Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் -வேதங்களைப் போற்றும் குறளே


Guru

Status: Offline
Posts: 7329
Date:
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் -வேதங்களைப் போற்றும் குறளே
Permalink  
 


அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் -வேதங்களைப் போற்றும் குறளே

 
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.              -குறள் 259  புலான்மறுத்தல்  ஆயிரம் வேள்விகளை செய்து கிடைக்கும் புண்ணியத்தை விட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்ல புண்ணிய தரும்.
5bn.jpg
தெய்வப் புலவர் திருவள்ளுவர் தந்தருளிய திருக்குறளில் 1330 குறட்பாவில் மிக அதிகமானமுறை பலப்பல தமிழ் அறிஞர்களால் தவறக பயன்படுத்தும் குறள், மேலுள்ளதே. நாம் இக்குறளின் பல்வேறு உரைகளைப் பார்ப்போம்.
புலான் மறுத்தல் அதிகாரத்தில் இது வந்துள்ளது. ஆயிரம் வேள்விகளை செய்து கிடைக்கும் புண்ணியத்தை விட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்ல புண்ணிய தரும். இங்கு புலால் மறுத்தலை வலியுறுத்துகிறார்.
வள்ளுவப் பெருந்தகை, தான் ஏற்றுள்ள அதிகாரத்தின் கருப்பொருளை- சிறிய பொருள் கொண்டு ஆரம்பித்து உயர்ந்ததோடு முடிப்பார்.
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251
மு.வ உரை:தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. குறள் 255:
மு.வ உரை: உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். குறள் 260
மு.வ உரை:ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
கடைசி குறட்பாவில், கொல்லாமை – புலால் மறுத்தவரை- தெய்வத்துக்கு சமமாக அனைவரும் வணங்குவர் என்கிறார்.
ஒருவன் கடவுள் அடைய வேளிவிகளை செய்ய வேண்டும், அது உயர்ந்த மேன்மையான ஒன்று, அதிலும் மேன்மையானது கொல்லாமை- புலால் மறுத்தல் என்பதை தெளிவாக சொல்ல இவ்வழியில் சொல்கிறார்.
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்  -உவமேயம், உவமை இரண்டிலே உவமையே உயர்ந்தது என்பது இலக்கணம் காட்டும் வழி. தொல்காப்பிய உவமயியலின் நூற்பா ஒன்று- "உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை"
தொல்காப்பிய நூற்பா குறிப்பது - உவமைக்கு வைப்பது உயர்ந்த பொருளாக வேண்டும் என்பதே. 
வேள்வி மிக உயர்ந்தது என்பதால் ‘ அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்....’ என்றார்.

உலகின் நாகரீகத் தொட்டில் - சிந்து சரஸ்வதி நாகரீகம் அதன் உச்சத்தில் 2 லட்சம் சதுர மைல்கள் பரவி இருந்தது, தொன்மை ஹரியானாவின் குருக்ஷேத்திரம் ஆருகிலுள்ள பிர்ரானாவில் கிடைத்த தொல்லியல் பொருட்களின்படி பொமு 7500 வரை செல்கிறது.
Daily_News_5367351770402.jpg
 
சிந்து சமவெளி நாகரீகம் 9,500 ஆண்டு பழமையானது
பொமு 4000 வாக்கிலேயே வேள்வி குண்டங்கள் என பலவும் தொல்லியல் அகழ்வில் கிடைத்துள்ளது. அதாவது பாகிஸ்தானில் உள்ள மொஹஞதாரோ ஹரப்பா என நம் பாடங்களில் கிடைத்தவை தாண்டி பல இடங்களில் மிகத் தெளிவான தரவுகள் கிடைத்துள்ளன.
FL17_Binjor__fire__2358944g.jpg
 k2.JPG
                                                         காளிபங்கன் (ராஜஸ்தன்)  யூப சாலை
 ஹரியானாவில் பிர்ரானா,  ராஹிகார்ஹி, மெஹெர்கர்   தோலாவிரா லோத்தல்( முக்கிய துறைமுகம்-குஜராத்) 
மற்றும் காளிபங்கன் (ராஜஸ்தன்)
செம்பு செய்வதற்க்கு தாமிரத்தை எங்கிருந்து பெற்றனர்? – கேத்ரி சுரங்கம் (ராஜஸ்தன்).
சங்க இலக்கியத்தில்  நால் வேதங்கள்படியான வேள்வி பற்றிய பாடல்.  
நல்பனுவல் நால் வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பல்மாண்
வீயாச் சிறப்பின் வேள்விமுற்றி
யூபம்நட்ட வியன்களம் பலகொல்     (புறம்:15)

ஞாலம் நாறும் நலம்கெழு நல்இசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வன் (அகம்:181)

இன்று உலகின் பெரும்பாலான ஆய்வுகள் அனைத்தும் ஆங்கிலத்திலே நடைபெறுகிறது, தாய் மொழியில் பயின்றாலும் உலகின் ஒரு முக்கிய இணைப்பு மொழியாய் ஆங்கிலம் உள்ளது போலே பண்டை பாரத நாட்டில் வடமொழி இருந்துள்ளது. வடமொழியின் பேச்சு மொழியை ப்ராகிருதம், பாலி எனவும், செய்யுள் மொழியை சம்ஸ்கிருதம் எனவும் அழைக்கப் படுகிறது.

அசோகரின் 24 கல்வெட்டு இந்தியா முழுமையும் உளது, அதில் மைசூர் கல்வெட்டு மட்டுமே தமிழில் மீதம் அனைத்தும் வடமொழி தான்.  அசோகர் கல்வெட்டு பிராமி எனும் எழுத்துரு கொண்டுள்ளது, முதலில் வடமொழிக்கு உருவாக்கப்பட்டது, பின் தமிழிற்கு பயன்படும்போது "ழ", 
"ள", "ற" &  " போன்ற தமிழின் தனி சிறப்பு ஒலி எழுத்துக்களுக்கு உரு தர தமிழ் பிராமி உருவானது, அது பின் வட்டெழுத்து ஆகி, பின் நகரி என மாறியது, இன்று அனைத்து வட இந்திய மொழிகளும் நகரியோடு நின்றது, தமிழ் மேலும் சில மாற்றம் பெற்று இன்றைய வடிவம் பெற்றது.

தமிழர் இறை வழிபாட்டில் உலகைப் படைத்த கடவுளை ஆதி முதல் வழிபடுபவர்கள்.  தமிழரின் மூத்த தொல்குடி அந்தணர் அல்லது பார்ப்பனர்கள். 
அந்தணர் என்றால் - இறுதிப் பொருளை அணவுபவர் எனப் பொருள், வேதங்கள் - இறைவனை உலகின் இறுதிப் பொருளை ஆராய்பவர்கள்.    தமிழரின் மூத்த தொல்குடி அந்தணர் அல்லது பார்ப்பனர்கள் என திருக்குறளும் சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் காட்டுகின்றன. தொல்காப்பியரும், திருவள்ளுவரும் அந்தணரே.   வேதநெறி தமிழர்களின் மெய்யியல் ஆகும் .
பார்ப்பான்- வேதங்களின் உறுப்புகளான ஆயுர்வேதம், பஞ்சாங்கங்கள் துணை கொண்டு, சிறு மருத்துவம், வரும் ஆண்டில் காலநிலையை முன்னரே கணித்து பார்த்து யாது பயிரிடலாம், பயணங்கள் செய்ய உகந்த நாளா என நிமித்தம் பார்த்து சொல்வதாலும் பார்ப்பான்.

வந்தனன் அன்னைநீ வான்துய ரொழிகெனச்       80   
 செந்நிறம் புரிந்தோன் செல்லல்  நீக்கிப்
பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்
 காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து
தேவந் திகையைத் தீவலஞ் செய்து                 சிலப்பதிகாரம் வரந்தரு காதை

5000 வருட சிந்து சரஸ்வதி நாகரீகத்தில் சம்ஸ்கிருதப் பங்கு உள்ளது என பேராசிரியர் அஸ்கோ பர்போலா பேட்டி

0%2BParboala%2B1.jpg


0%2BParboala%2B2.jpg


0%2BParboala%2B3.jpg


0%2BParboala%2B4.jpg
தமிழர் சமயத்தில் இறை வழிபாட்டின் முக்கிய வழிகாட்டிகள் அந்தணர்
 
அந்தம் + அணவுபவர் - இறைவனை அடைய  உலகின் இறுதிப் பொருளான  வேதங்களை அணவுபவர் எனப் பொருள்படும்

 தமிழர் சமயத்தின் ஆதி நூல் வேதங்கள், அவை ஏட்டில் எழுதாமல் குருவிடம் கேட்டு அறிதல் முறையிலே தான் கற்க இயலும், எழுதாமையால் அது மறை எனப் படும், ஒத்து கூறி ஓதுவதால் ஓத்து எனப் படும்.
 வேதங்கள் எழுதி வைத்துப்படிப்பதில்லை.  அதனாலேயே அதனை வடமொழியில் “ஸ்ருதி” என்று அழைப்பர். அது தமிழில் எழுதாக் கிளவி என்று அழைக்கப்படுகிறது.

படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 
எழுதாக் கற்பினின் சொலுள்ளும்   குறுந்தொகை 156. 5-6
  3-4. அந்தணர்க்குக் கரகமும் முக்கோலும் உரியவை (தொல். மரபு. 70, பேர்.)

திருவள்ளுவர் அந்தணர்களையும் வேதங்களையும் போற்றி உரைப்பார்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (543-செங்கோன்மை)
நாமக்கல் கவிஞர் உரை
அந்தணர்கள் ஓதும் வேதம் முதலிய ஞான நூல்களின் அறிவு மக்களிடையே பரவுவதற்கும், அதனால் நாட்டில் அறங்கள் சரியாக நடப்பதற்கும் ஆதரவாக இருப்பது அரசாட்சியின் செங்கோண்மை.


மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (134ஒழுக்கமுடைமை)

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். (560 கொடுங்கோன்மை)
 நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் வேதங்கள் - அறநூல்களை மறப்பர்


பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்” – 24 பதிற்றுப் பத்து
கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்         பாட்டு – 74 
பல போலி தமிழ் பற்றாளர்கள் - பார்ப்பனர் வேறு அந்தணர் வேறு என அருவருப்பாய் பொய் கூறுவர், அவர்கள் கிறிஸ்துவ சர்ச் வழி திராவிடம் எனும்  தமிழ் பகைவர்கள் தமிழை காட்டு மிராண்டி பாஷை என்ற கயவர் வழி கூட்ட வழிமுறையினர்.  


பரிபாடல்-திரட்டு 2ம் பாடல் - 2:50-63
வையை என்ற தலைப்பில் தலைவன் கூற்று
மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித்
தணிவின்று, வையைப் புனல். 50
தலைவன் கூற்று
‘புனலூடு போவது ஓர் பூ மாலை கொண்டை,
எனலூழ் வகை எய்திற்று’ என்று ஏற்றுக்கொண்ட
புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி,
நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன்,
கூடாமுன், ஊடல் கொடிய திறம் கூடினால், 55
ஊடாளோ? ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து.
என ஆங்கு-
பார்ப்பார் நீராடாது கரையில் நின்ற காரணம்
‘ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு’ எனப்
பார்ப்பார் ஒழிந்தார், படிவு.
‘மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று’ என்று, 60
அந்தணர் தோயலர், ஆறு.
‘வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென’
ஐயர், வாய்பூசுறார், ஆறு.

அந்தணர்கள் எல்லா மக்களும் சேர்ந்து கொண்டாடும் புதுநீர் விழாவின் போது, கேளிக்கைகளில் கலந்துகொள்ளாது ஒதுங்எயே வாழ்ந்தனர். கள் குடித்தவர்கள் உமிழ்கையில் கள்ளும்; பெண்களும் சிறுவர்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள், வழுவழுப்பான தேன் முதலியவை வைகை ஆற்றின் புதுப் புனலில் கலந்து வந்தது ஆகையால் ஒழுக்க நெறிப்பட்ட பார்ப்பனர்கள் புதுப் புனலின் போது வைகையில் குளிப்பதோ- வாய் கொப்பளிப்பதோ இல்லை. இங்கே பார்ப்பனர்- அந்தணர்-ஐயர் என்ற மூன்று பதங்களும் பிராமணர்களைக் குறிக்க சங்க காலத்திலே இருந்தது எனத் தெளிவாகிறது.
மனுஸ்ம்ருதியில் இதே பொருளுடன் உள்ள ஒரு அறிவுரையை மேலும் மேன்மைப் படுத்தி திருவள்ளுவர் இங்கே தந்துள்ளார்.
5.53. He who during a hundred years annually offers a horse-sacrifice, and he who entirely abstains from meat,obtain the same reward for their meritorious (conduct).
வேள்வியை உயர்த்தி தான் இங்கு சொல்கிறார்.
 "செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து."

மிக உயர்ந்ததான செவியுணவுக்கு அவியுணவு உவமையாகிறது.

வள்ளுவர் வேள்வியை மறுக்கும் சமண சமயத்தவராக இருந்தால் இவ்வாறு கூறுவாரா ?  வேள்விகளை வள்ளுவம் ஏற்றுக்கொண்டுள்ளதா என்னும் ஐயம் தேவையற்றது; வேள்வியில் தரப்படும் அவியுணவு, மறை ஓத்து, வேள்விகளை மையமாகக்கொண்ட அறுதொழில் இவற்றை வள்ளுவம் மறுக்கவில்லையே !


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் -வேதங்களைப் போற்றும் குறளே
Permalink  
 


அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்

 
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: புலான்மறுத்தல்
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. -குறள் 259
தெய்வப் புலவர் திருவள்ளுவர் தந்தருளிய திருக்குறளில் 1330 குறட்பாவில் மிக அதிகமானமுறை பலப்பல தமிழ் அறிஞர்களால் தவறக பயன்படுத்தும் குறள், மேலுள்ளதே. நாம் இக்குறளின் பல்வேறு உரைகளைப் பார்ப்போம்.மு.வ உரை:நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
பரிமேலழகர் உரை:அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் – தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று – ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று. (அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.).
மணக்குடவர் உரை:நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.
Translation: Than thousand rich oblations, with libations rare,
Better the flesh of slaughtered beings not to share.
Explanation: Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.
புலான் மறுத்தல் அதிகாரத்தில் இது வந்துள்ளது. ஆயிரம் வேள்விகளை செய்வதைவிட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்லது. இங்கு புலால் மறுத்தலை வலியுறுத்துகிறார்.
வள்ளுவப் பெருந்தகை, தான் ஏற்றுள்ள அதிகாரத்தின் கருப்பொருளை- சிறிய பொருள் கொண்டு ஆரம்பித்து உயர்ந்ததோடு முடிப்பார்.
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251
மு.வ உரை:தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. குறள் 255:
மு.வ உரை: உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். குறள் 260
மு.வ உரை:ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
கடைசி குறட்பாவில், கொல்லாமை – புலால் மறுத்தவரை- தெய்வத்துக்கு சமமாக அனைவரும் வணங்குவர் என்கிறார்.
ஒருவன் கடவுள் அடைய வேளிவிகளை செய்ய வேண்டும், அது உயர்ந்த மேன்மையான ஒன்று, அதிலும் மேன்மையானது கொல்லாமை- புலால் மறுத்தல் என்பதை தெளிவாக சொல்ல இவ்வழியில் சொல்கிறார்.
மனுஸ்ம்ருதியில் இதே பொருளுடன் உள்ள ஒரு அறிவுரையை மேலும் மேன்மைப் படுத்தி திருவள்ளுவர் இங்கே தந்துள்ளார்.5.53. He who during a hundred years annually offers a horse-sacrifice, and he who entirely abstains from meat,obtain the same reward for their meritorious (conduct).
வேள்வியை உயர்த்தி தான் இங்கு சொல்கிறார்.
 
"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று"
உவமேயம், உவமை இரண்டிலே உவமையே உயர்ந்தது என்பது இலக்கணம் காட்டும் வழி. தொல்காப்பிய உவமயியலின் நூற்பா ஒன்று- "உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை"
தொல்காப்பிய நூற்பா குறிப்பது -
உவமைக்கு வைப்பது உயர்ந்த பொருளாக வேண்டும் என்பதே. கரிய நிறத்திற்கு உவமையாக ஓர் பூவினையோ, மேகத்தினையோ, யானையையோ காட்டலாம்; ஆனால் கரிய கழிவுநீரைக் காட்டலாகாது.
உயர்ந்த பொருளையே ஒப்புமைப்படுத்த வேண்டும் -
அரிமா அன்ன அணங்குடைத் துப்பு – வினை உவமம் (வலிமையில் அரிமா உயர்ந்தது)
மாரி அம்பின் மழைத்தோல் சோழர் – பயன் உவமம் (மாரி அம்பினும் உயர்ந்தது)
கடல் கண்டு அன்ன கண் அகன் பரப்பு – வடிவு (கடல்பரப்பு உயர்ந்தது)
பொன்மேனி – வண்ணம் (பொன்னின் வண்ணம் மேனி வண்ணத்தினும் உயர்ந்தது)
உயர்ந்தவற்றின் மதிப்பைச் சொல்கையில் மிக உயர்வானவற்றை இணைத்துப்பேசுவது வள்ளுவம் பேணும் மரபும்கூட; இழிவான செயல்களைக் கூறுகையில் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தையும் அதில் காண்கிறோம்.
ஆ காத்து ஓம்புதல் பேரறம் என்பதால் அதைச் சொல்கிறார்-
ஆவிற்கு நீர்என் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில்.
ஆவிற்கு நீர் என்று இரப்பினும் - தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு,
அறம் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல்வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்;
இரவின் நாவிற்கு 'இளிவந்தது இல்' - அவ்விரவுபோல ஒருவன் நாவிற்கு இளிவந்தது பிறிது இல்லை.
(ஆகாத்தோம்பல் பேரறமாகலின், 'ஆவிற்கு நீரளித்தல்' என்று உவமை காட்டினார்)
வேள்வி மிக உயர்ந்தது என்பதால் ‘ அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்....’ என்றார்.
வள்ளுவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உவமைகள் .
நுட்பமான உண்மைகளை விளக்கப் பொருத்தமான உவமை , எ. கா -
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று"
"ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று"
உயர்வானவற்றுக்கு , ஏற்கத்தக்கனவற்றுக்கு உயர்ந்த உவமை; தாழ்ந்தவற்றைக் குறிக்க மிகவும் தாழ்ந்த பொருள்களோடு உவமை. இதுவே வள்ளுவம் பின்பற்றும் முறை. கைம்மாறு கருதாமல் உதவும் பண்பாளர்களுக்கு மழை உவமையாகிறது.
காமத்துப்பாலில் இன்பத்துக்கு மாலவனின் உலகு தரும் பேரின்பம் உவமையாகிறது.
சில பாக்களில் மலர் கண்களுக்கு உவமையாகிறது.
(குறள் 112,119,1231, 1142)
பொருட்பெண்டிருக்குப் பிணமும், மக்கட் பண்பற்றவருக்கு மரமும், உலோபியின் செல்வத்துக்கு நச்சு மரமும் உவமைகளாயின -
"பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று"
"அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்."
"நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று"
உயிர்க்கொலை மறுக்கும் பேரறத்துக்கு உயர்ந்ததான வேள்வி எடுத்துக்காட்டப்படுகிறது 'கங்கையிற் புனிதமாய காவிரி' என்பதுபோல -
"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று"
'எண்ணில் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ' எனக் கம்ப ராமாயணம் பரதாழ்வானின் உயர் தகைமைகளைக் கோடி காட்டுவதற்குக் காப்பிய நாயகனான இராமபிரானையே எடுத்துக் கழிக்கிறது.
"செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து."
மிக உயர்ந்ததான செவியுணவுக்கு அவியுணவு உவமையாகிறது.
வள்ளுவர் வேள்வியை மறுக்கும் சமண சமயத்தவராக இருந்தால் இவ்வாறு கூறுவாரா ?
வேள்விகளை வள்ளுவம் ஏற்றுக்கொண்டுள்ளதா என்னும் ஐயம் தேவையற்றது; வேள்வியில் தரப்படும் அவியுணவு, மறை ஓத்து, வேள்விகளை மையமாகக்கொண்ட அறுதொழில் இவற்றை வள்ளுவம் மறுக்கவில்லையே !
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று

(அதிகாரம்:புலால் மறுத்தல் குறள் எண்:259 )

பொழிப்பு (மு வரதராசன்): அவிப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட, ஒன்றன் உயிரைக் கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.



மணக்குடவர் உரை: நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.

பரிமேலழகர் உரை: அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று.
(அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.}

குன்றக்குடி அடிகளார் உரை: தீயின்கண் நெய் முதலியவற்றை அவியாகச் சொரிந்து ஆயிரம் வேள்வி செய்வதிலும் சிறந்தது, ஒன்றின் உயிரைப் போக்கி அதன் ஊனை உண்ணாமை. வேள்வியினும் சிறந்தது கொல்லாமை. வேள்வி முதலியவற்றின் காரணமாகக் கொலை நிகழ்தமையை மறுத்தது இது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை, அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் நன்று.

பதவுரை:
அவி-அவிக்கப்படுவது; சொரிந்து-பெய்து; ஆயிரம் வேட்டலின்-ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட ஒன்றன்-ஒன்றினுடைய; உயிர்-உயிர்; செகுத்து-(போக்கி)கொன்று; உண்ணாமை-உண்ணாதிருத்தல்; நன்று-நன்மையுடையது.


அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும்;
பரிப்பெருமாள்: நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும்;
பரிதி: நெய் முதலானவற்றை ஓமத்திலே சொரிந்து ஆயிரம் யாகம் செய்வதில்;
காலிங்கர்: வேள்வித் தீக்கு உரித்தாயுள்ள நெய்யும் அசனமும் முதலாகிய ஓமத்திரவியங்களைக் குறைவறச் சொரிந்து ஆயிரம் வேட்டலினும்
பரிமேலழகர்: தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும்;

'நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆகுதி பெய்து ஆயிரவேள்வி செய்தலினும்', 'நெய் முதலியவற்றைத் தீயிற் சொரிந்து ஆயிரம் வேள்வி செய்தலினும்', 'ஓமத் தீயில் அவிர்ப்பாகங்களைக் கொட்டி ஆயிரம் யாகங்களைச் செய்வதைக் காட்டிலும்', 'தீயினிடம் நெய் முதலிய பொருள்களைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்தலைவிட' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட என்பது இப்பகுதியின் பொருள்.

ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.
பரிப்பெருமாள்: ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் தெளிவுடையாருண்ணார் என்றார். அவருண்ணாதது யாதனைக் கருதியென்றார்க்கு, அது எல்லாப் புண்ணியத்தினும் நன்றென்று கூறப்பட்டது.
பரிதி: ஓர் உயிரைக் கொன்று புலால் தின்னாமை நன்று என்றவாறு.
காலிங்கர்: மிக நன்று, மற்றொன்றினையே கொன்று அதன் ஊனை உண்ணாமை என்றவாறு.
பரிமேலழகர்: ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.

'ஓர் உயிரைக் கொன்று புலால் தின்னாமை நன்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஓருயிரைக் கொன்று தின்னாமை மேல்', 'ஓருயிரைப் போக்கி அதன் ஊனைத் தின்னாமை நல்லது', 'இன்னொரு பிராணியின் உயிரை வதைத்து அதன் ஊனைத் தின்னாதிருப்பது நல்லது', 'ஓருயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாமலிருத்தல் நல்லது. (உயிரைக் கொன்று யாகம் செய்தலை மறுக்கின்றார்.' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஓர் உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாமலிருத்தல் நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட ஓர் உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாமலிருத்தல் நல்லது என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

உயிரைக் கொன்று வேள்வி செய்வதால் என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது?

தெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்து சடங்கு ஆற்றல், புலால் உண்ணாமை இவற்றில் எது நல்லது என்பதை இப்பாடல் ஆய்கிறது.
ஆரிய அந்தணர்களுக்கு அவர்களாலேயே வகுத்துக்கொண்ட ஆறு தொழில்களில் தீ வளர்த்து வேள்வி செய்தல் ஒன்றாகும். வடமொழியில் யாகம் என்று சொல்லப்படுவது தமிழில் வேள்வி எனப்படுகிறது. இந்த வேள்வி தெய்வங்களின் விருப்பத்திற்காகச் செய்யப்படுவது என்று சொல்லப்படுகிறது. வேறுலகத்திலுள்ள தெய்வங்களை மகிழ்விப்பதற்காக அவர்களுக்கு விருப்பமான உணவுவகைகள் வேள்விக் குண்டத்தில் போடப்படும். இதில் குதிரை, பசு, உடும்பு போன்ற உயிர் விலங்குகளும் உயிரோடு அளிக்கப்பட்டன. 'வேள்விக்கென்றே பசுக்கள் பிரமனால் படைக்கப்பட்டன' என்று மனுநூல் (சூத்.5) கூறுகிறது. வெந்த அவற்றின் மாமிசத்தை, தெய்வத்தின் பெயரால், யாகம் வளர்த்தவர்களும் யாகம் செய்வித்தவர்களும் உண்டு மகிழ்ந்தார்கள். இது தேவர்களுக்கு அக்கினி பகவான் மூலம் உணவைக் கொடுத்துஅனுப்பி ஆரியர்கள் வழிபடும் முறையாகும். அவியுண்ட தெய்வங்கள் மகிழ்ந்து வேள்வி செய்வோர் கேட்ட வரம் தருவர் என்பது அவர்தம் நம்பிக்கை. உயிர்க்கொலை செய்து வேள்வி செய்வது புலைசூழ் வேள்வி எனப்பட்டது.
(இந்நாட்களில் வளர்க்கப்படும் வேள்வித் தீயில் உயிர்களைப் போடாமல், விலை மதிப்புள்ள தங்க, வெள்ளிக்காசுகள், பட்டுச்சேலை போன்ற பொருள்களையும் நெய், பால், தானியங்கள் போன்றவற்றையும் சொரிகின்றனர்.)

அவி என்பது வேள்வித் தீயில் சொரியப்படும் உணவாகும். தேவர்களுக்கு உணவாகத் தீயிலிடப்படும் எல்லாப் பொருளையும் வடமொழியில் ஹவிஸ் என்பர். அதுவே தமிழில் 'அவி' யாயிற்று. உயிர்க்கொலைகள் செய்யப்பட்டு முன்னாளில் வேள்விகள் நடந்தன என்பது வரலாற்று உண்மை. புத்தர் இத்தகைய புலைசூழ் வேள்வியைக் கண்டித்ததும் வேள்வியை நேரில் கண்ட புத்தரின் உள்ளத் துடிப்பு பிம்பிசாரனின் யாகத்தைக் கலைத்ததும் பதிவாக்கம் செய்யப்பட்ட நிகழ்வுகள். மணிமேகலைக் காப்பியத்திலும் ஆபுத்திரன் என்ற அறவோன் புலைசூழ் வேள்வியைத் தடுத்தான் என்பதான காட்சிகள் வருகின்றன. மேலும் பழம் நூல்கள் மூலமும் கொலை வேள்விகள் நடந்தேறியன என்பது தெரியவரும். கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரியா ரகத்து (கொல்லாமை குறள்எண்:329 பொருள்: கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்) என்ற குறளுக்கு உரை விளக்கம் தரும்போது பரிமேலழகர் "கொலை வினையர் என்றதனான் வேள்விக்கண் கொலையன்மையறிக" எனக் கூறியுள்ளார். இவ்விளக்கம் "வேள்விக்கண் செய்யப்படும் கொலை" என்று ஒன்று உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு அப்படிப்பட்ட கொலை வேள்விக்காக இருந்தால் ஒத்துக் கொள்ளலாம் என்பதாக அமைந்துள்ளது. மற்றொரு குறளான நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை (கொல்லாமை குறள்எண்: 328 பொருள்: கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்) என்பது எந்த நோக்கமாக இருந்தாலும் உயிர்ப்பலி இழிவானது என்று கூறுகிறது. ஓர் உயிரைக் கொன்று சாந்தி முதலியன செய்வதால் என்ன ஆக்கம் கிடைத்தாலும், மேன்மையுள்ளோர் உயிர்ப் பலியிடும் பாவத்தைச் செய்ய மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர். இக்குறட்பாக்களும் அக்கால வேள்வியில் உயிர்க்கொலைகள் இருந்தன என்பதை உறுதிப்படுத்துகின்றன.

...................விருந்தின் துணைத் துணை வேள்விப் பயன் (விருந்தோம்பல் 87), .................விருந்தோம்பி வேள்வி தலைப்படாதார் (விருந்தோம்பல் 88) என விருந்தோம்பலை வேள்வி என்று ஆசிரியர் குறித்திருத்தலால் வேட்டல்-விருந்தோம்பல் என்று பொருள் கொள்ளலாம் என்று சிலர் கூறினர். இங்கு 'அவி சொரிந்து வேட்டல்' என அடை கொடுத்துக் கூறுவதால் விருந்தோம்பலைக் குறியாது வேள்வியையே குறிக்கும்' எனத் தெளிவுபடுத்துவார் இரா சாரங்கபாணி.

செகுத்து என்பது போக்கி என்ற பொருள்பட்டு உயிர் நீக்குவதைக் குறிக்கும்.
மற்றொரு உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாமை ஆயிரம் வேள்விகள் செய்வதைக் காட்டிலும் மேல் என்கிறது பாடல். எல்லா உயிர்களும் இயற்கையின் படைப்பே. எனவே, மனிதர்களைப் போலவே அனைத்து உயிரினங்களுக்கும் வாழும் உரிமை உண்டு. எல்லோரும் வாழ வேண்டும் என்று எண்ணுவதுடன் நில்லாமல், எல்லா உயிரும் வாழவேண்டும் என்று எண்ணி, விலங்கு, பறவை முதலிய மற்ற உயிர்க்கும் தீங்கு செய்யாமல் மக்கள் வாழ்க்கை நடத்தவேண்டும் என்று வள்ளுவர் விரும்புவார். உயிர்களைக் கொல்லாமை, புலால் உண்ணாமை ஆகியன சிறந்த அறங்கள் என்று கருதியவர் வள்ளுவர். தெய்வத்தின் பெயரால் கொலைசூழ் வேள்விகள் பல செய்தலினும் ஓர் உயிரை நீக்கி அதன் ஊன் உண்ணாமை அதாவது புலால் உண்ணா நோன்பு நல்லது என்கிறார் இங்கு. இக்கருத்துக்களில் உறுதியாக நின்று, எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல், உயிர்க்கொலை வேள்வி தனக்கு ஏற்புடையதல்ல என்ற தன் நிலைப்பாடைத் தெளிவாகப் பதிவு செய்கிறார்.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

இக்குறளின் நேரடிப் பொருள் அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றின் உயிரை நீக்கி அதன் உடம்பை உண்ணாமை நன்று என்பது. புலால் மறுத்தல் அதிகாரத்தில் உள்ளதால் இது புலால் உண்ணாமையை வலியுறுத்த வந்தது என்பது தெளிவு.

இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது கொலை வேள்வியையா அல்லது கொலைத் தீமை கலவாத வேள்வியையா? பழைய உரையாசிரியர்களான மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி, காலிங்கர், பரிமேலழகர் ஆகிய அனைவரும் நெய் சொரிந்து செய்யப்படும் வேள்வியையே சொல்கின்றனர்; இவர்கள் உரைகளில் உயிர்ப்பலி என்பது கூறப்படவில்லை. இக்குறள் பற்றி தண்டபாணி தேசிகர் தரும் விளக்கம்: 'இதனால் வேள்விகளையும் அவற்றால் எய்தும் பயனையும் உட்கொண்டு, அவற்றைக் காட்டிலும் கொல்லா விரதத்தின் மேன்மையைக் குறித்துக் கொள்ளச் செய்கிறார்..... கொலை நிகழ்த்துவது கடவுட்காயின் பாவமாகாது என்பதைக் காட்டிலும் கொலையே இல்லாமலிருக்கும் நிலை பெரிது என்பதே திருவள்ளுவர் துணிவு'. இவர் கருத்துப்படி இக்குறள் கொலைவேள்வி பற்றியதே. கொலையற்ற வேள்வியே இப்பாடலில் சொல்லப்படுவது என்றால் ஒப்புமைக் கூறுகளின் பொருத்தம் முழுமையாக அமையாது. கொலை அல்லாத வேள்வியை இங்கு சொல்லவேண்டிய தேவையே எழவில்லை. மேலும் சொல்லாட்சி, நடைப்போக்கு இவற்றையும் நோக்கும்போது புலைசூழ் வேள்வியையே வள்ளுவர் இங்கு குறிக்கிறார் என்பது தெளிவாகும்.
இனி, இக்குறள் வேள்விகளை மறுத்து சொல்லப்பட்டது என சிலர் விளக்கம் கூறினர். வள்ளுவர் கொலை வேள்வியை மட்டும் வேண்டாம் என்றாரா அல்லது வேள்வியையே முற்றிலும் மறுத்தாரா? இக்குறள் வேத வேள்விக்கு -அவி வேள்வி ஆயினும் அல்லது கொலை வேள்வி ஆயினும்- எதிரானது என்று இன்றைய பெரும்பான்மை தமிழரிஞர்களும் ஆய்வாளர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் வேள்வியை ஆதரிப்போர் ‘ஆயிரம் யாகத்தைவிட அகிம்சை உயர்ந்தது’ என்றால் அது கைவிடத்தக்கது என்பது பொருள் அல்ல; வேத வேள்வியைவிட புலால் உண்ணாமை சிறந்தது என்று கூறியதாகத்தான் கொள்ள வேண்டும் என்பது இவர்கள் கருத்து. இக்குறளில் வேட்டல் தாழ்வாகக் குறிப்பிடப்படவில்லை; வேள்வி சாடப்படவில்லை என்று இவர்கள் வாதிடுவர். மேலும் அவர்கள் குறள் 413-ஐத் துணைக் கொள்வர்: செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து (கேள்வி குறள்எண்:413 பொருள்: செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும், அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர்) என்று குறளில் 'அவியுணவின் ஆன்றோர்' என்ற சொல்லாட்சி உயர்வுநவிற்சியிலே சொல்லப்பட்டிருப்பதால் வள்ளுவர் வேதவேள்விகளுக்கு எதிரானவர் அல்ல என்று சொல்வர். 'அவி' என்ற சொல்லே குழப்பத்துக்குக் காரணம். அவி என்று பொதுவாக குறள் எண் 413-லும் இக்குறளிலும் அடையின்றி குறித்ததால் இச்சிக்கல் எழுகிறது. இக்குறளில் சொல்லப்பட்ட அவி புலைசூழ் வேள்வியில் சொரியப்படுவது என்றும் குறள் 413-இல் கூறப்பட்ட அவி கொலையற்ற வேள்வியில் போடப்பட்டது என்றும் கொண்டால் ஓரளவு குழப்பம் நீங்கும். வேள்வி என்பது ஒரு வகையான வழிபாடு தான். அதில் சான்றாண்மை நிறைந்த வள்ளுவர் குறுக்கிடமாட்டார். கொலையற்ற வேள்விக்கு வள்ளுவர் ஏன் மறுப்புத் தெரிவிக்க வேண்டும்? எனவே வேள்விக்கே எதிரான பாடல் இது என்று கொள்ளமுடியாது. ஆனால் இப்பாடல் கொலைவேள்விக்கு எதிரானது - அது கடவுளுக்கே ஆயினும்- என்பதில் சிறுதும் ஐயம் இல்லை.

உயிர்க்கொலைக் கொடுமை செய்து நிகழ்த்தப்படும் வேள்வியைக் கண்டிக்கும் அதேவேளையில் புலால் உண்ணாமையின் மேன்மையும் இங்கு உணர்த்தப்படுகிறது. தெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்து ஆயிரக்கணக்காக சடங்குகள் செய்வதைவிட கொன்ற உடம்பின் புலால் உண்ணாமல் இருப்பது நல்லது என்பது இக்குறள் கூறும் செய்தி.

அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட ஓர் உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாமலிருத்தல் நல்லது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

படையல் என்ற பெயரிலும் ஊன் உண்ணவேண்டாம் எனும் புலால் மறுத்தல் பாடல்.

பொழிப்பு

அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலினும் ஓர் உயிரைப் போக்கி அதன் ஊனைத் தின்னாமை நல்லது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் -வேதங்களைப் போற்றும் குறளே
Permalink  
 


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.   குறள் 1033: உழவு

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

  வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை  (அதிகாரம்:பகைத்திறம் தெரிதல் குறள் எண்:872)

 வில்லை ஏராகக் கொண்டு உழும் வீரனோடு பகைத்துக் கொண்டாலும், சொல்லை ஏராகக் கொண்டு உழும் புலவரைப் பகைக்காதே.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் -வேதங்களைப் போற்றும் குறளே
Permalink  
 


வள்ளுவர்

அயோத்திதாசப் பண்டிதர் – வள்ளுவர் ஒரு பௌத்தரே!

 திருக்குறள் என்பதன் உண்மையான பெயர் திரிக்குறள் என்பதாகும்.

 இதன் மூல நூல் மூவர் மொழியாக அழைக்கப்படும் திரிபேத வாக்கியமாகும்.

 இதனை திரிபீட வாக்கியம் என்றும் அழைப்பார்கள்.

 இது பாலி  மொழியில் இயற்றப்பட்டதாகும்.

 தன்மபீடக, சூத்ர பீடக, வினய பீடகமாம் மகா பாஷா நூலே இது.

 இதன் வழி நூலே திருக்குறளாகும்.

 திரிவர்க்கம் என்பதன் ஆசிரியர் பிரம தேவர்.

 மகாபாரதத்தில் சாந்தி பர்வதத்தில் 58-ஆம் அத்தியாயத்தில் இது உள்ளது.

 சிவனால் இயற்றப்பெற்றது வைசாலவம்.

 இந்திரனால் இயற்றப்பெற்றது பாகுதந்தகம்

 குருவால் இயற்றப்பெற்றது பார்ஹசுபத்யம்

 சுக்ர நீதி இயற்றப்பெற்றது சுக்ராச்சாரியாரால்.

 பிரமனின் திரிவர்க்கமே முப்பாலாக பரிணமித்தது.

 பின்னரே மற்ற நீதி நூல்கள் தோன்றின.

 பிரமனின் அவதாரமே வள்ளுவர். அதானால் தான் அவருக்கு நான் முகன் என்று பெயர்.

 தமிழில் தோன்றிய முதல் நீதி நூலும் அதுவே.

 வள்ளுவரின் மனைவி பெயர் வாசுகி அல்ல. மாதானுபங்கி என்பதாகும்.

 வள்ளுவர் வடநூல் சார்பு மிக்கவர். அவர் வைதீகச் சார்புடையவராதலின் தென்புலத்தார், இல்வாழ்வான் ஆகிய குறட்கள் மூலம் பஞ்சம காயறங்களினை ஈண்டொழுகக் கூறினார்.

 ஆதி பகவன் என்பது புத்தனையே குறிக்கும்.

 மண்டல முனிவரும் தனது நிகண்டுரையில் “பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்” என்று கூறியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.

 “ஆதி பகவன் அருமறை ஓதுமின்” என்று திருமூலரும் கூறியுள்ளார்.

 “ஆதிபகவனையே பசுவே அன்பாய்த் தொழுவாயேல்

சோதி பராசக்தி தான் பசுவே சொந்தமாகாதோ” என்றும் சித்தர் கூறியுள்ளார்.

 ஆக புத்தமதக்கருத்துக்களை அடியொற்றியே குறள் யாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வழிநூலே.

வள்ளுவர் ஒரு பௌத்தரே!

 காஞ்சி மகாப்பெரியவர் ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் – வள்ளுவர் ஒரு வைதீகரே!

 “தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு

ஐம்புலத்தார் ஓம்பல் தலை”

 பிதிர்க்கடன், பரமேஸ்வர பூஜை, வேத யக்ஞம், எல்லா ஜீவ ராசிகளுக்கும் உணவு படைப்பது ஆகியவற்றை வைதீக மதம் விதித்திருக்கிறது. வள்ளுவர் இதனையே பின்பற்றுகிறார். அவர் ஒரு வைதீகர்.

 “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

 உயிர் செகுத்து உண்ணாமை நன்று”

 வள்ளுவர் வைதீக அனுஷ்டானங்களில் நம்பிக்கை கொண்டவர். காவிரியின் பெருமையைச் சொல்ல வந்த ஒருவர், ‘ஆயிரம் கங்கையை விடக் காவிரி சிறந்தது’ என்று கூறினால் கங்கையும் உயர்ந்தது என்று தானே பொருள். அவ்வாறே, ‘ஆயிரம் யாகத்தைவிட அஹிம்சை உயர்ந்தது’ என்றால் ‘யாகமும் உயர்ந்தது’ என்றே பொருள். இக்குறள் இல்லறவியலில் சொல்லப்படவில்லை. துறவறவியலில் சொல்லப்பட்டிருக்கின்றது. துறவிக்கு யாகத்தில் அதிகாரம் இல்லை. ஆக, “திருவள்ளுவர் வைதீகத்தை ஆட்சேபிக்கும் நாஸ்திகர் அல்லர்”

நாவலர் சோமசுந்தர பாரதியார் – வள்ளுவர் வைதீகரல்லர்!

 வள்ளுவர் ஒரு வைதீகரல்லர். அவர் ஒரு தமிழ்ச் சான்றோர். ஆரியரின் தரும சாத்திரத்தை மறுக்கிறார். அதே சமயம் சான்றோராதலின் நிந்தனை செய்யாமல், ஏசாது வாளா அகல விடும் பெற்றிமை அறிந்து பாராட்டத்தக்கது.

 “சிலர், பாயிரம், கடவுள் வாழ்த்து போன்ற அதிகாரங்கள் இடைச் செருகல் எனக் கருதுகின்றனர். ஆனால் அவை இடைச் செருகல் அல்ல என்பது, குறளை முழுமையாக ஆயும் அனைவருக்கும் புரியும்.”

ரா.பி. சேதுப்பிள்ளை:  திருவள்ளுவர் நூல் நிலையம்.

 “பரிமேலழகர், பல இடங்களில், இலக்கண அமைதிக்காக, இலக்கியத்தை முறித்து, இயற்கைக்கு மாறான பொருள் கண்டுள்ளார்”.

அறிஞர் அண்ணா:  குறள் அமுதம்.

 “உரையாசிரியர்கள் தம் மனம் போன படி, குறளுக்குப் பொருள் உரைத்துள்ளனர். நாவலர் போன்றவர்கள், இக்குறையைக் களைய முன் வர வேண்டும்”

வ.உ.சி:    உரைப் பாயிரம்திருவள்ளுவர் திருக்குறள்

 “பாயிரத்தில் இடம் பெறும், கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை போன்ற அதிகாரங்கள் இடைச் சொருகலே. இவை வேறு யாரோ ஒருவர் இயற்றியதே! ஏனெனில் கடவுள் வாழ்த்து அதிகாரக் கருத்துகளுக்கும், பின்னர் வரும் துறவு, மெய்யுணர்தல் அதிகாரத்திற்கும் இயைந்த பொருத்தம் இல்லை. மேலும் கடவுள் வாழ்த்து, மெய்யுணர்தல் என இரண்டு அதிகாரங்கள் இயற்றத் தேவையும் இல்லை. ஆகவே  கடவுள் வாழ்த்து போன்றவை இடைச்சொருகலே என்பது எனது தாழ்மையான கருத்து.

சி. இலக்குவனார்:  இனிய பொழிப்புரை

  ” ‘ஐந்தவித்தான்’ என்பது இடைச் செருகலே”

பாவாணர்:   பாவாணர் உரை

  “திருவள்ளுவர் ஏதேனும் ஒரு பொருள் கருதியே, இதனை (ஐந்தவித்தான்)ப் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அது என்னவென்று இதுகாறும் அறியப்படவில்லை”

புலவர் குழந்தை:  குறள் அமுதம்

  ” ‘தெய்வம்’ என்பது கடவுளைக் குறிக்கவில்லை. அது ‘தேய்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியதாகும். அது போலவே ‘வானவர்’ என்பதும். அது உயர்ந்த இடத்தில் உள்ளோர், அதாவது இமயம் போன்ற பகுதியில் உள்ளோரைக் குறிக்கின்றது. வெளிநாட்டில் உள்ளவரை நாம் மேல் நாட்டினர் என்று குறிப்பது போல்.”

 புத்தேள்-புத்தாள் அதாவது புது ஆள் என விரியும். புதியவர் என்று  பொருள். இது வடவரை குறிப்பதாகும். அவர்கள் வசிக்குமிடமே புத்தேள் உலகம். அதாவது உயர்ந்த இடம் என்பதாகும். ஆக, புத்தேள் உலகம் என்பதற்குப் பொருள் புதிய உலகம் என்பதாகும்.

 தெய்வம் என்பதன் வேர்ச் சொல் ‘தே’ ஆகும்.

 தேவர் என்பது கடவுளரையோ வானவரையோ குறிக்காது. அது சான்றோரைக் குறிப்பதாகும். சான்று: அருண்மொழித்தேவர், மெய்கண்ட தேவர், திருக்கத்தேவர்.

 ஆல்பர்ட் சுவைட்சர்:  இண்டியன் தாட்ஸ் அன்ட் இட்ஸ் டெவலப்மெண்ட்

  “குறளில் காணப்படும் ‘காமத்துப்பால்’ என்னும் பகுதி சாலமோனின் பாட்டுடன் ஒப்பிட்டு மகிழத்தக்கது.”

காமாட்சி சீனிவாசன்:   திருக்குறளும் விவிலியமும்

  “விவிலியம் ‘ஆதி முதல்வனாகிய’ என்று தான் ஆரம்பிக்கின்றது. குறளும் ‘ஆதிபகவனை’ குறளின் முதலாகச் சுட்டுகின்றது. இது ஒப்பு நோக்கத்தக்கது.”

  த்தேயு. மீட்புச் செய்தி”

“காசுக்கு இரண்டு கிடைக்கும் சிட்டுக் குருவியேயாயினும் பரமபிதாவின் சித்தமில்லாமல் யாரும் பிடிக்க முடியாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது.”  

Charles E Gover. The folk songs of southern India.

ஒரு உண்மையான தமிழ்ப் புலவரை கிறித்துவராகக் காட்டுவதை நான் எதிர்க்கிறேன்.

H.Drew

 I am also Agree.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

நாம் இன்றைய நடைமுறையில் வள்ளுவர் வழியிலே கூறுவோம் - "டான் ப்ராட்மேனைவிட விராட் கோஹ்லியின் பேட்டிங் நன்றாக உள்ளது" - இதில் டான் ப்ராட்மேன் திறமையை நாம் முழுமையாய் அங்கிகரித்து அவரோடு ஒப்பற்ற திறமையை கோஹ்லியோடு இணைத்து பேசுகிறோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 சங்க இலக்கியத்தில் வேதங்கள் அந்தணர்கள் மிகவும் போற்றப்படுகின்றனர் உங்கள் என்பது நான்கு வேத ரிக் யஜுர் சாம அதர்வண வேத தோடு அவை ஆறு அங்கங்கள் கொண்டது அவற்றை சிவபெருமான் அருளினார் என்பது புறநானூறு 166 பாடல் சொல்வது இந்த ஆறு அங்கம் என்றால் என்ன இவையெல்லாம் இந்த பாரத நாட்டின் பொக்கிஷங்கள் இவற்றை திருவள்ளுவரும் போற்றுபவர் சிந்து சரஸ்வதி நதி நாகரிகத்தை பற்றி அதை பற்றி முதலில் ஆராய்ந்து உலகுக்கு வெளிப்படுத்திய ஜான் மார்ஷல் அவர்கள் கூற்று

 சிந்து சரஸ்வதி நாகரீகத்தின் உச்சக்கட்டம் என்பது போன்று 2500 ஹரப்பா மொகஞ்சதாரோ என்ன ஆகும் ஆனால் அதன் தொடக்க காலம் என்பது அரியானாவில் குருக்ஷேத்திரம் எனும் இடத்தில் உள்ள 9 ஆயிரத்து 500 வருடங்களுக்கு முன்பான என அங்கு கிடைத்த தொல்லியல் பொருட்கள் உறுதி செய்துள்ளன கனிம கார்பன் 14 சோதனையில்

 திருவள்ளுவர் செங்கோன்மை அதிகாரத்தில் நாட்டின் அரசன் தன் அந்தணர்கள் நொறுக்கும் அதாவது அந்தணர்களின் வேதங்களுக்கும் அதன் அடிப்படையில் எழுந்த தர்ம சாஸ்திரங்களை அடிப்படையாக காரணியாக ஆட்சி செய்ய வேண்டும் என்கிறார் அதேபோல நல்ல அரசனுக்கு  செங்கோல் இருக்கு ஆனது.

 மோசமான அரசனைப் பற்றிய உதாரணம் கூறுகையில் அவர் நீரின்றி அமையாது உலகு வானின்று அமையாது வழக்கு என சொன்னவரே முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி பயணப் பையில் என்கிறார் அதாவது மழை பொய்க்கும் என்றார் ஆனால் அதனினும் மோசம் நாட்டிற்கே கேடு என்ன என்றால் ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் என்றார் அதாவது பசுக்கள் தன்னுடைய பயனாகிய பால் நெய் தயிர் போன்றவற்றை தராது பிராமணர்கள் அதாவது ஆறு தொழிலை உடையவர்கள் தங்களுடைய வேதங்களை மறப்பர் என தெளிவாக இதுதான் நாட்டிற்கு மிகவும் உச்சகட்டமான கேடு என வள்ளுவர் கூறியுள்ளார்

 திருவள்ளுவர் திருக்குறளில் பல இடங்களில் வேள்வியை சுட்டிக்காட்டுகிறார் வீன் பையன் அது மேல் உலகத்திற்கு உன்னை கொண்டு செல்லும் உன்னை மேலுலக தெய்வத்துள் வைக்கப்படும் இந்த உணவை விருந்துணவு கொடுப்பவன் நூலை வரவேற்பார்கள் அதாவது எண்ணமே இவை மிகவும் பயனுள்ளவை அதாவது உலகில் மற்ற எந்த மதத்திலும் இல்லாத ஒரு கோட்பாடும் அவதாரம் எனப்படும் அதாவது கடவுள் மேலிருந்து கீழே இறங்கி வருவது அவதாரம் ஆனால் மனிதன் வாழ்ந்தால் மேலுலகம் சென்று அங்கு தெய்வங்களுக்கு இடையே தெய்வத்தோடு இருக்கலாம் என்கிறார் ஆனால் அவன் தெய்வம் இல்லை ஆனால் முக்தியடைந்தார் தெய்வ நிலையை அடைவான் என்பது அது கடைசி நிலை எனவே இங்கு அவர் எல்லா இடத்திலும் வேள்வியை போற்றியே தான் கூறியுள்ளார்

 நாம் திருவள்ளுவர் கூறுவதை சற்று பார்க்க வேண்டும் அதாவது பொருள் ஈட்டுவதற்காக நாம் வாழ்கிறோம் சிற்றின்பத்தை தேடுகிறோம் மாணவராக கல்வி பயணத்தில் நாம் கல்வி பயிலும் காலத்தில் நாம் கல்வி கற்கிறோம் பின்னர் தொழில் செய்கிறோம் என்பதை நோக்கி வாழப்போகிறோம் இன்ப வாழ்வில் காமத்தை சிற்றின்பம் என்றும் நிலையான முக்தி அடையும் மீண்டும் மீண்டும் பிறப்பு வரவே இல்லை ஹலோ இந்தாளு சொல்றதெல்லாம் டைப் பண்ணாத சும்மா வேஸ்ட் அட்வைஸ் பண்ணிட்

பொருளீட்டும் வாழ்வில் நாம் வாழ்க்கையில் பொருளுக்காக ஆசைப்பட்டு தவறான செயல்கள் செய்யக்கூடாது அந்தணர்கள் என்று என் கையில் அதாவது பார்ப்பனர்கள் தொழிலாளர் என்று திருவள்ளுவரை அழைத்தால் அவர் மிகத் தெளிவாக அவருடைய தொழிலில் வெற்றி பெறச் செய்தல் என்பது ஆகும் என்பது ஒருவன் தன்னுடைய சிறுவயதில் கல்வி கற்கும் நிலை அதாவது முழுமையாக நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் கற்க 48 ஆண்டுகள் ஒரு அந்தணர் செலவிடுகிறார் என்று சங்க இலக்கியம் காட்டுகிறது ஆனால் தொழில் செய்து பொருள் ஈட்டும் தொழில் செய்கையில் அவை அனைத்தும் அவருக்கு பயன்படாது தான் அடிக்கடி தேவைப்படுவதை மட்டுமே அவர் மீண்டும் பார்த்துக்கொள்வார்

 பொருள் ஈட்டுவதற்காக தன் தொழிலிலும் தவறான செயல்கள் செய்யக்கூடாது அதாவது அதிக பணம் கிடைக்கும் என தவறான நபர்களுக்கு அவர் வேள்விகள் செய்வதோ அல்லது தன்னுடைய எதிரிகளை அழிப்பது போன்ற அந்தணர்கள் என்பவர்கள் மற்றும் உலகத்தில் உள்ள அனைவரின் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் எனவே அந்த வாழ்க்கையை கடைபிடிக்க வேண்டும் அதுதான் அவர் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் என்கிறார் ஏனென்றால் மிகத்தெளிவாக வள்ளுவர் அரசன் செங்கோல் ஆனது அந்தணர்களின் வேத சாஸ்திரங்களை அடிப்படையாக காரணியாக இருக்க வேண்டும் என்பவர் அதேபோல அரசன் மோசமாக இருந்தால் அந்த நாட்டில் பசுக்கள் பலன் தராது தொழிலை உடைய அந்தணர்கள் வேதம் என்கிறார் கிட்டத்தட்ட இதே போல



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 Screenshot_2020-04-18-22-54-43.pngScreenshot_2020-04-18-22-54-57.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-22-55-21.png Screenshot_2020-04-18-22-55-43.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 Screenshot_2020-04-18-22-55-59.pngScreenshot_2020-04-18-22-56-12.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-22-56-26.png Screenshot_2020-04-18-22-56-38.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-22-56-52.png Screenshot_2020-04-18-22-57-03.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 Screenshot_2020-04-18-22-57-20.pngScreenshot_2020-04-18-22-57-34.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 Screenshot_2020-04-18-22-57-48.png Screenshot_2020-04-18-22-58-02.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-22-58-45.png Screenshot_2020-04-18-22-59-14.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-22-59-34.png Screenshot_2020-04-18-22-59-49.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-00-00.png Screenshot_2020-04-18-23-00-15.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-00-26.pngScreenshot_2020-04-18-23-00-40.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-00-50.pngScreenshot_2020-04-18-23-01-01.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-01-12.pngScreenshot_2020-04-18-23-01-34.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-01-48.png Screenshot_2020-04-18-23-02-06.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-02-29.pngScreenshot_2020-04-18-23-02-44.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 Screenshot_2020-04-18-23-02-56.pngScreenshot_2020-04-18-23-03-11.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 Screenshot_2020-04-18-23-03-25.png Screenshot_2020-04-18-23-03-43.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 Screenshot_2020-04-18-23-03-58.png Screenshot_2020-04-18-23-04-17.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-04-34.png Screenshot_2020-04-18-23-05-03.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-05-49.pngScreenshot_2020-04-18-23-06-21.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-07-24.png Screenshot_2020-04-18-23-07-45.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-08-32.png Screenshot_2020-04-18-23-08-43.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-09-27.png Screenshot_2020-04-18-23-09-42.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-09-56.pngScreenshot_2020-04-18-23-11-08.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 Screenshot_2020-04-18-23-11-08.png Screenshot_2020-04-18-23-11-34.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 Screenshot_2020-04-18-23-11-47.pngScreenshot_2020-04-18-23-12-22.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-12-34.png Screenshot_2020-04-18-23-12-49.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-13-07.png Screenshot_2020-04-18-23-13-24.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-13-41.pngScreenshot_2020-04-18-23-13-59.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-14-14.png Screenshot_2020-04-18-23-14-44.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-15-04.png Screenshot_2020-04-18-23-15-27.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-15-42.pngScreenshot_2020-04-18-23-15-54.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-16-08.png Screenshot_2020-04-18-23-16-27.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-16-39.png Screenshot_2020-04-18-23-16-56.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-17-09.png Screenshot_2020-04-18-23-17-28.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 Screenshot_2020-04-18-23-18-14.png Screenshot_2020-04-18-23-18-30.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-18-43.png Screenshot_2020-04-18-23-18-59.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 Screenshot_2020-04-18-23-19-14.png Screenshot_2020-04-18-23-19-44.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 Screenshot_2020-04-18-23-19-59.png Screenshot_2020-04-18-23-20-15.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-20-27.pngScreenshot_2020-04-18-23-21-02.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 Screenshot_2020-04-18-23-21-39.png Screenshot_2020-04-18-23-22-05.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Screenshot_2020-04-18-23-22-32.png Screenshot_2020-04-18-23-23-44.png



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 Screenshot_2020-04-18-23-24-32.png Screenshot_2020-04-18-23-24-43.png



__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard