Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 010 - இனியவை கூறல்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
010 - இனியவை கூறல்
Permalink  
 


இனியவைகூறல்
பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.

குறள் 91:

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

மணக்குடவர் உரை:
ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?

பரிமேலழகர் உரை:
இன்சொல் - இன்சொலாவன; ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் - அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள். (ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

மு. கருணாநிதி உரை:
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

Translation:
Pleasant words are words with all pervading love that burn;
Words from his guileless mouth who can the very truth discern.

Explanation:
Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.

குறள் 92:

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

மணக்குடவர் உரை:
மனம் பொருந்திக் கொடுத்தலினும் நன்று: முகம் பொருந்தி இனிமைச்சொல் சொல்ல வல்லவனாயின்.

பரிமேலழகர் உரை:
அகன் அமர்ந்து ஈதலின் நன்று - நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று; முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் - கண்டபொழுதே முகம் இனியனாய் அதனொடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின். (இன்முகத்தோடு கூடிய இன்சொல் ஈதல் போலப் பொருள் வயத்தது அன்றித் தன் வயத்தது ஆயினும், அறநெஞ்சுடையார்க்கு அல்லது இயல்பாக இன்மையின் அதனினும் அரிது என்னும் கருத்தான், 'இன்சொலன் ஆகப் பெறின்' என்றார்.).

மு. வரதராசன் உரை:
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

மு. கருணாநிதி உரை:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:
முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது.

Translation:
A pleasant word with beaming smile,s preferred,
Even to gifts with liberal heart conferred.

Explanation:
Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.

குறள் 93:

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

மணக்குடவர் உரை:
கண்ணாலே பொருந்தி, இனிதாக நோக்கி மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுதானே யறமாம்.

பரிமேலழகர் உரை:
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி - கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் - பின் நண்ணிய வழி, மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம். ('நோக்கி' என்னும் வினையெச்சம் 'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல்நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

மு. கருணாநிதி உரை:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

Translation:
With brightly beaming smile, and kindly light of loving eye,
And heart sincere, to utter pleasant words is charity.

Explanation:
Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue.

குறள் 94:

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

மணக்குடவர் உரை:
துன்பமுறுவிக்கின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லையாகும். யாவர்மாட்டுங் கூற இன்பமுறுவிக்கின்ற இனிய சொல்லை யுடையார்க்கு.

பரிமேலழகர் உரை:
யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு - எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும் - துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். (நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின், 'துவ்வாமை' என்றார். 'யார் மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நட்பேஆம், ஆகவே அவர் எல்லாச் செல்வமும் எய்துவர்' என்பது கருத்து.).

மு. வரதராசன் உரை:
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

மு. கருணாநிதி உரை:
இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு நட்பில் வறுமை எனும் துன்பமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.

Translation:
The men of pleasant speech that gladness breathe around,
Through indigence shall never sorrow's prey be found.

Explanation:
Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.

குறள் 95:

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு அழகாவது தாழ்ச்சி யுடையனா யினிய சொற்களைக் கூற வல்லவ னாதல்: பிறவாகிய அழகெல்லாம் அழகெனப்படா. இது தாழ்த்துக் கூறவேண்டு மென்பதும் அதனாலாம் பயனுங் கூறிற்று.

பரிமேலழகர் உரை:
ஒருவற்கு அணி பணிவு உடையன் இன்சொலன் ஆதல் - ஒருவனுக்கு அணியாவது தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய் எல்லார் கண்ணும் இனிய சொல்லையும் உடையனாதல், பிற அல்ல - அன்றி மெய்க்கு அணியும் பிற அணிகள் அணி ஆகா. (இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார். 'மற்று' அசை நிலை. வேற்றுமை உடைமையான், பிற எனவும், இவைபோலப் பேரழகு செய்யாமையின் 'அல்ல' எனவும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் இனியவை கூறுவார்க்கு இம்மைப் பயன் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.

மு. கருணாநிதி உரை:
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை:
தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா.

Translation:
Humility with pleasant speech to man on earth,
Is choice adornment; all besides is nothing worth.

Explanation:
Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments).

குறள் 96:

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

மணக்குடவர் உரை:
நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும்.

பரிமேலழகர் உரை:
நல்லவை நாடி இனிய சொலின் - பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்; அல்லவை தேய அறம் பெருகும் - அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும். (தேய்தல் : தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல். "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடி.51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

மு. கருணாநிதி உரை:
தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

Translation:
Who seeks out good, words from his lips of sweetness flow;
In him the power of vice declines, and virtues grow.

Explanation:
If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.

குறள் 97:

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

மணக்குடவர் உரை:
பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து, அறத்தினையும் பயக்கும்; குணத்தினின்று நீங்காத சொல்.

பரிமேலழகர் உரை:
நயன் ஈன்று நன்றி பயக்கும் - ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்: பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல். (நீதி: உலகத்தோடு பொருந்துதல். 'பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் - ஒரு சொல் நீர்மைத்து.).

மு. வரதராசன் உரை:
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

மு. கருணாநிதி உரை:
நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.

Translation:
The words of sterling sense, to rule of right that strict adhere,
To virtuous action prompting, blessings yield in every sphere.

Explanation:
That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world).

குறள் 98:

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

மணக்குடவர் உரை:
புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள் இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்.

பரிமேலழகர் உரை:
சிறுமையுள் நீங்கிய இன்சொல் - பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்; மறுமையும் இம்மையும் இன்பம் தரும் - ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும். (மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

மு. கருணாநிதி உரை:
சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.

Translation:
Sweet kindly words, from meanness free, delight of heart,
In world to come and in this world impart.

Explanation:
Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next.




__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

குறள் 99:

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

மணக்குடவர் உரை:
இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினது உண்மைப் பொருளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும் இன்சொலாதலானே அருளொடு பொருந்திக் குற்றமிலவாம். இஃது ஒருவனைக் கடிந்து சொல்லவேண்டு மிடத்தும் இன்சொல்லாலே கடிய வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை:
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்; வன்சொல் வழங்குவது எவன்கொல் - அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி? ('இனிது' என்றது வினைக்குறிப்புப் பெயர். கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.).

மு. வரதராசன் உரை:
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?

மு. கருணாநிதி உரை:
இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?

சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?

Translation:
Who sees the pleasure kindly speech affords,
Why makes he use of harsh, repellant words?

Explanation:
Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?

குறள் 100:

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

மணக்குடவர் உரை:
பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல், பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.

பரிமேலழகர் உரை:
இனிய உளவாக இன்னாதகூறல் - அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; கனி இருப்பக் காய் கவர்ந்தற்று - இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும். ('கூறல்' என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. இனிய கனிகள் என்றது ஒளவை உண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சானவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம். இவை இரண்டு பாட்டானும் இன்னாத கூறலின் குற்றம் கூறப்பட்டது.).

மு. வரதராசன் உரை:
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

மு. கருணாநிதி உரை:
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.

சாலமன் பாப்பையா உரை:
மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

Translation:
When pleasant words are easy, bitter words to use,
Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose.

Explanation:
To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.

34 சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 4 திருக்குறள் பொருள் விளக்கம் 35
(க-து) இனிய சொற்களைப் பேசுவோர் வறுமையால்
வாடமாட்டார்கள்.
5. பணிவுடையன், இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி, அல்ல மற்றுப் பிற.
(ப-உ) பணிவு உடையன்- வணக்கம் உள்ளவனாடீநு. இன்
சொலன்- இனிய சொல்லை உடையவனாடீநு. ஆதல்- இருத்தலே.
ஒருவற்கு- ஒருவனுக்கு. அணி- ஆபரணங்களாம். அல்ல மற்றுபணிவு
ம் இன்சொல்லும் அல்லாத மற்றவை. பிற- வேறாகும்.
(க-து) பணிவும், இனிய சொல்லுமே ஒருவனுக்கு ஆபரண
மாகும்.
6. அல்லவை தேய, அறம்பெருகும்; நல்லவை
நாடி இனிய சொலின்.
(ப-உ) நல்லவை- நன்மைதரும் சொற்களை. நாடி-
ஆராடீநுந்து. இனிய- இனிமையாக. சொலின்- பேசுவானாயின்.
அல்லவை- பாவங்கள். தேய- தேடீநுந்து அழிய. அறம் பெருகும்-
தருமம் வளரும்.
(க-து) நன்மை தரும் இனிய மொழிகளைக் கூறுவதனால்
பாவம் தேயும்; தருமம் வளரும்.
7. நயன்ஈன்று நன்றி பயக்கும், பயன்ஈன்று
பண்பில் தலைப்பிரியாச் சொல்.
(ப-உ) பயன் ஈன்று- நல்ல பலனைக் கொடுத்து. பண்பில்நன்
மையிலிருந்து. தலைப்பிரியா- நீங்காத. சொல்- இனிய
சொற்கள். நயன்ஈன்று- இன்பத்தைத் தந்து. நன்றி பயக்கும்-
நன்மையையும் கொடுக்கும்.
(க-து) இனிய சொற்கள் இன்பத்தையும், நன்மையையும்
தரும்.
8. சிறுமையுள் நீங்கிய இன்சொல், மறுமையும்,
இம்மையும், இன்பம் தரும்.
(ப-உ) சிறுமையுள் நீங்கிய- பிறர்க்குத் துன்பம் தராத.
இன்சொல்- இனிய சொற்கள். மறுமையும்- மறுபிறப்பிலும்.
இம்மையும்- இப்பிறப்பிலும். இன்பம் தரும்- இன்பத்தைத் தரும்.
10. இனியவை கூறல்
இனிய மொழிகளைப் பேசுவது.
1. இன்சொலால், ஈரம் அளைஇப், படிறுஇலவாம்,
செம்பொருள் கண்டார்வாடீநுடீநுடீநுடீநுடீநுச் சொல்.
(ப-உ) செம்பொருள்- அறநெறியை. கண்டார்- அறிந்தவர்
களின். வாடீநுச்சொல்-வாடீநுச்சொற்கள். இன்சொல்லால்- இனிய
சொற்களால் ஆகி. ஈரம் அளைஇ - அன்பு கலந்து. படிறு
இலஆம் - வஞ்சனையற்றவைகளாக இருக்கும்.
(க-து) அறநெறியை அறிந்தவர்கள் இனிமையுடன்,
அன்புடன், வஞ்சனையற்ற தன்மையுடன் உரையாடுவார்கள்.
2. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே, முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
(ப-உ) முகன் அமர்ந்து- முகமலர்சியுடன். இன்சொலன்
ஆக- இனியசொல்லை உடையவனாக. பெறின்- இருக்கும் தன்மை
யைப் பெற்றால் அது. அகன் அமர்ந்து- மனத்தால் விரும்பி.
ஈதலின்- பொருள் கொடுப்பதைவிட. நன்றே- சிறந்ததாம்.
(க-து) மனமகிடிநந்து பொருள் கொடுப்பதைவிட இன்
சொற்களைக் கூறுவதே சிறந்ததாம்.
3. முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தான்ஆம்
இன்சொலின் அதே அறம்.
(ப-உ) முகத்தான் அமர்ந்து- முகத்தால் விரும்பி. இனிது
நோக்கி- மகிடிநச்சியுடன் பார்த்து. அகத்தான் ஆம்- உள்ளத்தி
லிருந்து தோன்றி வருகின்ற. இன்சொலின் அதே- இனிய
சொல்லில் உள்ளதே. அறம்- தருமமாகும்.
(க-து) உள்ளன்புடன் கூறும் இனிய சொல்லே அறமாகும்.
4. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும், யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொல் அவர்க்கு.
(ப-உ) யார்மாட்டும்- எல்லோரிடத்திலும். இன்பு உறூஉம்-
இன்பம் அடையத்தக்க. இன்சொல் அவர்க்கு- இனிய மொழி
களைப் பேசுவோர்க்கு. துன்புஉறூஉம்- துன்பத்தைத் தரும்.
துவ்வாமை- வறுமை. இல்ஆகும்-இல்லையாம்.
36 சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 4 திருக்குறள் பொருள் விளக்கம் 37
(ப-உ) காலத்தினால்- தகுந்த சமயத்திலே. செடீநுத நன்றி-
செடீநுத உதவி. சிறிது எனினும்- சிறிதாக இருந்தாலும் அது.
ஞாலத்தின்- உலகத்தைவிட மாணப்பெரிது- மிகவும் பெரிதாகும்.
(க-து) தக்க சமயத்தில் செடீநுத நன்மை உலகை விடப்
பெரிதாகும்.
3. பயன்தூக்கார் செடீநுடீநுடீநுடீநுடீநுத உதவி, நயன்தூக்கின்,
நன்மை, கடலின் பெரிது.
(ப-உ) பயன்தூக்கார்- தமக்கு வரும் பலனை ஆராயாமல்.
செடீநுத உதவி- செடீநுத உதவியின். நயன்- சிறப்பை. தூக்கின்-
ஆராடீநுந்தால். நன்மை- அதன் நன்மை. கடலின் பெரிது- கடலின்
அளவைவிடப் பெரிதாகும்.
(க-து) பயன் கருதாமல் செடீநுயும் உதவி கடலினும்
பெரிதாகும்.
4. தினைத்துணை நன்றி செயினும், பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
(ப-உ) தினைத்துணை- ஒருவன் தினை அளவு. நன்றி
செயினும்- நன்மையைச் செடீநுதாலும். பயன் தெரிவார்- அதன்
பயனை ஆராடீநுகின்றவர். பனைத் துணையா - அச்சிறிய உதவியைப்
பனை அளவாக. கொள்வர்- நினைத்துக் கொள்வார்கள்.
(க-து) பெரியோர் தினையளவு நன்மையையும் பனை
யளவு பெரிதாகக் கொள்வர்.
5. உதவி வரைத்து அன்றுஉதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
(ப-உ) உதவி- உதவியானது. உதவி வரைத்து அன்றுஉதவியின்
அளவையுடையதன்று. உதவி செயப்பட்டார்-
உதவியைப் பெற்றுக்கொண்டவரின். சால்பின்- தகுதியின்.
வரைத்து- அளவுடையதாம்.
(க-து) உதவியைப் பெற்றுக்கொண்டவரின் தகுதியே
உதவியின் அளவாம்.
6. மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க
துன்பத்துள் துப்புஆயார் நட்பு.
(க-து) இனிய சொற்கள் இருபிறப்பிலும் இன்பந் தரும்.
9. இன்சொல் இனிதுஈன்றல் காண்பான், எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?
(ப-உ) இன்சொல்- இனிமையான சொற்கள். இனிது
ஈன்றல்- இன்பம் தருவதை. காண்பான்- அநுபவித்து அறிகின்றவன்.
வன்சொல்- கடுஞ்சொற்களை. வழங்குவது- சொல்வது. எவன்
கொல்ஓ- என்ன பயனை எண்ணியோ?
(க-து) இன்சொல் இன்பத்தைத் தருவதைக் கண்டும்
கடுஞ்சொற் பேசுவது ஏன்?
10. இனிய உளஆக இன்னாத கூறல்,
கனிஇருப்பக் காடீநுடீநுடீநுடீநுடீநுகவர்ந்து அற்று.
(ப-உ) இனிய- இனிய மொழிகள். உளஆக- இருக்கும்போது.
இன்னாத- கடுஞ்சொற்களை. கூறல்- பேசுவது. கனிஇருப்பஇனிய
பழம் இருக்கவும். காடீநு- அதைத் தின்னாமல் காயை.
கவர்ந்துஅற்று- எடுத்துத் தின்பதைப் போலாம்.
(க-து) இன்சொற் பேசாமல் கடுஞ்சொற் கூறுதல்,
பழத்தைத் தின்னாமல் காயைத் தின்பதுபோலாம்.




__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும் (௯௰௧)

முகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவனானால், அது, அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளை விட நல்லதாகும் (௯௰௨)
முகத்தோற்றத்தால் விருப்பத்தோடு இனிமையாகப் பார்த்து, உள்ளத்திலிருந்து வரும் இனிய சொற்களையும் சொல்லும் அதுவே, அறமாகும் (௯௰௩)
எவரிடத்தும் இன்பம் உண்டாகத் தகுந்த இன்சொல்லைப் பேசுபவர்க்கு, துன்பத்தை மிகுதியாக்கும் வறுமையும் இல்லாமற் போகும்
பணிவு உடையவனாகவும், இனிதாகச் சொல்பவனாகவும் ஆகுதல், ஒருவனுக்கு அணிகலனாகும்; பிறவெல்லாம் அணிகலன்கள் ஆகா
நன்மையானவைகளையே விரும்பி, இனிய சொற்களையும், சொல்லி வந்தால், அதனால் பாவங்கள் தேய்ந்து போக, அறம் வளர்ந்து பெருகும்
பிறர்க்கு நல்ல பயனைத் தந்து, நல்ல பண்பிலிருந்து ஒரு சிறிதும் விலகாத சொற்கள், சொல்வானுக்கும், நன்மை தந்து உபகாரம் செய்யும்
சிறுமையான எண்ணங்களில்லாத இனிய சொற்கள், மறுமையிலும் இம்மையிலும் ஒருவனுக்கு இன்பத்தைத் தரும் (௯௰௮)
இனிய சொற்கள் தனக்கு மிகுந்த இன்பத்தைத் தருவதனைக் காண்பவன், வன்சொற்களை வழங்குவது எந்தக் காரணத்தாலோ?
இனிய சொற்கள் இருக்கின்ற போது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்கவும், காயைத் தின்பது போன்றதே! (௱)



10. இனியவை கூறல்


1.இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
⁠செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

இன்சொற்களாவன அன்பு கலந்து வஞ்சனை அற்றவைகளாய், மெய்ப்பொருள் உணர்ந்தவர்களின் வாயிலிருந்து வரும் சொற்களாகும்.

ஈரம்-அன்பு; அளைஇ-கலந்து; படிறு-வஞ்சனை; செம்பொருள்- உண்மைப் பொருள்.91
2.அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
⁠இன்சொலன் ஆகப் பெறின்.

முகமலர்ச்சியோடு இனிமையான சொற்களைச் சொல்லுங் குணமானது வாய்க்கப் பெற்றால், அது மனமகிழ்ந்து ஒரு பொருளை உதவும் ஈகைக் குணத்திலும் சிறந்ததாகும்.

அகன்-மனம்; அமர்ந்து-விரும்பி, மகிழ்ந்து.92

3.முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
⁠இன்சொ லினதே அறம்.

முகத்தினால் மகிழ்ச்சி பொருந்தி இனிமையாகப் பார்த்து, மனம் உவந்து தோன்றும் இனிய சொற்களைச் சொல்வதே அறமாகும்.

அமர்ந்து - (மகிழ்ச்சி) பொருந்தி; அகத்தான் ஆம்- மனத்தினிடத்ததாகிய; சொலினது-சொல்லைச் சொல்லுதலின் கண்ணது.93

4.துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
⁠இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

எல்லாரிடத்தும் மகிழ்ச்சியை விளைவிக்கும் இனிய சொற்களைச் சொல்ல வல்லார்க்குத் துன்பத்தை விளைவிக்கும் வறுமை நிலை இல்லையாகும்.94

5.பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
⁠அணியல்ல மற்றுப் பிற.

ஒருவனுக்கு அழகினை அளிப்பது அவன் பிறரிடம் வணக்கம் உடையவனாகவும், இன்சொல் பேசுபவனாகவும் இருத்தலே ஆகும். இவையல்லாத மற்றவை அவனுக்கு அழகைத் தாரா.95
6.அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
⁠நாடி இனிய சொலின்.

ஒருவன் பிறருக்கு நன்மை உண்டாகும் சொற்களை ஆராய்ந்து அவைகளை இனிமையான தன்மையில் சொல்லுவானேயானால், அதனால் அவனுக்குத் தீமைகள் குறைய, நன்மைகள் மிகும்.

அல்லவை-நன்மையல்லாதவை, தீமைகள்; அறம்- நன்மையைத் தரும் செயல்கள். சிலர் அறம் என்பதற்குப் புண்ணியம் என்றும், அல்லவை என்பதற்குப் பாவம் என்றும் பொருள் கொள்வர்.96
7.நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
⁠பண்பின் தலைப்பிரியாச் சொல்.

நன்மையும் தந்து, இனிமையான தன்மையிலிருந்தும் நீங்காமலிருக்கும் சொல்லானது அச்சொல்லைக் கேட்போருக்கு நன்மையைத் தருவதோடு, சொல்லுவோனுக்கும் இன்பத்தை அளித்து நன்மையைத் தரும்.

நயன் - நன்மை, இனிமை, இன்பம்; நீதி என்றும் பொருள் கூறுவர்; பயன் ஈன்று-நன்மையைத் தந்து; பண்பு - குணம் (இங்கே இனிமைக் குணம்); தலைப்பிரியா - நீங்காத.97
8.சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
⁠இம்மையும் இன்பம் தரும்.

பிறரால் இகழப்படாத, நன்மையைத் தரத்தக்க, இனிமையான சொற்கள் அவற்றைச் சொல்லுவோனுக்கு இந்தப் பிறவியிலும், இதற்கு அடுத்த பிறவியிலும் இன்பம் தரும்.

சிறுமை-இழிவு; மறுமை-மறுபிறப்பு; இம்மை-இந்தப் பிறப்பு.98


திருக்குறள்

9.இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
⁠வன்சொல் வழங்கு வது?

பிறர் கூறும் இனிய சொற்கள் தனக்கு இன்பம் விளைவிப்பதை உணரும் ஒருவன் அத்தகைய இனிமையான சொற்களைச் சொல்லாமல் அவற்றிற்கு மாறாக உள்ள கடுஞ்சொற்களைப் பிறரிடம் வழங்குவது என்ன காரணம் கருதியோ?99
10.இனிய உளவாக இன்னாத கூறல்
⁠கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

நன்மையைத் தரத்தக்க இனிமையான சொற்கள் இயல்பிலேயே அமைந்திருக்க, அத்தகைய சொற்களைக் கூறாது, தீமையைத் தரத்தக்க இனிமையல்லாத சொற்களைக் கூறுதல் நன்றாகப் பழுத்த பழம் கையிலே இருக்க அவற்றை விடுத்து, மரத்திலே உள்ள காயினைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

இன்னாத-துன்பத்தைத் தரத்தக்க; கவர்தல்-பறித்தல்; அற்று - அப்படிப்பட்டது.

இனிய கனிகள் என்பதற்கு ஒளவையுண்ட நெல்லிக் கனி போல் உண்டாரை நீண்ட நாள் வாழச் செய்யும் அமிழ்த மயமான கனிகள் என்றும், இன்னாத காய்கள் என்பதற்கு உண்டவரைக் கொல்லும் எட்டிக் காய் போன்ற நஞ்சான காய்கள் என்றும் கூறலாம்.100



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard