Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு யூதர்களின் கிறிஸ்து தானே!


Guru

Status: Offline
Posts: 7329
Date:
இயேசு யூதர்களின் கிறிஸ்து தானே!
Permalink  
 


இயேசு யூதர்களின் கிறிஸ்து தானே!

இயேசுவினைப் பற்றி வரலாற்று ரீதியில் ஏற்க ஆதாரம் ஏதும் கிடையாது. நாம் மதம் பரப்ப புனையப்பட்ட கதைகளினை ஆராய்ந்தால் ஏற்கும்படி  வரலாற்று உண்மை, ஏசு என்பவர் ரோமன் கவர்னர் பொந்தியுஸ் பிலாத்துவினால் ரோமிற்கு எதிரான ஆயுத்க் கலகக்காரன், யூதப் புராண மூட நம்பிக்கையின்படி “கிறிஸ்து எனும் யூதர்களின் ராஜா” என்னும்படியாக மரண தண்டனையில் இறந்தார்.
images?q=tbn:ANd9GcTnwhhKCLq6rmMLZ3Us_7o images?q=tbn:ANd9GcQS_4_mYdj1zGacuevoeZk

 

யோவான் 19:9 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ‘ நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் ‘ என்று எழுதியிருந்தது.20 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால் யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.21 யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம், ‘ ″ யூதரின் அரசன் ″ என்று எழுத வேண்டாம்; மாறாக, ‘ யூதரின் அரசன் நான் ‘ என்று இயேசு சொல்லிக் கொண்டதாக எழுதும் ‘ என்று கேட்டுக்கொண்டார்கள்.22 பிலாத்து அவர்களைப் பார்த்து, ‘ நான் எழுதியது எழுதியதே ‘ என்றான்.

குற்ற அட்டையை பிலாத்து கைப்பட எழுதினார், எனில் தண்டனை முழுமையாய் ரோமினுடையதே – கைது செய்தது யார்?
images?q=tbn:ANd9GcTmDSeLPin7WwMZSiioJ1z  images?q=tbn:ANd9GcTrjYOSPt9N5q5BVTRNa4b

யோவான் 18:3 ரோமன் படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.12 ரோமன்  படைப்பிரிவினரும் ரோமன் படைஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.
மாற்கு14:43 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது.44 அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன், ‘ நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு, அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள் ‘ என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.45 அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, ‘ ரபி ‘ எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.46 அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர்.47 அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்

முதலில் புனைந்த மாற்கு சுவி கைதினை செய்தது யூத தலைமைப் பாதிரி தலைமையில் மதகுருமார்கள் என்கிறார். பஸ்கா பண்டிகைக்கு ஆடுகளை கர்த்தருக்கு கொலை செய்து பலி தர லட்சக்கணக்கானோர் கூடி உள்ள போது அதை விட்டு நிச்ச்யமாய் யூத தலைமைப் பாதிரி தலைமையில் மதகுருமார்கள் வந்திருக்க முடியாது. யூத தேவாலயத்தினை நடத்துவதே அவர்கள் பொறுப்பு.
images?q=tbn:ANd9GcQA8ZHhdNSEZ351VNoBK4W  \ images?q=tbn:ANd9GcQEoYWBPnG7Fbhol2Biowg

இறந்த ஏசுவை, உயிர்த்தார் எனவும், மீண்டும் வெகு சீக்கிரமாக உலகம் அழிய, தீர்ப்பு தரும் நீதிபதியாக வருவார் எனவும் நம்பி மதம் மாறியோரால் புனையப்பட்டதே சுவிசேஷங்கள்.

நாம் ஏசு சீடர்களிடம் பேசியதாக உள்ளதைக் கொண்டு சற்றே இயேசுவை ஆராய்வோம்.

மத்தேயு10:11 இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘ பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.7அப்படிச் செல்லும்போது ‘ விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ‘ எனப் பறைசாற்றுங்கள்.
23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு15:24 அவரோ மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளான  யூதர்களுக்கு மட்டுமே நான் அனுப்பப்பட்டேன்  தவிர மற்றவருக்கு ல்ல‘ என்றார்.
மாற்கு7:27 இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.28 அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ‘ என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ‘ என்றார்
மத்தேயு7:6தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

யூத நடைமுறையில் மேலே ஏசு பிதற்றி உள்ளபடியே நாய்கள் என்றால் யூதர்கள் அல்லாத அனைவரும், முத்து பைத்தியக்கார உளறல் பழைய ஏற்பாடு, பன்றி யூதர்கள் அல்லாத அனைவரும். ஏசு யூத வெறி பிடித்த மிருகமாய் பேசியுள்ளார்.
images?q=tbn:ANd9GcSG7CwU_aRUcHmwsredCuC images?q=tbn:ANd9GcTY1cTzJIdyce5UELyNiGU

மத்தேயு19:28 அதற்கு இயேசு, ‘ புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு5:20 மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.

 

மத்தேயு5:17 ‘ திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.18 ‘ விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.19 எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார்.
மத்தேயு231 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது:2 ‘ மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்.3 ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள்.:

 

மாற்கு12:13 பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர்.14 அவர்கள் அவரிடம் வந்து, ‘ போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா? ‘ என்று கேட்டார்கள்.15 அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு, ‘ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்’ என்றார்.footnote.jpg16அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், ‘ இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை? ‘ என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ‘ சீசருடையவை ‘ என்றார்கள்.17 அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ‘ சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் ‘ என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.
மாற்கு12:28 அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, ‘ அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? ‘ என்று கேட்டார்.29 அதற்கு இயேசு, ‘ இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.30 உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக ‘ என்பது முதன்மையான கட்டளை.31 ‘ உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக ‘ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை ‘என்றார்.32 அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், ‘ நன்று போதகரே, ‘ கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை ‘ என்று நீர் கூறியது உண்மையே.33 அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது ‘ என்று கூறினார்.34 அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், ‘ நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை ‘என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

இஸ்ரேலின் மக்கள் தங்களின் சிறு எல்லை தெய்வமான கர்த்தரை வழிபட்டால் இறையாட்சிக்குள் நுழையலாம். ஏசுவை ஏற்பது ஏதும் கிடையாது.

இயேசுவைத் தெய்வீகர் என உயர்த்தி புனையும் இரண்டாவது வருகை ஆட்சியிலும் அவர்  யூதர்களுக்கு மட்டுமே

வெளிப்பாடுகள்7:4முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப்பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம்.5 யூதா குலத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னிரண்டு ஆயிரம், ரூபன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், காத்து குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,6 ஆசேர் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், நப்தலி குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், மனாசே குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,7 சிமியோன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், லேவி குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், இசக்கார் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்,8 செபுலோன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், யோசேப்பு குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், பென்யமின் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்.

 

மத்தேயு19:28 அதற்கு இயேசு, ‘ புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

http://en.wikipedia.org/wiki/Jesus
http://www.hiddenbible.com/jesuszeus/jesuszeus.html
http://www.simpletoremember.com/articles/a/jewsandjesus/



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

images?q=tbn:ANd9GcRC9OngHJVAVAHe0GzYyKqimages?q=tbn:ANd9GcQqS-OkasHsK5zoitO87oQ

 உலகின் பெரும்பாலன மொழிகளில் பெரும் செலவில் மொழி பெயர்த்து ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகள் செலவில் பரப்பிடும் கிறிஸ்துவ மதத்தின் தொன்மம் புதிய ஏற்பாடு கதைகளின் நாயகர் இயேசு. இயேசு பற்றி நம்மிடம் உள்ள கதைகள் செய்திகள் அனைத்திற்கும் ஒரே ஒரு தரவு பைபிள் மட்டுமே. புதிய ஏற்பாடு புராணக் கதைகளை நேர்மையாய் ஆராய்ந்தால் -எழுதியவர்களுக்கு உண்மையான ஏசு பற்றி அறியாது- செவிவழி கதையையே புனைந்தனர் என்பது அறிஞர்கள் ஏற்பது. 

 The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork  

அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார். 
நாம் வரலாற்றில் பொதுக் காலம் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதன் ஏசுவை தேடினால் ஏசுவின் கைது, மரண தண்டனை அனைத்தும் ரோமன் கவர்னரே காரணம் எனத் தெளிவாகும்
 யோவான் 18:3 யூதாஸ்  ஒரு ரோமன் படை வீரர் குழுவைக்  கூப்பிட்டுக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான். 12 ரோமன் படை வீரர்களும் ஆயிரம் வீரர் தலைவனும்  இயேசுவைக் கைது செய்தனர்.
 யோவான் 19:19 ரோமன் கவர்னர் பிலாத்து ஓர் அறிவிப்பு எழுதி அதனை இயேசுவின் சிலுவையின் மேல் பொருத்தி வைத்தான். அந்த அறிவிப்பில் நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசர்” என்று எழுதப் பட்டிருந்தது. 20 அந்த அறிவிப்பு யூத மொழியிலும் இலத்தீன், கிரேக்க மொழிகளிலும் இருந்தது. ஏராளமான யூதர்கள் இந்த அறிவிப்பை வாசித்தனர். ஏனென்றால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.  21 யூதர்களின் தலைமை பாதிரி பிலாத்துவிடம், “யூதருடைய அரசர் என்று எழுதக்கூடாது. இயேசு தன்னை யூதருடைய அரசன் என்று சொல்லிக் கொண்டார்   எழுத வேண்டும்” என்றான்.  22 அதற்குப் பிலாத்து, “நான் எழுதினதை மாற்றி எழுதமாட்டேன்” என்று கூறிவிட்டான்.

  நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசர்” என்று எழுதப் பட்டிருந்தது -கிறிஸ்து என்றால் யூதர்களின் அரசன் என்றே பொருள். இயேசுவின் குற்றங்கள் விசாரணைக்குப்பின் தரப்பட்ட மரண தண்டனை தூக்குமரத்தில் தொங்குதலிலும் ரோமன் ஆட்சிக்கு எதிரான ஆயூதத் தீவிரவாதிகளுக்குத் தான்.

யூதப் புராணமான பழைய ஏற்பாட்டின் அடிப்படை இஸ்ரேலின் ஆட்சி உரிமை இஸ்ரேலிற்கான எல்லை தெய்வம் யாவே ஆபிரகாமிற்கு தந்தார் அது பின் தாவீது பரம்பரை எனச் சுருஙும்
 உபாகமம் 17:14 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து அதைச் சுதந்திரமாக்கிக் கொண்டு அதில் குடியேறியபின், ‘எங்களைச் சுற்றிலும் இருக்கின்ற மற்ற இனத்தவர்களைப் போல நாங்களும் எங்களுக்கு ஒரு இராஜாவை ஏற்படுத்திக்கொள்வோம்’ என்று கூறுவீர்கள் என்றால், 15 அவ்வாறு நடக்க வேண்டுமென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுக்கும் அரசனையே நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுள் ஒருவரான உங்கள் சகோதரனையே உங்களை ஆளும் அரசனாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஜனங்கள் அல்லாத அந்நியனை நீங்கள் அரசனாக்கக் கூடாது.
 

2 சாமுவேல் 7:8தாவீதுக்கு இதைக் கூற வேண்டும். “நீ என் தாசனாகிய தாவீதுக்கு இதைக் கூற வேண்டும், நீ ஆடு மேய்த்து கொண்டிருக்கும் போது உன்னை தேர்ந்தெடுத்தேன். அவ்வேலையிலிருந்து விலக்கி எடுத்து இஸ்ரவேலராகிய எனது ஜனங்களுக்கு உன்னை தலைவனாக்கினேன். 12 அப்போது உனது சொந்த மகனை அரசனாக்குவேன்.13 அவன் எனது பெயரில் ஒரு வீட்டைக் (ஆலயத்தைக்) கட்டுவான். அவனது அரசின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலை நிறுத்துவேன்.16 உனது குடும்பத்தினர் அரசர்களாகத் தொடர்ந்து இருப்பார்கள். நீ அதை நம்பியிருக்கலாம்! உனது ஆட்சி என்றும் தொடரும், உனது சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும்!’ என்று கூறு” என்றார்.

இக்கதையை ஸ்தேவான் என்பவர் பேசுவதாய் அப்போஸ்தலர் நடபடிகள் அத்தியாயம் ஏழின் சுருக்கம்
 அப்போஸ்தலர் 7: நமது தேவன் அழைக்க, ஆபிரகாம் கல்தேயர்  நாட்டை விட்டு வந்தார்.தேவன் ஆபிரகாமுக்கும் அவர் குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் இந்நாட்டைக் கொடுப்பதாக தேவன் வாக்களித்தார். உன் சந்ததியர் மற்றொரு நாட்டில் 400 வருடங்களுக்கு  அடிமைப்படுத் மோசமாக நடத்துவர். உன் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவர். பின் உன் மக்கள் இங்கு இந்த இடத்தில் என்னை வழிபடுவர். பின் மோசே தலைமையில் வெளியே வந்த போது பிற தெய்வ வழிபாடு செய்ததால் நான் உங்களை பாபிலோனுக்கு அப்பால் அனுப்புவேன்

இயேசு 5000 பேருக்கு போதனைக் கதையில், மக்கள் அவரை ராஜாவாக்க கலகம் செய்வர் என

யோவான் 6:15 அவரை மக்கள் அரசராக்கவேண்டும் என விரும்பினர். இதனை இயேசு அறிந்தார். மக்கள் தங்கள் எண்ணத்தைத் திட்டமாக்கிச் செயல்படுத்த விரும்பினர். எனவே இயேசு அவர்களை விட்டுத் தனியாக மலையில் ஏறினார்.

இயேசுவின் கைதின் போது சீடர்கள் ஆயுதம் வைத்துருந்தனர்.
யோவான் 18: 10 சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவன் அதை வெளியே எடுத்து தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை வெட்டிப்போட்டான்.
கதைப்படி ஏசு பழைய உடம்பில் மீண்டும் வந்தபோது சீடர் கேட்டதாக
  அப்போஸ்தலர் 1: அப்போஸ்தலர்கள் எல்லோரும் ஒருமித்துக் கூடியிருந்தார்கள். அவர்கள் இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீங்கள் யூதர்களுக்கு அவர்களது இராஜ்யத்தை மீண்டும் கொடுக்கும் காலம் இதுவா?” என்று வினவினார்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 அடிப்படைவாத யூதர் தன்னை தேர்ந்தெடுக்கப் பட்டவன் என நம்பி யூதர்  ல்லாதவர்களை மிகக் கேவலமாய் பார்க்கின்றனர். இயேசுவின் இனவெறி இங்கே

 

மாற்கு 12:14 பரிசேயர்களும், ஏரோதியர்களும் இயேசுவிடம் சென்றனர். “போதகரே! இராயனுக்கு வரி கொடுப்பது சரியா இல்லையா என்பது பற்றிக் கூறுங்கள். நாங்கள் வரி கொடுக்கலாமா, வேண்டாமா?” என்று கேட்டனர்.15 அவர்களின் தந்திரத்தை இயேசு அறிந்துகொண்டார்.  16 “யாருடைய உருவப்படம் இந்தக் காசில் உள்ளது? யாருடைய பெயர் இதில் எழுதப்பட்டுள்ளது?” என்று கேட்டார். அவர்களோ அதற்கு, “இது இராயனுடைய படம், இதில் இராயனின் பெயருள்ளது” என்றனர்.17 இயேசு அவர்களைப் பார்த்து, “இராயனுக்குரியதை இராயனுக்குக் கொடுங்கள், தேவனுக்குரியதை தேவனிடம் கொடுங்கள்” என்றார். 

 ரோமனியர்கள் நாய்கள், துரத்துங்கள் என்பதே இயேசு

 மாற்கு 7: 24 இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்.26 அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.27 இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.28 அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ‘ என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ‘ என்றார்.
 மத்தேயு-15: 21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.  22அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ‘ ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ‘ எனக் கதறினார்.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லைசீடர்கள் அவரை அணுகி, ‘ நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ‘ என வேண்டினர்.24 அவரோ மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடடம் மட்டுமே  நான் அனுப்பப்பட்டேன் ‘ என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ‘ ஐயா, எனக்கு உதவியருளும் ‘ என்றார்.26 அவர் மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.27 உடனே அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ‘ என்றார்.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது. 
 

பழங்கதையில் தாவீது பரம்பரை ராஜா- போர் வேற்றி ஆட்சி என்பதை, சில யூதப் பிரிவுகள், முதலில் கிரேக்கர்களும் பின் ரோமன் ஆட்சியும் இஸ்ரேலை அடிமைப் படுத்த யுகம் முடியும் காலம் வந்தது, உலகம் அழியுமுன் இஸ்ரேல் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் - தாவீது பரம்பரை மனிதன் ஆட்சியைப் பிடித்து நேராக பரலோகம் அழைத்து செல்வர் என எழுந்த ஒரு நம்பிக்கையே கிறிஸ்து வருகை எனும் கோட்பாடு. இயேசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் என்றார், ரோமை வீழ்த்த தன்மீது வெற்றிக்கான ஆசி வரும் என நம்பிட, கடைசியில் ரோமன் தூக்கு மரத்தில் தொங்கியபோது கடைசியாய் சொன்னது.   

 மாற்கு 15:34 மூன்று மணிக்கு இயேசு மிக உரத்த குரலில், “ஏலி! ஏலி! லாமா சபக்தானி” என்று கதறினார். இதற்கு “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?”
உலகம் அழியப்போவது மேசியா காலத்தில் எனும் நம்பிக்கையை மாற்றி, இரண்டாவது வருகை அதுவும் மிகச் சில மாதங்களில், திருமணமாகாதோர் திருமணம் செய்ய வேண்டாம் என்ற பவுல் ஏசுவை ஏற்றால் மரணம் கிடையாது, நேராக சொர்கம் என்றார். 
  1 கொரி 15:51 ஆனால் நான் கூறும் இரகசியத்தைக் கேளுங்கள். நாம் எல்லாரும் மரணமடைவதில்லை. நாம் மாற்றமுறுவோம். 52 கணத்தில் அது நிகழும். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நமது மாற்றம் நிகழும். கடைசி எக்காளம் முழங்கும்போது இது நடக்கும். எக்காளம் முழங்கும், மரித்த விசுவாசிகள் எப்போதும் வாழும்படியாய் எழுப்பப்படுவார்கள். நாமும் கூட முழுமையாய் மாற்றம் அடைவோம்.
யோவான் 6:31 நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் தேவன் கொடுத்த மன்னாவை (உணவு) உண்டார்கள். இது ‘தேவன் பரலோகத்தில் இருந்து அவர்களுக்கு உண்பதற்கு அப்பத்தைக் கொடுத்தார்,’ என்று எழுதப்பட்டிருக்கிறது” என்று மக்கள் கேட்டனர்.
 
49 உங்கள் மூதாதையர்கள் தேவன் கொடுத்த 50 நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம். ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் பூமியில்  என்றென்றைக்கும் உயிர்வாழ்வான். 

யோவான் சுவியில் ஏசு பேசியதாக உள்ளவை சுவிசேஷக் கதாசிரியரின் சொந்த சரக்கு என்கிறார் கேம்ப்ரிட்ஜ் பேராசிரியர்.

C.J. Cadoux, who was Mackennal Professor of Church History at Oxford, thus sums up the conclusions of eminent Biblical scholars regarding the nature and composition of this Gospel: “The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Synoptic, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assignment of fictitious speeches to historical characters:the best ancient historians made a practice of and assigning such speeches in this way.”

 

இறந்த யூதப் போர் வீர மேசியாவை தெய்வமாக்கிய   கட்டுக்கதையே கிறிஸ்துவம்



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 All this should make clear that the view, which still persists in some circles that Jesus’s aim was to found a Church, different from  Synagogue is quiet improbable. The Gospels themselves bear little trace of such a view….  Thus attempts to picture Jesus as breaking away Judaism, of Conceiving  a religion in which Jews and Gentiles stood alike, equal in the sight of God, would appear to be in fragment contradictin to Probability.  page 144-45.  Christian Beginnings Part- 2  by Morton Scott Enslin

 

 
“The office of Messiahship with which Jesus believed himself to be invested, marked him out for a distinctly national role: and accordingly we find him more or less confining his preaching and healing ministry and that of his disciples to Jewish territory, and feeling hesitant when on one occassion he was asked to heal a Gentile girl. Jesus, obvious veneration for Jerusalem, the Temple, and the Scriptures indicates the special place which he accorded to Israel in his thinking: and several features of his teaching illustrate the same attitude. Thus, in calling his hearers ‘brothers’ of e another (i.e., fellow-Jews) and frequently contrasting their ways with those of the Gentiles, in defending his cure of a woman on the sabbath with the, pla that she was a daughter of Abraham’ and befriending the tax-collector Zacchaeus because he too is a son of Abraham, and in fixing the number of his special disciples at twelve to, match the number of the tribes of Israel-in all this Jesus shows how strongly Jewish a stamp he wished to impress upon his mission.”  C.J. Cadoux: The Life of Jesus, p. 80-81


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

C.J.Cadoux sums up the position in these words in his book Life of Jesus.
“In the four Gopels, therefore, the main documents to which we must go if we are to fill-out at all that bare sketch which we can Put together from other sources, we find material of widely-differing quality as regards credibility. So far-reaching is the element of ucertainly that it is temptig to ‘down tools’ at once, and to declare the task hopeless. The historical inconsistencies and impobabilities in parts of the Gospels form some of arguments advanced in favour of the Christ-myth theory. These are, however, entirely outweighed as we have shown-by ther considerations.
Still, the discrepancies and uncertainties that remain are serious and consequently many moderns, who have no doubt whatever of Jesus’ real existence, regard as hopeless any attempt to dissolve out the historically- true from the legendary or mythical matter which the Gospels contain, and to recostruct the story of Jesus’ mission out of the more historical residue.” C.J. Cadou: op. cit., pp.16,17.

C. J. Cadoux'writes : “The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Syoptics, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assignment of fictitious speeches to historical characters: the best ancient historians made a practice of and assigning such speeches in this way.” C.J. Cadoux: The Life of Jesus, p. 16.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பைபிளியல் அறிஞர்கள் ஏற்கும் கருத்து. ஏசு ஒரு யூதர், அவர் மதம் ஆரம்பிக்கவே  ல்லைமதமாற்றத்தை கடுமையாய் எதிர்த்தார்.
  1. இயேசு மிகத் தெளிவாக கூறியது, ஒருவன் மதம் மாறினால், மாறுபவன் இரட்டை நரகத்திற்கு உரியவன் ஆகிறான்.
மத்தேயு23:15 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். கடல் கடந்தும் பல நாடுகளில் பயணம் செய்தும் ஒருவரை உங்கள் சமயத்தில் சேர்க்கிறீர்கள். நீங்கள் அவனை உங்கள் சமயத்தில்   மாற்றியபின் இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.
 

இன்னும் சொல்லப் போனால் ஒரு யூத இனவெறியோடு யூதர் அல்லாத  தேவனின்குமாரர்களை நாய் என்றார்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இயேசு கிறிஸ்துவரா – இல்லையே?

images?q=tbn:ANd9GcQfeaC1qMrHxZysxz5SP5f images?q=tbn:ANd9GcQlQ32B3eWOozjeo5DWAQ3 
ஏசுவின் கைது மரணமே, யூதப் பழங்கதை அடிப்படையில், எகிப்தியரின் அப்பாவி சிறுகுழந்தைகளை கர்த்தர் கொலைசெய்தார் என்பதற்கு நன்றியாய் ஒவ்வொரு யூதரும் இஸ்ரேலின் சிறு தெய்வம் கர்த்தர் இருக்கும் ஒரேஒரு இடமான ஜெருசலேம் ஆலயத்தை ஆடு கொலை செய்து பலி தரவந்த போது தான்.ரோமன் ஆட்சியில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுக்கான தண்டனை முறையான தூக்குமரத்தில் தொங்கும்படி மரணம்- நிருபிக்கப்பட்ட குற்ற அட்டை.

யோவான் 19:20 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ‘ நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் ‘ என்று எழுதியிருந்தது. 
  21 யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம், ‘ ″ யூதரின் அரசன் ″ என்று எழுத வேண்டாம்; மாறாக, ‘ யூதரின் அரசன் நான் ‘ என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும் ‘ என்று கேட்டுக்கொண்டார்கள். 22 பிலாத்து அவர்களைப் பார்த்து, ‘ நான் எழுதியது எழுதியதே ‘ என்றான்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 லூக்கா சுவி கதையில் குழந்தைப் புனையல் பகுதியில், ஏசு பிறந்தவுடன் ஜெருசலேம் சென்று, (லூக்கா2:2124; 41)-பலிகள் எனக் கொலைகளும், அதேபோல வருடாவருடம் செல்வது போல பஸ்கா பண்டிகைக்கு 12 வயதில் ஜெருசலேம் சென்றபோது ஒரு சம்பவம் எனக் கதையில் காணலாம். ஆனால் குழந்தைப் புனையல் பகுதிகள், பேதுரு – அப்போஸ்தலர் வழிக் கதையில் இல்லாமல் பிற்காலத்தில் புகுத்தப்பட்ட பகுதி என்பது தெளிவு.

ஏசு பிறப்பில் இருந்து மரணம் வரை யூதராய் வாழ்ந்து மரணம் அடைந்தார்.
ஏசு யோவான் ஸ்நானகன் கைதிற்குபின் தான் இயக்கம் தொடங்குவதாகவும், அடுத்து வந்த பஸ்காவில் மரணம் எனவும் மாற்கு சொல்ல, ஏசு இயக்கம் தொடங்கியபின் ஸ்நானகன் வருவதாகவும் 4ம் சுவியில் உள்ளது. ஏசு 3 பஸ்கா பண்டிகைகளுக்கு யூதேயா வருவதாகவும் கதை தருகிறார்.
 
Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய ஏற்பாடு  பேராசிரியர்– ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்– “If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned. 4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.  நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கியதுகலிலேயாவி ல்என்றும், –ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக   மரணத்தின் போது  மட்டுமே ஜெருசலேம் வந்தார்மேலும் –ஞானஸ்நானர்   யோவான் கைதிற்குப்பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும்நான்காவது சுவியோவேறுவிதமாகமுதல் ஆறு அத்தியாயங்களில் 
யுதேயாவிலும்  கலிலேயாவிலும் முன்னும்பின்னும் இயங்கியதாகவும்ழாம்   அத்தியாயத்திற்குப் பின் முழுமையாக ஜெருசலேமிலும்   யூதேயாவிலும்   எனச்சொல்கிறார்யோவன்3:24- ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.//
வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு
னையப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.
சுவிசேஷங்கள் உண்மையில் ஏசு வாழ்க்கையை உண்மையாகத் தந்தது இல்லை, இறந்த மனிதனைப் புனிதர் எனப் புனைவதே கதாசிரியர் கருத்து. எனவே நடுநிலையோடு தேடினால், வரலாற்று மனிதன் ஏசுவை அறியலாம். 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 இயேசுவுடைய போதனைகள் செயல்களைப் பார்ப்போம். 

 
மத்தேயு5:17 மோசேயின் சட்டங்களையோ அல்லது தீர்க்கதரிசிகளின் போதனைகளையோ அழிப்பதற்காக நான் வந்துள்ளதாக நினைக்காதீர்கள். அவர்களது போதனைகளை அழிப்பதற்காக நான் வரவில்லை. அவர்களின் போதனைகளின் முழுப் பொருளையும் நிறைவேற்றவே வந்துள்ளேன். 18 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். வானமும் பூமியும் உள்ளவரைக்கும் கட்டளைகளில் எதுவும் மறையாது. அனைத்தும் நிறைவேறுகிற வரைக்கும் கட்டளைகளின் ஒரு சிறு எழுத்தோ அல்லது ஒரு சிறு எழுத்தின் பகுதியோ கூட மறையாது.
19 ,“ஒருவன் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறியதாகத் தோன்றும் கட்டளையைக்கூடக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டளைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் கடைப்பிடிக்காமலும் மற்றவர்களையும் அதைக் கடைப்பிடிக்க வேண்டாமென்றும் கூறுகிறவன் பரலோக இராஜ்யத்தில் கடைசி ஆளாயிருப்பான். ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்கச் சொல்லுகிறவன் பரலோக இராஜ்யத்தில் மகத்தான இடத்தைப் பெறுவான். 20 சட்டங்களைப் போதிக்கிறவர்களைவிடவும் பரிசேயர்களைவிடவும் நீங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களைவிடவும் சிறப்பாகச் செயல்படாவிட்டால், நீங்கள் பரலோக இராஜ்யத்தில் நுழையமாட்டீர்கள்.
 

மோசேவை விருத்தசேதனம் செய்யவில்லை என கர்த்தர் கொலை செய்யவே பார்த்தார் என்பது கதை.  

 

 

யாத்திராகமம்4: 24ஆண்டவர் மோசேயை வழியில் ஒரு சத்திரத்தில் எதிர்கொண்டு அவரைக் கொல்லப்பார்த்தார்.25 அப்போது சிப்போரா ஒரு கூரிய கல்லை எடுத்துத் தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்து அதைக்கொண்டு மோசேயின் பாதங்களைத் தொட்டு, ″ ″ நீர் எனக்கு இரத்த மணமகன்″ ″ என்றாள்.26 பின்பு ஆண்டவர் அவரைவிட்டு விலகினார். அப்போது அவள், விருத்தசேதனத்தின் வழியாய் நீர் எனக்கு இரத்த மணமகன் என்றாள்.

ஆனால் பவுல் மோசேவின் இச்சட்டத்தை தேவையில்லை என மாற்றினார்.

 
மத்தேயு19:28 இயேசு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின் பன்னிரெண்டு இனங்களுக்கும் நீதி செய்வீர்கள்.
 
மத்தேயு23:,“வேதபாரகரும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள்.ஆகவே அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

இயேசு சீடர்களை அனுப்பியபோது சொன்னவை எனக் கதை

images?q=tbn:ANd9GcQkzJGeyJOpWxiLusdzrw8 images?q=tbn:ANd9GcRkYhIiKHe6e_v_IE7yVG0
மத்தேயு10:இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாய் அழைத்தார். தீய ஆவிகளை மேற்கொள்ளும் வல்லமையை இயேசு அவர்களுக்கு வழங்கினார். எல்லா விதமான நோய்களையும் பிணிகளையும் குணப்படுத்தும் வல்லமையையும் இயேசு அவர்களுக்கு வழங்கினார். 
இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம்,, “யூதர்கள்  ல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். நீங்கள் சென்று, ‘பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது’ என்று போதியுங்கள். 
23 ஒரு நகரத்தில் நீங்கள் மோசமான முறையில் நடத்தப்பட்டால், வேறொரு நகரத்திற்குச் சென்றுவிடுங்கள். உங்களுக்கு நான் உண்மையைச் சொல்லுகிறேன், மனிதகுமாரன் வருகிறவரைக்கும், நீங்கள் எல்லா யூதர்களின் நகரங்களுக்கும் செல்ல முடியாது.
மனிதன் எப்படிப் பட்டவர்? உலகில் படைக்கப்பட்டவை கடவுள் திட்டமிட்டதே
மத்தேயு10:30 உங்கள் தலையிலுள்ள முடிகளின் எண்ணிக்கையைக்கூட தேவன் அறிவார். 31 எனவே பயப்படாதீர்கள். பல பறவைகளைக் காட்டிலும் நீங்கள் அதிக மதிப்பு வாய்ந்தவர்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

பழையதை புதிதாக மாற்றுவது சரியா?
லூக்கா 5:36 அவர்களுக்கு இயேசு கீழ்வரும் உவமையைக் கூறினார். “ஒரு பழைய அங்கியின் கிழிசலைத் தைக்க ஒருவரும் புதிய அங்கியின் ஒரு பகுதியைக் கிழிப்பதில்லை. ஏன்? அது புதிய அங்கியைப் பாழாக்குவது மட்டுமன்றி, புதிய அங்கியின் துணி பழைய துணியைப்போல் இருப்பதுமில்லை. 37 மக்கள் புதிய திராட்சை இரசத்தைப் பழைய திராட்சை இரசப் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. ஏன்? புதிய திராட்சை இரசம் பைகளைப் பொத்தலாக்கிவிடும். திராட்சை இரசம் சிந்திப்போகும். திராட்சை இரசப் பைகளும் வீணாகிப்போகும். 38 மக்கள் புதிய இரசத்தைப் புதிய பைகளில் வைப்பார்கள். 39 பழைய ரசத்தைப் பருகுகிற மனிதன் புதிய திராட்சை இரசத்தை விரும்புவதில்லை. ஏன்? ‘பழைய திராட்சை ரசமே நல்லது’ என்று அவன் கூறுகின்றான்” என்றார். 
தன் வாழ்நாளில் இஸ்ரேலின் போர் வெற்றிக்கான அருள் ஆகும் மேசியா என்னும் கிறிஸ்து தன் மேல் வரும் ரோமன் ஆட்சியை விரட்டலாம் என்றவர், ரோமன் கவர்னரால் கைது செய்யப்பட்டு – கர்த்தர் மேல் முழு நம்பிக்கை இழந்து தூக்குமரத்தில் கடைசியாய் புலம்பியது.  
மாற்கு 15: 33 மதிய வேளையில், நாடு முழுவதும் இருண்டது. இந்த இருட்டு மூன்று மணிவரை இருந்தது. 34 மூன்று மணிக்கு இயேசு மிக உரத்த குரலில், “ஏலி! ஏலி! லாமா சபக்தானி” என்று கதறினார். இதற்கு “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று பொருள்.
  1. உலகம் அழியுமுன் கடையான தலைமுறை மக்கள் உயிரோடு இருக்கும்போது பிறக்க வேண்டியவரே கிறிஸ்து-   விபரமாகக் காணலாம்


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard