Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொன்மங்களும் நவீன இலக்கியமும்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
தொன்மங்களும் நவீன இலக்கியமும்
Permalink  
 


 

தொன்மங்களும் நவீன இலக்கியமும்

 
ஆதிச்சநல்லூரில் கிடைத்த சிலை- தவ்வை,மூத்தோள் என ஊகிக்கப்படுகிறது

அன்புள்ள ஜெ,

இந்த சிறுகதைகளில் மூதேவி போன்ற சில தொன்மங்கள் பலமுறை பலவடிவங்களில் வருகின்றன. ஒரு நவீனச்சிறுகதையில் இந்தவகையான பழைமையான தெய்வங்கள் வருவதன் அடிப்படை என்ன? நவீனச்சிறுகதையில் இவற்றுக்கு இடம் உண்டா என்ன?

ராஜ்குமார்

***

தவ்வை,மூத்தோள் சிலை

அன்புள்ள ராஜ்குமார்

நேற்று ஒரு இணையவழி உரையாடலில் இதைப்பற்றிய பேச்சுவந்தது. கதைகளில் தொன்மக்குறிப்புகள் இல்லாமலிருந்தால்தான் அது நவீன எழுத்து என்று சொன்னதாகச் சொல்லப்பட்டது. அதற்கு நான் சற்று கடுமையாகப் பதில் சொன்னேன்

இங்கே நவீனத்துவம்,நவீனம் என்றாலே பெரிதாக வாசிப்போ புரிதலோ இல்லாதவர்கள் அது சட்டை-பாண்ட் போட்டுக்கொள்வது போல , கிராப் வைத்துக்கொள்வதுபோல ஒரு  ‘ஃபேஷன்’ என்றும்; அது ஐரோப்பாவிலிருந்து வந்த பழக்கம் என்றும் நினைத்துக்கொள்கிறார்கள். அதிலிருந்து இந்த கேள்வியும் எழுகிறது.

நான் அந்த உரையாடலில் சொன்னவை இவை.

நவீன இலக்கியம் பற்றி தெரிந்த ஒருவன் ஒருபோதும் ‘நவீன இலக்கியம் என்றால் இது’ என வரையறைசெய்ய மாட்டான். உலகமெங்கும் விரிந்து பல்லாயிரம் மேதைகளினூடாக வளர்ந்து வந்த ஓர் அறிவியக்கம்- அழகியல் அலை அப்படி சில வரையறைகளை கொண்டிருக்காது என்ற புரிதல் அவனுக்கு இருக்கும். அப்படி ஒரு வரையறை முன்வைக்கப்பட்டால் மறுகணமே அதை மீறியாகவேண்டும் என எவனுக்கு தோன்றுகிறதோ அவனே நவீன எழுத்தாளன். வரையறைப்படி எழுதுபவன் மரபார்ந்த இலக்கணவாதி.

தமிழில் எழுதப்படும் சாதாரணமான நவீன இலக்கியங்களில் சாத்தான்-கடவுள் என்னும் இருமை, சிசிஃபஸ் நாரிஸிஸஸ், யுலிஸஸ், ஈடிப்பஸ் போன்ற படிமங்கள் எவ்வளவு குவிந்து கிடக்கின்றன என்று பாருங்கள். இவையெல்லாம் அராமிக், கிரேக்கத் தொன்மங்களில் இருந்து வந்தவை.இவற்றைப் பயன்படுத்தலாம் ஆனால் யமனோ,மூதேவியோ வந்துவிடக்கூடாது என்ற எண்ணம் எப்படி வருகிறது? சிசிஃபஸ் ஐரோப்பாவைச் சேர்ந்தது, ஆகவே நவீனமானது. மூதேவி இந்தியாவைச் சேர்ந்தது, ஆகவே பழைமையானது என்ற பாமரநம்பிக்கைதான் அது?

இந்த படிமங்களை இவர்கள் வாசிக்கும் ஐரோப்பிய படைப்புகளில் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள். இவர்களுக்கு இவை நவீனத்துவத்தின் அடையாளங்கள் என நம்புகிறார்கள், ஆகவே ஆங்காங்கே தூவிவிடுகிறார்கள், அவை ஒரு தோரணையை அளிக்கின்றன, அவ்வளவுதான்.

இலக்கியத்தில் தொன்மங்கள் பயன்படுத்தப்படுவது அவை ஆழ்மனதுக்குள் ஊடுருவிச் செல்பவை, வரலாற்றையும் பண்பாட்டையும் உள்ளே கொண்டுவருபவை என்பதனால்தான். சிசிபஸோ ஈடிப்பஸோ நம் வரலாற்றையும் பண்பாட்டையும் சார்ந்தவை அல்ல. நம் ஆழ்மனதுக்குள் செல்பவையும் அல்ல. அவை நம் கனவில் எழுபவை அல்ல. இந்த அசட்டுத்தனமான அபிமானமே நம் நவீன இலக்கியத்தை ஐரோப்பிய இலக்கியப்படைப்புக்களின் மங்கலான நகலாக மாற்றிவிட்டிருக்கிறது

 

இந்த தொன்மங்கள் நம்மைச் சூழ்ந்திருக்கும் வாழ்க்கையில் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன. இன்றும் நம் சமூகக்கூட்டுமனம் அவற்றைச் சார்ந்தே செயல்படுகிறது. சோதிடம், சிறுதெய்வங்கள், புராணக்கதைகள் போன்றவையே இன்றைய தமிழ் ஆழ்மனதை கட்டமைக்கின்றன. ஆனால் அவையெவையும் இலக்கியத்தில் வரலாகாது என்றால் இவர்கள் எழுதும் நவீன இலக்கியம் என்பது என்ன? ஒரு சமூகத்தின் அகவாழ்வு அச்சமூகத்தின் இலக்கியத்தில் வரலாகாது என்ற அசட்டு வரையறை உலகின் வேறேதாவது மொழிச்சூழலில் பேசப்படுகிறதா?

இவர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளும் ஐரோப்பிய நவீன இலக்கியமே மரபை மறுஆக்கம் செய்வதன் வழியாக உருவாகி வந்ததுதான். கிரேக்க, அராமிக் தொன்மங்களை இலக்கியரீதியாக மறுகண்டுபிடிப்பு செய்த ஒரு கூட்டுச்செயல்பாட்டைத்தான் நாம் நவீனத்துவம் என்றே சொல்கிறோம்.. மரபின் தொனமங்கள் இல்லாமல் நவீனத்துவம் இல்லை, அந்நவீனத்துவம் அடித்தளமாக அமையாமல் பின்நவீனத்துவம் இல்லை.

அதற்குப் பல படிநிலைகள் உள்ளன.ஆரம்பகால நவீன எழுத்தாளர்கள் தல்ஸ்தோய்,தஸ்தயேவ்ஸ்கி ,செக்காவ் முதல் பார்லாகர் க்வெஸ்ட், மேரி கெரெல்லி வரையிலானவர்கள் ஏசுவையும் பாவம், உயிர்த்தெழுதல் போன்ற கிறிஸ்துவக் கருத்துக்களையும்  மதத்திலிருந்து வெளிக்கொண்டுவந்து மறுகண்டுபிடிப்பு செய்திருப்பதை காணலாம். அவர்கள் கிறிஸ்துவை அவருடைய மதக்கட்டமைப்பு, வரலாற்றுக் கட்டமைப்பு ஆகியவற்றிலிருந்து மீட்டு தூய தத்துவ உருவகமாக ஆக்கினார்கள். ஆரம்பகால நவீன இலக்கியத்தின் முதன்மைச் சவாலே அதுதான்- மரபை மீட்டு தத்துவார்த்தப்படுத்திக்கொள்ளுதல்.

அடுத்த நிலையில் நிகாஸ் கசன்ட்ஸகீஸ், யோஸ் சரமாகோ போன்றவர்கள் அவ்வாறு முந்தைய படிநிலையில் மீள்கட்டமைப்பு செய்யப்பட்டு தத்துவார்த்தமாக வரையறைசெய்யப்பட்ட ஏசுவை மீண்டும் கொண்டுசென்று வரலாற்றிலும் சமூகப்பின்னணியிலும் பொருத்த முயல்கிறார்கள். மரபை புதுவரலாற்று மொழிபில் பொருத்துதல். இது ஒரு தொடர்செயல்பாடு.

யோசித்துப் பாருங்கள், இந்திய நவீனத்துவம் இந்தியப்பண்பாட்டின் அடித்தளமாக அமைந்த கிருஷ்ணனையும் புத்தரையும் அப்படி எதிர்கொண்டிருக்கவேண்டும் அல்லவா? அது எந்த அளவுக்கு நடந்தது? அதற்கும் ஹெர்மன் ஹெஸிதான் சித்தார்த்தா என எழுதி வழிகாட்டவேண்டியிருந்தது. தாமஸ் மன் தான் ‘மாற்றிவைக்கப்பட்ட தலைகள்’ என்று எழுதவேண்டியிருந்தது. அந்த அலை இன்னமும் கூட இங்கே நிகழவில்லை. ஏனென்றால் இங்கே மரபை எழுதும் அளவுக்கு அடிப்படை வாசிப்பும் பயிற்சியும் நவீன எழுத்தாளனுக்கு இல்லை. அந்த பலவீனத்தை அவன் ஒரு வசதியான பாவனை வழியாகக் கடந்துசெல்கிறான்.

Kanchipuram1.jpg&w=283&h=231

ஐரோப்பிய நவீன எழுத்து என்பது தஸ்தயேவ்ஸ்கி முதல் ரோபர்ட்டோ பொலானோ வரை ஐரோப்பியத் தொன்மவியலால் கட்டப்பட்டது. நேரடியாகவும் நுண்மையாகவும். ஐரோப்பிய சினிமாவையே அந்த பின்புலம் சற்றேனும் அறியாமல் உள்வாங்க முடியாது.

நவீன இலக்கியம் ஏன் தொன்மங்களை தன் ஆதாரக் கட்டுமானப்பொருளாகக் கொண்டிருக்கிறது? ஏனென்றால் அவை பல ஆயிரம் ஆண்டுகளாக நீடிப்பவை. ஆழ்மனதை கட்டமைப்பவை. ஒர் உள்ளத்தின் வரலாற்று ஆழத்திற்கு, தத்துவார்த்தமான அருவநிலைக்கு, கனவுகளுக்குச் செல்வதற்கான ஒரே வழி அதுதான். அதைத் தவிர்த்து நவீன இலக்கியம் இருந்தால் அது ஆழமற்றது.

இரண்டு கேள்விகள் எழவேண்டும். ஒன்று, இலக்கிய ஆக்கத்தில் தொன்மங்கள் இருந்தாகவேண்டுமா? தொன்மங்கள் இருந்தாலே அது நல்ல கதையாகிவிடுமா?

இலக்கிய ஆக்கத்தில் தொன்மங்களோ ஆழ்படிமங்களோ இருக்கவேண்டுமா என்பது அந்த படைப்பைச் சார்ந்து ஆசிரியன் முடிவெடுக்கவேண்டியது. ஒரு கருவை சமகாலத்தில் மட்டும், அன்றாடத்தில் மட்டும், முன்பின் வெட்டிவிட்டு நிறுத்திவிடவேண்டும் என்று ஆசிரியன் எண்ணலாம். அப்போது மட்டுமே அதன் தீவிரம் வெளிப்படும் என்று நினைக்கலாம். எப்படி மரபுடன், வரலாற்றுடன் இணைப்பது ஒரு திறப்பை அளிக்குமோ அப்படியே முற்றாக வெட்டிவிடுவதும் ஒரு திறப்பை அளிக்கும். குறிப்பாக நவீனப்படிமங்களை பயன்படுத்தும் கதைகளில்.

இந்தச் சிறுகதைகளிலேயே பலகதைகளில் அப்படி நிகழ்தளம் மட்டுமே கருத்தில்கொள்ளப்பட்டுள்ளது. உதாரணம், இடம். அதில் அந்தக்குரங்கின்மேல் அனுமாரின் சாயல் வந்தாலே கதை அதன் இலக்கை அடையாது. மரபான விஷயங்களை பகடியாக மட்டுமே பயன்படுத்தும் வடிவம் கொண்ட கதைகள் இருக்கலாம். உதாரணம், தீவண்டி. அதன் மையப்படிமம் சமகாலம் சார்ந்தது. அங்கே வேள்வியோ வேறேதுமோ குறிப்பிடப்பட்டிருந்தால் கதை விழுந்துவிடும்.

தொன்மங்களை மரபான முறையில், வழக்கமான பார்வையில், இயந்திரத்தனமாக பயன்படுத்தும்போது அவை பயனிழந்துவிடுகின்றன. சாவு வரும்போது யமன் வந்தான் என்பதுபோல. அவை வாசகனின் கனவுக்குள் ஊடுருவும்படி கூர்மையாகியிருக்கின்றனவா என்பது முக்கியம். கலையில் மறுஆக்கம் செய்யப்படும்போது மட்டுமே அது நிகழ்கிறது. மறுஆக்கம் என்பது மறுவிளக்கம் கொடுப்பது அல்ல. அது இன்றைய ஒருவாசகனின் கனவுள்செல்லும்படி உருமாற்றம் அடைவது.

ஐரோப்பிய நவீனத்துவம் ஒட்டுமொத்த கிரேக்கத் தொன்மங்களையும், கிறித்தவத் தொன்மங்களையும், பாகன் தொன்மங்களையும் முழுமையாக மறுஆக்கம் செய்தது. அப்படிச் செய்யப்பட்ட மரபின்மேல் மீண்டும் ஊடுருவியது. இந்தியாவில் அது நிகழவில்லை. மரபை மறுஆக்கம்செய்த, ஊடுருவிய மகத்தான ஆக்கங்கள் இருநூறாவது உள்ளன என்பதை மறுக்கமுடியாது. ஆனால் இந்தியத் தொன்மவியல், இந்திய நாட்டாரியல் மிகமிகப் பிரம்மாண்டமானது. ஆகவே நவீன இலக்கியம் கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயமாகவே உள்ளது

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஜெயமோகனின் இன்னொரு கருத்தும் தவறு என்பதை சுட்டிக் காட்ட விழைகிறேன்.

//கீதை ஒரு ஞான நூலாகவும் தியான நூலுமாகவும் மட்டுமே நீண்ட நாட்களாகக்
கருதப்பட்டு வந்தது. ஆகவே அது ஞானத்தேடல் இல்லாதவர்களின் பொதுக்
கவனத்திற்குக்
கொண்டுவரப்படவில்லை.கீதையை அப்படி கவனத்திற்குக் கொண்டுவந்தவர்கள்
ஜரோப்பியர்களே.//

இது வரலாற்று ரீதியாக தவறான கருத்தாகும். 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில்
ஞானேஸ்வர் கீதையை மிக விரிவாகவும் இனிய இசையோடும் மக்களின் புழங்கு
மொழியில் (மராட்டி) மொழி பெயர்த்துமக்களிடம் கொண்டு சென்றார். ஞானேஸ்வரியே பக்தி
இயக்கத்துக்கு மிகவும் பலமான ஞான அஸ்திவாரமாக விளங்கியது. ஞானேஸ்வரி-
ஏக்நாதரின் பாகவதம் துகாராமின் அபங்கம் ஆகியவை பக்தி இயக்கத்தின் பிரஸ்தான
த்ரயமாக விளங்குகின்றன. அதாவது பக்திக்கும் அது சமுதாய இயக்கமாக
செயல்படுவதற்கும் ஞானத்தூக்குமான அடிப்படை பாலமாக ஞானேஸ்வரி எனும் கீதை
விளக்க நூலே விளங்கியுள்ளது. எனவே 'பகவத் கீதை ஒரு தத்துவ நூல் அது
ஐரோப்பிய காலனிய காலகட்டத்தில் நவீன இந்து மதம் கட்டமைக்கப்படும் போது
பைபிள் போல ஒரு ஆதார நூலாக ஆக்கப்பட்டது. அதிலிருந்துதான் பொது
பிரக்ஞைக்குள் நுழைந்தது'என்பது தவறானது. (துகாராம் தமது பல அபங்கங்களில்
ஞானேச்வரிலிருந்து வாக்கியங்களை, கருத்துக்களை உருவகங்களை கையாள்கிறார்.)



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 கீதை மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், இது மிக உயரிய கவனம் பெற்ற நூலாகவே பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. கீதைக்கு ஒரு தியான ஸ்லோகம் உண்டு. சின்மயாநந்தர் உரைகளைக் கேட்பவர்களுக்கு இது கட்டாயம் தெரிந்திருக்கும். மற்றவர்களுக்குத் தெரியாது என்று சொல்லவரவில்லை. சின்மயாவைக் குறிப்பிடக் காரணம், இந்த தியான சுலோகத்தைச் சொன்ன பிறகுதான் சின்மயாவின் சொற்பொழிவே தொடங்கும் என்பதனால். தியான சுலோகத்தில் இந்தக் குறிப்பிட்ட பகுதியைப் பார்க்கவும்:


ஸர்வோ பநிஷதோ காவோ தோக்தா கோபால நந்தன:
பார்த்தோ வத்ஸ: ஸுதீர்போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத்

எல்லா உபநிஷதங்களும் பசுக்களாகவும், அவற்றின் மேய்ப்பன் கோபாலனாகவும், கன்று அர்ஜுனனாகவும், கறந்த பால் கீதை என்ற அமுதமாகவும் (உள்ளன).

பசுக்கூட்டங்களிடமிருந்து பாலைக் கறக்க, அவற்றின் கன்று அருகில் இருந்தால்தான் ஆகும் என்பதைப் போல், அர்ஜுனனை ஒரு சாக்காக வைத்து கோபாலன் இந்த கீதையாகிய பால் அமுதத்தை நமக்கு எல்லா உபநிஷதங்களிடமிருந்தும் கறந்து தந்திருக்கிறான்.

இந்த தியான ஸ்லோகத்தை மதுசூதன சரஸ்வதி இயற்றியதாக சின்மயா சொல்வார். இவருடைய காலம் எனக்குத் தெரியாது. ஆனால் இந்த தியான சுலோகத்தைப் பாராயணம் செய்யும் பழக்கம் ராமகிருஷ்ண மடத்திலும் உண்டு.

இப்படி, எல்லா உபநிஷதங்களின் சாரம் என்று மிகப் பன்னெடுங்காலமாக இந்த மண்ணில் சொல்லப்பட்டு வரும் ஒன்றை, 'மதத்துக்குத் தொடர்பில்லாத தத்துவ நூல்' என்று சமஸ்கிருதத்தை நன்கு படித்தறிந்தவரான ஜெயமோகன் சொல்கிறார். படித்தவர் பிழைபடப் பேசுவது, அல்லது, வேறொரு தோற்றம் ஏற்படும்படியாக, உணர்ந்தோ உணராமலோ எழுதுவது பொதுத் தளங்களில் தவறான விளைவையே ஏற்படுத்தும்.

பகவத் கீதையை முதல் கட்டமாக மதத்திலிருந்து விலக்கிவிடுவோம். அடுத்த கட்டமாக என்ன நேரும்? அது எதனுடைய சாரம் என்று கருதப்படுகிறதோ அந்த உபநிடதங்கள் விலக்கப்படும். உபநிடதங்கள் எவற்றினுடைய அந்தம் என்று கருதப்படுகின்றனவோ அந்த வேதங்கள் மதத்திலிருந்து விலக்கப்படும். அதுதான் இந்த திசையில் அடிஎடுத்து வைப்பதன் விளைவாக இருக்கும்.

I am not attributing motives to Jeyamohan or anyone else. This would be the effect of this cause. அதை மட்டும்தான் சொல்கிறேன். நான் துல்லியமாகக் கணித்துச் சொல்கிறேன் என்று க்ளெய்ம் செய்துகொள்ளவில்லை. இது இப்படி நடக்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற அனுபவமொழி. அதைப் பகிர்ந்துகொள்கிறேன்.

- ஹரி கிருஷ்ணன்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

மதம்,ஆன்மீகம்,அவதூறு:ஒரு கடிதம்

 

அன்புள்ள ஜெயமோகன்

நீங்கள் எழுதிய கீதைகட்டுரைகள் குறித்து நிகழும் இந்த விவாதத்தைக் கவனித்தீர்களா? [ கீதை இந்துமதநூலா, தத்துவநூலா?: எதிர்வினை ] உங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளனவே?

ரமேஷ்

அன்புள்ள ரமேஷ்,

உங்கள் ஆதங்கம் புரிகிறது. இணைப்பை வாசித்தேன். அதில் உள்ள மறுமொழிகள் உட்பட அது ஒரு தரப்பின் குரல்.

அதில் சொல்லப்பட்டுள்ள இரு விஷயங்களைப்பற்றி சில சொற்கள்.

மதத்துக்கும் ஆன்மீகத்துக்குமான உறவை இப்போது இந்த கீதை விவாதத்தில் இணைத்துக்கொள்ள போவதில்லை. அதன் ஒருமை கெட்டுவிடும். ஆன்மீகம்X மதம் என்ற கோணத்தில் நான் ஏராளமாக பேசியிருக்கிறேன். ஆன்மீகம் என்ற சொல்லை எப்போதெல்லாம் சொல்கிறேனோ அப்போதெல்லாம் மதம் சார்ந்த பொருளில் அல்ல என்று சொல்வது என் வழக்கம். இதுவரை ஒரு தரப்பினர் கடுமையாக உழைத்து அதை தவறாகபுரிந்துகொண்டு வந்தார்கள். இப்போது அவர்களின் எதிர் தரப்பினர் அதை விட கடுமையான உழைப்புடன் தவறாகக் புரிந்துகொள்கிறார்கள்.

என் நோக்கில் ஆன்மீகம் என்பது ஒரு தேடல். முழுமையான இறுதியான புரிதல், அப்புரிதலை அனுபவமாக்கிக் கொள்ளுதல் என்ற இலக்கை நோக்கியது அது. இந்த இறுதி இலக்கை ‘ ஆத்ம சாட்சாத்காரம்’ [சுயபேறு] என்று அத்வைதம் சொல்கிறது. நிப்பானம் என்று பௌத்தம் சொல்வதன் இன்னொரு விளக்கம்தான் இது. அது மிக அந்தரங்கமான ஒரு ஆழ்பயணம். அதில் புற அமைப்புகளுக்கு பங்கு ஏதும் இல்லை.அறிதல்கள் அனைத்தையும் அந்த இலக்கை நோக்கிக் குவிப்பதையே ஆன்மீகப் பயணம் என்று சொல்கிறேன். கீதை உட்பட உள்ள மெய்ஞான நூல்களை அந்தக் கோணத்திலேயே வாசிக்க வேண்டும் என்பது என் குருமரபு எனக்குக் கற்பித்தது.

மதம் என்பது நம்பிக்கைகள்,சடங்குகள், குறியீடுகள் ஆகியவற்றின் அடிபப்டையிலான ஓர் நிறுவனம். அந்த கூறுகளை விளக்கமளித்து இணைப்பதற்காகவே அங்கே தத்துவம் உள்ளது. அது மரபின் பெரும் சேமிப்புக் கிடங்கு. அதனாலேயே அதை எவரும் நிராகரித்து விடமுடியாது. அதேசமயம் அதைக் கடந்தால் மட்டுமே ஆன்மீகப் பயணம் சாத்தியமாகும். அமைப்புகள் தேவை இல்லை என்றல்ல. அரசியலுக்கு ,கருத்துக்களை நிலைநாட்டவும் பரப்பவும் அவைதேவை. ஆனால் அவை ஆன்மீகமாக பயனற்றவையே.

இதனால்தான் ஆன்மீக ஞானிகளிடமெல்லாம் தெளிவான மத மறுப்பு அம்சத்தை நாம் காண்கிறோம். அவ்வாறு ஆன்மீக ஞானிகள் மதத்தை கடந்து செல்லும்போது மதச்சார்பானவர்கள் கொள்ளும் அதிர்ச்சியும் கொந்தளிப்பும் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. தன் இறுதிநாட்களில் வடலூர் வள்ளலார் சைவ மதத்தை தீர்மானமாக நிராகரித்தார். அதன் சாத்திரங்கள் சடங்குகள் எதிலும் சாரமில்லை என்று தான் கண்டதாகவும் அவற்றை உதறவேண்டும் என்றும் சொன்னார். அந்நாள் வரை அவரை பேணிய முதன்மைச் சீடர் தொழுவூர் வேலாயுத முதலியார் அடைந்த ஏமாற்றமும் சினமும் அடிகளையே நிராகரித்து கைவிடும்படிச் செய்தது அவரை.’கடைவிரித்தேன் கொள்வாரில்லை’ என வள்ளலார் மனம் நொந்தது அதனாலேயே.

நாராயணகுருவை அவரது அக்காலச் சீடர்களில் பெரும்பாலானவர்கள் கைவிடும்படி செய்ததும் குருவின் மத நிராகரிப்பே. தான் உருவாக்கிய அனைத்தையும் உதறி குரு இலங்கைக்கும் பின்னர் மதுரைக்கும் சென்றார். அன்று பெரும் ஆலமரமாக  வளர்ந்துவிட்டிருந்த மொத்த நாராயண இயக்கத்தையே கைவிட்டுவிடுவதைப் பற்றி சிந்தனைசெய்தார். பின்னர் நாராயண இயக்கத்தையே இரண்டாகப் பிளந்து தன் மாணவர்கள் கட்டும் அடங்கிய துறவியர் அ¨மைப்பை தனியாக உருவாக்கினார். அங்கும் நில்லாமல் தன் முதன்மைச் சீடரான டாக்டர் நடராஜனிடம் ‘எந்த அமைப்புக்குள்ளும் மதத்துக்குள்ளும் நில்லாதே. பிச்சைக்காரனாக இரு…இவையனைத்தயும் விட்டு விட்டு ஓடு’ என்று வழிகாட்டினார். அவ்வாறு விட்டு விட்டு சென்று இந்தியாவெங்கும்  பிச்சை எடுத்து அலைந்து டாக்டர் நடராஜன் நடராஜ குருவாக ஆனார்.

பிரம்மஞான சங்கத்தை விட்டு விலகிய ஜெ.கிருஷ்ணமூர்த்தியை , அவர் தன் கடைசிக் கணம் வரை போதித்த ஆன்மீகத்தை இவ்வாறுதான் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறுதான் ஓஷோவின் வசைகளையும் நக்கல்களையும் பாலியல்கதைகளையும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்த மதக் குரல் எப்போதும் ஒலிப்பது. அக்குரலுடன் விவாதிப்பது எளிதல்ல. தன் முதன்மை மாணவர் தொழுவூர் வேலாயுத முதலியாரையே வள்ளலாரால் சொல்லிப் புரியவைக்க முடியவில்லையே.

**

இரண்டாவது விஷயம் சிறில் அலெக்ஸ் இந்த இணைய தளத்தை நடத்துவது பற்றியது. அவரது நல்லெண்ணம் நேர்மை ஆகியவற்றை கேள்விக்குரியதாக்குவது. என்னுடைய நேர்மையை ஐயப்படுவது. இதெல்லாம் எல்லா அரசியல் தரப்பினரும் எப்போதுமே செய்வதுதான். இதில் அரசியல்வாதிகள் நடுவே பேதமே இல்லை. அது அரசியலின் ஒரு அங்கீகரிக்கபப்ட்ட வழிமுறை.

எனக்கு கிறித்தவ திருச்சபை பணம் தந்திருக்கிறது என்று வாசித்து மகிழ்ச்சி அடைந்தேன். இதை வாசித்த பிறகாவது அவர்கள் தந்தால் ஒரு புதிய திருச்சபையை நானும் உருவாக்குவேன்- திருச்சபையின் பணம் வாங்கிய போதகர்கள் பெரும்பாலும் செய்துவருவது இதைத்தான்.

இதன் விளைவாக நடக்கப்போவது அனேகமாக ஒன்றுதான். சிறிலை இருபக்கமும் ஐயபப்டுவார்கள். மனம்சலித்து சிறில் விட்டுவிட்டுப் போவார். இந்த இணையதளம் அப்படியே நின்றுபோகும். அப்படிப் போனால் நான் இம்மிகூட கவலைப்படவும் போவதில்லை. இதையெல்லாம் சுமந்தலைவது என் வேலையுமல்ல

http://jataayu.blogspot.com/2008/05/blog-post.html

கீதை அகம்

கீதைவெளி

கீதைத்தருணம்

கீதை இடைச்செருகலா? மூலநூலா?- கடிதம்

நம்மாழ்வார்-ஒரு கடிதம்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

அன்புள்ள சிறில்,

// என் கருத்துப்படி கீதையை மத நூலாகப் பாப்பவர்கள் பார்க்கட்டும் அதே நேரம் தத்துவ நூலாக அது உருமாறும் தகுதி உடையது. //

அது என்ன "உருமாற்ற" பிசினஸ்? ஆதிகாலம் முதலே கீதை தத்துவநூலாகவும் தான் பார்க்கப் பட்டிருக்கிறது.

எல்லா கீதைப் புத்தகங்களிலும், ஒவ்வொரு அத்தியாத்தின் கடைசியிலும் இப்படி ஒரு வாக்கியம் இருக்கும் -

இதி ஸ்ரீமத்பகவத்கீதாஸு உபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதே கர்மயோகோ நாம த்ருதீயோத்யாய: ||

"இங்ஙனம், உபநிஷதமும், பிரம்ம வித்யையும், யோக சாஸ்திரமும் ஆகிய ஸ்ரீமத்பகவத்கீதை என்ற ஸ்ரீகிருஷ்ண-அர்ஜுன உரையாடலில், கர்மயோகம் என்னும் மூன்றாம் அத்தியாயம் முற்றிற்று"

கீதைக்குத் தரப்பட்டுள்ள மூன்று அடைமொழிகளும் மிகத் தெளிவாக இதைச் சொல்கின்றன.

// அதை ஏற்பதற்கு அது மதநூல் எனும் அடையாளம் தடையாயிருக்கக் கூடாது என்பதுதான். //

இது முழுக்க மேற்கத்திய சிந்தனை மற்றும் வரலாற்றுப் பார்வை சார்ந்த அணுகுமுறை. இடைக்காலங்கள் (medieval period) முதல் இன்றுவரை ஐரோப்பாவில் நிறுவன கிறிஸ்தவம் தத்துவத்திற்கு முரணானதாகவும், எதிரியாகவுமே இருந்துவந்துள்ளது. தத்துவ வாதிகளும் மதம் பற்றி எதிர்மறையான கண்ணோட்டத்தையே கொண்டிருந்தனர். அதனால் தத்துவம், மதம் இரண்டும் முரண்பட்டவை என்ற கருத்து ஆழப் பதிந்தது.

ஆனால் இந்திய வரலாற்றில், மதமும், தத்துவமும் ஒருசேரப் பின்னிப் பிணைந்தே ஆதிகாலம் முதல் வந்துள்ளன. Arugumentative Indians என்ற தனது நூலில் அறிஞர் அமர்த்யா சென் அவர்களும் இதனைத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

உபநிஷதங்களில் தத்துவ விவாதம் மையமாக இருந்தாலும், அதற்கும் முந்தைய ரிக்வேத சம்ஹிதையிலேயே அதற்கான விதை ஊன்றப் பட்டு விட்டது.

எனவே, இந்தியச் சூழலை, இந்துமதத்தைப் பொறுத்தவரை இந்தக் கவலை அர்த்தமற்றது. "தத்துவம்" என்ற சொல்லின் மூலம் பற்றி ஹரி கிருஷ்ணன் சொல்வதைப் படித்துப் பாருங்கள்.

"தாயிற் சிறந்த தயாவான தத்துவனே" என்ற திருவாசகத்தை தினமும் ஓதி வழிபடும் மதநம்பிக்கையாளர்களைக் கொண்ட நாடு இது.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 நல்ல விஷயங்களை கபளீகரம் செய்வதில் வெள்ளைகாரர்கள் மாபெரும் கொள்ளைகாரர்கள் ஆயிற்றே.


யோகத்தைப் பற்றி காரசார விவாதங்கள் இணையத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.

இப்போது கீதையா? என்ன அநியாயம் ஐயா இது..

கீதையை படித்தவர்களும் யோகத்தை செய்தவர்களும் மனதில் தெளிவு பெற்று உடலில் நலம் பெற்று நன்றாக வாழ்கிறார்கள்.

இதைகண்ட சில கிறித்துவ மதவாதிகளுக்கு எங்கயோ எரிகிறது.

யோகம் சாத்தானின் செயல் என கிளப்பிவிடுகிறார்கள்...ம்ம்ம்ம்ம் இவர்களைதாம் ஒரு கன்னத்தில் அறைந்தால் அடுத்த கன்னத்தை காட்டும் அன்புவழி வந்தவர்கள் என நம்பி ஏமாறுகிறோம்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 //ஜடாயு சொல்வதைப்போல கீதை வழிபாட்டு நூலாக வணங்கப்படாமல் இருந்தால், அல்லது கீதை மேலான தத்துவ எதிர் விவாதங்களை ஏற்கும் நிலைகள் இருக்குமேயானால் அதை தத்துவ நூலாகவே கொள்வதில் பிரச்சனையில்லை.

//

பைபிளுக்கு இந்த பிரச்சினையில்லையா?

இவர்களுக்கு ஏன் எப்பொழுதும் இந்து மத சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு சான்றிதழ் அளிக்க வேண்டும் என்ற அரிப்பு? இவர்கள் பைபிளை படிக்கலாம், கீதையை படிக்கலாம், ஆனால் கீதை மட்டும் ஒரு மத நூல் என்று சொல்ல முடியாதாம்.

வாழ்க வமுடன்!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard