Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யூதர்களின் இயேசுவும், பவுலின் கிறிஸ்துவும்(கிறித்துவர்களுக்கு விண்ணப்பம்) Rd.பேராசிரியர். Sam George


Guru

Status: Offline
Posts: 7329
Date:
யூதர்களின் இயேசுவும், பவுலின் கிறிஸ்துவும்(கிறித்துவர்களுக்கு விண்ணப்பம்) Rd.பேராசிரியர். Sam George
Permalink  
 


யூதர்களின் இயேசுவும், பவுலின் கிறிஸ்துவும்  எஸ்.  செண்பகப்பெருமாள்
 
New%2BDoc%2B2019-02-02%2B16.02.27_1.jpg *


*
மதங்களைப் பற்றிய நூல்களை வாசித்துப் பகிர்ந்து கொண்ட (வலைப்பூக்களில் சொல்கிறேன்; FBஎன்ற டீக்கடை பற்றிச் சொல்லவில்லை!) பழைய அனுபவம் மறந்தே போச்சு. வாசிக்க எவ்வளவோ இருக்கிறது என்றாலும் ஏனோ தள்ளிப் போய்க்கொண்டே இருந்த நேரத்தில் புதிய புத்தகம் பற்றிய அறிவிப்பு ஒன்றை கிழக்குப் பதிப்பகத்தின் மருதன் அறிவித்த போது ஏகப்பட்ட மகிழ்ச்சி எனக்கு.
 
 
 
New%2BDoc%2B2019-02-02%2B16.02.27_2.jpg
 
 
ஏனெனில் பல நாள் பழக்கத்தைத் தொடர ஒரு வாய்ப்பு என்பது மட்டுமல்லாமல்நான் பல இடங்களில் துண்டு துண்டாக பவுல் எனப்படும் ஏசுவின் "follower" பற்றி வாசித்ததுண்டு. ஏற்கெனவே Paul is the one who mystified Jesus as a divine person" என்று முன்பே எழுதியுள்ளேன். அதைப் பற்றி ஒரு நூல்அதுவும் தமிழில்அதுவும் இந்துப் பெயர் கொண்ட ஒருவர் எழுதியது பதிப்பாகியுள்ளது என்றதும் அதை வாசிக்கவும்விவாதிக்கவும் ஆசை வந்தது.
 
இதில் எனக்கு ஓர் உதவி தேவை. எனது முதல் நூலில் இஸ்லாம் மதத்தைப் பற்றிய செய்திகள் - நான் சார்ந்திருந்த கிறித்துவ மதத்தையும் விட - அதிகமாக இருப்பதாக வாசித்த மக்கள் குறிப்பிட்டிருந்தனர். இதற்கான காரணமே இஸ்லாமியர்கள் தான். அவர்கள் தொடர்ந்து என் கருத்துகளுக்கு நல்ல எதிர்ப்பாட்டு” பாடி வந்தனர். அதனால் அதிகம் வாசிக்கயோசிக்கஎழுத வேண்டும் என்ற கட்டாயமே பிறந்தது. 
(ஆனால் அவர்கள் யாரையும் நானிப்போது இணையத்தில், முகநூல்களில் பார்ப்பதே இல்லை. ஏனிந்த மெளனமோ!)

;முன்பு தொடர்ந்து மதங்களைப் பற்றி எழுதிய போதுஇந்துகிறித்துவ மக்கள் அதிகமான எதிர்ப்பு காண்பிக்கவில்லை. என் சுய தேடலில் கிடைத்தவைகளை மட்டும் இவ்விரு மதங்களைப் பற்றி எழுதினேன். அவர்களும் கச்சை கட்டி’ வந்திருந்தால் இன்னும் பல விசயங்களை நான் விரட்டிப் பிடித்துத் தெரிந்து கொண்டு புத்தகத்திற்குள் கொண்டு வந்திருப்பேன்.
 
இந்த முறையாவது கிறித்துவ நண்பர்களும் விவாதங்களை ஆரம்பித்தால் எனக்கு மிகவும் பலம் சேர்க்கும்! இஸ்லாமியச் சிறுவர்கள் போலவே கிறித்துவக் குழந்தைகளுக்கும் வெகு இளம் வயதிலேயே சமயச் சரக்குகள் மனதிற்குள் இறக்கப்படுகின்றன. ஆனால் கிறித்துவ மக்கள் வளர்ந்த பிறகும் கூட விவாதத்திற்குள் நுழைவதில்லை. அதற்கு ஏற்றது போல் பைபிளிலிருந்து ஒரு மேற்கோளைச் சுட்டிக் காட்டிவிட்டு ஒதுங்கி விடுவார்கள். (மத். 7 : 6 - உங்களிடமுள்ள முத்துக்களைப் பன்றிகளுக்கு முன்னால் போடாதீர்கள்;

அது தோல்வி மனப்பான்மையா அல்லது பதில் சொல்ல முடியாததாலா அல்லது எதற்கு இதெல்லாம் என்றா நினைவா .. எது என்பது எனக்குத் தெரியவில்லை. முகநூலில் கூட சில கிறித்துவர்களிடமிருந்து நட்பழைப்புகள் வந்தன. சிலரிடம் நான் மத மறுப்பாளன் ஆகவே விட்டு விடுங்களேன் என்று கூட கேட்டிருந்தேன். அதையும் தாண்டி சில நட்பு வட்டத்திற்குள் நுழைந்தார்கள். ஆனால் என் பதிவுகளை வேண்டுமென்றே அவர்களுக்கும் அனுப்பி வைத்தேன். ஆனால் மெளனமே பதிலாகக் கிடைத்தது.
 
ஆனால் இம்முறை அவர்களை என் உதவிக்கு” வரும்படி அன்போடு அழைக்கின்றேன். வாருங்கள் ... தொடர்ந்து விவாதிப்போம்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: யூதர்களின் இயேசுவும், பவுலின் கிறிஸ்துவும் -- 1. (கிறித்துவ மக்களுக்கு ஒரு விண்ணப்பம்)
Permalink  
 


யூதர்களின் இயேசுவும், பவுலின் கிறிஸ்துவும் -- 2. (கிறித்துவ மக்களுக்கு ஒரு விண்ணப்பம்)
Permalink Reply Quote 
More indicator.png
 
எனக்கு கிறித்துவத்தில் பல கேள்விகள் உண்டு. அவைகளை கிறித்துவ நம்பிக்கையாளர்களிடம் கேட்டு, பதில் பெறாமல் போனதுண்டு;  பல சமயங்களில் தெளிவாக விவிலியத்தில் உள்ளதைக் கேள்விக்கு உட்படுத்தினால் அவர்களிடமிருந்து பதில் வருவதை விட கோபம் அதிகமாக வரும் என்பது என் அனுபவம். வேறு சில கேள்விகளுக்கான பதிலைத் தேடினேன். கிடைக்கவில்லை. ஆனால் இந்த நூல் பல கேள்விகளுக்கான பதில்களைத் தந்துள்ளன.
 
இந்த ஆசிரியர் - சண்முகப் பெருமாள் - ஓர் இந்து. ஓய்வு பெற்ற ஆசிரியர். கிறித்துவ பாதிரிமார்களிடம் இணைந்து, இறையியல் கல்லூரியில் பைபிள் குறித்த வகுப்புகளை எடுத்துள்ளார். அவரது நூல் கிழக்குப் பதிப்பகத்தால் 2018ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நூலுக்கு வாழ்த்துரை வழங்கியவர் Rev. Dr. ஜோயல் செல்லத்துரை - ஒரு பாதிரியார். (நான் என் ‘மதங்களும் சில விவாதங்களும்’ நூலுக்கு அதே போல் கிறித்துவ பாதிரியார்கள் சிலரை முயற்சித்தேன் ... தயங்கினார்கள் .. விட்டு விட்டேன்.)
 
சில கேள்விகள்:  
  • எப்போதிருந்து பரிசுத்த ஆவி கிறித்துவ மதத்தில் பரவ ஆரம்பித்தது என்று தேடினேன். 
  • விருத்த சேதனம் கட்டாயமாக்கப் பட்டுள்ளதாக பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் கிறித்துவர்களிடம் அப்பழக்கம் இல்லை; ஏன்?
  • ஏசு திரும்பத் திரும்ப தான் இஸ்ரேயலர்களுக்காக மட்டும் வந்ததாக புதிய ஏற்பாட்டில் சொல்லி வந்தாலும் அவர் அனைவருக்குமான கடவுளாக எப்படி “ஆக்கப்பட்டார்” என்றும் அறிய ஆவல்.
  • பவுல் என்ற அடிகளார் கிறித்துவ மதத்தின் ‘தலைமைக் குரு’வாக ஆகியுள்ளார். அவர் கிறித்துவத்தின் அடித்தளத்தை ‘அவரது விருப்பத்திற்கேற்ப’ மாற்றியதாக வாசித்திருக்கிறேன். அதனைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள ஆசை.
இப்படி ஒரு பெரிய பட்டியல் என்னிடம் இருந்தது.  அதற்குப் பதில் தர வந்தது போல் இந்த நூல் கிடைத்தது. வாசித்து உங்களிடம் பகிர்வதற்கு முயல்கிறேன், அதற்கு  முன் இந்த நூலின் பின்பக்கத்தில் உள்ள குறிப்புகள் புத்தகத்தின் கருத்தடக்கத்தைத் தருவது போலிருப்பதால் அதை முழுமையாக இங்கே முதலில் தருகிறேன்:
 
பைபிளின்  பழைய ஏற்பாட்டு நூல்கள், யூதர்களின் மதத்தையும் கடவுளையும் நமக்கு விரிவாக அறிமுகம் செய்கின்றன. யூதர்களின் கடவுள் அவர்களுக்கு மட்டுமேயான கடவுள் என்று பைபிளில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. கி.மு. 586-ல் பாப்லோனிய அரசன் நெபுகத்நெசர் யூதர்களின் எருசலேம் ஆலயத்தைக் தாக்கி அழித்து, யூதர்களை அடிமைப்படுத்துகிறான். அன்று தொடங்கி யூதர்கள் மாறி மாறி, கிரேக்கர்கள், ஹாஸ்மோனியர்கள், ரோமானியர்கள் என்று யாரோ ஒருவரிடம் அடிமைகளாக இருந்து வந்தனர். மீண்டும் தங்களுக்கான தனி நாட்டைச் சுதந்திரமாக ஆள விரும்பிய அவர்கள், அரசியல் விடுதலையைத் தங்களுக்கு தரக்கூடிய ஒரு மெசியாவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
 
இந்நிலையில் யூதக் குடும்பம் ஒன்றில் கி.மு.4-ல் இயேசு பிறக்கிறார். அவருடைய போதனைகள் யூதர்களை நோக்கி மட்டுமே இருக்கிறது. தன் சீடர்கள் அனைவரும் யூதர்கள் மத்தியில் மட்டுமே பிரச்சாரம் செய்ய வேண்டும். புறஜாதியரிடம் ஒரு போதும் செல்லக்கூடாது என்று இயேசு மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இயேசுதான் மெசியா என்று அவருடைய சீடர்கள் யூதர்களிடம் முன்னிறுத்துகின்றனர். ஆனால் ஒரு மெசியா என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பழைய ஏற்பாட்டில் சொல்லியுள்ளதோ அவற்றைச் செய்வதற்கு முன்னதாகவே இயேசு கொல்லப்படுகிறார்.
 
இயேசுவின் நேரடிச் சீடராக இருந்திராத பவுல் என்ற யூதர், இயேசுவைப் பின்பற்றுவோரைக் கடுமையாகத் துன்புறுத்துகிறார். பின்னர் மனம் மாறுகிறார். பவுல்தான் இயேசு என்ற ஒரு மெசியாவை, கிறிஸ்து எனப்படும் அனைவருக்கும் பொதுவான கடவுள் என்ற நிலைக்கு உயர்த்துகிறார். இயேசு கூறியதற்கு மாற்றாக, புற ஜாதியரிடம் இயேசு கிறிஸ்து என்ற கருத்தாக்கத்தைக் கொண்டு செல்கிறார். பவுலுக்கும் இயேசுவின் சீடர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இன்று பவுலின் கிறிஸ்துவமே உலகம் முழுவதும் பரவியுள்ளது
 
செண்பகப் பெருமாளின் இந்நூல் பைபிளின் பழைய, புதிய ஏற்பாட்டு வசனங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, யூத வரலாற்றையும் இயேசுவின் வாழ்க்கையையும் ஆராய்கிறது. அதன் மூலம் இன்றைய கிறிஸ்துவத்தின் பல கொள்கைகளையும் கேள்விக்கு உட்படுத்துகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

யூதர்களின் இயேசுவும், பவுலின் கிறிஸ்துவும் -- 3. (கிறித்துவ மக்களுக்கு ஒரு விண்ணப்பம்)
நூலின் முகவுரை
 
 
பைபிளின் உள்ளிருந்து மட்டுமே நாம் தகவல்களையும் ஆதாரங்களையும் தேர்வு செய்து எழுதியிருக்கிறோம்.(பக் 14)
 
மதவாதிகளைப் பொருத்தவரை, தன் மதமே உயர்ந்தது; மற்றையவை பொய்யானவை என்ற அகங்கார உணர்வு கொண்டவர்களாக இருப்பர். (9) (இந்த எண்ணம் அஹமதியா மதத்தினருக்கு அதிகம் என்ற என் கருத்தை என் நூலில் பரவலாக ஆதாரத்துடன் எழுதியுள்ளேன்.)
 
பைபிளின் புதிய ஏற்பாட்டு எழுத்தாளரான பவுல், மதம் என்ற அந்தஸ்தில் இருந்த யூதத்தை (Judaism)  அதிலிருந்து வேறோர் நிலைக்கு மாற்றும் முயற்சி ஒன்றில் ஈடுபட்டார். கி.பி. 49 வாக்கில் பைபிளின் நடைமுறைக் கொள்கையில் ஒரு மாற்றம் கொண்டுவர பவுல் விரும்பிய போது, மதங்களை விட மாறுபட்ட ஒன்றை ‘கிறிஸ்து; (Christ) என்ற ஒற்றைச்சொல் மூலம் அறிமுகப்படுத்த முயன்றார்.அச்சொல் மனிதர்களிடையே பேதம் காட்டுதல் கூடாது என்னும் பொருள் கொண்டதாக இருந்தது.(9) ஆயினும் பவுலின் இக்கொள்கை இஸ்ரேலிய சமூகத்துக்குப் புதியது. கிறிஸ்து என்ற சொல்லும், அதில் பொதிந்துள்ள பொருளும் பைபிள் மரபுக்கு உரியதல்ல. ( At some point, his adherents also began to refer to him as “Son of God.” Paul employed both “Christ” and “Son of God” freely, and he is also responsible for the widespread use of “Christ” as if it were Jesus’ name rather than his title. -  https://www.britannica.com/biography/Saint-Paul-the-Apostle/Theological-views)
 
புதிய ஏற்பாட்டு நூல்களில் ‘கிறிஸ்து’ என்னும் பெயரில் பவுல் ஏசுவை அறிமுகம் செய்தார்.
இயேசுவையும் கிறிஸ்துவையும் வேறுபடுத்திக் காட்டும் நோக்கத்தில் பவுல் தம்முடைய புதிய ஏற்பாட்டு நூலில் இவ்வாறு எழுதுகிறார்: “உயிரோடு வாழ்ந்த காலத்தில் இயேசு ஒர் மெசியா மட்டுமே. ... அவர் சிலுவையில் அறையப்பட்டு இறந்த பின்னர்தான் ‘கடவுளின் ஆவி’ அவர் மீது இறங்கியது. அதனாலேயே அவர் உயிரோடு எழுப்பப்பட்டார். அதன் பின்னரே அவர் கிறிஸ்து என்னும் கடவுளின் மகனாக ஆனார். (ரோமர் 1:2,3)
 
இந்தியா போன்ற கீழை நாடுகளிலிருந்து ஆன்மிக ஞானம் பைபிளுக்குச் சென்ற விதம் குறித்து William Alva Gifford என்ற ஆசிரியர், தன் புத்தகம் The Story of Faith, பக்கம் 159-ல் இவ்வாறு குறிப்பிடுகிறார்:  “ .... There are echoes in the New Testament of disturbances caused by the doctrine that Christ and Jesus are not the same, that Christ did not have a true human body, and therefore did not die on the cross. From the early second century, such doctrines were openly proclaimed in the churches, and won a considerable following among Gentile Christians. (11)
 
கிரேக்க மதத்தின் ஒரு பிரிவு ‘அறிவு நெறிக் கோட்பாடு’ எனப்படும் குணாஸ்டிசிசம் (Gnosticism) எனப்பட்டது. (Gnosticism என்ற சொல்லை ’குணாஸ்டிசம்’ என்று இந்த நூலின் ஆசிரியர் மொழிபெயர்த்துள்ளார். நான் இதை என் நூலில் ‘ஞான மரபு’ என்று மொழிபெயர்த்துள்ளேன். இனி இந்த ஆசிரியரின் குணாஸ்டிசிசம் என்பதற்கு பதில் ஞான மரபு என்ற என் சொல்லை replace  செய்து கொள்கிறேன்!)   அந்த மதப் பிரிவின் கொள்கையே பவுலின் கடிதங்களில் அதிகப் பிரகாசத்துடன் காட்சியளிக்கிறது. அவரது இந்த அறிவின் வெளிப்பாடு தான் இயேசுவும் கிறிஸ்துவும் ஒரே ஆள் அல்ல என்பதாகும். (ரோமர் 1: 2-5)
 
“இயேசுவினாலே அன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை’ (அப்போஸ்தலர் நடபடிகள் - திருத்தூதர் பணிகள் 4:12) என்ற பைபிள் வசனத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டு அவர்கள் ஏனைய மதங்கள் மீது வெறுப்பு காட்டுகின்றனர். இத்தகையவர்களால் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது.(11) (இது பற்றி நானும் (பயனின்றி..) நிறைய எழுதியுள்ளேன்.
 
கிறித்துவ குருமார்களோடு பைபிள் பற்றிய விவாதத்தின் போது .. இயேசுவை பவுல் புற ஜாதியரிடம் பிரசாரம் செய்தார் என்றும், அதற்கு வசதியாக ஒரு பொய்யைக் கூறவும்  அவர் தயங்கவில்லை என்றும், அவரே அதனை ஒப்புக் கொள்வதையும் (ரோமர் 3:7,8  ) குறிப்பிட்டேன்.  இவ்வாறு பவுல் கூறிய பொய்யைப் பற்றிய கவலையின்றி, ஆனால் பவுல் விரும்பிய விசுவாசத்தை மட்டும் கொண்டவர்களாக மக்கள் இருப்பது பற்றி நான் வினா எழுப்பினேன்.
 
மற்றொரு நாள்; ஒரு பிஷப், பல பாஸ்டர்களோடும் மற்றொரு விவாதம் ... ”என் பொய்மையின் மூலம் கடவுளின் வல்லமை வெளிப்படுவதோடு அவரது மாட்சியும் பெருகுமானால், இன்னும் நான் பாவியெனத் தீர்ப்பளிக்கப்படுவது ஏன்? அப்படியானால், ‘நன்மை விளையும்படி தீமையைச் செய்வோம்’ என்று சொல்லலாமே?” (ரோமர் 3: 7, 8) விவாதத்தில் எனக்குத் தக்க பதில் கிடைக்கவில்லை. இன்னொரு பேராசிரியர் வரவழைக்கப்பட்டார். நான் 3 கேள்விகளை அவர்கள் முன் வைத்தேன்:
 
·          பவுல் கூறிய பொய்யின் மூலம் கடவுளின் மாட்சி எவ்விதம் அதிகரித்தது?
·          அந்தப் பொய்யின் மூலம் பவுல் எதிர்பார்த்த நன்மை யாது?
·          அந்த நன்மையை அடைவதற்காக, என்ன தீமை செய்துவிட்டதாக பவுல் கருதினார்?
 
இந்த வசனங்கள் இதுவரை அவர்கள் கவனத்தில் பட்டிருக்கவில்லை. என் புரிதலை அவர்களுக்குச் சொன்னேன்: “பவுல் புறஜாதியரிடம் பணியாற்றுவது என முடிவு செய்ததும், அதற்குத் தேவையான தளத்தை முதலில் அமைத்துக் கொண்டார். புற ஜாதியரிடம் தாமாகவே சென்று பணியாற்றிட தாம் முடிவெடுக்கவில்லை என்றும், தாயின் கருப்பையில் தாம் இருந்த போதே கடவுள் தமக்குத் தரிசனமாகி தம்மைப் புற ஜாதியருக்குரிய அப்போஸ்தலனாகத் தேர்வு செய்து விட்டதாகவும், (கலாத்தியர் 1: 5, 16), அதனாலேயே தான் புறஜாதியாரிடம் சென்றதாகவும் பவுல் கூறினார். இத்தரிசனத்தை இயேசுவின் சீடர்கள் நம்பாமல், பவுல் கூறியது பொய் என்று மறுத்தனர். இதுதான் என்னுடைய விளக்கமாக இருந்தது.  ...  இயேசுவின் சீடர்கள் இதை ஏற்றுக் கொள்ளாமல், ‘அப்போஸ்தலனாக இல்லாதிருந்தும் சிலர் தம்மைத் தாமே அப்போஸ்தலன் எனக் கூறிக் கொண்டனர்; அவ்வாறு கூறியவர்கள் பொய்யர்கள்’  என்று சாடினர்.(வெளிப்படுத்தின சுவிசேஷம் - திருவெளிப்பாடு 2:2) தம்மை அவர்கள் குறிவைத்துத் தாக்குவதைக் கண்ட பவுல், ‘நான் அப்போஸ்தலன் என மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாவிடினும் உங்களுக்கு நான்  அப்போஸ்தலன் தானே’ (1 கொரிந்தியர் 9:2) என்று எழுதி இயேசுவின் சீடர்களின் குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ளும் விதமாகப் பேசினார்.
 
பைபிளின் உள்ளிருந்து மட்டுமே நாம் தகவல்களையும் ஆதாரங்களையும் தேர்வு செய்து எழுதியிருக்கிறோம்.(14)
 
கிறிஸ்துவத்தில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு மதப்பிரிவுகள் புதிது புதிதாகத் தோன்றியுள்ளன.
 
முதல் நூற்றாண்டுக்காலத்தில் 3 பிரிவுகள் இருந்தன. 1. யூதக் கிறிஸ்தவம்; 2. பவுல் கிறிஸ்தவம். 3. ஞானமரபுக் கிறிஸ்தவம். இதில் ஞானமரபுப் பிரிவில் 7 ஏழு உட்பிரிவுகள் இருந்தன.  அதன்பின் கி.பி. 325-. நிசேயா கவுன்சில் வரையில் வேறு 5 பிரிவுகள் வழக்கத்திற்கு வந்தன. ... கி.பி 325 முதல் இடைக்காலம் வரையிலும் 9 பிரிவுகள் இருந்துள்ளன.  கி.பி. 1517-ல் ஏற்பட்ட மார்ட்டின் லூதர் எழுச்சியினால் கிறிச்தவத்தின் அடைப்படைக் கொள்கை இரண்டாயிற்று. கத்தோலிக்கம், புரோட்டஸ்டண்ட் என்பவையே அவை.  .. அவரவர் விருப்பத்திற்கேற்ப புதுப் புது சபைகள் தினந்தோறும் உருவாகி வருகின்றன.(15)
 
ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்தமான மதத்தில் இருக்கட்டும். ஆனால் தம்முடையது மட்டுமே உயர்ந்தது என்றும் மற்றையவை இழிவானது என்றும் கருதுகிற பான்மை ஒழியவேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

யூதர்களின் இயேசுவும், பவுலின் கிறிஸ்துவும் -- 4. (கிறித்துவ மக்களுக்கு ஒரு விண்ணப்பம்)

செயின்ட் பவுல்
 
                                                      பைபிளின் பழைய ஏற்பாடு
 
 பைபிள் ஒரு வரலாற்று நூலாகும். ( எனக்கு இதில் உடன்பாடு இல்லை.  எந்த ஆண்டில் யாரால் எப்போது எப்படி நடந்தது போன்ற அனைத்து விளக்கங்களும்  வரலாற்றில் இருக்க வேண்டும்.  பைபிளில் அவ்வாறு எதுவும் இல்லை என்பது என் கருத்து.  சில இடங்களில் பழைய மன்னர்களின் பெயர்கள் இருக்கலாம்.  அவை மட்டுமே பைபிளை ஒரு வரலாற்று நூலாக ஆக்காது என்று நினைக்கிறேன்.) 
 
‘ இஸ்ரேலியர்’  எனப்பட்ட ஓரின மக்கள் 12 ஜாதிகளாக வகைப்படுத்தப்பட்டு இருந்தனர் அவர்கள் தொடக்க காலத்தில் இஸ்ரேலியர்கள் எனவும் பின்னர் யூதர்கள் எனவும் பைபிள் அழைக்கிறது.  கடவுள் யெஹோவா என அழைக்கப்பட்டார்.
 
 இந்த கடவுள் இஸ்ரேலிய மக்கள் தமக்குரிய ’சொந்த மக்களாக’ (The Chosen Pepple) தேர்வு செய்து அவர்களோடு வாழ்ந்து வந்ததாக பைபிள் அறிவிக்கிறது.(17)
46 புத்தகங்கள் பழைய ஏற்பாட்டில் உள்ளன.  அவற்றுள் 7 புத்தகங்களை பிரிவு கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அவர்களுக்கு பழைய ஏற்பாட்டு நூல்கள் 39 மட்டுமே.
 புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்கள் உள்ளன. அனைத்துப் பிரிவு கிறிஸ்தவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
 
கிமு1975  வாக்கில் மெசபடோமியா பள்ளத்தாக்கு யாக்கோபு (Jacob) எனப்பட்ட இஸ்ரவேல் (Israrel) வாழ்ந்து கொண்டிருந்தார். ( இந்த ஆண்டை இவ்வளவு குறிப்பாக எழுதுவதற்கான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தால் மகிழ்ச்சி.) ..
  இவர் எகிப்து நாட்டில் குடியேறினார்.  அவரது 12 மகன்களும் இஸ்ரேலிய ஜாதிகளின் குலமுதல்வர்கள் (Patriarchs) என்று அழைக்கப்பட்டனர். 
 இதிலிருந்து 75 பேர் எகிப்திற்கு சென்று அடிமைகளாக  430 ஆண்டுகள் (??) வாழ்ந்தார்கள். 
 அவர்களின் எண்ணிக்கை பெருகி ஆண்கள் மட்டும் ஆறு லட்சத்தை விட அதிகம்.(எண்ணிக்கைக் கணக்கு உதைக்குமென்று தெரிகிறது. !!) (18)
கிமு1500  வாக்கில் இஸ்ரேலிய இனத்தில் மோசே  என்ற  ஆண் குழந்தை பிறந்தது.
 
இந்த காலத்தில் எல்லோருக்கும் பொதுவான கடவுள் என ஒருவரும் இருக்கவில்லை. …  இஸ்ரேலியர்கள் புதிதாக உருவாகிய இனம் என்பதால் அவர்களுக்கு உரிய கடவுள் என அதுவரை எவரும் அறியப்படவில்லை.(19)
 
“ ஒரு கடவுள் மோசேயை சந்தித்ததாகவும் இஸ்ரயேலரின் விடுதலைக்காக அவர் பாடுபடப் போவதாகவும் எனவே அனைத்து இஸ்ரேலியர்களும் மோசே சொல்கிற படி கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று மோசேயின் சகோதரர் ஆரோன் அறிவித்தார். (யாத்ராகமம்4:29-30)
இஸ்ரேலிய மக்களின் மூதாதையர் ஆகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் கடவுள் என்பதே அவருடைய பெயர் என கடவுள் அறிவிக்கிறார்(3:15)  (20)
 
 இஸ்ரவேலுடைய கடவுளாக (Triabl God) மோசே அவர்களுக்கு அக்கடவுளை அறிமுகப்படுத்தினார். ( கடவுளை அறிமுகப்படுத்துகிறார். இதைவிட கடவுள் மோசேயை அறிமுகப்படுத்தி இருந்தால் நல்ல யோசனையாக எனக்கு தெரிகிறது!!)
 
 பைபிளின் கடவுள் கி.மு.4000 வாக்கில் தோன்றியதாகப் பேசப்படுகிறது.  (அறிவியலோடு நாம் பேசும் பரிணாமம், fossil study, geneology, human evolution, archaeology .. என்ற எதுவும் இந்த ஆண்டுக் கணக்கை ஒத்துக்கொள்ளாது.)  அப்போதுதான் ஆதாம் படைக்கப்படுகிறார்..  பின் நோவா.  அதன்பின் 9ஆவது தலைமுறையில்  ஆபிரகாம்.   அடுத்து 42 ம் தலைமுறையில் இயேசு.  ஆதாம் முதல் இயேசு வரைக்கும் 60 தலைமுறைகள். (ந்த 60 தலைமுறைகளையும், பைபிளில் சொல்லப்பட்ட பலரின் வயதையும் வைத்து ஆதாம் பிறந்த நாள், கிழமை , நேரம் எல்லாம் குறிக்கும் தீவிரக் கிறித்துவர்களும் உண்டு.)
 
 பைபிளின் கடவுள் மோசேயின் காலத்தைச் சார்ந்தவர் தான் என்பதற்கான சான்றுகள் பைபிளில் உள்ளன. (21)
 
யாத்ராகமம் 5:2 -  இஸ்ரவேலர்களின் கடவுள் பற்றி எகிப்திய மன்னன் அறிந்திருக்கவில்லை. அந்த அளவிற்கு இஸ்ரேலின் கடவுள் அனைவருக்கும் புதியவர்.
( எகிப்திய மன்னன் விடுதலை தராததால்)   மோசே கடவுளிடம் மீண்டும் வந்து தன் குறையைப் பற்றி பேசினார். உடனே கடவுள், “ உங்களை நான் என் மக்களாக தேர்ந்தெடுப்பேன் உங்களுக்கு கடவுளாக இருப்பேன்’  என்கிறார். (யாத் 6:7)  (22)
 
உபாகமம் - இணைச்சட்டம் 27:9, 10 - இந்த வசனங்கள் கூறப்பட்ட நாளில் இருந்துதான் இஸ்ரேலியர்கள் அந்த கடவுளுடைய மக்களினம் ஆகியிருப்பதாக பைபிள் அறிவிக்கிறது. 
 
கடவுளுக்கு சில குணங்கள் இருந்ததாக மோசே அறிவிக்கிறார்.  கோபம், பொறாமை, பழிவாங்குதல்,  பாரபட்சம் காட்டுதல் முதலியன அவருடைய குணங்களாக இருந்தன என்று பைபிள் அறிவிக்கிறது. (உபாகமம் - இணைச்சட்டம் 9:8, மற்றும் 6:14,15, ஏசயா 35:4, யாத்ராகமம் - விடுதலைப் பயணம் 11:7).புரோட்டஸ்டண்ட்  மற்றும் பொது  மொழிபெயர்ப்பில் ’பொறாமை’  என்ற சொல் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பில் ‘a jealous god’ (Deuteronomy 6:14,15 in Catholic edition)  என்று சொல்லப்பட்டுள்ளது .
 
மோசே தம்மையும் தம் சகோதரர் ஆரோனையும் முன்னிலைப்படுத்தி எகிப்திய மன்னன் பாரவோனிடம் சேர்ந்து தங்கள் விடுதலைக்கான கோரிக்கையை வைத்தார். முதலில் மன்னன் மறுத்தாலும் இறுதியில் அவர்கள் வெளியேறுவதற்கு அனுமதித்தார். கிமு 1446 எகிப்தை விட்டு இஸ்ரேலியர்கள் வெளியேறினார்கள். இதிலிருந்து வெளியேறும் போது பிற ஜாதியினராகிய எகிப்தியர்களைக் கொள்ளையடித்துச் செல்லுமாறு ’தம்  பிள்ளைகளாகிய இஸ்ரவேலர்களுக்கு அவர்களுடைய கடவுள் உத்தரவிட்டார். (யாத்ராகமம் - விடுதலைப் பயணம் 12:35,36. 
 
இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு என் உடன்படிக்கையை கைக் கொள்வீர்களானால்  சகல ஜனங்களும் நீங்களே எனக்கு சொந்த சம்பத்து ஆகி இருப்பீர்கள்;  பூமி எல்லாம் என்னுடையது. (யாத்ராகமம் - விடுதலைப் பயணம் 19:5)
 
நான் இஸ்ரயேல் மக்களிடையே குடியிருப்பேன் அவர்களுக்கு கடவுளாய் இருப்பேன். யாத்ராகமம் - விடுதலைப் பயணம் 29:45 ,46
 
புறஜாதியாரை- gentiles - தம்முடைய எதிரிகளாக நடத்த வேண்டும் என்று தம் பிள்ளைகளுக்கு பைபிளில் கடவுள் உத்தரவிட்டார்.  பிற சாதியினருடன் உடன்படிக்கை எதுவும் செய்யக்கூடாது;  பிற ஜாதி பெண்களை திருமணம் செய்யக்கூடாது‘  பிற ஜாதியினரை நாடுகளோ அல்லது நல்லுறவுடன் அவர்களோடு வாழ்வு கூடாது;  தங்களுக்கு அடிமைகள் தேவைப்பட்டால் அவர்களிடமிருந்து தான்  இஸ்ரேலியர்கள் பெற்றுக்கொள்ளவேண்டும். பிற சாதியினருடன் கலந்து வாழ்ந்தால் இஸ்ரேலிய சமூகம் தீட்டுப்பட்டு விடும். யாத்ராகமம் - விடுதலைப் பயணம் 34:15, உபாகமம் - இணைச்சட்டம் 7:1-5, லேவியர் 25:42-45; எஸ்றா 9:11-15. இவ்வாறு கூறி  ஜாதி மீது தீண்டாமையை அவர் திணித்தார். (what a ‘separatist’ god!!
 
பைபிள் மொழிபெயர்க்கப்பட்ட போது அதன் கருத்துக்களை தங்கள் விருப்பம் போல் மொழிபெயர்ப்பாளர்கள் சிதைத்து எழுதினர். (28)
 
ஒரு சான்று:
” நம் கடவுள் அநீதிக்கு பழிவாங்கும் நாளை அறிவிக்கவும் , துயருற்று  அழுவோர்க்கு ஆறுதல் கூறவும் (எசையா 61:2) எசையா தீர்க்கதரிசியை கடவுள் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்ததாக தகவல் தெரிகிறது. அவ்வாறு பழிவாங்கும் விதமாக வரும்போது புறஜாதியார் கொள்ளையடிப்பது பற்றியும் ஒரு தகவலை கூறுகிறார். இத்தகவலை பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் இருட்டடிப்பு செய்து மறைத்து விடுகின்றனர். அதாவது உண்மையில் இஸ்ரேலியர்களை பற்றிய பழைய ஏற்பாட்டு எசையா எழுதும்போது,
 
“ நீங்களோ ஆண்டவரின் குருக்கள் என்று அழைக்கப்படுவீர்கள். பிற இனத்தாரின் செல்வத்தைக் கொண்டு நீங்கள்  உண்பீர்கள். அவர்களின் சொத்தில் நீங்கள் பெருமை பாராட்டுவீர்கள். ( எசையா 61:6 பொது மொழிபெயர்ப்பு) 
 
என்று கூறுகிறார்.  கத்தோலிக்க மொழிபெயர்ப்பும் இதே தகவலைத் தருகிறது ஏனைய ஆங்கில மொழிபெயர்ப்புகளும், புரோட்டஸ்டண்ட் தமிழ் மொழி பெயர்ப்புகளும் ’புறஜாதியார் சொத்துக்களை இஸ்ரயேலர்களால்  கொள்ளையடிக்கப்படும் என்ற தகவலைப் பதிவு செய்யவில்லை
 
 இவ்வாறு பைபிளின் கடவுளுக்கு இழுக்கு வராமல் பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் அவரைப் பாதுகாக்கிறார்கள்.(30)
 
எகிப்தை விட்டு வெளியே வந்தபின்னர் பின்னர்தான் மோசே தன்னுடைய ஐந்து நூல்களையும் எழுதத் தொடங்கியிருக்க வேண்டும்.
 
மோசேதான் நூல் எழுதினாரா?
 (3500 ஆண்டுகளுக்கு முந்திய காலம் மேசேயின் காலம் என்கிறார்கள். அப்போது எழுத்து வடிவங்கள் வந்து விட்டனவா? புதிய ஏற்பாடுகளின் ஆசிரியர்களே யார் யாரென்பது தெரியவில்லை என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஆனால் பழைய ஏற்பாடு மோசே எழுதியது என்பதை எவ்வாறு ஒத்துக்கொள்வது?) (31)
 
  நூலின் ஆசிரியர் ஆதாம்-ஏவாள் அவர்களின் குழந்தைகள் என்பவைகளைப் பற்றி பேசுகிறார்.  கடவுள் காயினைப் பிரித்து விடுகிறார் அப்போது அவன், “ என்னை காண்கிற எவனும் என்னைக் கொல்வானே” என்று கூறுகிறார். அவன் வேறு யாரைப் பற்றி பயப்பட்டான்? அப்படியெனில் பைபிளின்  கடவுள் படைத்த உலகத்தையும் மக்களையும் தவிர வேறு மக்களும் அப்போது இருந்திருக்கிறார்கள் என்பதை அறிகிறோம்.
 
 வேறு பெண்கள் இல்லாத நிலையில் நோது தேசம் சென்றதும் காயினுக்குப் பெண் கிடைத்து இருக்கிறது.  எனவே கர்த்தர் படைத்த உலகத்தைவிட நோ தேசம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே படைக்கப்பட்டது. எனில் நோக்கி தேசத்தை படைத்த கடவுள், பைபிளின் கடவுளை விட மிகவும் மூத்தவர்.(36)
 
 ஹமுராபி  என்னும் பாபிலோனிய மன்னர் தன்னுடைய சட்டங்களின் தொகுதிகளால் மிகவும் பெயர் பெற்றவர் ஆவார். பைபிளில் முக்கியமானதாக கருதப்படும் ’கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்’ என்பது  ஹமுராபியின் சட்டம் என அறிகிறோம்.  ஹமுராபியின் காலம் கிமு 1772 - 1750 ஆகும்.  அதாவது அவர் மோசேக்கும் 280 ஆண்டுகளுக்கு முந்தையவர். அவரை  பைபிள் நன்கு அறிந்திருந்ததாகத்  தெரிவிக்கிறது. (ஆதியாகமம் - தொடக்க நூல் 14:1
 
 ஹமுராபி மன்னர், தன்னுடைய கடவுளாகிய ஷமாஷ் என்பவர் சட்டங்களின் தொகுதியைத் தம்மிடம் வழங்கியதாகக் கூறிக்கொண்டார்.  அதே வழியைப் பின்பற்றி தம்முடைய கடவுளிடம் சட்டத்  தொகுதிகளை வழங்கியதாக மோசேயும் கூறிக்கொண்டார். (36)


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

யூதர்களின் இயேசுவும், பவுலின் கிறிஸ்துவும் -- 5 . (கிறித்துவ மக்களுக்கு ஒரு விண்ணப்பம்)
மோசேயின் சட்டங்கள் மூன்று  பிரிவுகள் ஆகும்.
 
1. உடன்படிக்கை சட்டங்கள் (Covenant Codes )-  சிவில் சட்டங்கள் - இன்றைய நமது ஐபிசி (IPC - Indian Penal Code) சட்டங்கள் மாதிரி.
2. குருத்துவ சட்டங்கள் (Priestly Codes)
3.  இணையச் சட்டங்கள் (Deuteronomy ) -  சமூக அல்லது புதுச் சட்டங்கள்.
 
 இஸ்ரேலிய சமூகத்திற்குக் கொடுப்பதற்காக கடவுளே அச்சட்டங்களைத்  தம்மிடம் வழங்கியதாக மோசே கூறினார்
 
 இன்னொரு சம்பிரதாயமும் மிக முக்கியமானது. அது விருத்தசேதனம். (37) ஏன் இப்போது இந்த விருத்தசேதனம் கிருத்துவ மதத்தில் இல்லை என்று ஒரு கேள்வி எழுப்பி இருந்தேன்.  அதற்கான பதில் இந்த நூலில் பின்வரும் பக்கங்களில் கிடைத்தது.
 
 உன்னைப் போல் ஓர் இறைவாக்கினனை (தீர்க்கதரிசி) அவர்களுடைய சகோதரர்களிடமிருந்து நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். ( உபாகமம் இணைச்சட்டம் 18;18)
 
 இது யோசுவா குறித்து எழுதப்பட்ட வசனம் ஆனால் அது இயேசுவை குறித்து எழுதப்பட்டதாக புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் கூறிக் கொள்வர். (அப்போஸ்தலர் நடபடிக்கைகள் - திருத்தூதர் பணிகள் 3:21,22)
 
 புற ஜாதியிடமிருந்து கைப்பற்றிய நாடுகளை லேவி ஜாதியினரைத் தவிர ஏனைய இஸ்ரேலியர்கள் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொண்டனர். லேவியருக்குச் சொத்தில் பங்கு இல்லை. ஆனால் இஸ்ரேல் கடவுளுக்குக் குருக்களாக இருந்து பணியாற்றும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.( இந்த லேவியருக்குத்தான்காணிக்கை கொடுக்க வேண்டும் என்று ப.ஏற்பாட்டில் வலிந்து வலிந்து சொல்லப்படும். அட ..  நம் வரலாற்றில் அய்யர்கள் ராஜ குருக்களாக இருந்ததாகச் சொல்வார்கள். தட்சணைகள், பரிகாரங்கள் எல்லாம் அவர்களுக்குத் தானே!  History repeats - sadly!!  புரியுதா?) (38)
 
 போரில் வென்று ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்த இப்தா நேர்த்திக் கடனாக தனது ஒரே மகளை எரிபலியாக எரித்து விட்டார்.  இஸ்ரேலியர்களின் கடவுளுக்கு நரபலி  என்றால் மிகவும் விருப்பமான ஒன்று!
 
 இயேசுவே கூட கடவுள் நம் பாவங்களுக்குக் கழுவாயாக அமையுமாறு நரபலியாகச் செலுத்தினார் என்று பைபிள் அறிவிக்கிறது.
 
ஆசிரியர் இதில் ஒரு கேள்வியை எழுப்புகிறார்.  ஆபிரகாம் ஈசாக்கை கடவுளுக்கு பலியிடப் போனார் அடுத்து இப்தா தன் மகளைக் கடவுளுக்குப் பலியாக்கினார்.  இந்த இரண்டிலும் பலி செலுத்த முயன்றவர்; பலிப் பொருள்; பலியைப் பெற்ற கடவுள் என்ற மூவரும் இருந்தார்கள். ஆனால்  மூன்றாவது சம்பவத்தில் கடவுள் இயேசுவை பலியாகச் செலுத்தினார். பலி செலுத்தியவர் ஆண்டவர்; இயேசு  பலிப் பொருள்.  பலியைப் பெற்றுக் கொண்டவர் யார்?  இந்த கேள்விக்கு பதில் இல்லை என்கிறார்.(39)
 
அடுத்து கிறித்துவத்தில் அதிகமாகப் புகழப்படும் தாவீது, அவரது மகன் சாலமன் பிறந்த பிறப்பை பற்றி -  அது ஒரு கேடுகெட்ட, அவலட்சணமான கதை -  ஆசிரியர் கூறுகிறார். தாவீது  தனது படை வீரன் உரியாவைக் கொன்று, அவன்  மனைவி பத்சேபா மூலம் இரண்டாவது கர்ப்பத்தின் மூலம்  ஒரு மகனைப்  பெற்றெடுக்கிறார்.(1 ராஜாக்கள் - 1 அரசர்கள் 11:1.3  )  அவன்தான் அதிபுத்திசாலி சாலமன். 
 
(ஏற்கனவே என் பழைய பதிவு ஒன்றில் ஆபிரஹாம் கதையை சுட்டிக் காண்பித்து எப்படி பெற்றோர்கள், அதுவும் பைபிள் தெரிந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆப்ரஹாம் என்ற பெயரை வைக்கிறார்கள் என்று கேட்டிருந்தேன். அதோடு இப்பொழுது தாவீது, சாலமன் என்ற இருவர் பெயரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். இருவருமே கீழ்த்தரமான மக்கள்.  ஆனால் வேத புத்தகம் சொல்வதால் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள் இது வேடிக்கையா வேதனையை தெரியவில்லை!  ஆனால் நிச்சயமாக புரிந்தவர்களுக்கு இது வேதனையாகத்தான் இருக்க வேண்டும்.) (40)
 
வேதம் என்ன சொல்கிறது என்றால், “ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபச்சாரம் செய்தால் அந்த விபச்சாரனும் அந்த விபச்சாரியும் கொலை செய்யப்படக் கடவர்கள்”. (லேவி 20;10 புரோட்டஸ்டண்ட் மொழிபெயர்ப்பு)
 
தாவீதின் இச்செயல் கடவுளின் பார்வையில் தீயதாகப் பட்டது. (2 சாமுவேல் 11:27) ஆனால் இதே தாவீது மிகவும் நல்லவர் என்றும் கடவுளின் பார்வையில் ஏற்புடையவற்றை மட்டுமே அவர் செய்தார் என்றும் பைபிள் பாராட்டுகிறது. ஆனால்  கடவுள் தவறு செய்த  ஏரோபவாம் என்பவரைக் கண்டிக்கும் போது தாவீதைப் புகழ்ந்து பேசுகிறார்.(1 ராஜாக்கள் - 1 அரசர்கள் 14:8) (41) 
 
தாவீதின் மகனும், நீதிமானாவனாகவும் கருதப்படும் சாலமன்  இதோடு விட்டு விட்டாரா என்ன? கடவுள் புறஜாதியார் பெண்களை இஸ்ரேலியர் எவரும் திருமணம் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தார்(உபாகமம் - இணைச்சட்டம் 7:3).  ஆனால் சாலமனோ ஆயிரம் புறஜாதிப் பெண்களை தன் மனைவியாக வைத்திருந்தார்.  அதில் 700 மனைவிகள்; 300 பேர் வைப்பாட்டிகள்.(1 ராஜாக்கள் - 1 அரசர்கள் 11:1-3) 
 
எஸ்ரா காலத்தில் ஆளுக்கு ஒன்று என வெறும் நூத்தி எட்டு பேர் பிற ஜாதிப் பெண்களைத் திருமணம் செய்திருந்தனர். அதற்காக கோபம் கொண்ட கடவுள், “ நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை”,  என்று தன் பிள்ளைகளுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியையும் மீறி (யோசுவா 1:5 புரோட்டஸ்டண்ட் மொழிபெயர்ப்பு)  அவர்களைக் கைவிட்டுவிட்டு எருசலேம் ஆலயத்தை விட்டு வெளியேறினார். ஆனால் ஒரே மனிதர் ஆயிரம் பிற ஜாதிப் பெண்களை வைத்திருந்த மனிதனாகிய சாலமன் மன்னர் கட்டிய கோயிலில் தான் முதன்முதலில் குடியேறினார்! (42)
 
நெபுகத்நெசரின் படையெடுப்பும் யூதர்களின் வீழ்ச்சியும்:
,
 கிமு 586ல் நெபுகத்நெசர் என்ற புறஜாதி மன்னன் இந்தியா மீது படையெடுத்து வெற்றி பெற்றான். சாலமன் கட்டிய ஆலயத்தையும் சேதப்படுத்தினர். இஸ்ரவேலர்களுக்குத் தங்கள் கடவுளின் தோல்வியை சகித்துக்கொள்ள முடியவில்லை.  ஏதேனும் காரணம் கூறலாம் என்று இறைவாக்கினர்கள் முயற்சி செய்து தடுமாறியது கீழே உள்ள வாசகங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
( ஏரேமியா - 25:6-9;  51:34;  51 36,37
எஸ்றா 9: 11-15
எசக்கியேல் 9:3;  10: 4-5; 18 , 19
எசாயா 52:8; 
சக்ரியா 8:3 (பக்கம் 46)
இந்த படையெடுப்பினால்  இஸ்ரேலிய யூதர்கள் பல நாடுகளுக்குத் தப்பி ஓடினார்கள் இவர்களைத்தான் “ காணாமல் போன ஆடுகள்” என்று புதிய ஏற்பாடு அழைக்கிறது.  எருசலேம் ஆலயம் சேதமானது; பாபிலோன் மன்னனுக்கு மக்கள் அடிமையாக்கப்உ பட்டனர்.
 
இறைவாக்கினர் எனப்பட்ட தீர்க்கதரிசிகள்: 
தாவீது மன்னனால் கட்டியெழுப்பப்பட்ட இஸ்ரேலியப் பேரரசு தம் கண் முன்னே புறஜாதியாரிடம் விழுந்து கிடப்பதைக் காண இறைவாக்கினருக்குச் சகிக்கவில்லை. (ஆமோஸ் 9:11)
கிபி 49ல்  கூடிய எருசலேம் சங்கத்தில் இச் சூழ்நிலைகளிலிருந்து மீள்வதற்குப் ”பவுல் குழுவினர்” உதவக்கூடும் என எதிர்பார்த்து தான் இயேசுவின் சகோதரரான யாக்கோபு பவுலுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினார்.(48) 
 
இஸ்ரேலிய யூதர்கள் பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த போது தங்களைச் சுற்றிலும் வாழ்ந்த புற ஜாதியர்களுடைய மதம் சார்ந்த கொள்கைகளின் சிறப்புகளைக் கண்டனர் அவற்றின் மேன்மையைப் புரிந்து கொண்டு அக்கொள்கைகளை தம் மதத்தின் புதிய கொள்கைகளாகப் பதிவு செய்தனர். (51)
 
அப்படி வந்த புதிய மாற்றங்கள்:
 
1.     மீட்பர் என்னும் மெசியாவாகிய இரட்சகர் கொள்கை  -   இது கிரேக்க மதத்தில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. (வழி, வாய்மை, வாழ்வு -  யோவான் நற்செய்தி நூல் விளக்கம்.  ஆசிரியர் ஞான.  ராபின்சன்;  பக்கம் 21)
2.         2. மெசியா ஒரு விடுதலை வீரரே தவிர அவரைக் கடவுள் என பழைய ஏற்பாடு         அறிவிக்கவில்லை.
3.     ஞானஸ்நானம் -  கிரேக்க மதம்
4.      இரண்டாம் வருகை -  பாரசீக மித்ராயிச  மதம்
5.      உயிர்த்தெழுதல் -  பாரசீக ஜொராஷ்ட்ரிய மதம்
6.      மறுவாழ்வு -               ,,              ,,                 ,,
7.     கன்னிப் பிறப்பு -         ,,              ,,                 ,,
8.     நியாயத்தீர்ப்பு -  எகிப்திய மதம். (கி.ர. அனுமந்தன், பண்டைக்கால நாகரிகங்கள், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்)
 
மேற்கொண்ட மாற்றங்கள் எவையும் கிமு 586ல்  நிகழ்ந்த பாபிலோனிய படையெடுப்புக்கு முன்னர் எழுதப்பட்டிருந்த பழைய ஏற்பாட்டு நூல்களில் இல்லை. 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

யூதர்களின் இயேசுவும், பவுலின் கிறிஸ்துவும் -- 6. (கிறித்துவ மக்களுக்கு ஒரு விண்ணப்பம்)
மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் -  இவர்களில் லூக்கா மட்டும் பிற ஜாதி கிரேக்கர்;  இயேசுவை கண்ணால் பார்க்காதவர்.
 
 நற்செய்திகள் இரண்டு வெவ்வேறு தளங்களில் இருந்து தொடங்கப்பட்டன. மத்தேயு,லூக்கா கன்னி மேரியின் கருவிலிருந்து இயேசு உருவானதை கூறித் தொடங்குவர். ஆனால் மார்க்கும், யோவானும் அதைத் தாங்கள்  அறிந்ததாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். திருமுழுக்கு என்பதிலிருந்து அவருடைய நூல்கள் தொடங்குகின்றன.(56)
 
 யூத மரபுகளில் இருந்து மாறுபட்டு பரிசுத்த ஆவி மற்றும் விசுவாசம் ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய மதம் பவுல் மூலம் கிபி 49 இல் நடந்த எருசலேம் சங்கக் கூட்டத்திற்கு பின்னரே உருவாயிற்றுபைபிள் தன்னுடைய வரலாற்று தளத்திலிருந்து விசுவாசத்தின் பாதைக்கு இப்போதுதான் தடம் மாறிப் போனது.
 
 புதிய ஏற்பாட்டில் மொத்தம் 27 புத்தகங்கள் உள்ளன. முதல் நூல் எழுதப்பட்ட காலம் கிபி 52க்குப்  பின்னர்.  இயேசு மரணம் அடைந்து சுமார் 20 ஆண்டுகள் அப்போது ஆகியிருந்தன. அதாவது கிபி 49 கூடிய எருசலேம் சங்கத்துக்கும் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய ஏற்பாட்டிலுள்ள 27 புத்தகங்களும், அவை எழுதப்பட்ட காலவரிசைப்படி பைபிளில் இடம் பெறவில்லை.
 
தற்போது புதிய ஏற்பாட்டில் வரிசைப்படுத்திக் கொள்ள முறையின்படி மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் நான்கு நூல்களும் இயேசு உயிரோடு வாழ்ந்த காலத்தில் உள்ள அவரது வாழ்க்கைச் சம்பவங்கள் ஆகும்.
அப்போஸ்தலர் நடவடிக்கைகள் அல்லது திருத்தூதர் பணிகள் நூலில் இயேசுவின் சிலுவை சம்பவத்துக்குப் பிறகு அவரது சீடர்கள் செய்த பணிகளும்
‘ அப்போஸ்தலன் ஆக இல்லாதிருந்தும் தன்னைத்தானே அப்போஸ்தலன் என கூறிக் கொண்டவர்”  எனக் குற்றம் சாட்டப்பட்ட பவுல் மற்றும் பர்னபாஸ் போன்ற அவருடைய குழுவினர் செய்த பணிகளும் எழுதப்பட்டுள்ளன.  
 
அதன்பின் பவுல் எழுதிய 14 கடிதங்கள் உள்ளன.  உண்மையில் பவுல் எழுதிய கடிதங்கள் தான் காலத்தால் முதலில் எழுதப்பட்டவையாகும். ரோமர் முதலாக எபிரேயர் முடிய  பவுல் எழுதிய கடிதங்களுக்குப் பின் இயேசுவின் சகோதரரான யாக்கோபு (James) எழுதிய கடிதம் உள்ளது. (57)
இயேசுவின் எதிரி என பொருள்படும் எதிர்க் கிறிஸ்து (anti-Christ) என்பவர், பவுல் மற்றும் அவருடைய குழுவினர் தாம் என்கிற அதிர்ச்சியான தகவலும் அவற்றில் இடம் பெற்றுள்ளது.(58)
 
 இயேசுவின் வாழ்க்கை வரலாறு:
 மத்தேயு லூக்காஇயேசுவின் தலைமுறைப் பட்டியலைத் தருகிறார்கள். (மத்.1:1-16; லூக்கா 3.23-34) இந்த இரண்டிலும் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன.
 உதாரணமாக இயேசுவின் தந்தை யோசேப்பு என கருதப்படுகிறது. யோசேப்பின் தந்தையின் பெயர் யாக்கோபு என  மத்தேயுவும் (மத் 1:16), ஏலி என 
லூக்காவும் (லூக் 3:23)  மாறுபட்டு எழுதுகின்றனர். (59)
 மத்தேயு விவரிக்கும் தலைமுறைப் பட்டியலில் 41 தலைமுறைகள் மட்டும் இருந்ததாகவும்,  லூக்காவின் பட்டியலில் 56 தலைமுறை இருந்ததாகவும் அறிவிக்கிறார்கள். 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

லூக்காவும்  அவருடைய நற்செய்தி நூலும்:
 இயேசுவை தன் கண்களால் கூட காணாதவர் லூக்கா. அவர் முன்னரே எழுதப்பட்டிருந்த மத்தேயு, மார்க்கு இரண்டையும் நன்கு படித்து தம்முடைய நூலை எழுதியதாக கூறுகிறார். (1:1-4)
 
 அவர் வசனங்களில் 350 வசனங்கள் மார்க்கு எழுதிய நூலில் உள்ளன; 325 வசனங்கள் மத்தேயு நூலில் உள்ளன. அந்த நூல்களில் இல்லாத பல விஷயங்களை தன் கொள்கைக்கு ஏற்ப மாற்றி தனது நூலில் எழுதியுள்ளார்.  மூல நூல்களில் இஸ்ரேலிய ஜாதிகளுக்கு மட்டுமே இயேசு ஆதரவாக இருந்ததாக எழுதப்பட்டிருந்த பகுதிகளை மாற்றிவிடுகிறார் அல்லது திருத்தம் செய்து கொள்கிறார்.  ஒரு உதாரணம் நல்ல சமாரியன் கதை. (60)
 
திருச்சட்டத்தில் வல்லுநர் ஒருவர் இயேசுவிடம் வந்து 10 கட்டளைகளில் எது சிறந்தது என்று கேட்டார்.  திருச்சட்டத்தில் சொல்லியிருப்பதை செய்யுங்கள் என்றும் உன் மீது அன்பு செலுத்துவது போல் உன் அயலான் மீதும் அன்பு செலுத்துவாயாக என்றும் பதில் கூறியதாக பைபிளில் உள்ளதுமத்தேயு மார்க்கு இரண்டிலும் இது உள்ளது.  அதோடு அங்கு அது முடிந்து விடுகிறது. (மத் 22:35-40; மாற்கு 12:26-34). 
 
ஆனால் லூக்கா நற்செய்தியில் திருச்சட்ட நூல் வல்லுநர் அடுத்து ஒரு கேள்வி கேட்கிறார்அதற்குப் பதில் சொல்லும் விதமாக நல்ல சமாரியன் கதையை இயேசு கூறியதாக எழுதுகிறார்இந்தக் கதை மிகவும் பிரபலமான ஒன்றாகும்இயேசுவுக்கு மிகவும் சிறந்த கிரீடத்தை வழங்குவதற்கு இக்கதையை பலரும் இன்று பயன்படுத்துவர்ஆனால் லூக்காவின் மூல நூலாகிய மத்தேயுவிலோமாற்கிலோ இது இல்லைஇதன் மூலம் இயேசுவுக்கு லூக்கா ஒரு புதிய முகவரியைக் கொடுக்கிறார்யூதர்கள் சமாரியர்களைப் புற சாதியினரைப் போல தீண்டத்தகாதவர்கள்ளகவே நடத்துவர்.  ஆனால் ஒரு யூதனாக இருந்தும் இயேசு சமாரியர் மீது அன்பு செலுத்துவதாகக் காட்டிக் கொள்வதற்கு இச்சம்பவம் லூக்காவிற்குப் பயன்பட்டது. (லூக்கா 10:29-37) .  
 
இதுபோல இன்னொரு மாற்றமும் உண்டுகானான் தேசத்துப் பிற ஜாதிப் பெண்ணை ஏசு நாயாக விரட்டியதாக மத்தேயும், மாற்கும் எழுதுவார்கள்இயேசு பிற ஜாதியார் மீது விரோதம் பாராட்டியதாக மூல நூல்களில் எழுதப் பட்டுள்ளன. (மத் 15:21-28; நாற்கு 7:24-28)ஆனால் இந்தச் சம்பவத்தை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார் லூக்கா.(61)
 
 யூதர்களின் மீது கொண்டிருக்கும் அளப்பரிய பாசத்தை தவிர்த்து விடுகிறார் லூக்கா. சமாரியர் மீதும் பிறர் மீதும் கொண்டிருந்த வெறுப்பை மறைத்து அவர்களுடன் அவர் நல்லுறவு கொண்டு உழைத்தது போலவும் தாழ்த்தப்பட்ட குழுவினருக்காக அவர் உழைத்ததாகவும் மாற்றி எழுதுகிறார்அதற்கான சில உதாரணங்கள்:
  •  ஊனமுற்றோர் மீது பரிவு 13: 10 - 13
  •  விதவைகளின் நலனில் ஈடுபாடு 7: 11 - 15  மற்றும்18: 1- 18
  •   ஏழைகளுக்காக உழைத்தல் 16: 19 - 31 மற்றும் 18: 24, 25
  •  பாவிகளை மீட்பதில் விருப்பம் 15: 11 - 31 மற்றும் 15: 8 - 10 மற்றும் 19: 1-7
  • வரிதண்டும் பாவிகளையும்ரட்சிக்கும் மனப்பான்மை 18: 9 - 14
  •  
இந்தப் புதிய தகவல்கள் மூலம் இயேசுவுக்கு ஒரு புதிய முகத்தையும் ஜாதிகளை கடந்த பொதுவான ஒரு முகவரியையும் கொடுக்கிறார்.
 
 இயேசுவை உலகுக்கு அறிமுகப் படுத்த விரும்புபவர்கள் இன்று லூக்காவின் இந்த முகவரியை இயேசுவுக்கு வழங்குகிறார்கள். ஆனால் லூக்கா இயேசுவுக்காகக் கொடுத்திருப்பது உண்மையான தகவல்கள் அல்ல. அவருடைய சீடர்கள் இத்தகவல்கள் எதுவும் இயேசுவுக்கு உரியதாக எழுதவில்லை. இயேசுவின் பெயரால் புதிய மதத்தை உருவாக்கிய போது லூக்கா இயேசுவுக்கு வழங்கியிருக்கும் இதனை அடிப்படையாகக் கொண்டுள்ளனர். ஆனால் ஏசுவின் முகம் வேறு வகையானது.(62)
 
  


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 இயேசுவின் அற்புதங்களாலேயே  மக்கள் கவரப்பட்டனர்
 
 
மாற்கு 3:8  -- “...திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களை குறித்து கேள்விப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள். ( ஆங்கிலத்திலும் புராட்டஸ்டன்ட் மொழிபெயர்ப்பிலும் ’அற்புதங்கள்’ என்ற சொல் இல்லை.)
 
மாற்கு 4:35-41  - வீசும் புயலை நிறுத்தி படகில் இருந்த சீடர்களை காப்பாற்றியது -  ”காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே ! இவர் யாரோ?”
 
சீடர்கள் கூட இயேசுவை மெசியா என அறிந்து பின்பற்றுவதற்குப் பதில் அவருடைய அற்புதங்களைக் கண்டு அவரைப் பின்பற்றினர் என அறியலாம்.
 
 இயேசு பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களிடம் உவமையில் இயேசு உரையாடிக்கொண்டிருந்தார்.  அதைக் கேள்வி கேட்ட சீடர்களிடம் ’மறைபொருள் அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறதுஅவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லைஉள்ளவருக்கு கொடுக்கப்படும்அவர் நிறைவாகப் பெறுவார்மாறாக இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் என்றார். (மத் 13;10-12)  (உள்ளவருக்குக் கொடுப்பதும், இல்லாதவரிடமிருந்து எடுக்கப்படும் என்னும் இந்தத் தத்துவம் எனக்குச் சுத்தமாகப் புரியவில்லையாரும் விளக்கினால் புரிந்து கொள்வேன்.
இரண்டாவதாக,  மறை பொருளை அவர்களுக்குப் புரியாத படி உவமைகள் மூலம் ஏன் பேச வேண்டும்பயன் என்ன?.) (64)
 
மறைபொருள் சீடர்களுக்குப் புரியும் என்றார்பாவம் .. அவர்களுக்கும்  ஏசு சொன்ன வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமை புரியவில்லை.(மத் 13:36) 
(யாருக்காகஎதற்காகமறைமுகமாகஉவமைகளோடு இயேசு பேசினார் என்பது எனக்கு ஒரு பெரிய கேள்வியாகவே இருக்கிறது)
 
மேற்கண்ட தகவல்களிலிருந்து இயேசுவை மெசியா என விசுவசித்து எவரும் அவரைப் பின்பற்றவில்லை என்பதை அறியலாம். அவருடைய சீடர்கள் கூட அவர் யார் என்பது தெரியாமலும், அவரது பேச்சு புரியாமலும், அவரது பேச்சை விசுவாசிக்காமலும் தான் அவரோடு உறவாடி இருக்கிறார்கள். ஆனால் அவர் செய்த அற்புதங்கள் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. (65)


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 Sinaiticus%2BGrey%2BEnd%2BMark%2BSept%2B


                             (Fig: 2)Columns 9, 10, 11, and 12 of the cancel-sheet
                                                           in Codex Sinaiticus.             

                        

வரலாறு மிகவும் முக்கியம், நம்பிக்கையாளர்களே!

 

பொதுவாக, எனது கிறித்துவ மதக் கட்டுரைகளை “பெரிய” நம்பிக்கையாளர்கள் வாசிப்பதில்லை. இருப்பினும் இந்தக் கட்டுரையை வாசிக்கக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், நிச்சயமாக ஒரு சாதாரண கிறிஸ்தவனுக்கு, கிறிஸ்துவ நம்பிக்கையாளனுக்கு கீழ்க்கண்டவை அனைத்துமே நிச்சயமாக மிகப் புதியதாகவும், ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கக் கூடியவைகளாகவே இருக்கும் என்று நினைக்கின்றேன். இந்த வேண்டுகோளின்படி வாசிப்பவர்கள் அனைவரும் பெரிய மனது செய்து இதில் சொல்லிய விஷயங்கள் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயங்களா  அல்லது தெரியாதவைகளா என்று மட்டும் சொன்னால் அது என் புரிதலுக்குத் துணையாக இருக்கும். 

இக்கட்டுரையில் நூலாசிரியர் மாற்கு 16:9-20 என்ற வசனங்களில் 16:8 மட்டுமே உண்மையான வசனங்கள் என்றும், 9-20 வசனங்கள் பிற்சேர்க்கை என்கிறார். அதை உறுதிப் படுத்த நானும் சில ஆய்வுகளைச் செய்தேன். ஆய்வுகளில் கிடைத்த செய்திகளை இக்கட்டுரையில் நடுவே நான் தந்துள்ளேன்.

 

இயேசுவின் திருத்தூதர்களாகிய அப்போஸ்தலர்களும் அவர்கள் செய்த பணிகளும் (65) 

இயேசு தன் அப்போஸ்தலர்கள் /திருத்தூதர்களான பன்னிருவரையும் அனுப்புகையில் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால், “நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும் காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரேல் வீட்டாரிடத்தில் போங்கள்”. (மத் 10:5,6) 

அதாவது, இயேசுவும் புறஜாதியாரிடம் போகவில்லை; தம்முடைய சீடர்களும் அவர்களிடம் சென்று பணியாற்ற இயேசு அனுமதிக்கவில்லை. ’மெசியா’ என்பவர் இஸ்ரேயலர்களுக்கு மட்டுமே சொந்தமானவர்.(66) 

நம்புகிற யூதர்களும் நம்பாத யூதர்களும்

’கிறிஸ்து’ , மற்றும் ‘கிறிஸ்தவர்’ என்னும் சொற்கள் கி.பி. 49க்குப் பின்னரே நடைமுறைக்கு வந்தன. இந்தச் சொல்லைப் பயன்படுத்தியவர், 36 வாக்கில் பைபிளில் அறிமுகமாகிற பவுல் என்பவர் ஆவார்.

இயேசுவை புற ஜாதியாருக்கும் அறிமுகப்படுத்திட வேண்டும் என்ற பவுலின் தீர்மானத்துக்குப் பின்னரே இந்த இரு சொற்களும் பயன்பாட்டுக்கு வந்தன.(67)

மெசியா செய்ய வேண்டிய பணிகளுள் எதையும் இயேசு செய்யவில்லை என்பதால் இயேசுவை மெசியா என நம்பாதவர்கள் ‘நம்பாத யூதர்கள்’ஆயினர். பழைய ஏற்பாடு அறிவிக்கும் மெசியா இன்றுவரை வரவில்லை என்றும், விரைவில் வந்து விடுவார் என்றும் இன்றுவரை அவர்கள் நம்பி காத்திருக்கிறார்கள். இன்றைய யூதர்கள் அவர்களே; அவர்களுடைய மதம் யூத மதம். அவர்களுக்கு என சொந்தமாக யெகோவா என்ற கடவுள் இருக்கிறார்.

பழைய ஏற்பாட்டு நூல்களில் யூதர்கள் இழந்த நாட்டினைத் திரும்பப் பெறுதல் என்பதே “விடுதலை” அல்லது “இரட்சிப்பு” எனப்பட்டது. ஆனால் புதிய ஏற்பாட்டில் அது ”பரலோக ராஜ்ஜியம்” என்று கடவுள் சார்ந்த விஷயமாக மாற்றப்பட்டது. (68)

அதனால் தான் இயேசு உயிரோடு எழுப்பப்பட்ட காலத்தில் கூட, தங்களுடைய நாட்டின் விடுதலை எப்போது தங்களுக்குக் கிடைக்கும் என்றுதான் அவரிடம் விசாரித்தார்களே தவிர, ”ஆன்மீக விடுதலை” பற்றி அம்மக்கள் பேசவில்லை. (அப். நட. 1:6) (69)

யூதர்களுக்கு மட்டும் மெசியாவாக இருந்த இயேசு பின்பு புறஜாதியினர் நலனில் அக்கறை கொண்டவராக மனம் மாறியதாகவும், “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் தன்னுடைய நற்செய்தியை அறிவிக்குமாறும்” தன் சீடர்களுக்கு கட்டளை இட்டதாகவும் பைபிளில் எழுதப்பட்டுள்ளது. (மாற் 16:15)  ஆனால் மாற்கு 16:9-20 வரை உள்ள 12 வசனங்கள் உண்மையானவை அல்ல என்றும், Codex Sinaiticus, Codex Vaticanus ஆகிய முக்கியமான பைபிள் பிரதிகளில் இந்த வசனம் இல்லை என்றும், பிற்காலத்தில் யாரோ எழுதி இவற்றைச் சேர்த்துள்ளனர் என்றும் அறிகிறோம். .. (இதற்கான மேல் விவரங்களுக்குக் கீழே சில இணைய தள முகவரிகளைத் தந்துள்ளேன். பழைய பைபிளின் படங்களும் 16:9-20 இல்லாத பகுதிகளும் அதில் உள்ளன. ஆனாலும் இந்த கிறித்துவ இணைய தளங்கள் இதில் கொஞ்சம் “மழுப்பு வேலை” செய்வதாகவே வாசிக்கும் போது எனக்குத் தோன்றியது.) தமிழ் புரோட்டஸ்டாண்ட் மொழி பெயர்ப்பு, கத்தோலிக்க மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் இந்த வசனங்கள் இல்லை. ஏமாந்து போன சீடர்கள் இதனால் இரண்டாம் வருகைக் கொள்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள். (யோவான் 16:20) (73) 

உடனே நடக்கும், தங்கள் வாழ்நாளிலேயே கிடைத்துவிடும் (மாற்கு 9:1; மத் 16:20) என்று சீடர்கள் நம்பியிருந்தும் இரண்டாம் வருகை இன்னும் நடைபெறவில்லை.(74)

 பவுலின் அறிமுகம் அல்லது மனமாற்றம், அப்போஸ்தலர் எனப்பட்ட திருத்தூதர்களுடன் அவர் இணைந்து பணியாற்றியது, எருசலேம் சங்கக்கூட்டம்,  பழைய ஏற்பாட்டை அவர் ரத்து செய்தது, அதனால் இயேசுவின் உண்மையான சீடர்களோடு ஏற்பட்ட மோதல், இவற்றால் எழுந்த புதிய சூழ்நிலை காரணமாக பரலோக வாழ்வு இஸ்ரேலியர்களுக்கு மட்டுமே உண்டு என இயேசுவின் சீடராகிய யோவான் நூல் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் …  இவையெல்லாம் பைபிள் வரலாற்றில் ஒரு பின் இணைப்பாகவே உள்ளன. (75)

பவுல் மனமாற்றமும் அதிலுள்ள முரண்பாடுகளும்

அப். நட. 26:12-14; அப்.நட. 9:3-7; அப்.நட. 22:9  -- இரண்டாவது வசனத்தில் கடவுளின் குரலைக்கேட்டவர்களால், மூன்றாவதாகக் கூறப்பட்டுள்ள வசனத்தில் குரலைக் கேட்க முடியாமல் போயிற்று.

யூதர்கள் இயேசுவை மெசியா என ஏற்க மறுத்துவிட்டனர். எனவே புறஜாதியாரிடமாவது அவரைப் பற்றிய பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம் என்பதே பவுலின் கொள்கையாக இருந்தது. (80)

கி.பி 49ல் எருசலேம் சங்கம் (The Council of Jerusalem) கூடி புறஜாதியினரிடம் இயேசுவைப் பிரச்சாரம் செய்யலாம் என பவுலுக்கு ஒப்புதல் வழங்கியது. அதன் பின்னரே கிறிஸ்து என்ற சொல்லை பவுல் பயன்படுத்தினார். (82)

 எருசலேம் சங்கக் கூட்டத்தில் பல விவாதங்கள் நடந்தன. அதில் யூதர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணி பேதுருவுடையது; புறஜாதியினருக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணியைத் தாமே செய்ய வெண்டும் என எருசலேம் சங்கம் முடிவு செய்ததாக பவுல் எழுதினார். (கலாத்தியர் 2:7) புற ஜாதியாருக்கு விருத்தசேதனம் தேவையில்லை என ஒரு சலுகையாக வழங்கப்பட்டது.

பின்பு பவுல் பழைய ஏற்பாடே தேவையில்லை என்று பிரச்சாரம் செய்தார். (அப்.நட. 21:20,21) இதனால் மீண்டும் பல சண்டைகளும் ஆரம்பித்தன.(87) 

புதிய ஏற்பாட்டில் 27 நூல்கள் உள்ளன. அவற்றில் 14 கடிதங்கள் பல்வேறு தரப்பினருக்கும் பவுல் எழுதியவை. இரண்டு லூக்கா எழுதியவை.  மேற்கண்ட  நூல்களில் இயேசுவை ஜாதிய எல்லைக்குள் இருந்து வெளியே மீட்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நூல்களை எழுதிய பவுலும் லூக்காவும் இயேசுவுக்கு நேரடியாக தொடர்பில்லாத அந்நியர்கள். இருவரும் அவரைப் பார்த்தது கூட இல்லை. இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி தங்கள் சொந்தக் கொள்கைகளை அவர்கள் வளர்த்துக் கொண்டார்கள்.

தாயின் வயிற்றில் இருந்தபோது என்னை தமக்கென ஒதுக்கி வைத்து தனது அருளால் என்னை அழைத்த கடவுள் என்று பவுல் எழுதியுள்ளார். (கலாத்தியர் 1:15,16) பின் ஏன் கி.பி. 36 வரை அவர் இயேசுவிற்கு எதிராக படை நடத்தினார்?

அப்.நட. 21:21-24; அப். நட. 21:26 - வசனங்கள் நமக்குப் பல செய்திகளை தருகின்றன.(90)

 

பவுல் - விருத்த சேதனம்

ஆதியாகமம் 17.9-11 - விருத்த சேதனத்தின் முக்கியத்துவத்தைப் பேசுகிறது. ஆனால் பவுல் ரோமர் (2:26-29)  உள்ளத்தால் செய்யும் விருத்த சேதனமே சிறந்தது என்கிறார்.                             மேலும் கலாத்தியர் (5:2) - விருத்தசேதனம் செய்து கொண்டால் கிறிஸ்துவால் உங்களுக்குப் பயனே இல்லை என்கிறார்.

தம் பணிக்கு இடையூறாக இருந்த விருத்தசேதனம், மோசேயின் சட்டம் மற்றும் பழைய ஏற்பாட்டை ரத்து செய்தால் மட்டுமே பிறகு ஜாதியினரிடம் இயேசுவை பிரச்சாரம் செய்வது சாத்தியமாகும் என அவர் கருதினார். இந்த மாற்றத்தை அவரால் நிறைவேற்றவும் முடியவில்லை.ஆனால் மற்றொரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்தார். மெசியாவை கிறிஸ்துவாக மாற்றினார். (93)

 

கிரேக்கத்தில் “கிறிஸ்டோஸ்” (Christos) என்ற சொல் ஜாதிகளைத் தாண்டிய “எல்லோருக்கும் ஏற்புடைய கடவுள்” என்ற பொருள் கொண்டதாகும். இயேசுவை’கிறிஸ்து; என்று அறிமுகம் செய்தார். இதற்கு சீடர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது.ரோமர் 1:2-5 வசனங்கள் மூலம் ஒரு சமரச ஏற்பாட்டிற்கு முயன்றார்.

 

இயேசு தன் இறப்பிற்குப் பின் கிறிஸ்து ஆகி விடுகிறார். அவரே அனைவருக்கும் உரியவர். “கிறிஸ்துவுக்கே தாம் பணியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறேனே தவிர, மெசியாவுக்கல்ல என்று பவுல் தெளிவாகக் கூறுகிறார். தனது நற்செய்தியிலும் இயேசுவின் சாதனை, போதனை பற்றி பவுல் பேசமாட்டார். இயேசுவின் மரணத்திலிருந்து தான் தொடங்குவார்.  தமக்கு  எதிராகப்   பிரிந்துள்ளவர்களிடம் வன்முறைப் பிரயோகம் செய்யவும் தயங்க மாட்டேன் என்று கூறினார்.(1 கொரிந்தியர் 4:21) (96)    

 

இயேசு மரணத்திற்குப் பின் கிறிஸ்துவாக மாறினார். அந்த இரண்டாவது இயேசுவே தம்முடைய இயேசு என்று பவுல் தெளிவுபடுத்தினார். (2 கொரிந்தியர் 11:4,5)                              

 

******

மாற்கு 16:9-20 பற்றிய சில கட்டுரைகளின் இணைய தள முகவரிகள்:

http://www.curtisvillechristianchurch.org/MarkOne.htm  - 

Codex Vaticanus does not contain Mark 16:9-20 but following Mark 16:8 and preceding Luke 1:1 it contains prolonged blank space, including an entire blank column. (Fig:1)

 

IMAG0004.jpg

                                         (Fig:1) இப்படத்தில் 16:8 வசனங்களுக்குப் 

                     பின் சில வெற்றிடங்கள் உள்ளன.

 

Sinaiticus%2BGrey%2BEnd%2BMark%2BSept%2B

(Fig: 2)Columns 9, 10, 11, and 12 of the cancel-sheet
in Codex Sinaiticus
.

http://apologeticspress.org/apcontent.aspx?category=13&article=704

One textual variant that has received considerable attention from the textual critic concerns the last twelve verses of Mark. Much has been written on the subject in the last two centuries or so. Most, if not all, scholars who have examined the subject concede that the truths presented in the verses are historically authentic—even if they reject the genuineness of the verses as being originally part of Mark’s account

********

https://www.thegospelcoalition.org/article/was-mark-16-9-20-originally-mark-gospel/  

 For example, between 16:8 and 16:9, the ESV includes these words: “Some of the earliest manuscripts do not include 16:9–20.”

Christians have known for centuries that Mark 16:9–20 might not have originally been part of Mark’s Gospel.

One brother in Christ, a monk named Ephraim who lived in the 900s, we still have several manuscripts he made. Some still have his signature. We can identify others by his handwriting and craftsmanship. Ephraim wasn’t the original author of these particular words. He regularly copied marginal notes that were already in the manuscripts he was using, and this note was one of them. And Ephraim’s manuscript isn’t the only copy of Mark that has this note between 16:8 and 16:9. There are at least 11 others in Greek. The note probably predates 10th-century Ephraim by a few hundred years.

One important fourth-century Old Latin manuscript has a short addition after verse 8 and then ends without verses 9 to 20. A valuable Old Syriac manuscript from the fourth century also ends Mark at 16:8. A Sahidic Coptic manuscript (probably from the fifth century) ends Mark’s Gospel at 16:8 as well. In 1937, E. C. Colwell identified 99 Armenian manuscripts of Mark (of 220 surveyed) ending at 16:8, and a further 33 containing 16:9–20 but with notes expressing doubt about the verses’ authenticity.

****** 

புதிய ஏற்பாடு எழுதப்படுதல்

கி.பி. 52 வாக்கில்தெலோனிக்கருக்கு தம் முதல் கடிட்தத்தை பவுல் எழுதினார். காலத்தால் முதலில் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டு நூல் இதுவே. அதனைத் தொடர்ந்து தம்முடைய 14 கடிதங்களையும் பவுல் கி.பி. 65க்குள் எழுதி முடித்து விட்டார். ஆனால் இயேசுவின் திருத்தூதர்களோ அல்லது மற்றவர்களோ, இதுவரை புதிய ஏற்பாட்டு நூல்கள் எதனையும் எழுதத் தொடங்கிருக்கவில்லை.

பவுலின் நூல்களில் மூன்று விஷயங்கள் தெளிவாக அழுத்தம் விட்டிருந்தன: 

·         விருத்த சேதனம்,  திருச்சட்டம்,  பழைய ஏற்பாடு ஆகியவை தேவையில்லை. (அப். நட.21:28; ரோமர் 10:4; மற்றும் 7:6) 

·         உயிரோடு வாழ்ந்த காலத்தில் இயேசுவில் தூய ஆவி இல்லை. அவர் மரணம் அடைந்த பின்னரே அவரில் பரிசுத்த ஆவியாகிய தூய ஆவி இறங்கியது. அதனாலேயே அவர் மரணத்திலிருந்து மீண்டும் உயிரோடு எழுந்தார். (2 திமோத்தேயு 2:8,9;  மற்றும் 2 கொரிந்தியர் 11:4,5; மற்றும் 5:15,16) 

·         இயேசுவை ’கிறிஸ்து’ எனவும், மரணத்துக்குப் பின் கிறிஸ்துவாக மாறிய பின்னரே அவர் அனைவருக்கும் உரிய கடவுள் ஆனார் என நிறுவினார். (1 கொரி 2;2) 

இக்கொள்கைகளை உண்மையான சீடர்கள் மறுத்தனர். இதனால் அவர்கள் நற்செய்தி நூல்களை எழுதினர். கி.0இ. 66ல் மாற்கு முதலாவதாக எழுதினார். லூக்காவைத் தவிர ஏனைய 3 பேர்களும் பவுலுக்குப் பதில் சொல்லுவதற்காகவே நூல்கள் எழுதினார்கள். அப்பதில்களில் முக்கியமானவை:

 

  1. 1.    மத் 5:17-19 - உலகம் அழியும்வரை பழைய ஏற்பாடு அழியாது என்றும், பவுலின் பிரச்சாரம் இயேசுவின் கொள்கைகளுக்கு மாறானது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.(98)
  2. 2.    எசாயா 7:14 இந்த இறைவாக்கு கி.மு. 700 யூதேயா நாட்டு ஆகாஸ் மன்னனுக்காகச் சொன்னது. மெசியாவிற்கு உரியதல்ல. ஆனால் இதை அவ்வாறு மாற்றி எழுத சீடர்கள் துணிந்தனர். இதனால், இயேசுவின் பிறப்பின் மீதுள்ள மர்மம் நீங்கும்; பிறக்கும்போதே இயேசுவின் பரிசுத்த ஆவி இருந்ததாக நிறுவ முடியும். இயேசு பிறந்ததும், திருமுழுக்கு பெற்ற பொது அவரில் பரிசுத்த ஆவி இறங்கியதாகவும் மத்தேயு எழுதுகிறார். (மத் 1:18; மத் 3:16)
  3. 3.    இயேசுவே மெசியா, கிறிஸ்து அல்ல என்றனர் சீடர்கள். (99) மத் 10:5,6; யோவான் 4:6-9; யோவான் 4:16-18; மத் 15:25;  மத் 15:24; போன்ற வசனங்கள் இயேசு சமாரியர்களை வெறுத்தார் எனவும், இஸ்ரேயலியர்களுக்காகவே கடவுளால் அனுப்பப்பட்டிருப்பதை வலியுறுத்தவே இந்த வசனங்கள்.(101) 

 

திருத்தூதர்கள் என்னும் அப்போஸ்தலர்கள் பன்னிரண்டு பேர் மட்டுமே. இருந்தும் பவுல் தன்னைத்தானே அப்போஸ்தலர் என அறிவித்துப் பலருக்கும் கடிதம் எழுதுகிறார். அக்கடிதங்களின் முதல் அதிகாரத்தின் இரண்டு வசனங்களைப் படித்தால் அவர் தம்மை ஒரு திருத்தூதனாக முன்னிலைப்படுத்தியிருப்பதைக் காணலாம். (103) இந்தக் காரியத்தை வைத்து யோவானும் பவுலும் தங்கள் எழுத்துகள் மூலம் பொருதிக்கொள்கிறார்கள் என்பதற்கான அத்தாட்சி திருவெளிப்பாடு 2:2; 1 கொரிந்தியர் 9:2 என்பதில் இருப்பதை நூலாசிரியர் விளக்குகிறார். (104)



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பைபிள் கருத்துகள்

ஓர் அலசல்

 

பெண்ணடித்தனம்:

கலாத்தியர் 3:28 -’ஆண் பெண் வேறுபாடு இல்லை” என்று கூறியிருந்தாலும் ஆண்களுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்றே பைபிள் போதிக்கின்றது. (105)

கலாத்தியர் 4:30 - அடிமைப் பெண் உரிமைப் பெண்ணின் பங்காளியாக இருக்கக் கூடாது.

1 திமொத்தேயு 2:11-14 - முதலில் உண்டாக்கப்பட்டது ஆதாம்; பிறகுதான் ஏவாள்.

இயேசுவுக்கு நெருக்கமாக இருந்த பணியாற்றியது பெண்களே. அவர் சிலுவையில் இறந்ததும் ஆண் சீடர்கள் தத்தம் தொழிலுக்குத் திரும்பி விட்டனர்.(யோவான் 2:2,3)சிலுவையில் அடியில் தொடர்ந்து இருந்தவர்களும், மூன்றாம் நாள் கல்லறைக்குச் சென்று முதலில் பார்த்தவர்களும் பெண்களே. ஆனால் ஒரு பெண்ணைக் கூட தன் அப்போஸ்தலர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கவில்லை. பரலோக ராஜ்ஜியத்தில் நீதிபதிகள் நியமிக்கப்பட்ட போது பெண்களுக்கு அங்கு இடம் கொடுக்கவில்லை. (மத்தேயு 19:28)

சாத்தானும் பரிசுத்த ஆவியும்:

கி.மு. 586க்கு முன்னால் “பரிசுத்த ஆவி” என்ற சொல் பழைய ஏற்பாட்டில் இல்லை.

புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள “the Spirit of God” என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.(107)

கி.மு.586க்குப் பிந்தைய நூலாசிரியர்கள் தான் சாத்தானை நமக்கு அறிமுகப்படுத்தியவர்கள். … சாத்தான் பற்றிய கொள்கை பாரசீக ஜொராஸ்ட்ரிய மதத்திலிருந்து பெறப்பட்டதாகும். (108)

பழைய ஏற்பாட்டில் சாத்தானுக்கும் கடவுளுக்கும் பகைமை இருந்ததாக எந்தத் தகவலும் இடம் பெறவில்லை. கடவுள் நடத்தும் அரசாங்கத்துக்குரிய படைவீர்ர்களாக வானதூதர்கள் (Commander of the army of the Lord) இருந்ததை அறிகிறோம்.(யோசுவா 5:14)

கிருபையும் செயல்களின்படி அமைகின்ற வினைப்பயனும்:

பைபிளில் கிருபை - mercy - என்ற சொல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆதியாகமக் 17:7 - ஆபிரகாம் சந்ததியினருடன் அவர் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி எல்லாக் காலத்திலும் அவருடைய சந்ததியினாருக்கு மட்டுமே அவர் கடவுளாக இருப்பார்.

புதிய ஏற்பாட்டு பவுலுக்கு   இயேசுவை புறஜாதியாரிடம் எடுத்துச் செல்ல முடியாத நிலையில், … பவுலுக்குக் கிடைத்த ஒரு புதிய வழிமுறைதான் “கிருபை” என்னும் பேரிரக்கம்.

புறஜாதியாரைப் பழி வாங்க வேண்டும் என்ற கொள்கையுடையவர் அக்கடவுள். (எரோமியா 51:24;  செப்பானியா 3:19) இந்நிலையில், புறஜாதியினரை எப்படியாவது அவருடைய் பக்தர்கள் ஆக்கிவிட வேண்டும் என்னும் நோக்கத்தில் புனையப்பட்டதே இந்த ‘இரக்கம்’. (111) இச்சொல் மதம் மாற்றுவதற்குத் தேவைப்பட்ட சொல்லே தவிர வேறல்ல.

இயேசுவின் இரத்தமும் பாவ மன்னிப்பும்:

காயின் ஆபேலைக்கொன்ற பிறகு நோது நாட்டுக்குச் சென்று அங்கே ஒரு பெண்ணை மணந்து கொண்டான். அவர்களுக்கு ஏனொக்கு என்ற பிள்ளை பிறந்தது. அப்படியானால், ஆதாம் ஏவாள் தவிர்த்து பூமியில் பிற நாடுகள் இருந்தன. அங்கு எண்ணற்ற மக்களும் இருந்துள்ளனர். இவர்கள் யாரும் பைபிளின் கடவுளல் படைக்கப்பட்டிருக்க முடியாது. ஆதாம் ஏவாளின் சந்ததியின் இருபதாவது தலைமுறையில் இஸ்ரவேலர் தோன்றினார். இஸ்ரவேலின் சந்ததியர்களே இஸ்ரேயலியர்களாக, யூதர்களாக, 12 ஜாதியினராக ஆனார்கள். ஏனையோர் புறஜாதியினர்.  …தேவன் தம்முடைய வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்னினார். (அப். நட். 13:23) (113)

பரலோக ராஜ்ஜியமும் புறஜாதியாரும்:

கி.மு. 586-ல் யூதேயா நாடு பாபிலோன் மன்னனாகிய நெபுகாத் நெசாருக்கு அடிமையாகிப் போனது. அதனால் அவர்களுடைய கடவுளால் எருசலேமில் குடியிருக்க முடியாமல் போயிற்று. (!!!!)  (எசேக்கியல் 19:4,19,19) (115)

இதன்பின் கி.மு. 538-ல் பாரசீகர்களுக்கும், கி.மு. 332-ல் கிரேக்கர்களுக்கும், கி.மு. 142-ல் ஹாஸ்மோனியர்களுக்கும், கி.மு. 63-ல் ரோமானியர்களுக்கும் என மாறிமாறி யூதநாடு புறஜாதியினருக்கு அடிமையானது.

இதன் பின்னால் நடக்கப் போகும் நிகழ்வுகள் பற்றி யோவானுக்கு ஒரு தரிசனம் மூலமாகக் கடவுள் முன்னறிவித்ததாக எழுதப்பட்டுள்ளது. அதில் அரியாசனத்தில் இருக்கும் கடவுள் வீற்றிருந்தார். … பரலோக ராஜ்ஜியத்துக்கும்ப் போவதற்குத் தகுதியுடையவர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்று கடவுளிடம் இருந்தது. 1,14,000 பேர்களின் பெயர்கள் மட்டுமே அதில் எழுதப்பட்டிருந்தன. அனைவரும் இஸ்ரேயலர்களின் 12 ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஜாதிக்கும் 12,000 பேர்கள்.(திருவெளிப்பாடு 7:4-8) அப்போ புறஜாதியினரான நமக்கெல்லாம் அங்கே இடமே இல்லையா? அவர்கள் … புதுப்பாட்டைப் பாடினார்கள். அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும்கற்றுக் கொள்ளக் கூடாதிருந்தது. (திருவெளிப்பாடு 14:3)

திருவிளையாடல் படத்தில் தருமி “அய்யோ.. ஆயிரம் பொன்.. எனக்குக் கிடைக்காதா என்று அங்கலாய்த்து அரற்றுவார். அதைப் போல் தான் புறஜாதி மக்கள் அனைவரும் அரற்ற வெண்டும் போலும். ஏனெனில் 

1.பரலோக ராஜ்யம் 1,44,000 யூதர்களுக்கு மட்டும் தான் என்று திருவெளிப்பாட்டில்(பைபிளில்) கூறப்பட்டுள்ளதே. அதையும் கிறித்துவ மக்கள் கண்டு கொள்வதில்லை.

தேவ வாக்கியம் பொய்யாகுமா?

2. இயேசு இஸ்ரேயலர்களுக்காக மட்டும் வந்ததாகப் பல இடங்களில் வேதாகமத்தில் சொல்லியுள்ளது. அதையும் கிறித்துவ மக்கள் கண்டு கொள்வதில்லை.

3. வரலாற்று பூர்வமாக கிறித்துவ மதத்தின் ஆரம்ப காலங்களில் நடந்த மாற்றங்கள் , திரிபுகள் பற்றி விளக்கமான ஆய்வறிக்கை கொடுத்தாலும்  ... அதையும் கிறித்துவ மக்கள் கண்டு கொள்வதில்லை.

சிறு வயதில் கொடுக்கப்பட்ட விசுவாசத்தைக் கை  விடாமல் பயணிக்கும் வழியைப் பற்றி ஆயிரம் ஆய்வுகள் கொட்த்தாலும்  ...அதையும் கிறித்துவ மக்கள் கண்டு கொள்வதில்லை.

*******

 

 

 

scanner_20191117_163620.jpg
 

இந்த நூலின் கருத்துரைகள் இப்பதிவோடு முடிவடைகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இயேசு, யூதர்களின் அரசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
 
Jump to navigationJump to search
 
இயேசு, யூதர்களின் அரசர் என்பதன் மூன்று மொழிகளின் சுருக்கம்

இயேசு, யூதர்களின் அரசர் என்ற தலைப்பு இயேசுவின் வாழ்வின் ஆரம்பத்திலும் முடிவிலும் குறிப்பிடப்பட்டுவதனை புதிய ஏற்பாட்டில் காணலாம்.

புதிய ஏற்பாட்டில் இத்தலைப்பின் பயன்பாடு வியத்தகு முடிவுகளுக்கு இட்டுச் சென்றுள்ளது. மத்தேயு நற்செய்தி குறிப்பிடும் இயேசுவின் பிறப்பில், கிழக்கில் இருந்து வந்த ஞானிகள் இயேசுவை "யூதர்களின் அரசர்" என்று குறிப்பிட்டதால், ஏரோது அரசன் குழந்தைகள் படுகொலைக்கு உத்தரவிட்டார். நான்கு நற்செய்திகளின் முடிவிலும் குறிப்பிடப்படும் இயேசுவின் பாடுகளின் விபரிப்பில், "யூதர்களின் அரசர்" என்ற தலைப்பு இயேசுவின் சாவுக்கு வழிவகுக்கிறது.[1][2]

"இயேசு, யூதர்களின் அரசர்" என்பது "INRI" (இலத்தீன்Iēsus Nazarēnus, Rēx Iūdaeōrum) என இலத்தின் எழுத்துக்களின் சுருக்கமாக பயன்படுத்தப்படுகின்றது. இதனை மொழிபெயர்க்கும்போது, "நசரேனாகிய இயேசு, யூதர்களின் அரசர்" என வழங்கப்படும். இது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மூன்று மொழிகளில் இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது எழுதப்பட்டதாக யோவான் நற்செய்தி (19:20) குறிப்பிடுகிறது. கிரேக்கத்தில் இது "ΙΝΒΙ" (Ἰησοῦς ὁ Ναζωραῖος ὁ Bασιλεὺς τῶν Ἰουδαίων) எனக் குறிப்பிடப்படுகின்றது.[3]

புதிய ஏற்பாட்டில், "யூதர்களின் அரசர்” என்ற தலைப்பு யூதர் அல்லாதவர்களால் பயன்படுத்தப்பட்டது. அவர்கள் முறையே விவிலிய ஞானிகள், பொந்தியு பிலாத்து மற்றும் உரோமப்படைவீரர்கள். யூதத் தலைவர்கள் "இசுரேலின் அரசர்" என்பதையே பயன்படுத்தினர்.[1]

இதனையும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. ↑ இங்கு மேலே தாவவும்:1.0 1.1 The Gospel of Matthew by R. T. France 2007 ISBN 0-8028-2501-X page 1048
  2.  Studies in Early Christology by Martin Hengel 2004 ISBN 0-567-04280-4 page 46
  3.  Metamorphosis: the Transfiguration in Byzantine theology and iconography by Andreas Andreopoulos 2005 ISBN 0-88141-295-3 page 26


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கிறிஸ்து பெயராக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 
 
 
Jump to navigationJump to search
 
"அனைத்தையும் ஆள்பவர்" (ஆண்டவர்) என்னும் பெயர்கொண்டு இயேசு அழைக்கப்படுகிறார். இக்கீழைத் திருச்சபைப் படிமத்தில் IC XC என்னும் கிரேக்க எழுத்துக்கள் கொண்ட பெயராக்கம் இயேசுவின் தலைக்கு இடமும் வலமும் உள்ளன

கிறிஸ்து பெயராக்கம் (Christogram) என்பது இயேசு கிறிஸ்துவின் பெயரைக் குறிக்க ஒன்று அல்லது பல எழுத்துக்களை இணைத்து உருவாக்கப்படுகின்ற கிறித்தவ அடையாளம் ஆகும்[1]. வெவ்வேறு கிறித்தவ சபைகள் வெவ்வேறு அடையாளங்களைக் கொண்டு இயேசு கிறித்துவைக் குறிப்பிடுகின்றன. எடுத்துக்காட்டாக, IHS என்னும் பெயராக்கம் இயேசுவின் திருப்பெயரைக் குறிக்கவும், ICXC என்னும் பெயராக்கம் கிறிஸ்துவைக் குறிக்கவும் பயன்படுகின்றன.

கீழைத் திருச்சபை[தொகு]

கீழைத் திருச்சபையில் மிகப் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படும் கிறிஸ்து பெயராக்கம் "ICXC" என்னும் கிரேக்க வடிவம் ஆகும். இது "இயேசு கிறிஸ்து" என்னும் பெயரின் சுருக்கம் ஆகும். இது ΙΗΣΟΥΣ ΧΡΙΣΤΟΣ ("IHCOYC XPICTOC") (Iesous Christos) என்னும் இரு கிரேக்க சொற்கள் ஒவ்வொன்றின் முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் கொண்டு ஆக்கப்பட்டது. திருப்படிமங்களில் இப்பெயராக்கம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, படிமத்தின் இடப்புறம் "IC", வலப்புறம் "XC" என்று எழுதப்படுவதுண்டு. இது புனிதம் நிறைந்த பெயர் என்பதைக் குறிக்க எழுத்துகளின் மேல் கோடு இடுவது வழக்கம்.

இப்பெயர் "இயேசு கிறிஸ்து வெல்கிறார்" என்னும் பொருளைக் குறிக்க "ICXC NIKA" என்று எழுதப்படுவதும் உண்டு. இயேசு கிறிஸ்துவை "ஆண்டவர்" எனச் சித்தரிக்கும் கீழைச் சபைப் படிமங்களில் அவருடைய வலது கை விரல்கள் IC, X, C எனக்குறிப்பன போல எழுதப்படுவது வழக்கம்.

மேலைக் கிறித்தவம்: "IHS" அடையாளம்[தொகு]

 
கதிரவனைப் பின்னணியில் கொண்ட இயேசுவின் திருப்பெயரைக் குறிக்கும் "IHS" பெயராக்கம்

இலத்தீன் மொழி மரபைச் சார்ந்த மேலைக் கிறித்தவ சபைகளிடையே, நடுக்கால ஐரோப்பாவில் தொடங்கி இன்றும் கத்தோலிக்கர் மற்றும் புரட்டஸ்தாந்து சபையினர் நடுவில் வழக்கமாக "IHS" அல்லது "IHC" என்னும் கிறிஸ்து பெயராக்கம் பயன்படுகிறது. இந்த எழுத்துகள் "இயேசு"வைக் குறிக்கும் கிரேக்கப் பெயரின் முதல் மூன்று எழுத்துகள் ஆகும். அவை "அயோட்டா-ஏட்டா-சிக்மா" (iota-eta-sigma) என்னும் மூன்று எழுத்துகள்.

கிரேக்கத்தில் "அயோட்டா" எழுத்து "I" எனவும், "ஏட்டா" எழுத்து "H" எனவும், "சிக்மா" எழுத்து பிறைவடிவில் "C" என்றோ அல்லது சொல்லிறுதியில் வரும்போது "S" என்றோ எழுதப்படும். இலத்தீன் அரிச்சுவடியில் "I" என்னும் எழுத்தும் "J" என்னும் எழுத்தும் 17ஆம் நூற்றாண்டுவரை முறையாக வேறுபடுத்தப்படாதிருந்ததால், "JHS", "JHC" எனும் வடிவங்களும் "IHS", "IHC" எனும் வடிவங்களும் தம்முள் இணையானவையே.

"IHS" என்னும் கிறிஸ்து பெயராக்கத்தை "Iesus Hominum Salvator" என்னும் இலத்தீன் சொற்றொடரின் சுருக்கமாகக் கொண்டு விளக்குவதும் உண்டு. இச்சொற்றொடருக்கு "இயேசு மனிதரின் மீட்பர்" என்பது பொருள். மேலும் "IHS" என்னும் கிறிஸ்து பெயராக்கத்திற்கு "In Hoc Signo" என்னும் இலத்தீன் விளக்கம் தருவதும் உண்டு. இதற்கு "இந்த அடையாளத்தின் வழியாக" ("In This Sign") என்பது பொருள். மன்னன் காண்ஸ்டன்டைன் தம் எதிரிகளை எதிர்த்துப் போரிட்டபோது அவர் சிலுவை அடையாளத்தைக் கொடியாகக் கொண்டுசென்று போரிட்டால் வெற்றியடைவார் என்று ஒரு காட்சியில் அறிந்ததாக ஒரு கதை உண்டு. அக்கதையின் பின்னணியில் தரப்படும் விளக்கமே "இந்த அடையாளத்தின் வழியாக" என்பதாகும்[2]. இத்தகைய விளக்கங்களைப் "பிற்பெயராக்கங்கள்" (backronyms) என்பர்.

இயேசுவின் பெயரைக் குறிக்கும் "IHS" என்னும் பெயராக்கம் மக்களிடையே பரவ புனித சீயேனா பெர்னார்தீனோ (Saint Bernardino of Siena) முக்கிய பங்களித்தார். சூரியனைப் பின்னணியாகக் கொண்டு இப்பெயராக்கம் செய்து, இயேசு என்னும் பெயர் அனைத்திலும் சிறந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

பின்னர், இயேசுவின் பெயரைக் குறிக்கும் "IHS" என்னும் பெயராக்கத்தை இயேசு சபையினர் தமதாக்கி, அது உலகெங்கும் பரவ வழிகோலினர்.

இயேசுவைக் குறிக்கும் INRI அடையாளம்[தொகு]

இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது பிலாத்துவின் கட்டளைப்படி சிலுவையில் ஒரு குற்ற அறிக்கை எபிரேயம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளில் எழுதிவைக்கப்பட்டது. இலத்தீன் தொடர் "Iesous Nazarenus Rex Iudaeorum" என்றிருந்தது. அதன் சுருக்கச் சொல்லாக்கம் INRI என வரும் அதன் பொருள்: நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் என்பதாகும் (காண்க: யோவான் 19:19). இப்பெயர் வழக்கமாக இயேசுவைத் தாங்கும் சிலுவையில் எழுதப்பட்டிருக்கும்[3].

இயேசுவைக் குறிக்கும் ☧ அடையாளம்[தொகு]

இயேசுவுக்குத் "திருப்பொழிவு பெற்றவர்" என்னும் சிறப்புப் பெயர் விவிலியத்தில் உண்டு. அது எபிரேயத்தில் "மெசியா" எனவும் கிரேக்கத்தில் Christos எனவும் வரும். இக்கிரேக்கச் சொல்லில் உள்ள "கி" (Chi), "றோ" (Rho) என்னும் முதல் இரு எழுத்துக்களும் கிரேக்கத்தில் முறையே "X" எனவும் "P" எனவும் எழுதப்படும். இவ்வாறு ☧ (XP) என்னும் அடையாளம் "கிறிஸ்து" (திருப்பொழிவு பெற்றவர்) என்னும் பொருளில் இயேசுவுக்கு அடைமொழியாயிற்று.

இயேசுவைக் குறிக்கும் "மீன்" (ΙΧΘΥΣ) அடையாளம்[தொகு]

கிரேக்க மொழியில் "இக்துஸ்" (ΙΧΘΥΣ, ἰχθύς = ikhthús, ichtus) என்னும் சொல் "மீன்" என்று பொருள்படும். இந்த கிரேக்கச் சொல்லில் அடங்கியுள்ள ஐந்து எழுத்துகளையும் தனித்தனியே பிரித்து அவை ஒவ்வொன்றும் தனித்தனிச் சொற்களின் முதல் எழுத்துக்கள் என்று கொண்டு விளக்கம் அளிப்பது வழக்கம்[4]. அதன் விவரம் இதோ:

  • (I, Iota) : ΙΗΣΟΥΣ (Iêsoûs) « இயேசு » ; (= எபிரேய மொழியில் "மீட்பர்").
  • (KH, Khi) : ΧΡΙΣΤΟΣ (Khristòs) « கிறிஸ்து » ; (= கிரேக்க மொழியில் "திருப்பொழிவு பெற்றவர்")
  • (TH, Thêta) : ΘΕΟΥ (Theoû) « கடவுளின் » ;
  • (U, Upsilon) : ΥΙΟΣ (Huiòs) « மகன் » ;
  • (S, Sigma) : ΣΩΤΗΡ (Sôtếr) « மீட்பர் ».

இயேசுவைக் குறிக்கும் அகர னகர எழுத்துக்கள்[தொகு]

கிரேக்க மொழியின் முதல் எழுத்து ஆல்ஃபா (Alpha) et எனவும் இறுதி எழுத்து ஒமெகா (Omega) என்றும் பெயர் கொண்டுள்ளன. அவற்றை α - ω என்று சிறிய எழுத்திலும் A - Ω என்று பெரிய எழுத்திலும் குறிப்பர். இயேசுவே அனைத்தின் முதலும் நிறைவும் (தொடக்கமும் முடிவும்) என்னும் பொருளில் அவரை ஆல்ஃபாவும் ஒமெகாவும் (அகரமும் னகரமும்) என்பது கிறித்தவ வழக்கம்[5].

அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே (திருவெளிப்பாடு 22:13)

படத்தொகுப்பு[தொகு]

ஆதாரங்கள்[தொகு]



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

Christogram

From Wikipedia, the free encyclopedia
 
 
 
Jump to navigationJump to search
 
Chrismon
 
Chi-Rho symbol with Alpha and Omega on a 4th-century sarcophagus (Vatican Museums)

Christogram (Latin Monogramma Christi[1]) is a monogram or combination of letters that forms an abbreviation for the name of Jesus Christ, traditionally used as a religious symbol within the Christian Church.

One of the oldest Christograms is the Chi-Rho (☧). It consists of the superimposed Greek letters chi (Χ) and rho (Ρ), which are the first two letters of Greek χριστός "Christ". It was displayed on the labarum military standard used by Constantine I in AD 312. The IX monogram (Christliche Symbolik (Menzel) I 193 4.jpg) is a similar form, using the initials of the name Ἰησοῦς (ὁ) Χριστός "Jesus (the) Christ", as is the ΙΗ monogram (IH Monogram with iota and eta superimposed.jpg), using the first two letters of the name ΙΗΣΟΥΣ "JESUS" in uppercase.

There were a very considerable number of variants of "Christograms" or monograms of Christ in use during the medieval period, with the boundary between specific monograms and mere scribal abbreviations somewhat fluid.

The name Jesus, spelt "ΙΗΣΟΥΣ" in Greek capitals, has the abbreviations IHS (also written JHS, IHC, or ΙΗΣ), the name Christus , spelt "ΧΡΙΣΤΟΣ", has XP (and inflectional variants such as IX, XPO, XPS, XPI, XPM). In Eastern Christian tradition, the monogram ΙϹΧϹ (with Overline indicating scribal abbreviation) is used for Ἰησοῦς Χριστός in both Greek and Cyrillic tradition.

Middle Latin term for abbreviations of the name of Christ is chrisimus.[2] Similarly, Middle Latin crismonchrismon refers to the Chi Rho monogram specifically.[3]

Chi (Χ)[edit]

In antiquity, the cross, i.e. the instrument of Christ's crucifixion (cruxstauros), was taken to be T-shaped, while the X-shape ("chiasmus") had different connotations. There has been scholarly speculation on the development of the Christian cross, the letter Chi used to abbreviate the name of Christ, and the various pre-Christian symbolism associated with the chiasmus interpreted in terms of "the mystery of the pre-existent Christ".[4]

In Plato's Timaeus, it is explained that the two bands which form the "world soul" (anima mundi) cross each other like the letter chi, possibly referring to the ecliptic crossing the celestial equator.[5]

Justin Martyr in the 2nd century makes explicit reference to Plato's image in Timaeus in terms of a prefiguration of the Holy Cross.[6] An early statement may be the phrase in Didache, "sign of extension in heaven" (sēmeion epektaseōs en ouranōi).[4]

An alternative explanation of the intersecting celestial symbol has been advanced by George Latura, claiming that Plato's "visible god" in Timaeus is the intersection of the Milky Way and the Zodiacal Light, a rare apparition important to pagan beliefs. He said that Christian bishops reframed this as a Christian symbol.[7]

The most commonly encountered Christogram in English-speaking countries in modern times is the Χ (or more accurately, the Greek letter chi), representing the first letter of the word Christ, in such abbreviations as Xmas (for "Christmas") and Xian or Xtian (for "Christian").

Chi Rho (ΧΡ)[edit]

 
Chi Rho combined with Alpha and Omega, in 1669 labelled Chrismon Sancti AmbrosiiMilan Cathedral.[8]

The Alpha and Omega symbols may at times accompany the Chi-Rho monogram.[9] Chrismon (chrismum; also chrismos, chrismus) since the 17th century has been used as a New Latin term for the Chi Rho monogram.

Because the chrismon was used as a kind of "invocation" at the beginning of documents of the Merovingian period, the term also came to be used of the "cross-signatures" in early medieval charters.[10] Chrismon in this context may refer to the Merovingian period abbreviation I. C. N. for in Christi nomine, later (in the Carolingian period) also I. C. for in Christo, and still later (in the high medieval period) just C. for Christus.[11]

St Cuthbert's coffin (late 7th century) has an exceptional realisation of the Christogram written in Anglo-Saxon runes, as ᛁᚻᛋ ᛉᛈᛋ, as it were "IHS XPS", with the chi rendered as the eolh rune (the old z or algiz rune) and the rho rendered as the p-rune.

IHS[edit]

In the Latin-speaking Christianity of medieval Western Europe (and so among Catholics and many Protestants today), the most common Christogram became "IHS" or "IHC", denoting the first three letters of the Greek name of Jesus, ΙΗΣΟΥΣ, iota-eta-sigma, or ΙΗΣ.[12][13][14]

The Greek letter iota is represented by I, and the eta by H, while the Greek letter sigma is either in its lunate form, represented by C, or its final form, represented by S. Because the Latin-alphabet letters I and J were not systematically distinguished until the 17th century, "JHS" and "JHC" are equivalent to "IHS" and "IHC".

"IHS" is sometimes interpreted as meaning "ΙΗΣΟΥΣ ΗΜΕΤΕΡΟΣ ΣΩΤΗΡ" (Iēsous Hēmeteros Sōtēr, "Jesus our Saviour") or in Latin "Jesus Hominum (or Hierosolymae) Salvator", ("Jesus, Saviour of men [or: of Jerusalem]" in Latin)[15] or connected with In Hoc Signo. English-language interpretations of "IHS" have included "In His Service".[16] Such interpretations are known as backformed acronyms.

Used in Latin since the seventh century, the first use of IHS in an English document dates from the fourteenth century, in the vision of William concerning Piers Plowman.[17] In the 15th century, Saint Bernardino of Siena popularized the use of the three letters on the background of a blazing sun to displace both popular pagan symbols and seals of political factions like the Guelphs and Ghibellines in public spaces (see Feast of the Holy Name of Jesus).

The IHS monogram with the H surmounted by a cross above three nails and surrounded by a Sun is the emblem of the Jesuits, according to tradition introduced by Ignatius of Loyola in 1541.[15]

ICXC[edit]

In Eastern Christianity, the most widely used Christogram is a four-letter abbreviation, ΙϹ ΧϹ—a traditional abbreviation of the Greek words for "Jesus Christ" (i.e., the first and last letters of each of the words "ΙΗϹΟΥϹ ΧΡΙϹΤΟϹ", with the lunate sigma "Ϲ" common in medieval Greek),[18] and written with titlo (diacritic) denoting scribal abbreviation (І҃С Х҃С).

On icons, this Christogram may be split: "ΙϹ" on the left of the image and "ΧϹ" on the right. It is sometimes rendered as "ΙϹ ΧϹ ΝΙΚΑ" (Ἰησοῦς Χριστὸς νικᾷ), meaning "Jesus Christ Conquers." "ΙϹΧϹ" may also be seen inscribed on the Ichthys.

See also[edit]

References[edit]

  1. ^ The portmanteau of Christo- and -gramma is modern, first introduced in German as Christogramm in the mid-18th century. Adoption into English as Christogram dates to c. 1900.
  2. ^ Chrisimus (par les Bénédictins de St. Maur, 1733–1736), in: du Cange, et al., Glossarium mediae et infimae latinitatis, ed. augm., Niort : L. Favre, 1883‑1887, t. 2, col. 317b. "CHRISIMUS, Nomen Christi abbreviatum in antiquis instrumentis secundum diversos casus sic XPS. XPI. XPO. XPM. ubi media littera P. Græcum. Vox Chrisimus legitur in Annal. Benedict. tom. 5. pag. 7."
  3. ^ Crismon (par les Bénédictins de St. Maur, 1733–1736), in: du Cange, et al., Glossarium mediae et infimae latinitatis, ed. augm., Niort : L. Favre, 1883‑1887, t. 2, col. 621b. "CRISMON, Nota quæ in libro ex voluntate uniuscujusque ad aliquid notandum ponitur. Papias in MS. Bituric. Crismon vel Chrismon proprie est Monogramma Christi sic expressum ☧" 1 chrismon (par les Bénédictins de St. Maur, 1733–1736), in: du Cange, et al., Glossarium mediae et infimae latinitatis, ed. augm., Niort : L. Favre, 1883‑1887, t. 2, col. 318c, citing Heumann. de re Diplom. inde a Carol. M. § 12; Murator. Antiquit. Ital. tom. 3. col. 75.
  4. Jump up to:a b Grigg, Robert (December 1977). ""Symphōnian Aeidō tēs Basileias": An Image of Imperial Harmony on the Base of the Column of Arcadius". The Art Bulletin59 (4): 477, 469–482. doi:10.2307/3049702..
  5. ^ Plato. Timaeus8.36b and 8.36c:

    "And thus the whole mixture out of which he cut these portions was all exhausted by him. This entire compound divided lengthways into two parts, which he joined to one another at the centre like the letter X, and bent them into a circular form, connecting them with themselves and each other at the point opposite to their original meeting-point; and, comprehending them in a uniform revolution upon the same axis, he made the one the outer and the other the inner circle."

    "The two great circles of the heavens, the equator and the ecliptic, which, by intersecting each other form a sort of recumbent chi and about which the whole dome of the starry heavens swings in a wondrous rhythm, became for the Christian eye a heavenly cross." Rahner & Battershaw 1971, "Mystery of the Cross", pp. 49–50. See also Grigg (1977|:477)

  6. ^ Justin. Apologia, 1.60.
  7. ^ Latura 2012, pp. 880–886.
  8. ^ The symbol was moved to storage for the refurbishments under Pellegrino Tibaldi and re-instated in the choir on 6 September 1669. (storiadimilano.it). Use of the name Chrismon is apparently based on the term crismon as used by Landulf of Milan(I.12). Landulf's mention of a crismon of Saint Ambrose clearly refers to chrism, i.e. holy oil, not a symbol. I. A. Ferrai, "I Fonti di Landolfo Seniore", Bullettino dell'Istituto storico italiano 14 (1895), p. 29.
  9. ^ Allegory of the Church by Calvin Kendall 1998 ISBN 1-4426-1309-2 page 137
  10. ^ while in English literature of the 19th to mid 20th century, chrismon refers to the Chi Rho monogram exclusively, the German-language usage has also come to be adopted in some cases in the specific context of medieval sigla, especially in works translated from German into English, e.g. Hans Belting, Edmund Jephcott (trans.), Likeness and Presence: A History of the Image Before the Era of Art (1997), pp. 107-109. For German usage, see Ersch et al., Volume 1, Issue 29 of Allgemeine Encyklopädie der Wissenschaften und Künste, 1837, p. 303 (in German). Johann Christoph Gatterer, Elementa artis diplomaticae universalis(1765), p. 145 ( Abriß der Diplomatik 1798, p. 64).
  11. ^ Johann Christoph Gatterer, Abriß der Diplomatik (1798), p. 64f. Carl Ernst Bohn, Allgemeine deutsche Bibliothek vol. 111 (1792), p. 521.
  12. ^ Christian sacrament and devotion by Servus Gieben 1997 ISBN 90-04-06247-5 page 18
  13. ^ The Continuum encyclopedia of symbols by Udo Becker 2000 ISBN 0-8264-1221-1 page 54
  14. ^ "CATHOLIC ENCYCLOPEDIA: Holy Name of Jesus"newadvent.org.
  15. Jump up to:a b Maere, René. "IHS." The Catholic Encyclopedia. Vol. 7. New York: Robert Appleton Company, 1910.
  16. ^ Bush, Brian Paige; (NA), Bush (1 March 2004). His Blueprint In The Bible: A Study Of The Number Three In Scripture. Dorrance Publishing Co. p. 9. ISBN 9780805963823.
  17. ^ "IHS"Oxford English Dictionary (3rd ed.). Oxford University Press. September 2005. (Subscription or UK public library membership required.)
  18. ^ Symbols of the Christian faith by Alva William Steffler 2002 ISBN 0-8028-4676-9 page 67

External links[edit]



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

கற்பனைக் கிறிஸ்துவும் வரலாற்று(?) இயேசுவும்

கிறிஸ்து-உலகிலேயே மிகவும் அதிகமாக செலவு செய்து விளம்பரம் செய்யப்படும் பெயரும் கதையும் ஆகும்.

 

 அன்னியரான ஆபிரகாம், வாரிசுகள் இஸ்ரேல் நாட்டின் அரசியல் உரிமைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.
 அவர் பேரன் யாக்கோபு காலத்தில் 70 பேரோடு எகிப்துக்கு இடம் பெயர்ந்த மக்கள் 3 தலைமுறைக்குப் பின் 25 லட்சம் பேராக வந்து சிறு தெய்வம் கர்த்தர் துணையோடு மண்ணின் மைந்தர்களைக் கொலை செய்து கர்த்தரால் தேர்ந்தெஉக்கப்பட்ட அரசியல் உரிமை உள்ள மக்களாக குடியேரிய கதை.

ராஜா தாவீது, சாலமன் காலத்தில் – ஜெருசலேம் மிகச் சிறிய கிராமம், இவர்கள் காலத்திற்கு 100 ஆண்டுபின் தான் பெருவாரியாக மக்கள் ஜெருசலேமில் குடியேறினர்.

• Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8

இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல். 
 2Q==   Z 
 இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.
1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல.
2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை.
3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.
4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை.
5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.
6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள்.
7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.

 

 
ஆய்வு நூல்: R.E. Gmirkin- “ Berossus and Genesis, Manetho and Exodus: Hellenistic histories and the date of the Pentateuch”
 Z  images?q=tbn:ANd9GcSMSEs230ixANzTJ7Na2OC
 இந்த நூல் மிகத் தெளிவாக கிரேக்கப் பாரம்பரியங்கள்- பக்கத்து நாடுகளில் எபிரேயர்கள் பற்றி உள்ள ஆதாரங்கள், ஆதியாகம நூலில் உள்ள பல நாடுகள் அவை அப்பெயரில் இயங்கிய காலம் எப்போது என ஆராய்ந்து – பொ.ச.270 வாக்கில் தான் நாடுகள் அப்பெயர்களில் இயங்கின என நிருபித்தார். கிரேக்க செப்துவகிந்தும் எபிரேயமும் ஒரே நேரத்தில் தான் புனையப்பட்டன எனக் காட்டுகிறார்.

 

கதையில் தேர்ந்தெடுட்க்கப்பட்டவர்கள் என்பதை கண்ட நிலையில் கிரேக்கரிடம் அடிமையாய் இருந்த நிலையில் எழுந்ததே மக்கபெயர் போர், கிரேக்கர் விலகிட, ஆட்சி தாவீது பரம்பரையினர் அல்லாத பிரிவினரிடமும், யூத ஜெருசலெமில் கர்த்தரின் குடி உள்ள ஒரே ஆலயத்திற்கும் சடோக்கிய பரம்பரை அல்லாதாரிடம் பூசாரி பதவி போனது.
இவை உலக அழிவின் காலம், அழிவிற்குமுன் யூதர்களை ஒன்று சேர்த்து- விலகிப் போன ஆடுகளை ஒன்று சேர்த்து தாவிது பரம்பரையில் பிறக்கும் ஒரு வீரர் இஸ்ரேல் ஆட்சியை மீட்டு- கணக்கெடுப்பு நாளில் தீர்ப்புக்கு சொர்கம் பெற்று தருவார் .
பவுலின் கடிதங்களில் 6 மட்டுமே அவர் வரைந்தது அதில் பழமையானது


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

  யூத மனிதன்  இயேசுவும் பவுலின் கட்டுக்கதை கிறிஸ்துவும்

 1தெசலோனிக்கர் 1:10– நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப் போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.
1தெசலோனிக்கர் 4: 1313 சகோதர சகோதரிகளே! இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்: எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது.14 இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.15 ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்.
7 பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டுபோகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்.
1கொரிந்தியர்15:51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்: நாம் யாவரும் சாகமாட்டோம்: ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம்.52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம்.53 ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்.
 கொரிந்தியர் 1: 14 ஆனால் நம் ஆண்டவர் இயேசு வரும் நாளில் நீங்கள் எங்களை முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன். அப்போது நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமைகொள்வது போன்று, நீங்களும் எங்களைக் குறித்துப் பெருமை கொள்வீர்கள்.
கலாத்தியர் 1: 4 இவரே நம் தந்தையாம் கடவுளின் திருவுளத்திற்கேற்ப இன்றைய பொல்லாத காலத்தினின்று நம்மை விடுவிக்குமாறு நம்முடைய பாவங்களின் பொருட்டுத் தம்மையே ஒப்புவித்தார்.
 பிலிப்பியர் 1: .5 ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள்.6 உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர்கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்தார் என உறுதியாய் நம்புகிறேன்
ரோமன் 8”:1 கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது.
18 இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். 19 இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள்வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.
கலாத்தியர்4: 4 ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.
ரோமன்1: .3 இந்த நற்செய்தி அவருடைய மகனைப்பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்(Greek Spherma Greek )
 
 

இஸ்ரேல் நாட்டு எபிரேய புராணக் கதைகளில் வீரன் தாவிது கீழ்தான் பெரும்பகுதி ஆட்சி இருந்தது- மேலும் கதைப்படி எக்பிதின் நைல் நதி முதல் எபிராய்த்து நதி வரை உள்ள நிலத்தின் அரச்ச்ட்சி அன்னியர் ஆபிரகாம் வாரிசு என்பதே பழைய ஏற்பாட்டின் அடிப்படை, அதில் புனையப்பட்டுள்ள கதைப்படியே பெரும் பகுதியை ஆண்ட ஒரே அரசன் தாவீது மட்டுமே, அவனுக்கு இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் கர்த்தர் தாவீதின் வழி மகன்களுக்கு தடையில்லாமல் இறுதிகாலம் வரை ஆட்சி உரிமை வழங்கினார். அந்த ஆட்சியை மீட்க வரவேண்டியவனே மேசியா-கிறிஸ்து, மேசியா காலத்தோடு உலகம் அழியும்- மேசியாஉடனுள்ளோருக்கு சொர்க்கம்-மற்றவர்க்கு நரகம்.

 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 இதை பவுல் நீட்டி மேசியாவைத் தேய்வீகர் எனப் புனைந்து- மேசியா மரணத்தினால் பூமியில் மனிதன் மறணத்திற்கு காரணம் ஆதாமின் பாவம்- ஆதாமின் பாவம் இயேசுவின் மரணத்தினால் நீங்கியது- இயேசு பெயலில் சேருவோர்க்கு சொர்க்கம் என கதை சொன்னர்-இயெசுவை- மேசியா வாழ்நாளில் என்பதை இரண்டாவது வருகையில் என நம்பி மதம் பரப்பினார்.

நாம் மேலே பார்த்த 6 கடிதங்களைத் தவிர புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களில் எதையும் எழுதியவர் யார் என்பது தெரியாது- சர்ச்- பல சீடர் பெயரில் தருகிறது. அதிலும் காணலாம்.
1பேதுரு  1: .5 நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது.
1பேதுரு  1.20 உலகம் தோன்றுமுன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார்.
1பேதுரு  4: 7எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது. எனவே, இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள்.
17ஏனெனில், தீர்ப்புக்கான காலம் கடவுளின் வீட்டாரிடத்தில் தொடங்கிவிட்டது. நம்மிடையே அது முதலில் தொடங்குகிறதென்றால், கடவுளின் நற்செய்தியை ஏற்காதவர்களின் முடிவு என்னவாகும்?
1யோவான் 2: 18குழந்தைகளே, இதுவே இறுதிக் காலம். எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். ஆகவே இறுதிக் காலம் இதுவேயென அறிகிறோம்.
யூதா 1: 17 அன்பார்ந்தவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்கள் முன்னுரைத்த வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்.18 ஏனெனில், இறைப்பற்றில்லாமல் தமது தீய நாட்டங்களின்படி வாழ்ந்து ஏளனம் செய்வோர் இறுதிக் காலத்தில் தோன்றுவர் என்று அவர்கள் உங்களுக்குச் சொன்னார்கள்.19 இவர்கள் பிரிவினை உண்டுபண்ணுபவர்கள்: மனித இயல்பின்படி நடப்பவர்கள்: கடவுளின் ஆவியைக் கொண்டிராதவர்கள்.
எபிரேயர்: :25-29  25 தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை.26 அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார்.27 மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி.28 அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.
இது போல மேலும் பல உள்ளது.
இறந்த இயேசு சொன்னதாக சுவிசேஷம். ( good spelle  நல்ல கதை)  கதாசிரியர்களும் இயேசு சோன்னதாக உள்ளவை
மாற்கு 9:1 1 மேலும் அவர் அவர்களிடம், ’ இங்கே நின்று கொண்டு இருப்ப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார்.
மாற்கு 13: 29 அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.30இவையனைத்தும் நிகழும்வரை இப்பொழுது வாழும் மக்கள் ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.-24 ’ அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.25 விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.26 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.27 பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
மாற்கு 14: 62 அதற்கு இயேசு,  நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள் ‘என்றார்
மத்தேயு 10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ’ ‘ பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.7 அப்படிச் செல்லும்போது ‘ விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ‘ எனப் பறைசாற்றுங்கள்.
.23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு 26: 27 பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, ’ இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்;28 ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.29 இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ‘என்றார்.
மத்தேயு11:  12 திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசுவன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.13 திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன.14உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள்
யோவான்21: 0 பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, ‘ ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? ‘ என்று கேட்டவர்.21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ‘ ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்? ‘ என்ற கேட்டார்.22 இயேசு அவரிடம், ’நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா ‘ என்றார்.23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ‘ நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன? ‘ என்றுதான் கூறினார்.24 இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும்.
மத்தேயு 23: 2  மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள்
அப்போஸ்தலர்  நடபடிகள்4: 1 பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள்:2 அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பதையும் இறந்தோர் இயேசுவின் மூலம் உயிர்த்தெழுவர் என்று அறிவித்ததையும் கண்டு எரிச்சலடைந்து,3 அவர்களைக் கைது செய்தார்கள்.
அப்போஸ்தலர்  நடபடிகள்23: 6 அவர்களுள் ஒரு பகுதியினர் சதுசேயர் என்றும், மறுபகுதியினர் பரிசேயர் என்றும் பவுல் அறிந்து, சகோதரரே! நான் ஒரு பரிசேயன். பரிசேய மரபில் பிறந்தவன்: இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் எதிர்நோக்கின் பொருட்டு விசாரிக்கப்படுகிறேன் என்று தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில் கூறினார்.7 அவர் இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர்.
அப்போஸ்தலர்  நடபடிகள் 23: 8 சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்: பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர்.
வரலாற்றுபடி 65 – 70 போருக்குமுன் சதுசேயர்கள் தான் யூதப் பாதிரிகளாக இருந்தனர், அதாவது யூத மோசே நாற்காலியில் அதிகாரத்தோடே அமர்ந்தவர்கள்- தேவதூதநிறுதி நாள்- உயிர்த்தெழுதல் எதுவும் இல்லை என்றனர். எனேனில் எபிரேய மூலத்தில் எங்குமே இவை நேரடியாக கிடையாது.
இயேசுவை கடவுள் என்கின்றனர்- அவர் சொன்னதாகயோவான்6: 8 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே. 58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். ‘ 
பலித்ததா?? யூதர்களுள் உலகம் அழியப் போகிறது என நம்பிய ஒரு குழுவினர் அதீதமாய் நம்பிய கட்டுக்கதை- மேசியா வருகை. மேசியா வந்தால் அவரோடு உலகம் அழியும் – யார் அந்த கிறிஸ்து-கடைசி நபி????
யூதர்களுள் உலகம் அழியப் போகிறது என நம்பிய ஒரு குழுவினர் அதீதமாய் நம்பிய கட்டுக்கதை- மேசியா வருகை. மேசியா வந்தால் அவரோடு உலகம் அழியும் – யார் அந்த கிறிஸ்து-கடைசி நபி.
கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.
ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

கிறிஸ்து யார்- இயேசுவா? முகம்மது நபியா?

இஸ்ரேலின் யூத மதத்தில் ஒரு பிரிவினர் எபிரேய பைபிளில் அதீதமாக கற்பனை செய்து உலகம் அழியப் போகிறது, அதற்கு முன் கடைசி தலைமுறையில் மேசியா வருவார் என நம்பினர்.
மேசியா என்பதை கிறிஸ்து எனவும் இறுதி தூதர் எனவும் மொழி பெயர்க்கின்றன. இஸ்லாமியர் மேசியா முகம்மது நபி என்கின்றனர்.
நாம் இயேசுவின் கதையைச் சொல்லும் புதிய ஏற்பாட்டின் அடிப்படையில் இயேசுவா கிறிஸ்து ஆக முடியுமா? எனப் பார்ப்போம்.
000002.jpg?w=194  images?q=tbn:ANd9GcRFjuMRU2DVEOsM67VC4Fs  00001.jpg?w=176       images?q=tbn:ANd9GcQgMK73R9HFba4r5Ad-_PF                   “இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்ற மரண ஓலத்துடன் இறந்தவர் இயேசு. ஒரு சிறிய குழுவைச் சேர்த்துக்கொன்டு இயக்கம் நடத்திய கலிலேயாவை சேர்ந்த இயேசுவை ரோமன் ஆட்சியினர் கைது செய்து, ரோமன் தண்டனைமுறையில் ஆட்சிக்கு எதிரான புரட்சிபோராளிக்கு உரிய தூக்கு மரத்தில் தொங்கும் முறையில் கொல்லப்பட்டவர், நிருபிக்கப்பட்ட குற்ற அட்டை-ரோமன் கவர்னர் பிலாத்து கைப்பட எழுதியது -நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்.
இரந்த இயேசுவை நேரில் அறியாத பவுல் என்பவர் -இயக்க காலம் முழுமையும் தீவீர யூதரிடம் மட்டுமே  இயங்கிய  இயேசுவை- கிரேக்கர்களிடம்- தெய்வீகமானவர் என எழுதிய கடிதங்களே புதிய ஏற்பாட்டின் முதல் எழுத்துக்கள்.
பவுலின் கடிதங்களில் 6 மட்டுமே அவர் வரைந்தது அதில் பழமையானது
1தெசலோனிக்கர் 1:10– நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப் போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.
1தெசலோனிக்கர் 4: 1313 சகோதர சகோதரிகளே! இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்: எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது.14 இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.15 ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்.
7 பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டுபோகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்.
1கொரிந்தியர்15:51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்: நாம் யாவரும் சாகமாட்டோம்: ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம்.52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம்.53 ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்.
 கொரிந்தியர் 1: 14 ஆனால் நம் ஆண்டவர் இயேசு வரும் நாளில் நீங்கள் எங்களை முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன். அப்போது நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமைகொள்வது போன்று, நீங்களும் எங்களைக் குறித்துப் பெருமை கொள்வீர்கள்.
கலாத்தியர் 1: 4 இவரே நம் தந்தையாம் கடவுளின் திருவுளத்திற்கேற்ப இன்றைய பொல்லாத காலத்தினின்று நம்மை விடுவிக்குமாறு நம்முடைய பாவங்களின் பொருட்டுத் தம்மையே ஒப்புவித்தார்.
 பிலிப்பியர் 1: .5 ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள்.6 உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர்கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்தார் என உறுதியாய் நம்புகிறேன்
ரோமன் 8”:1 கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது.
18 இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். 19 இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள்வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.
கலாத்தியர்4: 4 ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.
ரோமன்1: .3 இந்த நற்செய்தி அவருடைய மகனைப்பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்(Greek Spherma Greek )
இஸ்ரேல் நாட்டு எபிரேய புராணக் கதைகளில் வீரன் தாவிது கீழ்தாந் பெரும்பகுதி ஆட்சி இருந்தது- மேலும் கதைப்படி எக்பிதின் நைல் நதி முதல் எபிராய்த்து நதி வரை உள்ள நிலத்தின் அரச்ச்ட்சி அன்னியர் ஆபிரகாம் வாரிசு என்பதே பழைய ஏற்பாட்டின் அடிப்படை, அதில் புனையப்பட்டுள்ள கதைப்படியே பெரும் பகுதியை ஆண்ட ஒரே அரசன் தாவீது மட்டுமே, அவனுக்கு இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் கர்த்தர் தாவீதின் வழி மகன்களுக்கு தடையில்லாமல் இறுதிகாலம் வரை ஆட்சி உரிமை வழங்கினார். அந்த ஆட்சியை மீட்க வரவேண்டியவனே மேசியா-கிறிஸ்து, மேசியா காலத்தோடு உலகம் அழியும்- மேசியாஉடனுள்ளோருக்கு சொர்க்கம்-மற்றவர்க்கு நரகம்.
இதை பவுல் நீட்டி மேசியாவைத் தேய்வீகர் எனப் புனைந்து- மேசியா மரணத்தினால் பூமியில் மனிதன் மறணத்திற்கு காரணம் ஆதாமின் பாவம்- ஆதாமின் பாவம் இயேசுவின் மரணத்தினால் நீங்கியது- இயேசு பெயலில் சேருவோர்க்கு சொர்க்கம் என கதை சொன்னர்-இயெசுவை- மேசியா வாழ்நாளில் என்பதை இரண்டாவது வருகையில் என நம்பி மதம் பரப்பினார்.
நாம் மேலே பார்த்த 6 கடிதங்களைத் தவிர புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களில் எதையும் எழுதியவர் யார் என்பது தெரியாது- சர்ச்- பல சீடர் பெயரில் தருகிறது. அதிலும் காணலாம்.
1பேதுரு  1: .5 நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது.
1பேதுரு  1.20 உலகம் தோன்றுமுன்னரே முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக வெளிப்படுத்தப்பட்டார்.
1பேதுரு  4: 7எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது. எனவே, இறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள்.
17ஏனெனில், தீர்ப்புக்கான காலம் கடவுளின் வீட்டாரிடத்தில் தொடங்கிவிட்டது. நம்மிடையே அது முதலில் தொடங்குகிறதென்றால், கடவுளின் நற்செய்தியை ஏற்காதவர்களின் முடிவு என்னவாகும்?
1யோவான் 2: 18குழந்தைகளே, இதுவே இறுதிக் காலம். எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். ஆகவே இறுதிக் காலம் இதுவேயென அறிகிறோம்.
யூதா 1: 17 அன்பார்ந்தவர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர்கள் முன்னுரைத்த வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள்.18 ஏனெனில், இறைப்பற்றில்லாமல் தமது தீய நாட்டங்களின்படி வாழ்ந்து ஏளனம் செய்வோர் இறுதிக் காலத்தில் தோன்றுவர் என்று அவர்கள் உங்களுக்குச் சொன்னார்கள்.19 இவர்கள் பிரிவினை உண்டுபண்ணுபவர்கள்: மனித இயல்பின்படி நடப்பவர்கள்: கடவுளின் ஆவியைக் கொண்டிராதவர்கள்.
எபிரேயர்: :25-29  25 தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை.26 அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார்.27 மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி.28 அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.
இது போல மேலும் பல உள்ளது.
 
இறந்த இயேசு சொன்னதாக சுவிசேஷக். ( good spelle  நல்ல கதை)  கதாசிரியர்களும் இயேசு சோன்னதாக உள்ளவை
மாற்கு 9:1 1 மேலும் அவர் அவர்களிடம், ’ இங்கே நின்று கொண்டு இருப்ப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார்.
மாற்கு 13: 29 அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.30இவையனைத்தும் நிகழும்வரை இப்பொழுது வாழும் மக்கள் ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.-24 ’ அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.25 விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.26 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.27 பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
மாற்கு 14: 62 அதற்கு இயேசு,  நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள் ‘என்றார்
மத்தேயு 10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ’ ‘ பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.7 அப்படிச் செல்லும்போது ‘ விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ‘ எனப் பறைசாற்றுங்கள்.
.23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு 26: 27 பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, ’ இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்;28 ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.29 இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ‘என்றார்.
மத்தேயு11:  12 திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசுவன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.13 திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன.14உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள்
யோவான்21: 0 பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, ‘ ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? ‘ என்று கேட்டவர்.21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ‘ ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்? ‘ என்ற கேட்டார்.22 இயேசு அவரிடம், ’நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா ‘ என்றார்.23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ‘ நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன? ‘ என்றுதான் கூறினார்.24 இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும்.
மத்தேயு 23: 2  மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள்
அப்போஸ்தலர்  நடபடிகள்4: 1 பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள்:2 அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பதையும் இறந்தோர் இயேசுவின் மூலம் உயிர்த்தெழுவர் என்று அறிவித்ததையும் கண்டு எரிச்சலடைந்து,3 அவர்களைக் கைது செய்தார்கள்.
அப்போஸ்தலர்  நடபடிகள்23: 6 அவர்களுள் ஒரு பகுதியினர் சதுசேயர் என்றும், மறுபகுதியினர் பரிசேயர் என்றும் பவுல் அறிந்து, சகோதரரே! நான் ஒரு பரிசேயன். பரிசேய மரபில் பிறந்தவன்: இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் எதிர்நோக்கின் பொருட்டு விசாரிக்கப்படுகிறேன் என்று தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில் கூறினார்.7 அவர் இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர்.
அப்போஸ்தலர்  நடபடிகள் 23: 8 சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்: பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர்.
வரலாற்றுபடி 65 – 70 போருக்குமுன் சதுசேயர்கள் தான் யூதப் பாதிரிகளாக இருந்தனர், அதாவது யூத மோசே நாற்காலியில் அதிகாரத்தோடே அமர்ந்தவர்கள்- தேவதூதநிறுதி நாள்- உயிர்த்தெழுதல் எதுவும் இல்லை என்றனர். எனேனில் எபிரேய மூலத்தில் எங்குமே இவை நேரடியாக கிடையாது.
இயேசுவை கடவுள் என்கின்றனர்- அவர் சொன்னதாகயோவான்6: 8 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே. 58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். ‘ 
பலித்ததா?? யூதர்களுள் உலகம் அழியப் போகிறது என நம்பிய ஒரு குழுவினர் அதீதமாய் நம்பிய கட்டுக்கதை- மேசியா வருகை. மேசியா வந்தால் அவரோடு உலகம் அழியும் – யார் அந்த கிறிஸ்து-கடைசி நபி????
யூதர்களுள் உலகம் அழியப் போகிறது என நம்பிய ஒரு குழுவினர் அதீதமாய் நம்பிய கட்டுக்கதை- மேசியா வருகை. மேசியா வந்தால் அவரோடு உலகம் அழியும் – யார் அந்த கிறிஸ்து-கடைசி நபி


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard