Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பண்டைத் தமிழ் எழுத்தின் காலம் – நடன காசி நாதன்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
பண்டைத் தமிழ் எழுத்தின் காலம் – நடன காசி நாதன்
Permalink  
 


பண்டைத் தமிழ் எழுத்தின் காலம் – நடன காசி நாதன்
இன்றைக்கிருக்கும் தமிழ் எழுத்தின் மிகப் பழைய வடிவத்தைப் பண்டைத் தமிழ் எழுத்து” என்கிறோம். இவ்வெழுத்தைச் சிலர் தற்பொழுது தமிழ் பிராமி” என்றும்தாமிழி” என்றும் எழுதுகின்றனர். தமிழ் பிராமி என்றழைப்பதற்கு அவர்கள் கூறும் காரணம் தமிழ் மொழிக்காக உருவாக்கப்பெற்ற பிராமி எழுத்து என்றும்,அசோகன் பிராமி அல்லது மௌரியன் பிராமியிலிருந்து இவ்வெழுத்துத் தோன்றியதே எனினும் அதிலிருந்து வேறுபட்டது என்றும் கூறுகின்றனர். அவ்வாறெனில் பிராகிருத மொழிக்காக எழுதப்பெற்ற எழுத்தைப் பிராகிருத பிராமி” என்று அழைப்பதுதானே சரியாகும். மேலும் அப்பிராமி எவ்வெழுத்திலிருந்து தோன்றியதுதிடீரென்று அவ்வெழுத்தை மௌரியர் உருவாக்கிக் கொள்கையில் மற்ற பகுதி மன்னர்கள்குறிப்பாகத் தமிழ் மன்னர்கள் தங்களுக்கென ஒரு எழுத்தை உருவாக்கிக் கொண்டிருக்கமாட்டார்களாஅவ்வாறு தங்களுக்கு உருவாக்கிக்கொண்ட எழுத்துதான் தமிழ் எழுத்து. அதன் பழமை குறித்துப் பண்டைய வடிவத்தைப் ”பண்டைத் தமிழ் எழுத்து” என்று அழைக்கிறோம்.
சற்றேறக்குறைய கி.மு.300ல் எழுதப்பெற்றதெனக் கொள்ளப்பெறும். சமவயங்க சுத்த” என்னும் சமண நூலில் பதினெட்டு வகையான எழுத்துகள் குறிக்கப் பெற்றுள்ளன.பம்பி”, ”தாமிழி” என்ற எழுத்துகள் அவற்றில் காணப்படுகின்றன. ”பம்பி என்பது பிராமி எழுத்தைக் குறிக்கும் பிராகிருதச் சொல் என்றும், ”தாமிழி” என்பது தமிழைக் குறிக்கும் பிராகிருதச் சொல் என்றும்கொள்ளப்படுகிறது. அந்த பிராமி எழுத்தில் அசோகன் கல்வெட்டுகள் உள்ளன என்றும் தாமிழி எழுத்தில் தமிழ்நாட்டில் உள்ள பண்டைய கல்வெட்டுகள்எழுதப்பெற்றுள்ளன என்றும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள கல்வெட்டுகள் தமிழ் எழுத்திலும்தமிழ் மொழியிலும் இருப்பதால் இதை ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால் பிராகிருத மொழியில் உள்ள அசோகன் கல்வெட்டுகள் பம்பி” எழுத்தில்தான் உள்ளன என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. ஆனால் பம்பி” எழுத்தில்உள்ளதாகக் கொள்ளப்படுகிறது. அசோகன் கல்வெட்டில் காணப்படும் எழுத்திற்குப் ”பிராமி” என்ற பெயரை முதன் முதலில் சூட்டியவர் ப்யூலர் என்ற மேல்நாட்டார்தான். அவ்வாறு அழைக்கப்பெற்றது சந்தேகத்திற்கு இடமானதுஎன்றும்வேறு ஒரு புனிதமான எழுத்திற்கு பிராமி” என்ற பெயர் சூட்டப்பட்டு இருக்கலாம் என்றும் டி.பி. வர்மா கருதியுள்ளார்.
அசோகன் கல்வெட்டுகள் நிலையே அவ்வாறு இருக்கும்போது தென் இந்திய பண்டைக் கல்வெட்டுகள்தென்னிந்திய பிராமியிலே” எழுதப் பெற்றுள்ளன என்பதும்,தமிழ்நாட்டுப் பண்டைய கல்வெட்டுகள் தமிழ் பிராமியில்எழுதப்பட்டிருக்கின்றன என்பதும் ஏற்றுக் கொள்ள இயலாதவை.
தமிழ் எழுத்துப் பிராகிருத மொழியில் தாமிழி” என்றுகுறிக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடி ஆங்கிலமொழி பேசுவோரால் ட்ராங்குபார்” என்றழைப்பதுபோல்,தமிழ்மொழி பேசும் நாம் தமிழ் எழுத்து என்றுதான்குறிப்பிடுதல் வேண்டும். இந்தியாவின் முதன்மைக் கல்வெட்டு ஆய்வாளராக இருந்த கே.ஜி. கிருஷ்ணன் தமிழ் எழுத்து என்றே கூறிவந்தார்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: பண்டைத் தமிழ் எழுத்தின் காலம் – நடன காசி நாதன்
Permalink  
 


அசோகன் கல்வெட்டில்
1. புள்ளியில்லா மெய்யெழுத்துப் உயிர்மெய்க்குறிலாகக் கொள்ளப்படும். உதாரணம் (க) ஆதலால் உயிர்மெய் எழுத்தில் பக்கக்கோடு இருக்காது.
2. உயிர்மெய் நெடிலைக் குறிக்க எழுத்தின் மேல் பகுதியில் வலப்பக்கம் ஒரு பக்கக் கோடு இடப்பட்டிருக்கும் (கா).
3. மெய் எழுத்துத் தனியாக இல்லை. கூட்டெழுத்தில் மெய் எழுத்துச் சேர்ந்து இருக்கும் (ய-க்ய) வாக்கியத்தின் இறுதியில் புள்ளி பெற்ற மெய்யெழுத்தைக் காண முடியாது.
ஆனால் தமிழ்க் கல்வெட்டுக்களில் மிகப் பழமையானவற்றில் (மாங்குளம் கல்வெட்டு).
முதல் வகை
1. புள்ளியில்லா மெய்யெழுத்துப் புள்ளி பெற்ற மெய்யெழுத்தாக மட்டுமே கொள்ளப்படும்.
2. மேலும் புள்ளியில்லா மெய்யெழுத்தில் பக்கக்கோடு இடப்பட்டிருந்தாலும். சில இடங்களில் அது புள்ளியைப் பெற்ற மெய்யெழுத்தாகவே கொண்டுஅதன் பக்கத்தில் உயிர் எழுத்து உயிர்மெய்யாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை அகர வரிசை முறை (Alphabetical) என்று அழைக்கப் பெறும் சில இடங்களில் உயிர்மெய்க் குறிலாகக் காணப்படுகின்றது.
இரண்டாம் வகை
1. புள்ளியில்லா மெய்யெழுத்துப் புள்ளிபெற்ற மெய்யெழுத்தாக மட்டுமே கொள்ளப்படும். அசோகன் கல்வெட்டுக்களில் காணப்பெறுவது போன்று உயிர் ஏறியஉயிர் மெய்யெழுத்தாகக் கொள்ள முடியாது.
2. முதல்வகைக் கல்வெட்டில் புள்ளியில்லா மெய்யெழுத்தில் பக்கக் கோடு இடப்பட்டிருந்தாலும் சில இடங்களில் மெய்யாகக் கருதப்பட்டது போன்று அல்லாமல்உயிர்மெய்யாகவே கருதப்பட்டது.
3. புள்ளியில்லா மெய்யெழுத்தில் உள்ள பக்கக் கோடு சில இடங்களில் உயிர்மெய்க் குறிலையும்சில இடங்களில் உயிர்மெய் நெடிலையும் குறிக்கும். ஆனால் அசோகன் கல்வெட்டுகளில் உயிர்மெய் நெடிலை மட்டுமே குறிக்கும்.
மூன்றாம் வகை (பட்டிப்புரோலு கல்வெட்டு)
1. புள்ளியில்லா மெய்யெழுத்து புள்ளிபெற்ற மெய்யெழுத்தாகக் கையாளப்பட்டுள்ளது.
2. புள்ளியில்லா மெய்யெழுத்தின் மேல் பகுதியில் உள்ள பக்கக் கோட்டைத் தொடர்ந்து கீழ்நோக்கிக் காணப்பெறும் கோடு உயிர்மெய் நெடிலைக் குறிக்கும்.
3. இவ்வாறு காணப்பெறுவது ஆந்திர மாநிலம் பட்டிப்புரோலுவில் மட்டுமேயாகும்.
4. தென்னிந்தியாவில் பட்டிப்புரோலு கல்வெட்டுக்கு முன்பிருந்த வளர்ச்சியுடைய கல்வெட்டுக்களைக் காண முடியவில்லை. ஆதலால் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளின் வளர்ச்சியாக இது கொள்ளப்படுகிறது.
நான்காம் வகை
1. புள்ளியில்லா மெய்யெழுத்து புள்ளி பெற்ற மெய்யெழுத்தாகவோ அல்லது உயிர்மெய்க் குறிலைக் குறிக்கவோ பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
2. புள்ளியில்லா மெய்யெழுத்தில் உள்ள பக்கக் கோடு அசோகன் கல்வெட்டுகளில் காணப்பெறுவதைப் போன்று உயிர்மெய் நெடிலை மட்டுமே குறிக்கும்.
3. இவ்வளர்ச்சிக்கு முன்பு தென்னிந்தியாவில் மூன்று கட்ட வளர்ச்சியும்தமிழ் நாட்டில் இரண்டு கட்ட வளர்ச்சியும் இருந்திருந்தல் தெரிய வருகிறது.
ஐந்தாம் வகை
1. மெய்யெழுத்துப் புள்ளி வைத்துக் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கும்.
2. புள்ளியில்லா மெய்யெழுத்து உயிர் மெய்க் குறிலைக் காட்டும்.
3. புள்ளியில்லா மெய்யெழுத்தின் மேல் பகுதியில் காணப் பெறும் வலப்பக்கக் கோடு உயிர்மெய் நெடிலைக் குறிக்கும்.
4. எகரஒகரம் புள்ளி பெற்று விளங்கும்.
5. அசோகன் கல்வெட்டுக்களில் காணப்பெறுவது போன்று (எகரஒகரம் தவிர) உயிர்மெய் எழுத்துகள் உள்ளன.
தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களில் நான்காம் வகைக் கல்வெட்டுக்கள் தான் அசோகன் கல்வெட்டுக்களின் எழுத்து முறையைப் போன்று காணப்படுகின்றன.
இதற்கு முன்பிருந்த மூன்று வகைக் கல்வெட்டுக்கும் தமிழ் எழுத்தின் வளர்ச்சியைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. அவ்வளர்ச்சி எவ்வளவு காலத்தில் நிகழ்ந்திருக்க முடியும் என்று ஊகித்தால் தமிழ் எழுத்தின் பழமையை உணரமுடியும். அசோகன் கல்வெட்டுக்களுக்கு முன்பாகத் தமிழ்நாட்டில் தமிழ் எழுத்துகள் இருந்ததும்அவை முறையாக வளர்ச்சி அடைந்ததும் மேற்சுட்டிக்காட்டியதன் மூலம் புலனாகும்.
தமிழ்நாட்டில் வழக்கிலிருந்த தமிழ் எழுத்தைத்தான் அசோகன் தன் கல்வெட்டுக்களில் பயன்படுத்தியிருக்கிறான் என்பதுதான் முற்றிலும் உண்மை.
அசோகன் கல்வெட்டைப் பார்த்துத் தமிழ்நாட்டில் கல்வெட்டுக்கள் எழுதப் பெற்றிருக்குமாயின் தொடக்கத்திலேயே அவன் கல்வெட்டுக்களில் உள்ளவாறு.
1. புள்ளியில்லா மெய்யெழுத்து உயிர் மெய்க்குறிலையே குறித்திருக்கும் (உம்+-க).
2. புள்ளியில்லா மெய்யெழுத்தில் காணப்பெறும் வலப்பக்கக்கோடு உயிர்மெய் நெடிலைக் காட்டியிருக்கும் (உம்; F கா).
3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களிலும் வருக்க எழுத்துகள் சரளமாகக் கையாளப்பட்டிருக்கும்.
4. கூட்டு எழுத்துகள் (சம்யுக்ஷரம்) மலிந்திருக்கும்.
5. ர்ருள்ளு எழுத்துக்களையும் சேர்த்திருப்பர்.
6. எகரஒகரஎழுத்துகள் இருந்திரா.
7. தமிழுக்கே உரிய ழன எழுத்துகள் தோன்றியிரா.
வழக்கிலிருக்கும் ஒரு எழுத்தைத் தங்களுக்குப் பயன்படுத்த விரும்புவர்கள் அவ்வெழுத்துக்களை அப்படியேதான் கொண்டிருப்பர். ஆதலால்தான் தமிழ் எழுத்தில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் (தமிழுக்கே உரிய ழன தவிர) அப்படியே அசோகன் தம் நாட்டில் பயன்படுத்தியிருக்கிறான். பிராகிருத மொழிக்கேற்ப வருக்க எழுத்துக்களையும்பிறவற்றையும் உருவாக்கிக் கொண்டான் என்று கொள்வதேபொருத்தமாகத்தோன்றுகிறது.
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஐ.மகாதேவன் தமிழ் எழுத்தின் காலத்தைக் கணிக்க அரிக்கமேடு அகழாய்வில் கிடைத்த எழுத்துப் பொறித்த ஓடுகளின் காலத்தை ஆதாரமாகக் கொள்வதாக முன்னர்க்குறிப்பிட்டிருந்தார். அரிக்கமேட்டில் மார்ட்டிமர் வீலர் நடத்திய அகழாய்வில் முற்காலத்தில் பாள நிலையிலிருந்து பிற்காலத்திய சுடுமண் பொம்மைகளும்,தேங்காய் நார்க்கயிறு போன்றவையும் கிடைத்திருக்கின்றன. ஆதலால் தற்பொழுது இலங்கைக் கல்வெட்டுக்கள்பானை ஓடு எழுத்துக்கள்சாதவாகனர்காசில் காணப்பெறும் எழுத்துப் போன்றவற்றைக் கொண்டு கி.மு. ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. முதல் நூற்றாண்டு முடிய தமிழகத்தில் பழமையான கல்வெட்டுகளின்காலமாகும் என்று வரையுறுத்துள்ளார்.
அண்மையில் டாக்டர் விமலா பெக்லி என்பவர் அரிக்கமேட்டில் நடத்திய அகழாய்வின் மூலம் கி.மு.250லிருந்து கி.பி.200 முடிய தமிழ் எழுத்துப் பொறித்த பானையோடுகள் கண்டெடுக்கப் பெற்றுள்ளன எனச் சுட்டிக்காட்டியுள்ளார். கி.மு.3ஆம் நூற்றாண்டில் பானை ஒட்டில் தமிழ் எழுத்தை எழுத மக்கள் நன்குஅறிந்திருந்தனர் என்பது கண்கூடு. அவ்வாறு பழக்கமாவதற்குச் சில நூறு ஆண்டுகள் ஆகியிருக்கும். எனவே தமிழ்நாட்டில் வழக்கிலிருந்த தமிழ் எழுத்தேமிகப்பழமையானது என்பது இதன் மூலமும் புலனாகிறது.
கொடுமணல் அகழாய்வின் மூலம் இரு பண்பாட்டுக் காலம் தெரிய வருவதாகவும் முதல் பண்பாட்டுக் காலம் கி.மு. 300 முதல் கி.பி. 100 முடிய என்றும்இரண்டாம் பண்பாட்டுக்காலம் கி.பி. 100 முதல் கி.பி. 300 முடிய என்றும்தெரிவித்துவிட்டுமுதல் பண்பாட்டுக் காலம் முதலே தமிழ் எழுத்துப் பரவலாகப் பழக்கத்தில் வந்துவிட்டன என்றும் இராஜன் கூறியுள்ளார்.
இதிலிருந்து கி.மு. நான்காம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலேயே தமிழ் எழுத்து ஓடுகளில் எழுதப் பெற்றிருந்தன என்பதும்அவ்வெழுத்துப் பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமானவை என்பதும் புலனாகிறது.
 இலங்கையில் உள்ள அநுராதபுரத்தில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த எழுத்துப் பொறித்த பானை ஒட்டினை ரேடியோகார்பன் காலக்கணிப்பு மூலம் கி.மு. 600லிருந்து 500 எனக் கணித்து உள்ளனர். இதன் மூலம் கி.மு.ஆம் நூற்றாண்டு அளவிலேயே ஒருவகை எழுத்து (அசோகன் காலத்து முந்தைய எழுத்து) இலங்கையில்பொதுமக்களிடையே வழக்கில் இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. அது போன்றே தமிழ் நாட்டிலும் தமிழ் எழுத்து கி.மு. ஆம் நூற்றாண்டிலிருந்தேவழக்கிலிருந்திருக்கலாம்.
கொற்கை அகழாய்வில் கிடைத்த கரித்துண்டைக் கார்பன்14 மூலம் காலம் கணித்ததில் 2755 + 95 – கி.மு. 850 அல்லது600 என்று தெரியவந்தது. அக்கரித்துண்டு பெருங்கற்காலப் நிலையில் கிடைத்தது. அவ்வகழ்வாய்வில்பெருங்கற்காலத்தைச் சார்ந்த கருப்புச் சிவப்பு பானையோட்டில் தமிழ் எழுத்துப் பொறிக்கப் பெற்றவை சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் காலம் குறைந்தது கி.மு.660 அளவில் இருக்கலாம். அவ்வகழ்வாய்வின் அறிக்கை இன்னமும் வெளிக்கொணரப்படவில்லை.
அழகன் குளத்தில் நடைபெற்ற அகழாய்வில் 2ல் பல பாள நிலைகளிலிருந்து சேகரிக்கப்பெற்ற கரித்துண்டுகளை சி 14காலக்கணிப்பு மூலம் காலகணிப்புச் செய்ததில் மூன்றாம் பாள நிலையில் சேகரிக்கப்பெற்றது. 2140+100 (155 மீட்டர்ஆழம்) அதே பாள நிலையில் (1.90 மீட்டர் ஆழத்தில்) 2240 + 130. ஐந்தாம் பாள நிலையில் (2.80 மீட்டர் ஆழத்தில்) 2260 + 100சார்ந்தது என்று தெரியவந்துள்ளது. AGM 5,7,8 ஆகிய குழிகளிலிருந்து தமிழ் எழுத்துப் பொறிக்கப்பெற்ற பானை ஓடுகள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் எஜிஎம் 5ல் 3மீட்டரிலிருந்து 5.30 மீட்டர் ஆழத்தில் கிடைத்த கருப்பு,சிவப்பு பானை ஓடுகளில் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றின் காலம் கி.மு. 4,3 ஆம் நூற்றாண்டு எனத் துணிந்து கூறலாம். கொடுமணல் மற்றும் அழகன் குளத்தில் கிடைத்துள்ள எழுத்துப் பொறித்த பானை ஓடுகளின் காலத்தைக் கி.மு. ஆம் நூற்றாண்டினது என்று கூறலாம் என்று ஐ. மகாதேவன் கூறியிருக்கிறார். அவர் கூறியிருப்பது போன்று கி.மு. 2ஆம் நூற்றாண்டில் சாதாரணக் குடிமகனும் தமிழ் எழுத்தைஅறிந்திருக்கின்றான் என்றால் அவ்வெழுத்தின் தோற்றம் மிகவும் பழைய காலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை அல்லவா.
அசோகனது இரண்டாம் கல்வெட்டில் தமிழ்நாட்டு மன்னர்கள் சேரர் சோழர் பாண்டியர் அதியமான் ஆகியோரும் 13 ஆம் கல்வெட்டில் சோழர் பாண்டியர்ஆகியோரும் பக்கத்து நாட்டு மன்னர்களாகக் குறிக்கப்பட்டுள்ளனர். அசோகனின் சம காலத்திய மற்ற மன்னர்கள் தங்களுக்கென எழுத்தைப் பயன்படுத்தியிருக்கையில் அதே காலத்திய தமிழ் மன்னர்கள் மட்டும் தங்களுக்கென எழுத்தில்லாமல்இருந்தார்கள் என்று கூறுவது தருமமாகாதுஎன்று கே.ஜி. கிருஷ்ணன் கூறியுள்ளார்.
மாங்குளக் கல்வெட்டில் பாண்டிய மன்னர் நெடுஞ்செழியனின் அலுவலரும் புகழியூர்க் கல்வெட்டில் சேர மன்னர்கள் கோ ஆதன் செல்லிரும்பொறை.பெருங்கடுங்கோஇளங்கடுங்கோ ஆகியோரும் ஜம்பைக் கல்வெட்டில் அதியன் நெடுமான் அஞ்சியும் குறிக்கப்படுகின்றனர். அவர்கள் அமைத்துத் தந்ததைத் தங்கள் நாட்டு எழுத்தான தமிழ் எழுத்தில் பொறித்திருக்கிறார்கள் என்பதுதான் சரியாகும்.
ஜம்பைக் கல்வெட்டின் எழுத்தமைதியும் அசோகன் கல்வெட்டின் எழுத்தமைதியும் ஒரே நிலையில் உள்ளன. மேலும் அதில் அதிய மன்னர்அசோகன் இரண்டாம் கல்வெட்டு ஸதியபுதோ என்று குறிப்பிடுவது போன்று ஸதியபுதோ அதியன் நெடுமான் அஞ்சி என்றுஎழுதப்பெற்றிருக்கிறது. ஆதலால் ஜம்பைக் கல்வெட்டின் காலத்தை அசோகன் கல்வெட்டுக்குச் சமகாலத்தியது,அதாவது கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்று கொள்வதே சாலச் சிறந்ததாகும்.
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 அதேபோன்று பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் காணப்பெறும் ஆண்டைச் சக ஆண்டு என்று கொண்டு பார்த்தால் கி.பி. 270அதாவது கி.பி. ம் நூற்றாண்டு என ஆகிறது. எழுத்தமைதியில் தமிழ் எழுத்து வட்டெழுத்தாக வளரக் தொடங்கும் காலத்தை இது தெரிவிக்கிறது.
மேற்காணும் இரு கல்வெட்டுக்களின் எழுத்தமைதி அடிப்படையில் பார்த்தால் புகழியூர் கல்வெட்டு மற்றும் மாங்குளம் கல்வெட்டு ஆகியவை முறையே கி.மு. 4மற்றும் கி.மு. 5ஆம் நூற்றண்டைச் சார்ந்தவை என்பதே சரியானதாகும். ஆதலால் தமிழ் நாட்டில் பரவலாக வழங்கி வந்த தமிழ் எழுத்தைத்தான் அசோகன் பயன்படுத்திக் கொண்டு பிராகிருதச் சொற்களின் ஒலிக்கேற்பச் சில புதியஎழுத்துக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறான்.
தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தியும்ஆறுமுக சீதாராமனும்பெருவழுதி என்று பண்டைத் தமிழ் எழுத்தில் எழுதப்பெற்ற செப்புக் காசுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இரா. கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்துள்ள நாணயத்தில்முன்புறம் குதிரையொன்று திரும்பி நிற்கும் உருவமும் அதைச் சுற்றிப் பெருவழுதி என்று எழுதப் பெற்றுமிருக்கிறது. பின்புறம் பாண்டியர்களின் குலச்சின்னமாகிய மீன் சின்னம் ஒன்று காணப்படுகிறது. இந்நாணயம் அசோகனின் எழுத்து முறை தக்கணத்தில் பரவுவதற்கு முன்பே வெளியிடப்பட்டு இருக்கலாம் என்றுகல்வெட்டறிஞர் கே.ஜி. கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆதலால் இக்காசு கி.மு. அல்லது கி.மு. ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சார்ந்ததாக இருக்கலாம்.இதில் இருந்தும் பண்டைத் தமிழ் எழுத்து அசோகன் காலத்துக்கு முன்பாகவே வழக்கில் இருந்தது என்பது உறுதியாகிறது.
இலங்கை நாட்டின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஆனைக்கோட்டையில் பெருங்கற்கால இடத்தில் நடைபெற்ற அகழாய்வில் சதுர வடிவான செப்புமுத்திரையில் மேல் வரியில் ஹரப்பன் காலக் குறியீடுகளும் (திரு மகாதேவன் பெருங்கற்காலக் குறியீடுகள் என்கிறார்) கீழ் வரியில் எழுத்திலும் (பிராமிஎழுத்து என்று திரு. மகாதேவன் எழுதியுள்ளார்) எழுதப்பட்டிருக்கின்றன. இம்முத்திரையைக் கண்டெடுத்து முதலில் கட்டுரை வெளியிட்ட யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் இந்திரபாலா கீழ் வரியைப் கோவேந்த” என்று படித்து மேல்வரியில் உள்ள குறியீடுகளும் அதைத்தான் குறிப்பிடுகின்றன என்று கூறியிருந்தார். அவரது கூற்றுச் சரி எனத்தான் தோன்றுகிறது. ஆதலால் இலங்கையில் பெருங்கற்காலக் காலத்திலேயே தமிழ் எழுத்து மக்களிடையே நன்கு அறிமுகமாகியிருந்தது என்பது தேற்றம். திரு மகாதேவன் இரண்டாம் வரி பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது என்று கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இச்செப்பு முத்திரையின் காலம் கி.மு. அல்லதுஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.
திரு. கருணரத்னா (1960) திரு. பெர்ணந்தோ (1969) திரு. அபயசிங்கா (1975) ஆகியோர் கீழ்க்காணும் கருத்தைத் தெரிவித்திருக்கின்றனர்.
அசோகன் பிராமி இலங்கையில் பரவுவதற்கு முன்பேயே பண்டைத் தமிழ் எழுத்து இலங்கையில் வழக்கில் இருந்துள்ளது என்பது அசோகன் பிராமிக் கல்வெட்டுக்களில் தமிழுக்கே உரிய சிறப்பெழுத்துக்கள் பெருமளவில் கலந்திருப்பது சிறந்த சான்றாகும்.
மேலும் தமிழ்ப் பெயர்களான ஆய்வேள்,பருமக(பெருமகன்)பருமகள்(பெருமகள்)மருமகன் சலஹ(சகலன்) பரத(பரதவர்) உதிஉதிய (உதியன்)போன்றவை இக்கல்வெட்டுக்களில் பிராகிருத மயப்படுத்தப்பட்டிருப்பதும் வலுவான ஆதாரங்களாகும். திரு. மகாதேவனும் கி.மு. ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இலங்கை பிராகிருதக் கல்வெட்டுக்களில் தமிழ்ச் சிறப்பெழுத்துக்களான ழ ஆகியவை காணப்படுகின்றன என ஒப்புக் கொள்கிறார்.
தென்னிலங்கையில் கிடைத்திருக்கும் ஈய நாணயங்களில் உதிரன் திஸபிடன் மஹாசாத்அன் கபதிகடல்அன் உதியன் போன்ற தமிழ்ப் பெயர்கள் எழுதப் பெற்றிருக்கின்றன இவை கி.மு. அல்லது 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்றுதிரு. புஷ்பறட்னம் தம் தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு என்னும் நூலில் எழுதியுள்ளார்.
ஆந்திரா மாநிலம் கிருஷ்ண மாவட்டம் பட்டிப்புரோலுவில் கிடைத்துள்ள கற்பேழை கி.மு. ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது வரலாற்றாய்வாளர்களின் முடிவு. இப்பேழை மீது எழுதப் பெற்றுள்ள எழுத்துத் தென்னிந்தியப் பிராமி அல்லது திராவிட பிராமி என்று கருதப்படுகிறது. இதன் கி.மு. முதல் நூற்றாண்டு என்று திரு. மகாதேவன் தெரிவித்திருக்கிறார். இவர் கூற்றுப்படியே எடுத்துக்கொண்டாலும் பட்டிப்புரோலு எழுத்து வகைக்கு முன்பாகத் தமிழ்நாட்டில் இரண்டு கட்ட வளர்ச்சி இருந்திருக்கிறது. அவ்விரண்டு கட்ட வளர்ச்சி ஏற்படுவதற்குக் குறைந்தது இரு நூற்றாண்டுகளாவது ஆகியிருக்கும். அவ்வாறெனில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு அளவிலேயே தமிழ்நாட்டில் தமிழ் எழுத்து மிகுந்த செல்வாக்கில் இருந்திருக்கிறது. என்பதற்குப் பட்டிப்புரோலு கல்வெட்டு மற்றுமொரு சான்றாகும்.
கே.ஜி கிருஷ்ணன் அவர்கள் 1997ல் ஈரோட்டில் நடைபெற்ற தமிழகத் தொல்லியல் கழக எட்டாவது கருத்தரங்கில் ஆற்றிய தலைமை உரையின் சில கருத்துக்களை நினைவுகூர்தல் இங்குப் பொருத்தமாக இருக்கும்.
தமிழ் எழுத்துக்களுக்கு ஒரு தனித்தன்மை காணப்படுகிறது. அடுத்த நிலையில் இவையே இந்தியா முழுவதும் முதலில் பரவி இருக்கலாம் என்று சொல்ல வாய்ப்புண்டு.
தமிழர் வடக்கிலிருந்து வந்த எழுத்துக்களை ஏற்றுக் கொண்டார்கள் என்று வாது செய்பவர்கள் ஒன்றை மறந்தார்கள். அசோகன் கல்வெட்டில் காணப்படும் எழுத்து முறையில் தமிழ் மொழிச் செய்திகளையும் எழுத முடியும் என்பதே அது. ஆகையால் தமிழ் எழுத்துக்கள் மௌரியர் காலத்துக்கு முன்பே வழக்கிலிருந்திருக்க வேண்டும்.
பிறிதோரிடத்தில் தசரதன் மகள் தாசரதி என்ற வடசொல்லாக்க முறையை ஒட்டித் தமிழ் எழுதப் பயன்பட்ட எழுத்துத் தாமிழி என்று அந்நூலார் கருதினார்கள் போலும். எனவே தமிழ் நாட்டார் எதற்காகப் பிராமி என்று பெயர் வைக்க வேண்டும். அழகு உடையவள் அழகிஅருள் உடையவர் அருளி என்பதைப் போலதமிழ் எழுதும் எழுத்து தமிழி என்றே கொள்ளலாம். அதிகம் சொல்வானேன். தமிழ் என்றே சொல்லலாம். தமிழ் எழுத்துக்களின் தனித்தன்மை இதனை உறுதி செய்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Vignesh M said...

வணக்கம் ஐயா!நல்ல பதிவு. முற்றிலும் ரசித்தேன். எ/ஏ மற்றும் ஒ/ஓ ஒலி வேறுபாடுகளைக் குறிப்பதற்குத் தனி குறியீடுகள் இருந்திருக்கவில்லை என்றும் அவ்வேவேறுபாடுகள் புள்ளியின் வயிலாகத் தான் அடையாளப்படுத்தப்பபட்டன என்று தாங்கள் காட்டியது தமிழ் எழுத்துக்களின் தோற்றம் பற்றிய ஒரு கேள்வியை என்னுள் ஏற்படுத்துகிறது. பிராகிருத சமஸ்கிருதம் முதல் இன்று வழங்கும் வடமாநில மொழிகள் வரை எகர-ஒகரங்களில் குறில் என்ற ஒலியே இல்லாமல் இருக்கின்றன. மாறாக தென்னிந்திய மொழிச் சொற்களில் எ-ஏ/ஒ-ஓ குறில்-நெடில் வேறுபாடுகள் இருப்பதோடு மட்டும் அல்லாமல் அவை சொற்பொருளையே மாற்றக் கூடிய அளவுக்கு இன்றியமையாத இயல் ஒலிகளாக விளங்குகின்றன. என்றால் வடக்கே புழங்கிய அசோக பிராமியைத் தழுவி தமிழி எழுத்து தோன்றியதைப் போலல்லவா கருத இடமளிக்கிறது? இதனை எப்படி முரணறப் புரிந்து கொள்வது? 

 

http://valavu.blogspot.com/2010/06/blog-post.html 

தமிழி உயிர்மெய்களின் அடவு



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 நாகசாமியாரின் நயன்கெட்ட நூல்!

                                                                                                    
மிழ்நாட்டரசின் தொல்லியல்துறையில் இயக்குநராகப் பணியாற்றிய முனைவர் இரா.நாகசாமி எழுதியுள்ள “Mirror of Tamil and Sanskrit” என்கின்ற ஆங்கில நூல் இவ்வாண்டின் (2012) தொடக்கத்தில் தமிழ்க் கலைக் கழகப் பதிப்பாக வெளிவந்துள்ளது. அந்நூலைப் பற்றிய அறிமுகம் தி இந்து நாளிதழிலும் வந்தது. அந்நூலின் உள்ளடக்கக் கருத்துக்கள் பற்றி நூலாசிரியர் முன்னுரைப் பகுதியில் நாகசாமி எழுதிள்ள பகுதிகளின் தமிழாக்கத்தைக் கீழே காண்க:
     
தமிழ், வேத சமற்கிருத மரபுகளை ஏற்று குறிப்பாக உருவாக்க நிலையில் பிராமணர்கள் உதவியுடன் செம்மொழி நிலையை அடைந்துள்ளது என்று பழந்தமிழ் இலக்கியங்களையும், தொன்மையான தமிழ் இலக்கணத்தையும் விரிவாகப் பார்த்து, முதன்முறையாக இந்நூல் நிலைநாட்டுகிறது. தமிழ், அதன் வரலாறு தெரிந்த காலந்தொட்டே சமற்கிருத்தினின்று கடன் பெற்றுக் கொண்டதனால் விரைவாக முன்னேற்றமடைந்தது என்று இந்நூல் தெளிவாக விளக்குகிறது.
பண்டைத் தமிழர்கள் வழிபட்ட கடவுள்கள் சிவன், விட்டுணு, கிருட்டிணன், பலராமன், இராமன், குமரன்(முருகன்), இந்திரன் துர்க்கை, காளியும் மற்றையோரும் வேதக்கடவுள்களாக உள்ளமை தெளிவானதாகும்.
அக் குமுகாயம் சாதி அடிப்படையில் பிராமணர், சத்திரியர், வய்சியர், சூத்திரர் மற்றும் கலப்புச்சாதியினர் என்று பிளவுபட்டிருந்தது. வாழ்க்கையின் ஒவ்வொரு பரப்பிலும் வேத மத்ததின் பயன்நிறைவைப் பெரும்பாலான தமிழர்கள் நம்பினர். வேதச் செழுமையில் கூறியுள்ள பழக்கவழக்கங்களால் அவர்கள் வழிநடத்தப்பட்டனர். குடும்ப வாழ்க்கையில் வேத வேள்விகளை நடத்தினர். வேதப் பிராமணர்களால் அறிமுகப் படுத்தப்பட்ட முறைகளை அவர்கள் பின்பற்றினர்.
சேர சோழ பாண்டியர் வேளிர்தலைவர் போலும் எல்லா மன்னர்களும் மேற்குடி என்று அழைக்கப்பட்ட ஒரு பிரிவு வேளாளர் உட்பட பெரும்பான்மைப் பொதுமக்களும் வேதம் கற்று அவற்றிற் கூறியவாறு வழிபாடு நடத்தினர்.
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் தமிழரின் நான்கு வகை வாழ்க்கைப் பிரிவு பரத நாட்டிய நூலில் காக்சியாப் பிரிவு எனக் குறிக்கப்பட்டுள்ளது.
வேத முனிவர்களான யாக்கினவால்கியர், வசிட்டர், நாரதர், மனு, பிரகத்பதி, பராசரர் மற்றும் பிறர் தொகுத்த தரும நூல் நெறிமுறைகளின் அடிப்படையில் நயனாள் முறை இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட படிநிகராளிகளைக் கொண்ட ஊர் அவையான வேத சபைகளின்படி குடிமை ஆட்சி அமைக்கப்பட்டது.
தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள தமிழ் யாப்பியல் சமற்கிருத மூலத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. தமிழ் பேச்சொலியியல், உவமம் போன்ற அணிகள் முதலியவை எடுத்துக்காட்டாகும். மேலும், படிக்கக்கூடிய பழமையான எழுத்து பிராமி பிராமணர்களால் அசோகர் காலத்தில் சரசுவதி பள்ளத்தாக்கில் உருவாக்கப்பட்டது; அவர்கள் பெயரால் பிராமி என்று அழைக்கப்பட்டது.........
இறந்தவர்களை அடக்கஞ் செய்தல்இறுதிச் சடங்குகள், நினைவுக்கல் நடுதல், முதலியன சமற்கிருத ஆகம இலக்கியங்களில் வரையறுத்தவாறு இருந்தன.   பழந்தமிழ்நாட்டுக் கோயில் வழிபாடு ஆகமச் சடங்குப் பொருளுரைகளைப் பின்பற்றியது. இசை நாட்டியம் இலக்கியங்களின் அழகியல் பரதநாட்டிய நூலை அடிப்படையாகக் கொண்டது; சுவைத்துணர்தலும் அவ்வாறே இருந்தது.
தொல்காப்பிய இலக்கணம் வேதமரபையும் பரத நாட்டிய மரபையும் வேராகக்கொண்டுள்ளது. செய்யுளின் அகம் புறம் பிரிவு நாட்டிய மரபு அகச்சுட்டு புறச்சுட்டு என்னும் இருவகை நாட்டியங்கள் ஆகும்.
இந்தியாவின் மற்றெல்லாப் பகுதிகளும் அவற்றிற்குரிய வட்டார மொழிகளைக் கொண்டிருந்ததைப் போன்றே தமிழும்கூட அதற்குரிய வட்டார மொழியைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. உள்வரும் கருத்துக்களை விரைந்து தன்னியலாக்கக்கூடிய முறபோக்கான வட்டார மொழியாக இருந்து, தமிழ் அழகிய செம்மொழியாக மலர்ந்ததே வேறுபாடாகும்.
காலகவியல் அறிவியலில் தமிழர்கள் வேதமரபைத் தமதாக ஏற்றுக் கொண்டதைக் காட்ட மறுக்கவியலாச் சான்றுகள் உள்ளன.....
இவ்வாறு, மொழிப்புலம், இலக்கணம், யாப்பு, இலக்கியம், கலை, கட்டடக்கலை, இசை, நாட்டியம், அரசாட்சி, நயனாட்சி, குமுக நடைமுறைகள், வானியல், மெய்மவியல், சமயத்திலும் பழந்தமிழர்கள் வேதமரபைப் பின்பற்றினர்; பெருமளவில் வடநாட்டு முறைகளினால் தாக்குரவுற்றனர்.
தொல்காப்பியத்தையும், கழக இலக்கியங்களையும் புறக்கணித்து விலக்கக் கூடியவராலேயே இக்கொள்கையை மறுக்க முடியும். தமிழ் வரலாற்றின் எக்காலத்திலும், தமிழ்க்கல்வியை அடக்கி ஒடுக்கும் எந்த ஒரு முயற்சியும் இடம்பெறவில்லை. இந்நூல், உண்மையில் தமிழ் சமற்கிருத ஊடாட்டத்தை முறையான வரலாற்றில், காலவரிசை முறையில் வைக்கும் புதுவழிகண்டு விளக்கிக் காட்டும் இயலுருக் காட்சியாகும்.........
     
      நாகசாமியாரின் இந்நூலில் கூறப்பட்டுள்ள உண்மைக்கு மாறான கருத்துக்கள் முன்னரே தக்க சான்றுகளுடன் வீழ்த்தப்பட்டவையே. மீண்டும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு பிற நாட்டினரைக் குழப்பும்  முயற்சியை நாம் மீண்டும் வீழ்த்தியாக வேண்டியிருக்கின்றது. பேராசிரியர் சியார்ச்சு கார்ட்டும் இந்நூற் கருத்துக்களை மறுத்திருக்கிறார்.
     
      27-7-2012இல் சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டமொன்றில் முன்னாள் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பொற்கோ, ம.இராசேந்திரன், இளங்கோவும் முனைவர்கள் மறைமலை இலக்குவனார், இரா.மதிவாணன், பூங்குன்றன், அரசேந்திரன் போன்றோரும் தொல்பொருள் ஆய்வுத்துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன், கோவைஞானி, பெ.மணியரசன் முதலான பலரும் கலந்து கொண்டு நாகசாமியாரின் நூலை மறுத்தும் கண்டித்தும் பேசியிருக்கின்றனர்.        
     
      21-8-2012இல் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழறிஞர் தமிழண்ணல் தக்க விளக்கங்கள் கூறி நாகசாமியார் நூலுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றார். அவர் உரையின் சில பகுதிகளைக் கீழே காண்க:
     
      உலகிற்கே உழவைக் கற்பித்த தமிழருக்கு உழவு தெரியாது, வங்காளத்தாரே உழவு கற்றுக்கொடுத்தார்கள் என்கிறார் நாகசாமி. தொல்காப்பியம் இலக்கணநூல் இல்லை; நடனநூல் என்கிறார். சிலப்பதிகாரத்தைப் பொய்யாகப் புனைந்த நூல் என எட்டாம் இயலில் கூறிவிட்டு அவரே பத்தொன்பதாம் இயலில் வரலாற்றுச் சான்றுக்குக் குறிப்பிட்டுள்ளார். அவர் கருத்தில் அவரே முரண்பட்டுவிட்டு நூலை சான்றுகளுடன் மறுக்க யாரேனும் உண்டா? என்று தமிழர்களைப் பார்த்து அறைகூவுகிறார்.
      நாகசாமி சமற்கிருதமும் பரதமுனிவரின் நடனநூல் மட்டுமே படித்துள்ளார். வேறு இலக்கியங்களைப் படிக்கவில்லை. தொல்காப்பியத்தையும் சரியாகப் படிக்காமல் நுனிப்புல் மேய்ந்துள்ளார். தொல்காப்பியத்தில் 100 கொள்கைகள் உண்டு. அகம் புறம் என்பதே வடசொல் என்கிறார். இப்படி முழு முட்டாள்தனமாக எழுதிவிட்டு முதன் முறையாக நானே எழுதியுள்ளேன் என்று மார் தட்டுகிறார்.
      4ஆம் நூற்றாண்டு காலத்தில் சமற்கிருதத்தில் அணிநலன்கள் இல்லை. 7ஆம் நூற்றாண்டில்தான் சமற்கிருதத்தில் அணிநலன்கள் வந்தன. உவமை என்ற தமிழ்ச்சொல்லைத் திருடி சமற்கிருதத்தில் உவமா என்றனர். தீ என்னும் தமிழ்ச்சொல்லைத் திருடி தீவகம் என்றனர். இயைபுதான் யமகம் என்று சொல்லாமல் யமகம் இயைபு ஆனது என்கிறார்.  
     
      29-9-2012இல் எழுத்தாளர் துரை.இரவிக்குமாரின் மணற்கேணி அமைப்பு புதுச்சேரியில் நடத்திய தமிழும் சமற்கிருதமும் என்ற தலைப்பிலான ஆய்வரங்கில் கலந்து கொண்டவர்களில் நடன.காசிநாதன், அ.மணவாளன், சு.இராசவேலு, மாதையன் போன்றோர் நாகசாமியாரின் நூலுக்கு மறுப்பும் கண்டனமும் தெரிவித்தனர். நடன.காசிநாதனாரின் உரையின் சில பகுதிகளைக் கீழே காண்க:
     
பொருந்தல் அகழாய்வு தொன்மைத் தமிழ் எழுத்துக்கள் நிறைமுடுக்க நிரலளவி (ஏ.எம்.எசு) காலக்கணிப்பு கி.மு.490, ஆதிச்சநல்லூர் முதுமக்கள்தாழி தொல்தமிழ் எழுத்துக்கள் கி.மு.5ஆம் நூற்றாண்டுக்கும் முந்தியது. அனுராதபுரம் பானையோட்டுப் பொறிப்பு கி.மு.600-370, மாங்குளம் பாறைக் கல்வெட்டின் காலம் கி.மு.5ஆம் நூற்றாண்டு, பட்டிப்புரோலு கற்சிமிழ்க் கல்வெட்டுக் காலம் கி.மு.4ஆம் நூற்றாண்டு, புலிமான் கோம்பை தொல்தமிழ்க் கல்வெட்டுக் காலம் கிமு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பு. அழகன்குளம் பானையோட்டுப் பொறிப்பு இரா.நாகசாமி கருத்து கி.மு.360 ஆகும்.
      முனைவர் கே.வி.இரமேசு கருத்துப்படி, தமிலி (தமிழ்) எழுத்து அசோகன் காலத்துக்கு முன்பாகவே தமிழகத்தில் அழியக்கூடிய பனையோலையிலும் மற்றுமிருந்த பொருட்கள் மீதும் எழுதப்பெற்று வந்தது. இவ்வெழுத்து முதலில் தமிழ்-பொலிந்தி எழுத்தாக இலங்கையில் பயன்படுத்தப்பட்டுப் பின்பு தமிழ் அங்கிருந்து பட்டிப்புரோலு வழியாக மகாசுதான்(வங்காளம்), சோகவுரா, பிப்பிரவா (கிழக்கு உ.பி.), பட்டிலி (இராசசுத்தான்) ஆகிய இடங்களில் பரவி இறுதியாகக் கி.மு. 3ஆம் நூற்றாண்டளவில் மேலும் சில புதிய வளர்ச்சி ஏற்பட்டு அசோகனால் பயன்படுத்தப்பட்டது. நாகசாமி தாம் ஒரு தொல்லியலறிஞர் என்று புலப்படுத்திக் கொள்வதைவிட சமற்கிருதத்தின் முனைப்பான பற்றாளர் என்று காட்டிக் கொள்வதிலேயே பெரும் ஆர்வம் கொண்டுள்ளார்.
     
இங்கொன்றும் அங்கொன்றுமாக இரண்டு மூன்று கூட்டங்களில் மறுப்பு அறிவித்தல் போதுமானதன்று. பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், அறிஞர் அண்ணா, தந்தைபெரியார் இல்லாத இக்காலத்தில் நாகசாமியாரின் உண்மைக்கு மாறான நயன் கெட்ட கருத்துக்களை வரிக்குவரி மறுத்து ஆங்கில நூல் இன்னும் வராதது தமிழர் நாணத்தகு நிலையாகும்.
தன்மானச்சூடும், தமிழிலக்கிய அறிவும், தொல்லியல் ஆய்வறிவும், உண்மையை வெளிப்படுத்தும் நேர்மை உள்ளமும் கொண்ட தமிழாய்வறிஞர் இனியும் காலந்தாழ்த்தாது இவ்வினையில் ஈடுபடுமாறு 'நற்றமிழ்' பணிவுடன் கேட்டுக்கொள்கின்றது. மற்றவர்கள், ஆரியப் புரட்டை விளக்கிப் பரப்புரை செய்து விழிப்பேற்படுத்த முயல்வோம்.
 
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.    
(குறிப்பு :'நற்றமிழ்'  இதழில் எழுதியது - த.ந.)  


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard