்த மேலோர்கள் ஆவர். பிறர் அல்லது ஏனையோரும், போர்வீரர்களும், பார்ப்பனர், பாணர், கூத்தர், பொருநர் போன்றவர்களும் கீழோர் எனப்படும் நான்காம் வகுப்புக்குரியவர்கள் ஆவர். இறுதியாக வருபவர்கள் இழிசனர் ஆவர். இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

4.அந்தணர்கள், அரசர்கள் என்ற வரிசைமுறை மாற்றப்பட்டு அரசர்கள் முதல் வகுப்பிலும் அந்தணர்கள் இரண்டாம் வகுப்பிலும் இருப்பதே முறையானது..

5.சங்ககாலத்தில் வகுப்புகள் இருந்தன. ஆனால் அன்று சாதிகள் இல்லை என்பதாலும், கல்வி அனைவருக்கும் உரியதாக இருந்தது என்பதாலும், நான்கு வகுப்பிலுமுள்ள அனைத்துப் பெண்களும் அனைத்து ஆண்களையும் மணந்து கொண்டனர் என்பதாலும், ஏழைகள் செல்வந்தர் ஆவது நடைபெற்றது என்பதாலும் கீழோர் மேலோர் ஆவதும், மேலோர் கீழோர் ஆவதும் நடைமுறையில் இருந்து வந்தது எனலாம்.

பார்வை:

10.தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் சுபாசு சந்திரபோசு மரபியல் - பக்: 327-330.

11, 12.தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் சுபாசு சந்திரபோசு புறத்திணையியலில் வாகைத்திணை, பக்: 52,53. & தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் கி.இராசா, பாவை, டிசம்பர்-2007, பக்: 47-48.

13.தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் சுபாசு சந்திரபோசு அகத்திணையியல் பக்: 15,16. & தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் கி.இராசா, பாவை, டிசம்பர்-2007, பக்: 14-16.

14.தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் சுபாசு சந்திரபோசு, இயல், 2016(ஆதார நூல்).

15 & 16. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்:855-857 & 105-109.

- கணியன் பாலன், ஈரோடு



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

(ஆரிய மொழியினரின் புலப்பெயர்வு குறித்த சமகால விவாதங்கள் பற்றிய ஆய்வு)

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடிகள் பற்றிய கண்டறியாத கதையாடல்களின் மிதப்பால் எம் தலை கனக்கிறது. ஜெர்மனிய பாசிசம் இந்துத்துவப் பாசிசம் சிங்கள இனத்துவேசம் என்று கண்ணை மூடிக்கொண்டு ஆதிக்கம் தம் நலிந்த தர்க்கம் கொண்டு எம் தலைகளில் இடிக்கிறது. இந்த வரிசையில் திராவிட தேசியமும் இணைக்கப்பட வேண்டியதே. திராவிடம் என்ற கட்டுக்கதையை காவிக் கொண்டு இன்று தமிழ் நாட்டில் லட்சாதிபதிகளாயும் கோடீஸ்வரர்களாயும் லாபம் ஈட்டிக் கொண்டிருக்கும் தமிழ் கூட்டங்கள் மேற்கூறிய ஒடுக்குமுறை வரிசைக்கு ஒன்றும் பின்தங்கியவை அல்ல.

திராவிட தேசியமும் திராவிட இனத்துவமும் ஏழை/விளிம்பு மக்களுக்கு ஒரு சதத்திற்கும் உதவாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறும் அதே தருணத்தில் இன்று இந்தியாவில் மிகமிக முக்கியமாக ஓரங்கட்டப்பட வேண்டியிருப்பது அளவுக்கதிகமாக நடந்துகொண்டிருக்கும் ஆரியக்கூத்து என்பதை நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது. பச்சைப் பொய்யும் புரட்டும் சுரண்டலும் கொண்டு ஏற்கனவே ஒடுங்கி நாடி வதங்கிப் போயிருக்கும் பெரும்பாலான ஏழைத் தலித்துக்களின் தலைவிதியை தங்கள் கைகளில் வைத்து உருட்டி விளையாட இவர்கள் இன்னமும் திட்டம் தீட்டுகிறார்கள்.

பிராமணியத்தின் கொடுமை இன்றைக்கு நேற்று உருவானதல்ல என்று எமக்குத் தெரியும். ஆனால் இந்துத்துவ சக்திகள் வெளிநாட்டு ஆதரவுடன் வெளிப்படையாக செய்யும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. இதை ஒத்தூத சில பிராமணர் இல்லாத ஆதிக்க சக்திகளும் இன்று வெளிப்படையாக கிளம்பியிருப்பது கவனிக்கப்பட வேண்டியது. யாழ்ப்பாணத்து வசதிபடைத்த வெள்ளாளரும் வெளிநாட்டு முதலாளிகளும் இன்று கண் சிமிட்டிக் கொண்டு சிரித்துக் கொண்டு இந்தியா வருகிறார்கள். அடிக்கிற கொள்ளையில் அஞ்சோ பத்தோ தந்தால் போதும் நானும் ஆடுவேன் ஆரியக் கூத்தென்று இவர்களும் கூட்டுச் சேர்ந்துள்ளார்கள். பசுத்தோல் போர்த்தி தலித் இறைச்சி உண்ட காலம் போய் இன்றைக்கு வெளிப்படையாகவே ஒடுக்கப்பட்ட ஏழை மக்களுக்கு எதிராக இவர்கள் இயங்குகிறார்கள். இதற்கு தலித்துகள் மத்தியில் இருந்து கிளம்பியிருக்கும் எதிர்ப்பும் ஒரு காரணம்.

தமிழ் நாட்டில் இன்று பிராமணியத்துக்கு எதிராக கிளம்பியிருக்கும் போராட்ட இயக்கத்தின் வெக்கையில் வெந்த இந்த பிராமண நஞ்சுகள் எந்தவித கூச்சமும் இன்றி வெளிச்சத்தில் வைத்து விசத்தை துப்புகிறார்கள். இந்த குறை மனிதர்களை இன்று சிரமமின்றி அடையாளம் காண முடிகிறது.

இந்த ஆரியக்கூத்துக்கு தத்துவார்த்த சமூக விஞ்ஞான பொருளாதார முற்போக்குத்தனங்கள் என்று எதுவுமில்லை. இருப்பினும் சில கத்துக்குட்டி முனைவர்கள் பேராசிரியர்கள் பொறுக்கிகள் என்று மூக்கைப் பொத்தினால் வாயைத் திறக்கத் தெரியாதவர்கள் எல்லாம் கதையாடல்களில் இறங்கியுள்ளது மிகக்கேவலம். இவர்களுக்கு செம்மை அடி கொடுப்பது சுலபமான விடயம். அ.மார்க்ஸ் சிரமப்படாமல் அந்தப்பக்கம் பார்த்து ஒரு சவுக்கை வீசியிருக்கிறார். இன்றைக்கு இருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் இவர்கள் மேல் தொடர் தாக்குதல் செய்வது அவர்களின் குழந்தைப்பிள்ளைக் கருத்துக்களைத் தவிடு பொடியாக்குவது கட்டாய தேவையாக உள்ளது. ஆரியக்கூத்துப் போல் ஆயிரம் புத்தகம் வரவேண்டியுள்ளது.

பிராமணியத்திற்கு எதிரான அடிதடிகளுக்கு அ.மார்க்ஸ் புதியவரல்ல. பெரியாருக்கு பின்பு மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருந்த தலித் போராட்டத்துக்கு இன்று தமிழ்நாட்டில் மீண்டும் உயிர் கொடுக்க முன்னணியில் நிற்பவர்களில் அவர் ஒருவர். அ.மார்க்ஸ் எப்படி தன் கருத்துக்களை வைக்கிறார் என்பது பற்றி பல்வேறு விதமான துவேசங்கள் குட்டிக் கதைகள் நடமாடி வருகின்றது. இதற்குள் எழும்பும் சில நியாயமான கேள்விகளில் ஆங்கிலப் புத்தகங்களைப் படித்துவிட்டு சுருக்கி ஒரு கட்டுரை எழுதிவிடுகிறார் என்பதும் ஒன்று. இன்றிருக்கும் சூழலில் எப்படி எழுதினால் தான் என்ன? இருப்பினும் ஆரியக் கூத்தை எதிர்ப்புத் தெரிவித்த ஆங்கிலக் கட்டுரை ஆசிரியர்களுக்கு அர்ப்பணித்தது மட்டுமன்றி ஆதாரபுர்வமான தகவல்களுடன் மிகவும் கவனமாக எழுதியுள்ளார் அ.மார்க்ஸ்.

எம்மைப் பொறுத்தவரையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது தான் எமக்கு முக்கியம். ஆதிக்க சக்திகளுக்கு எதிராக ஒடுக்கும் வர்க்கத்துக்கு எதிராக யார் எப்படிப்பட்ட வித்தைகளைப் பாவித்தாலும் எமக்கு கவலையில்லை. முடிந்தால் நீங்களும் எழுதுங்கள் எங்களுடன் சேர்ந்து. சுரண்டலுக்கு எதிராக கிளம்புங்கள். பாராட்டி தலையில் வைத்து கொண்டாடுவோம். உமக்கு மத்தியில் பெரும்பான்மையான மக்கள் பட்டினியாலும் அநாவசிய அடக்குமுறையாலும் செத்து அழிந்துகொண்டிருக்கும் பொழுது நாற்காலி வாதம் பேசிக்கொண்டிருக்க நமக்கு நேரமில்லை.

ஆதிக்க வர்க்கம் கட்டமைக்கும் பிரமைகளை உடைப்பதற்கு அ.மார்க்ஸ் செய்யும் எழுத்தோ நடையோ நடனமோ உதவியாக இருக்கும் பொழுது அதற்கு கண்மூடி ஆதரவு கொடுக்கும் உங்கள் பார்வையில் முட்டாள் ஆக இருக்கவே நாம் விரும்புகின்றோம். அந்தச்சூட்டில் அ.மார்க்ஸ் வெளியிட்டிருக்கும் புத்தகம் மிக முக்கியமான புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்று கூறுகிறோம். ஆரிய புத்தியில்லா ஜீவிகளின் திருகுதாளங்கள் சிந்துவெளி நாகரீகத்தைச் சூறையாட அவர்கள் படும்பாடுகள் முதற்கொண்டு இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நடக்கும் பிராமணியச் சூழ்ச்சிகள் பல்வேறு தகவல்களை சுருக்கி சுவைபடத் தந்துள்ளார் அ.மார்க்ஸ். இதை படிக்க விரும்புபவர்கள் பின்வரும் விலாசத்தில் எதிர்வெளியீட்டை தொடர்பு கொள்ளலாம்.

எதிர்வெளியீடு, 305, காவல் நிலையம் சாலை, பொள்ளாச்சி 642 001, இந்தியா
தொலைபேசி (04259) 226012 மின்னஞ்சல் : ethirveliyedu@sify.com
இங்கிலாந்தில் பெற்றுக்கொள்ள : சேனன் : Tp+senan@hotmail.com

இந்தியாவுக்கு வெளியே அதிகளவு இந்தியர்கள் வாழும் இடமான இங்கிலாந்திலும் இதைப் படிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இங்கும் இடம்பெயர்ந்த பிராமணியம் ஆதிக்கத்தை நிறுத்தவில்லை. பிராமண கிளப்புகள் ஹரேகிருஷ்ணா கோஷ்டிகள் பல்வேறு வகை சாமியார்கள் சுத்த சைவ சாப்பாட்டுக் கடைகள் என்று பிராமணிய மேலாண்மையை இந்தியக் கலாச்சாரமாக இங்கு கட்டியெழுப்பியுள்ளார்கள். இங்கிலாந்து ஆதிக்க ஆளும் வர்க்கம் எதுவித எதிர்ப்பும் இன்றி இந்துத்துவ மேலாண்மை கட்டமைப்பை ஏற்றுக் கொள்வதோடு மட்டுமின்றி அதை ஊக்குவித்தும் வருகிறது. இங்கு பாடசாலைகளில் மதம் பற்றிய புத்தகங்களில் இந்துமதம் பற்றி கற்பிக்கப்படுவதெல்லாம் மேலாதிக்க தன்மை உள்ளனவாகவே உள்ளது.

இங்கிலாந்து இளவரசன் (21ம் நூற்றாண்டிலும் இப்படி எழுத கை கூசுகின்றது) சார்லஸ் மற்றும் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று ஆளும் வர்க்கம் மாலை அணிந்து இந்துக் கோயில்களில் இடைக்கிடை வலம் வருவதன் மூலம் இங்கிலாந்து வாழ் இந்திய மக்களை வழிக்கு கொண்டு வந்து விட முடியும் என்று நம்புகின்றனர். அதற்கேற்றாற் போல் இங்கிருக்கும் இந்துக் கோயில்களின் தொகை கொஞ்சநஞ்சமல்ல. இங்கு கோயில் வியாபாரம் லாபமீட்டும் ஒரு பெரிய வியாபாரமாக வளர்ந்து வருகின்றது. கோயில் தொடங்கும் போது அதை ஒரு வியாபாரமாக பதிவுசெய்து பின் அதை லாபகரமானதாக முன்னேற்றி அறாவிலைக்கு விற்பது சகஜமாக நடக்கிறது. எல்லாக் கோயில்களும் பிராமணர்களாலும் ஆதிக்க வெள்ளாளர்களாலுமே நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இதில் வரும் லாபத்திற்காக அடிபடும் உயர்சாதி தமிழர்களின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே போகின்றது. லண்டனில் சில கோயில்களில் ஐயர்மார் பெண்களுடன் விடும் சேட்டைகள் எல்லோருக்கும் தெரிந்ததே.

பல வருடங்களுக்கு முன்பு நான் நங்கநல்லூரில் இருந்த போது அருகில் இருந்த ஒரு கோயில் ஐயருக்கும் எனக்கும் அடிக்கடி பிரச்சனை வரும். என்னை அவர் காணும் போதெல்லாம் கோயிலுக்கு வரும்படி கட்டாயப்படுத்துவதும் கதைக்கும் போது அவர் கூறும் முட்டாள் வாதங்களும் தான் எனக்கும் அவருக்கும் பிரச்சனை வருவதற்கு காரணம். அவர் தன் மனைவியை அடித்து துன்புறுத்துவதாகவும் அயல் வீடுகளில் உள்ள பெண்களுடன் அவர் சேட்டைகள் விடுவதாகவும் கேள்விப்பட்டு நாம் அவருடன் கதைப்பதையே நிறுத்திவிட்டோம். பின்னர் இதே ஐயர் எப்படியோ ஒரு வழியாக லண்டன் வந்து சேர்ந்து முருகன் கோயிலில் பூசை செய்கிறார் என்று கேள்விப்பட்டதும் எமக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் இங்கும் கோயிலில் ஐயராக இருந்து கொண்டு தனது லீலைகளை தொடர்ந்திருக்கிறார். இறுதியில் முறையாக ஒரு பெண்ணிடம் மாட்டிய இவர் கற்பழிக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றார். இவர் ஒரு உதாரணம் மட்டுமே. இது போல் கம்பி எண்ண வேண்டியவர்கள் நிறைய பேர் இன்னும் வெளியில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்ச்சகர்களின் பாடு இப்படியிருக்க இங்கு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் புசையில் ஈடுபடாத ஒரு ஐயரும் உலாவி வருகிறார். பத்மநாப ஐயர் என்ற இந்த ஐயர் இலக்கியத்துக்கான சர்வதேச பரிசு ஒன்றை கனடாவில் பெற்றவர். ஆனால் இவரது நீண்ட கால இலக்கிய வரலாற்றில் இவர் ஒரு இலக்கியமும் படைத்ததில்லை. இலக்கியம் எதுவும் படைக்காமல் இலக்கியவாதியாக உலாவும் ஒரே ஒரு நபர் இவர் தான். இவர் மேல் அன்பும் பண்பும் கொண்டு பல்வேறு முன்னணி அரசியல் நிர்வாகிகள் ஆளுமைகள் அவர் பற்றி கண்ணியமான கருத்துக்களை வைக்கின்றனர். எமக்கு காதல் சார்ந்து சிந்தித்தல் வராது என்றபடியால் இவர்மேல் கடும் விமர்சனம் வைக்கும் துணிவு உண்டு. இவர் ஐயர் என்ற பெயரை பாவிப்பது பற்றி ஏற்கனவே பல தடவை நாம் விமர்சித்துள்ளோம். லண்டனில் நடந்த பல கூட்டங்களில் பங்குபெற்று உரையாடும்படி பல தடவைகள் கேட்டிருந்தோம். அவர் மறுத்துவிட்டார். புலிக்கு மிஞ்சி வேறு எந்த விலங்கினத்திலும் நம்பிக்கை அற்ற இந்த சைவக்காரரின் உட்கிடப்பு கடந்த இலக்கியச் சந்திப்பு நடந்த போது கொஞ்சம் வெளிவந்தது.

இலக்கியச் சந்திப்பு நடத்தியவர்கள் அதற்காக சிலரை இலங்கையில் இருந்து அழைக்க முடிவு செய்திருந்தார்கள். அதில் ஒருவர் பௌசர். இதை அறிந்த ஐயர் மனித உரிமைகளை மீறிய பௌசரை அழைக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். அதற்காக நிதர்சனத்தில் வாசித்த சில செய்திகளை காரணங்களாக சுட்டிக் காட்டினார். ஆனால் அவர் எதிர்ப்புக்குப் பின்னால் இருந்தது முஸ்லீம் எதிர்ப்புணர்வு என்பது பலரும் அறிந்ததே. முஸ்லீம் எதிர்ப்புணர்வு என்ற புயல் கிளம்பியவுடன் இவரது படம் ஒன்றை தமிழர் தகவல் வெளியிட்டு பிரபலப்படுத்தியது. அதில் அவர் படுத்துக் கொண்டு இஸ்லாம் புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறார்.

புத்தகத்தில் இஸ்லாம் என்று எழுதியிருப்பது படத்தில் தெளிவாகத் தெரிந்தது. ஆக்கப்புர்வமான அறிவுள்ள புத்தகங்களை படிக்க மறுப்பவர் ஐயர் என்பது அவர் நண்பர்களுக்குத் தெரியும். அண்மையில் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் குறிப்பிடத்தக்க இதழான தேசத்தை தான் இனிமேல் படிக்கமாட்டேன் என்று தன் நண்பர்களுக்கு அறிவித்திருக்கிறார். இந்தியப் பார்ப்பனருடனும் (காலச்சுவடு etc) இலங்கை இலக்கிய அரசியல் ஆதிக்க சக்திகளுடனும் நல்ல உறவைப் பேணும் இவரை நாமும் தடுத்தாற் கொள்வோம்.

இவர்கள் எல்லாம் இலங்கை இந்தியா மட்டுமின்றி அவர்கள் வாழும் இங்கிலாந்திலும் நடக்கும் ஒடுக்குமுறை அட்டூழியங்கள் பற்றி அக்கறையற்றவர்கள். இங்கு ஆசிய ஏழைகள் படும் துன்பம் பற்றி துளியும் அறிவற்றவர்கள். இங்கு தலித்தியத்திற்கான தேவை இல்லை என்றும் வாதாடுகிறவர்கள்.

இவ்விடத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. சரேய் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆசிய மாணவர்களின் ஒன்றுகூடல் ஒன்றில் எனக்கொரு வடக்கிந்திய மாணவர் அறிமுகமானார். அவரை பல்வேறு தடவைகள் இதுபோன்ற கூட்டங்களில் சந்தித்த நான் ஒரு தடவை அவரின் குடும்பம் பற்றி விசாரித்தேன். அவர் ஒரு தலித் ஆக இருந்தமையினால் நான் கேட்காமலேயே பேச்சு தலித்துக்கள் பற்றி தாவியது. இங்கிலாந்திலே பிறந்து வளர்ந்த அவர் தான் முதன் முதலாக இந்தியா சென்ற போது தனக்கேற்பட்ட அவமானம் திரும்பிவந்த பின்பு தான் புதிதாக அவதானிக்கத் தொடங்கிய ஒடுக்குமுறைகள் எல்லாம் சொல்லி அழுதார். மிகவும் இளவயதிலேயே அவர் மேல் அநாவசியமாக திணிக்கத் தொடங்கி இருந்த அதிகாரம் வளரவளர இன்னும் எப்படி எல்லாம் அவரை வாட்டப் போகிறது என்று எண்ணி நானும் வாயடைத்துப் போனேன். ஐயர்மாரால் இவருக்கு ஆறுதல் சொல்ல முடியுமா?

இங்கிலாந்து மேலாதிக்க கலாச்சாரத்துக்கு இந்துத்துவ மேலாதிக்கம் கேட்காமல் கிடைத்த வரம். எந்தவித எதிர்ப்புச் சக்தியுமற்ற பிராமணத்துவம் ஒடுக்கப்படுபவர்களுக்காக கதைத்து அவர்களுக்கு பிரச்சனை உண்டாக்கப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். தகுதியற்ற பல பிராமணர்கள் இந்த சமரச பண்பு காரணத்தால் மட்டுமே பல்வேறு தலைமைப் பொறுப்புக்களில் இருக்கிறார்கள்.

இந்தியர்கள் சார்ந்த ஊடக உரையாடல்களுக்கு இவர்களை அழைப்பது இவர்களிடம் கொள்கை நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை பெறுவது மூலமாக இங்கிலாந்து பொதுக்கலாச்சாரத்துக்குள் உயர்த்தப்பட்ட இந்த உயர் சாதியினரை வைத்துக் கொண்டு முழு ஆசிய குறிப்பாக இந்திய சமுதாயத்தையுமே கட்டி ஆழலாம் என்று ஆதிக்க வர்க்கம் கனவு காணுகிறது. ஹிந்து கவுன்சில் UK (Hindu council UK) என்னும் அமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து பிராமணர்களையும் இந்த சமரச ஆதிக்க ஒன்றுபடலுக்கு உதாரணமாக காட்டலாம்.

இலண்டன் குண்டுவெடிப்பிற்கு பிறகு தீவிரவாதத்துக்கு எதிரான என்ற பாசாங்கில் இங்கிலாந்து அரசு பல அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. சமீபத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான நடைமுறைகள் பற்றிய விவாதம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்த இங்கிலாந்து காவல்துறை தலைமையகம் எல்லா மதத் தலைவர்களையும் பேச அழைத்திருந்தது. (இங்கிலாந்து வாழ் ஆசிய ஆப்பிரிக்க சிறுபான்மையினரை கட்டுப் பாட்டில் வைத்திருக்க ஆதிக்க சக்திகள் படும்பாடும் அவர்கள் உபயோகிக்கும் உத்திகள் பற்றியும் இன்னுமொரு கதையில் விபரமாக பார்ப்போம்)

சுராஜ் சேகல் (Suraj Sehgal) ‘தீவிரவாதம் பற்றிய இந்துத்துவ கருத்துக்கள்’ என்ற கருத்தில் பேசிய இவர் 9.11 (நியுயோர்க் குண்டுவெடிப்பு) 7.11 (லண்டன் குண்டுவெடிப்பு) போன்ற தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தி அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக காவல்துறைக்கு உதவுவது இங்கிலாந்து வாழ் முஸ்லீம் மக்களின் கடமை என்றார் (!!). இவர் கூறியவற்றில் சிலவற்றை இணையத்தில் இருக்கும் அவரது வாக்குமூலத்தின் படி கீழே தருகிறோம்.

1. தீவிரவாதத்தை ஆதரிக்கும் மதம் மதமல்ல அது வெறும் கருத்து மட்டுமே.

2. தீவிரவாதம் முஸ்லீம்கள் சார்ந்த பிரச்சனை. ஒரு ஈயைக் கூட கொல்ல மறுக்கும் இந்து மதத்திற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

3. ஏஷியன் என்ற சொல்லை பொதுப்படையான சொல்லாக பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் ஏஷியன் என்ற சொல் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் இந்துக்களையும் சேர்த்த
சொல்லாக இருக்கிறது.

4. இந்த நாட்டுக்கு தங்களை மேம்படுத்த வந்தவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் படி நடந்தால் அவர்கள் இங்கு வாழ அனுமதிக்கப்படக் கூடாது.

5. இங்கு Criminalகளுக்கான உரிமை பாதிப்படைந்த victim ஐ விட அதிகமாக இருக்கிறது. இதை அவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள்.

6. ஒருவரை ஒருவர் கொன்று தள்ளும் மற்ற மதங்களைப் போலன்றி இந்து மதத்தில் நாம் ஒருவரை ஒருவர் மதித்து நடக்கின்றோம்.

பாபர் மசூதி இடித்த கதை தலித்துக்களை சூறையாடும் கதை சமீபத்தில் குஜராத் நிலநடுக்கத்துக்காக சேகரிக்கப்பட்ட பணத்தை பறித்த கதை போன்று எத்தனை நடந்திருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மறந்துவிட்டார்களா?

இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இன்னொருவர் Taric Ramadan. இவரது ஏகாதிபத்திய உறவும் வர்க்க உணர்வு என்ற எடுப்புச் சாய்ப்பும் பற்றி விபரிக்க இங்கு இடமில்லை. இருப்பினும் முஸ்லீம்களுக்காக சத்தம் போடுபவர்களில் இவரும் ஒருவர். இவர் அங்கிருந்தவர்களை கிண்டல் செய்து முஸ்லீம்கள் தீவிரவாதத்தை நிறுத்த இந்துக்கள் ஏன் உதவக்கூடாது? என்று கேட்டுவிட்டு கூட்டத்தை விட்டுச் சென்றுவிட்டார்.

இவைகளை நீங்கள் இணையத்தில் பார்க்க வேண்டும் என்றால் Hindu Council UK இணையத்தை பார்க்கவும். அண்மையில் நிகழும் இந்துத்துவ மேலாண்மை செய்யும் முஸ்லீம் எதிர்ப்புகளையும் ஜாதிய ஒடுக்குமுறைகளையும் எழுத ஆரம்பித்தால் எழுதிக் கொண்டே போகலாம். காவல்துறை இவர்களை அழைத்து உரையாடியது அவர்களின் நடைமுறை உத்திகளை வகுப்பதற்காகவே. இவர்களிடம் ஆலோசனை பெறும் காவல்துறையில் நம்பிக்கை அற்று கல் எறியும் தொழிலாளர்களுக்கு நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்.

மேலே வந்த குறிப்பு 3ல் வரும் ஏஷியன் என்ற சொல்லிற்கான பிராமண எதிர்ப்பு நல்ல நகைச்சுவையான விடயம். நாங்கள் பாகிஸ்தானிகள் பங்களாதேசிகள் போன்று இல்லை. எங்களுக்கு முதலிடம் தாருங்கள் என்று ஆதிக்க வர்க்கத்திடம் கையேந்தும் விடயம் இது. ஆனால் இங்கிலாந்து இனத்துவேச ஆதிக்கத்துக்கு எல்லா ஆசியர்களும் ஒரே நிறம் தான் என்று இவர்களுக்குப் புரிவதில்லை. தாடி வைத்த பஞ்சாபி சிங்குகளைப் பார்த்து பின்லாடன் என்று கூறும் இனத்துவேசிகளுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை.

இந்த பிராமணர் கேட்பதெல்லாம் ஆதிக்கம் தான். தான் கூட வெள்ளை என்று என்னதான் சொன்னாலும் இனத்துவேசத்தின் கண்ணில் இவர்களும் ஆசியத்தூசு தான் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை. கருத்தளவில் தங்களை வெள்ளையர்களாக மாற்றும் அவாவில் இவர்கள் இங்கிலாந்து இனத்துவேசிகளின் அளவுக்கு கீழ்த்தரமான கருத்துடையவர்களாக உருவாகியிருக்கிறார்கள். மற்ற இனத் தொழிலாளர்கள் (கறுப்பின வெள்ளையின) இவர்கள் மேல் வெறுப்பும் அருவருப்பும் கொண்டுள்ளதற்கு காரணமும் இது தான்.

ஆரியக் குறியீடான சுவாஸ்திக அடையாளம் இந்தியாவிலும் சரி ஜெர்மனியிலும் சரி ஒரு அடக்குமுறையின் அடையாளமாக காலம் காலமாக இருந்து வருகின்றது. இந்த அடையாளத்தின் உபயோகத்தை ஐரோப்பாவில் தடைசெய்ய ஜெர்மனி அண்மையில் முயற்சித்தது. இதற்கு இங்கு வாழும் பிராமணர்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஹிந்து கவுன்சிலின் ஒரு கதை சொன்னார். உங்களுடைய குழந்தை விளையாடப்போன இடத்தில் யாரோ சேறடித்து விட்டார்கள் என்பதற்காக அக்குழந்தை வீட்டுக்குத் திரும்பி வந்ததும் யாரோ உனக்குச் சேறடித்திருக்கிறார்கள் நீ வேண்டாம் போ என்று விரட்டி விடுவீர்களா? அவனை (கவனிக்க ஆண்பால்) குளிப்பாட்டி வீட்டுக்குள் எடுப்பீர்கள் தானே. அதே போல் தான் ஜெர்மனியர்கள் (கவனிக்க இக்கதை ஜெர்மனியர்களுக்கு சொல்லப்படுகிறது) சுவாஸ்திகாவின் உண்மையான முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும். இது என் அறிவிப்பல்ல. மனித குலத்தின் மேம்பாட்டை ஊக்குவிப்பது.

இதைத்தான் 70 வருடங்களுக்கு முன்பு கிட்லர் சொன்னான் என்று நீங்கள் கூறலாம். ஆனால் அது இவர்களுக்கு விளங்காது. இப்படிப்பட்டவர்கள் மேல் சேறடிக்காமல் என்ன செய்வது. இந்தியாவில் பிராமணர் வாழும் இடங்களுக்கு போனால் சிலர் இந்த அடக்கு முறை அடையாளத்தை தங்கள் வீட்டின் வெளிச்சுவரில் பெரிதாக பொறித்து உள்ளதைப் பார்க்கலாம். இந்த வீட்டில் மனித குலத்தை மேம்படுத்துபவர்கள் வாழ்கிறார்கள் என்ற அறிவிப்பல்ல அது. அது ஒரு பிராமண வீடு என்ற அறிவிப்பே அது. இப்படிப்பட்ட வீடுகளுக்கு சேறடித்து இந்தியாவிலும் இந்த அடையாளப் பாவனைக்கு முடிவு கட்ட வேண்டி இருக்கும் பொழுது ஐரோப்பாவில் விட்டு வைப்போம் என்று இவர்கள் கனவு காண்கிறார்கள்.

மனித மேம்பாடும் மனித உரிமை பற்றிய அக்கறையும் பார்ப்பணியத்துக்கு தேவைக்கேற்றபடி பாவிக்க உதவும் உத்திகள் மட்டுமே. இதற்கான பலத்த எதிர்ப்பை நாம் கண் மூடிச் செய்வோம். பார்ப்பனிய எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது எமது போராட்டத்தின் பகுதிகள் மட்டுமே. ஒடுக்குமுறைகள் எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்க்கவே நாம் இருக்கிறோம். இதனால் தமிழ் தேசியத்தில் திராவிட இனத்துவத்தில் குளிர்காய நினைக்கும் கனவான்கள் பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினர் (முக்கியமாக இலங்கை வெள்ளாளர்கள்) ஆகியோரின் நிம்மதியையும் நாம் குலைப்போம் என்பதையும் நினைவுட்டுகிறோம். கல் தோன்றி மண் தோன்றா என்று தொடங்கி நீங்கள் இடிக்கும் உலையை கனகாலத்துக்கு வேகவிட மாட்டோம். கண்மூடி எழுதிக்கிழிக்கும் தமிழ் நாட்டின் இன்னுமொரு முனைவர் கு. அரசேந்திரன் விட்ட ‘கல்’ என்ற நூலை ஒரு தமிழ் திராவிட மொக்குத்தனத்தின் உதாரணமாக சொல்லலாம். இவரின் மாமனார் ஈழவேந்தன் இலங்கையில் செய்யும் அநியாயங்களையும் அவரது மூதாதையர் செய்த கொடுமைகளையும் சொல்ல மீண்டும் நாம் வருவோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

2. ஆரியப் பிரச்சினை (Aryan Debate):

‘History’ என்கிற ஆங்கிலச் சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உண்டு. வரலாற்றை மட்டுமின்றி வரலாறாக எழுதப்பட்டதையும் History என்றே கூறு கிறோம். குழப்பம் ஏற்பட்டு விடவேண்டாம் என்பதற்காகவே பின்னதைக் குறிக்க Histriography (வரலாறு எழுதியல்) என்கிற சொல்லும் பயன்படுத்தப் படுகிறது. ஒரு குறிப்பிட்ட வரலாறு மட்டுமின்றி அவ்வரலாறுக்கு ஆதாரமாகக் கிடைத்தவற்றை வெவ்வேறு குழுவினர் எவ்வாறு பயன்படுத்தினர், ஏற்கனவே இருந்த முடிவுகளில் இப்புதிய பார்வைகள் என்னென்ன மாதிரித் தாக்கங்களை ஏற்படுத்தின, ஒரு குறிப்பான பார்வையை முன் வைத்தவர்களே பின்னாளில் என்ன மாதிரி எல்லாம் தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொண்டார்கள் என்பன போன்ற விசயங்கள் சில சந்தர்ப்பங்களில் வரலாற்றைக் காட்டிலும் சுவையானதாகவும், முக்கியமானதாகவும் ஆகிவிடுகின்றன. இதற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக ஆரியப் பிரச்சினை அமைகிறது.

கிடைக்கிற புதிய ஆதாரங்களின் அடிப்படையில் வரலாற்றைக் கட்டமைப்பவர்களையும் அவர்களது பார்வைகளையும் பகுப்பாய்வு செய்வதற்கு அவர்களின் சமூக / வரலாற்று (Socio - Political Locations) அரசியல் பின்னணிகளை நுனித்தறிவது முக்கியம். ஆனால் ஒன்றை நாம் மறந்துவிடலாகாது. விளக்கமளிப்பவர்களின் சமூக வரலாற்று அமைவைச் சொல்வது என்பதே அவர்களின் கருத்துக்கள் சரியா? தவறா என்கிற தீர்ப்பை அளிப்பதாக அமைந்துவிடக்கூடாது. ஆரியப் பிரச்சினையைப் பொருத்தமட்டில் விளக்கமளிப்பவர்களை ‘இந்துத்துவாதிகள்’ அல்லது ‘மார்க்சிய வரலாற்றாசிரியர்கள்’ என இனம் காண்பது அவர்களின் நோக்கங்களைப் புரிந்து கொள்ளப் பயன்படுமேயொழிய அதுவே அவர்களின் கருத்தை மறுப்பதற்கான அளவுகோலாகி விடக்கூடாது. ஆரிய விவாதத்தில் இன்று உரக்கக் கூச்சலிட்டு விளக்கமளித்துக் கொண்டிருக்கும் இந்துத்துவப் பார்ப்பன சக்திகளைப் பொருத்த மட்டில் மார்க்சியர்கள் / போலி மதச்சார்பற்ற ஆரியர்கள் / இஸ்லாமியச் சார்பானவர்கள் / கிறிஸ்தவப் பாதிரிகள் என்கிற அடையாளச் சுட்டுகள் அனைத்தும் அவர்களின் கருத்துக்களின் மீதான தீர்ப்புகளாகவே முன் வைக்கப்படுகின்றன. ஆனால் இவர்களின் வாதங்களில் உள்ள வலுவின்மையையும், நேர்மையின்மையையும் சுட்டிக் காட்டுகிற கல்வி சார்ந்த வரலாற்றறிஞர்கள் (எ.டு: ரொமிலா தப்பார், தாமஸ் ஆர். ட்ராட்மான், ஸ்டீவ் பெர்மர், மிஷேல் விட்ஸல், அய்ராவதம் மகாதேவன் முதலியவர்கள்) அனைவரும் தத்தம் துறை சார்ந்த நுண் திறன்களைப் பயன்படுத்தி அவர்களில் விளக்கங்களை மதிப்பீடு செய்வதை இப்பிரச்சனைக்குள் நுழையும் யாரொருவரும் இனங்காண இயலும்.

இந்திய வரலாறு குறித்து 200 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய கருத்துக்கள் என்பன பெரும்பாலும் இராமயண, மகாபாரத இதிகாசங்களில் நினைவு கூறப்பட்ட வம்ச பாரம்பரியங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. இந்தப் பார்வையில் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை உலகெங்கிலுமுள்ள இந்தியவியலாளர்களுக்கு ஏற்படுத்தும் வண்ணமாய் மூன்று முக்கிய வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் அமைந்தன. இவை இந்திய வரலாற்றில் மட்டுமின்றி உலக அளவிலும் பல புதிய முடிவுகள் உருவாவதற்கும் காரணமாயின. மொழியியல் மற்றும் அகழ்வாய்வு அடிப்படையில் உருவான இக்கண்டுபிடிப்புகள் குறித்து முதல் முன்னோடிகள் முன்வைத்த கருத்துக்கள் அவற்றுக்குப் பிந்தைய கண்டுபிடிப்புகள், விமர்சனங்கள் ஆகியவற்றின் மூலம் மேலும் செழுமை அடைந்துள்ள போதிலும் அவற்றின் அடிப்படைக்கூறுகளில் பெரிய மாற்றங்கள் எதையும் துறைசார்ந்த வல்லுனர்கள் இன்றளவும் முன்மொழியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுச் சமூகத்தின் விமர்சனங்களைத் தாங்கி நிலை பெற்றுவிட்ட இக்கண்டுபிடிப்புகளாவன:

1. இந்தோ - ஈரோப்பிய மொழிக் குடும்பம் குறித்த கண்டுபிடிப்பு (1786)
2. திராவிட மொழிக் குடும்பம் குறித்த கண்டுபிடிப்பு (1816)
3. சிந்து வெளி நாகரிகம் குறித்த கண்டுபிடிப்பு (1924)

ஆரிய விவாதம் குறித்த முக்கிய ஆவணங்களை மிகச் சமீபமாகத் (2005) தொகுத்துள்ள ட்ராட்மன், “இம்மூன்று கண்டுபிடிப்புகளும் வெளிச்சத்திற்கு வரக்கூடிய புதிய செய்திகளின் அடிப்படையிலான உட்பட்டவைதான் என்ற போதிலும் இவை தவறு என நிரூபிக்கப்படும் எனக் கருதுவதற்கான எந்தக் காரணமும் நமது பார்வைக்கு எட்டிய தொலைவில் தெரியவில்லை. இன்றைய நிலையில், ஆரிய விவாதத்தினூடாக இக்கண்டுபிடிப்புகளில் ஏதொன்றையும் மறுத்து வைக்கப்படும் எந்த ஒரு வாதமும் உலகெங்கிலுமுள்ள வரலாற்றுச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பில்லை. இத்தகைய வாதங்கள் உண்மையாக இருக்கக்கூடிய வாய்ப்புகளை நாம் இல்லை எனச் சொல்லி விட இயலாது என்றபோதிலும் அவை உண்மையாக இல்லாமற் போவதற்கான சாத்தியங்களே மிகமிக அதிகமாக உள்ளன.’’ என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.(5)

இனி இக்கண்டுபிடிப்புகள் குறித்துச் சில:

இந்தோ - அய்ரோப்பிய மொழிக் குடும்பம்: புகழ்பெற்ற ஆசியக் கழகத்தை தோற்றுவித்து அதன் தலைவராகவும் இருந்த சர் வில்லியம் ஜோன்ஸ் 1786இல் கல்கத்தா நகரில் வழங்கிய ஒரு உரையிலேயே இக்கருத்து முதன் முதலாக வெளிப்பாடு கண்டது. சமஸ்கிருதம், லத்தீன், கிரேக்கம், கோதிக் (ஜெர்மனிய மொழிகளின் மூதாதை), செல்டிக் (ஐரிஷ் மற்றும் வெல்ஷ் மொழிகளின் மூதாதை), பழம்பெர்சியன் என்னும் ஆறு பழைய மொழிகளும் ஒரே பொதுவான மூல மொழியிலிருந்து கிளர்ந்தவையே என்று கூறுவதற்கு ஏற்ப ஒன்றையன்று ஒத்துள்ளன என்று கூறிய ஜோன்ஸ், ‘இம் மூலமொழி ஒருவேளை இப்போது இன்று இல்லாது அழிந்து பட்டிருக்கலாம்’ என்றும் கூறினார். இன்று இல்லாமற்போன இம் மூலமொழி “இந்தோ - அய்ரோப்பிய மொழி’’ எனக் கூறப்படுகிறது. இதன் ஆறு வம்சாவளிக் கிளைகளை அவர் கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டார்:

1. வட இந்தியாவிலும் சிரீலங்காவிலும் பயிலப்படுகிற இந்தோ - ஆரிய மொழிகள் (சமஸ்கிருதத்திலிருந்து உருவானவை).
2. பார்சி முதலான இரானிய மொழிகள் (பழம் பெர்சியனிவிலிருந்து உருவானவை).
3. ப்ரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலி போன்ற ரொமான்ஸ் மொழிகள் (லத்தீனிலிருந்து உருவானவை).
4. கிரேக்க அல்லது ஹெல்லனிக் மொழிகள் (பழம் கிரேக்கத்திலிருந்து உருவானவை).
5. ஆங்கிலம், டட்ச், ஜெர்மன் முதலான ஜெர்மானிய மொழிகள் (கோதிக் மொழியிலிருந்து உருவானவை).
6. ஐரிஷ், வெல்ஷ் முதலிய செல்டிக் மொழிகள் (புராதன செல்டிக்கிலிருந்து உருவானவை).

முதல் கண்டுபிடிப்புகளுக்கே உரித்தான குறைபாடுகள் ஜோன்ஸின் கூற்றிலும் இருக்கவே செய்தன. ருசியன் மற்றும் அல்பேனியன், ஆர்மினியன் முதலான பால்டிக் மற்றும் ஸ்லாவோனிக் மொழிகள் ஜோன்ஸின் பட்டியலில் இடம் பெறாதுபோன போதிலும் அவரது பட்டியல் அந்தளவிற்குச் சரியானதாகவே இருந்தது. இந்த ஆறு கிளைகளுக்கும் பொதுவான புராதன மொழியை இன்று இந்தோ - அய்ரோப்பிய மொழி என மொழியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இம்மொழியில் எழுதப்பட்ட பிரதிகளாக இன்று நமக்கு எதுவும் எஞ்சவில்லை. இந்த வம்சக் கிளைகளின் இன்னும் உயிர்வாழும் மொழிகளின் பொதுக்கூறுகளிலிருந்து கற்பிதம் செய்யப்பட்டதே இது.

ஒரு பொதுவான வம்சாவளியினடியாக இந்த ஆறு பழமொழிகளின் சொற்களஞ்சியங்களையும், இலக்கியங்களையும் ஒப்பிட்டு (ஜோன்ஸ் அளித்த விளக்கம் ஒரு வகையில் இந்தியச் சூழலில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒன்றாக இருந்தது. இறைவனால் படைக்கப்பட்ட, ஆதி அந்தம் இல்லாத தேவபாஷையாகக் கருதப்பட்ட சமஸ்கிருதத்தைப் பிற மொழிகளைப் போலவே ஒரு குறிப்பான வரலாற்றுச் சூழலில் நிறுத்தியது ஜோன்ஸின் கோட்பாடு. தவிரவும் சமஸ்கிருதத்தை அவர் பிற நான்கு புராதன மொழிகளின் சகோதர மொழியாகத்தான் நிறுத்தினாரேயழிய மற்றவற்றின் தாய்மொழியாகக் கூறவில்லை. புரட்சிகரமான இச்சிந்தனை இந்திய வரலாற்றை எதிர்பாராத வகையில் இந்தியாவிற்கு மேற்கே உள்ள நாடுகளின் வரலாற்றுடன் இணைத்துக் காட்டியது. பின்னாளில் உருவான மதங்களாலும், மொழிகளாலும், எல்லைக்கோடுகளாலும் பிரிக்கப்பட்ட இந்தியா, ஈரான், அய்ரோப்பா ஆகியவற்றுக்கிடையேயான இந்த ஆதித்தொடர்பு இந்தியர்களும், ஈரானியர்களும், அய்ரோப்பியர்களும் தத்தம் வரலாறு பற்றிக்கொண்டிருந்த நம்பிக்கைகளில் பெரும் சிதைவுகளை ஏற்படுத்தியது.

‘வரலாற்று மொழியியல்’ (Historical Linguistics) என இன்று பெரிய அளவில் வளர்ந்துள்ள ஆய்வுத்துறையின் மூல ஊற்றாக ஜோன்ஸ் முன்வைத்த பிரதி அடிப்படையிலான ஒப்பீட்டு மொழியியல் அமைந்தது. இதன் பின்பே 1816இல் ப்ரான்ஸ் பாப் இந்தோ அய்ரோப்பிய மொழிகளுக்கான ஒப்பீட்டு இலக்கணம் பற்றிய சிந்தனைகளை வெளியிட்டார். இந்தோ-அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் ஒன்றிலிருந்து ஒன்று தனியே சேர்ந்தபோது ஏற்பட்ட ஒலியியல் மாற்றங்களில் உள்ள பொதுமைகளை ஜேகப் கிரீம் முன் வைத்தார். இன்று வரை வந்துள்ள மொழியியலார்களின் பாரம்பரியம் அடுத்தடுத்து ஜோன்ஸின் கருத்திற்கு வலுசேர்ந்தனவே அன்றி அதைப் பலவீனப்படுத்தவில்லை.

திராவிட மொழிக் குடும்பம்: இக்கண்டுபிடிப்பிற்காக இன்று இந்துத்துவவாதிகளால் திட்டித் தீர்க்கப்படும் பிஷப் ராபர்ட் கால்டுவெல் 1856ம் ஆண்டு தனது ‘திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்றும் நூலை வெளியிடுவதற்கும் சுமார் 40 ஆண்டுகள் முன்னதாகவே இக்கருத்தை மிகச் சிறந்த முறையில் ஆய்வு பூர்வமாக முன் வைத்தவர் அன்றைய சென்னை ஆட்சியாளராக இருந்த ப்ரான்ஸிஸ் ஒயிட் எல்லிஸ் ஆவார். இளம் ஆங்கில அதிகாரிகளுக்குத் தென்னிந்திய மொழிகளைப் பயிற்றுவிப்பதற்கென அன்று உருவாகியிருந்த செயின்ட் ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியில் தெலுங்கு மொழி கற்பிப்பதற்கென ஏ.டி.காம்ப்பெல் எழுதியிருந்த ஒரு நூலின் முன்னுரைக் குறிப்பாக எல்லிஸின் கருத்துக்கள் முதல் முதலில் (1816) பதிவாயின. தெலுங்கு மொழியின் வேர்ப்பட்டியலை (தட்டுமாலா) பிற மொழிகளின் வேர்ப்பட்டியல்களுடன் ஒப்பிட்டு சமஸ்கிருதத்திற்கும் அதற்கும் எந்தத் தொடர்புமில்லை என்பதை எல்லிஸ் திருப்திகரமாக நிறுவினார். பின் அவர் தெலுங்கு மொழி வேர்களை கன்னட, தமிழ் மொழி வேர்களுடன் ஒப்பிட்டு அவற்றுக்கிடையேயான ஒப்புமையைக் சுட்டிக்காட்டினார்.

மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்த மமாஷ வெங்கையா என்பவர் அப்போது தொகுத்திருந்த தெலுங்கு இலக்கண நூல் எல்லிசுக்குப் பெரிதும் உதவியது. வியாகரணப் பகுப்பாய்வின் அடிப்படையில் சமஸ்கிருத வேர்களுடன் பொருந்திப் போகும் சொற்களை வெங்கையா அடையாளம் காட்டியிருந்தார். சமஸ்கிருதத்தை ஒத்தவை (தட்சமா), சமஸ்கிருதத்தைப் போலிருப்பவை (தத்பவா), சமஸ்கிருதத்துடன் தொடர்பற்ற ஒற்றுச் சொற்கள் (தேஷ்யா), கிராம்யா என்றெல்லாம் அவர் சொற்களைப் பகுத்துப் பட்டியிலிட்டிருப்பதார் ‘தூய தெலுங்கு’ (தேஷ்ய) சொற்கள் மூலத் தோற்றத்தில் ஒத்தமொழிகளான கன்னடம் மற்றும் தமிழுடன் பொருந்திப் போவதைச் சுட்டிக் காட்டியதோடு அவர் நில்லாமல் திராவிட மொழிக் குடும்பத்தின் பரப்பை மலையாளம், துளு (மங்களூர்), குடகு (கூர்க் பகுதி) மற்றும் வடக்கே கங்கை வெளியில் பேசப்படும் ராஜ்மஹல் / மால்டோ வரை சரியாகவே விரிவாக்கினார். இந்தோ - ஆரியக் குடும்பத்தைச் சேர்ந்ததாயினும் சிங்களம், மலையாளம், ஒரியா முதலிய மொழிகள் தென்னிந்திய மொழிக் குடும்பத்திலிருந்து பல சொற்களைப் பெற்றுக் கொண்டுள்ளதையும் எல்லிஸ் சுட்டிகாட்டினார்.

எல்லிஸின் கண்டுபிடிப்பு இன்னொரு வகையிலும் புரட்சிகரமானதாக அமைந்தது. தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியதே என்று அன்று ஒரு சாரர் மத்தியில் நிலவிய கருத்திற்கு அது சாவுமணி அடித்தது. எல்லிஸின் கட்டுரையே இப்படித்தான் ஆரம்பித்தது: தனது சமஸ்கிருத இலக்கண நூலுக்கு டாக்டர் செரீ எழுதிய முன்னுரையை மேற்கோள்காட்டிய எல்லீஸ் ஹிந்துஸ்தானி, தமிழ், மலையாளம், வங்கமொழி, ஒரியா, கன்னடம், தெலுங்கு இவையாவும் சமஸ்கிருதத்திலிருந்தே தோன்றின என்கிற அவரது கருத்தைச் சுட்டிக்காட்டி பின் அக்கருத்தை ஆதார பூர்வமாக மறுப்பார்.(6)

தென்னிந்திய மொழிகளுக்கிடையேயான இந்த ஒப்புமையையும் அவை சமஸ்கிருத அமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்த தன்மையையும் நிறுவிய இந்த முக்கிய கண்டுபிடிப்பில் எல்லிசுடன் இரு இந்தியப் பண்டிதர்களும் பங்கு பெறுகின்றனர். ஒருவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியில் பணியாற்றிய பட்டாபிராம சாஸ்திரி. மற்றவர் சென்னை ஆட்சியகத்தில் எல்லிசின் கீழ் பணிபுரிந்த சங்கரையா (எ) சங்கர சாஸ்திரி.

மொழியியல் அடிப்படையிலான இக் கண்டுபிடிப்பும் இன்றளவும் உலக அளவிலான மொழியியல் வல்லுனர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவும் கால ஒட்டத்தையும், விமர்சனக் கருத்துக்களையும் வென்று நிற்பதாகவுமே உள்ளது. இதன் மூலம் இந்திய வரலாறு குறித்த புரிதல் பெரிய அளவில் புதிய விமர்சனங்களுக்குக் காரணமாகியது. சமஸ்கிருதத்துடன் அடையாளம் காணப்பட்ட பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் உருவாகவும் இது வழி வகுத்தது. இரண்டாவதாக இந்தியக் கலாச்சாரத்தின் ஒற்றைத்தன்மை மறுக்கப்பட்டு பல்வேறு மொழிக் குழுமங்களின் கலாச்சாரங்கள் உருகி இணைந்து உருவான அதன் தன்மை உலகிற்கு வெளிச்சமானது.

இன்னொன்றையும் இங்கு சொல்வது முக்கியம். திராவிட மற்றும் இந்தோ-அய்ரோப்பிய மொழிக் குடும்பங்களின் கண்டுபிடிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட ஆய்வு முறை உலகில் பிற பகுதிகளுக்கும் வெற்றிகரமாக விரிவாக்கம் செய்யப்பட்டது.(8) ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலுமுள்ள எழுத்தறியாத மக்களின் வரலாறுகளைப் புரிந்துகொள்ள இது உதவியது. ட்ராட்மன் சொல்வது போல் இந்தோ-அய்ரோப்பிய மொழிக் குடும்பம் அல்லது திராவிட மொழிக் குடும்பத்தின் கண்டுபிடிப்பை மறுப்பதென்பது ‘வரலாற்று மொழியியல்’ என்கிற பெயரில் வளர்ந்துள்ள ஒரு ஆய்வுத் துறையையே மறுப்பதாகிறது. மாற்றுக் கருத்துக்களை முன்வைப்போர் இந்த வெற்றிகள் அனைத்தையும் தகுந்த ஆதாரங்களுடன் மறுக்க வேண்டிய சுமையைச் சுமக்க வேண்டியவர்களாகின்றனர்.

இந்த ஆய்வுகள் இந்தியாவிலேயே தோன்றியதெனினும் இதனைச் செய்தவர்கள் அய்ரோப்பியர்கள் மட்டுமே அல்லர். அய்ரோப்பியர்களும் இந்தியர்களும் இணைந்து, அய்ரோப்பிய ஆய்வு முறையும் இந்திய ஆய்வு முறையும் கலந்து உருவானதே இந்த மொழியியற் கண்டுபிடிப்புகள். சர் வில்லியம் ஜோன்சும் இன்னொரு கிழக்கிந்தியக் கம்பெனி ஊழியருமான வில்லியம் மாஸ்டெனும் இணைந்து மேற்படி ஆய்வுமுறைகளைப் பயன்படுத்தி அய்ரோப்பிய ஜிப்ஸிகளின் ரொமானி மொழியும் கூட இந்தோ-அய்ரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததே என நிறுவினர் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. இந்த ஜிப்ஸிகள் இந்தியாவிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம் பெயர்ந்தவர்களாக இருக்கக் கூடும். ஆப்ரிக்கக் கரையைத் தாண்டியுள்ள மடகாஸ்கரையும், இந்தோனேசியாவையும் தூர பசிபிக்கிலுள்ள ஹவாயையும் இணைக்கிற மலேயோ பாலினேசிய மொழிக் குடும்பத்தை முதன் முதலில் அடையாளம் காட்டியவரும் கூட மாரிஸ்டன்தான்.

தங்களின் புராதனத் தொடர்புகள் பற்றிய வரலாற்று நினைவுகளை மறந்துபோன மக்கள் குழுமங்களுக்கிடையே இருந்த வரலாற்றுத் தொடர்புகளை இத்தகைய மொழியியல் ஆய்வுகள் வெளிப்படுத்தின. ஆரியர்களின் பிரதிகளில் (வேதங்களில்) இந்தோ ஈரோப்பியத் தொடர்புகள் குறித்த நினைவுகளின் பதிவுகள் இல்லை என்பது ஆரியக் குடியேற்றத்தை மறுப்பவர்கள் முன் வைக்கும் வாதங்களில் ஒன்று. ரொமானி மொழியினர், மலேயோ பாலினேசிய மொழியினர் ஆகியோர் நினைவிலிருந்து அழிந்த வரலாற்று உறவுகளை இத்தகைய மொழியியல் ஆய்வுகளே வெளிக்கொணர்ந்தன என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். இந்த வகையில் நினைவால் இயலாததை மொழியியல் சாதித்துள்ளது.

இந்த இரு மொழிக்குடும்பங்களின் கண்டுபிடிப்பு என்பது ஏதோ மொழிகளுக்கிடையே உள்ள சில ஒற்றுமைகளைக் கண்டறிந்து சொல்கிற வேலையன்று. இந்திய மொழிகள் அனைத்தும் தமக்கிடையே சொற்களை மட்டுமின்றி, இலக்கணக் கூறுகளையும் கூட பரஸ்பரம் பரிமாறி வந்துள்ளன. சமஸ்கிருதத்தின் ஆதி நூலாகிய ரிக்வேதத்திலேயே திராவிட அல்லது அஸ்ட்ரோ ஆசியாடிக் குடும்பத்தைச் சேர்ந்த உள்ளூர் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. தமிழில் கலந்துள்ள பிராகிருத மற்றும் வடமொழிச் சொற்கள் ஏராளம். இந்த வகையில் இந்திய மொழிகள் அனைத்தும் பல்வேறு அம்சங்களில் ஒன்றையன்று ஒத்துள்ளன. இந்த ஒப்புமைகளுக்கெல்லாம் அப்பால் திராவிட மற்றும் இந்தோ அய்ரோப்பிய மொழிக் குடும்பங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகியதாகவும் தனித்துவமுடையதாகவும் உள்ளன என்பதே இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.




__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard